Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46798
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87993
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34974
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7055
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/05/23 in all areas

  1. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'ஓர் மேடைப் பாடல் நிகழ்ச்சியின் போது தேசியப்பாடகர் எஸ். ஜி. சாந்தனும் தமிழீழத்தின் போராளிகள் இசைக்குழுவினரும்' தனது காந்தக்குரலால் தமிழீழ மக்களைக் கவர்ந்தவர் தமிழீழத் தேசியப் பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ். ஜி. சாந்தன் அவர்கள் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் போர்க்காலத்தில் 150இற்கும் மேற்பட்ட 'தமிழீழப் பாடல்'களைப் பாடியுள்ளார். நானறிந்த வரை விடுதலைப் போராட்டம் தொடர்பாக அதிகமான விடுதலைப் பாடல்களைப் பாடியவர் இவரே ஆவார். இவ்வாவணத்தினுள் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் 'எழுச்சிப் பாடல்'களை மூன்று பிரிவுகளாகத் தொகுத்து உரிய இறுவட்டுகளுடன் பதிவிட்டுள்ளேன். சில பாடல்கள் விடுபட்டிருக்கக் கூடும். விடுபட்டவற்றை அறிந்தவர்கள் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தனித்துப் பாடிய எழுச்சிப் பாடல்கள் வானம் பூமியானது - இவருடைய முதலாவது பாடல்... 1989 இல் வெளிவந்தது அடங்கிக் கிடந்த தமிழன் (இறுவெட்டு: வீரத்தின் விளைநிலம்) அடி அடி அடியென (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 03) ஆதியாய் அநாதியாய் அலையை அலையைப் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 02) அலைகள் குமுறி (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 03) ஆழக் கடலெங்கும் (இறுவெட்டு: நெய்தல்) ஆனையிறவின் மேனி தடவி (இறுவெட்டு: அலையின் வரிகள்) இங்கு வந்து பிறந்தபின்பே (இறுவெட்டு: கரும்புலிகள்) இந்த மண் எங்களின் - இது இவருடைய இரண்டாவது எழுச்சிப் பாடலும் தமிழீழத்திலிருந்து இசையமைக்கப்பட்டு வெளியான முதலாவது எழுச்சிப் பாடலுமாகும். இப்பாடலைத் தாங்கியபடி வெளியான இறுவெட்டே முதலாவது தமிழீழ இறுவெட்டாகும்... 1990 இல் வெளிவந்தது (இறுவெட்டு: இந்த மண் எங்களின் சொந்த மண்) இரவு பூத்து (அனுராதபுரம் தேடி/ எல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்) இனிவரும் இனிவரும் (இறுவெட்டு: ஆனையிறவு) ஈழத்திருமகள் (இறுவெட்டு: தாயகத்தாய்) ஊர் பெயரைச் சொல்லவா (இறுவெட்டு: தமிழீழ மொட்டுக்கள்) எங்களின் வாசலில் (இறுவெட்டு: வரும் பகை திரும்பும்) எத்தனை பேர்களை (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்) எந்தையர் ஆண்ட (இறுவெட்டு: புதியதோர் புறம்) எம்மண்ணில் எதிரிகள் (இறுவெட்டு: புதியதோர் புறம்) ஒரு கூட்டுக் கிளியாக (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 02) உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் (இறுவெட்டு: கரும்புலிகள் 2) கடலதை நாங்கள் (இறுவெட்டு: நெய்தல்) கடலலை எழுந்து (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 10) கடலின் மடியில் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 07) கடலோரப் பூவாக ("உப்பில் உறைந்த உதிரங்கள்" திரைப்படத்திலிருந்து) கண்ணுக்குள்ளே வைத்து - இதுவே இவர் பாடிய கடைசி எழுச்சிப் பாடலாகும் கரும்புலிகள் என நாங்கள் கரும்புலி எழுதிடும் கடிதம் (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04) களங்காண விரைகின்ற கல்லறை மேனியர் கல்லறைகள் விடை திறக்கும் (இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள்) காற்றடிக்கும் திசைகள் (இறுவெட்டு: அலைபாடும் பரணி) கிழக்கு வானம் (இறுவெட்டு: பூநகரி நாயகன்) குயிலே பாடு (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்) கோபுர தீபம் நீங்கள் கோணமலை எங்களது (இறுவெட்டு: இசைபாடும் திரிகோணம்) சண்டைகளின் நாயகனே (இறுவெட்டு: சமர்க்கள நாயகன்) சிங்களம் எங்களை கொன்று (இறுவெட்டு: புதியதோர் புறம்) சிட்டு சிட்டு சிட்டு (இறுவெட்டு: வீரத்தின் விளைநிலம்) சீலன் புயலின் பாலன் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்) சுற்றி வரக் கடலே (இறுவெட்டு: பசுந்தேசம்) தமிழீழத்தின் எல்லையை தாயவளே உன்னை (இறுவெட்டு: தாயகத்தாய்) தூக்கம் ஏனடா (இறுவெட்டு: புதியதோர் புறம்) நித்திய புன்னகை (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு) நித்திய வாழ்வினில் (இறுவெட்டு: தேசத்தின் குரல்) நிலவே கண்ணுறங்க (இறுவெட்டு: வாகையின் வேர்கள்) நிலாக்கால நேரமிங்கே (இறுவெட்டு: ஊர் ஓசை) நீலக்கடலே பாடுமலையே (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்) நெஞ்சிலே இருந்த கோபம் (அனுராதபுரம் தேடி/ எல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்) பண்பாட்டுக்கு இசைவாக பாட்டுக்குள் கரும்புலி (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01) பாயும் புலி அணி (இறுவெட்டு: விடியும் திசையில்) பிரபாகரன் எங்கள் தலைமை புதிய சரிதம் எழுதிட பெய்யுதே மழை (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு) பெருகும் கால நதியில் (இறுவெட்டு: போரிடும் வல்லமை சேர்ப்போம்) மாரி கால மேகம் தூவி (இறுவெட்டு: விளக்கேற்றும் நேரம்) மீண்டும் எனக்கொரு (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 09) விண்வரும் மேகங்கள் (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்) வேங்கை மாவீரரெல்லாம் மின்னல் சூழும் (லெப். கேணல் மதனாவின் நினைவாகப் பாடப்பட்ட இப்பாடலானது, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 67வது இதழில் இடம்பெற்றுள்ளது.) பின்னணிப் பாடகர்களுடன் பாடிய எழுச்சிப் பாடல்கள் அன்னை தேசமே உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: மண்ணுறங்கும் மாவீரம்) அழுது அழுது உடன் பின்னணிப் பாடகர்களான மணிமொழி & பாடகி (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு) இருளின் திசைகள் புலரும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான பிறின்சி, மணிமொழி & தவமலர் (இறுவெட்டு: வெஞ்சமரின் வரிகள்) ஊருக்குப் போவோம் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: அலையின் வரிகள்) அஞ்சு வயதிலே அற்புதங்கள் (22:44) உடன் திருமலை சந்திரன் மற்றும் மணிமொழி மற்றும் பின்னணிப் பாடகர்களான பிறின்சி மற்றும் தவமலர் (1998ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழுக்கான வாழ்த்துப் பாடல்) எதிரிகளின் பாசறையை மற்றும் அவரது குழுவினர் (இறுவெட்டு: இந்த மண் எங்களின் சொந்த மண்) கடலின் அலையில் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: புதிய காற்று) கரிகாலன் வாழ்ந்திடும் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04) தாண்டிக்குளம் தாண்டி உடன் ஜெயா சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: விழித்திருப்போம்) பகை வாழ்ந்த குகை உடன் திருமலைச் சந்திரன் மற்றும் பின்னணிப் பாடகர்களான ???(இறுவெட்டு: முல்லைப் போர்) படைகொண்டு வந்த உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: தீக்குளித்த நேரம்) வா பகையே உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 13) வா வா என்றே உடன் வசீகரன் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? ("கடலோரக்காற்று" திரைப்படத்திலிருந்து) வீரக் கடற்புலி உடன் பின்னணிப் பாடகரான மணிமொழி, பிறின்சி, மற்றும் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04) நீலக்கடலே அலை மோதும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08) புலிகளின் தாகம் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? பூங்கொடியாய் இருந்தாய் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: சூரியப் புதல்விகள்) வலையை ஏத்தடா அந்தோணி உடன் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 13) விடியும் திசையில் பயணம் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களாக மேஜர் சிட்டு மற்றும் தியாகராஜா ஆகியோர் விடியும் திசையில் ஒளிபரவிட உடன் நிரோஜன், திருமலை சந்திரன் மற்றும் பின்னணிப் பாடகரான மணிமொழி ("புயல் புகுந்த பூக்கள்" திரைப்படத்திலிருந்து) வில்லுப்பாட்டு உடன் ??? மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: அனுராதபுரத்து அதிரடி) கூட்டாகப் பாடிய எழுச்சிப் பாடல்கள் பெரும்பாலான பாடல்களில் தமிழீழப் பாடகர் சாந்தன் அவர்களுடன் கூடப் பாடியவர்கள் யாரென என்னால் பிரித்தறிய இயலாமலுள்ளதால் அவர்களைக் வினாக்குறியால் குறித்துள்ளேன். அறிந்தவர்கள் தெரிவித்துதவவும். அடம்பன் கொடியும் மற்றும்???… (இறுவெட்டு: வானம் தொடும் தூரம் இன்னுமின்னும் கரும்புலி வெடிக்கும் உடன் ?? (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 03) எம் வேரினை அவனே உடன் மேரி (இறுவெட்டு: வரலாறு தந்த வல்லமை) உலகத் தமிழர் உடன் ஜெயா சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: ஊர் போகும் மேகங்கள்) கதியால் அரக்கும் மற்றும்???… (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்) கருவேங்கை புயலெனப் புகுந்தது உடன் ?? (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04) காலம் உன்னை களம் நோக்கி மற்றும்???… (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்) காலம் எழுதிய புதிய உடன் ?? கைகளில் விழுந்தது கிளிநொச்சி உடன் ஜெயா. சுகுமார் சுக்குநூறானது சிக்குறு உடன் ஜெயா சுகுமார் திருமலையில் பகை உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01) தூரம் அதிகமில்லை மற்றும் அவரது குழுவினர் (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்) புதிய காற்று ஈழ மண்ணில் எழுந்தது (47:04 mins) உடன் திருமலைச் சந்திரன் மற்றும் மணிமொழி (கரும்புலி மேஜர் நிலவன் எழுதிய இப்பாடலானது 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழில் இடம்பெற்றது) மனமே மனமே உடன் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04) விடுதலை மகுடம் சூடிய உடன் நிரோஜன் மற்றும் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08) விண்ணையாளும் சூரியனை உடன் கப்டன் இசையரசன் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்) வீரப்படை வெகு வீரப்படை உடன் ?? (இறுவெட்டு: விடுதலை நெருப்புக்கள்) ஆனையிறவுக்கு சேலைகள்‌ உடன் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: ஆனையிறவு) இடியா மழையா உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்) ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: ஆனையிறவு) ஈழமண் எரிகின்ற போதிலே உடன் ஜெயா. சுகுமார், மணிமொழி, தவமலர், நிரோஜன் & திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கரும்புலிகள் 2) உறவுகள் வேரில் உடன் ஜெயா சுகுமார், பிறின்சி & மணிமொழி (2002ம் ஆண்டில் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 100வது இதழுக்கான வாழ்த்துப் பாடல்) எதிரி வாய்கள் மௌனம் உடன் ஜெயா. சுகுமார் எம்மை நினைத்து யாரும் உடன் பார்வதி சிவபாதம் (இறுவெட்டு: கரும்புலிகள்) எரியும் நெருப்பில் உடன் தனுராஜ் (இறுவெட்டு: ஊர்க்குயில்) ஏறுது பார் கொடி உடன் சியாமளா (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்) ஒரு லட்சம் சூரியன் உடன் வசீகரன், பிறின்சி, மற்றும் மணிமொழி (இறுவெட்டு: விழி நிமிர்த்திய வீரம்) கண்ணீர் மழை மண்ணில் உடன் ஜெயா. சுகுமார், வசீகரன், பார்வதி சிவபாதம் & புவனா இரத்தினசிங்கம் (இறுவெட்டு: வரும் பகை திரும்பும்) -தலைவரின் பிறந்த நாளுக்காகப் பாடப்பட்ட இப்பாடலானது ஜனவரி-பெப்ரவரி 2004 அன்று வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 104வது இதழிலும் இடம்பெற்றுள்ளது கரிகாலன் படையிது உடன் மேஜர் சிட்டு கருவேங்கை ஆகிய காற்று உடன் திருமலைச் சந்திரன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: அனுராதபுரத்து அதிரடி) கல்லறையில் விளக்கேற்றி உடன் புவனா காலை விடிகின்றதடா உடன் ஜெயா சுகுமார் மற்றும் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கரும்புலிகள் 2) காற்றில் கலந்த கடற்கரும்புலிகள் உடன் ஜெயா. சுகுமார், கௌசி மற்றும் பிறின்சி (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 02) குத்தாட்டம் போடடா உடன் சந்திரமோகன் மற்றும் கப்டன் இசையரசன் சங்கு முழங்கடா தமிழா உடன் மேஜர் சிட்டு (இறுவெட்டு: பூநகரி நாயகன்) சின்னஞ்சிறு ஊரு உடன் மணிமொழி (இறுவெட்டு: ஆனையிறவு) ‘சூரிய தேவனின்’ வேருகளே உடன் மணிமொழி மற்றும் தியாகராஜா (தனிப்பாடல்) தந்தனா பாடலாம் உடன் நிரோஜன் (இறுவெட்டு: அலைபாடும் பரணி) தமிழர் என்ற சொல்லிலே உடன் வசீகரன் (இறுவெட்டு: முடிசூடும் தலைவாசல்) தமிழர் தேசம் உடன் வசீகரன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: விழித்திருப்போம்) தலைநகர் மீட்க உடன் நிரோஜன் (இறுவெட்டு: இசைபாடும் திரிகோணம்) தாயக மண்ணின் காவலராகி உடன் ஜெயா. சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08) தோளின் சுமைகளில் உடன் ஜெயா சுகுமார் (இறுவெட்டு: வெஞ்சமரின் வரிகள்) நிலவற்ற வானத்தில் உடன் ஜெயா. சுகுமார், மற்றும் நிரோஜன் (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்) நெருப்பாகி நெருப்பாகி உடன் வசீகரன் (இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள்) நெருப்பில் விளைந்த உடன் பார்வதி சிவபாதம் பாரில் தமிழன் படும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் நிரோஜன் (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்) புதிய உதயம் ஒன்றெதிரில் உடன் ஜெயா. சுகுமார், நிரோஜன் மற்றும் திருமலை சந்திரன் புதிய வருடமே உடன் திருமலைச் சந்திரன், சந்திரமோகன், சீலன், மணிமொழி & பிறின்சி பூ மலர்ந்தது கொடியினில் உடன் சியாமளா - 1990 (இறுவெட்டு: இந்த மண் எங்களின் எங்களின் சொந்த மண்) மல்லிகைப் பூக்களை உடன் சுகுமார் ("இன்னும் ஒரு நாடு" திரைப்படத்திலிருந்து) முல்லை மண் எங்களின் உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: முல்லைப் போர்) மெல்ல வந்து மேனிதொடும் உடன் சீலன் எ திருமாறன் மற்றும் பின்னணியில் பிறின்சி (குறிப்பு: சிறீகுகனின் இசையில் வேலணையூர் சுரேஷ் அவர்களின் வரிகளில் 1996ம் ஆண்டு வெளிவந்த புலிகளின் குரல் வாழ்த்துப் பாடல் இது.) வட்டமதிமுகப் பெண்ணே உடன் பிறின்சி (இறுவெட்டு: வெல்லும் வரை செல்வோம்) வருக எங்கள் மக்களே உடன் மேஜர் சிட்டு ("காற்றுவெளி" திரைப்படத்திலிருந்து) வாசலில் வீசிடும் பூங்காற்று உடன் தியாகராஜா & மணிமொழி (1997ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழுக்கான வாழ்த்துப் பாடல்) விடியும் விரைவில் உடன் தியாகராஜா வெள்ளிநிலா விளக்கேற்றும் உடன் மேஜர் சிட்டு (இறுவெட்டு: நெய்தல்) உசாத்துணை: "அவர முன்னால பாத்தா சூரியன பார்த்த போல " - தாயகப் பாடகர் ஜெயராஜா சுகுமாருடன் நக்கீரன் சபை | IBC Tamil TV நேர்காணல் | (இதில் கதைப்பவர் ஒரு தமிழீழத் தேசியப் பாடகர் என்பதால் இதையொரு முறைப்படியான ஆதாரமாக, தொலைக்காட்சியைப் பொருட்படுத்தாமல், கொள்கிறேன்) "சாந்தன்: புரட்சிப்பாட்டு யாத்திரை", பி.பி.சி. ஆங்கில பொட்காஸ்ற் ஈழநாதத்தின் ஆண்டுச் சிறப்பிதழ், 19|2|2003, பக்: 27 ஈழநாதம் - 1991.02.10, பக்கம்-3 ஈழநாதம் - 1990.10.23, பக்கம்-2 தாயகப்பாடல்கள் – EELAM SONG | இறுவெட்டுகள் https://noolaham.net/project/1021/102094/102094.pdf | p-82 தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாகம் - 1 அழத அழத-azhuthu azhuthu-original-version தாயக இசைவெள்ளம் (https://www.youtube.com/watch?app=desktop&v=IK19-wz6BfQ) https://noolaham.net/project/304/30334/30334.pdf (பக். 58-59) https://tamileelamarchive.com/article_pdf/article_77a8c7a433bdf0d7ec422b2591116a3d.pdf (பக். 13) https://noolaham.net/project/73/7218/7218.pdf (பக். 45-46) https://noolaham.net/project/1021/102093/102093.pdf https://noolaham.net/project/1091/109100/109100.pdf சிறப்பு நன்றி: இவ்வாவணத்தை செழுமைப்படுத்த உதவிய முகவரியற்ற யாழ் கள உறவிற்கு எனது மனமார்ந்த நன்றி. முன்னர் என்னால் சேர்க்கப்பட்டிருந்தவற்றுள் அமரர் சாந்தனால் பாடப்படாதவற்றை அடையாளம் காண உதவினார். அமரர் சாந்தனால் பாடப்பட்ட 35 பாடல்களைக் கண்டுபிடிக்க உதவியதுடன் பல கூட்டு மற்றும் பின்னணிப் பாடகர்களை அடையாளம் கண்டும் தந்தார். மேலும், பாடல்களுக்கான பெரும்பாலான இறுவெட்டுக்களை அடையாளம் கண்டும் தந்தார். ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  2. பிரச்சினை அதுவல்ல ஏராளன் ........எனக்கு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம்.......இந்தப் பக்கத்தை யாராவது பார்க்கிறார்களா என்று.......அப்பாடா நீங்கள் ஒருவராவது பார்த்தது உங்கள் பொன்னான கருத்தை தந்தது எனக்குள்ளே ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது......! 😂 நன்றி ஏராளன் ..........! 👍
  3. ஒரு கையால் என நினைக்கிறேன் சுவி அண்ணை.
  4. ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟
  5. பாட்டு தந்து...எம்மை விட்டு....பறந்த சிட்டு....! நன்றி: பூராயம்,தமிழ்ப்புலிகள் போன்ற வலைப்பூக்கள். ஒரு அழகிய பகற்பொழுது. அது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபம். சமகாலக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு போராளிகள் எமக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தனர். இருவரையும் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் ஒரு போராளி கேட்டார் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எம்மிடம் கேளுங்கள். தயக்கம் இருந்தால் ஒரு சிறிய கடதாசியில் எழுதி முன்னாலே அனுப்புங்கள். நிறைய கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் பதில்கள் கிடைத்தன.ஒரு மாணவன் கேட்டிருந்தான் அண்ணா ஒரு பாடல் பாடிக்காட்டுங்கள்? நான் நினைத்தேன் ஏன் இவன் இப்படி கேட்கிறான் என்று. அப்ப அந்த போராளி அண்ணா சொன்னார் கருத்தரங்கு முடியும் போது பாடுகிறேன். நான் எதையும் நினைக்கவில்லை. பின்னர் முடியும் தறுவாயில் புன்முறுவல் பூத்த முகத்துடன் "சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்...." என்ற "உயிர்ப்பூ" படப்பாடலை பாடினார். அப்போதுதான் தெரிந்தது இவர்தான் போராளிப்பாடகர் சிட்டு என்று. "ஜெயசிக்குறு" என்று புறப்பட்டு தமிழரின் தலை கொய்வேன் என்ற சிங்களத்துச்சேனை அடிவாங்கி அடிவாங்கி ஆமையாய் நகர்ந்து வன்னியின் கழுத்தை நெரிக்க முற்பட்டது. பிஞ்சும் பழமும் களமுனையில் வெஞ்சமராடிய காலம். எம் விடுதலை சேனையோ தடுத்து நிறுத்த முழுப்பலத்தையும் பிரயோகித்த நேரம். காலம் அவனையும் களமுனைக்கு தள்ளியது. குரலால் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த போராளி, இப்போது குண்டுகளால் எதிரியை திணறடிக்கிறான். மண்ணை காக்கும் பணியில் மாவீரனாகிறான். மாவீரன் சிட்டு வித்தாக விழுந்த தினம் இன்றுதான்(01.08.1997). பதினொரு வருடங்கள் பறந்துவிட்டன. மனதை விட்டு பறக்காமல் எம்முள் வாழ்கிறான் சிட்டு. செங்கதிரின் "கண்ணீர்ரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்...." என்ற பாடலுக்கான மெட்டுத்தான் எமக்கு சிட்டுவை ஒரு பாடகனாக தமிழீழ மண்ணிற்கு தந்தது. ஒரு போராளிப்பாடகன். இவன்தான் நிறைய போராளிகளுக்கு வழிகாட்டியாய் அமைந்தான். இப்போதெல்லாம் நிறைய போராளிக் கலைஞர்கள் உருவாகிவிட்டார்கள். இவற்றிற்கெல்லாம் அடிநாதம் எங்கள் சிட்டு. கேணல்.கிட்டு வீரச்சாவு அடைந்த உடன் செய்தி மட்டுமல்ல உருவாகிய பாடலும் உள்ளத்தை பிசைந்தது. முதலில் வந்த "தளராத துணிவோடு களமாடினாய்......" என்ற பாடலை பாடியவர் மேஜர் சிட்டு. அற்புதமான பாட்டு. பின்னர் நெய்தல் ஒலிப்பேழையில் எஸ்.ஜி.சாந்தனுடன் இணைந்து "வெள்ளி நிலா விளக்கேற்றும் பாடல்...." கரும்புலிகள் ஒலிப்பேழையில் "ஊர் அறியாமலே உண்மைகள் உறங்கும்..." என்ற தொகையறாவுடன் தொடங்கும் "சாவினைத்தோள் மீது தாங்கிய ...." என்ற பாடல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். பூநகரி வெற்றிப்பாடல் "சங்கு முழங்கடா தமிழா இந்த சாதனை பாடடா கவிஞா.." என்ற பாடலை மீண்டும் சாந்தனுடன் பாடி புகழ் அடைந்தார். இவரது நிறைய பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாதவை. இசைபாடும் திரிகோணம் ஒலிப்பேழையில் இடம்பெற்ற "கடலின் அலை வந்து தரையில் விளையாடும்..." என்ற பாடலும் அதே தொகுப்பில் 'ரணசுரு','சூர்யா',உட்பட 3கப்பல்களை தாக்கியளித்த கரும்புலிகள் நினைவாக வந்த "விழியில் சொரியும் அருவிகள்...." என்ற பாடலும் மிக உருக்கமானவை. இந்த கரும்புலித் தாக்குதலுடன்தான் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. பாட்டுகள் தந்த எங்கள் சிட்டுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு நினைவுப்பாடல்.... ஒருமுறை உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என் எல்லோரும் வேண்டுகின்ற "தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன்ப்பேழைகளே........." என்ற துயிலும் இல்ல பாடலுக்கும் சிட்டு குரல் கொடுத்துள்ளார். முன்னர் இப்பாடலின் சரணத்தில் "..நள்ளிராவேளையில் நெய்விளக்கேற்றியே நாம் உம்மை பணிகின்றோம்..." என்ற வரி பின்னர் காலச்சூழ்நிலைக்கேற்ப மாற்றப்பட்டு விட்டது. நெஞ்சைப்பிழியும் நினைவு ஒன்று. சிட்டு களத்திற்கு போக தயாராகிறான். அவனது போராளி நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் உனக்கு பிடித்த பாடல் ஒன்றை எமக்காக பாடு என்று. எல்லாம் நினைத்து நடப்பதில்லை. ஏன் அப்படி கேட்டார்களோ தெரியாது. ஆனால் சிட்டு இதே துயிலுமில்ல பாடலையே நண்பர்களுக்காக இறுதியாக பாடினானாம். எல்லோரும் அழுது விட்டார்களாம். இப்போது அந்நண்பர்கள் செங்களம் மீதிலே உன்னுடைய கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை ஒரு போராளி நண்பர் பகிர்ந்து கொண்டார். மனதைப்பிழியும் நினைவு ஒன்று. அந்தப்பாடல் துயிலும் இல்லத்துக்கு மட்டுமே உரியது என்பதால் இங்கே தரமுடியவில்லை. காலம் முழுவதும் வாழ்வான் சிட்டு எங்கள் நெஞ்சைப்பிழியும் பாட்டுக்கள் மூலம். சிட்டுவின் எட்டாவது ஆண்டு நினைவில் பூராயம் வலைப்பூவில் வந்த பதிவு: போர்க்குயிலின் மறைவு. தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன. இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்திலேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுடன் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டே அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்நேரத்தில் சிறந்தவொரு பாடகன் எங்களுக்குக் கிடைத்தான். மேஜர் செங்கதிர் என்ற போராளிக் கவிஞனின் வரிகள் பாடலாக உருப்பெற்றபோது இப்போராளிப் பாடகன் அறிமுகமானான். “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற பாடலே இப்போர்ப்பாடகனின் முதலாவது அரங்கேற்றம். அதன்பின் களத்தில் சாகும்வரை சுமார் 75 பாடல்கள் வரை பாடியுள்ளான் சிட்டு எனும் இப்போராளிப் பாடகன். விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்புக்களிலும் அரசியல்துறையின் பொறுப்புக்களிலும் தனது போராட்டப் பணியைச் செய்து வந்தான். கேணல் கிட்டு அவர்களுக்காக 'சிட்டு' பாடிய “கடலம்மா” பாடல் மிகுந்த பிரபலம். சிட்டுவின் குரல் யாரையும் கட்டிப்போட வல்லது. பின் ‘உயிர்ப்பூ’ திரைப்படத்தில் சிட்டு பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில் - வந்து மின்னல் விளையாடிடும்’ என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியாது. வெளியிடப்படும் எந்த ஒலிநாடாக்களை எடுத்தாலும் அதில் சிட்டுவின் பாடல் இருக்கும். ஜெயசிக்குறு தொடங்கியபின் வன்னியில் கடும் சண்டை மூண்டது. வெற்றி தோல்வி எதுவும் தெரியாமல், எப்போது முடியுமென யாராலும் சொல்ல முடியாமல் நீண்டது சண்டை. அச்சமர் தொடங்கியதிலிருந்து சமர்க்களத்திற் பணியாற்றினான் சிட்டு. இறுதியில் ஆவணி முதலாம் திகதி ஓமந்தை இராணுவத்தளத்தின் மீது புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான் எங்கள் பாடகன் மேஜர் சிட்டு. ----------------------------------------------------------- சிட்டண்ணையைச் சந்தித்த சம்பவமொன்று: “கூப்பிடு தூரம்” என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் ஜெயசிக்குறு தொடங்கிய பின் சண்டை நடக்கப்போகும் இடங்களைப் பார்க்கச் சென்றிருந்த நிகழ்வைப் பதிந்திருந்தேன். அன்று தான் நான் இறுதியாகச் சிட்டண்ணையைச் சந்தித்தேன். புளியங்குளச் சந்தியிலிருந்து கிழக்குப் பக்கமாக, புளிங்குளத்தின் அணைக்கட்டால் நானும் நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அணைக்கட்டை மையமாக வைத்து பதுங்குகுழிகளும் காவலரண்களும் போராளிகளால் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சற்றுத் தொலைவில் புளியமரத்தின் கீழ் கும்பலாக முப்பது பேர் வரையில் இருந்தார்கள். மரத்தை நெருங்க, அவர்கள் பாட்டுப்பாடி கலகலப்பாக இருப்பது புரிந்தது. போராளிகள் வழமையாக ஆபத்தற்ற இடங்களில் கும்பலாக இருந்து பாடல்கள் பாடிப் பொழுதைக் கழிப்பது வழமை. அதுவும் போர்க்களம் சார்ந்த இடங்களில் ஆபத்தில்லாத பட்சத்தில் இது நிச்சயம் நடக்கும். நாமும் அதை ரசித்தவாறு கடந்துசெல்ல முற்பட்ட போதுதான் பாடிக்கொண்டிருந்த அந்தக் குரல் சாதாரணமானதில்லையென்பது புரிந்தது. “சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும். அண்ணன் என்ற நெஞ்சில் நூறு அர்த்தங்களை தூவிடும்” இந்தப் பாட்டை யாரால் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியும்?அதே சிட்டண்ணை தான் பாடிக்கொண்டிருந்தார். கையில் ஒரு தண்ணீர்க் கான். தானே தாளம்போட்டுப் பாடிக்கொண்டிருந்தார். மரத்தடிக்குச் சென்றோம். அந்தப் பாட்டு முடியுமட்டும் நின்று கேட்டு ரசித்தோம். புதிய போராளிகளைக் கொண்ட அணியொன்றுக்குப் பொறுப்பாளனாய் கடமையாற்றிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் நலம் விசாரித்தார். சனம் என்ன கதைக்குது எண்டு வினாவினார். சனங்களின் இடப்பெயர்வுகள் பற்றியும் வெளியே பரப்புரைகள் பற்றியும் விசாரித்தார். நாங்கள் இடங்கள் பார்த்து மதியமளவில் மீண்டும் அவ்வழியால்தான் புளியங்குளச் சந்திக்கு வந்தோம். அப்போது காவலரண் அமைத்துக்கொண்டிருந்தது அவரது அணி. வேலை முடிந்து மதிய உணவுக்காக மீண்டும் மரத்தடிக்கு வந்துகொண்டிருந்தார்கள். எம்மைக்கண்ட சிட்டண்ணை, “வாங்கடாப்பா வந்து எங்கட சாப்பாட்டையும் ஒருக்காச் சாப்பிடுங்கோ” எண்டு கூப்பிட்டார். எவ்வளவு மறுத்தும், வெருட்டி, கூட்டிக்கொண்டு போய் இருத்தி, சாப்பாடு தந்து தான் விட்டவர். எல்லாம் முடிந்து சந்தி நோக்கி வரும்போது தான் முதற்பதிவில் குறிப்பிட்ட எறிகணை வீச்சும் மற்றதுகளும் நடந்தன. அருமையான ஒரு பாடகன், போராளி. எழுச்சிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் போர்க்குயில் ஒருநாள் ஊமையாகிவிட்டது. அவரின் எட்டாம் ஆண்ட நினைவுதினம் இன்று.
  6. ஆதாரமற்ற ஆக்கபூர்வமற்ற கருத்தாடல்களால் ‘ ஈஷாவில் யோகா பயிற்சிக்கு சென்றபோது மாயமான பெண் சடலமாக மீட்பு – குடும்பத்தினர் சந்தேகம்’ என்ற திரி பூட்டப்படுகிறது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.