Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20026
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19163
    Posts
  4. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    10720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/07/21 in all areas

  1. ஓ நோ .....காஜல்தான் துறைமுகம்....அப்பப்ப சில கப்பல்கள் வந்து வந்து போகும்.......! 😁
  2. நாய்களின் முன்னால் நாட்டியம்.......! 😂
  3. நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா ,, எனக்கு தெறித்த சில பொருட்க்களை இங்கு பதிவிடுகின்றேன் உங்களுக்கும் தெரிந்தவற்றை பகிருங்கள் மைனா விசில் இதை நாக்கிடக்கு கீழே வைத்து ஊதுவது இதற்க்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியவில்லை மைனா விசில் என்று கேட்டு வாங்கினோம் இதன் போட்டொக்களும் கிடைக்க வில்லை ,உங்கள் யாரவது ஒருவருக்கு ஞாபகம் இருந்தால் அது பற்றி இன்னும் விளக்கம் தாருங்கோ.. அம்மம்மா குழல் இது ஒரு குழல் ,,ஊது குழல் போல்பெயின்ட் பேனை அளவிலான நீளமுடைய ஒரு குழலில் முன் பக்கம் ஒரு பலூன் இணைத்து அதனை சுற்றி குருவி இறக்கைகளை வண்ணம் தீட்டி குழலின் முனையுடன் பொருத்தி இருக்கும் ,அதனை ஊதி பின்னர் அதன் காற்று வெளியேறும் பொழுது மாடு கத்துவது போன்ற ஒரு சத்தம் வரும் ,சிறுவர்களாக இருக்கும் பொது ஒரு ஜாலியாத்தான் இருக்கும் வீட்டில் இரண்டு பேர் சிறுவர்கள் இருந்தா காதே அடைக்க ஊதுவோமில்ல ,,உங்கள் அனுபவம் எப்புடி.. இழுவை விசில்.. இதுவும் ஒரு அருமையான விளையாட்டு பொருள் இதுவும் ஒரு போல்பெயின்ட் பேனை அளவில் உள்ள குழல் , அதில் ஒரு முனை வாயில் வைத்து உதவம் ,மறுமுனை,கீழ்ப்பக்கம் உள்ள குழாயின் ஓட்டை வழியே ஒரு சிறு கம்பி வெளியில் நிண்டு ஒரு வளையம் போல் ,அதாவது மோதிரம் போல் வளைத்து விடப்பட்டிருக்கும் அந்த வளையத்தில் விரலை விட்டு மேலும் கீழும் இழுக்கும் பொழுது விசிலயும் ஊத விசிலின் சத்தமும் ஏறி இறங்கி ஒரு விதமான சத்தம் வரும் .......... என்ன இருந்தாலும் இவைகள் ஒன்றை அந்த திருவம்பா பத்து நாட்க்களில் ஒன்றாவது வாங்கணுமென்று அடம் பிடிப்பம் இதற்காக பல தியாகங்கள் செய்ய வேண்டும் வீட்டு வேலைகள் ,ஆட்டுக்கு குழை முறிக்கனும் வாழைக்கு தண்ணி பாச்சனும் அப்பப்பா எத்தனை கொடுமைகளின் பின் ,அதுவும் கிடைக்குமா,,திருவெம்பா முடிஞ்சிடுமா ,,முடிஞ்ச பின்னர் கனவுகள் வந்து கத்தி எழும்பி அழுற சீன் .. இப்ப இத்தோட நிப்பாட்டுறன் ....
  4. தற்கால தரைப்படையில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமான தமிழ் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...படித்து மகிழுங்கள்! இச்சொற்கள் எல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். பிரிவு :- Unit துணைப்பிரிவு - Sub-Unit சூட்டணி/ சூடு & தடூக அணி:- fireteam/ fire and maneuver team = 2–4 சதளம் :- squad /crew = 8–12 பகுதி/ சுற்றுக்காவல் :- section / patrol = 8–24 நாரி/ படையினர் :- platoon/ troop = 26–55 குவவு - staffel/ echelon = 50- 90 குழாம்/ சேணேவித் தொகுதி :- Company /Artillery battery = 80–250 சமரணி :- battalion /cohort = 300–1000 படையணி :- regiment/ group= 1,000– 3000 படைத்தொகுதி/அதிகம் :- Brigade = 3000 - 5000 படைப்பிரிவு :- division/legion = 6,000– 20,000 திரள் :- corps = 20,000–50,000 களப் படை/ படை :- Field Army/ Army = 100,000–200,000 மூகை/ முனை :- army group /front = 400,000 - 1,000,000 தளம் / விளாகம்/அரங்கம் / அடிபாட்டாளர் கட்டளைப்பீடம் :- region/ theater/ Combatant Command = 1,000,000 - 10,000,000 மேலே உள்ள ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டது என்பதற்கான விளக்கம். பாமரனிற்கும் புரிய வேண்டும் என்னும் கூட்டத்தினர் இவற்றை வாசிக்க வேண்டாம். :- பிரிவு = Unit சூட்டணி என்றால் சுடும் அணி என்று பொருள். ஒரு சுடும் அணியில் மிகக் குறைவான வீரர்களே இடம்பெற்றிருப்பார்கள். மேலும் இச்சொல் புலிகள் காலத்தில் ஒரு fireteam குறிக்க வழங்கப்பெற்றது. தடூகம் - தட(பெரிய) + ஊகம்(உய்த்துணர்தல், உத்தி, அறிவு, படை வகுப்பு) - பெரிய உத்தியாக அனுப்பப்படக்கூடிய படையின் உட்பிரிவு சதளம் - இச்சொல் squad ஐ குறிக்க மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் உருவாக்கப்பெற்றது. பகுதி - என்னும் இச்சொல்லின் பொருள் அராணுவம் என்பதே. மேலும், பகுதி = part (தற்காலத்தில்) சுற்றுக்காவல் = Patrol (ஈழ வழக்கு) நாரி- platoon என்னும் இச்சொல் வரிசையாகத்தொடுத்த மாலைபோன்று திகழும் படை அணி என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு குறைந்தது இவ்வளவு வீரர்கள் நிற்பார்கள் என்னும் பொருளில் இங்கு ஒழுங்கமைத்துள்ளேன். படையினன் - Troops எனபதைக் குறிக்க ஏற்கனவே படையினர் என்னும் சொல் ஈழத்தில் வழங்கி வருவதைக் காண்க. குவவு - குவவு என்றால் கூட்டம் என்று பொருள்.. படைப் பொருட் பின்புலம் இச்சொல்லுக்கில்லை குழாம் - society, company, association. சமரணி - சமரில் ஆடும் அணி என்ற மொட்டையான பொருளில் வழங்கியுள்ளேன். இது ஆங்கிலச் சொல்லின் நேரடி தமிழாக்கம் ஆகும். படையணி - சொல்லவே தேவையில்லை. ஏற்கனவே புலிகளின் காலத்தில் Regiment-க்கு ஈடாக வழங்கப் பெற்ற சொல். சோழர் காலத்திலும் வழங்கப்பெற்ற சொல். அதையே இங்கும் கொடுத்துள்ளேன். படைத்தொகுதி - இச்சொல்லானது ஏற்கனவே விடுதலைப் புலிகளால் ஒரு 'Brigade' குறிக்கப் பயன்படுத்தப்படது அதிகம் - ரெஜிமென்ரின் அளவை விட அதிகமான ஆட்கள் இருந்தால், அஃது பிரேகேட் ஆகும் என்பதுவே ரெஜிமென்ற் என்னும் சொல்லின் விளக்கமாகும். எனவே ஒரு படைப்பிரிவில் அதிகமான வீரர்கள் இருந்தால், பண்டைய காலத்தில், அது அதிகம் எனப்படும் என்று அர்தசாஸ்திரம் மூலம் அறிந்து கொண்டேன்(அர்த்தசாச்திரத்தில் இதற்கு வேறு சொல் உண்டு). அதையே இங்கும் வழங்கியுள்ளேன். படைப்பிரிவு- division என்பதன் பொருளும் பகுதியே. மேலும் பிரிவு என்பதன் பொருளும் அராணுவம் என்பதால் இரண்டும் ஒரே சொல்லில் வருவதால் அதை இங்கு சூட்டி விட்டேன். மேலும் இது ஏற்கனவே வழக்கில் உள்ள சொல்லாகும். திரள் - Corps என்றால் படையின் உடற்பகுதி(நடுவில் இருக்கும் திரண்ட பகுதி) என்று பெயர். அதே பொருளில் தமிழில் வழங்கும் சொல் திரள் என்பதாகும் . இதன் பொருள் படையின் ஒரு திரண்ட பகுதி . அதையே இங்கும் அதே பொருளில் வழங்கியுள்ளேன். களப்படை/ படை- ஏற்கனவே army என்பதன் பொருள் படை என்றுதான் வழங்கி வருகிறோம். ஆகையால் அதனையே இங்கும் கொடுத்து விட்டேன். மேலும், இது ஏற்கனவே வழக்கில் உள்ள சொல்லாகும். மூகை - மூகை என்றால் படைக் கூட்டம்(army group) என்று பொருள். தளம் - இதன் பொருள் ஒரு ஒரு சேனையுட்படும் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்பூதங்களிற்கான படைகளையும் துணைப்படை, எல்லைப்படை, அதிரடிப்படை, தற்கொடைப்படை போன்றவற்றையும் குறிப்பது. ஒரு பிராந்தியத்திற்குள்ளேயே பல தளங்கள் இருக்கும். இவற்றை Region என்பர் ஆங்கிலத்தில். இவையெல்லாம் இருக்கும் இடத்தையும் தேவையையும் கருத்தில் கொண்டே இதனுட்படும். இவை இருக்கும் இடத்தினால் அவ்விடத்திற்கு தளம் என வழங்கி, அதுவே பிற்கலத்திலும், பேந்து தற்காலத்திலும் 'படைத்தளம்' என்னுஞ்சொல்லில் வரும் தளத்தின் பொருளை தாங்கிற்று. முனை - ஈழத்தில் பயன்பாட்டில் இருந்த சொல். எ.கா: வடபோர் முனை.. விளாகம் - போர் நடந்த இடமும் சூழலும் விளாகம் எனப்படும், தமிழில். ஆங்கிலத்தில் theater எனப்படும். அரங்கம் - புலிகள் காலத்தில் வழங்கப் பெற்ற சொல் கடற்படை பிரிவுகள்:- Task elements - பணிக்கடக் கூறுகள் Squadron/ Task unit - கலமணி/சதளம்/ பணிக்கடப் பிரிவு Flotilla/ Task group - கலத்தொகுதி/ பணிக்கடக் குழு Division/ Task group - படைப்பிரிவு/ பணிக்கடக் குழு Strike group/ Taskforce - அடிக்குழு/ பணிக்கடப் படை Battle fleet - சமர் கலக்கூட்டம் Fleet - கலக்கூட்டம் கூடுதல் தகவல்: உசாத்துணை: Military organization - Wikipedia கழகத் தமிழ் அகராதி செ.சொ.பே.மு படிமப்புரவு: கொம்பனி ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  5. கருணாவின் கட்டுப்பாட்டில் றமெஷ் இருக்க, அவரை வைத்து போலியான பத்திரிக்கையாளர் மாநாட்டினை நடத்திய புலிகள் ஆங்கில மூலம் : வோல்ட்டர் ஜெயவர்தின காலம் : கொழும்பில் கருணாவினால் கைவிடப்பட்ட நிலையில் கருணாவின் பெண்போராளிகள் சிலர் மீண்டும் புலிகளுடன் வந்து இணைந்துகொண்ட காலப்பகுதி தம்மால் விலத்தப்பட்ட கருணாவுக்கு இலங்கை ராணுவம் அடைக்கலம் கொடுத்துவருவதாகவும், கருணாவைக்கொண்டு தம்மீது நாசகாரத் தாக்குதல்களை இலங்கை ராணுவம் தொடுத்துவருவதாகவும் புலிகள் மீண்டும் இலங்கை அரசாங்கத்தினை கடுமையாகச் சாடியிருக்கின்றனர். புலிகளால் நடத்தப்படும் இணையத்தளமான தமிழ்நெட்டில் வந்துள்ள செய்தியின்படி தேனகம் கொக்கட்டிச்சோலையில் நடந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் அம்பாறை - மட்டக்களப்புச் சிறபுத்தளபதி கேணல் ரமேஷ் கருணா குழுவினரை தமக்கெதிரான நாசகாரத் தாக்குதல் நடவடிக்களுக்கு ராணுவம் பாவித்துவருவதாகக் குற்றஞ்சாட்டியதோடு இந்த நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் புலிகள் அதற்கான தக்க பதிலடியினை வழங்கவேண்டி வரும் என்று எச்சரித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், புலிகளின் இந்தச் செய்திக்கு மாறாக , கிழக்கிலிருந்து வரும் நம்பகரமான தகவல்களின்படி இந்தச் செய்தியானது தமிழ் மக்களைக் குழப்பும் நோக்கத்துடன் புலிகளால் வேண்டுமென்றே விடப்பட்ட செய்தியென்றும், கருணாவின் படைகளால் ரமேஷ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருப்பதாகவும், அவரால் பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்றும் தெரியவருகிறது. வழமையாக நடக்கும் நிகழ்வுகளின் ஒளிப்படத்தை தனது செய்திக்குறிப்புடன் வெளியிடும் தமிழ்நெட் இணையத்தளம் ரமேஷ் தொடர்பான இந்தப் பத்திரிக்கையாளர் மாநாட்டுச் செய்திக்குறிப்புடன் ரமேஷின் கடந்த கால ஒளிப்படம் ஒன்றினை மட்டுமே இணைத்திருந்தது. இது இவ்வாறிருக்க, கருணாவுக்கும் தமக்கும் இடையே எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று மறுத்திருக்கும் இலங்கை ராணுவம், கருணாவுக்கும் வன்னிப் புலிகளுக்கும் இடையே நடப்பது அவர்களது உள்வீட்டு விவகாரம் என்று தனது பாராளுமன்றப் பேச்சாளர் மங்கள சமரவீரவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது. இதேவேளை, பொதுவான எதிரணியில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் புலிகளின் பினாமியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமயக் கட்சி கருணாவுக்கு ஆதரவாக அரசாங்கம் இதுவரை செயற்படாதது குறித்து கடுமையான கண்டனங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. புலிகளால் போலியாக நடத்தப்பட்டதாகக்கூறப்படும் இந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் கருணாவுக்கு ராணுவம் பாதுகாப்பினையும், ஆயுதங்களையும் வழங்கிவருவதற்கான உறுதியான ன சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறினார். புலிகளின் இணையத்தளமான தமிழ்நெட்டின் செய்தியின்படி கருணாவினால் கொழும்பில் கைவிடப்பட்ட நான்கு பெண்போராளிகளின் தகவல்களின்படியே தமக்கு இந்த ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறியிருந்தாலும்கூட அவை எவையென்பதை ரமேஷ் கூறியிருக்கவில்லை. தம்மிடம் சரணடைந்தவர்கள் என்று புலிகளால் கூறப்பட்ட நான்கு பெண்போராளிகளின் பெயர் விபரங்களைக் கூற புலிகள் மறுத்துவிட்ட நிலையில், இவர்கள் உன்மையிலேயே கருணாவின் தோழிகளா அல்லது சாதாரண பெண்களா என்று பத்திரிக்கையாளர்களால் இதுவரையில் உறுதிசெய்யப்படமுடியாது போய்விட்டது. தமிழ்நெட்டின்படி, தமக்கும் கருணாவுக்குமிடையிலான முறுகல் நிலைபற்றி சில சர்வதேச செய்திச்சேவைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதாக ரமேஷ் கூறியதாக இந்தப் போலியான மாநாட்டுச் செய்தியை தமிழ்நெட் வெளியிட்டிருக்கிறது. மேலும், இந்த மாநாட்டில் பேசிய ரமேஷ் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகள் மேல் நடத்தப்பட்டுவரும் படுகொலைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமது இயக்கம் ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுவே முதல்தடவையாக புலிகள் தமது போராளிகள் கருணாவிணால் கொல்லப்படுவதாக கூறும் சம்பவம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், ஆயுதம் தரித்த புலிகளின் போராளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தமது போராளிகள் மீதான தாக்குதல்களை புலிகள் எவ்வாறு தடுத்து நிறுத்தமுடியும் என்பது கேள்விக்குறிதான். மேலும், தமிழ்னெட்டின் இன்னொரு செய்திக்குறிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி எல் பீரிஸை மேர்கோள் காட்டி "புலிகள் அரசு மேற்கொண்டுவரும் தந்திரோபாய செயற்பாடுகளால், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையினை இழந்துவருவதாகவும்" குறிப்பிட்டிருக்கிறது. முற்றும் http://www.lankaweb.com/news/items04/200604-7.html
  6. பாம்பும், ஏணியும்.... விளையாட்டை.. சகோதரர்களுடன், விளையாடும் போது... இருந்த நினைவுகள், மறக்க முடியாதவை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.