Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  3. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1866
    Posts
  4. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33035
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/08/22 in all areas

  1. உண்மைதான்.. எனது தந்தை சில வருடங்களாக கேட்டுக்கொண்டிருந்த விடயங்களை நிறைவேற்ற, COVID கட்டுப்பாடுகள் எடுத்த உடனே பறந்து போய் வேலையை முடித்து ஒரு மாதம் நின்று விட்டு வந்துவிட்டேன்😊 இப்பொழுது நிலமை சரியாக இல்லாதநிலையை பார்க்கும் பொழுது நல்லகாலம் போய் வேலையை முடித்து கொடுத்தமையால் ஒரு மன அமைதி இருந்தாலும் சிலவற்றை யோசிக்கும் பொழுது கவலைப்படுவதும் உண்டு.. அங்கே உள்ளவர்களில் கல்வியை கற்று இரண்டு degree இருந்தாலும் அதற்கேற்ற வேலை இல்லை.. இன்னும் சிலர் O/L படிப்பையே நிறுத்துகிறார்கள்.. பலவிதமான கோலங்களில் அங்கே உள்ள சமுதாயம் வளர்ந்து வருகிறது..
  2. ஈராக் மீது படையெடுப்பதற்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சொன்ன Weapons of Mass Distraction கதைகள் நினைவிற்கு வருகிறது. தற்போது மேற்குலகினரே தங்கள் அரசுகளையும், தங்கள் தகவல்தொடர்புச் சாதனங்களையும் ந்ம்பாதபோது, மேற்கின் லங்காபுவத் கயிறுகளை விழுங்க தற்போதும் எங்களில் ஆட்களிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமானது. Empire of Lies என்று ரஸ்ய அதிபர் சொன்னது சரியான அளவீடுதான்.
  3. புரினுக்கு வெள்ளை தோல் கோத்தாவுக்கு கறுப்பு தோல்.
  4. மேலே ரஞ்சித் எழுதின கொலைகள் நடக்கவில்லை என்கிறீர்களா? இவ்வளவு எங்களுக்கு நடந்தும், படை எடுக்கும் ஒரு ராணுவம், அது எந்த ராணுவமா இருக்கட்டும், என்ன செய்யும் என்று எங்களுக்கே புரியாவிட்டால் வேறுயாருக்கு புரிய வைக்கலாம்? இலங்கை ராணுவம் போகும்பொழுது, அதன் பரப்புரைகள் சர்வதேசத்தில் எப்படி வேலை செய்ததென்று எமக்கு நன்றாகவே தெரியும், அது ஒரு மீட்பு போராக வெளியில் நம்பவைக்கப்பட்டது, எவ்வளவு கொலைகள் நடந்தேதென்று உள்ளே இருந்த நம்மவர்களுத்தான் தெரியும். புடின் போன்ற தனி மனித ஆளுமையில் இருக்கும் ராணுவம், மனிதாபினாமமாக நடக்கிறது என்று நீங்கள் நம்புவதே ஆச்சரியமாக இருக்கிறது. அதிகாரத்தை பிடித்து, நாட்டை சர்வாதிகார நாடா மாற்றி, தமது சொத்துக்களை பெருகியதால் பூட்டினுக்கும் கோத்தாவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?
  5. எங்களுக்கும் இப்பிடி நடந்துதான், வாசிக்கும்போதே ஒரு மாதிரியாக உள்ளது, இவ்வளவையும் தேடி, மொழிபெயர்த்து, தொகுத்து எழுதியுள்ளீர்கள்👏👏
  6. பலாலி இரண்டாவது கரும்புலி அணி இந்த தாக்குதலில் கரும்புலி கென்னடி அண்ணாவிற்கு இரு காலிலையும் காயமேற்பட்டு அவர் மயக்கமுற்ற நிலையில் சிங்களவரால் உயிரோடு பிடிபட்டார், மேஜர் கென்னடி. மயக்கமுற முன்னர், "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.. ஆ..." எனக் கூறினார். ஆனால் இவர் உயிரோடு பிடிபட்டது புலிகளுக்கு தெரியாது. பிடிபட்ட கென்னடி அண்ணாவிற்கு சிங்களவரின் வழமையான கொடூரமான சித்திரவதை எப்படியும் நடைபெற்றிருக்கும். கரும்புலி கையில் கிடைத்தால் விடுவானா? பின்னாளில், 2002இல், அப்போது ஒப்பந்த காலத்தில் கைதிகள் பரிமாற்றத்தின்போது இவர் சிங்களவரால் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டர். பின்னர் இவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது!
  7. உக்ரேனியப் பொதுமக்கள் மீதான கூட்டுப் படுகொலைகாளும் ஏனைய வன்முறைகளூம் மாசி மாதம் 27 ஆம் திகதி சேர்னிவ் பிராந்தியத்தின் ஸ்டேரி பைகீவ் கிராமத்தினுள் புகுந்த ரஸ்ஸியப்படையினர் அங்கு தென்பட்ட 6 ஆண்களை கூட்டாக இழுத்து வந்து தலையில் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இப்படுகொலைகளுக்கு சாட்சியாகத் திகழும் டெட்டியானா இப்படுகொலைகள் குறித்து மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் புகாரளிக்கையில், "எனது கிராமத்திற்கும் ஸ்டேரி பைகீவுக்கும் இடையில் இருந்த ஒற்றைத் தொடர்பான பாலத்தினத் தகர்த்த ரஸ்ஸிய ராணுவம் இவ்விரு கிராமங்கள் மீதும் மிகக் கடுமையான ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டவாறே அப்பகுதியினை ஆக்கிரமித்துக்கொண்டது. ரஸ்ஸிய ராணூவத்தின் கனரக வாகனத் தொடரணி அவ்வூருக்குள் நுழைவதை நான் கண்ணுற்றேன். உள்நுழைந்த சில நிமிடங்களில் இந்தப் படுகொலைகளை ரஸ்ஸிய ராணுவம் புரிந்தது" என்று கூறுகிறார். "கிராமத்தின் அநேகமான மக்கள் கடுமையான எறிகணை வீச்சிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள தமது நிலக்கீழ் பதுங்கு குழிகளுக்குள் தஞ்சம் அடைந்திருந்தனர். இதனையடுத்து ஒவ்வொரு வீடு வீடாகச் சென்ற ரஸ்ஸிய ராணுவத்தினர் வீடுகளுக்குள் இருந்த ஆண்களை வெளியே இழுத்து வந்தனர். அவர்களில் அறுவரை தலையில் சுட்டுக் கொன்றனர்" என்று அவர் மேலும் கூறினார். இந்த அறுவரில் இருவர் சகோதரர்கள். இன்னொருவருக்கு வெறும் 20 வயதே ஆகியிருந்தது. இந்த ஆண்களை இழுத்துச் செல்லும்போது, பின்னால் அழுது மன்றாடிக்கொண்டு வந்த தாய்மாரையும் சகோதரிகளையும் மிரட்டிய ரஸ்ஸியப் படையினர், "எம்மைப் பின் தொடர வேண்டாம், இவர்களை விசாரித்துவிட்டு உங்களிடமே திருப்பியனுப்புவோம்" என்று கூறியிருக்கின்றனர். ஆனால், கிராமத்தின் சிறிய மூலையொன்றிற்கு தமது பிள்ளைகள் இழுத்துச் செல்லப்படுவதையும் பின்னர் மறைவான இடமொன்றில் நிரலாகச் சுட்டுக் கொல்லப்பட்டதை வேதனையுடன் பலர் பார்த்ததாக டெட்டியானா மேலும் கூறுகிறார். தனது 20 வயது மகனைப் பறிகொடுத்த தாயார் கூறுகையில், "அவர்கள் எனது மகனையும் எனது மைத்துனரையும் எங்களிடமிருந்து இழுத்துச் சென்றார்கள். எம்மை மிரட்டி, அங்கேயே இருக்குமாறு அவர்கள் பணித்துவிட்டே அவர்களை இழுத்துச் சென்றார்கள். அவர்களை இழுத்துக்கொண்டு எங்கே சென்றார்கள் என்பதை நான் அறியேன். எனது மகனையும் மைத்துனரையும் போலவே இன்னும் சில ஆண்களை அவர்கள் இழுத்துச் செல்வதை பலர் பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறதென்பதை உணர்ந்துகொண்ட நான் அருகிலிருக்கும் ரஸ்ஸிய ராணுவத்தின் காவலரணுக்கு ஓடிச்சென்று எனது பிள்ளைகள் எங்கே என்று அவர்களிடம் வேண்டினேன். அதற்கு அங்கு நின்ற ரஸ்ஸிய ராணுவத்தினர். "கலங்க வேண்டாம், அவர்களை சும்மா விசாரித்து மிரட்டுவதற்காகவே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் , விரைவில் அனுப்பிவைப்பார்கள்" என்று ஏளனத்துடன் கூறியிருக்கிறார்கள். அந்தக் காவலரணிலிருந்து ஒரு 50 மீட்டர்கள் போயிருக்கமாட்டோம், எங்களின் பின்னால் தொடர்ச்சியான துப்பாக்கிச் சத்தம் கேட்கத் தொடங்கியது. சத்தம் வந்த திசைநோக்கி ஓடிச்செல்ல எத்தனித்த எம்மை ரஸ்ஸிய ராணுவம் தடுத்துவிட்டது. மறுநாள் காலை அவ்விடத்திற்குச் சென்றபோது, வயல் வெளியொன்றிற்கு அருகிலிருந்த பாழடைந்த கட்டிடம் ஒன்றில் எனது மகனும், ஏனைய ஐந்துபேரும் சடலங்களாகக் கிடந்ததை நாம் கண்டோம்" என்று வேதனையுடன் கூறுகிறார். "கட்டிடத்தினுள் மூவரும், அதற்கு வெளியே ஏனைய மூவருமாக அவர்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். அவர்களின் தலைப்பகுதியில் சுட்டே ரஸ்ஸிய ராணுவம் அவர்களைக் கொன்றிருக்கிறது. அவர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. எனது மகனின் சடலத்திலிருந்து அவரது தொலைபேசி, பணம், ஏனைய ஆவணங்கள் என்பவற்றை ரஸ்ஸிய ராணுவத்தினர் திருடியிருந்தார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
  8. நாங்கள் வாற வருசம் தொடக்கம் தான் ரஷ்ய காஸ்,எண்ணை,மண்ணெண்ணை ஒண்டும் வாங்கமாட்டம். அது வரைக்கும் வாங்குவம்.🤣 என்ன யோசைனையிலை உக்ரேன் சனாதிபதி ஐரோப்பிய நாடுகள் எல்லாம் உடனடியாய் ரஷ்யாவிட்ட இருந்து வாற எல்லாத்தையும் நிப்பாட்டுங்கோ எண்டு சொல்லுவார்? ரஷ்யாவிலை இருந்து வாற காஸ் நிண்டால் ஐரோப்பவிலை இருக்கிற பெரும்பாலான தொழிற்சாலைகள் உடனடியாக இழுத்து மூட வேண்டியதுதான். இப்ப உக்ரேனுக்கு போற ஆயுதங்கள் கூட ரஷ்ய எரிவாயுவின் உதவியினால் உருக்கி செய்யப்பட்டதே.இப்ப ஐரோப்பிய நாடுகளுக்கை தஞ்சம் புகுந்த உக்ரேன் மக்கள் கூட ரஷ்ய எரிவாயுவின் உதவியிலான வெப்பத்திலேயே நிம்மதியாக துயில் கொள்கின்றனர்.☹️
  9. சிரியாவுக்கு புரளி கிளப்புறதே வேலையா போய்ட்டு..✍️😆
  10. கோஷான் சே சொன்னதால் உங்களது பயண கட்டுரை கண்டேன் nice கொரோனா கட்டுபாடுகள் எப்போது எடுப்பார்கள் என்று பார்த்திருந்து இலங்கைக்கு பறந்திருக்கிறீர்கள்
  11. 1990களின் தொடக்கத்தில், இந்தியப்படை வெளியேற முன்னர், முதலாவது வரிப்புலியில் பெண் போராளி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.