Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19163
    Posts
  3. satan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10112
    Posts
  4. ஜெகதா துரை

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    5
    Points
    802
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/31/20 in all areas

  1. வேகம் இருக்கலாம் தோழர் தப்பில்லை. வெறி வேண்டாம் தோழர் அவவிடம் தடி இருக்கிறது.....! 😂
  2. ஆதலினால்... காத(ஜ)லிசம், பழகுவீர். 💕 💘 💟 💖 ❣️ 💗 🧡 💛 💙 💜 🤎 😜
  3. சிலர் மார்கழி குளிரென்பர் சிலர் மார்கழி கடும் பனியென்பர் தம் அன்பின் கதகதப்பில் வாழாதார்...💞
  4. துரோகத்தின் நாட்காட்டி : 7 ஆடி 2006 மேலும் 35 சிறுவர்களைக் கடத்திச் சென்ற கருணா துணைப்படைக் குழு தீவுச்சேனை, கறுப்பாளை, சொறிவில் மற்றும் சேவன்பட்டி ஆகிய பகுதிகளிருந்து குறைந்தது 35 சிறுவர்களை ராணுவ புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் கருணா துணைப்படை கடந்த வியாழக்கிழமை கடத்திச் சென்றது. இப்பகுதி கிராம சேவக அதிகாரி இக்கடத்தல்கள் பற்றித் தெரிவிக்கும்போது தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதை வெளியே சொன்னால் கொல்லப்படுவீர்கள் என்று கருணா குழுவினரால் அச்சுருத்தப்பட்டுள்ள நிலையில் இப்பெற்றோர்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த மாதமும் வாழைச்சேனை, கிரான், பேத்தாளை, விநாயகபுரம், கண்ணகிபுரம், பட்டியடிச்சேனை மற்றும் கல்குடா ஆகிய பகுதிகளிலிருந்து குறைந்தது 125 சிறுவர்களை கருணா துணைப்படையும் ராணுவமும் பலவந்தமாக இழுத்துச் சென்றது பலருக்கு நினைவிருக்கலாம். கொழும்பிலிருக்கும் யுனிசெப் அமைப்பின் அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கருணா துணைப்படையினராலும் அரச இராணுவத்தாலும் கடத்தப்பட்டுவரும் சிறார்கள் உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
  5. துரோகத்தின் நாட்காட்டி : 25 ஆனி 2006 ராஜபக்ஷ முன்வைக்கும் நேரடி ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டால் கருணா குழுவின் ஆயுதங்களைக் களைய அரசு தயார் - சண்டே லீடர் கட்டுரை கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல வார பத்திரிக்கையான சண்டே லீடரில் வந்திருக்கும் கட்டுரையின்படி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிக்கையின் ஆசிரியரான வித்தியாதரனூடாக புலிகளுக்கு மகிந்த ராஜபக்ஷ ஒரு செய்தியினை அனுப்பியிருப்பதாகவும், அச்செய்தியின்படி தன்னால் முன்வைக்கப்படும், நோர்வேயின் மத்தியஸ்த்தத்தினை தவிர்த்து அரசும் புலிகளும் நேரடியாக ஈடுபடக்கூடிய சமாதான ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டு இருவாரங்களுக்கு வன்முறைகளை முழுமையாகக் கைவிட்டால் கருணா குழுவினரின் ஆயுதங்களைத் தான் களைந்துவிடத் தயாராக இருப்பதாக மகிந்த கூறியிருப்பதாகத் தெரியவருகிறது. மகிந்தவுக்கும், ஆசிரியர் வித்தியாதரனுக்கும் இடையே நடத்தப்பட்ட இந்த பேரம்பேசல் பற்றி உதயன் அலுவலகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அத்துடன், மகிந்தவின் செய்தியை புலிகளுக்கு உதயன் தலைமைப்பீடம் தெரியப்படுத்திவிட்டதாகவும், அதற்குரிய பதிலினை புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் அது மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. புலிகளின் பதில்பற்றிப் பேசமறுத்த உதயன் நிர்வாகம், அப்பதில் மகிந்தவிடம் திங்கள் காலை கையளிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது. "புலிகளும் இராணுவமும் இரண்டு வாரங்களுக்கு அனைத்து வன்முறைகளையும் கைவிட்டால், அவர்கள் புதிதாக பேச்சுவார்த்தைமுயற்சிகளைத் தொடங்கமுடிவதோடு, நம்பிக்கையினை மீளவும் கட்டியெழுப்பலாம், நாம் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இது உதவுவதோடு, தேவையற்ற மூன்றாம் தரப்பான நோர்வேயின் பிரசன்னத்தையும் இல்லாதொழிக்கலாம்" என்று மகிந்த வித்தியாதரனிடம் கூறியதாக சண்டே லீடர் தெரிவிக்கிறது. "நாம் மிகவும் பலமான நிலையிலேயே இருக்கிறோம், எம்மால் புலிகளிடமிருந்து வரக்கூடிய எந்தச் சவாலையும் வெற்றிகொள்ளமுடியும், ஆனால் தேவையற்ற இரத்தம் சிந்துதலைத் தடுக்கவே நான் புலிகளுக்கு இந்த சந்தர்ப்பத்தினை அளிக்கிறேன்" என்று மகிந்த மேலும் கூறியதாக சண்டே லீடர் தெரிவிக்கிறது. "புலிகள் அரச தரப்பிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை காலதாமதமின்றி உடனடியாக எமக்கு அறிவிக்கவேண்டும், அத்துடன் இரு வாரகாலத்திற்கு தமது அனைத்து வன்முறைகளையும் கைவிடவேண்டும்" என்றும் மகிந்த வித்தியாதரனிடம் கூறியதாகத் தெரியவருகிறது. "கருணா குழுவினரின் ஆயுதங்களை உடனடியாகக் களைந்து அவர்களை ரோட்டில் விடவேண்டும் என்று கேட்கவேண்டாம் என்று புலிகளிடம் சொல்லுங்கள், ஏனென்றால் நான் அபடி அவர்களை வீதியில் விட்டால் புலிகள் உடனேயே அவர்களைக் கொன்றுவிடுவார்கள்.முதல் இரு வாரகால யுத்த நிறுத்தத்தின் பின்னரே, நிலைமையினை ஆராய்ந்து அவ்வாறானதொரு முடிவினை என்னால் எடுக்கவியலும். இந்த இருவார காலத்தில் கருணா குழுவும் புலிகள் மீதான தாக்குதல்களை நடத்ததாதவாறு என்னால் ஏற்பாடு செய்யமுடியும்" என்றும் வித்தியாதரனிடம் அவர் கூறியதாகத் தெரிகிறது. "கணம் ஜனாதிபதி அவர்களே, புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே அகப்பட்டு நசுக்கப்படுகிறீர்கள் என்று நீங்கள் கூறியதை நான் இங்கு வருமுன்னர் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் கூறினேன். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அன்டன் பாலசிங்கம், முப்படைகளின் தளபதியும் நீங்கள்தான், ராணுவமும் நீங்கள்தான், பாதுகாப்புச் செயலாளரின் சகோதரரும் நீங்கள்தான், அப்படியிருக்க, நீங்கள் எப்படி ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அகப்பட்டு நசுங்கிவிடமுடியும் என்று அவர் உங்களிடம் கேட்கச் சொன்னார்" என்று வித்தியாதரன் மகிந்தவிடம் கூறியதாகவும் சண்டே லீடர் கூறுகிறது. திரு பாலசிங்கம் அவர்களுடன் இச்செய்திபற்றி தமிழ்நெட் இணையம் கேட்டபோது, அவரும் இதனை உறுதிப்படுத்தினார். ஆனால், மே மாதம் 23 ஆம் திகதி சமயத் தலைவர்களுடனான சந்திப்பில் தமிழ்ச்செல்வன் கூறும்போது, சிறிலங்கா அரசாங்கத்துடனான எந்தவிதத் தொடர்பாடல்களும் நோர்வேயின் மூன்றாம்தரப்பு மத்தியஸ்த்துடனேயே முன்னெடுக்கப்படும் என்கிற புலிகளின் நிலைப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, ஆனி 2006 கருணா துணைப்படை மற்றும் விசேட அதிரடிப்படை இணைந்து நடத்திய தாக்குதல் புலிகளால் முறியடிப்பு அம்பாறை மாவட்டம், பாவட்டை பகுதியில் அமைந்திருக்கும் புலிகளின் அரசியல்த்துறைப் பணியகம் மீது விசேட அதிரடிப்படையினரும், கருணா துணைப்படையினரும் இணைந்து நடத்திய தாக்குதலை புலிகள் முறியடித்ததாக அறிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் பற்றி யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு அறியத்தரப்பட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் ஜெயா அறிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாக்குதலுக்கென்று பாரவூர்திகளில் வந்திறங்கிய சுமார் 30 பேரடங்கிய கருணா கூலிப்படையினர் இன்னமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், விசேட அதிரடிப்படை முகாமிற்கு வெளியே நிற்பதாகவும் தெரிவித்திருக்கிறார். காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து புறப்பட்ட ராணுவ - கூட்டுப்படை அணி தாக்குதலை ஆரம்பித்தபோதும், 35 நிமிடங்கள் வரை நீடித்த புலிகளின் எதிர்த்தாக்குதலினையடுத்து மீளவும் முகாமிற்கே திரும்பியிருக்கிறது. இத்தாக்குதல் ஆரம்பித்தவேளை, புலிகளின் அம்பாறை அரசியல்த்துறை உடனடியாக வன்னியுடம் தொடர்புகொண்டு அறியத் தந்திருக்கிறது. சுமார் 100 பேர் அடங்கிய ராணுவ - கூலிப்படை அணியே புலிகளின் பகுதிக்குள் ஊடுருவும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. தாக்குதல் ஆரம்பித்தவேளை, காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிலிருந்து புலிகளின் நிலைகள்மீது கடுமையான செல்வீச்சினையும் அதிரடிப்படை மேற்கொண்டது. கருணா கூலிப்படையின் உறுப்பினர்களான கோமாரியைச் சேர்ந்த பரணி, பெரியகல்லாற்றைச் சேர்ந்த "பிரதீபன்" என்றழைக்கப்படும் ஜோன்சன் ஜெயகாந்தன், திருக்கோயிலைச் சேர்ந்த சீலன் மற்றும் ஈ பி டி பி உறுப்பினர்கள், புதிதாக கருணா குழுவில் இணைந்துள்ள முஸ்லீம்கள் உட்பட பலர் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக ஜெயா மேலும் தெரிவித்தார்.
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, ஆனி 2006 கப்பம்கேட்டு முஸ்லீம் பொதுமக்களைக் கடத்திச்சென்ற கருணா துணை ராணுவக் குழு கடந்த சனிக்கிழமை காலை பொலொன்னறுவை மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் முஸ்லீம் கிராமமான தம்பளையில், பொலொன்னறுவை - சுங்கவில் வீதியில், பாற்பண்ணை வேலைக்குச் சென்றுகொண்டிருந்த 18 முஸ்லீம் பொதுமக்களில் 11 பேரை கருணா துணை ராணுவக்குழு கப்பம் கேட்டுக் கடத்திச் சென்றது. அருகிலுள்ள சின்னவில் காட்டுப்பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த முஸ்லீம்களிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய்களை கருணா குழு கப்பமாகக் கேட்டிருக்கிறதென்று அவர்களது உறவினர்கள் பொலீஸில் முறைப்பாடு தெரிவித்திருக்கிறார்கள். அக்கிராமத்தில் இருந்து மக்களிடம் திரட்டப்பட்ட ஒருலட்சம் ரூபய்களைக் கருணா குழுவிடம் அம்மக்கள் வழங்கிய பின்னர் ஐவரை விடுதலை செய்திருக்கும் துணை ராணுவக்குழு மீதிப்பேரை விடுதலை செய்வதற்கு மேலும் ஐந்து லட்சங்களைக் கேட்டிருக்கிறது. விடுவிக்கப்பட்ட முஸ்லீம்களின் தகவலின் பிரகாரம் தம்மை ராணுவ உடையணிந்த 6 பேரும் சிவிலியன் உடையில் ஒருவருமாக ஏழுபேர் அடைத்துவைத்து காவலுக்கு நின்றதாகத் தெரிவித்தனர். முதலில் ஒரு தகப்பனையும் மகனையும் கப்பம் கேட்டு அனுப்பிய கருணா குழு மீதி 9 பேரையும் கப்பம் அறவிடப்பட்டபின்னரே விடுதலை செய்வோம் என்று பிடிவாதமாக இருந்துவருகிறது. தாம் பொலிசாரிடம் முறையிட்டபோது, மிகுந்த அலட்சியத்துடன் அவர்கள் நடந்துகொள்வதாகவும், இதுவரை நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் எடுக்கத் தயங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். எல்லையோரச் சிங்களக் குடியேற்றக் கிராமமான புளஸ்த்திகம பகுதியில் , பொலீஸாரின் நிலைகளுக்கு மிக அண்மையிலேயே இக்கடத்தல்கள் இடம்பெற்றிருந்தபோதும், பொலீஸார் இக்கடத்தல்பற்றிய பூரண தகவல்களை அறிந்துள்ளபோதும் துணைக்குழுவினருக்கெதிரான நடவடிக்கைகளை எடுக்க தொடர்ச்சியாக மறுத்தே வருகின்றனர். கருணா துணைப்படையின் அடாவடித்தனம் மற்றும் பொலீஸாரின் இயலாமை ஆகியவற்றினையடுத்து அச்சத்தில் உறைந்துள்ள இக்கிராம மக்கள் தற்போது வேறுபகுதிகள் நோக்கி இடம்பெயர்ந்துவருவதாக தெரியவருகிறது. தம்பளை மற்றும் சின்னவில் ஆகிய இக்கிராமங்கள் மஹாவலி நீர்ப்பாசனத் திட்டம் , பிரிவு "பி" பகுதியில், பொலொன்னறுவை நகரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர்கள் வடகிழக்கில் அமைந்திருக்கின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.