Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    87992
    Posts
  2. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8557
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2960
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/15/23 in Posts

  1. ஆறு தகப்பனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றவள் சிறிது நேரத்தில் வருகிறாள். குந்தி இருக்க சரியான கஸ்டம் அம்மா. எல்லா இடமும் இப்பிடியான ரொய்லெட் தான் இருக்கா? பெரும்பாலும் இதுதான். ஆனால் கோட்டல்களில் வெஸ்டர்ன் டாய்லெட் தான். கூடுதலான வீடுகளிலும் இப்ப இருக்கு. ஆனால் சுத்தமாக வச்சிருக்கினமோ தெரியாது என்கிறேன். ரொய்லெட் சரியில்லை எண்டால் நான் மாமி வீட்டை அல்லது அம்மம்மா வீட்டிலயோ நிக்கமாட்டான் என்கிறாள். என் கணவரின் தங்கை வீட்டில் புதிதாக எல்லாம் செய்திருப்பதனால் நீர் கோட்டலில் தங்கவேண்டி இராது என்கிறேன். மீண்டும் பிரயாணம் தொடர இருபக்கமும் பரந்த நிலங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. முன்பு தலைகளற்று நின்ற பனை மரங்கள் ஒன்றையும் காணவில்லை. சிறிய பனைகள் ஆங்காங்கே தெரிகின்றன. 2003 இல் சென்றபோது எத்தனை பரபரப்பாக இருந்த வீதி இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாகனங்கள் தெரிகின்றன. கிளிநொச்சியை நெருங்க சிறிது வாகன நெரிசல் தெரிகிறது. கணவரின் ஊர் இணுவில் என்றாலும் அவரின் தந்தை கிளிநொச்சியில் வேலை பார்த்ததால் சிறு வயதுமுதல் இருபது வயதுவரை அங்கேயே இருந்தார். கிளிநொச்சியைப் பார்த்தவுடன் சிறு பிள்ளைபோல் “இதால போனால் நாங்கள் இருந்த வீட்டுக்குப் போகலாம், இதுதான் நான் படிச்ச பள்ளிக்கூடம்” என ஒவ்வொன்றையும் மகளுக்குக் காட்டி மகிழ்ந்தபடியே வந்தார். அவரின் குதூகலத்தைப் பார்த்து இதில கொஞ்ச நேரம் நிப்பாட்டட்டா அண்ணை என்றார் சாரதி. சீச்சீ நீங்கள் தொடர்ந்து ஒடுங்கோ, பிறகு இங்க வருவம்தானே என்கிறார். மக்கள் தொகை குறைந்து விட்டதையும் வாகனங்கள் அதிகரித்து விட்டதையும் மின்வெட்டு, பெற்றோல் தட்டுப்பாடு, பொருட்களின் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு போன்றவவை பற்றியும் கணவரும் சாரதியும் பேசியபடி வருகின்றனர். ஆனையிறவைக் கடந்தபின் பாழடைந்த நிலையில் இரசாயானத் தொழிற்சாலை தெரிய அதன் நிலை பார்க்க மனதைப் பிசைகிறது. பழைய நினைவுகளும் எழுகின்றன. 80 களில் எமது பாடசாலையில் எம்மை அங்கு தொழிற்சாலையைப் பார்ப்பதற்காகக் கூட்டிவந்தனர். சுற்றிப் பார்த்தபின் சிறிது நேரம் எம் கடன்களைத் தீர்க்க வேலை செய்வோர் தங்கியிருந்த தங்குமிடத்தில் விட்டனர். ரொய்லெட் போய்விட்டு நாம் உடனே வெளியே வரவில்லை. அங்கிருந்த சீப்பை எடுத்து காற்றுக்குக் கலைந்து போயிருந்த தலைகளை இழுத்துச் சரிசெய்துகொண்டிருந்தபோது எங்கள் மிஸ் வந்துவிட்டார். "ஆற்றையன் பொருளை எப்படி எடுப்பீர்கள்? அது முதல் அன் கையீனிக். எல்லாரும் முதல்ல வெளியே வாங்கோ" என ஏசியது நினைவில் வந்து போக ஏதோவொரு உணர்வு என்னை ஆட்கொண்டது. இருமருங்கும் நிலங்கள் கேட்பாரற்றுக் கிடந்தன. சில வயல்கள் உழுதபடியும் சிலது அப்படியேயும் இருந்தது. வயல் விதைக்க இன்னும் நாளிருக்கு என்றார் மனிசன். மண்ணெண்ணைத் தட்டுப்பாட்டினால் பலர் இப்ப தோட்டங்களையே செய்யாமல் கை விட்டுட்டினம் என்கிறார் சாரதி. யாழ்ப்பாணத்தை நெருங்க நெருங்க கட்டட நெரிசலும் அதிகரிக்க கிட்ட வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. 2003 இல் நான் என் குடும்பத்துடன் இலங்கை சென்றபோது என் பெற்றோரும் ஒரு சகோதரியும் இரு வாரங்கள் செல்ல அங்கு வர இருந்தபடியால் எனக்கு எந்தப் பிரசனையும் என் சித்தியால் ஏற்படவில்லை. நானும் கணவரும் 2017 இல் சென்றபோது தன் வீட்டிலேயே முதலில் வந்து இறங்கவேண்டும் என என் சித்தி ஒரே ஆர்ப்பாட்டம். என் கணவரின் தாய் இருந்தபடியால் என் அம்மா வீட்டுக்குத்தான் போகவேண்டும் எனக் கணவர் கண்டிப்புடன் சொன்னது மட்டுமன்றி அதுதானே நியாயமும் கூட என நானும் சம்மதித்துவிட என் மச்சாள் வீடிலேயே போய் இறங்கியாச்சு. இரண்டு நாட்களாய் சித்தி என்னுடன் கதைக்கவே இல்லை. நான் பிறந்து வளர்ந்த “நிவேதகிரி” என்ற பெயரைத் தாங்கி இன்றுவரை நிற்கும் வீடுதான் அது என்றாலும் கணவருடன் வரும்போது அவருடன் தானே நிற்பது முறை. இத்தனைக்கு இரு வீடுகளுக்கும் இடையில் ஐந்து நிமிட நடை. அதன்பின்னர் 2019 இல் நான் தனியாக வந்தபோது என் மச்சாளிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டு சித்தி இருக்கும் எங்கள் வீட்டிலேயே தங்கினேன். அதை எண்ணிப்பார்த்துவவிட்டு, முதலில் என் சூட்கேஸ்களை என் சித்தி வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு மிகுதியை உங்கள் தங்கை வீட்டில் இறக்கவேண்டும் என்கிறேன். கணவரும் சரி என்று கூற என் வீட்டின் முன் வான் நிற்கிறது. என் பொதிகளை எல்லாம் இறக்கியவுடன் நீங்கள் அங்கே போய் பொதிகளை இறக்கிவிட்டு வாங்கோ என்கிறேன். சாரதியிடம் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் நில்லுங்கோ என்றுவிட்டு என் பொதிகளை மகளும் கணவரும் உள்ளே கொண்டுவர உள்ளே இருந்து சித்தி வருகிறா. அவவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. எங்கே சித்தி இவற்றை வைக்கிறது என்று நான் கேட்க, முன்னால் உள்ள அறையைக் காட்டுகிறா. அதற்குள் பொதிகளை வைத்தவுடன் இதுமட்டும் தானோ என்கிறா. மூன்று பேர் எப்படி இந்த அறையில் தங்கமுடியும். அதனால் இவர்கள் இருவரும் தங்கை வீட்டில். நான் மட்டும் தான் இங்கே என்கிறேன். அதுவும் சரிதான் என்று கூற நாம் வெளியே வந்து அமர்கிறோம். இரு கதிரைகள் மட்டும் இருக்கின்றன. என்ன சித்தி. இரண்டு கதிரைகளை வாங்கிப் போடுவதற்கு என்ன என்கிறேன். முன்னர் நான் வந்தபோதும் இதே இரண்டு கதிரைகள் இருக்க நான்கு கதிரைகளை வாங்கிப் போட்டிருந்தேன். அவை எங்கே என்று கேட்க எண்ணிவிட்டு உடனே நிறுத்திவிட்டேன். ஏனெனில் உன் சித்தியிடன் காசு இல்லை என்று நீ வாங்கிப் போட்டானியோ என அப்பப்போ திட்டுவார் கணவர். அதனால் பின்னர் கேட்போம் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.
  2. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன். 😂
  3. ஐந்து கணவர் சொல்லிவைத்த வான் வந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டிருக்க நானும் மகளும் இரு வண்டில்களில் பொதிகளை வைத்தபடி இருக்கிறோம். செப்டெம்பர் மாதமாகையால் பெரிதாக வெய்யிலின் உக்கிரம் இருக்கவில்லை. ஆனாலும் ஒருவித புழுக்கம் வந்து அப்பிக்கொள்கிறது. பலரும் வந்து எங்கே மடம் போகணும். எங்கள் வண்டியில் வாருங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்க இவ்வளவு தூரம் வருகிறோம். வாகனம் ஒழுங்கு செய்யாமலா வருவோம் என்னும் எரிச்சல் எழுகிறது. சிறிது நேரத்தில் எமக்குரிய வான் வர ஏறி அமர்ந்தபின் தான் அப்பாடா என்று இருக்கிறது. கணவர் முன்னால் இருந்து சாரதியுடன் கதைத்தபடி வருகிறார். நானும் மகளும் இரு மருங்கும் புதினம் பார்த்தபடி வருகிறோம். அப்படியே தூங்கியும் விட்டோம். நிவேதா நிவேதா என்று அன்பொழுக கணவரின் அழைப்பு மெதுவாகக் கேட்க கண்விழித்தால் வாகனம் ஒரு உணவகத்துக்கு முன்னால் நிற்கிறது. இது நல்ல உணவகமாம். உனக்குத்தான் அடிக்கடி பசிக்குமே. இங்கேயே சாப்பிட்டிட்டுப் போவம் என்கிறார். அவர் சொன்னவுடன் எனக்கும் பசிப்பது போல இருக்க சரி சாப்பிடுவம் என்றுவிட்டுக் கீழே இறங்குகிறேன். இது எந்த இடமென்று சாரதியிடம் கேட்க மாதம்பை முருகன் கோவில் இது என்கிறார். கோயிலின் கோபுரத்தின் முன் பெரிய பெரிய தலைகளின் உருவங்கள் காணப்படுகின்றன. ஓரளவு பெரிய உணவகம் தான். இருந்தாலும் உணவு எப்படி இருக்குமோ என்னும் யோசனையும் எழுகிறது. சாரதியும் கணவரும் இடியப்பம் சொல்ல நானும் மகளும் தோசையும் உழுந்து வடையும் ஓடர் செய்ய எல்லாருக்கும் உழுந்துவடை கொண்டுவாங்கோ என்கிறார் மனிசன். சாப்பிட முதல் டீ குடிப்பம் என்று அதற்கும் சொல்கிறார். ஒரு ஐந்து நிமிடங்களில் மசாலா போட்ட தேநீர் வர, இத்தனை விரைவாக வந்துவிட்டதே சூடாய் இருக்கோ என நான் வாயில் வைத்துப் பார்க்க கடும் சூடு. வாயில் தேனீர் சுட்டுவிட, என்ன அவதி கொஞ்சம் ஆறட்டுமன் என்றுவிட்டு, தான் எடுத்துக் குடிக்கிறார். சிறிது நேரத்தில் வடைகள் வருகின்றன. நல்ல பெரிதாக பார்ப்பதற்கு நன்றாக இருக்க எடுத்து உண்கிறேன். அந்த நேரப் பசிக்கோ என்னவோ மிகவும் சுவையாக இருக்கிறது. தோசையும் யாழ்ப்பாணச் சம்பலும் வரும் என்று பார்க்க சட்னியும் சாம்பாரும் வருகிறது. இடியப்பத்துக்கு அந்தச் சம்பல் வர எனக்கும் கேட்போமா என ஒரு செக்கன் எண்ணிவிட்டு இதுவும் சுவையாக இருக்குத் தானே என்று எண்ணியபடி உண்கிறேன். அப்போதுதான் பார்க்கிறேன். சில்வர் தட்டின் மேல் ஒரு மெல்லிய பொலிதீன் போடப்பட்டு அதில் உணவு வைக்கப்பட்டிருக்கு. என்ன இவங்கள் ஏன் பொலிதீன் போட்டிருக்கிறார்கள். பார்க்க அரியண்டமாக இருக்கு என்று கூற, இங்கு எல்லாக் கடையிலும் இப்ப இதுதான் என்கிறார் சாரதி. வாழையிலைக்குத் தட்டுபாடோ என்கிறார் மனிசன். கழுவிற பஞ்சிக்காண்டி இதுதான். ஆனால் வேளைக்கு உக்கிப்போயிடுமாம் என்கிறார். உண்டு முடிய கணவர் எனக்கு இன்னொரு தேநீர் குடிக்கவேணும். வேற யாருக்கும் வேணுமோ என்று கேட்க நான் எனக்கும் என்கிறேன். சாரதியும் மகளும் தமக்கு வேண்டாம் என்கின்றனர். நான் வானுக்குள் இருக்கிறேன். வாங்கோ என்றுவிட்டு சாரதி செல்ல எம் தேநீர் வருகிறது. நல்ல சாயமும் சீனியும் போட்டு நல்ல சுவையாக இருக்கு. வடை ஏதும் கட்டிக்கொண்டு போவமோ என்கிறேன் நான். இவ்வளவு சாப்பிட்டது பத்தாதே. இன்னும் நாலு மணித்தியாலத்தில வீட்டை போயிடலாம். தங்கச்சி சமைச்சு வச்சிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பாள். அதுக்கிடையில எங்காவது கடைகள் வரும்தானே என்கிறார். நாங்கள் சென்று அமர்ந்ததும் பிரயாணம் தொடங்குகிறது. பார்க்கும் இடம் எங்கும் சிற்றோடைகள், ஆறுகள். சிங்களப் பகுதி நல்ல செழிப்பானதுதான் என நான் எண்ணிக் கொள்கிறேன். ஒரு ஒருமணிநேரம் ஓடியதும் வீதியில் இளநீர் வித்துக்கொண்டிருப்பது தெரிய இளநீர் குடிப்பம் என்றவுடன் கணவர் சாரதியை நிறுத்தச் சொல்கிறார். சாரதி வேண்டாம் என்று மறுக்க குடியுங்கோ என்று அவரிடம் நீட்டுகிறார். கன காலத்தின் பின் இளநீர் சுவையாக இருக்கிறது. இங்க 50 ரூபா. யாழ்ப்பாணத்தில 100 ரூபா என்கிறார் சாரதி. வானுக்குள்ள இடம் இருக்குத் தானே. ஒரு குலையை இங்கேயே வாங்கிக் கொண்டு போவம் என்கிறேன். சரி என்று கணவர் கூற குலை வானுக்குள் ஏறுகிறது. சாரதி மிக நிதானமாக வாகனத்தை ஓட்டுகிறார். அப்பப்ப அங்கே நிக்கிறாங்கள். இங்கே நிக்கிறாங்கள் என்று போனில் கதைத்தபடி வர, யார் நிக்கிறாங்கள் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கிறேன். உவங்கள்தான் என்று அவர் கூற, போலீஸ் காரர் ஒருவர் கைகாட்டி எமது வானை நிறுத்துகிறார். சாரதி போலீசைக் கடந்து வந்து வானை நிப்பாட்டிவிட்டு நிற்கிறார். லைசென்சைப் பார்ப்பான்களோ என்று கணவர் கேட்க இன்சூரன்ஸ் இருக்கோ என்றும் பார்ப்பினம் என்றுவிட்டு தொடர்ந்து இறங்காமல் இருக்க, எல்லாம் இருக்குத்தானே? கெதியா இறங்கிப்போய் காட்டிப்போட்டு வாங்ககோவன் என்கிறார் மனிசன். அவர் தானே மறிச்சவர். அவரே வரட்டும் . நான் என்ன களவே எடுத்தனான் உவைக்குப் பயப்பட என்று சாரதி கூற எனக்கு சிறிது பயமாக இருக்க நான் கண்ணாடியில் பார்க்கிறேன் அந்தப் போலீஸ் எம்மை நோக்கி நடந்து வருவது தெரிகிறது. வரும்போதே யன்னலால் உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ கேட்க சாரதியும் தன் ஆவணங்களை எடுத்துக் காட்டிவிட்டு உள்ளே வைக்க நானும் எமது கடவுச் சீட்டுகளை வெளியே எடுக்கிறேன். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கணவரைப் பார்த்துக் கேட்க யூக்கே என்றுவிட்டு உடனேயே லண்டன் என்கிறார். அவன் பாஸ்போட்டைக் கேட்காமல் அப்பால் நகர நான் அவற்றை மீண்டும் கைப்பையுள் வைக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் புத்தளம் வந்துவிடும் என்கிறார் சாரதி. அதற்குள் என்மகள் அதன்பின் அனுராடபுரவோ என்று கேட்க, என்னடா எனக்கே தெரியாது இவள் எப்படிச் சொல்கிறாள் என எண்ணியபடி அனுராதபுரமோ என்று அவளைத் திருப்பிக் கேட்க தன் போனைத் தூக்கிக் காட்ட அதில் இலங்கை மப் தெரிகிறது. நான் மீண்டும் கண்ணசந்துவிட்டேன். நல்ல தூக்கம். இம்முறை மகள் என்னை எழுப்புகிறாள். இது எந்த இடம் என்று கேட்க முறிகண்டி வந்திட்டுது, கும்பிட்டிடிட்டுப் போவம் என்று கணவர் கூற நான் இறங்குகிறேன். கால்களையும் முகத்தையும் கழுவிவிட்டு செருப்புகளைக் கழற்றி வைத்து விட்டு வெறும் காலில் நடக்க நிலம் பயங்கரச் சூடு. குறுணிக் கற்களும் குத்துகின்றன. ஏதோ சுற்றிக் கும்பிட்டுவிட்டு வந்தால் ஏதும் சாப்பிடுவோமா என்கிறார் கணவர். ஒரு கடைக்குள் சென்றால் இரண்டு மேசையும் வாங்குகளும் போடப்பட்டிருக்கு. எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் தேநீருக்காக இருக்கிறேன். கணவர் ரோள்சும் வடையும் சொல்ல ஒரு தட்டில் உழுந்துவடை, கடலைவடை, சமோசா, றோள்ஸ் எல்லாம் கொண்டுவந்து வைக்க நாம் இவ்வளவும் கேட்கவில்லையே என்கிறேன். நீங்கள் சாப்பிடுவதற்கு மட்டும்தான் காசு எடுப்ம் என்றபடி வேலையாள் நகர்கிறார். நான் ஒரு றோள்ஸ் எடுத்து உண்கிறேன். சரியான எண்ணையாக இருக்கிறது. அரைவாசி கடித்தபடி கணவரிடம் கொடுக்கிறேன். மேற்கொண்டு எதுவும் உண்ணப் பிடிக்கவில்லை. தேநீரை மட்டும் அருந்திவிட்டு வெளியே வந்து மற்றக் கடைகளை வேடிக்கை பார்க்கிறேன். எதற்கும் டாய்லெட் போவோம் என எண்ணியபடி பையை மகளிடம் கொடுத்துவிட்டுப் போய் நின்றால் கட்டணம் 5 ரூபாய்கள் என்று கூறுகிறார் வாசலில் நிர்ப்பவர். மீண்டும் வந்து கணவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போய் கொடுத்துவிட்டு உள்ளே சென்றால் மணம் தாங்க முடியவில்லை. யாழ்ப்பாணம் போகுமட்டும் அடக்கேலாது என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடனை முடித்து வந்தாயிற்று. நானும் போட்டு வரட்டோ என்கிறாள் மகள். நீர் சமாளிப்பீரோ தெரியேல்லை. போய்ப் பாரும் என்கிறேன்.
  4. மாப்பிள்ளை... கெஞ்சுறார். 😂
  5. இது மம்மிகள் எனப்படும் முறையில், சிலவகை மூலிகைகளால் பதப் படுத்தப் பட்ட உடல்கள். அவற்றின் தோல், முடி கூட... சில ஆயிரம் வருடங்கள் வரை பழுதாகாமல் இருக்கும். (தொட்டால் அப்பளம் போல், நொருங்கி விடும்.)
  6. இந்த பயணத்தை நான் திட்டமிட்டிருந்தால் நிச்சயமாக தவிர்த்திருப்பேன்.
  7. ஈழப்பிரியன்... பனி கொட்டிய வீதியில் பயணம் என்பது, சாரதி எவ்வளவு திறமையானவராக இருந்தாலும்... சில வேளைகளில் எம்மை அறியாமலே தவறு நடந்து விடும். வீதிக்கும், வாகன சக்கரத்திற்குமான... தொடர்பு, எல்லா இடமும், ஒரே நிலையில் இருக்கவும் மாட்டுது. அத்துடன் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் எனும் போது பயம் இரட்டிப்பாக இருப்பது வழமைதான்.
  8. கிமு 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரஷ்ய இளவரசியின் உடலில் குத்தப் பட்டுள்ள (tattoo) பச்சை.
  9. ஈழப்பிரியன், இப்போதுதான்... முழுப் பதிவையும் வாசித்து முடித்தேன். ஆபத்தில் சிக்கி இருந்தாலும்.. அதில் இருந்து மீண்டு மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வித்தையையும் தெரிந்து, நடந்து கொண்ட விதம் உங்களை ஒரு பக்குவப் பட்ட மனிதராக காட்டியது. நல்ல ஒரு அனுபவ பகிர்வு. 👍 🙂
  10. ஜனாதிபதித் தேர்தல் - 1982 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நாள் புரட்டாதி 17 ஆம் திகதி என்று அறிவிக்கப்பட்டது. 6 வேட்பாளர்கள் தம்மைப் பதிவுசெய்திருந்தனர். லங்கா சம சமாஜக் கட்சியின் கொல்வின் ஆர் டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயார் ஜெயவர்த்தன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேக்கடுவ, நவ சம சமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்கார, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் குமார் பொன்னம்பலம் மற்றும் ஜனதா விமுர்திப் பெரமுனவின் ரோகண விஜேவீர ஆகியோரே அந்த அறுவரும் ஆகும். தேர்தலில் பங்கெடுப்பதில்லை என்கிற முடிவினால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது குமார் பொன்னம்பலம்மும் ஆயுத அமைப்புக்களும், குறிப்பாக தமிழ் ஈழ விடுதலை முன்னணியும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. அமிர்தலிங்கத்திற்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட இரகசிய ஒப்பந்தம் குறித்த விபரங்களை குமார் பொன்னம்பலம் வெளிக்கொணர்ந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் ஆயுத அமைப்பு இரு விடயங்களை முன்வைத்துப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. முதலாவதாக, 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆணையான தனிநாட்டினை மீள உறுதிப்படுத்த இந்தத் தேர்தலை முன்னணியினர் பாவித்திருக்கலாம், ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே செய்யாது விட்டார்கள் என்று குற்றஞ்சாட்டியது. இரண்டாவதாக, இத்தேர்தலில் போட்டியிடுவதன்மூலம், தனிநாட்டிற்கான ஆதரவை வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களிடமிருந்து பெறக்கூடிய வாய்ப்பிருந்தும், முன்னணி அதனைச் செய்யத் தவறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த விமர்சனங்கள் அமிர்தலிங்கத்தைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆகவே, தனது இக்கட்டான நிலையிலிருந்து தப்புவதற்கு தமிழர்கள் அனைவரும் இத்தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் திடீரென்று கோரிக்கையொன்றினை முன்வைத்தார். இதற்கு அவர் முன்வைத்த காரணம் மிகவும் பலவீனமானது. 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பினைத் தமிழர்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளாததால், அந்த அரசியலமைப்பின்படி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வக்களிக்கக் கூடாதென்பதே அவர் முன்வைத்த காரணம். குமார் பொன்னம்பலம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமிர்தலிங்கம் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை குமார் பொன்னம்பலம் முன்வைத்தார். 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய ஆணைக்கெதிராக அமிர்தலிங்கம் செயற்படுவதாக குமார் கூறினார். "அவர் என்னை மட்டும் தோற்கடிக்க முயலவில்லை, தமிழர்களின் கோரிக்கையான தனிநாட்டையும் தோற்கடிக்க முயல்கிறார்" என்று குமார் பிரச்சாரம் செய்தார். வானொலி பேச்சொன்றில் தமிழ் மக்கள் இத்தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் தமது ஒற்றுமையையும், பலத்தையும், தமது அபிலாசைகளையும் சர்வதேசச் சமூகத்திற்குக் காட்ட வேண்டும் என்று குமார் பொன்னம்பலம் கோரிக்கை முன்வைத்தார். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையினை விபரித்து புரட்டாதி 2 ஆம் திகது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான சட்டர்டே ரிவியூ, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் முன்னர் அணியப்பட்ட தமிழ்த் தேசிய போர்வையினைக் களவாடி இன்று அணிந்திருக்கும் குமார் பொன்னம்பலம், முடிக்குரிய இளவரசனைப் போன்று தமிழர் ஐக்கிய முன்னணியின் ஆதரவாளர்கள் முன் தெரிகிறார், அவர்களும் அதனை ஏற்றுக்கொள்ள விரும்புவது போலத் தெரிகிறது" என்று கூறியிருந்தது. மேலும், காலம் காலமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வாக்களித்து வந்த கிராமப்புறத் விவசாயிகளான தமிழர்கள், தமது விவசாயப் பொருட்களான மிளகாய், வெங்காயம் ஆகியவற்றிற்கு நல்ல சந்தவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதால், சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேக்கடுவவை ஆதரித்து நிற்கிறார்கள் போலத் தெரிவதாகவும் கருத்து வெளியிட்டிருந்தது. ஹெக்டர் கொப்பேக்கடுவ வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு ஹெக்டர் கொப்பேக்கடுவ பிரச்சாரம் செய்யச் சென்றவேளைகளில் அவரை விவசாயிகள் சூழ்ந்துகொண்டதுடன், நல்ல வரவேற்பினையும் வழங்கினர். யாழ்க்குடாநாட்டில் 14 கூட்டங்களில் கலந்துகொண்ட ஹெக்டர் கொப்பேக்கடுவ, யாழ்ப்பாணத்து விவசாயிகளின் உற்பத்திப் பொருடகளுக்கான சந்தை எப்போது பாதுகாக்கப்படும் என்றும், தமிழர்களுக்கெதிராக ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தான் பதவிக்கு வந்தவுடன் இரத்துச் செய்துவிடுவதாகவும் உறுதியளித்தார். யாழ்க்குடா நாட்டிற்கு ஒருநாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஜெயாரை மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் வரவேற்றனர். ஜெயாருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தமிழ் ஈழ விடுதலை முன்னணி ஒழுங்கு செய்திருந்தது. கடைகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன் யாழ்நகரின் சுவர்களின் ஜெயாருக்கெதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று, "யாழ்ப்பாணத் தமிழர்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்கள். ஆனால், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை அவர்களுக்குப் பிடிக்காது" என்று ஒரு வாசகம் கூறியது. சுன்னாகத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயார், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அகப்பட்டுப்போய் இருக்கும் சிக்கலில் இருந்து அவர்களை மீட்க முயன்றார். "நீங்கள் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களுக்கு விரும்பியவருக்கு நீங்கள் வாக்களியுங்கள். அது உங்களின் பிரச்சினை. ஆனால், தவறாமல் வாக்களியுங்கள், ஏனென்றால் அது மக்களின் இறையாண்மை ஆகும்" என்று கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைப் பார்த்துக் கூறினார். பட்டிருப்பில் மக்கள் முன் பேசிய ஜெயார், "தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் உங்களிடம் கேட்டிருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால், நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதுவும் எனக்கே வாக்களிக்க வேண்டும். உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்திற்கும், அமைத்திக்கும் நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 1982 தேர்தல் வன்முறைகள், சட்ட மீறல்கள், கம்மியூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கை அச்சகமும், சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை அச்சிட்ட அச்சகங்களும் அரசால் மூடப்பட்டமை ஆகிய சம்பவங்கள் நடந்தபோதும் ஐப்பசி 20 ஆம் திகதி நடந்த தேர்தலில் ஜெயவர்த்தன மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டார். சுமார் 81 இலட்சம் பதிவுசெய்யப்பட்ட வாக்களர்களில் 65 இலட்சம் பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது, 1. ஜே ஆர் ஜெயவர்த்தன - ஐ.தே.க 3,450,811 வாக்குகள் , 52.91 % 2. எச்.எஸ்.ஆர்.பி. கொப்பேக்கடுவ - சிறிலங்கா சு.க - 2,548,438 வாக்குகள், 39.07 % 3. ரோகண விஜேவீர - மக்கள் விடுதலை முன்னணி 273,934 வாக்குகள், 4.19 % 4. குமார் பொன்னம்பலம் - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 173,934 வாக்குகள், 2.67 % 5. கொல்வின் ஆர் டி சில்வா - லங்கா சம சமாஜக் கட்சி 57,532 வாக்குகள், 0.88 % 6. வாசுதேவ நாணயக்கார - நவ சம சமாஜக் கட்சி 17,005 வாக்குகள், 0.26 % 902,373 அதிகப்படியான வாக்குகளினால் ஜெயவர்த்தன வெற்றிபெற்றார். ஹெக்டர் கொப்பேக்கடுவவைத் தவிர மற்றைய அனைவரும் கட்டுப்பணத்தை இழந்தனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 17 சிங்கள மாவட்டங்களிலும், ஒரு முஸ்லீம் பெரும்பான்மை மாவட்டமான அம்பாறையிலும் ஜெயார் வெற்றிபெற்றிருந்தார். குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிபெற்றிருந்தார். குமார் பொன்னம்பலத்திற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 87,263 வாக்குகள் கிடைத்த அதேநேரம் ஹெக்டர் கொப்பேக்கடுவவிற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் 77,300 வாக்குகளை அளித்திருந்தனர். ஜெயாருக்கும் 44,780 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன. 533,478 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் 228,613 வாக்காளர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தேர்தலைப் புறக்கணிக்கும் கோரிக்கையை நிராகரித்து தேர்தலில் வாக்களித்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்கொள்ளும் அபாயத்தை இத்தேர்தல் அமிர்தலிங்கத்திற்கு உணர்த்தியிருந்தது. தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் நின்ற குமார் பொன்னம்பலத்திற்கு கிடைத்த ஆதரவினால் உந்தப்பட்ட ஆயுத அமைப்புக்களான புளொட்டும், ஈரோஸும் 1983 ஆம் ஆண்டில் நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் இணைந்து, சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடுவதென்று தீர்மானித்தன. இந்த முடிவும் தனக்கும், கட்சிக்கும் சவாலாக உருவாகிவருவதாக அமிர்தலிங்கம் உணரத் தொடங்கினார். ஆனாலும், ஜெயாரின் அழுங்குப் பிடியிலிருந்து அமிர்தலிங்கத்தினால் வெளிவர முடியவில்லை. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த தகுதியினாலோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் தனக்குக் கிடைத்த சுகபோகங்களுக்காகவோ அவர் இப்படி உணரவில்லை, மாறாக, ஜெயாரின் பிடியிலிருந்து விலகிவந்தால் வேறு ஆபத்துக்கள் வரலாம் என்று அவர் அஞ்சினார். ஜெயவர்த்தனவை ஆத்திரப்பட வைப்பதாலும், அசெளகரியப்படுத்துவதாலும் தான் எதிர்நோக்கவேண்டி வரும் அபாயம் குறித்து அவர் நன்கு அறிந்தே இருந்தார். "அவர் மிகவும் ஆபத்தான மனிதர். அவருடன் நாம் மிகவும் அவதானத்துடனேயே தொடர்பாட வேண்டும்" என்று என்னிடம் பலமுறை அமிர் கூறியிருக்கிறார். ஜெயவர்த்தன மீது தனக்கிருந்த அச்சம் குறித்து அமிர்தலிங்கம் 1982 ஆம் ஆண்டு ஆனியில் தன்னைச் சந்தித்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான வைகுந்தவாசனிடமும், ஆதேவருடம் ஆடி மாதம் நியுயோர்க் நகரில் இடம்பெற்ற உலகத் தமிழ் ஈழம் மாநாட்டிலுல் கூறியிருந்தார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை வடக்குக் கிழக்கில் நடைமுறைப்படுத்த முயன்றால், வடக்குக் கிழக்குத் தமிழர்களை ஜெயவர்த்தன மொத்தமாகத் தண்டித்துவிடுவார் என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் கூறினார் அமிர்தலிங்கம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பின்வரும் தீர்மானங்கள் இரண்டை நிறைவேற்றியிருந்தது, 1. 1982 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளான தை மாதம் , 14 ஆம் திகதி, ஒருதலைப்பட்சமாக தமிழீழப் பிரகடணத்தை நிறைவேற்றுவது. 2. அதே நாள் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிப்பது. நியோர்க் நகரில் இடம்பெற்ற தமிழ் ஈழத்திற்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டபோதும் இதேவகையான அச்சத்தினை அமிர்தலிங்கம் வெளியிட்டிருந்தார். சுமார் 200 பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், இலங்கையில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், அவர்களின் நலன்களுக்கும் தானே பொறுப்பு என்று அமிர் கூறினார். "மக்கள் எவருமற்ற நிலையில் கிடைக்கப்பெறும் விடுதலையினை யார் அனுபவிக்கப் போகிறார்கள்? வங்கதேசத்தின் சுதந்திரத்தை நாம் முன்மாதிரியாகப் பின்பற்றி போராட வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். அந்தப் போரில் மூன்று மில்லியன் வங்காளிகள் கொல்லப்பட்டார்கள். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவானது என்பது இவர்களுக்குத் தெரியாது" என்று அவர் வாதிட்டார். இந்த மாநாட்டினை ஒழுங்குசெய்த வைகுந்தவாசன் அமிரைப் பார்த்து, "ஜெயாரின் முகத்துக்கு நேரே பார்த்து, நரகத்திற்குப் போ என்று கூறுங்கள்" என்று கத்தினார். அதற்குப் பதிலளித்த அமிர், "நான் அப்படிச் செய்தால், நரகத்திற்குப் போவது ஜெயார் அல்ல, தமிழ் மக்களே" என்று கூறினார்.
  11. நன்றி இணைப்புகளுக்கு சுவியர் நுணா வுக்கு .
  12. மண்ணை குவித்து வைத்து விட்டு அதில் பல்கனி போல் 89களில் பார்த்த அனுபவம் வந்து போகுது இந்தியன் ஆமி வெளியேறுகிறான் என்று ராமேஸ்வரம் சவுங்கம் காடுகளில் பகல் பொழுதுகளில் தண்ணிக்குள்ளே பாட்டிகாரன் அதான் கியு பிரான்சு பிடிபடாமல் இருக்க இருப்பது உண்டு பழைய நினைவுகளை கொண்டுவந்த சுவியருக்கு நன்றிகள் .
  13. 🤣 சிரிப்போ சிரிப்பு 🤣 · Rejoindre P Baskar Uadangudi · · ஏசி இல்லை சவுண்ட் ட்ராக் இல்லை டெக்னாலஜி இல்லை புஷ்பேக் சீட் இல்லை 70 எம் எம் இல்லை 3 டி இல்லை VFX எஃபெக்ட் இல்லை 7.1 டால்பி சிஸ்டம் இல்லை இருந்தாலும் அந்த சந்தோசம் இப்ப இல்லை அம்பது பைசா டிக்கெட் அஞ்சு பைசா முறுக்கு அட்டகாசமா அருமையா ஆனந்தமா ஆர்ப்பாட்டமா இப்படியும் படம் பார்த்தோம் ப்பா
  14. ஆ.....என்னமா யோசித்து சித்தியையும் சரிக்கட்டி புருஷனையும் சமாளித்து, சா......சொல்லி வேல இல்ல.....இதெல்லாம் பெண்களுடன் கூடவே பிறந்து வருகிறது போல...... தொடருங்கள்......! 😂
  15. பட்டரை பெருமந்தூரில் 3ஆம் கட்ட அகழாய்வு பணியில், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் கண்டெடுப்பு! திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெருமந்தூரில் நடைபெறும் 3ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வு பணியின் போது மனித எலும்பு துண்டுகள், கல் ஆயுதங்கள், செங்கற்கலால் கட்டப்பட்ட வட்டவடிவ கிணறு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் காலத்திய கல்வெட்டுகளும் கிடைக்கப்பெற்றன. இங்கு கடந்த 6ம் திகதி மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்கிய நிலையில், 40 சென்டிமீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்ட 3 குழிகளில் இருந்து பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. https://athavannews.com/2023/1329912
  16. நீங்கள் ஒன்றைக் கவனிக்கவில்லை என நினைக்கின்றேன், நான் பதில் எழுதிய போது, சுவி அண்ணா 4 ஆவது பகுதியை எழுதியிருக்கவில்லை. என் பதிலின் பின் தான் 4 ஆம் பகுதியை எழுதியிருக்கின்றார். அதில் தான் சாவகச்சேரி, கொடிகாமம் எல்லாம் வருகின்றது.
  17. நான்கு , கிட்டத்தட்ட முக்கால் மணிநேரமாகிவிட்டது நாம் இறங்கி. மீண்டும் எல்லாப் பொருட்களையும் பைகளில் வைத்து எடுத்துக்கொண்டு செல்லத் தயாராக, கணவனைத் தள்ளுபவர் சர்க்கர நாற்காலியைத் தள்ள ஆரம்பிக்க, நாமும் பைகளைத் தோள்களிலும் கைகளிலும் காவியபடி நடக்க, கணவரை அவன் சிறிது வேகமாகத் தள்ளிக்கொண்டு செல்வதாகப் படுகிறது. நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்லத் தொடங்க “அம்மா மெதுவாகப் போங்கோ. அவர் வேகமாகப் போய் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிக்கட்டும்” என்கிறாள். எனக்கு மனம் கேட்கவில்லை. புதிய விமான நிலையம் வேறு. எதுக்கும் கொஞ்சம் வேகமாக நடப்பமென்று சொல்லி நடக்க ஒரு Lift இற்குள் இருந்து இங்க வாங்கோ என்ற கணவரின் அழைப்புக் கேட்க அதை நோக்கிச் செல்கிறோம். அதற்குள் ஏறியவுடன் “இவன் ஐந்து டொலர் தரும்படி கேட்கிறான்” என்கிறார் மனிசன். “அவனுக்கு எதற்கு ஐந்து டொலர் ? அதுகும் அவனுக்கு எதற்குக் கொடுக்கவேண்டும். அப்பிடி அவன் கேட்கிறதே பிழை” என்கிறேன். அதுதான் விரைவாகத் தள்ளிக்கொண்டு வந்தவரோ என்றபடி அவனை ஒரு பார்வை பார்க்கிறேன். "ஒண்டும் குடுக்கத் தேவையில்லை அப்பா. அது அவரின் தொழில்" என்கிறாள் மகள். அதற்குள் லிப்ட் கதவு திறக்க, கணவரைத் தள்ளியபடியே எனக்குக் காசு எதுவும் வேண்டாம் என்கிறான் அவன். அவனுக்குத் தமிழில் நாம் கதைத்தது புரிந்துவிட்டதோ என்னும் ஐயம் எழுகிறது. நானும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். நாம் எமது விமானத்துக்குரிய இடத்தை அடைந்துவிட்டோம். கணவர் எழுந்து அமர்ந்துகொள்ள நானும் மகளும் அருகில் அமர்கிறோம். அழகான ஏயாபோர்ட். ஒருக்கால் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா என்று மகளைக் கேட்கிறேன். நானும் வரட்டோ என்கிறார் கணவர். இவ்வளவையும் காவிக்கொண்டு போக ஏலாது. நாங்கள் வந்து விடுறம். அதன்பின் நீங்கள் போங்கோ என்கிறேன். திடுமென என் போடிங் பாசைக் காணவில்லை என்கிறாள் மகள். எங்கேயாவது மாறி வைத்திருப்பாய் பாரென்றுவிட்டு எமது பைகள் உட்பட எல்லா இடமும் தேடியும் அதைக் காணவில்லை. அவர்கள் செக் பண்ணிய இடத்தில் தான் தவறியிருக்கும். நான் பார்த்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு மகள் செல்ல எனக்குப் பதட்டமாகிறது. மகள் போய் அரைமணி நேரத்துக்கு மேலாகியும் வராததால் எனக்குப் பதட்டம் அதிகரிக்க, நான் கொஞ்சத் தூரம் சென்று பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவள் இல்லை. போன் செய்து பார்க்க அதுவும் நெட்வேக் பிரச்சனைபோல. போன் வேலை செய்யவில்லை. மாறி எங்காவது சென்றுவிட்டாளோ அல்லது வேறு என்னவோ என் மனம் போன போக்கில் என் கற்பனையும் செல்கிறது. நீங்கள் இருங்கோ. நான் போய் தேடிக்கொண்டுவருக்கிறேன் என்று கூற, "பிறகு நீ துலைஞ்சு நாங்கள் தேட ஏலாது. அவள் வந்திடுவாள். நீ உதிலை இரு" என்கிறார். நான் வந்து அவருக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தாலும் எனக்கு இருப்புக் கொள்ளுதில்லை. மறுபடியும் எழுந்து அங்கும் இங்கும் நடந்தபடி வழிபார்த்து நிற்கிறேன். எமது விமானத்தில் ஏறுவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது. எல்லோரும் தயாராகுங்கள் என விமானச் சேவையினர் ஒலிபரப்புச் செய்கின்றனர். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. விடுவிடுவென அந்தக் gate இக்கு அருகில் இருக்கும் கவுண்டருக்குச் சென்று மகளின் பாஸ்போட்டைக் கொடுத்து விபரத்தைக் கூறி ஒருமுறை அவளின் பெயரைக் கூறி உடனே வருமாறு அழைக்கும்படி கேட்கிறேன். அவரோ உடனே இன்னொரு போடிங் பாசைத் தயார் செய்துவிட்டு மகளின் பெயரைக் கூறி வரும்படி அழைக்கிறார். நான் போடிங்பாசையும் பாஸ்போட்டையும் வாங்கிக்கொண்டு திரும்புகிறேன். மகள் தூரத்தில் வருவது தெரிகிறது. என்னருகில் வந்தவுடன் “நீங்கள் தான் சொன்னீர்களா என்னைக் காணவில்லை என்று. நான் சின்னப் பிள்ளையா துலைய” என்கிறாள். போய் இவ்வளவு நேரம். எனக்குப் பயம் வரும் தானே என்று கூறியபடி பாஸ்போட்டையும் போர்டிங் பாசையும் நீட்டுகிறேன். என்னுடையதை அங்கு எங்குமே காணவில்லை. அதனால் அங்கு கதைத்து நானும் எடுத்துக்கொண்டு தான் வந்தேன் என்றுகூற நின்மதிப் பெருமூச்சு விட்டபடி கணவர் இருக்குமிடம் செல்கிறோம். விமான நிலையத்தைச் சுற்றிப்பார்த்து ஒரு படம் கூட எடுக்கவில்லையே என்று கவலை ஏற்பட்டாலும் சரி திரும்பவும் இந்த வழியால் தானே வரவேண்டும். அப்போது வடிவாகப் படம் எடுத்துக்கொள்வோம் என மனதைத் தேற்றிக்கொள்கிறேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் கட்டுநாயக்காவில் விமானம் தரையிறங்குகிறது. நான் 2019 இல் என் நூல் வெளியீட்டுக்காகச் சென்றிருந்தபடியால் பெரிதாக எனக்குப் பரபரப்பு ஏற்படவில்லை. ஆனாலும் படபடப்பு. போன் மற்றும் ஐபாட் என் சூட்கேசில் இருக்கிறதா ????இல்லையா ??? என்னும் படபடப்பு. குடிவரவுத் திணைக்களத்தில் எந்தக் கெடுபிடியும் இல்லை. நான் கணவர் பிள்ளைகளைக் கவனிக்காது என் கைப்பையையும் கொண்டு விரைவாக பயணப் பொதிகள் வரும் இடத்தை அடைகிறேன். அவை இன்னும் வர ஆரம்பிக்கவில்லை. என்ன இன்னும் சூட்கேசைக் காணவில்லை. என்ன செய்யிறாங்கள் என்று கணவனைப் பார்த்துச் சொல்கிறேன். எப்படியும் உங்கள் போன் கிடைக்கப்போவதில்லை அம்மா. அது எப்ப வந்தால் என்ன என எரிச்சலூட்டுகிறாள் மகள். கடைக்குட்டி மூன்று வயதில் வந்தபின் இப்போதுதான் வருவதனால் அங்கும் இங்கும் புதினம் பார்த்தபடி இருக்கிறாள். ஒருவாறு பொதிகள் வர ஆரம்பிக்க எனது பொதி பத்தாவதாய் வர உடனே எடுத்து சிப்பைத் திறந்து பார்க்கிறேன். என் போனும் ஐபாடும் இருக்க மனதில் பெரும் நிம்மதி ஏற்படுகிறது.
  18. மூன்று லண்டன் Heathrow விமானநிலையத்தில் எல்லாப் பயணப் பொதிகளையும் நிறுத்து சரி என்றபின் எமது சிறிய சூட்கேஸ் எல்லாவற்றையும் பெரிய பொதிகளுடனேயே போடலாம் என்றவுடன் அவற்றை இழுத்துப் பறிக்கும் வேலை மிச்சம் என எண்ணிக்கொண்டு அவற்றையும் போட்டுவிட்டு வெளியே வரத்தான் சிறிய சூட்கேஸ்களுக்கு பூட்டுகள் எதுவும் போடவில்லை என்ற எண்ணம் எழ மனம் திடுக்கிடுகிறது. உடனே கணவரிடமும் மகளிடமும் சொல்லிவிட்டு பதட்டத்துடன் பயணப் பொதிகளைப் போட்ட இடத்துக்குப் போகிறோம். நாம் நின்ற இடத்தில் இன்னொரு குடும்பம் நிற்க அவர்கள் போகுமட்டும் காத்திருந்து எங்கள் hand luggage ஐ மீளப் பெற முடியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, அதை செய்ய முடியாது. கொழும்பில் தான் அதை எடுக்கலாம் என்கிறார் அந்தப் பெண். வேறு வழியற்று காலை 6.30 இக்கு விமானத்தில் ஏறி இரண்டு மணி நேரத்தில் சூரிச் விமானத்தில் இருந்து இறங்க கணவரை ஏற்றிச் செல்ல electric வீல் செயாருடன் வந்து காத்திருக்கிறார் ஒரு பெண். எங்களைப் பின்னால் வரும்படி கூறிவிட்டு வேகமாகக் கணவரை அழைத்துக்கொண்டு சென்று ஒரு பெரிய அறையினுள் காத்திருக்கும்படி விடுகின்றார். போனை சாச் செய்யும் வசதியும் இருக்க முகநூல், யூரியூப் என்று நேரம் போவது தெரியாமல் போகிறது. இரவிரவாக சரியாகத் தூங்காததில் கணவர் தலைக்கு ruk சாக்கை வைத்துக்கொண்டு அந்த அகலமான பெஞ்சில் தூக்கவாரம்பிக்க நான் வெளியே சென்றுவிட்டு வருகிறேன் என்று மகள் கிளம்ப நானும் தூங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். பவுன் நகைகளும் காசுகளும் என் கைப்பையுள் இருக்க எப்படி நான் நின்மதியாய் தூங்க முடியும்?? எனவே மகள் வருமட்டும் முகநூலில் பொழுதைப் போக்க உணவுகள் சிலவற்றுடன் மகள் வருகிறாள். இங்கு சரியான விலை எல்லாம் என்றபடி எனக்கு உணவுப் பொதியைத் தந்துவிட்டுத் தகப்பனை எழுப்புகிறாள். நான் சென்று பக்கத்தில் இருந்த மெசினில் கோப்பி எடுத்துக்கொண்டு வந்து குடித்தபடி உண்கிறேன். ஐயோ அந்த போனையும் நான் என் hand லக்கேஜ்ஜின் முன் பொக்கற்றில் வைத்துவிட்டேனே. யாரும் எடுத்தால் 800 பவுண்ஸ் எனக்கு நட்டம் என்கிறார் மனிசன். தூங்கி எழுந்ததில் ஏற்பட்ட குழப்பமோ என்று நான் எண்ணியபடி போனைக் கையில வச்சுக்கொண்டு என்னப்பா விசர்க்கதை. 2 வரிசம் பாவிச்ச போனுக்கு ஆரும் உவ்வளவு காசைத் தருவினமே என்கிறேன். தன்ர தம்பியாருக்கு என்னோட வேலைசெய்யிற பிள்ளை ஒரு போன் தந்தது. அது புதுபோனப்பா. அதோட றிசீற்றும் அதுக்குள்ள இருந்தது. அதுகும் நான் உள்ளுக்கு வைக்காமல் வெளிப் பொக்கற்றுக்குள்ள வைச்சிட்டன். அதுகும் பொம்பேயில என்ன நடக்குமோ தெரியேல்லை. என்ன காலபலனோ என மீண்டும் மீண்டும் புலம்ப ஆரம்பிக்க, உங்களுக்கு நல்லா வேணும். எனக்கு ஒரு வார்த்தை கூட இதுபற்றிச் சொல்லாமல் என்ன கள்ளத்தனம் என்கிறேன். எல்லாத்தையுமே உனக்குக் கட்டாயம் சொல்லவேணுமோ? நீ மட்டும் எல்லாம் எனக்குச் சொல்லிப்போட்டோ செய்யிறாய் என்றவுடன் வாயை மூடிக் கொள்கிறேன். ஒருவாறு இரண்டு மணிநேரம் போய்விட்டது. இன்னும் ஒருமணிநேரம் கடத்திவிட்டால் போதும். முகநூலில் மேய்ந்ததில் எனது போனில் சாச் 10% வீதம்தான் இருக்கு எனக் காட்ட சரி இதை சாச்சில் போட்டிட்டு மற்ற போனை எடுத்துப் பாவிப்பம் என எண்ணியபடி சாச் செய்யப் போடுகிறேன். மற்ற போன் என்றவுடன் ஏதோ புதிது என்று எண்ணிவிட வேண்டாம். அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்படுத்திய ஐபோன். அதில் லைக்கா சிம் போட்டு அவசரத்துக்கு இலங்கை, இந்தியா என்று கதைப்பது. தற்போது இலங்கை சென்றால் அங்கத்தே சிம் போட்டுப் பாவிப்பதற்காகக் கொண்டு செல்கிறேன். கைப்பையுள் கைவிட்டு போனைத் தேடுகிறேன் அகப்படவில்லை. அப்போதுதான் நானும் அந்த போனையும் ஐபாட்டையும் என் hand luggage இல் வைத்தது நினைவில் வர நெஞ்சு பாதைக்கிறது. ஐயோ கடவுளே முருகா என் போனையும் ஐபாட்டையும் யாரும் எடுக்காமல் நீதான் காப்பாற்றிக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கவேண்டும் என்று மனதுள்ளே சொல்லிக்கொள்கிறேன். என் கணவர் வாய்விட்டு பெரிதாகச் சிரிக்க என் மகளும் சேர்ந்து சிரிக்கிறாள். ஏன் இரண்டு பேரும் உப்பிடிச் சிரிக்கிறியள் என்று எரிச்சலுடன் கேட்கிறேன். உங்கள் போனையும் நீங்கள் hand luggage இல் வச்சிட்டுத்தான் அப்பாவைத் திட்டினீங்களா என்கிறாள். அப்பதான் நான் மனதுள்ளே சொல்வதாய் எண்ணி வாய்விட்டுச் சொல்லிவிட்டேன் என்பது புரிய விட்டுக்கொடுக்காமல் என்னுடையது பழைய போன். துலைந்தாலும் 800 பவுண்டஸ் நட்டம் இல்லை என்கிறேன். கடவுளே கடவுளே அம்மாவின் போன் துலைந்தாலும் பறவாயில்லை. அப்பாவின் போன்மட்டும் வந்து சேரவேண்டும் என்கிறாள் மகள். என் போன் துலையாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்று மகளுக்குக் கூறினாலும் மனம் முழுவதும் தவிப்பாகவே இருக்க வேறுவழியின்றி ஒரு பக்கமாகச் சரிந்து அந்த பெஞ்சில் கண்களை மூடியபடி படுக்கிறேன். அம்மா எமக்கு நேரமாகிறது. எழும்பி ரொய்லெட் போவதானால் போய் தலையையும் இழுத்துக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிவிட்டேன். அப்பாவும் ரெடி என்கிறாள். மீண்டும் விமானதில் ஏறி வழமையாகச் செய்வதைச் செய்து இரண்டு திரைப்படங்களும் பார்த்து முடிய பொம்பேயில் தரையிறங்குகிறது விமானம். நான் அன்றுதான் முதன்முதல் அந்த விமானநிலையத்துக்கு வருகிறேன். நாம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இலங்கை போகும் விமானத்துக்கு மாறவேண்டும். அங்கும் ஒருவர வந்து கணவரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகக் சக்கர நாற்காலியுடன் காத்திருக்கிறார். அவரே எம்மைக் கூட்டிக்கொண்டு செல்ல நின்மதியாகச் செல்கிறோம். விமானம் மாறுபவர்களுக்கு பெரிதாக இடையில் எந்தச் சோதனையும் இருப்பதில்லை. ஆனால் குடிவரவுத் திணைக்களத்தில் எமது கடவுச் சீட்டைப் பாத்து ஏறப்போகும் விமானத்துக்குரிய போர்டிங்பாஸ் தருவார்கள். அதைப் பெற்றுக்கொண்டு போகும்போது எமது பைகளை, நாம் கொண்டு செல்லும் எல்லாவற்றையும் செக் பண்ணவேண்டும் என்கின்றனர். சரி என்று பெல்ட் உட்பட ஆனைத்தையும் ஸ்கான் செய்யும் பெல்ட் இல் வைத்துவிட்டு அந்தப் பக்கம் சென்றால் எல்லாவற்றையுமே திறவுங்கள் பார்க்கவேண்டும் என்றுவிட்டு ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்க எனக்கு எரிச்சல் வருகிறது. மற்றவர்கள் சிலரை செக் பண்ணாமலே அனுப்புகின்றனர். எழியவங்கள். எங்களை மட்டும் வேணும் எண்டு நிப்பாடி வச்சிருக்கிறாங்கள் என்கிறேன். வாயை மூடிக்கொண்டு நில் அவங்களுக்கும் தமிழ் தெரியலாம் என்று கணவர் சொல்ல நான் அமைதியாகிறேன். எமது பெரிய சூட்கேஸ்களை யாரும் திறக்காமல் இருக்க பாதுகாப்புக்காக பொலித்தீனால் சுற்றியே போட்டோம். மிகுதி பொலித்தீனை இலங்கையிலிருந்து வரும்போது பயன்படுத்துவதற்காக கணவரின் முதுகுப் பையில் வைத்திருந்தோம். அதைக் கொண்டுபோகக் கூடாது என்று எடுத்துவிட்டனர். அதன் விலை £30 பயன்படுத்தியதுபோக மிகுதி £20 வரும். :கணனியை எதற்கு கொண்டு செல்கிறாய் ? :அது என் கணனி :மடிக்கணனி தானே கொண்டு செல்வார்கள்? :அது அவர்கள் பிரச்சனை :இத்தனை பாரமாக இருக்கிறதே :அதனால் உனக்கு ஏதும் பிரச்சனையா ? :நோ நோ நோ என்று சிரித்து மழுப்புகிறான். அம்மா நீங்கள் இங்காலே வாருங்கள். நான் பார்க்கிறேன் என்றுவிட்டு மகள் போய் நிற்க அதன்பின் அவன் எதுவும் பேசவில்லை.
  19. (5) இரவு சாப்பாட்டுக்கு வெளியே போகவும் முடியாது கொண்டுவந்தும் தர மாட்டார்களாம்.சரி இருங்கோ வாறன் என்று சிற்றூண்டிசாலைப் பக்கம் போனால் பூட்டிக்கிடக்கறது. மெதுவாக வரவேற்பறையில் இருந்தவளுடன் கதையைப் போட்டு கொஞ்ச பணமும் கொடுத்தேன்.சரி ஒரு 15-20 நிமிடம் இருந்துகொள் ஏதாவது செய்கிறேன் என்றாள்.சொன்னது போலவே 15வது நிமிடம் தன்னோடு கூட்டிக் கொண்டு சிற்றூண்டிச்சாலைப் பக்கம் போய் கதவைத் திறந்து எல்லாம் நாளை காலைக்காக வைக்கப்பட்டிருக்கு தேவையானதை எடு என்றாள். கூடுதலாக எடுக்காமல் பாண் பழங்கள் பிள்ளைகளுக்கு பட்டர் ஜாம் என்று எடுத்துவிட்டு இன்னும் கொஞ்சபணம் கொடுத்தேன்.சந்தோசமாக வாங்கினாள்.வேறு ஏதாவது தேவை என்றால் வரவேற்பறைக்கு வா என்றாள்.இத்தனையும் தந்ததே கடவுளைக் கண்டமாதிரி.அறையில் இரவுச் சாப்பாடு சரி. பகல் முழுவதும் படுத்தபடியால் இரவு எல்லோருக்கும் நித்திரைக்குப் பிரச்சனை.சரி இப்படியே இருக்க முடியாது சூடாக்கப்பட்ட நீச்சல்தடாகத்தில் குளிக்கப் போகிறேன் யார்யாருக்கு வர விருப்பம் என்றால்.ஆளையாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நான் துவாயும் எடுத்துக் கொண்டு போய்விட்டேன். எமது அறையில் இருந்து பார்க்க நீச்சல்தடாகம் தெரிந்தது. நான் தைரியத்துடன் போனாலும் வெளியில் இருந்து அறையில் உடுப்புகளை கழற்றிவிட்டு வெறும் காலுடன் பனிக்குள் நடக்க வேண்டுமே என்பதை எண்ண நடுக்கமாகவே இருந்தது.இனி என்ன சொல்லிப் போட்டு வேற வந்துவிட்டேன் திரும்பவும் போகவா முடியும்.திடுதிடென்று போய் தண்ணீரில் இறங்கிவிட்டேன்.யன்னலால் பார்த்துக் கொண்டிருக்க அவர்களுக்கும் இருப்புக் கொள்ளவில்லை.என்ன எண்ணினார்களோ எல்லோரும் வந்துவிட்டனர். ஒருமணி நேரத்துக்கு மேலாக நல்ல சூடான தண்ணீர் குளிக்க நல்ல சுகமாக இருந்தது.வெளியே போகவே மனம் வரவில்லை.முக்கியமாக பிள்ளைகள்.ஒரு மாதிரியாக எல்லோரும் அறைக்குப் போய் நன்றாகவே தூங்கிவிட்டோம். அடுத்தநாள் காலை 11 மணிக்கிடையில் கொட்டேலை விடவேண்டும்.பனியில் சறுக்கி விளையாடாமல் வீடு போகமாட்டோம் என்று மகளும் மருமகனும் வேற அடம்பிடிக்கிறார்கள்.சரி முட்டை முடிச்சுக்களுடன் கிளம்புவோம் அதற்கிடையில் பக்கத்தில் ஏதாவதொரு இடத்தில் சக்கரத்துக்கு சங்கிலியை வாங்கி மாட்டுவோம் என்று முன்னரே பேசிக் கொண்டோம். பனிப் பொழியும்.
  20. மலர்............(5). வவுனியாவில் நிர்மலா நடந்து செல்லும் அந்த வீதியில் அநேகமானோர் பலதரப்பட்ட வாகனங்கள், வண்டிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள்.அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் நடந்தும் போய் வந்து கொண்டிருக்கின்றனர். பாடசாலைப் பிள்ளைகளும் முதுகில் புத்தகப் பையை சுமந்தபடி நடக்கிறார்கள். அப்போது தனியாக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த இரு பொம்பிளைப் பிள்ளைகளை நிர்மலா வழிமறித்து, பிள்ளைகள் இங்கு பக்கத்தில் ஏதாவது வீடுகள் வாடகைக்கு இருக்கிறதா என்று வினவுகிறாள். அவர்களும் அப்படி எதுவும் தமக்குத் தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்க அவளும் பரவாயில்லை என்று சொல்லி விட்டு அவர்களைக் கடந்து போகிறாள். அப்போது அங்கு சைக்கிளில் வந்த ஒரு பையனை மறித்த அந்தப் பிள்ளைகளுள் ஒருத்தி அவனிடம் ஏன்டா ரமேஷ் இங்கு பக்கத்தில் எங்காவது வீடு வாடகைக்கு இருக்குதா என்று கேட்க அவனும் கொஞ்சம் யோசித்து அந்த பைக் கடைக்காரர் வீட்டு கேட்டில "டூ லெட்" பலகையைப் பார்த்தனான் தேவையென்றால் கேட்டுப் பார்க்கலாம் என்று சொல்கிறான். உடனே மற்றப்பெண் சற்று தூரத்தில் செல்லும் நிர்மலாவை சத்தமாய் அழைத்து அக்கா சற்று நில்லுங்கள் என்று சொல்ல அதைக் கேட்டுத் திரும்பிய நிர்மலாவும் அவர்களுக்கு அருகில் வருகிறாள். அந்தப் பெண்ணும் அக்கா இவன் இங்கு அருகில் ஒரு வீட்டில் "டூ லெட்" பலகையைப் பார்த்ததாக சொல்கிறான்.விரும்பினால் சென்று பாருங்கள் என்று சொல்கிறாள். அந்தப் பையனும் அக்கா அது பக்கத்தில்தான் இருக்கு நானும் போற வழிதான் வாங்கோ காட்டிட்டுப் போறேன் என்று சொல்லி சயிக்கிளை விட்டிறங்கி உருட்டிக் கொண்டு நடந்து வருகிறான். அந்த வீதியில் சிறிது தூரம் சென்று ஒரு ஒழுங்கையில் இறங்கி இரு வளவு தாண்டி நடந்து வர ஒரு பெரிய கேட்டில் "டூ லெட்" பலகை தொங்குகிறது. பையனும் இடத்தைக் காட்டி விட்டு சயிக்கிளில் ஏறி சிட்டாய் பறக்கிறான். அந்த வீடு வெளிக்கேட்டில் இருந்து சிறிது தூரம் உள்வாங்கி இருக்கிறது. கொஞ்சம் பழைய காலத்து வீடானபோதும் அதை மிகவும் அழகாக நவீனமயப் படுத்தி இருந்தார்கள். ஆங்காங்கே செம்பருத்தி, ரோஜா மற்றும் சில பூ மரங்கள் செடி கொடிகளும் சரியான நீரின்றி காய்ந்துபோய் இருக்கின்றன. வீட்டின் முன்னால் முற்றத்தில் ஒரு மல்லிகை பந்தல் ஆர்ச் வடிவுக் கம்பிப் பந்தலில் படர்ந்திருக்கிறது. அங்கிருக்கும் தென்னை மரங்களின் ஓலைகள் எல்லாம் மாலையில் கிளிகள் கூட்டமாக வந்து தங்குவதால் நார் நாராக கிழிந்து தொங்குகின்றன.எல்லாவற்றையும் ஒரு கண்ணோட்டத்தில் நிர்மலா கவனித்து விடுகிறாள். அங்கு மல்லிகை பந்தலின் நிழலில் ஒரு ஐயா சரத்தோடும் வெற்றுடம்பில் ஒரு சிவப்புத் துவாயும் தோளில் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அவர் மடியில் ஒரு சின்னப்பிள்ளை விரல் சூப்பியபடி உறங்கிக் கொண்டிருக்கு. கையில் இருந்த பனை ஓலை விசிறியால் அவர் குழந்தைக்கும் விசிறி அப்பப்ப தனக்கும் விசிறிக் கொள்கிறார். நிர்மலாவும் படலையைத் திறந்து கொஞ்சம் உள்ளே வந்து ஐயா நாய் நிக்குதோ என்று கேட்டபடி சுற்று முற்றும் பார்க்கிறாள். அப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு ஆச்சி வருகிறா. அவவின் சீலைத் தலைப்பப் பிடித்துக் கொண்டு அரைக் காற்சட்டையுடன் ஒரு சிறுவன் மூக்கு ஒழுக வருகிறான். இஞ்சையப்பா யாரோ படலையடியில் நிக்கினம் ஒருக்கால் என்னெண்டு விசாரியுங்கோ என்று சொல்ல அப்புவும் அங்க பார்த்து பிள்ளை இங்க வாங்கோ உங்களுக்கு என்ன வேணுமென்று கேட்கிறார். --- நாய் நிக்குதோ ஐயா. --- ஒரு நாய் நிக்குதுதான் அது ஒன்றும் செய்யாது நீங்கள் பயப்பிடாமல் வாங்கோ என்று ஆச்சி சொல்லுறா. அவர்களுக்கு அருகே வந்த நிர்மலாவும் ஆச்சி இங்கு வீடு வாடகைக்கு என்று பலைகையில எழுதி இருக்கு அதுதான் விசாரிக்க வந்தனான். --- யாருக்கு பிள்ளை வீடு. பெரிய குடும்பமோ என்று ஐயா கேட்கிறார். --- இல்லை ஐயா, எனக்குத்தான். அவரின் மடியில் இருக்கும் பிள்ளையைப் பார்த்து பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்கிறாள். --- இவளுக்கோ ....ஓ இவள் பெயர் சிவாங்கி. எப்பவும் சிணுங்கிக் கொண்டிருப்பாள். அப்படியா நல்ல பெயர். அவர் தொடர்ந்து பேரன் பெயர் முகிலன் என்கிறார். ம்....இதுவும் நல்ல பெயர். என்று சொல்கிறாள். ஆச்சி பேரனின் மூக்கை வழித்து எறிந்து விட்டு தனது முந்தானையால் அவன் மூக்கை அழுத்தித் துடைத்து விடுகிறா. இவர்கள் இப்படி கதைத்துக் கொண்டிருக்க முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிளில் உள்ளே வந்து நிறுத்தி விட்டு இறங்கி வருகிறார். ஆச்சி அவளிடம் இவர்தான் எங்கட மகன் கதிரவன். வவுனியா டவுனில் மோட்டார் சைக்கிள் கடை வைத்திருக்கிறார். நீங்கள் இவரோடு கதையுங்கோ என்று சொல்லிவிட்டு தம்பி கதிரவன் இவ வீடு வாடகைக்கு கேட்டு வந்திருக்கிறா, என்னண்டு நீ விசாரி என்று சொல்கிறாள். நிர்மலா அவரைப் பார்த்து வணக்கம் சொல்ல, அவனும் வணக்கம் சொல்லிவிட்டு விசாரிக்கிறான். நீங்கள் எங்கிருந்து வாறீங்கள். குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கினம். --- நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறேன்.தனியாக எனக்கு மட்டும்தான். ஒரு சிறு அறை இருந்தால் கூடப் போதும். --- இங்கு எங்கே வேலை செய்கிறீங்கள். --- நான் இனித்தான் வேலை தேட வேண்டும். --- அப்போ உங்களின் வருமானம் என்று கேட்கிறான். ---எனக்கு நல்ல வேலையொன்று கிடைக்கும்வரை பிள்ளைகளுக்கு ட்யூசன் குடுக்கலாம் என்றிருக்கிறேன்.மேலும் ஒன்லைன் மூலமாகவும் A /L வரை என்னால் படிப்பு சொல்லிக் குடுக்க முடியும் என்கிறாள். --- ஆச்சி குறுக்கிட்டு என்னபிள்ளை சொல்லுறாய், டியூசன் குடுத்து அதில என்ன வருமானம் வர போகுது. அதில வீட்டு வாடகை எங்க, உன்ர சாப்பாட்டு செலவுகள் எங்க என்று சொல்கிறாள். தாயை இடைமறித்த கதிரவன் தாயிடம் அம்மா நீ இந்தக் காலத்தில் இருக்கிறாய் இப்பவெல்லாம் டியூஷனில் நிறைய சம்பாதிக்கலாம் தெரியுமா, வீட்டுக்குள் இருந்து கொண்டே நாடுமுழுக்க பாடம் சொல்லிக் குடுக்கலாம் தெரியுமே, பின் நிர்மலாவின் பக்கம் திரும்பி அம்மா அப்படித்தான் நீங்கள் தப்பா நினைக்க வேண்டாம் சரி நீங்கள் சொல்லுங்கோ. --- இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு அறை போதும்.சிறிதாய் இருந்தாலும் பரவாயில்லை.வாடகை எவ்வளவு என்று சொன்னால் நல்லது. --- நாங்கள் ஒரு குடும்பத்துக்கு, மேல் வீட்டை முழுதாய் குடுக்கிறதாய்த்தான் இருக்கிறம். அங்கு குசினி, டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கிறது. நீங்கள் தனியாக இருப்பதால், உங்களுக்கு விருப்பம் என்றால் வீட்டின் பின்பக்கம் ஒரு அறை இருக்கு அதைத் தருகிறேன். பின் விறாந்தையில் வைத்து நீங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்கலாம். பக்கத்தில கிணத்தடியோடு குளியலறை மற்றும் டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கு அதை நீங்கள் பாவிக்கலாம். நீங்கள் சமைக்க ஒரு பத்தி இறக்கித் தாறன். ஒரு எண்ணாயிரம் ரூபாய் தந்தால் போதும். இரண்டு மாத வாடகை முன்பணமாகத் தரவேண்டும். --- அவள் கொஞ்சம் யோசிக்கிறாள்...... என்ன யோசிக்கிறீங்கள் எதுவென்றாலும் சொல்லுங்கோ. --- இல்ல, உடனடியாக அவ்வளவு பணம் தர எனக்கு கொஞ்சம் சிரமம். அதுதான் யோசிக்கிறேன். அப்போது ஆச்சி மகனைத் தனியாக அழைத்துப் போய் ....எட தம்பி அந்தப் பிள்ளையைப் பார்த்தால் நல்ல பிள்ளை போலத் தெரியுது. எங்களுக்கும் உதவியாய் இருக்கும். அத்துடன் உன்ர பிள்ளையளுக்கும் பிராக்காய் இருக்கும். இந்தப் பெரிய வீட்டில நானும் கொப்பரும் ஆளை யாள் பார்த்து முழுசிக் கொண்டு இருக்கிறம். நீ வாடைக்காசை கொஞ்சம் குறைத்து விடு. இப்ப பத்தி ஒன்றும் போடவேண்டாம், அவவும் எங்கட குசினியையே பாவிக்கட்டும் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று படுகிறது. பின் அவன் அவளிடம் வந்து நிர்மலா நீங்கள் ஒரு நல்ல வேலை எடுக்கும்வரை ஐயாயிரம் ரூபாய் தந்தால் போதும். முன்பணமும் இப்ப அவசரமில்லை என்று சொல்கிறான். --- சரிங்க....இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டன். --- எப்ப இங்கு குடி வாறீங்கள். --- உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் இன்றைக்கே வந்து விடுகிறேன்.காலையில் இங்கு வரும்போது முருகனைக் கும்பிட்டுவிட்டு வந்தேன் அவர் கை விடேல்லை என்று சொல்கிறாள். --- உங்கட உடைமைகள் எங்கே இருக்கு. --- என்ன பெரிய உடைமைகள் ஒரு சூட்கேஸ் அது டவுனில் ஒரு விடுதியில் இருக்கு....! --- சரி நீங்கள் போய் அதை எடுத்துக் கொண்டு வாங்கோ அதற்குள் நான் அறையை தயார்படுத்தி வைக்கிறேன். நிர்மலாவும் வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து விடுதிக்கு சென்று தனது பெட்டியை எடுத்துக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு வாழைப்பழமும் பாணும் வாங்கிக் கொண்டு வருகிறாள்.....! மலரும்.......! 🌷
  21. முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது 👆 ஸ்மார்ட்டான chat gpt ஐயும் கிரகிப்பில் பிரச்சினையுடையோர் பாவித்தால் பலன் இருக்காது என்பதற்கு, பெருமாள் நல்ல சாட்சி பகர்ந்திருக்கிறார் என நினைக்கிறேன்!😎 இன்புழுவன்சாத் தொற்றினால் அரை மில்லியன் பேர் இறந்ததாகச் சொல்லியிருக்கிறேன், அவர் அப்படியே வெட்டி ஒட்டியிருக்கிறார். மொழிபெயர்க்கும் போது எழுவாய் பயனிலை எல்லாவற்றையும் குழப்பியிருக்கிறது. அதை அப்படியே நம்புகிறார்! Chat gpt:1, பெருமாள்:0😂 இதை ஏற்கனவே நான் பாகம் 2 இல் எழுதியிருக்கிறேனே? வரலாற்று ஆய்வாளர்கள் எழுதாமல் எங்கேயிருந்து நான் எடுத்தேன் என்று நினைக்கிறீர்கள்? வாசிக்காமல் சொல்லும் கருத்துக்கள், (அல்லது வாசிக்காமல் கொப்பி செய்து chat gpt இல் ஒட்டி வரும் கருத்துக்கள்😂) இவற்றிற்கு தனித் தனியாகப் பதில் சொல்லும் நேரம் இல்லை! எனவே இணைந்திருங்கள் அல்லது விலகியிருங்கள் - உங்கள் இஷ்டம்!👍
  22. சதிக் கோட்பாட்டாளர்கள் சரியான 'நடுநிலையாக' எழுதுவார்கள் போல! அப்ப சரி.😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.