Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து தமிழக மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்: தொல்.திருமாவளவன்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து ஆறரைக் கோடி தமிழ்நாட்டு மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

அண்ணாச்சி உங்களின் ஆதரவு எமக்கும் உற்சாகம் தான்... எண்டடாலும் வாக்கெடுப்பு எண்டா கொஞ்சம் வில்லங்கமா போடும்போல கிடக்கு...

உதுக்கு தேர்தல் எதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டின் தமிழர் மத்தியில் கருத்து-பேச்சு-ஊடகசுதந்திரம் ஆகிய ஜனநாயக உரிமைகளுக்கு மத்திய அரசு மறுக்கிறது என்பதை விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சனங்களுக்கும் வெளியுலகுக்கும் எடுத்துரைப்பதுதான் அண்ணன்திருமாவின் நோக்கம். தன்னுடைய கோரிக்கைகள் ஜனநாயக அடிப்படையில் தான் முன்வைக்கப்படுகிறது என்று அண்ணன் திருமா காட்டத்தான் தேர்தல் வைக்க வேண்டுமென்று சொல்கிறார். அதற்காக மத்திய அரசு ஒரு தேர்தலை நடத்தாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அண்ணன் திருமாவின் தற்போதைய காய் நகர்த்தல்கள் சரியென்றே படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவின் கோரிக்கை மிகவும் நியாயமாகவே படுகிறது. ஆறரைக்கோடிப்பேர் வாழும் தமிழ்நாட்டில் தமிழுணர்வு இல்லாத பிறமானிலத்தவர்களையும், மிகவும் சிறுபான்மையினரான பிராமணர்களையும்விட்டால் மற்றவர்கள் கடசி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழுணர்வோடு இந்த விடயத்தில் ஈழத்தமிழர்களுக்கு நிச்சயமாக ஆதரவளிக்கக்கூடிய நிலைமையுள்ளது. திமுக, திராவிடர்கழகம், அதிமுகவில் சிறுபிரிவினர் மற்றும் விஜயகாந்தின் தேமுக, திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள், வைகோவின் ஆதரவாளர்கள், ராமதாஸ் அவர்களின் ஆதரவாளர்களென்று பல கடசியினர் இந்தவிடயத்தில் எமக்காக ஆதரவளிக்கக்கூடிய நிலைமையுள்ளது. காங்கிரசிலும்கூட ரகசிய வாக்களிப்பு என்று வரும்போது கணிசமானவர்கள் ஆதரவு தரக்கூடிய வாய்ப்புள்ளது. தற்போது தமிழ்நாட்டின் ஆளும் காங்கிரசார் தங்களது டெல்லி எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காகப் பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டுகின்றனர். தமிழர்களின் உள்ளுணர்வு வெளியே நடைபெறும் விடயங்களிலிருந்து மிகவும் வேறுபட்டது. இதனாலேயே மத்திய அரசும் இந்த விடயத்தை மிகவும் கவனமாகக் கையாளவே முயற்சிக்கின்றது. புலனாய்வுத் தகவல்களை என்றபேரில் கட்டுக்கதைகளையுருவாக்கி றோ போன்ற அமைப்புக்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குத் துணைபோகின்றன. ஆகவே தமிழ்நாட்டில் ஒரு வாக்கெடுப்பை நடத்துவதையிட்டுப் பயப்பட ஏதுமில்லை. ஆனால் வெளிநாட்டிலியங்கும் ஒரு அமைப்புக்காக தனியே தமிழ்நாட்டில் மட்டும் வாக்கெடுப்பு நடத்த முடியாது. அது இந்திய இறையாண்மைக்கு முற்றிலும் முரணானது என்று மத்திய அரசும் நீதித்துறையும் இத்தகைய வாக்கெடுப்புகளைத் தடைசெய்துவிடும் என்பதால் தமிழ்நாட்டில் இத்தகைய வாக்கெடுப்பு நிகழ வாய்ப்பேயில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.