Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தாக்குதல் தொடர்ந்தால் மீனவர்களின் கைகள் சும்மா இருக்காது: கருணாநிதி

Featured Replies

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தாக்குதல் தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் அமைதி காக்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அமைதி காக்க மாட்டார்கள், அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்காது என எச்சரிக்க விரும்புகிறேன்.

இந்த மாதம் மட்டும் நான்கு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதி முறையிட்டுள்ளது.

தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்தால், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் செயலில் மட்டும் ஈடுபடமாட்டார்கள், வேறு செயல்களிலும் அவர்கள் ஈடுபட நேரிடும் என்று கடுமையாக கூறியுள்ளார் கருணாநிதி.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த லோக்சபா சபாநாயகர் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அப்படி காவிரி பிரச்சினை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டால், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்தும் பேச அனுமதிக்கப்பட வேண்டும்.

தமிழகம் மற்றும் கேரளத்திற்கு இடையே நிலவி வரும் இந்தப் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதைக் கடைப்பிடிக்க கேரள அரசு மறுத்து வருகிறது. இதுகுறித்தும் லோக்சபாவில் விவாதிக்கப்பட வேண்டும்.

இதுதொடர்பாக பொறுத்திருந்து பார்ப்போம். காவிரி குறித்தும், முல்லைப் பெரியாறு குறித்தும் இரு விதமான நிலை எடுக்கப்படாது என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலுக்கு முதல் முறையாக முதல்வர் கருணாநிதி மிகக் கடுமையாக கருத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் மெத்தனமாக இருக்கும் மத்திய அரசுக்கும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது.

http://thatstamil.oneindia.in

இதையும் சொல்லிப்போட்டு ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்தி திரிகின்ற ஆனந்த சங்கரி போன்ற எட்டப்பன்களையும் உடன் சந்திக்க நேரம் ஒதுக்கி சந்திக்கிறார்... இவர் என்ன குழப்பத்தில் இருக்கிறாரோ

தமிழ்நாடு அரசோ மத்திய அரசோ நடவடிக்கை எடுக்காதாம்.

மீனவர்களே நேரடியாக இலங்கைக் கடற்படையுடன் போரில் இறங்குவார்களாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறேன் கடலில் இனி வாள்(வாய்) சண்டை தொடங்கப்போகிறது என. :P :P

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லம்.. ஒரு மக்களின் முதல்வர் இப்படிதான் கதைக்க வேண்டும்.. அப்பதான் அந்த இனம் முன்னேறும்.. இது மீனவர்களை வன்முறையாளர்களாக மாற்றுகின்ற செயல் பின்னர் சட்டம் அது இது என்று உள்ளை துாக்கி போடவேண்டியது...

கண்டிக்க வேண்டிய விடயத்தில் கண்டிப்பதை விட்டுவிட்டு..

தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்தால், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் செயலில் மட்டும் ஈடுபடமாட்டார்கள், வேறு செயல்களிலும் அவர்கள் ஈடுபட நேரிடும் என்று கடுமையாக கூறியுள்ளார் கருணாநிதி.

மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் தமிழகத்திலிருந்து தமிழீழத்திற்கான வழங்கல்களில் ஈடுபடுவாரென எச்சரிக்கிறார் போல.

எத்தனை முறையோ மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றபோதும் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்ததே இல்லை. தமிழக அரசு இத்தாக்குதல்களை மத்திய அரசிடம் முறையிடுவதென்பது செவிடன் காதில் சங்கு ஊதுவது போன்றது.

மத்திய அரசிற்கான ஒரு எச்சரிக்கைச் செய்தியாகவே கருணாநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் கூற்று முற்று முழுதாக தமிழக மீனவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இதனை வேறு கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். அது எமக்கான எதிர்ப்போ அல்லது ஆதரவாகவோ பார்க்கக் கூடியதல்ல. இது முற்று முழுதாக இந்திய மத்திய அரசிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா நான் ஒரு கலைஞன் எனக்கு கவிதை...கதை..அறிக்கைகள்..

மேடைப்பேச்சு இப்படி எத்தனையோ திறமைகள் நிறைய இருக்கு..இது உங்களுக்கு தெரியாதோ? நீங்கள் எதிர்பார்க்கும் மற்ற நல்ல விடயங்கள் எல்லாம் பக்கத்து நாட்டு தம்பியிட்டை மட்டும் போய் கேளுங்கோ..

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படைக்கு முதலமைச்சர் கருணாநிதி கடும் எச்சரிக்கை

சென்னை, மார்ச்.6-: இலங்கை கடற்படையினர் திரும்ப திரும்ப தமிழக மீனவர்களைத் தாக்கும் செயல் நடைபெறுமேயானால், தமிழனுடைய கை அந்தக் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்குமென்

  • கருத்துக்கள உறவுகள்

கை எப்பிடி சும்மா இருக்கும் கடல்ல குதிச்சு நீந்தியாவது வந்திடுவாங்கள் ஆதனால கை சும்மா இருக்காதுனு தாத்தா சொல்லி இருக்கார்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.