Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19163
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    23926
    Posts
  4. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9976
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/13/20 in all areas

  1. ஆஹா...கிளி ........சும்மா கிழி .....கிழி .......கிழி .....! 🦜
  2. ரவை தோசைக்கு மாவு ஊற்றும் முறை .👍
  3. பூரணத்தை கையில் கற்பகமே உந்தன் பெற்பதங்கள்
  4. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 வெள்ளிக் கதவை கார் மேகம் குடை பிடிக்கும் - தப்ஸ்
  5. புங்குடுதீவு ஒடியல் கூழாம்......
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, மார்ச் 2004 கருணா துணை ராணுவக்குழுவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பில் காணப்படுகின்றன கருணாவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பின் பலவிடங்களிலும் காணக்கூடியதாகவிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கருணாகுழுவுக்கு எதுவித உதவிகளையும் செய்யவேண்டாம் என்று கோரும் பல சுவரொட்டிக்களைக் காண முடிந்துள்ளது. பொலீஸார் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததன்படி பெருமளவு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடமாடி வருவதாகவும், இவர்களே இவ்வாறான துண்டுப்பிரசுரங்களையும் சுவரொட்டிகளையும் விநியோகித்துவருவதாகவும் கூறினர். "பலவிடங்களிலும் வெளிப்படையாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் வலம்வருவது தெரிகிறது. ஆனாலும், கருணாகுழுவுக்கெதிரான நடவடிக்கைகளை அவர்கள் உடனேயே ஆரம்பிப்பார்களா என்று சொல்லத் தெரியவில்லை" என்று மட்டக்களப்பிலிருந்து கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் தெரிவித்தார்.
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, மார்ச் 2004 கிழக்கு மாகாணப் போராளிகளுக்கு கருணாவின் துரோகத்தனம் பற்றிய விளக்கத்தினை அளிக்கும் புலிகள் கருணாவின் முறைகேடுகள் பற்றி கிழக்கு மாகாணப் போராளிகளுக்கும் பிரிவுத் தலைவர்களுக்கும் புலிகள் விளக்கம் அளித்துள்ளனர். "தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்". "தனது முறைகேடுகளுக்கான தண்டனைகளுக்குப் பயந்தே கருணா வன்னிக்குச் செல்லாது தேசியத் தலைமை பற்றியும், விடுதலைப் புலிகள் பற்றியும் மிகவும் தவறான பிரச்சாரத்தை கிழக்கில் மேற்கொண்டு வருகிறார்". "கருணா எனும் துரோகிக்கெதிரான தண்டனை நடவடிக்கைகளை எதிர்க்கும் எவரும் தமிழ்த் தேசிய இலட்சியத்திற்கெதிரான துரோகியாகவே கருதப்படுவீர்கள். தேசியத் தலைமைக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்போம் என்று உறுதிப்பாடு எடுத்து இயக்கத்தினுள் சேர்ந்த அனைத்துப் போராளிகளும் அதனை நினைவிலிருத்தி, தமது அறியாமையினால் இதுவரை கருணாவுக்கு ஆதரவாக இருப்பின், உடனடியாக அவரிடமிருந்து தூர விலகி விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்". என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. புலிகளின் அறிக்கையின் முழு வடிவமும் இதோ. "அன்பிற்குறிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட பிரிவுத் தலைவர்களே, போராளிகளே" "கருணாவின் முறைகேடான நடத்தைகள் எமது மண்ணிற்கும் மாவீரர்களுக்கும் அபகீர்த்தியை உண்டுபண்ணியிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொண்டுள்ள நீங்கள், சரியான பாதையினைத் தெரிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். தனது முறைகேடுகளை மூடிமறைப்பதற்காக கருணா பிரதேசவாதம் எனும் நஞ்சினைக் கையிலெடுத்திருப்பதோடு, அழிவினைத் தரும் யுத்தம் ஒன்றிற்குள் மொத்த தமிழினத்தையும் தள்ளியிருக்கிறார்" "தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்". "மீனகத்தில் சில போராளிகள் முன்னிலையிலும், சில பொதுமக்கள் முன்னிலையிலும் தான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போவதாகவும், இனிமேல் தானே கிழக்கு மாகாணத்தின் தலைவராக இயங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். தேசியத் தலைமைக்கு தமது விசுவாசத்தினைக் காட்டும் உறுதிமொழியினை பல்லாண்டுகளாக மாவீரரகளும், போராளிகளும் எடுத்துவரும் வழிமுறையினை இனிமேல் செயற்படுத்தப்போவதில்லையென்றும் அறிவித்திருக்கிறார்". "கருணா எமது தேசியக் கொடியினை அவமதித்துள்ளதோடு, உலகெங்கும் தமிழர்களால் வணக்கப்படும் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். தேசியத்தலைவரின் உருவப்படத்தினையும், உருவ பொம்மையினையும் எரிக்குமாறும் போராளிகளை வற்புறுத்தியிருக்கிறார். தனது அண்மைய செவ்விகளில் தமிழ்த் தேசியத்தை இழிவாகவும், மிகவும் அபத்தமாகவும் பேசிவருகிறார். தனது நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த எதிரிகளுடனும், ராணுவ அதிகாரிகளுடனும் மிக நெருக்கமான சிநேகத்தை அவர் இப்போது கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசியத்தினை ஆதரிக்கும் பத்திரிக்கைகளைக் கொழுத்தியும் முற்றாகத் தடைசெய்தும் தனது துரோகத்தனத்தினை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களிடமிருந்து மறைக்க கருணா முயன்று வருகிறார்". "மேற்சொன்ன முறைகேடுகள் எமது இயக்கக் கொள்கைகளுக்கும், விதிகளுக்கும் முரணானது என்பதால் இவற்றுக்குச் சரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. எமது தலைவரால் கருணாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பினை கருணா உதாசீனம் செய்திருக்கிறார். மட்டக்களப்பு - அம்பாறை மக்களை இல்லாத பிரதேசவாதச் சிந்தனையில் ஆழ்த்திவைத்திருக்கும் கருணா தனது சுகபோக வாழ்வினை அனுபவித்துவருகிறார்". " தனது முறைகேடுகளை மறைக்க கருணா தொடர்ந்தும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றுவதை எமது தேசியத் தலைமை இனிமேலும் அனுமதிக்கப்போவதில்லை. மானிடத்தின் முன்னால் ஒரு குற்றவாளியாகவும், துரோகியாகவும் நிற்கும் கருணா, தனது தவறுகளை மறைக்க உங்களைப் பகடைக் காய்களாகவும், கவசமாகவும் பாவிக்கிறார். கருணாவின் சூழ்ச்சிக்கு ஒரு போராளியேனும் பலியாகிவிடக் கூடதெனும் எமது தேசியத் தலைமையின் உண்மையான கரிசணையினைப் புரிந்துகொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்". " தனது சூழ்ச்சிபற்றித் தெரியாத அப்பாவிப் போராளிகளையும், மக்களையும் பாவித்து எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகச் செயற்பட்டுவரும் கருணா எம்மக்களின் விடுதலைக்கெதிரான துரோகிகளோடும், எதிரிகளோடும் கைகோர்த்திருக்கிறார். எமது மாவீரர்களினதும் போராளிகளினதும் தியாகங்களும், குருதியும் கருணாவினால் இன்று கேவலப்படுத்தப்பட்டு வருகின்றது. எமது தேசத்தையும் மக்களையும் காப்பதற்காக கருணாவை எமது மண்ணிலிருந்து அகற்றும் முடிவினை நாம் எடுத்திருக்கிறோம்". “எமது போராளிகள் கருணாவின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவரை விட்டு விலகியிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கருணாவின் துரோகத்திற்கெதிராக தேசியத்தலைமை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நிற்போர் தேசியத்திற்கெதிரான துரோகிகளாகக் கணிக்கப்படுவர் என்பதையும் கூறிக்கொள்கிறோம். தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்போம் என்கிற உறுதிப்பாடுடன் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என்பதும், உங்களின் பெற்றோர் இதனடிப்படையிலும்தான் உங்களை எம்மோடு இணைத்திருக்கிறார்கள் என்கிற வகையிலும் உண்மையினை அறியது கருணாவுடன் இன்று நிற்கும் போராளிகள் உடனடியாக அவரை விட்டு விலகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கருணாவை விட்டு வெளியேறும் போராளிகள் தங்களது குடும்பங்களோடு இணைவதற்கான அனுமதியினை எமது தேசியத் தலைவர் வழங்கியிருக்கிறார் என்பதையும் இத்தாள் அறியத்தருகிறோம். “எமது வேண்டுகோள்களுக்குப் பின்னர் எந்தவொரு போராளியோ கருணாவின் சூழ்ச்சிகளுக்கும் துரோகத்தனங்களுக்கு ஆதரவாக நிற்பதென்று முடிவெடுத்தால், அவர்களின் முடிவிற்கு அவர்களே பாத்திரவான்களாக இருப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். கருணாவின் துரோகத்திற்கு ஆதரவாக நின்று மரணிக்கும் எந்தவொரு போராளிக்கும் மாவீரருக்கான அந்தஸ்த்து ஒருபோதும் வழங்கப்படமாட்டட்து என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்". “தாயக விடுதலைக்காக இயக்கத்தில் இணைந்த போராளிகள் கருணா எனும் துரோகியினதும், அவரது கொலைக்குழுவினதும் நலத்திற்காக மரணிக்க வேண்டுமா என்பதை ஒருகணம் சிந்தியுங்க்கள். இன்று கருணாவுக்கு ஆதரவாக நிற்கும் பிரிவுத்தளபதிகள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து அவரிடமிருந்து விலகும் முடிவினை உடனடியாக எடுக்கவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சரித்திரத்தில் அவர்கள் மேல் விழவிருக்கும் பழிச்சொல்லிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும். “மட்டக்களப்பு - அம்பாறைப் போராளிகளின் வீரம்செறிந்த போராட்டச் சரித்திரம் கருணா எனும் இனத்துரோகியினால் களங்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றாகச் செயற்படுவதன் மூலம் கெளரவத்துடனும் தன்மானத்துடனுன் தலைநிமிர்ந்து வாழ்வோம்" துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்ச் 2004 யோசேப் பரராஜசிங்கத்தை தேர்தலில் நிற்கவேண்டாம் என்று மிரட்டிய கருணா துணை ராணுவக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வேட்பாளரான யோசேப் பரராஜசிங்கத்தை மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரத்தை உடனே நிறுத்துமாறு கருணா துணை ராணுவக்குழு அச்சுருத்தல் விடுத்திருக்கிறது. தமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை நிறுத்தாவிட்டால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இவ்வாயுதக்குழு மிரட்டியிருக்கிறது.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, மார்ச் 2004 கருணா குழுவின் அடாவடித்தனத்தை கண்டிக்கும் களுவாஞ்சிக்குடி மக்கள் வன்னியிலிருக்கும் தமிழ்த்தேசியத் தலைமைக்கு ஆதரவாகச் செயற்படுவோரை எச்சரித்தும், தேசியத் தலைமையிடமிருந்து தம்மை விலத்திக்கொள்ளுமாறும் கருணா குழு களுதாவளை - களுவாஞ்சிக்குடி ஆகிய பகுதிகளில் விநியோகித்துவரும் துண்டுப் பிரசுரங்களை அப்பகுதிமக்கள் கிழித்தெறிந்துள்ளனர். கிழக்கில் இயங்கிவரும் நாசகார துரோகக் கும்பலின் அழுத்தத்திற்குப் பயந்து தாம் தேசியத் தலைமைக்கெதிரா ஒருபோதும் செயற்படப்போவதில்லை என்றும் இம்மக்கள் கூறியுள்ளனர். மக்களின் செயலினால் ஆத்திரமடைந்த கருணா குழு, சுதா என்னும் முக்கிய உறுப்பினர் தலைமையில் இப்பகுதிக்கு வந்து மக்கள்மேல் தாக்குதலில் ஈடுபட்டுச் சென்றிருக்கிறது. கருணா குழுவின் தேசியத் தலைமைக்கெதிராகச் செயற்படுமாறு கிழக்கு மக்களைக் கோரும் துண்டுப்பிரசுரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆரையம்பதி பகுதியில் பலவிடங்களில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. கருணா குழு தொடர்ச்சியாக இப்பகுதியில் தினக்குரல் பத்திரிக்கையினைத் தடைசெய்து வைத்திருக்கிறது. கடந்த சில தினங்களாக இப்பத்திரிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் மக்கள் முன்பாக கருணா குழுவினரால் எரிக்கப்பட்டும், விநியோகஸ்த்தர்கள் துப்பாக்கி முனையில் அச்சுருத்தப்பட்டும் இருக்கும் நிலையில் இப்பத்திரிக்கை சிலவிடங்களில் விநியோகிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது. இதேவேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்திருக்கும் சைக்கிள் திருத்தும் நிலையம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருக்கிறது. கருணா குழுவுக்கு வெளிப்படையான ஆதரவாளராகச் செயற்பட்ட இந்த சைக்கிள் நிலைய உரிமையாளர் பார்த்திருக்க இச்சம்பவம் நடந்திருக்கிறது.
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, மார்ச் 2004 மட்டக்களப்பு மாகாணத்தைச் சாராத பிற மாவட்ட மாணவர்களின் பாதுகாப்புப் பிரச்சினை மத்தியிலும் திறக்கப்படும் கிழக்குப் பல்கலைக்கழகம் கிழக்கு மாகாண பல்கலைக் கழகத்தின் இரண்டாம் தவணைப் பாடங்கள் ஆரம்பமாகவிருப்பதால் மாணவர்கள் அனைவரையும் உடனடியாக தமது தங்குமிடங்களுக்கும், வாளாகங்களுக்கும் மீளுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. பல்கலைக் கழகத்தினுள் புகுந்த கருணா குழுவினரால் துப்பாக்கி முனையில் அடித்து விரட்டப்பட்ட யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயிர் அச்சம் காரணமாக தமது வீடுகளுக்குத் திரும்பியிருக்கும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள எதனையும் செய்யாது நிர்வாகம் இந்த திடீர் முடிவினை எடுத்திருக்கிறது. தமது உயிருக்கான உத்தரவாதத்தினை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கும்வரை தாம் பல்கலைக்கழக நிகழ்வுகளுக்குத் திரும்புவதுபற்றி நினைக்கமுடியாது என்று அம்மாணவர்கள் கூறியிருக்கின்றனர். அதேபோல கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து கருணா குழுவால் விரட்டியடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய தமிழ் மாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை தம்மால் கடமைகளுக்குத் திரும்பமுடியாதென்று கூறியிருக்கின்றனர். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சாராத மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியவர்களின் பாதுகாப்புப் பற்றிக் கரிசணை காட்ட விரும்பாத கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் தனது செயற்பாடுகளைத் தொடர்வதிலும், பரீட்சைகளை நடத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, மார்ச் 2004 வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்திற்காகத் தொடர்ந்தும் போராடுவேன் - யோசேப் பரராஜசிங்கம். "நான் எனது தேர்தல் பிரச்சாரங்களை புலிகளின் கட்டளைகளுக்கு இணங்கவே நடத்துவேன். ஒருங்கிணைந்த வடக்குக் கிழக்கு தாயகத்தின் அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழர் தேசத்தை உருவாக்கும்வகையில் எனது அரசியல் செயற்பாடு தொடரும். எனது குறிக்கோள்களிலிருந்து விலகி நடக்குமாறு என்னை நிர்ப்பந்தித்தால் நான் இத்தேர்தலில் இருந்து விலக்கிக்கொள்வேன்" என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கம் கனேடிய தமிழ் வானொலிக்கு செவ்வியளித்தார். . "கடந்த சில தினங்களாக கிழக்கில் தேர்தல்களம் சூடுபிடித்து வருகிறது. நான் எனது நிலையினைப் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தி வருகிறேன். கருணாவின் பிளவின் பின்னர் இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் புலிகளிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, அரசுக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். என்மீது திணிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு நான் பதில் வழங்கி வருகிறேன். தந்தை செல்வாவின் வழியில் கடந்த 50 வருடங்களாக அரசியல் செய்யும் நான் ஒருபோதும் அந்த வழியினை விட்டு விலகி அரசுக்குச் சார்பான நிலையினை எடுக்கமாட்டேன் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் எனது அசைக்கமுடியாத நிலைப்பாட்டினை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தொடர்ந்து சொல்வேன் என்றும் கூறியிருக்கிறேன். என்னால் பிரதேசவாதம் பேசமுடியாதென்பதை என்மீது அழுத்தம் செலுத்துபவர்களுக்கு உறுதிபடக் கூறிவிட்டேன். புலிகளால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கடமை இருக்கிறது, அதனை நான் நிறைவேற்றப் போராடுவேன்". "எங்களை கொக்கட்டிச்சோலைக்கு வரச்சொல்லி, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியினை மட்டுமே இனிமேல் பேசவேண்டும், தமிழரின் தாயகம், உரிமைகள் பற்றிப் பேசக்கூடாதென்று நிர்ப்பந்தம் தெரிவித்தார்கள். என்னுடன் வந்த பலர் அதனைப் பயத்துடன் ஏற்றுக்கொண்டபோதும், என்னால் அவர்கள் சொல்வதை ஏற்றுகோள்ளமுடியாதென்று அழுத்தம் திருத்தமாக அவர்களிடம் கூறிவிட்டேன். நான் தமிழ்த் தேசியத்திற்காகத் தொடர்ந்தும் போராடுவேன் என்றும், இணைந்த வடக்குக் கிழக்கே தமிழரின் தாயகம் என்பதை எப்போதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்றும் அவர்களிடம் கூறினேன்". "என்னுடன் இருந்தவர்கள் கட்டாயத்தின்பேரில் அவர்கள் சொல்வதற்கு இணங்கியிருக்கலாம். ஆனால், அது அவர்களதும் விருப்பமாக இருந்ததா என்பதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை". "திருகோணமலை தேர்தல் கூட்டத்திற்கு கட்சியின் உப தலைவர் என்கிற வகையில் கலந்துகொள்ளச் சென்றபோது என்னைத் தடுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன". "கிழக்கில் எனது நிலைப்பாட்டினை முன்வைத்து நான் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்வேன். அவர்கள் என்னைத் தடுக்கும்வரை இது தொடரும்". "கிழக்கின் மக்களும் அரச அதிகாரிகளும் இணைந்த வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்திற்கே ஆதரவாகச் செயற்படுவதாகத் தெரிகிறது. அவர்கள் பலருடன் பேசியதிலிருந்து நான் இதனைப் புரிந்துகொண்டேன்". "நான் யாருக்கும் எதிராக அரசியல் செய்யவில்லை, எவரையும் தாக்கிப் பேசவில்லை. தமிழ்த்தேசியம் மீதான எனது விருப்பினால் எனது கொள்கைகளைப் பற்றிப் பேசுகிறேன். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகப் பேசியதனால் இலங்கை ராணுவத்தாலும், உளவுப்பிரிவினராலும் பலமுறை அச்சுருத்தப்பட்டேன்". என்றும் அவர் கூறினார்.
  11. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 17, மார்ச் 2004 அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் தினக்குரல் பத்திரிக்கைக்குத் தடைவிதித்த கருணா குழு அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தினக்குரல் நாளிதழை விநியோகிப்பதற்கு முற்றான தடையினை கருணா குழு விதித்திருக்கிறது. மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த இப்பத்திரிகைக் அலுவலகத்திற்குச் சென்ற கருணா குழு ஆயுத தாரிகள், அங்கிருந்த மேலாளரை அச்சுருத்தியதோடு, இனிமேல் பத்திரிக்கை விநியோகிக்கப்பட்டால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.. அத்துடன், இப்பரிக்கையினை கிழக்கில் விநியோகிக்க உதவிவரும் நிறுவனங்களுக்கும் இக்குழுவினால் கொலைப்பயமுருத்தல் விடுக்கப்பட்டன. சில தினங்களுக்கு முன்னால் மட்டக்களப்பின் பல இடங்களிலும் கருணா குழுவினரால் கைய்யகப்படுத்தப்பட்ட தினக்குரல் மற்றும் வீரகேசரி நாளிதழ்கள் மக்கள் முன் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன என்பது நினைவுகூறத் தக்கது.
  12. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 16, மார்ச் 2004 பாராளுமன்ற பதவியினை நோக்கிச் செல்லும் கருணா துணை ராணுவக்குழு கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் புதிதாகத் தெரிவாகும் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கவேண்டும் என்று கருணாவினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கருணாவின் நெருங்கிய சகாவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தி கருத்துத் தெரிவிக்கும்போது, கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவாகும் ஒரு உறுப்பினருக்கு அமைச்சர்பதவியொன்றைத் தர புதிய அரசு விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கருணா குழு பாராளுமன்றப் பதவிகளை இலக்குவைத்து சந்திரிக்கா குமாரதுங்கவுடனும், மக்கள் விடுதலை முன்னணியுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறியிருக்கிறது. " தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்துத் தேர்தல் மேடைகளில் பேசக்கூடாதென்னும் எமது நிபந்தனையினை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.மட்டக்களப்பின் அபிவிருத்திபற்றி மட்டுமே கவனமெடுக்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டார்கள். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் கருணா குழுவுக்கும் கிழக்கு மாகாணத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து புதிய அரசாங்கத்தில் பதவிவகிக்க கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்கான சட்ட வேலைப்பாடுகள் எடுக்கப்பட்டிருப்பதாக கருணா எம்மிடம் தெரிவித்தார்". "மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்பதே எமது ஒரே குறிக்கோள் என்று இக்கூட்டத்தில் பங்குபற்றிய ஒரு உறுப்பினர் தெரிவித்தார்". கொழும்பிலிருந்து வெளியாகும் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவான பத்திரிக்கை ஒன்று தனது ஆசிரியர்த் தலையங்கத்தில், " சரணடைந்த எமது போலீஸாரில் 600 பேரைக் கொன்று அரந்தலாவையில் எமது துறவிகளைக் கொலைசெய்து. பள்ளிவாசல்களில் தொழுகையிலீடுபட்ட முஸ்லீம்களை நூற்றுக்கணக்கில் வெட்டிக் கொன்று, சிறுவர்களைக் கட்டாயமாகப் படையில் சேர்த்த ஒரு கொலைகாரனான கருணாவுடன் அரசியல் பேரம்பேசலில் சுதந்திரக் கட்சியோ, மக்கள் விடுதலை முன்னணியோ ஈடுபடுவது சரியானதா?" என்று கேள்வி கேட்டிருந்தது. ,
  13. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 15, மார்ச் 2004 கருணா குழுவினரிடையே பிளவு தமிழீழத் தேசியத் தலைவருக்கெதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து செய்தி வெளியிட்ட கருணாவினால் மட்டக்களப்பிலிருந்து இயக்கப்படும் இணையத்தளம் ஒன்று ம் ஒன்று தனது செயலுக்காக பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதன் பின்னர் திடீரென்று இயங்காமல்ப் போனது. பலமணிநேர இடைநிறுத்தத்திற்குப் பினர் தற்போது அது மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது. கருணாவிற்கு ஆதரவானவர்கள் இதுபற்றிப் பேசும்போது, வெளியிலிருந்து செயற்படும் சிலரால் தமது இணையத்தளம் தாக்கப்பட்டிருக்கிறதென்றும், தற்போது மீண்டும் அது இயங்குவதாகவும் கூறியிருந்தனர். ஆனால், அமெரிக்காவிலிருந்து இயக்கப்படும் பாடுமீன் எனும் இவ்விணையத்தளத்தினைத் தொடர்புகொண்டபொழுது, இத்தளம் எவராலும் தாக்கப்படவில்லையென்று, இத்தளத்தினை இயக்குபவர்களே தமது தேவைக்காக இடைநிறுத்தி வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். கருணாவினால் நடத்தப்பட்ட பாடுமீன் இணையத்தளத்தில் கருணாவை விமர்சித்து எழுதப்பட்ட கட்டுரையின் சில வரிகள் இதோ, "எமது பார்வையாளர்களிடம் பாடுமீன் இணையத்தளம் மன்னிப்புக் கேட்கிறது". "தாயகத்தினை மீட்கும் கனவில் மரணித்துக் கல்லறைகளில் தூங்கிக்கொண்டிருக்கும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் மனதிற்கொண்டு, கடந்த சில தினங்களாக எமது அன்பிற்குறிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கெதிராகவும், எமது தேசிஒய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகவும் செய்திவெளியிட்டுவந்தமைக்காக எனது வாசகர்களாகிய உங்களிடம் ஆயிரம் முறை மன்னிப்புக் கோருகிறேன். "துரோகி கருணா தமிழ்த்தாயின் குரல்வளையினை நசுக்க பகீரதப் பிரயத்தனம் செய்துவருகிறான். தனது செயற்பாடுகளுக்கு ஆதரவாக என்னை எழுதுமாறு கொடுமைப்படுத்தி வருகிறான். இதனை எழுதும்பொழுது அடக்கமுடியாக் கண்ணீருடனும், இக்கடிதத்தினை வாசகர்களாகிய உங்களுக்கு எடுத்துச் செல்லும்வரையாவது எனது உயிர் என்னிடம் இருக்கவேண்டும் என்ற வேட்கையுடனும் இதனை எழுதுகிறேன்". "தற்போது நடைபெற்றுவரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை கருணா தனது துரோக நாடகத்தினை அரங்கேற்றப் பாவித்துவருகிறான். ஆனால், அவனது துரோகத்தினை முறியடிக்க எமது தேசியத் தலைமை துரிதமாகச் செயற்படும் என்கின்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. கருணாவின் துரோகத்தினை இந்த மண் ஒருபோதும் மன்னிக்காது".

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.