Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிளகின் சுயசரிதம் (முனைவர் கல்பனா சேக்கிழார்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள் எழுதிய இந்த மிளகின் சுயசரிதத்தை இணைப்பது "தமிழும் நயமும்' பகுதியலா அல்லது "நலம்பெற' என்னும் பகுதியிலா என்று ஒரு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் இதில தமிழின் சுவையும், உடல்நலன் பேண் குணமும் ஒருங்கே அமைந்திருக்கிறது. அத்தோடு எனக்குப் பிடித்த வலைப்பூ என்னும் இன்னுமொரு பகுதியிலும் இதனை இணைக்கலாம் இந்தத் திக்கு முக்காட்டத்தின் இறுதியில் தமிழும் நயமும் பகுதியில் இணைத்தலே சாலச்சிறந்தது என்று இங்கு இணைத்துள்ளேன் வாசிக்கிறதோடு மட்டும் நிற்காமல் உங்களுக்குத் தெரிந்த மிளகு பற்றிய விடயங்களையும் பதிவு செய்யுங்கள்.

koeh107.jpg

நான் தாங்க மிளகு என்னைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லாம் என்று இருக்கிறேன்.நான் எவ்வளவு பழமையாவள் என்பது உங்களுக்குத் தெரியுமா?என்னை யார் யார் எல்லாம் விரும்பி வாங்கினார்கள் தெரியுமா?என்னுடை பிறப்பிடம் என்னுடைய சிறப்பு இதுவாது உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள்.

எதுவுமே ஆதாரத்துடன் சொன்னால் தானே நீங்கள் நம்புவீர்கள்,நான் பழமையானவள் என்பதற்குக் கட்டியம் கூறும் நம்முடைய பழமையான சங்க இலக்கியம்.வாங்க கொஞ்சம் பார்த்துவிட்டு என்னைப் பற்றி சங்க இலக்கியம் என்ன சொல்லுதுனு பார்ப்போம்.

எனக்கு எப்பொழுதுமே உணவில் மிக முக்கிய இடம் உண்டு. உணவில் நஞ்சிருந்தாலும் அதனை முறிக்கும் திறனும் உள்ளது.அதனால் தான் எதிரி வீட்டில் சாப்பிடுவிட்டு வந்து நாலு மிளகைச் சாப்பிட்டால் போதுமென இன்றும் கிராமப் பகுதியில் கூறுவார்கள்.எல்லா இடத்திலையும் நான் விளைந்து விடமாட்டேன்.மலை சாரல் பகுதிதான் மிகவும் பிடித்த பகுதி.

அதனால் தான் முன்பிருந்த சேரநாட்டில் மலைச்சாரல் பகுதியில் வளர்ந்தேன்.அங்கு மட்டும் இல்லாமல் கிழக்கிந்திய தீவுகளாக இருந்த சாவக நாட்டிலும் வளர்ந்தேன்.ஆனாலும் சேர நாட்டில் வளம் மண்ணின் தன்னமையால் நல்ல மணமுள்ள மிளகாக என்னால் இருக்க முடிந்து.அதனால் சாவக நாட்டின் மிளகைவிட சேரநாட்டி மிளகையே அதிகம் வெளிநாட்டவர் வாங்கி சென்றுள்ளனர்.

எனக்கு வேறு பெயரும் இருக்கிறது .என்னை கறி என்றும் மிரியல் என்றும் அழைப்பர்.என்னை ஐரோப்பிய கண்டத்தில் இருந்து வந்த யவனர்கள் அதிமாக விரும்பி வாங்கி சென்றதால் யவனப் பிரியா என்ற பெயரும் உண்டாகிவிட்டது.

நான் கொடியாக பலாமரத்தின் மீதும் ,சந்தனமரங்கிளன் மீதும் மலைகளின் உள்ள சிறு செடிகள் மீதும் ஏறி படர்வேனாம்.

பைங்கறி நிவந்த பலவின் நீழல்(சிறுபாணாற்றுப்படை,43)

கறிவளர் சாந்தம் (அகநானூறு,2)

கறி வளர் அடுக்கம் (குறுந்தொகை,288)தோட்டங்களாகவும் பயிரிடப் பட்டு இருக்கின்றேன்.

துறுகல் நண்ணிய கறியிவர் படப்பை (அகம்,272)

காய்கறி சமைக்கும் போது என்னையும் கறிவேப்பிலையும் பயன்படுத்தியிள்ளார்கள்.

பசுங்காய்ப் போழொடு கறிகலந்து

கஞ்சக நறுமுறி யளையீ(பெருபாணாற்றுப்படை,(வரி 307,308)

தமிழகத்தின் மேற்கு கரையில் விளைந்த என்னை ,கிழக்குக் கடற்கரையோரமாக சிறந்து விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு வண்டிகளிலும் பொதிமாடுக்ள மேல் ஏற்றியும் கொண்டு வந்துள்ளனர்.அப்படி ஏற்றி வரும் வழியில் சுங்க சாவடியில்,அரசு ஊழியர்கள் வரியும் வாங்கியுள்ளனர்.

காலில் வந்த கருங்கறி மூடை(பட்டினப்பாலை,186)

தடவிநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட

சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்

புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து

அணர்ச்செவி கழுதைக் சாத்தோடு வழங்கும்

உல்குடைப் பெருவழி (பெருபாணாற்றுப்படை,77-800

மேலைநாட்டினர் மரக்கலங்களில் வந்து பொற்காசுகளைக் கொடுத்து என்னை வாங்கி சென்றுள்ளனர்.இதனைப் பார்த்த தாயங்கண்ணரும்,பரணரும் தமது பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.

சேரலர்

கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க

யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளங்கெழு முசிறி ( அகநானூறு,149)

மன்கைகுவைஇய கறிமூடையால்

கலிச்சும்மைய கரைகலக் குறுந்து கலந்தந்த பொற்பரிசம்

கழித்தோணியால் கரைசேர்க்குறுந்து (புறநானூறு,343)

யவனர்கள் பெரும்பாலும் என்னை வாங்குவதற்றகாவே கடல் கடந்து வந்திருக்கின்றனர்.நம்நாட்டில் விளைந்த நல்ல மிளகினை ஏற்றமதி செய்துவிட்டு பற்றாக்குறைக்குச் சாவகத்தில் இருந்தும் இறக்குமதி செய்துள்ளோம்.(நமக்குத் தான் பிறருக்கு வழங்கும் மனது தாராளமாக இருக்கிறதே)

மிளகாயின் வரவிற்குப் பிறகு என்னுடைய பயன்பாடு குறைந்தா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.இப்பொழுதும் உணவில் எனக்கு தனி இடம் உண்டு.

http://www.sekalpana.com/2009/10/blog-post_19.html

Edited by valvaizagara

தகவலுக்கு நன்றி சகாராக்கா....

அத்துடன் மிளகும் மஞ்சளும் உண்டால் வரும் பலனையும் கீழே இணைத்துள்ளேன்.

இயற்கையை மீறி எதுவும் நடக்காது'; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்' - இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

பழம்பெருசுகள் இதுபோல பேசுகிறார்களே என்று சாதாரணமாக அவர்களை எடைபோட்டு விட முடியாது. சவடால் பேச்சுக்கு ஏற்ப அவர்களிடம் விஷயமும் இருக்கும்.

சரி, விஷயத்துக்கு வருவோம். நாள்பட்ட சளி, இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் என்றால் மிகையாகாது.

அப்படியென்ன மஞ்சளுக்கும், மிளகுக்கும் மகத்துவம்

அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

தகவல்:

http://medilifeinfo.com/viewtopic.php?f=39&t=65

Edited by Eelamagal

தகவலுக்கு நன்றி

மிளகு கந்தகப் புகையை கூட விலத்தி வைக்கும் என்ற உண்மை இன்று தான் தெரிந்தது :lol:

மேலதிகமாக:

சின்ன மிளகின் பெரிய மகத்துவம்

சுறுசுறு என்னும் காரத்தன்மை கொண்ட மிளகு, நெருப்பின் குணம் உடையது என்பார்கள். இது அளவில் சிறிதாய் இருந்தாலும் ஆற்றலில் பெரிதாய் விளங்குகிறது.

சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் போன்றவற்றிற்கு அருமருந்தாய் பயன்படுகிறது. இந்தச் சின்ன மிளகைக் கொண்டு நாமே சில சீரிய மருத்துவம் செய்து கொள்ளலாம்.

மிளகின் மருத்துவப் பயன்கள்:

1. தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகுடன் உப்பு, ஓமம் சேர்த்து வாயில் போட்டு மென்றால் வலி ஓடோடி மறைந்துவிடும்.

2. பசியின்மை, வயிற்று உப்புசம் இருந்தால் மிளகைப் பொடி செய்து சிறிது உப்புச் சேர்த்துச் சூடாக்கி, சிறிது நெய்யில் கலந்து சப்பிட உடனே குணமாகும்.

3. சளி, நீர்ப்பிடிப்பு அதிகமாக இருந்தால் மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு நாளும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது. இரண்டு நாட்களிலேயே நல்ல குணம் நல்கும்.

4. பசியில்லாமல் இருந்தால் ஒரு ஸ்பூன் மிளகை வறுத்துப் பொடி செய்து கைப்பிடியளவு துளசி இலையைப் போட்டுக் கொதிக்க வைத்துச் சூடு ஆறியவுடன் தேனில் கலந்து குடித்தால் சரியாகும்.

5. நன்றாய் சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத் தொடங்கினால் மிளகை நன்றாக இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு தேனில் கலந்து சாப்பிட்டு வர இரண்டொரு நாட்களில் சளியிலிருந்து விடுதலைதான்.

இது போல் இன்னும் பல மகத்துவம் மிக்க மிளகை, நாம் உணவில் தாராளமாய்ச் செர்த்துக் கொண்டால் உணவே மருந்தாய் உடல் நலம் காக்கலாம் என்பதில் ஐயமில்லை.

தகவல்:

http://www.tamilsigaram.com/Linkpages/medical/disp.php?MessageId=4892

  • கருத்துக்கள உறவுகள்

vietnam_pepper_2.jpg

மிளகின் மருத்துவ குணங்களை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பை நலம் பெற பகுதியிலும் இணைத்துவிடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.