Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது: வே.பிரபாகரன்

Featured Replies

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது என்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

03/11/2007.

எனது அன்பான மக்களே!

சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காண முடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.

தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.

நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)

தலைவர்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

http://www.puthinam.com

TC போனது எமக்கு அடிதான்........ இடியல்ல!

தமிழினத்தின் சோகத்தை தலைவர் உணர்கின்றார். தலைவரின் சோகத்தைத் தமிழினம் உணருகின்றது. இழப்புக்கள் என்பது தோல்வியல்ல என்பதை அவர் சிங்களத்திற்கு உணரவைப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான், போராட்டம் என்ற கோட்பாட்டுக்குள் உட்பட்ட அனைவருக்குமே இழப்புகள் என்பது புதிதல்ல!! ஆனால் ஆணிவேராய், தூண்களாய் விளங்கி நின்ற உன்னத உயிர்கள் வீண்பலி ஆகும் போது மனசு உலுக்கப்படுகின்றது, இருப்பினும் எந்த நிகழ்விலும் உறுதி குலையாத எம் தலைமை நிச்சயம் இதற்கு விளக்கம் கொடுக்கும்!. புலிகளின் பலத்தை மீண்டும் மீண்டும்....உறுதிப்படுத்தும்.

ஒருவருடத்துக்குள்ளாக அரசியல் பேச்சாளர்களான பாலா அண்ணையையும் தமிழ்ச்செல்வன் அண்ணாவையும் இழந்திருப்பது பேரிழப்பு....! பெரும் இழப்பு.என்பதை யாராலும் மறுக்க முடியாது!

எங்களின் எல்லையைத் தொடும் காலம் வந்துவிட்டது!..என்பதே உண்மை!..

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை இழக்கும் போது இன்னுமொருவர் தோள் கொடுத்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது நியதி. இதற்கு நாங்கள் விதிவிலக்காக இருக்க முடியாது.

போராளிகள் போரட்டத்தில் இணையும் போதே மரணத்தையும் தம்முடன் இணைத்துக் கொள்ளுகின்றார்கள். ஆயினும் இப்படியான மரணங்களை எப்படியும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது மனம் கனக்கின்றது. பயங்கர வாத அரசு சாகடித்தது ஒரு போராளியை யல்ல சமாதானத்தை. இந்த இழப்பு ஒரு படி அதிகமானதே.

ஜானா

போராளிகள் போரட்டத்தில் இணையும் போதே மரணத்தையும் தம்முடன் இணைத்துக் கொள்ளுகின்றார்கள். ஆயினும் இப்படியான மரணங்களை எப்படியும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது மனம் கனக்கின்றது. பயங்கர வாத அரசு சாகடித்தது ஒரு போராளியை யல்ல சமாதானத்தை. இந்த இழப்பு ஒரு படி அதிகமானதே.

ஜானா

சிங்கள அரசு சமாதானத்தை சாகடித்து 30, 40 வருடங்கள் ஆகிறது...........

எங்கள் தலைவர் கற்றுத் தந்த இந்த உறுதி ஈழத்தமிழர் நெஞ்சங்களில் இன்னும்

ஆயிரம் ஆண்டுகள் வாழும்.

நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம்

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.