Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87993
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46798
    Posts
  3. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    7596
    Posts
  4. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1836
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/04/23 in all areas

  1. இப்ப படத்தை எடுக்கிறாங்களா வரைகிறாங்களா என்றே தெரியாமல் இருக்கு?
  2. பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/
  3. தமிழ் தலைவர்கள் விட்ட மாபெரும் தவறு ஆயுத போராட்டம் தொடங்கிய நேரம் வெளிநாடுகளுக்கு சென்று தமிழீழத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். மாறாக இந்தியாவின் காலடியில் சரணாகதி அடைந்தார்கள். அந்த அவலம் இன்றுவரை தொடர்கிறது.
  4. பின்னடித்த தமிழ் தலைவர்கள் சிறிமாவோ அல்லது தமிழ் அரசியல்த் தலைவர்களோ தமிழ் இளைஞர்களின் வன்முறையின் பின்னாலிருந்த அரசியலினப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். இவர்கள் அனைவருமே இவை சாதாரண வன்முறைகள்தான் என்று புறந்தள்ளிவிட்டிருந்தனர். தனது பொலீஸார் இந்த வன்முறையினை மிக இலகுவாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்று சிறிமா நம்பியிருக்க, தமிழ் அரசியல்த் தலைவர்களோ தமது தளபதியான அமிர்தலிங்கம் இந்த வன்முறைகளை ஏவும் இளைஞர்களை இலகுவாக வழிக்குக் கொண்டுவந்துவிடுவார் என்றே நம்பினர். ஏனென்றால், ஒருமுறை அமிர்தலிங்கமே ஏனைய தமிழ் அரசியல்த் தலிவர்களிடம், "என்னால் அவர்களை இலகுவாகச் சமாளிக்க முடியும்" என்று கூறியிருந்தார். குடியரசு தினத்திற்கு 4 தினங்களுக்கு முன்னதாகவே காவல்த்துறை இளைஞர் தலைவர்களைக் கைதுசெய்ய ஆரம்பித்திருந்தது. தமிழ் மாணவர் அமைப்பினரின் ஸ்த்தாபக உறுப்பினரான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அன்று கைதுசெய்யப்பட்டார். ஆனி 9 ஆம் திகதி சிவாநந்தனும் சிவஜெயமும் கைதுசெய்யப்பட்டார்கள். மறுநாள் நமசிவாயம் ஆனந்தவிநாயகம் ஆனி 10 திகதியும், காசி ஆனந்தன் ஆனி 15 திகதியும் கைதுசெய்யப்பட்டனர். மேலும் மயில்வாகனம் ராஜசூரியர் 30 திகதியும் சின்னையா குவேந்திரராஜா ஆடி 9 அன்றும், அமரசிங்கம் ஆடி 12 ஆம் திகதியும் செல்லையா தனபாலசிங்கம் ஆகிய செட்டி, பொன்னுத்துரை சிவகுமாரன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டமை தமிழர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பரவலான ஆர்ப்பாட்டங்களும் இதனையடுத்து இடம்பெறத் தொடங்கின. இளைஞர்களின் மனோநிலையை சரியாகப் புரிந்துகொள்ள அமிர்தலிங்கம் தவறிவிட்டிருந்தார். இது 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணத்தை அவர் எடுத்தபோது தெளிவாகத் தெரிந்தது. ஐக்கிய தமிழர் முன்னணியினரை பாராளுமன்றத்தைப் புறக்கணிக்குமாறு இளைஞர்கள் கோரியிருந்தனர். அவர்களது வாதம் மிகவும் எளிமையானது. "புதிய அரசியலமைப்பினை முற்றாகப் புறக்கணித்து, அதற்கெதிராக ஆறு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து, யாப்பு பிரகடணப்படுத்தப்பட்ட நாளினை கரிநாளாக அறிவித்து, மக்களை அந்த யாப்பினை எரிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டே, அதே அரசிய யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களாக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வது எந்தவிதத்தில் நியாயம்?" என்று அவர்கள் தலைவர்களிடம் கேட்டார்கள். யாழ்ப்பாணத்தின் பழைய பூங்கா தெருவில் தமிழ் அரசியல்த் தலைவர்களின் இந்த இரட்டை முகத்தை அம்பலப்படுத்தும் வாசகம் ஒன்று தொங்கவிடப்பட்டது, அதில் "ஏமாற்றுவதே உங்களின் புதிய அரசியல் விளையாட்டு" என்று எழுதப்பட்டிருந்தது. இளைஞர்களின் எதிர்ப்பும், போராட்டமும் தமிழர் ஐக்கிய முன்னணியினர் பாராளுமன்றத்திற்குச் சென்று சத்தியப்பிரமாணம் செய்வதை தடுக்கவில்லை. ஆடி 4 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் தோன்றிய அவர்கள் பின்வருமாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். " இலங்கைக் குடியரசுக்கு எனது பூரண விசுவாசத்தையும், தோழமையினையும் காட்டுவேன் என்றும், என்னாலான அனைத்து வழிகளிலும் நேர்மையுடன் இலங்கைக் குடியரசுக்காக நம்பிக்கையுடன் எனக்கு தரப்பட்ட பணியை செவ்வணே செய்வேன் என்றும் அமிர்தலிங்கம் ஆகிய நான் அரசியல் அமைப்பின்படியும், இந்த நாட்டின் சட்டத்தின்படியும் சத்தியம் செய்கிறேன்" என்று உறுதிமொழி எடுத்தார்கள். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் புதிய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதை சர்வதேசத்திற்குக் காண்பித்த அரசாங்கம், தமிழர்கள் புதிய அரசியலமைப்பினை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பறைசாற்றியது. இது இளைஞர்களை கடும் விசனத்திற்குள்ளாக்கியது. தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்ததன் மூலம், இந்த அரசியல் யாப்பிற்கு சட்டரீதியான அந்தஸ்த்தினை இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிவிட்டனர் என்று சாடிய இளைஞர்கள், பாராளுமன்றத்தினைப் புறக்கணிக்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். 1972 ஆம் ஆண்டின் யாப்பு, சமாதான, ஜனநாயக வழிகளில் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இருந்த அனைத்து வழிகளையும் முற்றாக அடைத்து விட்டதனால், தமிழர்களுக்கு இன்றிருக்கும் ஒரே வழி தனிநாடுதான் என்று கூறினர். தனிநாட்டினை அடைவதற்கு இருக்கும் ஒரே மார்க்கம் ஆயுதவழிப் போராட்டமே என்று உறுதியாகக் கூறிய இளைஞர்கள், தமிழ் அரசியல்த் தலைவர்களை உடனடியாக பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி பாரிய விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பிக்குமாறு கோரினர். சிறிமாவின் செயற்பாடுகளும் இளைஞர்களின் கருத்தினை உறுதிப்படுத்தியிருந்தது. தந்தை செல்வாவினால் தனக்கு எழுதப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கை தொடர்பான கடிதத்திற்கு அவர் பதில் அனுப்பியிருக்கவில்லை. தந்தை செல்வா தனது முன்னைய கடிதம் குறித்து மீண்டும் அவரை வினவியிருந்தார். ஆனால், அவரது இரு கடிதங்களும் கிடைக்கப்பட்டது என்கிற பதில் மட்டுமே பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. தமிழர் ஐக்கிய முன்னணி கேட்டுக்கொண்ட ஆறு அம்சக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அரசியலமைப்பினை மாற்றும் எந்தப் பேச்சுமே இருக்கவில்லை. ஆகவே, தந்தை செல்வாவின் முதலாவது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல புரட்டாதி 30 இற்குள் சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதவிடத்து, தமிழரின் சுதந்திரத்தையும், அரசியல் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொள்ள தமிழ் தலைவர்கள் உடனடியாக வன்முறையற்ற போராட்டங்களை முடுக்கிவிடவேண்டும் என்று இளைஞர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், தமிழத் தலைவர்களிடம் அதற்கான துணிவு இருக்கவில்லை. இளைஞர்களோ தலைவர்கள் கூறியபடி செயற்படவேண்டும் என்பதில் விடாப்பிடியாக நின்றனர். புரட்டாதி 17 ஆம் திகதி, துரையாப்பா விளையாட்டரங்கில் நடந்துகொண்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் 17 வயதே நிரம்பிய பிரபாகரன் குண்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டார். இத்தாக்குதல் தமிழ் இளைஞர்களை காவல்த்துறை கைதுசெய்வதைக் கண்டித்தும், அதற்கு மேலதிகமாக அரசுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாகவுமே இதனை அவர் செய்திருந்தார். இந்த களியாட்ட நிகழ்வினை அவர் தேர்ந்தெடுத்ததன் காரணம், ராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் சேவையினைப் பாராட்டியே இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமையாகும். ஆனால், எவருக்குமே இந்தத் தாக்குதலில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கவில்லை. மார்கழி 20 ஆம் திகதி உடுவில் தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் வினோதனின் வீட்டின்மேல் குட்டிமணி - தங்கத்துரை அமைப்பினர் கைய்யெறிகுண்டுகளை வீசினர். இத்தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. யாழ்ப்பாணத்தில் இளைஞர்களத் தேடி பொலீஸார் நடத்திய கடுமையான கைது நடவடிக்கைகளையடுத்து வன்முறைகள் வெகுவாகக் குறையத் தொடங்கியிருந்தன. பெரும்பாலான ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் ஒன்றில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் அல்லது தப்பியோடி தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியுமிருந்தார்கள். சுமார் 2 வருடங்களும் 7 மாதங்களும் மிகவும் அமைதியாகவே கழிந்துகொண்டிருந்தபொழுது மிகவும் குறிப்பிடத் தக்க வன்முறையாக 1975 ஆம் ஆண்டு ஆடி 27 ஆம் திகதி முன்னாள் யாழ்நகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் கொலை நடந்தேறியது.
  5. இப்ப ஓவியர்கள் வரைந்த ஓவியங்களே 3d போஸில் ஒரிஜினல் மாதிரியே இருக்கு.......! 😂
  6. வன்முறையின் விதைகள் இலங்கையின் குடியரசு தினம் தமிழர்களைப் பொறுத்தவரை கரிநாளாகப் பார்க்கப்பட்டது. முதல் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை அறுத்தெறிந்த இளைஞர்கள் யாழ்க்குடாநாடு முழுவதும் மின்னிழப்பை உருவாக்கினார்கள். ஆகவே, சிங்கள அரசின் குடியரசு நிகழ்வுகள் யாழ்ப்பாணச் செயலகத்தினுள்ளும், பொலீஸ் மற்றும் இராணுவ, கடற்படை முகாம்களுக்குள்ளும் மட்டுமே நடைபெற்றன. குடியரசு தின நிகழ்வுகளிருந்து, சிங்கள அரசிடமிருந்து தமிழர்கள் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டிருந்தனர். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஆங்காங்கே வன்செயல்கள் தலைக்காட்ட ஆரம்பித்திருந்தன. பேரூந்துகள் எரிக்கப்பட்டதுடன், அரச கட்டிடங்கள் மீது கல்விச்சும் இடம்பெற்றது. கறுப்புக்கொடிகள் தமிழர் பிரதேசங்களில் வீடுகள், அரச கட்டிடங்கள் மற்றும் மரங்கள் என்று பரவலாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. காலைவேளையில் யாழ்நகரில் ரோந்துபுரிந்த காவல்த்துறை நகரில் கட்டப்பட்டிருந்த கறுப்புக் கொடிகளைக் கிழித்தெறிந்தது. 6 நாட்களுக்குப் பின், வைகாசி 28 ஆம் திகதி இலங்கை சம சமாஜக் கட்சியின் ஆதரவாளரான சிவசோதியின் வீட்டின்மேல் இளைஞர்கள் பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தாக்கினார்கள், ஆனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனி 1 ஆம் திகதி, சமசமாஜக் கட்சியின் யாழ்ப்பாண ஒருங்கிணைப்பாளர் ஏ. விஸ்வநாதன் வீட்டின்மீது எரிகுண்டுகள் வீசப்பட்டன. சிங்களவர்களுக்குச் சார்பாகவும், தமிழர்களை முற்றாகப் புறக்கணித்தும் அரசியல் யாப்பினை உருவாக்கிய சமசமாஜக் கட்சியின் உப தலைவர் கொல்வி ஆர் டி சில்வாவிற்கு தமது எதிர்ப்பைக் காட்டவே அவரது கட்சி ஆதரவாளர்கள்மீது இத்தாக்குதல் இளைஞர்களால் நடத்தப்பட்டது. இதே கொல்வின் சில காலங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கான சம உரிமை கேட்டுப் வாதிட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதன்பின்னர், இந்த இனவாத யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்த ஐந்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இளைஞர்களின் கவனம் திரும்பியது. 1972 இல் நான்கு சிறிய ஆயுத அமைப்புக்கள் தோற்றம்பெற்றிருந்தன. தங்கத்துரை - குட்டிமணி தலைமையிலான அமைப்பு தமது இலக்காக சி அருளம்பலத்தை தெரிவுசெய்தனர். அவரது குட்டையான உடல் அமைப்பிற்காக "சின்னன்" என்றழைக்கப்பட்ட அருளம்பலம் கொழும்பிலேயே வசித்து வந்ததால், குட்டிமணி - தங்கதுரை அமைப்பினரால் அவரை நெருங்க முடியவில்லை. ஆகவே, அருளம்பலத்தின் தீவிர ஆதரவாளரும் நல்லூர் கிராம சபைத் தலைவரும், தீவிர சுதந்திரக் கட்சி ஆதரவாளருமான வி. குமாரகுலசிங்கத்தின் மீது தாக்குவதென்று முடிவெடுத்தார்கள். இவர் இன்னொரு அரச ஆதரவு அமைச்சர் குமாரசூரியருக்கும் மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. குமாரசூரியர், குமாரகுலசிங்கம் ஊடாகவே அருளம்பலத்தை தமிழ்க் காங்கிரஸிலிருந்து விலகி அரசுடன் சேரும்படி ஊக்குவித்து வந்தார் என்று பரவலாக அறியப்பட்டிருந்தது. அரசுடன் அருளம்பலம் சேர்ந்த காலத்திலிருந்து தமிழ் அரசியல்த் தலைவர்களாலும், தமிழ் மக்களாலும் துரோகியென்று அழைக்கப்பட்டு வந்தார். அரசியலமைப்பு பிரகடணப்படுத்தப்பட்டு 13 ஆவது நாளான ஆனி 4 ஆம் திகதி கோப்பாய்ச் சந்திக்குச் சென்ற குட்டிமணி, செட்டி மற்றும் சிறி சபாரட்ணம் ஆகியோர் உலகநாதனிடம் சென்று தமக்குச் சவாரி ஒன்று தேவையாக இருப்பதாகக் கூறி, அவரை குமாரகுலசிங்கத்தின் வீட்டிற்குத் தம்மை அழைத்துச் செல்லுமாறு கோரினார்கள். கார் குமாரகுலசிங்கத்தின் வீட்டினை அடைந்ததும், தம்முடன் கொண்டுசென்ற கைத்துப்பாக்கியினால் குமாரகுலசிங்கத்தின்மீது சுட்டுவிட்டு மீண்டும் காரிற்குள் ஓடிவந்தனர். குமாரகுலசிங்கத்தின் காலில் குண்டடி பட்டிருந்தது, ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை. காரினை நீர்வேலி நோக்கி ஓட்டிச் சென்ற குட்டிமணி, ஆளரவம் இல்லாத பகுதியொன்றில் காரினை நிறுத்திவிட்டு உலகநாதனைச் சுட்டுக் கொன்றார்கள். அருகிலேயே உலகநாதனின் காரும் எரியூட்டப்பட்டது. குட்டிமணி குமாரகுலசிங்கத்தையே கொல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது சாரதி உலகநாதனையே அவர்களால் கொல்ல முடிந்தது. அதே நாள் மாலை, சுதந்திரக் கட்சி ஆதரவாளரான சுந்தரதாஸின் வீட்டின்மீதும் குண்டெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சிவகுமாரனினால் 1970 இல் சோமவீர சந்திரசிறி மீதும், 1971 இல் அல்பிரட் துரையப்பா மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பின்னர் குட்டிமணியினால் நடத்தப்பட்ட மூன்று குண்டெறி தாக்குதல்கள் மற்றும் உலகநாதனின் கொலை ஆகியன சமாதானத்தை விரும்பும், ஒழுக்கமான யாழ்சமூகத்தை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஆனால், இத்தாக்குதல்கள் இன்னும் இரு ஆயுத அமைப்புக்களை தாக்குதல்களினை மேற்கொள்ள உந்தியிருந்தது. அதில் ஒன்று பிரபாகரனுடையது மற்றையது தமிழ் மாணவர் ஒன்றியத்தினுடையது. தங்கத்துரை - குட்டிமணி அமைப்பினராலோ அல்லது சிவகுமாரனின் அமைப்பினராலோ தாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதென்பதில் உறுதியாகவிருந்த தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர் சத்தியசீலன் உடனடியாகச் செயற்பட்டு அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த இன்னொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான வட்டுக்கோட்டை தியாகராஜாவைக் கொல்வதற்கு திஸ்ஸவீரசிங்கத்தையும், ஜீவன் எனப்படும் ஜீவராஜாவையும் அனுப்பிவைத்தார். அப்போது பம்பலப்பிட்டியவில் தியாகராஜா வாழ்ந்துவந்தார். ஆனி மாதம் 7 ஆம் திகதி காலையில் அவரது வீட்டிற்குச் சென்ற தாக்குதல் அணியினர், அவரது வீட்டின் கதவைத் தட்ட, தியாகராஜவும் கதவைத் திறந்திருக்கிறார். யாழ்ப்பாணத்திலிருக்கும் பத்திரிக்கை ஒன்றிலிருந்து அவரைப் பேட்டியெடுக்கத் தாம் வந்திருப்பதாக திஸ்ஸவீரசிங்கமும் ஜீவனும் அவரிடம் தெரிவிக்க, "என்னை எந்தப் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று குமாரசூரியர் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்" என்று கூறிக்கொண்டே அவர்களை அமரச் சொன்னார் தியாகராஜா. திஸ்ஸவீரசிங்கம் அமர விரும்பவில்லை. அவர் தியாகாராஜின் அருகிலேயே நின்ருகொண்டிருந்தார். ஜீவன் கதவின் அருகில் சாய்ந்தபடி நின்றிருந்தார். தியாகராஜா காரைநகர் இந்துக் கல்லூரியின் அனுபவம் மிக்க அதிபர். தன்னிடம் வந்திருந்த இரு விருந்தாளிகளினதும் உடல்மொழி அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஜீவன் தனது காற்சட்டை வாரிற்குள் இருக்கமாகச் செருகப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை வெளியே உறுவி எடுத்தார், பதற்றத்தில் அவரது கைகள் நடுங்கத் தொடங்கிவிட்டன. முன்னர் துப்பாக்கியால் சுட்டுப் பழக்கமில்லாதவர், தான் கொண்டுவந்த துப்பாக்கிச் சுடுமா என்பதுகூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. குறிபார்ப்பதுகூட அவ்ருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஊரில் செய்யப்பட்ட அத்துப்பாக்கியில் அவர் அதிகம் பயிற்சிகூடப் பெற்றிருக்கவில்லை. "சுடடா" என்று ஜீவனைப் பார்த்து பொறுமையிழந்து கத்தினார் திஸ்ஸவீரசிங்கம். "திஸ்ஸா" என்று கத்திய ஜீவன் அவரை அப்பால் செல்லுமாறு கூறிவிட்டு கதவை நோக்கி ஓடினார் . சுதாரித்துக்கொண்ட தியாகராஜா, சடுதியாகக் குனிந்து, தரையிலிருந்த விரிப்பை வேகமா இழுத்தார். நிலவிரிப்பில் நின்றுகொண்டு சுட எத்தனித்த ஜீவன் நிலை தடுமாறி விழ, சன்னங்கள் சுவரில் பட்டுத் தெறிக்க தியாகராஜா உயிர் தப்பினார். திஸ்ஸவீரசிங்கமும் ஜீவனும் உடனேயே அவ்விடத்தை விட்டு மறைந்துவிட்டார்கள். அவர்களின் கொலைமுயற்சி தோல்வியடைந்திருந்தாலும்கூட, அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்துவந்த பல தமிழ் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் அது ஒரு மிகத் தெளிவான செய்தியைக் கொடுத்திருந்தது.
  7. ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟
  8. 👉 https://www.facebook.com/100004846276706/videos/477455917886679 👈 இதுக்குத் தான் சொல்றது, அடுத்தவன் வீட்டிலை, என்ன எரியுது எண்டு பார்க்காமல் நம்ம வீட்டிலை, என்ன கருகுது எண்டு பாருங்கள். 🤣
  9. தமது முடிவில் உறுதியான இளைஞர்கள் அமிர்தலிங்கம் காங்கேசன்துறையில் நிகழ்த்திய பேச்சு தமிழ் இளைஞர்களிடைய அன்றைய காலத்தில் சிங்கள அரசுமீது எழுந்துவந்த கடுமையான அதிருப்தியைப் பிரதிபலித்திருந்தது. தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினரின் பாதையினையும், வங்கதேசத்து அவாமி லீக்கின் பாதையினையும் தமிழர்களும் பின்தொடரவேண்டும் என்று இளைஞர்கள் கடுமையான அழுத்தம் கொடுத்து வந்திருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியினரின் கலகமும், வங்கதேச விடுதலையும் தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் மீதான நம்பிக்கையினையும், அதனையே தாமும் செய்யவேண்டும் என்கிற உற்சாகத்தினையும் கொடுத்திருந்தது. அரசியலமைப்பினை வரைந்தவர்கள் சிங்களவர்களின் நலன்களை மட்டும் முன்னிறுத்தி அதனை வரைந்ததையும், தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து செவிமடுக்கவே அவர்கள் விரும்பவில்லையென்பதனையும் தமிழ் இளைஞர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். புதிய அரசியலமைப்பு நகலானது இலங்கையின் ஒற்றையாட்சியை முன்னிறுத்தியதோடு, பெளத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் நாட்டின் ஏனைய மதங்கள் மொழிகளைக் காட்டிலும் அதீத முக்கியத்துவம் கொடுத்தே வரையப்பட்டிருந்ததை இளைஞர்கள் தெளிவாகப் புரிந்திருந்தார்கள். இவை மூன்றும் சட்டமாக்கப்பட்டு அமுல்ப்படுத்தப்படும்பொழுது தமிழர்கள் இலங்கையில் முக்கியத்துவமற்றை பத்தோடு பதின்றான இனமாக கணிக்கப்படுவார்கள் என்பதனையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். இது நடப்பதை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற உணர்வு இளைஞர்களிடையே உருவானது. வங்கதேசத்தில் அவாமி லீக் மக்களை ஒன்றுதிரட்டியதைப் போன்று தாமும் தமிழ் மக்களை ஒன்றுதிரட்ட முடியும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள். தமது இலக்கு நோக்கி துரிதமாகவும், உறுதியாகவும் அவர்கள் செயற்படத் தொடங்கினார்கள். தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும் என்றும், அரசியல்த் தலைமைகள் அவர்களுக்கான பாதையினை வகுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். அமிர்தலிங்கம் காங்கேசந்துறையில் பேசியது அன்றைய இளைஞர்களின் மனநிலையைத்தான் : தீவிரமாகப் போராடுவோம், தேவையேற்படின் இரத்தம் சிந்தவும் தயங்கமாட்டோம், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அன்றைய இளைஞர்களின் சுலோகமாகிப் போனது. இனவெறி ஊட்டப்பெற்று, தமிழர்களுக்கெதிராக இனவாதம் கக்கிக் கொண்டிருந்த சிங்கள ஊடகங்கள் இலங்கையின் நலன்களும், அரசியலும் எனப்படுவது சிங்களவரின் நலன்களும் அரசியலும்தான் என்று நிறுவுவதற்கு மும்முரமாக முயன்றுவந்த சூழ்நிலையிலேயே அமிரின் காங்கேசந்துறை பேச்சும் இடம்பெற்றிருந்தது. ஆகவே, அமிர்தலிங்கத்தை நாட்டுப்பற்றில்லாதவர் என்று அவை விழித்து எழுதிவந்தன. குறிப்பாக சண் எனும் பேர்போன இனவாதப் பத்திரிக்கை அமிரின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்தேயன்றி சமஷ்ட்டிக் கட்சியில் அரசியல் நிலைப்பாடு அல்ல என்று எழுதியது. ஆனாலும், அமிரின் பேச்சினை இந்தியா வங்கதேசத்து விடுதலைப்போரில் வங்காளிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பின்னணியில் வைத்து அணுகப்பட வேண்டிய ஒரு விடயம் என்று ஆசிரியர்த் தலையங்கமும் தீட்டியது சண். ஆனால், இங்கே சண் உட்பட இனவாதப் பத்திரிக்கைகளோ அல்லது சிறிமாவின் அரசோ கவனிக்கத் தவறிய ஒருவிடயம் என்னவென்றால், அமிர் அன்று பேசியது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினதும் அரசியல் அபிலாஷையும், அன்று அந்த இனம் அடைந்திருந்த விரக்தியையும் தான் என்பது. அமிரின் காங்கேசந்துறை பேசு நடந்த சில தினங்களுக்கு பின்னர் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுமாறு சிறிமாவின் அரசு யாழ்ப்பாணாப் பொலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி அந்த கூட்டத்தில் பங்கேற்ற பலரிடமிருந்து பொலீஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர். மேலும், அமிருக்கெதிராக கடுமையான விமர்சனத்தைக் கட்டவிழ்த்து விட்ட சிறிமாவோ அரசு அவரை நாட்டுக்கு எதிரானவர் என்றும், இரட்டை நாக்குக் கொண்டவர் என்றும், தெற்கில் சிங்களவரிடம் ஒரு கருத்தையும், வடக்கில் தமிழரிடம் ஒரு கருத்தையும் முன்வைக்கும் பொய்யர் என்றும் வசைபாடியது. அதேவேளை அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் மேலோட்டமனாவை, தீவிரமற்றவை என்று இளைஞர்களும் தம் பங்கிற்கு அவருக்கெதிரான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருந்தனர். அரசியலமைப்பு உருவாக்கச் சபையினரால் வரையயப்பட்ட நகலினை ஆராய்வதற்கென்று சமஷ்ட்டிக் கட்சி 1972 ஆம் ஆண்டு தை 30 ஆம் திகதி ஒரு மாநாட்டைக் கூட்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட இந்த மாநாட்டின் நோக்கத்திற்கெதிராக இளைஞர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமிழருக்கான நீதியை ஒருபோதுமே தரப்போவதில்லையென்பதனால், அவர்களின்பின்னால் பிச்சையெடுக்கப் போகாதீர்கள் என்று அவர்கள் சமஷ்ட்டிக் கட்சியினரைப் பார்த்துக் கூறினர். தமிழ் மக்கள் மீதான அடிமைச் சாசனமே இந்த புதிய அரசியலமைப்பு என்று விழித்த இளைஞர்கள் இந்த நகலை சமஷ்ட்டிக் கட்சியினரின் மாநாட்டில் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரினர். இளைஞர்களின் அழுத்தத்திற்குச் செவிசாய்த்து சமஷ்ட்டிக் கட்சியும் அந்த நகலை தாம் நிராகரிப்பதாக அறிவித்தது. மேலும், அந்த புதிய அரசியலமைப்பு தமிழர் மீதான அடிமைச் சாசனம் என்பதனால் அதனை முற்றாக தாம் நிராகரிப்பதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. உத்தேச அரசியல் யாப்பு நகலை நிராகரித்த அதேவேளை தனது மாநாட்டின் தீர்மானங்களாக 4 அம்சக் கோரிக்கையினையும் சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்தது, 1. சிங்கள மக்களுக்கான அதே அந்தஸ்த்து தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 2. இலங்கை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். 3. இலங்கையைத் தமது தாய்நாடாகக் கொண்ட அனைவருக்கும் இந்நாட்டின் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும். 4. தமிழர்கள் தமது பூர்வீக தாயகத்தில் தம்மைத்தானே ஆள்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். என்பவையே சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நான்கு அமசக் கோரிக்கைகள் ஆகும். சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இந்த நான்கு அம்சக் கோரிக்கையினை இளைஞர்கள் கடுமையாக விமர்சித்தனர். சிங்கள யாப்புருவாக்கிகளால் நிராகரிக்கப்பட்ட தமிழரின் கோரிக்கைகளையே மீண்டும் சமஷ்ட்டிக் கட்சி தனது நான்கு அம்சக் கோரிக்கையாக முன்வைத்திருக்கிறது என்று அவர்கள் எள்ளி நகையாடினர். " இந்த வயோதிப அப்புக்காத்துமாருக்கு தமது பழமைவாதப் பழக்கங்களை அவ்வளவு இலகுவில் விட்டுவிடமுடியாது போலிருக்கிறது" என்று அவர்கள் கூறினர். சமஷ்ட்டிக் கட்சியினரின் செயற்பாடுகள் நம்பிக்கையிழந்த இளைஞர்கள் தாமே நேரடியாக மக்களிடம் செல்வதென்று முடிவெடுத்தனர். ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் மக்கள் கூட்டங்களையும் பேரணிகளையும் அவர்கள் ஒழுங்கு செய்தார்கள். தமது உணர்வுகளை கிராமம் கிராமமாக அவர்கள் எடுத்துச் சென்றார்கள். வீதி நாடகங்களையும், பேரணிகளையும் நடத்திய இளைஞர்கள் சிங்களவர்கள் தமிழரை அடிமைகொள்ளப் போகிறார்கள், ஆகவே எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராகுமாறு மக்களை உணர்வேற்றினர். இளைஞர்களின் வழிக்கே வந்த தலைவர்கள் இளைஞர்களால் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட உணர்வு அலையினால் தலைவர்களும் ஆட்கொள்ளப்பட்டுப் போயினர். தனியான நாட்டிற்கான போராட்டத்திற்கு இரு வழிகளை அவர்கள் பின்பற்றத் தீர்மானித்தனர். கோவை மகேசன் (படத்தின் வலதுபக்கத்தில்) , செல்வநாயகம், அமிர்தலிங்கம் மற்றும் திருமதி அமிர்தலிங்கம் ஆகியோர் அண்ணாத்துரையின் இல்லத்தில். மற்றையவர்கள் தி. மு. க வின் மாணவர் தலைவர் ஜனார்த்தனம், மலையகத் தமிழ்த் தலைவர் மாவைத்தம்பி ஆகியோர். முதலாவதாக இந்த போராட்டத்திற்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவினைப் பெற்றுக்கொள்வதென்பது. தமிழகத் தலைவர்களின் ஆதரவினை ஒருங்கிணைக்க தந்தை செல்வாவும், அமிர்தலிங்கமும் 1972 ஆம் ஆண்டு, மாசி மாதம் 20 ஆம் திகதி தமிழ்நாட்டிற்குச் சென்றனர். அவர்கள் தமிழக முதல்வராக இருந்த முத்துவேல் கருனாநிதி, கல்வியமைச்சர் வி. ஆர். நெடுஞ்செழியன், முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ. வி. ராமசாமி நாயக்கர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கே. காமராஜ், தமிழர் கழகம் தலைவர் எம். பி. சிவஞானம் மற்றும் முஸ்லீம் லீக்கின் தலைவர் காயித்தே மில்லத் ஆகியோரைச் சந்தித்தனர். தமிழகத்தில் அரசியல்த் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட தந்தை செல்வா, இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை அடிமைகளாக்க முயற்சிப்பதால், தமிழர்கள் தனிநாட்டினைக் கேட்பதைத்தவிர வேறு வழியில்லை என்று கூறினார். தமிழரின் தனிநாட்டுப் போராட்டம் அகிம்சை முறையிலேயே நடத்தப்படும் என்றும் அவர் அங்கு கூறினார். செல்வாவும் காமராஜரும் 1961 ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகப் போராட்டம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் குறித்து பரஸ்பரம் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால், தந்தை பெரியார் மட்டுமே தந்தை செல்வாவின் வன்முறையற்ற விடுதலைப் போராட்டம் குறித்து சந்தேகத்தினை எழுப்பினார். "தர்மத்திற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு அதிகாரத்துடன் அகிம்சை வழியில் போராடி உங்களுக்கான நீதியினை வென்றுவிட உங்களால் முடியுமா?" என்று அவர் தந்தை செல்வாவைப் பார்த்துக் கேட்டார். பெரியாரின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல்த் தடுமாறிய செல்வா ஒருவாறு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, "ஈற்றில் தர்மமே வெல்லும்" என்று கூறி முடித்தார். செல்வா தலைமையிலான தமிழ்த் தலைவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தமிழகத் தலைவர்கள் , தமிழரின் தனிநாட்டிற்கான அகிம்சை வழிப்போராட்டத்திற்கான தார்மீக ஆதரவை நல்குவதாக ஒப்புக்கொண்டதோடு, இதுகுறித்துப் பிரதமர் இந்திரா கந்தியுடனும் பேசப்போவதாகவும் தெரிவித்தனர் சென்னை மேயர் காமாட்சி ஜெயராமனினால் தமிழ்த் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் வரவேற்பில் பேசிய அவர், தமிழக மக்கள் இலங்கைத் தமிழ்மக்களின் போராட்டத்தில் உற்றதுணையாக இருப்பார்கள் என்று கூறினார். அவர்களிடம் பேசிய தந்தை செல்வா தமிழர்களின் போராட்டம் வன்முறையற்ற அகிம்சை ரீதியிலேயே நடைபெறும் என்றும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் தார்மீக ஆதரவே தாம் வேண்டி நிற்பதாகவும் அவர் மீண்டும் கூறினார். சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், வைகாசி 14 அன்று தந்தை செல்வா மக்களை இன்னொரு போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தத் தொடங்கினார். தமிழ் அரசியல்த் தலைவர்களையும், முக்கிய தமிழ் தலைவர்களையும் திருகோணமலை நகர மண்டபத்தில் கூடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் மாநாடுக் கட்சியினர் மற்றும் தமிழ் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியட் கட்சி சாரா செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டைமான் பின்னர் பேசும்போது, இக்கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டதன் நோக்கம் மொத்த தமிழ்ச் சமூகத்தினதும் ஒருமித்த அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஒற்றை அரசியல் அமைப்பான தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஸ்த்தாபிக்கவே என்று கூறினார். இலங்கைத் தமிழரின் போராட்டங்களிலிருந்து அதுவரைக்கும் தனது கட்சியான தொழிலாளர் காங்கிரஸை விலத்தியே வைத்திருந்த தொண்டைமான் புதிய அரசியலமைப்பினால், தமிழர்கள் தமது பேதமைகளைக் கைவிட்டு புதிய முடிவுகளை எடுக்கும் தேவை ஏற்படுள்ளதாகக் கூறினார். தந்தை செல்வா பேசும் போது பக்கச் சார்பாக வரையப்பட்டிருக்கும் இந்த அரசியல் அமைப்பிற்கு எதிராக தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கூறினார். இக்கூட்டத்தின் முடிவில் தமிழர் ஐக்கிய முன்னணி பின்வரும் முடிவுகளி எடுத்தது, 1. புதிய அரசியலமைப்பை முற்றாக நிராகரிப்பது. 2. பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ் அமர்வை புறக்கணிப்பது. 3. புதிய அரசியலமைப்பு சட்டமாக்கப்படும் வைகாசி 22 ஆம் திகதியை துக்கதினமாக அனுஷ்ட்டிப்பது. 4. 1972 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வரையான மூன்று மாத காலப்பகுதிக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய தாம் முன்வைக்கும் 6 அம்சக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அவற்றினைப் பூர்த்தி செய்வது. அந்த 6 அம்சக் கோரிக்கைகளாவன, 1. அரசியலமைப்பில் சிங்கள மொழிக்குக் கொடுக்கப்படும் அதே அந்தஸ்த்து தமிழ் மொழிக்கும் வழங்கப்பட வேண்டும். 2. இந்த நாட்டினை தமது தாய்நாடாகக் கொண்ட அனைத்து தமிழ்பேசும் மக்களுக்கும் முழுமையான பிரஜாவுரிமை வழங்குவதாக இந்த அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனினதும் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படக் கூடாது. 3. மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருப்பதோடு, அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும். 4. மத, இன, மொழி வேறுபாட்டிற்கு அப்பால் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் சமமாக வழங்கப்பட வேண்டும். 5. சாதி வேறுபாட்டினையும், தீண்டாமையினையும் முற்றாக இல்லாதொழிக்கும் ஏற்பாடுகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும். 6. அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே ஜனநாயக சோசலிச சமூகத்தில் மக்களின் பங்களிப்புடன் ஜனநாயகத்தின் பலத்தினை நிலைநாட்டவேண்டுமே அன்றி அரச பலத்தினால் அல்ல என்பது யாப்பில் கூறப்பட வேண்டும். இந்த ஆறு அம்சக் கோரிக்கையினை இணைத்து எழுதப்பட்ட கடிதத்தில் இந்த ஆறு கோரிக்கைகளும் அரசால் குறிப்பிட்ட காலக்கெடுவான 1972, புரட்டாதி 30 இற்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழர் ஐக்கிய முன்னணி தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொள்ள வன்முறையற்ற வழியில் போராட்டங்களை ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. http://www.sundaytimes.lk/180520/uploads/Untitled-112.jpg சிங்கள இனவாதிகளால் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு வைகாசி 22 ஆம் திகத் உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்டது. 20 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் இந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்று, புதிய அரசியமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த அந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வருமாறு, 1. சி. அருளம்பலம் - நல்லூர் 2. ஏ. தியாகராஜா - வட்டுக்கோட்டை (தமிழ்க் காங்கிரஸ்) 3. சி. எக்ஸ். மார்ட்டின் - யாழ்ப்பாணம் (சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்) 4. எம். சி. சுப்ரமணியம் - நியமிக்கப்பட்டவர் 5. சி. குமாரசூரியர் - தபால் & தொலைத்தொடர்பு அமைச்சர் - நியமிக்கப்பட்டவர் புதிய அரசியலமைப்பு உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்ட இந்த நாளினை வடக்குக் கிழக்குத் தமிழர்கள் துக்க நாளாக கடைப்பிடித்ததோடு, அதிகாலை முதல் மாலைவரையான பூரண ஹர்த்தாலாகவும் அனுட்டித்தனர். வீதிக்கு இறங்கிய இளைஞர்கள் தமது எதிர்ப்பினைக் கறுப்புக் கொடிகளை அசைத்தும், பறக்கவிட்டும் காட்டினர். அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டதுடன், போக்குவரத்தும் பூரண ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு முதல் நாளான 21 ஆம் திகதி பாடசாலைகளை மாணவர்கள் புறக்கணித்ததோடு, 22 ஆம் திகது பொதுவிடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் ஹர்த்தாலை பூரணமாகக் கடைப்பிடித்ததோடு, அரச கட்டளையான கூட்டங்கள், பேரணிகளுக்கான தடையினையும் மீறி வீதிகளிலும், சந்திகளிலும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், இலங்கையின் தேசியக் கொடிகளும், புதிய அரசியலமைப்பின் நகல்களும் மக்களால் பரவலாக எரியூட்டப்பட்டன. மக்கள் முன் பேசிய இளைஞர்கள் தமிழர்களை சிங்கள அரசு ஒரு கற்சுவரை நோக்கி நெருக்கித் தள்ளியிருப்பதாகவும், தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான உறவுகள் முற்றான முறிவு நிலையினை அடைந்துவிட்டதாகவும், இதிலிருந்து தமிழர்கள் மீண்டுவருவதற்கான ஒரே வழி வங்கதேச சுதந்திரப் போராட்டத்தைப் பின்பற்றிப் போராடுவதுதான் என்றும் கூறினர். அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து பேரணிகளையும், கூட்டங்களையும் அரசு தடைசெய்திருந்த நிலையில், அதனை மீற விரும்பாத தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் வண்ணார்பண்ணை நாவலர் ஆச்சிரமத்தினுள் கூட்டமொன்றினை நடத்தினர். அங்கு பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "நாங்கள் ஒரு நாட்டினுள்ளேயே இருக்க விரும்பினோம். கண்ணியமும், மரியாதையும் கொண்ட பங்களிகளாக வாழ விரும்பினோம். ஆனால், இவை எமக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. எம்மை தமது அடிமைகளாக வாழவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். சுயகெளரவமுள்ள எந்த மனிதனும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டான். நாம் சுய கெளரவத்துடன் வாழ விரும்புகிறோம். அது தனியான நாட்டினூடாகவே சாத்தியமென்றால், நாம் அதை நோக்கிப் பயணிக்கத் தயங்கப்போவதில்லை. நான் எனது மக்களுக்கும் இந்த உலகிற்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தனிநாட்டிற்கான பாதையினைத் தெரிவுசெய்யும்படி நாம் சிங்கள ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறோம் என்பதைத்தான்".
  10. வணக்கம் வாத்தியார்........! ஆண் : வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு பாத்தாலே தண்ணி வரும் இஷ் அப்பா பாக்குறவன் நாக்குலதான் பாலாட்டும் அய்யோ தேனாட்டம் அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான் ஆண் : { நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு } (2) ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய அட ஊத்திக்கிட்டேன் மில்லிய நான் விட்டெறிஞ்சேன் சல்லிய ஊத்திக்கிட்டேன் மில்லிய குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை ஆண் : சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும் ம்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும் சங்கீதம் தேனா வந்தா கூட இங்கிதம் தானா வரும் ஆண் : அட தவக்களை சத்தம் சகிக்கலை குட்டை குளத்துலே கத்தி பழகலே ஆண் : நம்மகிட்ட கத்துக்கோ வாத்தியாரா ஒத்துக்கோ எத்தனையோ வித்தையை வச்சிருக்கேன் பாத்துக்கோ ஆண் : உச்சந்தலை கீழுருக்க உள்ளங்கால் மேலிருக்க நிக்கட்டுமா நடக்கட்டுமா --- நம்ம சிங்காரி சரக்கு---
  11. விமான நிறுவனத்தின் சலுகையை... அனுபவித்தவர்கள் யார். 🤣
  12. உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பதற்கு, தமிழர்களில் ஒரு பிரதான பிரிவினரை இன்னொரு சட்டத்தினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தன்பக்கம் இழுத்துக்கொண்டார். அதுதான் இந்திய - பாக்கிஸ்த்தான் பிரஜைகளுக்கான பிரஜாவுரிமைச் சட்டம். இலங்கைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொள்வதற்கான தகமைகள் குறித்து இச்சட்டம் விவரித்திருந்தது. ஜி ஜி பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த ஜி ஜி பொன்னம்பலம் அவர்களுக்கு தொழிற்துரை மற்றும் மீன்வள அமைச்சர் பதவி வழங்கப்பட்டதுடன் அவரும் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார். அவருடன் சேர்ந்து இன்னும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணைந்துகொண்டனர். அரசுடன் இணைந்து புதிதாகக் கொண்டுவரப்பட்ட இந்திய - பாக்கிஸ்த்தானிய பிரஜைகளும், இலங்கையில் வதிபவர்களுக்குமான இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் வக்களித்ததோடு, இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின்மூலம் தாம் இழந்த பிரஜாவுரிமையினை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இவர்கள் வாதாடினர். ஆனால், புதிய சட்டம் மிகக் கடுமையான நிபந்தனைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. திருமணம் முடித்த ஒரு விண்ணப்பதாரி 1939 தை 1 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும், திருமணம் ஆகாத விண்ணப்பதாரியொருவர் 1936, தை 1 ஆம் திகதியிலிருந்து 10 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறியது. அதுமட்டுமல்லாமல், இலங்கையில் வசிப்பதற்கு இவர்கள் தேவையானளவு பணத்தையோ வளங்களையோ கொண்டிருத்தல் அவசியம் என்றும் இது கூறியது. தொடர்ச்சியாக இலங்கையில் வதிதல் எனும் சொற்பதத்தின் மூலம், தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நாட்களுக்கு பயணம் செய்த இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின் மூலம் பிரஜாவுரிமையினை பெறமுடியாதவர்களாக ஆக்கப்பட்டனர். இச்சட்டத்தினையடுத்து மொத்த இந்தியத் தமிழச் சமூகமுமே, கிட்டத்தட்ட 975,000 தமிழர்கள் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இவர்கள் அனைவரையும் இந்தியா மீள அழைத்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கை பிடிவாதம் பிடித்தது. ஆனால், இந்தியா இந்த வேண்டுகோளினை தொடர்ந்தும் உதாசீனம் செய்துகொண்டு வந்தது. பின்னர் இலங்கையின் பிரதமராக வந்த சிறிமா இந்தியாவின் பிரதமர்களான சாஸ்த்திரியுடன் 1964 இலும், இந்திரா காந்தியுடன் 1974 இலும் இரு வேறு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டதன் மூலம் 525,000 இந்தியத் தமிழர்களை இந்தியா மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார். மீதமாக இருந்தவர்களில் சுமார் 300,000 இந்தியத் தமிழர்களுக்கு வேண்டாவெறுப்பாக இலங்கை பிரஜாவுரிமையினை வழங்கியது. இரண்டாவது ஒப்பந்தத்தின்படி மீதமாகவிருந்த 150,000 தமிழர்களை சரிசமமாக இலங்கையும் இந்தியாவும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் முடிவிற்கு நாடுகளும் இணங்கிக்கொண்டன. இந்தியா சுமார் 600,000 இந்தியத் தமிழர்கள் மீளவும் இந்தியாவுக்குத் திரும்ப விண்ணப்பிக்க முடியும் என்று அழைத்தபோதும்கூட, 504,000 இந்தியத் தமிழர்கள் மட்டுமே இந்த அழைப்பினை ஏற்று மீள இந்தியா திரும்ப விண்ணப்பித்தனர். ஆனால், 1983 ஆண்டு யூலைக் கலவரத்தினால் இந்தியா திரும்பும் நோக்கத்துடன் இருந்த 84,000 தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கையிலேயே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையில் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ள முடியாமலும், இந்தியாவுக்கு மீளத் திரும்ப முடியாமலும் இலங்கையில் வசித்துவந்த இந்தியத் தமிழர்களுக்கான பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொடுப்பதில் தொண்டைமான் வெற்றிகண்டார். இது ஒரு மிக முக்கியமான நடவடிக்கை என்றால் அது மிகையில்லை. இதன்மூலம் பிரஜாவுரிமைப் பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்பட்டதோடு, இந்தியத் தமிழர்களில் கிட்டத்தட்ட பாதியளவுக்கும் சற்று அதிமானவர்கள் இலங்கையின் பிரஜைகளாகும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் இன்று முக்கிய சக்தியாக மலையகத்தில் உருவெடுத்திருப்பதோடு தமது அடையாளத்தினைத் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான அரசியல்க் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் நிலைக்கும் உயரும் வாய்ப்பிருக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.