Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    8910
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    13720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/02/21 in all areas

  1. GAYLE FORCE at Warner Park as Chris Gayle took on the Knight Riders bowling attack.....!
  2. புலிகளுடனான போர் இலங்கையில் ஓய்ந்துவிட்டாலும் கூட, இலங்கை அரச ராணுவத்தாலும் அதன் கொலைக்குழுக்களாலும் கட்டுப்பாடுகளின்றி இன்றுவரை மனிதவுரிமை மீறள்கள் நடத்தப்பட்டு வருவதை அனைத்து மனிதவுரிமைக் கண்காணிப்பாளர்களும், செயற்பாட்டாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள் . ஆகவே, இக்காலத்திலில்த்தான், மனிதவுரிமைக் கண்காணிப்பாளர்கள் அல்லது அமைப்புக்களின் தேவை முன்னெப்போதைக் காட்டிலும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், புலிகள் இருந்த காலம்வரை அவர்களைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் எனும் அமைப்பு இன்று முற்றாக காணாமல்ப் போயிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தமிழர் புணர்வாழ்வுக் கழக பணியாளர்களைத் தனது வேட்டை நாய்களான கருணாவையும் பிள்ளையானையும் கொண்டு கடத்திச் சென்று, கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின்னர் குரூரமாகக் கொன்றுபோட்டதன் மூலம் நாட்டில் இயங்கிவரும் அனைத்து மனிதநேய அமைப்புக்களுக்கும், மொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் கடுமையான ஒரு செய்தியை மகிந்தவின் இனக்கொலையரசு தெரிவித்திருக்கிறது. மகிந்த அரசின் இந்த கொடூர அராஜகம் இன்றுவரை ஏதோ ஒருவடிவில் தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்ட சில தினங்களுக்குப் பின்னர் தாயகத்தில் பணியாற்றிவரும் ஏனைய மனிதநேய அமைப்புக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தின் பிரதிநிதியொருவர், இன்று எமது பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட அநீதியினைப் பற்றி நீங்கள் குரல் கொடுக்காது விட்டால் நாளை அதே அநர்த்தம் உங்களுக்கும் நடக்கும் என்று கூறியிருந்தார். அவர் அன்று கூறிய வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை முழு உலகும் சில மாதங்களிலேயே உணர்ந்துகொண்டது. 2006 ஆவணியில் மூதூர் பகுதியினை ஆக்கிரமித்துக்கொண்ட சிங்கள இனக்கொலைப் படைகள் அக்ஷன் பாம் எனப்படும் பிரெஞ்சு மனிதநேய அமைப்பின் 17 உள்ளூர் தமிழர்களை கொன்று தள்ளியிருந்தது. அத்துடன் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின்மீது தொடர்ச்சியாக பல தாக்குதல்களை சிங்களப் படைகளும், கருணா குழு வேட்டை நாய்களும் புரிந்தே வந்திருக்கின்றன. இவர்களின் அழுத்தங்களின் மிக முக்கியமான புள்ளியாக 2008 இல் இனக்கொலை உச்சம் பெற்றிருந்தவேளை வன்னியில் செயலாற்றி வந்த ஐ நா அதிகாரிகள் வெளியேற்றப்பட்டது அமைந்திருந்தது. இனக்கொலையின் இறுதிப் பலியிடல் ஆரம்பமாவதற்கு ஏதுவாக ஐ நா வை கொலைக்களத்திலிருந்து அப்புறப்படுத்திய மகிந்த அரசு, சர்வதேச மற்றும் உள்ளூர் செய்தி நிறுவனங்களை முற்றாகத் தடைசெய்து தனது நரவேட்டையினை இனத்துரோக மிருகங்களின் துணையுடன் மே 18 , 2009 இல் ஆடி முடித்தது. தனது ஏவுதலின்பேரில் கடத்தப்பட்டுக், கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு , படுகொலைசெய்யப்பட்ட ஏழு பணியாளர்களைப்பற்றிய விசாராணைகளை எடுத்துக்கொள்ள முற்றாக மறுத்துவிட்ட மகிந்த அரசு, "மனிதவுரிமை மீறள்களுக்கான ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் - 2006" என்று தானே ஆரம்பித்த நாடக் குழுவுக்கோ அல்லது காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகளை நடத்தும் சுயாதீன சர்வதேச அமைப்பிற்கோ(2007) இலங்கையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 16 சம்பவங்களில் ஒன்றாகத் தன்னும் இந்த 7 பணியாளர்களின் கடத்தல் - பாலியல் வன்புணர்வு - படுகொலை கொடூரத்தை சேர்க்க முன்வரவில்லை. இலங்கை மனிதவுரிமைக் கழகத்தின் தலைவரான ராதிகா குமாரசாமி அவர்கள் பல வேண்டுகோள்களுக்குப் பின்னர் இப்பணியாளர்களின் கடத்தல் மற்றும் காணாமற் போதல் ஆகியவற்றின் விசாராணைகளை நடத்த ஒரு விசாரணைக் குழுவினை அமர்த்தியிருந்தார். ஆனால், ராதிகா கடமையில் இருக்கும் காலத்திலேயேய் இந்த விசாரணைகள் முடிக்கப்பட்டு அறிக்கை அவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதும்கூட அவர் அதனை இறுதிவரை வெளியிடவில்லை என்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், இலங்கையின் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் தலைவராக இருந்த ராதிகா பின்னர் ஐ நா வின் யுத்தத்தில் பாதிக்கப்படும் சிறுவர்களின் மனிதவுரிமைகள் தொடர்பான அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பதுதான். https://www.colombotelegraph.com/index.php/remembering-the-abduction-of-tro-staff-on-29-30-january-2006/
  3. "அந்த நான்கு இளைஞர்களுக்கு உண்ணச் சோறும் குடிக்கத் தேனீரும் கொடுத்தது பிள்ளையானின் கொலைக்குழு. அவர்கள் அதனை அருந்தி முடித்ததும், அனவைவரினதும் கண்கள் இறுகக் கட்டப்பட்டு கொலைக்குழுவின் பிக்கப் ரக வாகனத்தில் ஏற்றப்பட்டார்கள். வெலிக்கந்தையின் காட்டுப்புறத்தினை ஊடறுத்துச் சென்ற அந்த வாகனம் குறித்த ஒரு பகுதியினை அடைந்ததும், அவர்கள் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு காட்டின் உட்பகுதிக்குள் நடத்திச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களின் கண்கள்மீது கட்டப்பட்ட துண்டுகள் அவிழ்க்கப்பட்டு, பாரிய குழியொன்றினை வெட்டுமாறு அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். தாம் கொல்லப்படப்போகிறோம் என்பதை உணர்ந்துகொண்ட அந்த நால்வரும் தம்மைக் கொல்லக் கொண்டுவந்தவர்களின் கால்களில் வீழ்ந்து கதறினார்கள், தம்மை விட்டு விடும்படி கெஞ்சினார்கள். ஆனால் இவை எதுவுமே அம்மிருகங்களின் ஆன்மாவை உசுப்பவில்லை. அக்குழி தோண்டி முடிக்கப்பட்டதும் அந்த நால்வரும் வரிசையில் நிக்கவைக்கப்பட்டு பிள்ளையான் கொலைக்குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டு அக்குழியினுளேயே புதைக்கப்பட்டார்கள்". கொலைக்குழுவின் உறுப்பினர் ஒருவன் மேலும் பேசும்போது இக்கடத்தல்களிலும், அதன் பின்னரான கூட்டுப் பாலியால் வன்புணர்வு, படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்ட பிள்லையான் கொலைக்குழு மிருகங்களின் பெயர் விபரங்களையும் குறிப்பிட்டான். "கருணா துணைராணுவக் கொலைக்குழுவில் இருந்த பிள்ளையான் என்பவனே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ராணுவப் பிரிவின் அதியுச்ச தளபதியாக அப்போது செயற்பட்டு வந்தான். அவனே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கொலைக்குழுவுக்கும் இலங்கை அரசாங்கத்தின் ராணுவ புலநாய்வுத்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பாளராகவும், தொடர்பாளனாகவும் அப்போது செயற்பட்டு வந்தான். அவனைக் கொண்டே இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறை தமிழர்களை வேட்டையாடி வந்தது" என்று ஜெயராஜ் தொடர்ந்து எழுதுகிறார். படுகொலைகளின் பின்னர்......... மகிந்த ராஜபக்ஷவின் இனக்கொலையரசு 2005 இல் பதவியேற்று சில நாட்களிலேயே இந்தக் கொடூரங்களை பிள்ளையான் புரிந்திருந்தான். மாசி மாதம் 2006 இல் ஜெனீவாவில் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு போகவேண்டிய தேவை இனக்கொலையாளி மகிந்தவுக்கு இருந்தது. ஆனால், பேச்சுவார்த்தைகளை குழப்பி மீண்டும் போரிற்குச் செல்வதே மகிந்த அரசின் உள்நோக்கமாக இருந்தது. ஆகவே, இக்கடத்தல்கள் பற்றிய செய்திகள் வெளியே கசிந்தபோது உடனடியாக இதனை தனக்குச் சாதகமாகப் பாவித்த மகிந்த, பேச்சுவார்த்தைகளைக்க குழப்புவதற்காகவே இந்தக் கடத்தல் நாடகத்தினை புலிகள் அரங்கேற்றியிருக்கிறார்கள். தமது பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளததைக் காரணமாகக் காட்டி பேச்சுவார்த்தைகளைப் பகிஷ்கரிப்பதே புலிகளின் நோக்கம் என்று மகிந்த அரசு சர்வதேசப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியது. மகிந்த அரசின் பிரச்சாரத்தை அவனுக்கு ஆதரவான செய்திச் சேவைகளும்,இனவாதப் பிரச்சாரப் பத்திரிக்கைகளும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்தன. ஆனால், இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒரு விடயம் யாதெனில் தாமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாக கூறிவந்த மனிதவுரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பும் இக்கடத்தல்கலைப் புலிகளே அரங்கேற்றியதாக மகிந்தவுக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததுதான். அதேவேளை இது தொடர்பாக ஜெயராஜ் கூட புலிகளின் நடகமே என்று சித்திரை 2 மற்றும் 5 ஆகிய தினங்களில் தனது இணையத்தில் எழுதினார். "மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு சித்திரை 2 மற்றும் 5 ஆம் திகதிகளில் எழுதியதன்படி, இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து பணியாற்றும் கருணா துனைராணுவக் குழுவினரின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முகமாக, ஜெனீவா பேச்சுக்களில் இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்கவே புலிகள் இந்த கடத்தல் நாடகத்தினை அரங்கேற்றியிருக்கிறார்கள்" என்று எழுதுகிறார். தனது தவறினைஉணர்ந்துகொண்ட ஜெயராஜ், இக்கடத்தல்கள் குறித்து உண்மையினை பின்னர் வெளிக்கொணர்ந்திருந்தார். ஆனால், மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்போ இதுகுறித்து வாயே திறக்கவில்லை. மேலும், மார்கழி 13, 2009 இற்குப் பின்னர் அவர்களின் இணையம் எந்தப் புதிய பதிவும் அற்றுக் காணப்பட்டதுடன், 2010 இல் முற்றாகச் செயலற்றும் போய்விட்டது. ஆக, இந்த அமைப்பினை நடத்தியவர்களின் நோக்கமும், யாருக்காக நடத்தப்பட்டது என்பதும் இதன் மூலம் வெளிச்சமாகிறது.
  4. தமிழர் புணர்வாழ்வுக்கழக உத்தியோகத்தர்களின் கடத்தலும், கூட்டுப்பாலியல் வன்புணர்வும், படுகொலைகளும். பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் மிருகத்தாலும், அவனது கொலைக்குழு மிருகங்களாலும் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் துண்டுதுண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட பிரேமினி மற்றும் ஆறு உத்தியோகத்தர்களின் 8 ஆவது நினைவுதினமான தை 29 அன்று கொழும்பு டெலிகிராப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்திக்குறிப்பினை இங்கே இணைக்கிறேன். இந்தக் கொடூரம் தொடர்பாக இதே தொடரில் ஒருமுறையாவது எழுதியிருக்கிறேன். இச்செய்தி இன்னொரு தளத்தில் , அந்த 7 அப்பாவிகளின் நினைவாக எழுதப்பட்டது. அதனால் மீளவும் இணைக்கிறேன். இவர்கள் மேல் நடத்தப்பட்ட கொடூரத்தினை இங்கே சிலர் மறுக்கலாம், அல்லது அவ்வாறு நடத்தப்பட்டதை நியாயப்படுத்தலாம். எது எவ்வாறாயினும், சொந்த இனத்தின்மீது, எதிரிகளே செய்யாதளவிற்கு கொடூரத்தைப் புரிந்த இந்த மிருகங்களின் செயல் ஒருமுறையல்ல, பலமுறை மீண்டும் மீண்டும் தெரியப்படுத்தப்பட வேண்டும். தை 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கடத்தப்படுக் காணாமற்போன தமிழர் புணர்வாழ்வுக்கழக அதிகாரிகளின் நினைவாக ! கொழும்பு டெலிகிராப் இணையம், தை 29, 2014 2006 ஆம் ஆண்டு தை மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த 7 பணியாளர்கள் மட்டக்களபு மாவட்ட எல்லையில் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். புதன் மற்றும் வியாழன் ஆகிய இருநாட்களில் இந்தக் கடத்தல்கள் இடம்பெற்றன. கடத்திச்செல்லப்பட்டுக் கொல்லப்பட்ட இந்த 7 பணியாளர்களும் தமது பணிதொடர்பான பயிற்சி நெறி ஒன்றிற்காக மட்டக்களப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணமாகிக்கொண்டிருந்தார்கள். தை மாதம் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் வெலிக்கந்தை ராணுவ முகாம் சோதனைச் சாவடியில், இலக்கத்தகடற்ற வெண்ணிற வான்களில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் கொலைக்குழுவினரால் வழிமறிக்கப்பட்டுக் கடத்தி செல்லப்பட்டார்கள். மட்டக்களப்பு - பொலொன்னறுவை மாவட்ட எல்லைகளில் அமைந்திருக்கும் வெலிக்கந்தைப் பிரதேசத்தில் ராணுவ முக்கமினருகில், ராணுவத்தினரின் உதவியுடன் 29 மற்றும் 30 ஆகிய தினங்கலில் இக்கடத்தல்கள் இடம்பெற்றன. 29 ஆம் திகதி வழிமறிக்கப்பட்ட புணர்வாழ்வுக்கழக வாகனத்தில் ஐந்து பணியாளர்களும், 30 ஆம் திகதி வழிமறிக்கப்பட்ட வாகனத்தில் 15 பணியாளர்களும் பயணம் செய்துகொண்டிருந்தனர். கடத்தப்பட்ட 20 பணியாளர்களில் 13 பேர் பின்னர் விடுவிக்கப்பட மீதி 7 பேரும் என்னவானார்கள் என்பது அவர்களைக்கடத்திச் சென்று கொன்றுபோட்ட பாதகர்களுக்கும் அவர்களை வழிநடத்திய ராணுவப் புலநாய்வுத்துறைக்குமே வெளிச்சம். ஆனால், அக்கொலைக்குழுவில் பங்குகொண்டு, இப்பாதகத்தில் ஈடுபட்ட ஒருவனது வாக்குமூலத்தின்மூலம் அந்த 7 பேரின் மீதும் பிரதேசவாதம் பேசிக்கொண்டு இனத்துரோகமிழைத்துச் சென்ற மிருகங்களின் வக்கிரம் வெளித்தெரியவந்திருக்கிறது. அந்த ஏழு பேரும் இந்த மிருகங்களால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 2006, தை 29 அன்று பிள்ளையான் கொலைக்குழு மிருகங்களால் கடத்தப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு, திரு காசிநாதர் கணேசலிங்கம், வயது 53 திரு தங்கராசா கதிர்காமர், வயது 43 2006, தை 30 அன்று கடத்தப்பட்டவர்களின் விபரம், செல்வி தனுஷ்கோடி பிரேமினி, வயது 25 திரு அருள்தவராசா சதீஷ்கரன், வயது 23 திரு சண்முகநாதன் சுஜேந்திரன், வயது 24 திரு தம்பிராஜா வசந்தராஜன், வயது 24 திரு கைலாசபிள்ளை ரவீந்திரன், வயது 26 இந்த ஏழு புணர்வாழ்வுக்கழகப் பணியாளர்களும் மனிதாபிமான மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்தவர்கள். இவர்களுள் கணேசலிங்கம் அவர்கள் புணர்வாழ்வுக்கழக இயக்குநர் சபையில் ஒரு உறுப்பினர் என்பதோடு பாலர் பள்ளிகளின் கல்வி மற்றும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றியவர், இரு இளம்பிள்ளைகளின் தந்தை. செல்வி பிரேமினி அவர்கள் தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் பிரதம கணக்காய்வாளராகப் பணியாற்றியதோடு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாணவியாக கல்விகற்று வந்தவர். திரு தங்கராசா அவர்கள் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் புணர்வாழ்வுக் கழகத்தின் வாகன ஓட்டுநராகவும் வேலை பார்த்து வந்தவர். மீதி நான்கு இளைஞர்களும் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தில் கணக்காளர்களாகவோ அல்லது உதவிக்கணக்காளர்களாகவோ பணியாற்றி வந்தவர்கள். கிளிநொச்சியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பயிற்சி நெறிக்காகச் சென்று கொண்டிருந்தவர்கள். இப்பணியாளர்கள் விபரங்களுக்கு கீழ்வரும் இணைப்பை அழுத்துங்கள். https://tamilnation.org/tamileelam/tro/060406pressconference.htm இந்த ஏழு அப்பாவிப் பணியாளர்களுக்கும் நடந்தது என்ன ? இக்கடத்தல்கள் நடைபெற்று ஒருவருடத்தின் பின்னர் கனேடிய செய்தியாளரான டி பி எஸ் ஜெயராஜின் விசேட ஆய்வில் வெளிவந்த ஒரு பகுதி கீழே, " பிரேமினிக்கு மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம் மிகவும் பயங்கரமானது. அழகானவரும்,கண்களில் ஒன்று வாக்காகவும் காணப்பட்ட பிரேமினியை முதலாவது முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்கு இழுத்துச் சென்றார்கள். பிள்ளையான் கொலைக்குழுவின் பிரதானிகளில் ஒருவனான சிந்துஜன் என்பவனே பிரேமினியை முதலில் வன்புணர்வு செய்தான். அவனின் பின்னர் மேலும் 14 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கொலைக்குழு மிருகங்கள் அந்த அப்பாவிப் பெண்மீது கூட்டாகப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டன. ஆரம்பத்தில் தன்னை விடுமாறு கத்திக் கதறிய பிரேமினியின் அழுகுரல் மிருகங்கள் தமக்குள் பங்கிட்டு அவளை வன்புணர்வு செய்யச் செய்ய வெற்று முனகல்கலாக அடங்கிப் போனது. மிருகங்களின் இச்சைகள் தணியத் தொடங்கியபோது அவளின் அழுகை வெற்று விம்மல்களாகவும் முனகலகளாகவும் வெளிவந்துகொண்டிருந்தது. அதிகாலையில் பிரேமினியை அந்த மிருகங்கள் முகாமிற்கு வெளியே இழுத்து வந்தன. அருகிலிருந்த காட்டிற்குள் பிரேமினியை அந்த மிருகங்கள் இழுத்துச் சென்றபோது அவள் உடலில் உணர்வுகளின்றி நடைபிணமாகப் பின் தொடர்ந்தாள். காட்டின் ஒரு பகுதியினை அடைந்ததும் அவளை வாட்களால் அந்த மிருகங்கள் துண்டு துண்டுகளாக வெட்டி வீசின" என்று அம்மிருகங்களின் ஒன்றின் வாக்குமூலத்தினை அடிப்படையாகக் கொண்டு ஜெயராஜ் எழுதுகிறார்.
  5. இனத்துரோகி கருணாவோடு சேர்ந்து, அவனுக்கு நிகராக, தமிழினத்திற்கு துரோகம் இழைத்து, சிங்கள போர்க்குற்றவாளிகளின் வேட்டைநாயாக நெடுங்காலம் வலம்வரும் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் 2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினரும், தனது இறுதிமூச்சுவரை தமிழ்த் தேசியத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் நேசித்தவருமான அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக் கொன்றான் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பினும், அதனை இன்றுவரை மறுத்தும், பிள்ளையானால் கொல்லப்பட்ட பரராஜசிங்கத்தை வேண்டுமென்று இழிவுபடுத்தியும் அவனை ஆதரித்தும் இத்தளத்திலியேயே இன்றுவரை சிலர் எழுதிவரும் நிலையில் , அவன் 2015 இல் கைதுசெய்யப்பட்டபோது அவனது கைது தொடர்பாக கொழும்பு டெலிகிராப் எனும் ஆங்கிலமூல இணையத்தில் வெளிவந்த செய்தி. பரராஜசிங்கத்தைச் சுட்டுக்கொன்றதற்காகக் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான். 11, ஐப்பசி 2015 பிள்ளையான் எனப்படும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன், பரராஜசிங்கம் அவர்களைக் கொன்றதற்காக சற்று முன்னர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டான் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அணியில் செயற்பட்டு வந்து பின்னர் பிரதேசவாதம் பேசிக்கொண்டு வெளியேறிய கருணாவின் வலதுகரமான பிள்ளையானை குற்றத்தடுப்புப் பிரிவினர் இதற்கு முன்னர் பலமுறை ஜோசேப் பரராஜசிங்கத்தின் கொலைதொடர்பாக விசாரித்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. நேற்று அவனைக் கைதுசெய்யும் முகமாக அவனது விட்டீற்கு குற்றப்புலநாய்வுத்துறையினர் சென்றிருந்தவேளை அவன் ஓடி ஒளித்துக்கொண்டதாகவும், அவனது வீட்டிலிருந்தவர்களிடம் பேசிய அதிகாரிகள் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் குற்றப்புலநாய்வு அலுவலகத்திற்குச் சமூகமளிக்கவேண்டும் என்று கட்டளையிட்டுச் சென்றதையடுத்து, பிள்ளையானும் அவனது சகாக்களில் ஒருவனும் மாலை 5:15 மணிக்கு குற்றப்புலநாய்வுத் தலைமையகத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜோசேப் பரராஜசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு மரியன்னை தேவாலயத்தில் கடந்த 2005 மார்கழி 25 அதிகாலை நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த பொழுது பிள்ளையானின் கொலைக்குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மேலும் 8 பொதுமக்களும் பிள்ளையானின் கொலைக்குழுவின் தாக்குதலில் காயமடைந்திருந்தனர். மேலும், குற்றப்புலநாய்வுத்துறையினர் பிள்ளையானின் கொலைக்குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மேலும் இருவரை கடந்த வியாழன் அன்று கைதுசெய்திருந்தனர். கொழும்பு மஜிச்த்திரேட் நீதிமன்றம் இக்குற்றவாளிகள் இருவரையும் 90 நாட்களுக்கு விளக்க மறியலில் வைத்து விசாரிக்குமாறு பொலீஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறது. இக்குற்றவாளிகள் இருவரும் கொலையில் இட்டுபட்ட 10 வருடங்களுக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இக்கொலையில் ஈடுபட்டிருந்த பிள்ளையானின் கொலைக்குழு உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வருமாறு. பிரதீப் மாஸ்ட்டர் எனப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த எட்வின் சில்வா கிருஷ்ணா கந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரங்கசாமி கனயகம. நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த குற்றப்புலநாய்வுத்துறையினர் பரராஜசிங்கத்தின் கொலையுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த இன்னும் இரு குற்றவாளிகள் பிள்ளையான் மற்றும் கருணாவின் உதவியுடன் தப்பி வெளிநாடு சென்றுவிட்டதாகவும், அவர்களைக் கைதுசெய்து மீண்டும் இலங்கைக்கு இழுத்துவர சர்வதேச பொலீஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியினை தாம் நாடியிருப்பதாகவும் தெரிவித்தனர். ஜோசேப் பரராஜசிங்கத்தை சுட்டுக் கொல்வதற்கு பிள்ளையானின் கொலைக்குழு மூன்றுவிதமான துப்பாக்கிகளைப் பாவித்திருந்ததாகவும், அவர் கொல்லப்பட்டவிடத்தில் 9 மி மீ வெற்று ரவைக்கூடுகள் ஆறினைத் தாம் கண்டெடுத்ததாகவும் கூறியிருக்கின்றனர். மேலும், இத்துப்பாக்கிகளையும், பிள்ளையான் கொலைக்குழு அன்றிரவு பாவித்த வெண்ணிற வானையும் கைய்யகப்படுத்தும் நடவடிக்கையில் தாம் இறக்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். https://www.colombotelegraph.com/index.php/pilliayan-arrested-for-pararajasingham-murder/ கருணாவையும் பிள்ளையானையும் தமது தலைவர்களாக வரிந்துகொண்டு, இன்றுவரை அவர்களை ஆதரிப்பவர்கள் இச்செய்தியைப் படித்தபின்னர் எள்ளி நகையாடலாம். அவர்களின் துரோகமும் சொந்த இனத்தையே வேட்டையாடிய கொடூரமும் உண்மையென்றால் கிழக்கு மாகாண மக்கள் ஏன் அவர்களை, குறிப்பாக பிள்ளையானை மீண்டும் அதிக விருப்புடன் பாராளுமன்றம் அனுப்பினார்கள் என்று கேட்கலாம். அவன் இதற்கு முன்னரும் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்திருக்கிறான். அப்போதிருந்ததும், அவன் இப்போது பாராளுமன்ற உறுப்பினர் ஆகியபோது இருப்பதும் அதே போர்க்குற்றங்களைப் புரிந்த , இவனையும் கருணாவையும் வேட்டை நாய்களாகப்பாவித்த இனக்கொலையரசுதான் என்பதை இவர்கள் நினைவில் கொள்வதில்லை. எது எப்படியாயினும் இவர்கள் இருவரும் எமதினத்திற்கெதிராகச் செய்த துரோகமும், ஆடிய நரவேட்டையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவை. அவர்களின் கதாநாயகர்கள் எங்கள் மக்களைக் கொன்றதற்காகவே எதிரியினால் கொண்டாடப்படுகிறார்கள் என்பது அவர்ளுக்குத் தெரிந்தாலும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
  6. கேள்வி : புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள்ப் போராளிகள் இன்றுவரை வாழ்வாதாரத்திற்காக அல்லற்பட்டு வருவதாகக் கூறியிருந்தீர்கள். புலம்பெயர் தமிழர்களிடமிருந்து இவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வகையான திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? கருணா : ஆம், நான் இதுதொடர்பாக அவர்களுடம் பேசவிருக்கிறேன். வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்திசெய்யும் பாரிய பொறுப்பு அவர்களுக்கிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களிடையே பெரிய தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இங்குவந்து பல தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் பல முன்னாள்ப் போராளிகளுக்கு வாழ்வாதார உதவியினை வழங்க முடியும். பிரண்டிக்ஸ் நிறுவனம் கிழக்கில் பாரிய தொழிற்சாலையொன்றினை நிறுவவிருக்கிறது. இதன்மூலம் 5000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். கிழக்கு மாகாணத்தில் 40,000 விதவைகள் வாழ்கிறார்கள், இவர்களுக்கும் இதில் பணிபுரியும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு சிங்கள தொழிலதிபர் வேலைவாய்ப்பு வழங்கமுடியும் என்றால், உலகெங்கும் பரந்து வாழும் பல புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்கள் தமது மக்களுக்கு ஏன் இந்த உதவியினைச் செய்யமுடியாது? மலேசியாவின் இரு பெரிய கோபுரங்களுக்கு உரிமையாளராகவிருக்கும் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆனந்த கிருஷ்ணன் போன்ற பல கோடீஸ்வரரத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமது மக்களுக்காக உதவிசெய்யும் காலம் வந்துவிட்டது. நான் இவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து இங்குவந்து முதலீடுகளை செய்ய ஊக்குவிக்கப்போகிறேன். வடக்கினை கொழும்பினைக் காட்டிலும் அபவிருத்திசெய்து நவீனமயப்படுத்தும் பணபலம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த முதலீட்டு வாய்ப்புகளுக்கிருக்கும் ஒரே முட்டுக்கட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் செய்துவரப்படும் புலிசார்பு அரசியலும், அரசுக்கெதிரான போலிப் பிரச்சாரமும் ஆகும். பெரிய தமிழ்ச் செல்வந்தர்கள் இந்த பரப்புரைகளுக்கு அஞ்சியே கொழும்பிற்கு வரப் பயப்படுகிறார்கள். நான் அவர்களுடன் பேசி நாட்டின் சுமூக நிலைமையினை விளக்கி, தெற்கு அரசியலின் நேசக்கரத்தை அவர்களுக்கு நீட்டி மீண்டும் அழைத்துவரப்போகிறேன். கேள்வி : ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் நிச்சயமாக தமிழ் முதலீட்டாளர்களை ஊக்குவித்து இங்கு அழைத்துவரமுடியும். ஆனால் அவர்கள் அதனை ஏன் இதுவரை செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கருணா : ஆம், கூட்டமைப்பில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற மூத்த அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கிருக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால், இலங்கையிலிருக்கும் அனைத்து இனங்களையும் பாதிக்காவண்ணம் தமது கருத்துக்களை முன்வைக்கத் தெரியாமல் இருப்பதுதான். அதுமட்டுமல்லாமல், இலங்கையில் நிலவும் சுமூக நிலை, நல்லிணக்கம், அமைதி பற்றி புலம்பெயர் தமிழர்களிடம் எடுத்துரைக்கும் திறமையும் இவர்களிடம் இல்லை. தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையென்றால் அவர்கள் மீண்டும் ஆயுதம் தூக்க நேரிடலாம் என்று மாவையார் சொல்கிறார். நான் புலிகளுடன் இணைவதற்கு அவரும் ஒரு காரணம். இவர்களின் பசப்பு வார்த்தைகளை உண்மையென்று நம்பி பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வெற்றுகனவான ஈழம் தேடிப் போராடக் கிளம்பியிருந்தோம். இந்த அனுபவம் மிக்க அரசியல் வாதிகளால் நாம் தவறாக வழிநடத்தப்பட்டோம். ஆனால், நாங்கள் எமது இலட்சியத்திற்காகப் போராடியபோது, இவர்கள் தமது சொந்தப் பாதுகாப்பிற்காக இந்தியாவுக்கு ஓடிவிட்டார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட போர் முடிந்தவுடன், தமது இந்திய மறைவிடங்களில் இருந்து வெளியே வந்த இந்த மூத்த அரசியல்வாதிகள் இன்று மீண்டும் அதே போர் முழக்கங்களை முன்வைக்கிறார்கள். தமிழர்களை மீண்டும் மூடர்களாக்கி, வெற்று கனவுகளை முன்வைத்து, இனவாதக் கருத்துக்களை பரப்பி மீண்டு தமிழர்களை ஒரு இரத்தகளரி மிக்க போரிற்குள் தள்ளும் இந்தக் கைங்கரியத்தைச் செய்யவேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். போர்முடிந்த கடந்த 10 வருடங்களாக அவர்கள் அரசியல் செய்கிறார்கள், ஆனால் இன்றுவரை தமிழ் மக்களுக்காக ஒரு துரும்பைத்தன்னும் இவர்களால் நகர்த்த முடியவில்லை. குறைந்த பட்சம் தமிழர்களின் நிலங்களில் இருந்து ராணுவமுகாம்களை நகர்த்தும் முயற்சியைக் கூட இவர்களால் எடுக்க முடியவில்லை. தமது பேசும் தொனியினை மாற்றி, இனவாத அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியலில் கைகோர்க்கும் நிலையினை அவர்கள் அடையவேண்டும். ராணுவ முகாம்களை அகற்றுமாறு அரசினைக் கோருவதை நிறுத்திவிட்டு, அம்முகாம்களை அரச காணிகளுக்கு நகர்த்துவதன்மூலம் அப்பகுதிகளில் ராணுவப் பிரசன்னத்தை அவர்கள் நீட்டிக்க முன்வரவேண்டும். நான் அங்கம் வகித்த அரசாங்கம் முதற்கொண்டு எந்தவொரு தேசிய அரசாங்கமும் தனது ராணுவ நிலைகளை நாட்டின் எப்பாகத்திலிருந்தும் அகற்ற ஒருபோதும் இடம்கொடுக்கப்போவதில்லை. இவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, பயங்கரவாதம் மீளவும் தலைதூக்கி நாட்டின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்கு ஆளாகும் நிலையினை அரசு ஒருபோதும் கொண்டுவராது என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஏனெறால், எமது நாட்டின் பாதுகாப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. நான் முன்னர் கூறியதுபோல, தமிழர்களுக்கு என்போன்ற மிதவாத அரசியல்த் தலைவர்களே இப்போது தேவை. பழமைவாத அரசியல்த் தலைவர்களின் இனவாதச் சிந்தனை ஒருபோதும் மாறப்போவதில்லை. போர் முடிந்தபின்னர் ஏற்படுத்தப்பட்டிருக்கும் யதார்த்த நிலையினை அவர்கள் ஒருபோதும் உணரப்போவதில்லை. தமிழர்களுக்கு அடிப்படைவாத இனவாதத் தலைவர்கள் இனிமேல்த் தேவையில்லை. முழு நாட்டிற்குமே நாட்டினை அபிவிருத்துசெய்து, மக்களை முன்னேற்றுகின்ற அரசியல்த் தலைமையே இன்று தேவை. நாம் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் பாடிய அதே பல்லவியினையே இன்றும் அவர்கள் பாடுகிறார்கள். எமக்கு அது அலுத்துவிட்டது. கேள்வி: தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு கூட்டமைப்பு மகிந்த அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட முன்வந்ததா? கருணா : நான் மகிந்த ராஜபஹ்க்ஷவின் அரசில் அமைச்சராக இருந்தபொழுது சம்பந்தன் அவர்களை அரசுடன் இணைந்து செயற்பட வருமாறு அழைத்திருந்தேன். கூட்டமைப்பு எம்முடன் சேருமிடத்து எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதோடு, தேவையான முயற்சிகளை முன்னெடுக்கவும் வாய்ப்பிருந்தது. மக்களின்மேல் உண்மையான அக்கறைகொண்ட, செயல்திறன் மிக்க தலைவரான மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்று இருந்தது. மகிந்த ராஜபக்ஷவைப்போன்ற நேர்மையான, துணிவான செயல்த்திறன் மிக்க ஒரு தலைவரை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அவர் தான் சொல்வதைச் செய்யவும், செய்வதைச் சொல்லவும் வல்லமை மிக்க ஒரு பெரும் தலைவராக எனக்குத் தெரிகிறார். சம்பந்தன் மகிந்த ராஜபஹ்க்ஷவின் ஆதரவு தனக்குத் தேவையென்று கோரிவருவதாக நான் அண்மையில் அறிந்துகொண்டேன். அவர் எதற்காக எனது தலைவரின் ஆதரவினை இப்போது எதிர்பார்க்க வேண்டும்? மகிந்த போன்ற துணிவான, திறமையான தலைவர்கள் எமக்குத் தேவை. அரசாங்கம் பழிவாங்கும் படலத்திலிருந்து, நாட்டினை அபிவிருத்தி செய்யும் படலத்திற்கு மாறவேண்டும் என்பதே எனது விருப்பம். கேள்வி : இன்றைய நல்லிணக்க அரசாங்கம் தாம் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்றும், ஆனால் நீங்கள் அமைச்சராகவிருந்த மகிந்த அரசாங்கத்தில் நடைபெற்ற பாரிய முறைகேடுகள் பற்றியே விசாரிக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்களே? கருணா : நான் ஒருபோதுமே அக் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தவறான பிரச்சாரத்தினை முன்னெடுத்து எனது முன்னாள் அரசாங்கத்தின் பல உறுப்பினர்களை அது கைதுசெய்து வைத்திருக்கிறது. இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டத்திற்குப் புறம்பான நீதிவிசாரனை அமைப்பொன்றினை உருவாக்கி தமது அரசியல் எதிரிகளை இந்த அரசாங்கம் பழிவாங்கி வருகிறது. இந்த நாடே சந்தித்த மிகெப்பெரிய ஊழல் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்பே நடந்தேறியது. இந்த ஊழல்தொடர்பாக விசாரணைகளை நடத்தி உண்மையினை மக்கள் அறியும்படி இவர்கள் ஏன் இதுவரை செய்யவில்லை? இவர்களுக்குப் பழிவாங்கும் நோக்கமே இருக்கிறது. நிச்சயமாக இவர்களால் 2020 இல் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது. மக்கள் இவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள். பல கடன்களைப் பெற்றுக்கொண்டதாக மகிந்தவின் அரசாங்கத்தினை இன்றைய அரசாங்கம் குறை சொல்கிறது. ஜி எஸ் பி சலுகையினை தான் நாட்டிற்குப் பெற்றுக்கொடுத்துள்லதாக அரசு மார்தட்டுகிறது. ஆனால், நாட்டின் நலனையும், பாதுகாப்பையும் அடகுவைத்து 58 நிபந்தனைகளுக்கு இணங்கியே இந்த வரிச்சலுகையினைஇந்த அரசு பெற்றிருக்கிறது. இதே வரிச்சலுகையினைத் தருகிறோம், எமது கோரிக்கைகளுக்கு உடன்படுங்கள் என்று மகிந்தவின் அரசாங்கத்திற்கும் தூது அனுப்பினார்கள். ஆனால், இந்த வரிச்சலுகை இல்லாமலேயே நாட்டினை அபிவிருத்தி செய்யமுடியும் என்று நாம் அதனை முற்றாக நிராகரித்திருந்தோம். அதன்பிறகே நாம் சீனாவிடம் கடன்களுக்கு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம். நான் எமது ஆட்சியில் வெறும் 750 ஏக்கர்களை மட்டுமே சீனாவுக்கு வழங்கியிருந்தோம். ஆனால், இந்த அரசாங்கமோ சீனாவுக்கு 15,000 ஏக்கர்களை வழங்கியிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில், ஒருவருக்கு உங்கள் நிலத்தினை வழங்கும்போது அதன் வான்பகுதியும் சேர்த்தே வழங்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இந்த ஒப்பந்தத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பெருமளவு பெருமளவு நிலப்பரப்பும், வான்பரப்பும் சீனாவுக்கு வழங்கப்படுமிடத்து இந்தியாவின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்கு உள்ளாவதோடு, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பதற்ற நிலைமையும் உருவாகக் காரணமாகிவிடும். மகிந்தவை அன்று ஆட்சியில் இருந்து அகற்ற பின்னாலிருந்து இயங்கிய இந்தியா இன்று அவரையே மீண்டும் ஆட்சியில் அமர்த்தப் பாடுபடுவது தெரிகிறது. அதேவேளை, மகிந்த அவர்களின் ஆட்சி மீண்டும் அமையும்போது, அவர்களும் பழிவாங்கும் நடவடிக்கையினைத் தொடங்கக் கூடாதென்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 30 வருடகாலப் போரின் பின்னர் எமக்குக் கிடைத்திருக்கும் இந்த அருமையான சந்தர்ப்பத்தினை சில்லறைப் பிணக்குகளில் செல்வழிப்பதை நிறுத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பாவிக்கவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். முற்றும். https://www.ft.lk/article/600192/Karuna-Amman-takes-on-TNA
  7. முறைப்பாடு மூலம் கேட்டுப் பாருங்கள்.
  8. எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும்.....
  9. சாய் பல்லவி வேற லெவல் டான்ஸ் ........! 👍
  10. ஐயனே, இந்த 5 மிமீ மோட்டார் என்று எதுவுமே இல்லை. எழுத்துப்பிழை ஏதோ ஏற்பட்டுள்ளது
  11. கேள்வி : கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான கமிஷன் தனது விசாரணைகளின் முடிவில் சில விடயங்களைச் செய்யுமாறு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அப்பரிந்துரைகளை நீங்கள் அங்கம் வகித்த முன்னைய அரசாங்கம் செய்யத் தவறியது ஏன்? கருணா : ஆம், அது ஒரு நல்ல திட்டம்தான், அதில் பல அருமையான விடயங்கள் கூறப்பட்டிருந்தன. ஆனால், துரதிஷ்ட்டவசமாக எவருமே அதனைச் செயற்படுத்த விரும்பவில்லை. தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்ட உண்மைகளைக் கண்டறியும் கமிஷனுக்கு நிகராக இதனைக் குறிப்பிட முடியும். நாம் அரசில் அமைச்சராக இருந்தபொழுது தென்னாபிரிக்காவுக்குச் சென்று இந்த கமிஷன் தொடர்பான கலந்துரையாடல்களிலும், ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அங்கும்கூட காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான சிக்கல் ஒன்று இருந்தது. அங்கு 22,000 பேர் காணாமலக்கப்பட்டதாக கமிஷனிடம் தெரிவிக்கப்பட்டது. கமிஷனின் முடிவில் இவர்கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டதாக அரசு அறிவித்து, அவர்களுக்கான நட்ட ஈட்டினையும் வழங்கியது. அதன் பின்னர் எவருமே காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசவில்லை. அதே செயன்முறையினைத்தான் நாமும் இங்கு செய்யவேண்டும். கேள்வி : ஆனால், தமிழர்கள் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை அமைப்பொன்று தேவையென்று கோரிவருகிறார்களே, இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன? கருணா : நிச்சயமாக இல்லை. சர்வதேச விசாரணை அமைப்பொன்று இங்கு வந்தால் அது தேவையற்ற பல பிரச்சினைகளை உருவாக்கிவிடும் என்று நாம் நிச்சயமாக நம்புகிறேன். சர்வதேச விசாரணைகள் என்று வரும்போது யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் விசாரிக்கப்படவேண்டும். ஆனால், இரத்தம் தோய்ந்த கடந்த 30 ஆண்டுகால கொடிய போரிலிருந்து மீண்டுவரும் தெற்கின் சிங்கள மக்களும் வடக்கின் தமிழர்களும் தற்போதுதான் சகோதரர்கள் போல மீளவும் நெருங்கி வருகிறார்கள். இந்த நிலையில் சர்வதேச விசாரணை என்பது தெற்கின் மக்களை வெறுப்பேற்றும் நடவடிக்கையாக அமைவதோடு, இன நல்லிணக்கத்தினையும் முற்றாகப் பாதித்து விடும். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் ஒரு உள்நாட்டு விவகாரமாகும். எங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும், இதற்கு வெளியார் தலையீடு எதுவும் தேவையில்லை. எமக்கு வெளிநாட்டு உதவிகள் நிச்சயம் தேவை, ஆனால் எமது போர்க்குற்றங்களை விசாரிக்கவோ அல்லது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்கோ வெளியாரின் உதவியினை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. எமது எதிர்ப்பினையும் மீறி சர்வதேசம் ஒரு விசாரனையினை ஆரம்பித்தால், அவர்கள் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரான புலிகளையும், ராணுவத்தினரையும் விசாரிப்பது அவசியம். இன்று நாம் புலிகளை முற்றாக அழித்துவிட்ட நிலையில், அவர்கள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்குவது எப்படிச் சாத்தியம்? ஆகவே இது இலங்கை ராணுவத்தினரை மட்டும் இலக்குவைத்து தண்டிக்க ஏற்படுத்தப்படும் ஒரு சர்வதேச சதியென்றுதானே தெளிவாகிறது? அவர்கள் போரின் இறுதிக்காலத்தில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அப்படியானால் அதற்கு முன்னர் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி என்ன செய்யப்போகிறார்கள்? அவைபற்றியும் விசாரித்து தண்டிக்கப்போகிறார்களா? சிங்கள ராணுவத்தை மட்டுமே தண்டிப்பதுதான் இவர்களின் நோக்கமா? இது தெற்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தப்போவது இவர்களுக்குத் தெரியாதா? அப்படியானால், பயங்கரவாதப்புலிகளுக்காக இன்று குரல் கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகள் செய்த போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படட்டும், அப்போது இருபக்கமும் சமமாகப் பார்க்கப்படும் வாய்ப்புக் கிடைத்துவிடும். கேள்வி : முன்னாள்ப் புலிப் போராளிகளைக்கொண்டு தன்னைக் கொல்வதற்கான சதி நடப்பதாக தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கூறியிருக்கிறார்கள், இதுபாற்றி உங்களின் நிலைப்பாடு என்ன? கருணா : அவரது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதுடன், போலியானது என்பதுதான் எனது நிலைப்பாடு. வடக்குத் தமிழர்கள் அவர்மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதால் தனது பாதுகாப்பைப் பலப்படுத்தவே இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்துவருகிறார். கொழும்பில் பிறந்து வளர்ந்த அவருக்கு வடக்கின் மக்களின் பிரச்சினைகள் குறித்து எதுவுமே தெரியாது. அவர் வடக்கில் இன்று பாரிய பிரச்சினகளை உருவாக்கிவருவதால், அவர்மீது வடக்குத் தமிழர்கள் கடுமையான அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அவரால் இன்று வடக்கிற்குச் செல்வதை நினைத்துக் கூடப்பார்க்கமுடியாது. புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள்ப் போராளிகளை தனது சுய லாபத்திற்காக அவர் பகடைக் காய்களாகப் பாவிப்பது துரதிஷ்ட்டவசமானது. அப்பாவிகளான அவர்கள், இன்றுவரை தமது வாழ்விற்காக அல்லற்பட்டு வருகின்றார்கள். இதுவரை 6 முன்னாள்ப் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். வன்முறையினைக் கைவிட்டு சகஜவாழ்விற்குத் திரும்பியிருக்கும் இவ்வாறான பல முன்னாள்ப் போராளிகளின் வாழ்வும் சுமந்திரன் போன்றவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
  12. கேள்வி : உங்களின் தாய்க்கட்சி சுதந்திரக் கட்சியாக இருக்கும் நிலையில் நீங்கள் மீண்டும் அக்கட்சியில் இணைந்துகொள்ளும் வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? கருணா : சுதந்திரக் கட்சியுடன் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் அக்கட்சிக்காக நான் பெரிதும் பாடுபட்டிருக்கிறேன். கிழக்கில் 30 வருடங்களுக்குப் பின்னர் என்னால்த்தான் சுதந்திரக் கட்சிக்கென்று அலுவலகமும் அரசியல் வேலைப்பாடுகாளும் ஆரம்பிக்கப்பட்டன. பிரபாகரன் உயிருடன் இருக்கும்போதே நான் துணிவாக இதனைச் செய்தேன். வேறு எவராலும் பிரபாகரனை எதிர்த்து இவ்வாறான துணிச்சலான நிலைப்பாட்டினை எடுத்திருக்க முடியாது. சுதந்திரக் கட்சி அரசுக்கான மக்கள் ஆதரவை கிழக்கில் வளர்த்து, தெற்கின் தேசியக் கட்சியொன்று தமிழர் பகுதிகளில் காலூன்றமுடியாது எனும் நிலையினை உடைத்து, அக்கட்சிக்கு வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்திருக்கிறேன். நான் எனது பொதுக் கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம் தமிழர்களுக்காகப் பேசுவதற்காகவே. நாம் எவருக்கெதிராகவும் அரசியல் செய்யப்போவதில்லை. தமிழ்த் தேசியம் எனும் மாயைக்குள் வீழ்ந்திருக்கும் தமிழர்களின் மனங்களை மாற்றி பலமான அரசியல் தலைமைத்துவம் ஒன்றினை நான் வழங்குவதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே எனது நோக்கம். அப்பாவித்தமிழர்களை தமிழ்த் தேசியத்தினுள் இழுத்து வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலைத் தோற்கடிப்பதே எனது நோக்கம். இதற்கு நல்ல உதாரணம்தான் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். கொழும்பில் வாழ்ந்த மிதவாதியான அவர் வடமாகாணத்தின் முதலமைச்சர் ஆகி இன்று இனவாதம் கக்கி வருகிறார். தன்னை ஒரு கதாநாயகனாக தமிழர்கள் முன் நிலைநிறுத்தப் பார்க்கிறார். அவர் முதலமைச்சராக வந்தபொழுது வடக்குத் தமிழர்கள் தமது பிரச்சினைகளை அவர் தீர்த்துவைப்பார் என்று நம்பியிருந்தனர். ஆனால், அதில் அவர் தோல்வி கண்டிருப்பதோடு, பல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு விட்டார். இன்று அவர் வேறொரு வழியில் பயணிக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலில் இருந்து அவர் விலகிச் செல்வதுபோலத் தெரிகிறது. ஆனால், அரசுக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இன்றுவரை தமிழர்களுக்கு எதனையுமே செய்யவில்லை. கேள்வி : கிழக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் என்று கூட்டமைப்பு கூறிவருபவர்கள் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன ? கருணா : காணாமலாக்கப்பட்டவர்களுக்கான விசாரணை, ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான அவர்களின் கோரிக்கைகளை ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டாலும்கூட, அவர்கள் அதனை முன்வைக்கும் விதத்தினை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தமது அரசியல் லாபத்திற்காக அப்பாவிகளின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள். பல்லாண்டுகளாக காணாமலாக்கப்பட்ட தமது சொந்தங்களைத் தேடித்தாருங்கள் என்று இன்றுவரை ஏங்கிவரும் எவருமே கூட்டமைப்பின் இந்த போலியான அரசியல் பரப்புரைகளுக்கு இலகுவாக உள்வாங்கப்பட்டு விடுவார்கள். கூட்டமைப்பு அண்மையில்கிழக்கில் நடத்திய எழுக தமிழ் நிகழ்வில் அப்பாவித்தமிழர்களின் உணர்வுகளைப் பாவித்து அரசியல் ஆதாயம் தேடிவருவது தெரிகிறது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டினை உண்மையுடன் தெரிவிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியொன்று தனது லாபத்திற்காக இந்த காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் இன்றுவரை ராணுவத்தால் ஏதோவொரு தடைமுகாமில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டி வருகிறது. இதனை எவராவது ஏற்றுக்கொள்வார்களா? இவ்வாறு இவர்களால் கூறப்படும் ரகசிய தடுப்புமுகாம்கள் அம்பாந்த்தோட்டையிலோ அல்லது அநுராதபுரத்திலோ நடத்தப்பட்டு வந்தால் அவை இன்றுவரை வெளியுலகிற்குத் தெரியாமல்ப் போனது எப்படி? அமெரிக்கா தனது செய்மதிகளைப் பாவித்து முழு நாட்டினையும் சல்லடைபோட்டு வைத்திருக்கும்போது, இம்முகாம்களை நாங்கள் நடத்துவது சாத்தியமா? காணாமலாக்கப்பட்ட தமிழர்களை அடைத்துவைத்திருப்பதாகக் கூறப்படும் இம்மாதிரியான ரகசிய முகாம்கள் இலங்கையில் எங்கும் நடத்தப்படவில்லை என்பதை என்னால் அதிகாரபூர்வமாகக் கூறமுடியும். உண்மையைச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது, அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் எல்லோருமே கொல்லப்பட்டு விட்டார்கள், இதில் மறைப்பதற்கு எதுவுமேயில்லை. காணாமலாக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் நட்ட ஈடு வழங்கவேண்டும். அவர்களுக்கான இறுதி வணக்கத்தினை அவர்களின் குடும்பங்கள் இனிச் செய்ய வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களை தேடும் கமிஷனை ஆரம்பிப்பதால் எதுவுமே நடக்கப்போவதில்லை, இதனால் யாருக்கும் லாபம் இல்லை. எனது சகோதரர் கூட காணாமல்ப்போயிருந்தார். புலிப்பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்ட அவர் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று நான் எனது தாயாரிடம் கூறிவிட்டேன். அவருக்கான இறுதி மரியாதையினை நாங்கள் செலுத்திவிட்டோம். அவரது உடலினை நாம் இதுவரையில் கண்டுபிடிக்காததால், அவரையும் காணமாலாக்கப்பட்டோர் பட்டியலில் சேர்த்துவிட்டோம். ஆனால், நான் எனது தாயாரிடம் அதுபற்றித் தெளிவாகக் கூறிவிட்டேன். உண்மையினைச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். பலருக்கு இது கடிணமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதே கசப்பான உண்மையாகும். புலிப்பயங்கரவாதிகள் ஆனையிறவு முகாமைத் தாக்கியபோது பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை பொறுப்பெடுக்குமாறு புலிப்பயங்கரவாதிகள் அரசாங்கத்தினைக் கேட்டபோது, அரசு உடனடியாக மறுத்துவிட்டது. பெருமளவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களைப் பொறுப்பெடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு அனுப்பும்போது பாரியளவிலான பதற்றமும், அச்ச நிலையும் தோன்றலாம் என்று அரசு அஞ்சியது. ஆகவே கிளிநொச்சியைச் சேர்ந்த பொதுமக்களும் புலிப்பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட பலநூறு ராணுவ வீரர்களை தாங்களே அடக்கம் செய்தார்கள். இவ்வாறு கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் கூட காணமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கலாம். தமிழர்கள் மட்டுமல்லாமல் ராணுவ வீரர்களும், புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிச் சிங்களக் குடியேற்றவாசிகளும் கூட காணமலாக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்கிற உண்மை அவர்களின் சொந்தங்களுக்கு உறுதியாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.