Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா?

Featured Replies

தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா?

தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளரின் மறைவின்போது தமிழீழத்தின் தலைமைத்துவத்தினாலும், சிறீ லங்காவின் தலைமைத்துவத்தினாலும் பரிமாறப்பட்ட உணர்வலைகள்:

தலைவர்

ltte_leader_27_05_48287_435.jpg

  • நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் தமிழ்ச்செல்வன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.

தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்

poddu_05_11_07_01.jpg

  • சிங்கள தேசம் தமிழ்ச்செல்வனை வீழ்த்தியதற்கு பதில் என்னென்று கேட்கிறார்கள். அதற்கு சொல்லக்கூடியது ஒரு பதில் தான். ஒரு சில படையினரோ அல்லது ஓராயிரம் படையினரோ ஒரு சில அரசியல் தலைவர்களோ ஒரு சில வல்லாதிக்க சக்திகளோ தமிழ்ச்செல்வனின் உயிருக்கு ஈடாக முடியாது. தமிழீழம் என்ற உயர்ந்த கனவு தமிழீழத்திதற்காக தமது உயிர்களை ஈர்ந்த மாவீரர்களின் கனவை ஈடுசெய்ய உழைப்பதே தமிழ்ச்செல்வனின் உயிருக்கான விலை. அந்த உணர்வு என்பது தமிழ்ச்செல்வன் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் மனங்களில் பதித்து விட்டுச் சென்றுள்ளார் என்று சொன்னால் அந்த உணர்வை இனிவரும் காலங்களில் சிங்களதேசம் சந்திப்பதுதான். இனிவரும் எத்தனை ஆண்டு காலத்தின் பின்பும் தமிழர்களை அடக்கி வைத்திருந்தாலும் சுதந்திரத்திற்கான குரலை ஒலித்துக்கொண்டே இருப்பார்கள். ஓய விடமாட்டார்கள் என்ற உறுதியை எடுத்துக்கொள்வது தான் தமிழ்ச்செல்வனின் உயிருக்கான விலையாக இருக்கும்.

சிறீ லங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா

Gothabhaya.jpg

  • இது சும்மா ஒரு செய்திதான். எங்களுக்கு புலிகளின் தலைவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது தெரியும். சகல புலித் தலைவர்களினதும் இருப்பிடங்கள் எங்களுக்கு தெரியும். எமக்கு தேவை என்றால் ஒருவர் பின் ஒருவராக அவர்களை தூக்கமுடியும். எனவே இவர்கள் கட்டாயம் தமது மறைவிடங்களை மாற்றவேண்டும். நேரம் வரும்போது மட்டுமே நாம் ஒருவர் பின் ஒருவராக புலித்தலைவர்களை தூக்குகின்றோம்.

சிறீ லங்கா பிரதமர்

Ratnasri%20Wickramanayake4.jpg

  • எமது பாதுகாப்பு படையினர் புலிப்பயங்கரவாத தலைவர்களின் இரகசிய மறைவிடங்களையும், பாதுகாப்பு குடியிருப்புக்களையும் இலக்குவைத்து பேரழிவை ஏற்படுத்திவருகின்றார்கள். எமது இலக்கு எல்.டீ.டீ.ஈ பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியை கொண்டுவருவதாகும்.

சிறீ லங்கா அமைச்சர் ஹெகலிய ரம்புக்குவல

Minister-Rambukwella.jpg

  • தமிழீழ விடுதலைப்புலி பயங்கரவாதிகள் மீது அக்கறை கொண்ட பலகுழுக்கள் எமது தாக்குதல் விமானங்கள் மூலம் கொல்லப்பட்ட பயங்கரவாதி தமிழ்செல்வனை சமாதானத்தின் காவலனாக காட்ட முயல்கின்றன. அவர்கள் இதுபற்றி பொய்யான ஒரு விம்பத்தை உருவாக்க முயல்கின்றார்கள். எமது அரசுடனான சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைய காரணமாக இருந்த தமிழ்செல்வன் தமிழீழ விடுதலைப்புலி பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

மேற்கண்ட இரண்டு தலைமைத்துவத்தினதும் உணர்வலைகளை பார்க்கும்போது உங்களால் தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிக்க கூடியதாக இருக்கின்றதா?

வித்தியாசம் இவைதான்:

அருச்சுனன் கண்களிற்கு தெரிந்தது குருவி மட்டும் தான். வேறு ஒன்றும் இல்லை. தலைவரினதும், பொட்டுஅம்மானினதும் தெளிவான செய்திகள் குறி எங்கு வைக்கப்பட்டு உள்ளது என்பதை காட்டுகின்றது. இலக்கு தமிழீழம். இதுதான் குறி.

மறுபுறத்தில்..

சிறீ லங்கா தலைமைத்துவத்தின் உணர்வலைகளில் காணப்படுவது பகட்டான பேச்சு,பெருமிதம் என்பவை மட்டுமே. எத்தனை தலைகள் உருளப்போகின்றன, எவர் தலைகள் உருளப்போகின்றன, மற்றும் இவற்றுக்கான வியாக்கியானங்களே இவர்களின் உணர்வலைகளில் காணப்படுகின்றது. அதாவது சிறீ லங்கா தலைமைத்துவத்திடம் தெளிவான ஒரு இலக்கு இல்லை. பயங்கரவாதிகள் போல் பேசுபவர்கள் சிறீ லங்கா தலைமைத்துவத்தில் இருப்பவர்களே. இவர்களின் பேச்சு அனுபவமற்ற தலைமைத்துவத்தையும், தெளிவான இலக்கின்றி பயணிப்பதையும் காட்டிக்கொடுக்கின்றது.

எக்காலத்திற்கும் பொருத்தமான தீர்க்கதரிசனமான பார்வை தமிழீழத்தின் தலைமைத்துவத்தின் உணர்வலைகளில் காணப்படுகின்றது. நேரத்துக்கு ஏற்றபடி குழந்தைப் பிள்ளைகளிற்கு கதைசொல்வதுபோல் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் தன்மை சிறீ லங்கா தலைமைத்துவத்தின் உணர்வலைகளில் காணப்படுகின்றது.

அதாவது..

சுருக்கமாக ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒன்றை உருவாக்கும் தலைமைத்துவம் தமிழீழத்தின் தலைமைத்துவம். ஒன்றை செய்யவிடாது தடுக்கும் தலைமைத்துவம் சிறீ லங்காவின் தலைமைத்துவம். ஒன்றை புதிதாக உருவாக்குபவன் வெற்றி பெறுகின்றானா அல்லது ஒன்றை புதிதாக உருவாக்கவிடாது தடுப்பவன் வெற்றிபெறுகின்றானா என்று காலம் விரைவில் பதில் சொல்லும்.

உங்களுக்கு வேறு ஏதாவது வித்தியாசங்கள் தெரிகின்றனவா?

நீங்கள் சரியாக கூறியிருக்கிறீஎகள். (குரைக்கும் நாய் கடிக்காது என்றும் சொல்வார்கள்)

அத்துடன் நான் இன்னுமோர் வித்தியாசத்தை கண்டுபிடித்துள்ளேன்.

மேலுள்ள படங்களில் தமிழீழ தலைமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் உண்மையான சீருடையை அணிந்துள்ளார்கள்.ஆனால் இலங்கை தலைமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் (specially கோத்தபாய) அவர்களின் சீருடையை அணிந்திருக்கவிலை. (Gas station uniform)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முக்கிய தலைவனை இழந்த பின்னும், சுதாரித்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது தமிழீழம். மேலே விமானம் பறக்க எந்த சலனமும் இல்லாமல் முக்கிய தளபதிகள் சூழ்ந்திருந்தார்கள் அங்கே. சிறி லங்காவில் மூன்று நாள் அதே அரற்றல் பிதற்றல் கொண்டாட்டம். முக்கிய தலைவர்கள் ஓடி ஒளித்துக் கொண்டார்கள் புலி பாயும் என்று.யாரைப் பார்த்தால் தடை செய்யப் பட்ட அமைப்பு மாதிரித் தெரிகிறது? புலிகளையா சிங்கள அரசையா?

இரண்டு தலைமைக்கும் உள்ள இந்த வேறுபாடுகளை உணர்ந்ததனால் தான் , தமிழீழத் தேசியத்தலைமைக்குப் பின்னால் உலகத்தமிழினம் அணிதிரண்டு நிக்கிது. ஆனால் சில பேர்

அவர்களின் எச்சிலைக்கு லைனில நிக்கிறார்கள். எப்ப உணரப்போகிறார்களோ???????

Edited by வலைஞன்
ஒருமையில் விளிப்பதைத் தவிர்க்கவும்.

எமக்கு கிடைத்த உறுதியான தீர்கதரிசனமான தலமை உலகில் எவருக்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய தலையில் கை வைத்த போதே(படத்தில்) தெரிகிறது. எங்கோ பிழை விடுகிறார் என்று.

ஜெனரல்!!

சூப்பராக இருக்கு வித்தியாசங்கள் எல்லாம் :lol: நானும் கொஞ்ச வித்தியாசங்களை கண்டுள்ளேன் அதாவது தேசிய தலைவரின் இராணுவ சீறுடையிலும் தமீழிழ புலனாய்வு துறை பொறுப்பாளரின் இராணுவ சீறுடையில் பேனாக்களை காணமுடிகிறது ஆனா சிறிலங்கா அதிகாரி ஒருவரினதும் ஆடையிலும் பேனாவை காணவில்லை இதில் இருந்து இவர்களின் அறிவாற்றலை விளங்கி கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஆனால் சில பேர் அவர்களின் எச்சிலைக்கு லைனில நிக்கிறார்கள். எப்ப உணரப்போகிறார்களோ???????

அவர்கள் என்று நீங்கள் எவர்களை கூறுகின்றீர்கள் கலைநேசன்?

மன்னிக்கவும் கலைஞன்,எழுதும்போது விபரமாக அழுதாமல் விட்டுவிட்டேன்.

நான் அவர்களென்று கூறியது, மகிந்தவையும் அவரது கூட்டத்தையும்.

இப்ப ஓகே யா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.