Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    13683
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    4
    Points
    15791
    Posts
  3. Gari

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    3
    Points
    1354
    Posts
  4. அஞ்சரன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    3
    Points
    2597
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/30/13 in all areas

  1. கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்! நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்! உங்கள் 'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுபட்டதை நான் அறிவேன்! மஞ்சுளா வெடிவர்தனாவின் உங்கள் விடுதலைக்கான வேண்டுகோள் முகநூலில் வெளி வந்தபோது, அதனை அவரது முகநூலில் இணைத்தேன்! அவரது முகநூலில் பல ஊடக நண்பர்களும், முஸ்லிம் நண்பர்களும், சிங்கள நண்பர்களும் இருந்ததால், இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையே காரணமாகும்! அது அவரது தனிப்பட்ட பக்கமென்பதைக்கூடச் சிந்திக்க எனக்கு நேரமிருக்கவில்லை! உங்களுக்கு என்ன நடக்குமோ என்ற பயம் மட்டுமே என்னிடம் இருந்தது! அவரது பக்கத்தில், அவரது அனுமதியில்லாமல், வேறொருவர் இணைப்புக்கொடுக்க முடியாது என்பதைப்பின்னர் அவதானித்தபோதும், உடனடிடியாக அந்தப் பதிவை அனுமதித்தது மட்டுமன்றி, உங்கள் விடுதலைக்கான கையெழுத்துப் போராட்டத்தையும் அவர் அங்கு இணைத்திருந்தார்! என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை, செய் நன்றி கொன்ற மகற்கு! அதை விடுவோம்! எனது முன்னைய கருத்து, சிங்களப் புலிகளுடன், கத்திப்போரிட்ட உங்கள் வீரம் பற்றியது! புலிகளின் ஊடகத் தொடர்பாளர் நடேசனின் மனைவி ஒரு சிங்கள இனத்தவர்! அவர் செய்த ஒரே குற்றம், நடேசன் அண்ணையின் மனைவியாக இருந்தது மட்டுமே! அவர் தமிழில் புலம்பவில்லை! சிங்களத்திலேயே புலம்பினார்! அத்துடன் அவர் ஒரு பெண்! அவரை விட்டுவைக்காத சிங்களத்திடம், உங்கள் வீரம் வெற்றி பெற்றதைக் கூறிய போது, என்னால் ஜீரணிக்க முடியவில்லை! இனியாவது, இப்படியான முட்டாள் தனமான, தர்ம யுத்தங்களில் இருந்து விலகியிருங்கள்! தர்மம் என்பது எனது பார்வையில் வித்தியாசமானது! 'கண்ணகி'மதுரையை எரித்தது பலருக்குத் தர்ம யுத்தம்! பாண்டியனால், சிலம்புக்குள் என்ன வகையான 'பரல்' இருக்கிறது என்று பூந்து பார்க்க முடியவில்லை! அதற்கான தேவையும் அவனுக்கில்லை! ஆனால், மதரை என்ன பாவம் செய்தது? கோவலனுக்கு வெள்ளையடிப்பதற்காக 'மதுரை' எரிந்து தானாக வேண்டும்! இது தான் 'தர்ம யுத்தம்"
  2. நன்றி ஜெயபாலன் ஐயா; எமது கவலை எல்லாம் நீன்கள் சுகமாக திரும்புவதில் இருந்தது. சிலர் நீன்கள் கூறுபது போல நீன்கள் செத்து இருந்தால், விச்கி அடித்து போட்டு மாமனிதர் பட்டமும் கொடுத்தும் இருப்பார்கள். அவர்களை விடுன்கள், அவர்கள் அல்ல வருத்த படுவது, அதைத் தவிர, வேறும் சிலரும் முயர்சி செய்தார்கள். அவர்களை நீன்கள் மறக்க வேண்டாம். இப்போது Face Book இல் செய்தி பகிர்வது இலகுவான காரியம் அல்ல. பலருக்கு அதுவே உனகளை போன்றவர்கள் சிறை சென்று மீண்டு வருவதை போன்றது. அவர்களும் சேர்ந்ததே எனகள் இனம், சனம் என்று உணர்ந்து கொள்ளுன்கள். எனக்கு facebook 400- 500 பேர் "தெரிந்தவர்களாக" இருக்கிறார்கள், அதில் 4-5 பேர் உன்களை பற்றிய செய்தியை பகிர்ந்து இருந்தார்கள். ஆனால் முரளிக்கு கவிதை கட்டுரை எழுதியவர்கள் மிக அதிகம். மாவிரர் தினத்திற்க்கு 1-2 பேரே எரியும் சுட்டிதன்னும் போட்டார்கள். அதில் இருந்து உணர்ந்து கொள்ளுன்கள் இப்படி செய்தி பகிர்வது எவ்வளவு கடினம் என்று. எனவே உனகளுக்காக செய்தி பரிர்ந்தவர்களை எதோ வேலை அற்றவர்கள் என்று நினைக்காமல், அவர்களுக்காகவும் நிமிடம் ஒதுக்கி பதில் சொல்லுன்கள். முஸ்லீம் அமைச்சர்கள் நேரடியாக உதவி இருக்கலாம். ஆனால் அவர்களுடன் சேர்ந்து இணைய உறவுகளும் தன்கள் பன்கை செய்தார்கள். அவர்களை எட்டி உதைய வேண்டாம். அப்படி செய்வது உனகள் விருப்பம். நீன்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு வந்த BBC செய்தியில் இருந்தது, உனகளுக்கு விசா விதி முறை தெரியாதால்தான் கைது செய்யபட்டதாகவும், இலன்கை அரசான்கம் ஒரு சுத்தமான சுசைபிள்ளை என்பது போலவும் இருந்தது. நென்சுக்கு நீதியாக நடப்பது அவர் அவர் விருப்பம், அது காலம் கடந்தும் வரலாம்- எமது வைத்திய நண்பருக்கு எற்பட்டது போல. ஆனால் நீன்கள் சொல்லும் உண்மையான வாக்கு மூலம் சில வேளைகளில் 2014 படகு இல்லாமல் கொவுரவ பிரசையாகவும் செல்ல உதவும். பல காலம் பல காரணன்களால் புதைந்திருந்த தேர் உருள தொடன்கும் போது அரோகர என்கிற வாய்ச் சொல்லே இன்னும் ஒரு முழம் இழுக்க உந்தும். -எழுத்து பிழைகளை பொறுத்து கொள்ளுன்கள் -
  3. ஒருவரின் தாய் மொழியை வைத்து மட்டுமே அவரின் இனத்தை தீர்மானிப்போம் என்றால் அமெரிக்கர்களும் கனேடியர்களும் கரிபியன் தீவினரும் ஆங்கிலேயர்கள் ஆகிவிடுவார்கள். பல ஆபிரிக்க இனத்தவர்களை இசுபானியார்களாக கருதப்பட வேண்டியிருக்கும். இலங்கை தமிழரும் இந்திய தமிழரும் ஓரினம் ஆகி அவர்களின் தாய்மண் தமிழ்நாடாக இருக்கும். ஒல்லாந்தர்கள் யாழ்ப்பாண தமிழரை மலபார் இனத்தவர் என குறிப்பிட்டு உள்ளதால் யாழ்ப்பாண தமிழரை பின்னர் வந்த தமிழருடன் கலந்த மலையாளிகள் என கருதுவோர் இருக்கிறார்கள். இலங்கை முஸ்லிம்கள் தாம் அரபு வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதுகிறார்கள். தனித்து நின்று எந்த சிக்கலையும் தீர்க்க முடியாது என்பது முள்ளிவாய்க்கால் தந்த பாடம். இலங்கை தமிழர் இலங்கையில் பலமற்ற 11.21%. முஸ்லிம்கள் 9.23%. இலங்கையில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான தேவைகளும் சிக்கல்களும் பல இருக்கின்றன. தமிழர் ஆயுதம் ஏந்தியும் சத்தியாக்கிரகம் செய்தும் கடந்த 50 வருடங்களாக வீணாக்கிய சக்தியுடன் ஒப்பிடும் போது இந்த உறவுப்பாலத்துக்கு தேவையானது மிகவும் குறைவான சக்தியே.
  4. துளசி தமிழரின் பெரும் சொத்து ஒன்று இவர் அந்த மரியாதையை நாம் தரணும் பிள்ளை. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்
  5. உறவுகளே விட்டுவிடுங்கள் ..............இந்த ஐயாவை .உண்மையில் புலவரின் இந்த நிலையில் அவருக்கு அவகாசம் கொடுப்பதே காலத்தின் கட்டாயம் ,சிறைக்கு சென்றவர்களும் ,அச்சுறத்த பட்டவர்களும் ,அவர்கள் உணர்வும் நான் நன்கு அறிவேன் .........களத்தில் எமது விடிவிற்காய் போராட புறப்பட்ட எம் உயிரான உண்மையான போராளி கூட இங்கே வந்தபின் அவரது குடும்ப உறவுகள் [ எம் உறவுகள் ] பாதுகாப்பை முன்னிட்டு அமைதியாய் இங்கு இருப்பதை நாம் பார்க்கவில்லையா ,அதை புரிந்து கொள்ளவில்லையா .........அன்று வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையினால் அங்கீகரிக்கப்பட்ட கவிகளுள் இவரும் ஒருவர் ....சிறிலங்கா சிறையின் கொடுமை அறிந்தவன் என்ற ரீதியில் ஒரு புரிந்துணர்வுடன் தற்போது விட்டு எதிர்காலத்தில் இவரது செயல்பாடுகளை கணிப்பிடுவதே சாலச்சிறந்தது .............புலவருக்காக வக்காலத்து வாங்கவில்லை .................தமிழீழ விடுதலை புலிகள் எமக்கு கற்றுத்தந்த பாடத்தின் அடிப்படையில் நான் இப்பிடி பதிவிடுகிறேன் .............நன்றி....
  6. செயபாலன் , நிழலியும் துளசியும் மட்டும் அல்ல உங்களை நன்கு அறிந்தவர்கள், பொது வெளியில் எழுதுபவர்கள் எல்லோருடமும் உங்களைப் பற்றிய பார்வை இவ்வாறே உள்ளது. உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன். ஆகவே உங்களின் தனிப்பட்ட பிரச்சினையை, தமிழர்களைத் துன்பப்படுத்தும் செயற்பாடாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். துன்பப்பட்ட துன்பப் படும் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய பேருபகாராம், கவிதை எழுதுவது படத்தில் நடிப்பது என்னும் துறைகளில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.இது உங்களுக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது. எனது யோசனையை சீர்தூக்கி நடப்பீர்கள் எனக் கருதுகிறேன். நன்றி.
  7. அன்பான ஜெயபாலன் அண்ணா, உங்கள் விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி. நான் உங்களுக்கு எழுதிய விடயங்கள் உங்களுக்கு புரிகின்ற விதமாக எழுதவில்லையோ என்று சந்தேகம் வருகின்றது. இப்பொழுது சுருக்கமாக சொல்ல முயல்கின்றேன். நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டதாக உங்கள் முகநூலில் வந்த தகவலைக் கண்டதில் இருந்து விடுதலையாகிய செய்தி வரும் வரைக்கும் உங்கள் விடுதலையை மிகவும் விரும்பிய உறவுகளில் நானும் இருந்தேன். எந்த விதமாகினும் விடுதலையாக வேண்டும் என்பதே எனது எண்ணமுமாக இருந்தது. அதே நேரத்தில், உங்கள் விடுதலையை விரும்பிய காரணத்துக்காக முதல் அறிக்கை என்று நீங்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையை நான் ஆதரிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்கள் முதல் அறிக்கையினை கண்டித்து விமர்சிப்பதால் மட்டுமே நான் அதி தீவிர தமிழ் தேசியத்தினை வலியுறுத்துகின்றவராக நீங்கள் நிறுவ முயல்வது தவறு. என் எழுத்துகள் என்றுமே அதி தீவிர தமிழ் தேசியத்தை வலியுறுத்துவன அல்ல. அத்துடன் புலம்பெயர்ந்த ஒருவர் தாயகத்துக்கு செல்வதை ஒரு தவறான விடயமாக பார்க்கும் சிந்தனையும் என்னிடம் இல்லை. என்னைக் கேட்டால் தாயகத்திற்கு ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழரும் தன் பிள்ளைகளுடன் சென்று காட்டி அந்த மண்ணுடனான நேரடி பரிச்சயத்தினை பேண வேண்டும் என்பதையே வலியுறுத்துவேன் (இதன் அர்த்தம் சுற்றலாவாக செல்வது அல்ல). எனவே நீங்கள் தாயகம் சென்றதோ அல்லது மீண்டும் அங்கு செல்ல நினைப்பதோ தவறு என்று ஒரு இடத்திலும் குறிப்பிட வில்லை, அப்படி எண்ணவும் இல்லை. நீங்கள் அங்கு சென்று கைதாகியதும் விடுதலையானதும் ஒரு சாதாரண நிகழ்வாக கொள்ள முடியவில்லை. சிங்களம் தன் மேலதிகாரத்தினை வெளிநாட்டில் இருந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்றுச் செல்கின்றவர்கள் மீதும் எந்தவித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் பிரயோகிக்கும் என்பதை மீண்டும் உலகுக்கு காட்டும் ஒரு செயல். கைதில் இருந்து விடுவிப்பு வரை நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவத்திலும், ஒவ்வொரு கிளைச் சம்பவங்களிலும் எந்த நெகிழ்வுத் தன்மையும் இல்லாமல் பேரினவாத அம்சம் நிறைந்து கிடக்கின்றது. ஆனால் உங்கள் முதல் அறிக்கை இந்த பேரினவாத அம்சங்களை வெளிக்காட்டுகின்றதா? மீண்டும் இதனை அழுத்திக் கேட்கின்றேன், உங்கள் முதல் அறிக்கை இந்த பேரினவாத அம்சங்களை அதன் அதே தீவிரத் தன்மையுடன் வெளிக்காட்டுகின்றதா? இல்லை என்று தான் நான் சொல்வேன். பேரினவாதத்தின் தீவிரத்தினை காட்டமல் விட்டது மட்டுமன்றி, அதனை நீர்த்துப் போகின்ற செயலைத்தான் உங்கள் அறிக்கை செய்கின்றது என்பதே என் முடிவு. முக்கியமாக அரச மேல்மட்டம் (உங்கள் அறிக்கையில் கோத்தா) நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பது போன்றும் அதன் கீழ் மட்டம் (உங்கள் அறிக்கையில் பொலிஸ் கான்ஸ்டபிள்) தான் பேரினவாதத்தின் தீவிரத்துடன் இருப்பது போன்றும் உங்கள் அறிக்கையின் அரசியல் பேசவில்லையா? இதைத்தான் நான் கடுமையாக விமர்சிக்க முயல்கின்றேன். ஜெயபாலன் என்ற தனிமனிதனுடன் எனக்கு எந்தவிதமான விரோதமும் இல்லை, 'உவன் எங்கள் சொத்து' என்று வாஞ்சையுடன் அழைக்கும் வண்ணம் தான் ஜெயபாலன் என்ற மனிதனுக்குள் புதைந்து கிடக்கும் நுட்பமான கவிஞன் இருக்கின்றான். அவனை எப்பவும் ஆராதிப்பேன். அவன் கவிதைகளை உரத்துப் படித்துக் காட்டி என் பிள்ளைகளுக்கும் கவிதாவுணர்வை கொண்டு வரப் பார்பேன். அந்தக் கவிஞனுடனும், ஜெயபாலன் என்ற தனிமனிதனுடனும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் அவன் அரசியலில் கண்டிப்பாக கோபம் இருக்கின்றது. அந்த அரசியலை வெளிக்காட்டிக் கொண்டு இருக்கும் 'முதல் அறிக்கையில் கோபம் இருக்கின்றது. அதை கண்டிப்பாக தொடர்ந்து எதிர்பேன். அது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கவும் விரும்புவேன் நன்றி நிழலி (மற்றது, குருபரன் குளோபல்செய்தித் தளத்தில் செய்தி போடும் முன் முகநூல் தகவலை வைத்து யாழில் உங்கள் கைதை செய்தியாக மணிவாசகன் போட்டு இந்தத் திரியை ஆரம்பித்து இருந்தார். ஆகவே உங்கள் கைதை செய்தியாக முதலில் உலகுக்கு கொண்டு வந்தது உங்கள் முகநூலும் எங்கள் யாழும் தான் )
  8. உங்களை கைது செய்வார்கள், உங்கள் நண்பர்கள் காப்பாற்றுவார்கள், நீங்கள் விடுதலையாவீர்கள் என நினைத்தால் தயவு செய்து இனிமேலும் இலங்கைக்கு செல்லாதீர்கள். ஏனென்றால் நீங்கள் கைது செய்யப்பட்டால் ஒரு தமிழர் கைது செய்யப்பட்டார் எனவே உலகம் பார்க்கும். நீங்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் தமிழர்கள் கைது செய்யப்பட்டாலும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தோற்றத்தையே உருவாக்கும். (விடுதலையின் பின்னர் தகுந்த காரணங்களை உலகின் முன் நீங்கள் வைக்காத நிலையில்) நீங்களும் உங்கள் நண்பர்களும் நல்ல பாதுகாப்பாக இருப்பீர்கள். ஆனால் உங்களின் இவ்வாறான செயற்பாடுகளால் அங்கு உண்மையில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படாதவர்களும் அனுபவித்த, அனுபவிக்கும், அனுபவிக்கப்போகும் சித்திரவதைகள் உலகின் கண்களிலிருந்து மறைக்கப்படும். ஒரு சிலரை காப்பாற்றுகிறேன் என கூறி நீங்கள் உண்மையில் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுகின்ற தமிழ் மக்களை மறந்து விடுகிறீர்கள். அவர்களுக்கு தீமை விளைவிக்கும் செயற்பாடுகளையே மேற்கொள்கிறீர்கள். இப்பொழுதும் கூட திரும்ப இலங்கைக்கு செல்வீர்கள் என கூறுகிறீர்கள். நீங்கள் போனாலென்ன வந்தாலென்ன மீடியாக்களுக்கு தெரிவிக்காமலேயே உங்களை காப்பாற்றக்கூடிய நண்பர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அறிவித்து விட்டு போய் வாருங்கள். ஏனென்றால் உங்கள் ஒருவரை தான் தமிழர் என உலகம் கணக்கு போட்டுவிடக்கூடாது. தேவையான நேரத்தில் குரல் கொடுக்காத நீங்கள் எல்லாம் இணக்க அரசியல் செய்து எந்த காலத்திலும் பிரயோசனம் கிடைக்காது. ஒருவேளை உங்களுக்காக ஹக்கீம் குரல் கொடுப்பது தான் உங்களை பொறுத்தவரை இணக்க அரசியலோ தெரியவில்லை.
  9. தாக்கியவர்கள் அல்ல... கேள்வி கேட்டவர்கள் மீதுதான் கோவம். நான் இறுதியில் உங்களை பற்றி எழுதியது நூற்றுக்கு நூறு விகிதம் சரி என்பதை நிறுவி விட்டீர்கள். ஒரு நுட்பமான கவிஞன் அரசியல் வாதியாக மாறும் போது, அந்த நுட்பங்களை எவ்வளவு சாமர்த்தியமாக பயன்படுத்தி பிழைப்புவாதியாக மாறுவான் என்பதை உங்கள் வாழ்வு எங்களுக்கு காட்டுகின்றது. நன்றி வணக்கம்
  10. புலிகள் ஒரு போதும் விமர்சனத்துக்கு பயப்படவில்லை. தன்னந்தனியே அரசின் பொய்ப்பிரச்சாரத்தில் இருந்து ஒட்டுக்குழுக்களின் வசைபாடல், மேற்கு நாடுகளின் பயங்காவாதம் வரை துணிந்தே முகம் கொடுத்தார்கள். உங்களை போன்றோர் புலிகளை விமர்சிப்பதை குடிசை கைதொழிலாக நடாத்திக்கொண்டு இருப்பதை யாவரும் அறிவர்.புலிகள் பிழை விடவில்லை என்று யாரும் சொல்லவில்லை.அவர்களே பல தடவை ஒத்துக்கொண்டுள்ளார்கள். புலிகளினால் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை என உங்களை போல் நடித்த பலரை மக்கள் இனம் கண்டுள்ளார்கள்.புலிகளீன் பிரசன்னம் இல்லாமல் போய் 5 வருடங்கள் ஆகிறது.இன்னும் புலிகளை விமர்சிப்பதை தவிர தமிழ் மக்களுக்கு ஏதாவது உருப்படியாகை செய்தீர்கள் என்றால் அது சுழியம் தான், ஆகவே வளரப் பாருங்கள்.
  11. அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன், நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன். ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட தமிழனை தான் நினைத்த மாத்திரத்தில் கைது செய்யவோ / கடத்தவோ முடியும் என்று, அதுவும் வெளிநாட்டு தலைவர்கள் வந்து சென்று சில நாட்களில், உலக ஊடகங்களே உற்று நோக்கும்போதே செய்ய முடியும் என்று சிங்களம் காட்டிய போது, அதை எங்கள் தமிழ் ஊடகங்கள் பயன்படுத்த தவறி விட்டனவே என்று நான் கவலையுடன் இருந்த போது உங்கள் விடுதலை இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இந்த வேளையில் உங்கள் விடுதலைக்கு உதவியவர்களுக்கு உங்கள் யாழ் கள உறவாக நானும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன். வன்னி எங்கும் எத்தனையோ தமிழ் மக்களை பலிகொடுத்த போது உலகெங்கும் தொலைபேசி எடுத்து மக்கள் கதறி அழுதபோது பேசாமல் இருந்த உங்கள் நண்பர் நோர்வே சுந்தரலிங்கம், வன்னிவிளாங்குளத்தில் உங்களுக்கு நேர்ந்த கொடுமையை இருபது வினாடிகளில் நோர்வேயில் இருக்கும் உங்கள் நண்பர் சுந்தரலிங்கத்துக்கு எடுத்து சொன்னபோது (கவனிக்க அந்த மக்களுக்கு உங்களின் நண்பரின் தொலைபேசி இலக்கம் கிடைத்த விதம் உங்களுக்கு தான் தெரியும், சில வேளைகளில் நீங்கள் தொலைபேசி எடுக்க சொல்லித்தான் கத்தினீங்களோ TID இற்கு தான் வெளிச்சம்) உங்கள் நண்பர் ஊடகங்களுக்கு அறிவித்தமைக்கு முதலில் நன்றி. மக்களை கதற கதற கொன்ற சிங்கள பயங்கரவாதிகளின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, உங்களின் கத்தலை கேட்டு உங்கள் அம்மாவின் சமாதிக்கு அழைத்து சென்றமைக்காக அவர்களின் மனித நேயத்துக்காக நன்றிகள். (நீங்கள் உங்கள் அம்மாவின் சமாதிக்கு உண்மையிலேயே சென்றிருந்தால் உங்கள் அம்மாவின் ஆன்மா என்னை மன்னிக்கட்டும்.) எத்தனயோ பள்ளிவாசல்கள் உடைக்க பட்ட போதும், ஹலால் எதிர்ப்பு என்ற போர்வையில் எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களின் கடைகள் எரிக்கபட்ட போதும், கிழக்கில் முஸ்லிம் கலவரங்கள் நடந்த போதும் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத அமைச்சர் ஹக்கீம், உங்களுக்காக அமைச்சு பதவியில் இருந்துகொண்டே அரசை எதிர்த்து பேசியமைக்காக எனது மனமார்ந்த நன்றிகள். உங்களைப்போல எத்தனயோ தமிழ் கவிஞர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், சிங்கள அரசால் கொல்லப்பட்டபோது, அவர்கள் நல்லவர்கள், பொய் பேசாதவர்கள் என்று ஒரு வார்த்தை கூட பேசாத பஷீர் சேகுதாவுத் அவர்கள், உங்களை புகழ்ந்தமைக்காக நன்றிகள். நடுநிலை வகிக்கவந்த தங்களை கூட பொருட்படுத்தாமல், பச்சை குழந்தைகளையும், கர்ப்பிணித் தாய்மார்களையும் சிங்கள பேரினவாத அரசாங்கம் குண்டு வீசி அழிப்பதை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்தும் கூட , ஒரு சொல்லுக்காக கூட வாய்திறக்காத தோழர் எரிக் சோல்கைம், கொட்டும் பனியிலும் தங்களின் உறவுகளுக்காக ஆயிரமாயிரம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் போராடிய போது மௌனமாக இருந்த தோழர் எரிக் சோல்கைம், ராஜதந்திர வழமைக்கு மாறாக உங்களுக்காக இலங்கை அரசை எதிர்த்து அறிக்கை விட்டமைக்காக என உளப்பூர்வமான நன்றிகள். வெள்ளிக்கிழமை கைது செய்தால் இரண்டு நாட்கள் அடைத்து வைத்திருந்து திங்கட்கிழமை தான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த முடியும் என்று இலங்கை சட்டங்கள் தெரிந்த உங்களை பற்றி கூட கொஞ்சமும் அறியாமல், ஒரு தமிழன் கைது செய்யபட்டிருக்கிறான் மனித உரிமைகள் மதிக்கபடுவதில்லை என்பதற்கு பதிலாக, இந்திய தேசிய விருது நடிகர்,புகழ் பெற்ற கவிஞர் கைது என்று கொள்ளை எழுத்தில் வியாபாரம் செய்த ஊடக நண்பர்களுக்கும் புரட்சி வாதிகளுக்கும் நன்றி. முக்கியமாக மெழுகுதிரி வெளிச்சத்தில் என்னை ஆதவன் பத்திரிகைக்காக சிங்கள அடக்குமுறைக்கு எதிராக பேட்டி எடுக்க வந்த மஞ்சுள வெடிவர்த்தன, இன்று எத்தனையோ தமிழ் இளைஞர்கள் குற்றங்களே செய்யாமல் சிறையில் வாட, உங்களுக்காக விரைந்து செயற்பட்டமைக்காக நன்றிகள். இதைவிடவும், வெள்ளை கொடியுடன் வந்தவர்களை கதற கதற சுட சொன்னவரும், தமிழ் ஆண்களின் இரத்தம் கடலுக்கு பெண்கள் உங்களுக்கு என்று, சிங்கள படையினருக்கு கட்டளை இட்டு எத்தனையோ இசைபிரியாக்களை கத்த கத்த அழிப்புக்கு மூல காரணமான கோத்தபாய, நீங்கள் கத்த கத்த உங்களின் இரத்தத்தை கடலுக்கு காணிக்கையாக்காமல் விட்டதுக்கு கோடான கோடி நன்றிகள். (சில வேளைகளில் அவனுக்கு தெரிந்திருக்குமோ நீங்கள் மற தமிழன் இல்லை என்று ) இறுதியாக நீங்கள் விடுதலையாகி வந்ததும், முதல் அறிக்கை என்ற பெயரில் எண்ணற்ற அறிக்கைகளை விடப்போறீங்கள் என்று உங்கள் முதாலவது அறிக்கையிலேயே குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள். இங்கு நான் யாருக்காவது நன்றி கூறாமல் விட்டிருந்தால் மன்னிக்கவும். இன்னும் சில நன்றி உடையவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களின் பாதுக்காப்பை உறுதி செய்தபின்னர் இரண்டு வாரங்களில் மிச்ச பேருக்கு நன்றி சொல்லலாம் என்று விட்டிருக்கிறேன். நன்றி. அன்புடன், பகலவன். பிற்குறிப்பு : ஜெயபாலன் ஐயா, உங்களை கருணாவிடம் இருந்து காப்பாற்றி உங்களை யார் என்று இப்போ உலகுக்கு காட்டியமைக்காக பொட்டம்மானுக்கும் நன்றி. உங்களை வைத்தியசாலையில் வைத்து கொல்லாமல் விட்ட குமர என்கிற 74792 இலக்க பொலிஸ்காரர் இற்கும் நன்றி. இன்னும் இரண்டு ஒரு வாரங்களில் நான் இலங்கைக்கு சென்று தமிழ்-சிங்கள நல்லிணக்கம் பற்றி பேச விரும்புவதால், என்ன மாதிரியான முன்னேற்பாட்டுடன் செல்ல வேண்டும் என்று உங்கள் ஆலோசனை தேவை. அத்துடன், எனக்கு தமிழ் அரசியல் படிக்க நிறைய நாள் ஆசை. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பகுதிநேரமாக படிக்க கேட்ட போது, அவர் தனது வயதையும், நேரமின்மையும் சொல்லி உங்களை கேட்டு பார்க்க சொன்னார். உங்களுக்கு நேரமிருப்பின் இந்த மடலுடன் சேர்த்து அதற்கும் பதில் தாருங்கள் ஐயா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.