Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts
  2. sivarathan1

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    7
    Points
    220
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19152
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    38777
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/13/21 in all areas

  1. பெரியளவிலான மீன் பொரியல்......இப்படி செய்து சாப்பிடலாமே......! 👍
  2. முனைய பகுதி, 1)கிரிப்டோ வுக்கான உந்துதல், 2)வங்கித்துறையின் அதிகார துர்ப்பிரயோகம் சமூகத்தை ஆத்திரம் கொள்ளவைத்தது 3)தொழில் நுட்பம், மற்றும் 4) சந்தை கிரிப்டோ ஐ எப்படி பார்க்கின்றன என்பதன் அடிப்படையில். இப்பொது, பொருளியல் அடிப்படையில் கிரிப்டோ. இதை இங்கு நான் எழுத தான் வேண்டும். இதை விளக்குவது, திரட்டி எழுதுவது மிகவும் கடினமாக இருக்கிறது (கதைக்கும் போது இலகு) . இயலுமானவரை முயற்சிக்கிறேன். மற்றது, இதை நான் குழப்புவதற்கு எழுதவில்லை. இதை வாசித்து, புரிந்து கொண்டால், கிரிப்டோ இன் ஊன்றுதல், எழுச்சிக்கான பின்புலம், முக்கியமாக பொருளியல் பின்புலம், bitcoin போன்றவை இப்படி விலை எகிறுவதில் பொருளியல் நியாயப்பாடுகள் இருக்கிறதா, எந்தவொரு கிரிப்டோ உம் தக்க பெறுமானம் கொண்டு இருக்கிறதா என்பதை கேல்விக்கு உள்ளாகும் போக்கு என்று பல ஆய்வு கோணங்ககளில் சிந்திக்க தூண்டும். எந்தவொரு crypto currency இலும் உள்ளக பெறுமானம் இருக்கிறதா என்றால், crypto currency இன் உற்பத்தி செலவை தவிர்த்து, இல்லை என்பதே பொருளியல் அடிப்படையில் உடனடியான விடை. ஆனால், அரசுகள் உற்பத்தி செய்யுயும் நாணயங்களுக்கு உள்ளக பெறுமானம் இருக்கிறதா இருக்கிறதா என்றால், உற்பத்தி செலவை தவிர்த்து, அதற்கும் இல்லை ன்பதே பொருளியல் அடிப்படையில் உடனடியான விடை. நாணயம் பெறுமானத்தை கடத்தும் கருவிகள் (இதை வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்). நாணயத்தின் உள்ளக பெறுமானத்தை அரசுகள் எவ்வாறு, அவற்றின் financial system ஊடக பெறுகிறது, நிர்ணயிக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறேன் (அதைவிட்டு வேறு இலகிய வழியில் கதைப்போம்). உண்மையில், நாணய உற்பத்தி என்பது, நாணயத்தை உற்பத்தி செப்பவர்களுக்கு வருமானத்தையும், இலாபத்தையும் ஈட்டிக் கொடுக்கிறது. அரச சேவைகளில், அதி கூடிய, நோகாத வருமானமும், இலாபமும் இருப்பது, நாணய உற்பத்தி, பெறுமான நிர்ணயம், உத்தரவாதம் என்ற, பொதுவாக வெளிப்படையாக (இதில் ஈடுபாடு கொண்டோரை தவிர) தெரியாத, உணரமுடியாத (intangible) சேவையில். நாணய உடற்பதியில் அரசு ஈட்டும் இலாபத்தித்திற்கு, குறிப்பாக ஓர் பெயர் இருக்கிறது பொருளியலில், அது Seigniorage (google இல் தேடி பார்க்கவும்). உண்மையில், இந்த Seigniorage ஐ நேரடியாக மத்திய வங்கிகள் உழைப்பதில்லை, அது வட்டி வழியாகவே உழைக்கப்படுகிறது. அனால், அந்த உழைக்கும் முறை இங்கே சொல்வதின் அடிப்படையை மாற்றாது. ஆகவே, நாணய உற்பத்தியின் ஏகபோக உரிமையம், அதிகாரமும் இருப்பது அரசுகளுக்கு வேண்டும், அதை வேறு எவரும் அசைப்பதை எந்த ஓர் அரசும் விரும்பாது. இங்கே முக்கியமான அரச அலகு மத்திய வங்கிகள். அரசுக்கள் தமது நாணய உற்பத்தி செலவை குறைப்பதை நோக்கமாக கொண்டு, தங்கம், வெள்ளி, ஈயம், செப்பு என்று வரலாற்றின் வழியாக இப்பொது plastic notes இல் வந்து நிற்கிறது. crypto இலும், உற்பத்தி செய்பவர்களுக்கு வருமானம், இலாபம். ஆனால், crypto ஐ உற்பத்தி செய்பவர்கள் தனியார்கள். அரசுகளுக்கு போட்டியாக இப்பொது தனியார்கள் நாணயத்தை கிரிப்டோ வடிவில் உற்பத்தி செய்கிறார்கள், அரசின் ஏகபோக நாணய உற்பத்தி, அதன் வருமானம், இலாபத்தை, தனியார்கள் பங்கு போடுகிறார்கள். மத்திய வங்கிகள் மற்றும் அரசுக்கள் ஒன்றும் வெளிப்படையாக சொல்லவில்லை ஆயினும், ஒருபக்கம் அவர்களுக்கு பயமும், மறு பக்கம் ஆத்திரமும்; அவர்களை மீறி, தனியார் நாணயம் ஊன்றி, வலுப்பெற்று வருகிறது, விட்டது என்று. இப்போது, மத்திய வங்கிகள் இடம் இருந்து, crypto உம் அதன் பகுதியான stable coins உம் இறுக்கமாக regulate பண்ணுபடவேண்டும் என்ற குரலும்ம் கருதும் ஓங்கி ஓலிக்கிறது. கிரிப்டோ இல் regulation தேவை தான், ஆனல் அது செய்யப்பட்டு இருக்க வேண்டியது 5 - 6 வருடங்களுக்கு முதல். இப்பொது, ரெகுலேஷன் என்று சொல்லப்படுவல், public பாதுகாப்பது முன்னிறுத்தப்பட்டாலும், உண்மையான கரிசனை crypto க்கள் தேசிய நாணயம் மற்றும் மத்திய வங்கிகளை அசைக்கது சவால் விடும் நிலைக்கு வந்துள்ளதால். இதை, ஓர் நாட்டின் தேசிய நாணயம் (குறிப்பாக major currencies usd, gbp, eur, போன்றவை) நாணயம் ஒப்பீட்டளவில் அளவுக்கு அதிகமாக பெறுமானம் கூடும்போது எங்காவது இந்த குரல் கேட்டு இருக்கிறதா? இல்லை. ஏனென்றால், அது மத்திய வங்கிகளுக்கு, மற்றும் அரசுகளுக்கு வருமானமும், இலாபமும் கூடுகிறது. ஆனா, மத்திய வங்கிகளுக்கு ஓர் கரிசனை இருக்கிறது, மனனயப் பெறுமதி கூடும் பொது, ஏற்றுமதியை தாக்கும் என்று; இதை fiscal policy வழியாக சமாளிக்க முற்படும் கிரிப்டோ பெறுமதி கூடுவதில், இந்த கரிசனைகள் இல்லை, ஏனெனில், ஒன்று தனியார் வசம், மற்றது நாட், எல்லை கசடைந்து அநேகமாக எல்லா பொருளியல் பலம் கொண்ட நாடுகளில் பெம்பான்மையாக பரவி இருப்பது. அனால், அரசுகளின் நாணயம் உள்ளக பெறுமதியின் நிர்ணயமும், crypto இந்த நாணய பெறுமதி நிர்ணயமும் வேறு படுகிறது. அரசுகள் தமது ஏகபோக அதிகாரத்தை பாவித்து, நாணயத்தின் பெறுமதியை நிர்ணயிக்கின்றன. நாணயதாய் உருவாக்கிய பின், அரசுகள் தமது இறைமை அதிகாரத்தை பாவித்து, legal tender என்று பிரகடனப்படுத்தினாலும், அந்த நாணயத்தை கொண்டு ஏதாவது யில் பெறுமானம் கொண்ட பொருளை, சேவைகளை அல்லது பொருட்களளை வாங்காத அல்லது விற்கத இடத்தில், அந்த நாணயத்துக்கு பெறுமதி என்பது அவற்றின் தாட்கள், குற்றிகள், மற்றும் அவற்றை உருவாக்குவாதத்திற்கு செலவு செய்யப்பட்ட உழைப்பு, மின்சாரம் போன்றவை. அதாவது, நாணயத்தின் உண்மையான face value என்பது, நாணயம், சேவைகளுக்கு, பொருட்களின் விற்றபிணையில் கைமாறும் போதே பெறுகிறது. இந்த வட்டம் (உருவாக்குதல், legal tender, கைமாறுதல்) ஏற்கனவே இருப்பதால், அரசு உருவாக்கியவுடன் நாணயம் legal tender இன் face value ஐ உடனடியாக பெறுகிறது. உ.ம். ஆக குறைந்த வருமானத்தை எடுத்து, அரசு எவ்வாறு பெறுமானத்தை தீர்மானிக்கிறது, நாணய உற்பத்தி யில் இலாம் ஈட்டுகிறது எனபதை பார்த்தால் இது அநேகமாக எல்லோருக்கும் புரியும். London இல் ஒருநாள் குறைந்த வருமானம் £100 என்று எடுத்து கொண்டால், அந்த £100 ஐ பெறுவதற்கு வேலை செய்பவர் ஆக குறைந்தது 7.5 மணித்தியாலம் முறிய வேண்டும். அனால், அந்த £100 ஐ உற்பத்தி செய்யும் செலவு அரசுக்கு மிக குறைவு. மறுவளமாக, அந்த £100 ஐ குறைந்த சம்பளமாக வேலை செய்பவர்கள் ஏற்க மறுத்தால், அந்த £100 க்கு என்ன பெறுமானம்? சொல்ல முடியாது. அது 5 மணி நேர வேலைக்குதாதான் ஏற்கப்படும் என்றால், இப்பொது அந்த £100 என்பதன் பெறுமானம் அதனது பெருமான இடத்தை மீள் கண்டு கொண்டது (value discovery). £100 இ பெறுவதத்திற்கு வேலைசெய்பவர் செலவளிக்கும் நேரத்தையும், அரசு £100 ஐ உற்பத்தி செய்யும் நேரத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டால், அரசின் இலாபம் இப்பொது கிரிப்டோகள் ஏறும் 1000 கணக்கான வீதத்திலும் மிகவும் கூடியது. மாறாக, கிரிப்டோ இன் உள்ளக பெறுமானத்தை market தீர்மானிக்கிறது. Bitcoin இன் பாவனை, ஒன்று செலவுக்கு நாணயமாக உபயோகம் மற்றது wealth ஐ காத்து வைக்கும் கருவியாக வளர வளர, bitcoin இன் விலையும் (உள்ளக பெறுமானம்) கூடியது. இப்போது, bitcoin உம், அரசுகளின் நாணயங்கள் speculation இல் இருப்பது போல (இது ஒவ்வொரு கணப்பொழுதிலும் currency சந்தையில் நடப்பது, அது தான் trading, சாதாரண பொதுமக்களும் தங்களை அறியாமல் speculate பண்ணுகிறார்கள், பணவீக்கம் என்ற கரிசனையின் தோறற்றமும், விளைவும் speculation), bitcoin உம் speculation இல் இருக்கிறது 24 மணிகள், ஏனெனில் கிரிப்டோ மார்க்கெட் 24 / 7 / 52 / 365. அதனால், bitcoin, கிரிப்டோ ஐ உற்பதி செய்பவர்கள், அரசுகள் போல இலாபத்தை எடுத்துவிட்டார்கள். வாங்குபவர்கள் , விற்பவர்கள், speculation செய்கிறார்கள். அதனால், bitcoin மற்றும் பிற கிரிப்டோ களின் பெறுமானம் சரியா என்பதே இப்போதைய கேள்வி. இன்னொரு கரிசனையனான tangibility of the currency எனபதில், முதல் கேள்வி அரசுகள் உற்பத்தி செய்யும் நாணயத்தில் எங்கு tangibility இருக்கிறது. அவற்றின் பெறுமானத்தை நிர்ணயிப்பதத்திற்கு, உத்தரவாதம் அளிப்பதத்திற்கு பாவிப்பது கண்ண்ணுக்கு தெரியாத இறைமை அதிகாரம். வேறு எதாவது விடுபட்டு நினைவு வந்தால் பதிகிறேன்.
  3. தலைவருக்கும் கே பி இற்கும் இடையே 2008 இன் கடைசி நாட்களில் நடந்த ரகசிய தொலைபேசிச் சம்பாஷணையினை நாம் ஒட்டுக் கேட்டோம் - கோடாபய ராஜபக்ஷ இணையம் : கொழும்பு டெலிகிராப் காலம் : பங்குனி 10, 2016 2006 முதல் 2009 வரையான காலத்தில் இலங்கை ராணுவம் பல உயர் தொழிநுட்ப கருவிகளைப் பாவித்தும், நவீன ராணுவத் தளபாடங்களை பயன்படுத்தியும் புலிகளை ராணுவ ரீதியாக முற்றாக அழித்தது. இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு மேலதிகமாக ஆளில்லா வேவு விமானங்களின் உதவியும் போரில் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருந்தன. இவ்வகையானவேவு விமானம் ஒன்றினைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்த கே பி இற்கும், வன்னியில் இருந்த பிரபாகரன் அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்றினை தாம் இடைமறித்து ஒட்டுக்கேட்டதுபற்றிய தகவல்களை அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோடாபய வெளிப்படுத்தியிருக்கிறார். புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரை தனக்கு எவ்வளவுதான் நெருங்கியவராக ஒருவர் இருந்தாலும்கூட, அவருடன் தொலைபேசியில் நேரடியாக தான் உரையாடுவதை தவிர்த்தே வந்திருக்கிறார்.இது பொதுவாக இலங்கை ராணுவத்தால் அறியப்பட்ட ஒரு விடயம். 2008 இன் இறுதி நாட்களில் அவ்வாறான நெருங்கிய புலம்பெயர்ந்த ஒருவருடன் பிரபாகரன் தொடர்புகொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. பிரபாகரனின் நெருங்கிய, நம்பிக்கைக்குப் பாத்திரமான மெய்ப்பாதுகாவப் பிரிவின் போராளியான வேலு என்பவர் தலைவர் அருகிலிருந்து கே பி உடன் தொலைபேசியில் தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது கே பி ற்கும் தலைவர் சார்பாக வேலுவுக்கும் இடையே நடந்த சம்பாஷணை மிகவும் முக்கியமானது. கிளிநொச்சி அரச ராணுவத்தின் கைகளுக்குள் வீழும் தறுவாயில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சம்பாஷணைபற்றித் தெரியவருவதாவது. கே பி அரசுடன் சேர்ந்து நாடகமாடி கொழும்பில் உல்லாசவாழ்வினை ஆரம்பித்த காலப்பகுதியில் செய்தியாளரான டேவிட் ஜெயராஜிடம் பேசும்போது, தனக்கும் தலைவருக்கும் இடையே நடத்தப்பட்டதாக கூறிய சம்பாஷணையின் விடயங்களைக் காட்டிலும் அதிகமான தகவல்களை கோடாபய வெளியிட்டார் என்று தெரியவருகிறது. பிரபாகரனைக் காப்பாற்றுதல் எனும் நடவடிக்கையின்போது கே பி இற்கும் தலைவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலில், பிரபாகரன் கே பி யிடம் உதவியொன்றினைக் கேட்டதாகத் தெரிகிறது. பிரபாகரனையும், இன்னும் சில மூத்த தளபதிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து இந்தத் தொலைபேசி உரையாடல் நடந்திருக்கிறது. பிரபாகரனுடன் கடுமையான தொனியில் பேசிய கே பி, பிரபாகரன் கேட்கும் உதவியான தன்னையும் இன்னும் சில தளபதிகளையும் சர்வதேச அமைப்பொன்றின் மூலம் வெளிநாடொன்றிற்கு அழைத்துச் செல்லுதல் எனும் ஏற்பாட்டினைச் செய்வதென்றால், தான் முன்வைக்கும் இரு நிபந்தனைகளை பிரபாகரன் உடனடியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது. தலைவரிடம் கே பி முன்வைத்த இரு நிபந்தனைகள், 1. 2002 இல் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாளராக பிரபாகரனால் நியமிக்கப்பட்ட காஸ்ட்ரோவை உடனடியாகப்பதிவியிறக்கி, தன்னை மீண்டும் அப்பதவியில் அமர்த்துவது. 2. சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாக தன்னை நியமிக்கும் அறிவிப்பினை தலைவரின் கையோப்பத்தோடு தனக்கு அனுப்பி வைப்பது. இத்தொலைபேசி உரையாடலினை இடைமறித்துக் கேட்ட ராணுவப் புலநாய்வுத்துறையினரின் தகவல்ப்படி, கே பி இனால் முன்வைக்கப்பட்ட இவ்விரு நிபந்தனைகளுக்கும் தலைவர் ஒப்புதல் அளித்ததாகத் தெரிகிறது. கே பி கேட்டுக்கொண்டதன்படி, கிளிநொச்சியில் பணியாற்றிய அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அதிகாரியூடாக இந்த பத்திரம் கே பி இற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. பிரபாகரனின் அருகில் இருந்த வேலுவிடம் பேசிய கே பி, "என்னால் உங்களைக் காப்பாற்ற முடியும், நான் கேட்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்படுங்கள்" என்று கூறியிருக்கிறார். ஆனால், இந்த தொலைபேசிச் சம்பாஷணையின் இடையே வேலுவிடமிருந்து தொலைபேசியைப் பிடுங்கிய பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்டனி கே பி இடம், "இல்லையில்லை, அதெல்லாம் வேண்டாம், எங்களுக்கு சில ஏவுகணைகளை அனுப்புங்கள், இந்த முற்றுகையினை உடைத்துக்கொண்டு, நாம் போராட்டத்தினைத் தொடர்வோம்" என்று கூறியிருக்கிறார். சில நிமிடங்களுக்குப் பின்னர், சம்பாஷணையின் தீவிரம் தணிந்த பின்னர் வேலுவிடம் பேசிய கே பி , "அவரின் முட்டாள் மகன்..." என்று சார்ள்ஸ் அன்டனிபற்றிக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். குறிப்பு : இந்தச் செய்தி கொழும்பு டெலிகிராப் பத்திரிக்கையில் இலங்கை ராணுவத்தின் சார்பாக கட்டுரைகளை வரையும் மைக்கேல் ரொபேர்ட்ஸ் எழுதியது. இவர் இங்கே கூறும் தலைவர் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார் என்பது, தலைவர் அவ்வாறு தான் காப்பற்றப்படுவதை முற்றாகவே மறுத்துவிட்டார் எனும் தகவலுக்கு நேர் முரணானது. சிலவேளை கே பி யோ அல்லது கோத்தாவோ தலைவரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இச்செய்தியினைக் கசியவிட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. https://www.colombotelegraph.com/index.php/gotabaya-rajapaksa-clarifies-listening-in-on-kps-chats-with-prabhakarans-man-friday/
  4. கே பி தன்னை ஒரு விடுதலைப் போராளியாகவே அடையாளப்படுத்துகிறார்."மகிந்த ராஜபக்ஷ கூறுவதுபோல புலிகள் ரத்தவெறி பிடித்த பயங்கரவாதிகள் அல்ல". அவர் கூறுகிறார். "இப்போது என்ன பிரச்சினை? எனக்குப் புரியவில்லை. மே மாதம்வரைக்கும் அவர் எங்களைப் பயங்கரவாதிகள் என்றே அழைத்துவந்தார். எங்களைப்போலவே நெல்சன் மண்டேலாவும் யாசீர் அரபாத்தும் தேடப்பட்ட பயங்கரவாதிகளாக இருந்தனர். ஆனால், அவர்களை இந்த உலகம் விடுதலைப் போராளிகளாகப் பார்க்கவில்லையா? ஆனால், இலங்கை அரசாங்கம் தனக்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, எமது விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்துவிடப் பார்க்கிறது". "எனது மக்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுங்கள். அவர்களை அமைதியாக வாழ விடுங்கள். தினமும் குண்டுச் சத்தங்களாலும், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களாலும் அல்லற்படும் அவர்களின் வாழ்க்கை இனிமேலாவது அமைதியாக இருக்கவேண்டும் என்பதே எனது ஒரே கனவு". புலிகளின் ராணுவக் கட்டமைப்பை கட்டிவளர்த்த கே பி தற்போது அவ்வியக்கத்திற்குப் பொறுப்பாக இருக்கிறார். ராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்பட்ட ஒரு அமைப்பிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு புலிகளின் தலைமைத்துவத்தில் இன்று வேறு எவரும் இல்லாததால் இவருக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், அவரால் ஆயுத ரீதியில் தொடர்ந்து போராட முடியாது, அவர் வேறு மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரபாகரனின் நெருங்கிய வட்டத்தில் இன்று உயிருடன் இருக்கும் ஒரே நபர் என்கிற அடிப்படையில் அவருக்கு இந்த தலைமை தாங்கும் பொறுப்புக் கிடைத்திருக்கிறது. "அவர் எனது நெருங்கிய நண்பன், அவரது இழப்பிலிருந்து நான் எப்படி மீளப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லையே. நானும் அவரும் ஈழம் எனும் ஒரே கனவினைச் சுமந்தே போராடினோம்" என்று பிரபாகரனின் மரணம் குறித்துப் பேசும்போது கே பி கூறினார். முற்றும்
  5. கே பி யின் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கையின் உயர்ஸ்த்தானிகராலயம் விடுத்த பதில் செல்வராசா பத்மனாதன் தெரிவிக்கும் கூறச்சாட்டுக்களில் பின்வரும் மூன்று விடயங்கள் தெளிவுபடுத்த வேண்டும். முதலாவதாக, தன்னைத்தானே புலிகளின் தலைவராக அவர் அறிவித்திருக்கிறார். இரண்டாவதாக, காடுகளுக்குள் இன்று ஒளிந்திருக்கும் போராளிகள் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிவார்கள் என்று அவர் நம்புகிறார். மூன்றாவது, நாம் மக்களை பாரமரித்துவரும் முகாம்களை அவர் தடுப்புச் சித்திரவதை முகாம்கள் என்று அழைப்பதோடு, மக்கள் அங்கே கொல்லப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எமது பதில் இதுதான், நாம் செல்வராசா பத்மனாதனை புலிகளின் புதிய தலைவராக அங்கீகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. புலிகள் என்று எந்த அமைப்பும் தற்போது இலங்கையில் இல்லை. அவ்வாறு இயங்காத ஒரு அமைப்பிற்கு செல்வராசா பத்மனாதன் என்பவர் தலைமை தாங்குவதாகக் கூறுவது வேடிக்கை. எமது அரசால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மக்கள் மீட்பு நடவடிக்கையின் மூலம் பயங்கரவாத இயக்கமும் அதன் மொத்தத் தலைமைப்பீடமும் அவர்களின் ஆயுத வளங்களும் முற்றாக எம்மால் அழிக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் ராணுவம் இலங்கை நாட்டின் மொத்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதுடன், கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் அனைத்தையும் அங்குலம் அங்குலமாக கைப்பற்றி பூரண ஆதிக்கத்தினைக் கொண்டிருக்கிறது. ஆகவே, செல்வராசா பத்மனாதன் கூறுவதுபோல இலங்கையில் எந்தக் காட்டுப்பகுதியிலும் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நடமாடுவது என்கிற பேச்சிற்கே இடமில்லை. இன்டர்போல் அமைப்பினால் செல்வராசா பத்மனாதன் தேடப்பட்டு வருகிறார் என்பதும், இந்தியாகூட அவரைத் தேடிவருவதும் எங்களுக்குத் தெரியும். ஆகவே அவர் மிக விரைவாகக் கைதுசெய்யப்படுவார் என்பதையும், பயங்கரவாதிகளுக்கான ஆயுதக் கொள்வனவு உட்பட்ட இதர பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக அவர் மிக விரைவில் தண்டிக்கப்படவிருக்கிறார். அடுத்ததாக, இலங்கை அரசாங்கம் சமாதானமான முறையில் பிரச்சினைக்குத் தீர்வு காண மறுத்துவருவதாக அவர் கூறும் குற்றச்சாட்டினை நாம் முற்றாக மறுக்கிறோம். 1985 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கம் சமாதான முயற்சிகளில் நம்பிக்கைகொண்டே செயற்பட்டு வருவதுடன், இன்றுவரை சமாதானத் தீர்வுக்கான கதவுகளை அகலத் திறந்தே இருக்கிறது. இப்போதுகூட, மிதவாதத் தமிழ்த் தலைவரும் இலங்கையின் மிகப்பெரிய தமிழ் அரசியல்க் கட்சியின் தலைவருமான ஆனந்தசங்கரி போன்றோருடன் தொடர்ச்சியான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசு இதயச் சுத்தியுடன் ஈடுபட்டே வருகிறது. வவுனியா தடை முகாம்களில் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அவர் கூறுவது மிகவும் தவறான தகவலாகும். சர்வதேச சமூகத்தில் இலங்கைக்கு ஏற்பட்டுவரும் நற்பெயரினைக் களங்கப்படுத்தும் நோக்கத்திலேயே பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த திட்டமிட்ட பொய்ப்பரப்புரையினைச் செய்துவருகிறார்கள். செல்வராசா பத்மனாதன் என்பவரின் குற்றச்சாட்டுக்களுக்கு நாம் பதிலளிப்பதன் ஒரே நோக்கம், நம்பகத்தன்மைகொண்ட ஊடகமான சனல் 4 இல் அவர் இதுகுறித்துப் பேசியகாரானத்தினால்த்தான். இல்லாவிடில், ஒரு பயங்கரவாதியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதன் மூலம் எமது நேரத்தை நாம் விரயமாக்கவேண்டிய தேவையில்லை.
  6. "பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கணவனிடமிருந்து மனைவியைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். எமது மக்களை இந்த தடை முகாம்களுக்குள் அடைத்துவைத்து அடிமைகளைப்போல் நடத்துகிறார்கள்". "இது நிச்சயமாக தமிழ்மக்கள் மீதான மகிந்தவின் பழிவாங்கல்தான் என்பது எமக்குப் புரிகிறது. எனக்குப் புரியவில்லை, அவர் உண்மையாகவே முழு நாட்டு மக்களுக்குமான தலைவர் என்றால், எமது மக்களை உடனடியாக விடுவித்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்திருக்க வேண்டும். அரசும், ராணுவமும் எமது மக்களைத் தொடர்ந்தும் இந்த முறையில் நடத்தினால் அவர்கள் தமிழர்களிடமிருந்து இன்னொரு ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்வார்கள் என்பது திண்ணம்". முகாமினுள் நிலைமைகள் வவுனியாவில் தமிழ் மக்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் உள்ள பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினரால் நடத்தப்பட்டுவரும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுகளையும், அதன்பின்னரான படுகொலைகள், காணாமற்போதல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தமைக்காக சனல் 4 இன் ஆசியாவுக்கான நிருபர் நிக் பட்டன் வேல்ஷ் அரசால் எச்சரிக்கப்படடு வெளியேற்றப்பட்டார். இம்மக்களுக்கும் புலிகளுக்குமிடையிலான தொடர்புகள் முற்றாக அறியப்படும்வரை இம்மக்களை தாம் முகாம்களை விட்டு விடுவிக்கப்போவதில்லை என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்தப் பேட்டி எடுக்கப்படும் போது முகாம்களுக்குள் நிலைமை சற்று சீரடைந்தாலும், பெருமளவு மக்கள் பட்டினியினாலும், தொற்று நோய்களாலும் நாளாந்தம் இறந்துவருவதாகக் கூறுகிறார்கள் இப்பகுதியில் செயலாற்றும் நிவாரணப் பணியாளர்கள். நிவாரணப் பணியாளர்களின் அதிகாரியொருவர் இம்முகாம் நிலைமைகள் பற்றிக் கூறுகையில், "இராணுவத்தால் நாளாந்தம் கொல்லப்படும் நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்களை வெளியே தெரியாமல் அகற்றுவதென்பது சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உள்ளே என்னதான் நடக்கிறதென்பதை அறிந்துகொள்வது இப்போதைக்கு முடியாது. ஆகவே, கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை என்னவென்பதும் எமக்குத் தெரியாது. இம்மக்களுக்கான உண்மையான நிவாரனத் தேவைகள் என்னவென்பதை சுயாதீனமாக அறிந்துகொள்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்தே வருகிறது. இது இம்மக்கள் மீது அரசு கொடுத்துவரும் நெருக்கடி தொடர்பான அச்சமும், உள்ளே நடைபெற்றுவரும் மனிதவுரிமை மீறல்களை அரசு முற்றாக் மறைத்து வருகிறதோ எனும் சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது" என்றும் கூறினார். இந்த முட்கம்பி வேலித் தடுப்பு முகாம்கள் புலம்பெயர் தமிழரை பெரிதும் பாதித்திருக்கிறது. ஆகவே, இம்முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமது உறவுகள் குறித்து அவர்கள் கடும் கவலை கொண்டிருப்பதுடன், இந்த கரிசணை அவர்களை ஓரணியாக ஒன்றிணைத்து வருகிறது. புலம்பெயர் தமிழரிடமிருந்து பெறப்பட்ட பணத்தின் மூலம் குரைந்தது 5 பில்லியன் டாலர்களை கே பி சேர்த்துவைத்திருப்பதாகவும், இவற்றினைக் கொண்டு ஆயுதங்கள் மற்றும் சொத்துக்களை அவர் வாங்கி வைத்திருப்பதாகவும், இன்னும் பெருமளவு பணம் அவரிடம் ஆயுதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதற்கு பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருக்கிறது. இனப்போரில் குறைந்தது 80,000 மக்கள் கொல்லப்பட்டதற்கு தானும் பொறுப்பெடுக்க கே பி முற்றாக மறுத்துவிட்டார். "அவர்களே இதனைத் தொடங்கினார்கள், அவர்களே எமது மக்களைக் கொன்றார்கள். ஆகவே, இது எம்மால் திணிக்கப்பட்ட போராட்டம் இல்லை" என்று கூறிய கே பி, சிறுவர்களைப் புலிகள் இயக்கத்தில் சேர்த்திருக்கத் தேவையில்லை என்பதை ஒத்துக்கொண்டார். "நாம் சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்துவதை ஏற்கவில்லை. சில சமயங்களில் இயக்கத்தினுள் இருந்தவர்கள் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. இது தவறுதான், இதற்காகப் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.
  7. “நாம் இப்போதும் ஒரு போரிடும் அமைப்பாகவே இருக்கிறோம், ஆயுதப்போராட்டத்தினை எம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கும் வலிமை இருக்கிறது" என்று அவர் கூறினார். "எமது போராளிகளும், நண்பர்களும் இன்னமும் காடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாம் எமது ஆயுதங்களை மட்டுமே மெளனித்திருக்கிறோம். அவர்கள் எனது தலைமையினை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை கீழே வைத்திருக்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார். "எனது சொல்லிற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். எம்மால் தொடர்ந்தும் பல வருடங்களுக்குப் போராடும் ஆற்றலும், பலமும் இருக்கிறது. எம்மைப்பொறுத்தவரை அது ஒன்றும் கடிணமான விடயம் அல்ல" என்றும் அவர் கூறினார். "எனது தலைமையின் கீழ் இன்னமும் 2000 போராளிகள் ஆயுதங்களுடன் காடுகளில் மறைந்திருக்கிறார்கள். ஆனால், நான் அவர்களை தற்போதைக்கு ஆயுதப் போராட்டத்தினைக் கைவிடுமாறு கேட்டிருக்கிறேன்". "எமது மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றுக்கு முன்வருமாறு சர்வதேச சமூகம் எம்மை வற்புறுத்துகிறது. ஆனால் இலங்கை அரசாங்கமோ போர் மூலமான முடிவிலேயே ஆர்வமாக இருக்கிறது. அவர்கள் அரசியல் ரீதியிலான தீர்வொன்றிற்கு முன்வர மறுத்துவருகிறார்கள்". அவர் எந்தவொரு தருணத்திலும் ஆயுதப்போராட்டத்தினைப் புலிகள் முழுவதுமாகக் கைவிட்டு விட்டார்கள் என்பதனை சொல்லவில்லை. குறைந்தது மூன்று லட்சம் தமிழர்கள் முட்கம்பி வேலிகளுக்குள் திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், சிங்களத் தேசியவாத ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழர்களை இம்முகாம்களில் இருந்து விடுவித்து, அவர்களுக்கான சம உரிமைகளைத் தரமறுத்தால் நிச்சயம் புலிகளின் ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அவர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். "இம்முகாம்கள் உண்மையாக ஹிட்லரின் முகாம்களை ஒத்த சித்திரவதை முகாம்கள். இம்மக்கள் இம்முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு 50 நாட்கள் கடந்த பின்னரும் இன்றுவரை சுயாதீன பத்திரிக்கையாளர்கள் இம்மக்களைப் பார்வையிடுவதை மகிந்த அரசு தடுத்தே வருகிறது. மக்கள் இம்முகாம்களில் நாள்தோறும் இறந்துவருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவையோ, மருத்துவ வசிதகளையோ இநத அரசு தொடர்ந்தும் மறுத்தே வருகிறது".
  8. மூலம் : சனல் 4 பிரத்தியேக செவ்வி : தமிழ்ப் புலிகளின் புதிய தலைவருடனான செவ்வி புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு , இறுதி யுத்தத்தின்மூலம் இனப்போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து இரு மாதங்களுக்குப் பின்னர் புலிகளியக்கத்தின் புதிய தலைவர் கே பி எனப்படும் குமரன் பத்க்மனாதன் இதுவரை காலமும் இல்லாதவகையில் வழங்கிய நேருக்கு நேர் செவ்வியின் விபரங்களை சனல் 4 வெளியிட்டிருக்கிறது இன்டர் போலின் அறிக்கைப்படி பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்காகவும், வாழ்க்கைக்கும், உடல்நலத்திற்கும் எதிரான நடவடிக்கைகளுக்கும் என்று 54 வயதுடைய கே பி மீது தேடப்படும் நபர் எனும் பிடிவிராந்தினைப் பிறப்பித்திருக்கிறது. சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்றும், செல்வராசா பத்மனதான் என்றும், குமரன் பத்மனாதன் என்றும் அல்லது பொதுவாக கே பி என்றும் அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சுமார் 25 வருடங்களாக, உலகைச் சுற்றி வலம்வந்த இந்த கே பி 23 வேறுபட்ட கடவுச் சீட்டுக்களை வைத்திருப்பதுடன் , ஆயுதக் கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவர். தமிழ் போராளிக் குழுவிற்கு தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கான வெடிபொருட்களை சர்வதேசச் சந்தையிலிருந்து கொள்வனவு செய்து அனுப்பிவைத்தவர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தபின்னர் 2009 ஜூலை மாதத்திலிருந்து புலிகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டவர். "புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டார்கள் என்கிற சிங்களப் பேரினவாதத்தின் பொய்ப்பரப்புரைகளையும் மீறி எமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவது எமது சரித்திரக் கடமையாகும், எமது உரிமைகளை வென்றெடுக்கும்வரை அயராது போராடுவோம்" என்று அறிக்கையினை வெளியிட்டவர். "உலகின் அனைத்துப் போராட்டங்களையும் போலவே, நாமும் எமது போராட்டத்தின் வழியினையும், திட்டங்களையும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து எமது விடுதலையினை வென்றெடுக்கத் தொடர்ந்து போராடுவோம்" என்றும் அவர் கூறுகிறார். சனல் 4 உடனான பிரத்தியேக செவ்வி வெளிவந்து ஓரிரு வாரங்களுக்குள் அவர் மலேசியாவில் ஆவணி 5 அன்று சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளின்கீழ் கைதாகிறார். பல நாடுகளுக்கூடாக இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்ட சனல் 4 இன் பத்திரிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினாலும், சர்வதேச பொலீஸ் சேவையினாலும் தொடர்ச்சியாகத் தேடப்பட்டு வந்த இந்த ரகசிய மனிதரை இலங்கைக்கு வெளியே ஒரு தென்னாசிய நாட்டில் நேருக்கு நேராக செவ்வி காணும் சந்தர்ப்பத்தினைப் பெற்றனர். இலங்கையின் பெரும்பான்மையினமான சிங்களவரின் கைகளில் அடக்குமுறைகளுக்கு உட்பட்ட சிறுபான்மைத் தமிழினம் இவ்வடக்குமுறைகளிலிருந்து தம்மை விடுவித்து சுதந்திரமாக வாழ்வதற்கு ஈழம் எனும் தாயகக் கனவினை நோக்கிப் போராடி வந்தனர். கடந்த மே மாதம் 2009 இல் புலிகள் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டனர். இறுதி யுத்த கணங்களில் புலிகள் இயக்கத்தின் ஸ்த்தாபகரும், தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரரன் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அவரது வழிகாட்டலின் கீழ் பல தமிழ் அரசியல்வாதிகளும், மிதவாதத் தமிழ்த் தலைவர்களும் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்று அறியப்படுகிறது. ஆகவே, பிரபாகரனினால் தனக்குப் பின்னர் இயக்கத்திற்குத் தலைமை தாங்க கே பி நியமிக்கப்படுகிறார். எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர் - கே பி இறுதின்யுத்தத்தின் இறுதி நாட்களில் தாம் ஆயுதங்களை மெளனிப்பதாகப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கின்றனர். செய்தியாளர் அலெக்ஸ் தொம்சனுக்கு கே பி தொலைபேசியூடாக அந்நாட்களில் வழங்கிய செவ்வியில், " நாம் இந்தப் போரை உடனடியாக நிறுத்த ஒத்துக்கொள்கிறோம், ஏனென்றால் எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர்" என்று கூறுகிறார். "நாம் எமது மக்களைக் கட்டாயப்படுத்தி எம்முடன் அழைத்துச் செல்லவில்லை. எம்முடன் சேர்ந்து பயணிக்கும் சிவிலியன்கள் அனைவருமே ஒன்றில் எமது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள். நாம் எவரையும் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கவில்லை. எம்மக்கள் இலங்கை ராணுவம் தமக்குப் பாதுகாப்பினைத் தரும் என்று சிறிதும் நம்பவில்லை. ஆகவேதான் அவர்கள் எம்முடன் இருக்க விரும்புகின்றனர்". "நாம் ஒருபோதுமே எம்மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தவில்லை. புலிகளுக்கும் ராணூவத்தினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் சிலவேளை சிலர் அகப்பட்டிருக்கலாம். எமது மக்களை நாமே கொல்லவேண்டிய தேவை என்ன?" என்று அவர் மேலும் கூறுகிறார். செவ்வி தொடரும்.........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.