Leaderboard
-
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்14Points8910Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்11Points87990Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்9Points7054Posts -
மெசொபொத்தேமியா சுமேரியர்
கருத்துக்கள உறவுகள்9Points8557Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/25/23 in all areas
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
7 pointsபன்னிரண்டு முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும் “ என்றார்எம்மைக் கவனித்துக்கொண்டு நின்ற ஒருவர். மகளும் நானும் சென்று கேணியைப் பார்த்தால் ஒரு நான்கு இளம் பெண்கள் விளையாடிக்கொண்டு இருக்கினம். அதற்குள் சென்று வடிவாக நீந்த முடியாது என்று தெரிந்துவிட காங்கேசன் துறைக்கே போகலாம் என்று முடிவெடுக்கிறோம். முன்னர் கீரிமலையில் ஒரு மடம் இருந்தது. நாம் சிறுவர்களாய் இருந்த நாட்தொட்டு வெளிநாடு வரும்வரை ஆண்டில் ஒரு தடவை கீரிமலைக்குப் போவோம். அந்த மடத்தில் நன்னீர் கிணறும் உண்டு. அங்கு சென்று குளித்து, மடத்தில் அசுவாசமாக இருந்து உண்டு குடித்து மகிழ்ந்து வருவோம். இப்ப அந்த மடம் இடிபாடுகளுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. எம்மூரைச் சேர்ந்த ஆறு திருமுருகன் என்பவர் பெரிய மண்டபம் ஒன்றும், வயோதிபர்களுக்காக மடம் ஒன்றும் வெளிநாட்டவர் போனால் கூடத் தங்குவதற்கு வசதியாக மண்டபத்துடன் கூடிய அறைகளும் கட்டியுள்ளார். மறு பக்கம் ஒரு சிறு கோவில். அதில் ஒரு இளம் ஐயர் நின்றுகொண்டு வாங்கோ, அரிச்சனை செய்துவிட்டுப் போங்கோ என்கிறார். நாம் போகவில்லை. நகுலேச்சுரம் என்று சொல்லப்படும் இலங்கையின் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றான அது புதுப்பிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகிறது. நாம் உள்ளே செல்ல யாரும் கோவிலின் உள்ளே இல்லை. மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருக்க நாம், சுற்றிக் கும்பிட்டுவிட்டு வெளியே வருகிறோம். அங்கிருந்து பஸ்சில் போவதற்காக பஸ்ராண்டுக்குப் போனால் அரை மணி செல்லும் பஸ் வெளிக்கிட என்கிறார் காத்திருந்த ஒருவர். கண்ணில் அம்மாச்சி உணவகம் பட அங்கு சென்றுவிட்டுச் செல்வோம் என்கிறேன். அந்தப் பகுதிகளிலோ அல்லது காங்கேசன் துறையிலோ அதுபோல உணவகம் இல்லாததால் மனிசன் ஓம் என்று சம்மதிக்கிறார். நாம் உள்ளே செல்ல கொஞ்ச சிங்களச் சனம் இருந்து உணவு உண்கிறது. நாம் வடைக்கும் தேனீருக்கும் ஓடர் கொடுத்துவிட்டு சென்று அமர்கிறோம். கிளிநொச்சி மற்றும் கோண்டாவிலில் இருக்கும் அம்மாச்சியில் நாம் தான் வாங்கிக்கொண்டு சென்று அமர வேண்டும். இது நன்றாக சுத்தமாக இருக்கு. சுத்தம் செய்வதற்கு என்று ஒரு பெண் முண் பகுதியில் நிற்கிறார். நாம் ஓடர் செய்தபோது வடை சுட்டுத் தருகிறோம். போய் இருங்கள் என்று சொன்னதனால் வந்து இருந்தோம். சிறிது நேரத்தில் ஒரு சுற்றுலாப் பயணிகளுடன் பஸ் வந்து நிற்க தப தப என எல்லோரும் உள்ளே வருகின்றனர். உள்ளே போதிய இடம் இல்லாததால் சிலர் திரும்பவும் பஸ்சுக்குள் போகின்றனர். பத்து நிமிடமாகியும் எமக்கு வடையோ தேநீரோ வரவில்லை. பிறகு வந்தவர்கள் சுற்றி நின்று ஓடர் செய்வதும் வாங்கிச் சென்று சென்று உண்பதுமாக இருக்க போய் கேளுங்கப்பா என்கிறேன். வரும் தானே பொறு என்று கூறிவிட்டு பார்த்துக்கொண்டிருக்க கடுப்பாகி நான் எழுந்து சென்று, தங்கச்சி வடையும் தேனீரும் கேட்டனாங்கள் இன்னும் வரேல்லை என்கிறேன். அந்தப் பெண் என்னை கவனிக்காததுபோல் நின்று அவர்களுக்கே கொடுத்துக்கொண்டு நிற்க, நான் திரும்பி வந்து எழும்புங்கோ போவம் என்கிறேன். கொஞ்சம் பொறுமையாய் இரன் என்று மனிசன் சொல்லி வெளியே நின்ற பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண் நாம் வந்ததையும் இத்தனைநேரம் இருந்ததையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். உடனே பொறுங்கோ நான் எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி ஐந்து நிமிடத்தில் எமக்கு வடையும் தேனீரும் கொண்டுவந்து தர நான் நன்றி என்கிறேன். வடை கோபத்தில் கூட மிகச் சுவையாக இருக்கிறது. தேனீரும் தான். வேறு ஏதும் வேணுமா என்றும் கேட்க, மோதகமும் கடலை வடையும் உளுந்து வடையும் போண்டாவும் ஆறு ஆறு பார்சல் தர முடியுமா என்று கேட்க இருங்கோ கட்டிக்கொண்டு வாறன் என்று செல்லிவிட்டுச் செல்கிறார். ஒரு பத்து நிமிடங்களில் பார்சலையும் கையால் எழுதிய பில்லையும் கொண்டு வர நான் எழுந்து பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு இந்தாங்கோ நீங்கள் வச்சுக்கொள்ளுங்கோ என்று ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுக்க வேண்டாம் என்று மறுக்கிறார். நான் அவர் மறுக்க மறுக்க அவர் பொக்கற்றில் வைத்துவிட்டு நீங்கள் செய்தது பெரிய உதவி என்றுவிட்டு வர, கெதியா ஓடிவா பஸ் வெளிக்கிடுதுபோல என்றபடி ஓடிச் சென்று மனிசன் மறிக்க நானும் மகளும் அவர் பின் ஏறுகிறோம். பஸ்சில் நான்குபேரே இருக்க நாம் முன்பக்கம் சென்று அமர்கிறோம். எங்கும் வெறிச்சோடி வீடுவாசல்கள் பெரிதாக இல்லாமல் இருக்கு. காங்கேசன்துறை கடற்கரை முன்னர் 2017,19 களில் சென்றபோது நன்றாகச் சுத்தமாக இருந்தது. இப்ப சிறிது பொலிதீன், பெட்டிகள் என்று ஆங்காங்கே குப்பைகள் சேரத் தொடங்கிவிட்டன. வாரநாட்களில் சென்றால் ஆட்கள் நடமாட்டமே இன்றி இரண்டு மணிநேரம் தனியாகவே நாம் மட்டும் நீந்திவிட்டு வந்தோம். ஒரு சனிக்கிழமை சென்றால் எம்மவர்கள் குடும்பம் குடும்பமாக, நண்பர்கள் கூட்டம், ஆண்களும் பெண்களும் ஒருபுறம் திருவிழாவுக்கு வந்ததுபோல் அத்தனை சனம். சிலர் பட்டம்கூட விட்டுக்கொண்டு நின்றனர். அன்று ஆட்களைப் பார்ப்பதும் அவர்களின் கூத்துக்களைப் பார்ப்பதிலுமே நேரம் போய்விட்டது. ஆட்கள் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக பெரிதாக எதுவும் இல்லை. கடைகளும் நிறைய இல்லை. இருக்கும் இரு கடைகளும் சிங்களவர்களே வைத்திருக்கின்றனர் என்றார் ஒருவர். வெயில் மட்டும் சொல்லி முடியாது. மற்றப்படி நீந்துவதற்கு ஏற்ற கடற்கரை. அங்கு பயணிகள் விடுதிகூட இருக்கு.ராஜபக்க்ஷவின் என்று கேள்வி. கசூரினா கடற்கரையில் கிழமை நாட்களில் பெரிதாக ஆட்கள் இல்லை. உள்ளே போனால் மட்டுமே நன்றாக நீந்தலாம். ஒரு ஐம்பது நூறு மீற்றர் வரை முழங்காலளவு தண்ணீர்தான். ஒருநாள் வான் பிடித்துக்கொண்டு இருபது பேர் போய் வந்தோம். வானுக்கு 10000 ரூபாய். உணவுகள் வீட்டிலிருந்தே செய்துகொண்டு போனோம். எனக்குக் கடையில் வாங்கும் உணவுகள் பிடிப்பதே இல்லை. அதனால் ஆட்டிறைச்சிக் கறி, சம்பல் சொதியுடன் இடியப்பமும் அவித்து பாணும் வாங்கிச் சென்றோம். முதல் நாள் நானும் மச்சாளும் பிள்ளைகளும் சேர்ந்து ரோள்ஸ் செய்ததில் கடினமாக இருக்கவில்லை. ஃபிரிஜ் இல் வைத்துவிட்டு கலை எழுந்து பொரித்து, ஆக யூஸ், மிக்சர், தண்ணீர் மட்டுமே வெளியில் வாங்கியது. திரும்ப வரும்போது எல்லாமே காலி. உறவுகளுடன் கூடி மகிழ்ந்து உண்டது என்பது எமக்கு மனதுக்கு அத்தனை மகிழ்வைத் தந்தது. இடையில் பண்ணாகத்தில் நிறுத்தி கடையில் ஐஸ்கிரீம், யூஸ் என வாங்கிக் குடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.7 points
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsதனது பிராந்திய நலனிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமிழரைப் பாவித்த இந்தியா இலங்கை மீது இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களைப் போடுவதன் மூலம் மட்டுமே அதனை தனது வழிக்குக் கொண்டுவரலாம் என்பதை இந்தியா நம்பவில்லை. கொழும்பு அரசாங்கத்தை எப்படியாவது சீர்குலைத்துவிடவேண்டும் என்று எண்ணிய இந்தியா, தேவையேற்படின் இராணுவ நடவடிக்கை ஒன்றினையும் மேற்கொள்ள ஆயத்தமாகியது. இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக தமிழர் மேல் இலங்கையரசால் நடத்தப்பட்ட அக்கிரமங்களையும், தனிநாட்டிற்கான தமிழரின் கோரிக்கையினையும் பாவித்தது. தனது பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அதிகாரிகளிடம் பேசிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் முன்னால் உள்ள தெரிவுகள் குறித்து அறிக்கையொன்றினைத் தயாரிக்குமாறு கோரியிருந்தார். இரண்டுவகையான தெரிவுகள் இந்திராவிடம் கையளிக்கப்பட்டன. ஒன்று கடுமையானது மற்றையது மென்மையானது. கடுமையான தெரிவு வங்கதேசத்தில் இந்தியா நடத்திய போருக்கு ஒப்பானது. தமிழ் ஆயுதக் குழுக்கள் முன்னின்று சண்டையினை ஆரம்பிக்க, இந்திய ராணுவம் இறுதியில் போரினை முடித்துவைப்பது என்பதே அத்திட்டம். மென்மையான தெரிவு என்னவெனில், இராஜதந்திர அழுத்தங்களைத் தொடர்ச்சியாக இலங்கை மீது செலுத்தி அதனை அடிபணிய வைப்பது. ஆனால், வங்கதேச விடுதலை பாணியிலான கடுமையான தெரிவினை நிராகரித்த இந்திரா, மென்மையான தெரிவான ராஜதந்திர அழுத்தத்தின் மூலம் இலங்கையைப் பணியவைக்கலாம் என்று எண்ணினார். ஆனால், ரோ அதிகாரிகள் முன்வைத்த தமிழ்ப் போராளிகளுக்கு உதவுவதன் மூலமும், ராஜதந்திர அழுத்தங்கள் மூலமும் ஜெயாரை வழிக்குக் கொண்டுவரலாம் என்கிற ஆலோசனையினை இந்திரா ஏற்றுக்கொண்டார். தமிழ்ப் போராளிகளிப் பயிற்றுவிக்க அமர்த்தப்பட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் போராளிகளுடன் பேசும்போது, இலங்கை மீது ஆக்கிரமிப்பொன்றை மேற்கொள்ளும் திட்டம் இந்தியாவிற்கு இருப்பதாகவும், அப்படியான ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றில் போராளிகள் இந்திய ராணுவத்தின் துணைப்படைகளாக இயங்கவேண்டி வரும் என்றும் கூறியிருக்கிறார்கள். "நீங்கள் எங்களுக்கு வழியைக் காட்டுங்கள், மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று இந்திய உயர் ராணுவ அதிகாரியொருவர் தன்னிடம் தெரிவித்ததாக ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்த்தர் சங்கர் ராஜி கூறினார். அதேவேளை, லெபனானில் கெரில்லா பாணியிலான ஆயுதப் பயிற்சிக்குச் சென்றிருந்த ஈ.பி.டி.பி யின் டக்கிளஸ் தேவானந்தா கூறும்போது, இந்தியாவில் தமக்கு வழங்கப்பட்ட பயிற்சி மரபுவழிப் போர்முறையிலானது என்று கூறியிருக்கிறார். தமக்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் பழமையானவையாகக் காணப்பட்டதுடன், நடைமுறைச் சாத்தியமற்றவை என்பதையும் பிரபாகரன் உணர்ந்துகொண்டார். தமக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களைப் பார்த்துப் பதற்றமடைந்த பிரபாகரன், "பாருங்கள், அவர்கள் எங்களுக்கு பழைய ஆயுதங்களைத் தந்திருக்கிறார்கள். எங்களை மடையர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலுள்ளது" என்று பிரபாகரன் விசனத்துடன் கூறியிருக்கிறார். இந்தியாவின் குறிக்கோள்களை அடையும் வகையிலேயே போராளிகளுக்கான பயிற்சிகளை இந்திய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். வரைபடங்களை வாசித்து அறிந்துகொள்ளுதல், வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் பாலங்களை வரைந்துகொள்ளுதல், ரயில்ப்பாதைகள் மற்றும் முக்கிய கட்டடங்களின் அமைவிடங்களைத் துல்லியமாக கணித்தல், முக்கிய இடங்களின் அமைவிடங்களை புகைப்படம் எடுத்தல், உலங்குவானூர்திகள் தரையிறங்கக் கூடிய பரந்த வெளிகளை அடையாளம் காணுதல், எதிரியின் கடற்படையின் நடமாட்டங்களைக் கண்காணித்தல் ஆகிய நடவடிக்கைகளையே இந்திய அதிகாரிகள் போராளிகளுக்குக் கற்றுத் தந்தனர். டெலோ அமைப்பின் இரு விசேட குழுக்கள் திருகோணமலைத் துறைமுகம் தொடர்பான விடயங்களை சேகரிப்பதற்காக மட்டுமே பயிற்றப்பட்டனர். பெரும்பான்மையான போராளிகுழுத் தலைவர்கள் இந்தியாவின் திட்டத்தை நன்கு அறிந்துகொண்டனர். "இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைக்காகவும், மூலோபாய இலக்குகளை அடைந்துகொள்வதற்காகவும் எம்மைப் பாவிக்கிறது" என்று சங்கர் ராஜி கூறினார். ஆனால், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு வேறு தெரிவுகள் இல்லாமையினால், இந்தியாவின் திட்டத்தின்படியே நடக்க இணங்கினார்கள். நடப்பது என்னவென்பதை பிரபாகரன் உடனடியாகவே கண்டுகொண்டார். இந்தியாவின் நலன்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு நேர் எதிரானது என்பதை அவர் உணர்ந்தார். ஆகவே, தமிழர்களின் அபிலாஷையான தனிநாட்டினை அடையவேண்டுமென்றால், இந்தியாவை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் அவர் உணர்ந்துகொண்டார். சஞ்சேயுடன் இந்திரா காந்தி தமிழ்மக்களின் நலன்களுக்கும், இந்தியாவின் நலன்களுக்கும் இடையிலான மோதல், 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் , ராஜீவ் காந்தி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைச் செய்த் தீர்மானித்தபோது வெளிச்சத்திற்கு வந்தது. தமிழரின் அவலங்கள் தொடர்பான விடயங்களில் அளவுக்கதிகமான விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இந்திய அதிகாரிகள் தயாராக இருந்தார்கள். அவர்களின் கவனமெல்லாம் இந்தியாவின் நலன்களை ஒப்பந்தத்தில் எப்படியாவது சேர்த்துக்கொள்வதிலேயே இருந்தது. இதனை அவர்கள் எதுவித விட்டுக்கொடுப்பிற்கும் இடமின்றிச் செய்தார்கள். இந்தியாவின் நலன்களாக ஒப்பந்தத்தில் பின்வருவன இந்திய அதிகாரிகளால் புகுத்தப்பட்டன : 1. இலங்கையில் வெளிநாடுகளின் ராணுவத்தினரோ, புலநாய்வு அமைப்புக்களோ செயற்பட முடியாது. 2. திருகோணமலை துறைமுகத்தையோ அல்லது இலங்கையில் இருக்கும் வேறு எந்தவொரு துறைமுகத்தையோ வேறு எந்தவொரு நாட்டினதும் இராணுவம் பாவிக்க இலங்கை அனுமதியளிக்க முடியாது. 3. திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்திய - இலங்கை நிறுவனங்களின் ஒருங்கமைப்பே பராமரிக்க முடியும். 4. இலங்கையில் செயற்பட்டு வரும் வெளிநாடுகளின் ஒலிபரப்பு நிலையங்கள் அவற்றினை ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது புலநாய்வுச் செயற்பாடுகளுக்காகவோ பயன்படுத்துவதை இலங்கை அனுமதிக்க முடியாது. இவற்றுள் இறுதியாக இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனை, வொயிஸ் ஒப் அமெரிக்கா எனும் ஒலிபரப்புச் சேவை பற்றியது. வொயிஸ் ஒப் அமெரிக்கா - புத்தளம் 1982 ஆம் ஆண்டு, இந்திரா காந்தி ஜெயார் மீது செலுத்திய அழுத்தங்களில், அமெரிக்க ஒலிபரப்புச் சேவை ஒரு விடயமாக இருக்கவில்லை. ஆனால், 1977 ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரங்களின் போது இந்திராவையும் சஞ்சே காந்தியையும் "பசுவும் கன்றும்" என்று ஜெயார் இழிவாகப் பேசியது, மொராஜி தேசாய் மற்றும் சஞ்சீவ ரெட்டி ஆகியோருடன் ஜெயார் கொண்டிருந்த நெருங்கிய நட்பும், தனது தோழியான சிறிமா பண்டாரநாயக்காவின் சிவில் உரிமைகளை ஜெயார் பறித்துப் போட்டதும் இலங்கை தொடர்பாக இந்திரா செயற்படுத்திவந்த வெளியுறவுக்கொள்கையில் கணிசமான தாக்கத்தினைச் செலுத்தியிருந்தன. ஆகவேதான், பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் நாடு கடத்துமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளினை இந்திரா நிராகரித்திருந்தார்.2 points -
இலங்கையில் ஆறு மாதங்கள்
2 points2 points
- இலங்கையில் ஆறு மாதங்கள்
2 pointsபதினொன்று எங்கள் ஊர் முழுதும் மாடிவீடுகள் பல இந்த நான்கு ஆண்டுகளில் முளைத்திருந்தன. பல வீடுகளில் ஆட்கள் இல்லை என்பது வேறு. ஒரு நாள் நயினாதீவுப் பயணம். காலையில் எழு மணிக்கே புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து குறிக்கட்டுவான் செல்லும் பஸ்சில் நானும் மகளும் ஒவ்வொரு இருக்கையில் அமர ஒரு அரைமணி நேரம் கணவர் நின்றபடியே பயணம் செய்ய பின் இருக்கை கிடைத்துவிட்டது. பஸ் குறிக்கட்டுவானில் நின்றவுடன் முன்னர் நேரே படகில் ஏறமுடியும். இப்போது ஒரு சிறிய கட்டடம்போல் வரிசையாக இருந்து இருந்து நகர்வதற்கு வாங்கு போன்றும் கட்டியுள்ளனர். அன்று பார்த்து எக்கச்சக்கமான சிங்களச் சனம். பஸ் நின்றவுடன் பலரும் அடித்துப் பிடித்து ஓட நானும் விரைவாகச் செல்ல ஏனம்மா அவசரப்படுகிறீர்கள் என்கிறாள் மகள். அந்தக் கட்டடத்தில் முக்கால்வாசி நிரம்பியிருக்கு. நாம் போய் கடைசி வரிசையில் அமர்கிறோம். சிங்கள மக்களுக்கு விகாரைகளிலேயே இலவச பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டு நயினாதீவு, கீரிமலை போன்ற இடங்களைப் பார்வையிட ஒரு டூர் போல் ஒழுங்கு செய்கிறார்கள். எங்கள் கோவில்கள் ஏதாவது இப்பிடி எங்களுக்குச் செய்யுமா என்று ஒருவர் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார். எம்மை விலத்திக்கொண்டு சிங்களப் பெண்கள் முன்னே செல்கின்றனர். எல்லோரும் எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒருபத்து நிமிடமாக நானும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்க இன்னும் மூன்று பேர் வர நான் காலை நீட்டி அவர்கள் செல்லாதவாறு மறித்தபடி நாமும் வரிசையில் காத்திருக்கிறோம் என்கிறேன். அம்மா பேசாமல் இருங்கோ என்கிறாள் மகள். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முன்னால் பார்த்து ஏதோ சிங்களத்தில் சொல்கிறார்கள். ஒரு பெண் என்னைப் பார்த்து மன்னித்துவிடுங்கள், அவர்களுக்கு எதுவும் தெரியாது. நாம் குழுவாக வந்தோம் என்றவுடன் ஓகே என்று நான் காலை எடுக்கிறேன். ஆனாலும் மனம் குமைக்கிறது. குழுவாக வந்தாலும் ஒழுங்காகப் போகலாம் தானே. தமிழர்களின் நிலை எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டு இருக்கும்படி ஆகிவிட்டாதே என்று எண்ணுகிறேன். 20 நிமிடத்தில் நாம் முன் வரிசையின் தொங்கலுக்குச் சென்றுவிட சரி இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகும் என சலிப்புடன் எண்ணியிருக்க நாம் இருந்த பக்கத்துக் கதவு திறந்து தமிழ் ஆட்களெல்லாம் அந்தக் கதவால் இடித்துக்கொண்டு செல்ல குழுவாக வந்தவர்கள் எந்தப் பக்கம் போவது எனக் குழம்பி நிற்க நாமும் கடகடவென சென்று லைஃப் ஜக்கற் எடுத்து அணிந்துகொண்டு கடைசி ஆட்களாக இயந்திரப்படக்கில் ஏறுகிறோம். அவர்கள் நிற்கஎம்மவர்கள் வந்து எறிவிட்டார்கள் என்று மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. நாம் கடைசியாக ஏறியபடியால் முன்பக்க இருக்கை இருக்கும் பக்கம் நிற்கிறோம். நடுவில் ஒரு சிங்கள மதகுரு இருக்கிறார். அவரின் இரு பக்கமும் இரு இருக்கைகள் வெறுமையாக இருக்கின்றன. எனக்குப் பக்கத்தில் இருப்பவரை தள்ளி இருக்கும்படி கூற அவரோ பிக்குவையும் என்னையும் மாறி மாறிப் பரிதாபப் பார்வை பார்க்கிறார். நான் மீண்டும் கூற பிக்குவுக்கு விளங்கியதோ என்னவோ தன்பக்கம் வரும்படி கையால் அவருக்கு சைகை செய்ய அவர் தள்ளி இருக்க நான் அமர்கிறேன். படகு நகர கணவரும் மகளும் நின்று வீடியோ எடுக்கின்றனர். மகளுக்கு அந்தப் பயணம் நன்கு பிடித்துப்போகிறது. நாம் சென்றபோது நேரம் 11.15. 12.30 இக்குத்தான் பூசை. நாம் கால்களைக் கழுவி கோவிலைச் சுற்றிக் கும்பிட்டு அர்ச்சனைத் தட்டும் வாங்கி வந்து அரிச்சனைத் தட்டைக் கொடுப்பதற்காகக் காத்திருக்க எனக்கு முன்னால் உள்ளவரின் தட்டுவரை வாங்கி கிட்டத்தட்ட முப்பது தட்டுகளை ஒன்றாகப் பக்கம்பக்கம் அடுக்கி வைத்துவிட்டு தேங்காய்களை எடுத்துவிட்டு பாதித் தேங்காய்களை வைத்து விபூதி சந்தனச் சரையையும் வைக்கின்றனர் இருவர். தீபம் காட்டி மந்திரம்ஓதிவிட்டு ஐயர் தீபத்தைக் கொண்டுவர முண்டியடித்து எல்லோரும் வணக்குகின்றனர். அதன்பின் எல்லோரும் அரிச்சனைத் தட்டுகளை மறுபுறத்தால் சென்று எடுக்கின்றனர். எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தட்டுகள் தானே. தாம் கொடுத்த தட்டுத்தான் அது என எண்ணாமல் எடுத்துப் போகின்றனர். ஒரு ஐயர் வந்து முதலாவதாக எனது தட்டை வாங்க, கொடுத்துவிட்டு அடுத்த பக்கம் போய் நிற்கிறேன். எனக்குப் பின்னர் வந்தவர்கள் என் பின்னால் போய் நிற்க என கணவரும் மகளும் அருகில் நிற்கின்றனர். ஐந்தோ ஆறாவதாய் ஒரு பெண் வந்து என் மகளை இடித்துக்கொண்டு எனக்கு முன்னால் வரப் பார்க்கிறார். நான் மெதுவாக தங்கச்சி இவ்வளவு பேர் நிக்கிறம். இடிக்காமல் பின்னால போய் நில்லுங்கோ. ஐயர் அங்கையும் தீபம் கொண்டு வருவார் என்றதும் என்னை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு அப்பெண் அங்காலே போகிறது. மனிசன் நக்கலாய் ஆரிட்டை என்றுவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரிக்க, நான் ஏதோ இடையில வந்தது போலயல்லோ நீங்கள் சிரிக்கிறீர்கள் என்கிறேன். தீபம் கொண்டு ஐயர் வந்து எல்லாருக்கும் காட்டிவிட்டு நாம் கொடுக்கும் தட்சணையை வாங்கிக்கொண்டு அரிச்சனைத் தட்டுகளுக்குத் தண்ணீர் தெளித்துவிட்டுப் போக நான் சென்று நான் வைத்த அரிச்சனைத்தட்டை எடுக்கிறேன். முதலாவதாகக் கொடுத்து முதலாவதாகப் போய் எடுத்தது எனக்கு ஓட்டப்போட்டியில் முதலாம் இடம் கிடைத்ததுபோல் மகிழ்ச்சி ஏற்படுகிறது. வெளியே வந்து நாகதம்பிரானுக்கு நாகமும் பாலும் வாங்கி வைத்துக்கொண்டு நான்காவதாக நிற்க அந்தப் பக்கத்தாலும் சிலர் வந்து நிற்கின்றனர். இங்கு இவர்களும் எதற்காக நிற்கிறார்கள் எனும் யோசனையின்றி தாம் முதலில் போகவேண்டும்போல் முன்னே நகர, கலோ கியூ இந்தப் பக்கம் என்று அவர்களைக் கூப்பிடுகிறேன். கோயிலுக்கு வந்தாலும் உனக்குச் சண்டை தானோ என்கிறார் இந்தாள். அப்ப எல்லாரையும் போக விட்டிட்டு எப்ப ஒருத்தருமில்லையோ அப்ப போவமோ என்கிறேன். பிள்ளைகளின் நட்சத்திரங்களைச் சொல்லி மூவரும் பாலூற்றிவிட்டு வர, அன்னதானம் உண்டுவிட்டுப் போவோம் என்கிறார் மனிசன். சிறுவயதில் வரும்போது உண்டதுண்டு. வெளிநாடு வந்தபின் மூன்று தடவைகள் அங்கு சென்றிருந்தாலும் ஒருநாளும் அன்னதானம் செய்யுமிடத்தில் உண்டதில்லை. இம்முறை சம்மதித்து சென்று அமர்ந்து உணவு உண்ண மனதில் ஒரு நின்மதி எழுகிறது. அம்மா அங்க எப்பிடி சாப்பிட்டவா என்கிறாள் மகள். உவளுக்குப் பசி என்கிறார் மனிசன். உண்டபின் நயினாதீவைச் சுற்றிப் பார்க்கிறோம் என்று நடந்து சென்று விட்டு வர நேரம் போய்விடுகிறது. இன்னும் பத்து நிமிடத்தில் படகு புறப்பட்டுவிடும். எல்லோருக்கும் பதட்டம் தொற்றிககொள்கிறது. உடனே அங்கு நின்ற ஓட்டோ ஒன்றைப் பிடித்து விபரத்தைக் கூற அவர் விரைவாகக் கொண்டுவர இடையில் மறித்து வைத்துள்ளனர். அதற்கு அப்பால் வாகனங்கள் செல்ல முடியாது. நடந்துதான் செல்ல வேண்டும். ஓட்டோக்காரர் விடயத்தைக் கூற அவர் போகும்படி கூறி கயிற்றை மேலே இழுத்து தடியை உயர்த்தி அனுமதிக்க ஓட்டோ படகுக்குக் கிட்டச்சென்று எம்மையும் ஏற்றும்படி கையைக் காட்டுகிறார். நாம் முன்னே ஓட கணவர் ஓட்டோ காறருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவருகிறார். எம்மைக் கண்டுவிட்டு நிறுத்தி எம்மையும் ஏற்றிச் செல்கிறது படகு. படபடப்பு நீங்கி எமக்கு நின்மதி ஏற்படுகிறது. பின் பஸ் பிடிக்க ஓடிப் போனால் இரண்டு பஸ்கள் நிற்கின்றன. ஒன்று சிவப்பு அரச பஸ். மற்றது பச்சை தனியார் பஸ். எதில் ஏறுவது என்று நாம் குழம்பியபடி நிற்க, தனியார் வண்டி வேகமாகப் போவாங்கள். சிவப்பில போங்கோ என்கிறார் ஒருவர்.அதில் போய் ஏற கடைசி சீற்றில் தான் இடம் கிடைக்கிறது. பஸ்ஸும் கடைசி என்பதனால் வேறு எங்கோ இருந்து வரும் படக்குக்காகவும் காத்திருந்து அரை மணி நேரத்தின் பின்னர் புறப்படுகிறது. அவ்வளவு சனம். கால்கள் மிதிபட்டும் நெருக்கியடித்தும் தூங்கி வழிந்தும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தால் இன்னும் அரை மணித்தியாலத்தில் தான் கடைசி பஸ் வெளிக்கிடும் என்கின்றனர். அதுவரை காத்திருக்க முடியாது என்று ஓட்டோ பிடித்து வீடு வருக்கிறோம். மின்வெட்டு வேறு. வீதிகள் இருண்டு சனநடமாட்டம் அற்று இருக்கு. மனதில் ஒரு பயமும் ஏற்படுகிறதுதான். அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்து காலை உணவு உண்ண வந்து மேசையில் அமர்கிறோம். இடியப்பம், சம்பல், உருளைக்கிழங்குப் பிரட்டல், சொதி. தற்செயலாக என் விரலைப் பார்த்த நான் அதிசயிக்கிறேன். என் நடுவிரலில் இருபது ஆண்டுகளாக இருந்து வளர்வதும் நான் வெட்டுவதுமாக என்னைத் தொல்லை செய்த சாம்பல் நிறக் காய்(உண்ணி) காணாமல் போயிருந்தது. நாகபூசணி அம்மனின் அருள்தான் என்கிறார் என் மச்சாள்.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇந்தியாவைப் பற்றி எழுத மனிசருக்கு ரத்தகொதிப்பு வரப் போகுது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇந்தியாவின் அழுத்தத்தைச் சமாளிக்க அமெரிக்கா நோக்கிச் சாய்ந்த ஜெயவர்த்தன ஆனால், 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, இந்தியாவினால் இலங்கை மீது தொடர்ச்சியாகச் செலுத்தப்பட்டு வந்த அழுத்தத்தினையடுத்து, அமெரிக்காவினதும் இங்கிலாந்தினதும் உதவியை நாட விரும்பிய ஜெயவர்த்தன மீண்டும் திருகோணமலை எண்ணெய்த் தாங்கி விவகாரத்தைக் கையிலெடுத்தார். அதன்படி, 1983 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூலம் இத்தாங்கிகளைக் குத்தகைக்கு விடும் புதிய டென்டர்களை இலங்கை அரசு அறிவித்தது. 1984 ஆம் ஆண்டு மாசி மாதம் 23 ஆம் திகதி, இத்தாங்கிகளை மூன்று சர்வதேசக் கம்பெனிகள் கூட்டாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டன. சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரோலியம் நிறுவனம், மேற்கு ஜேர்மனியின் எண்ணெய்த் தாங்கி நிறுவனம் மற்றும் டிரேடின் அப்ட் எனும் சுவிட்ஸர்லாந்தின் நிறுவனம் ஆகிய மூன்றுமே அவையாகும். மேலும், சுவிட்ஸர்லாந்தின் நிறுவனம் பாக்கிஸ்த்தானின் வர்த்தக மைய்யத்தில் பெருமளவு பங்குகளைத் தனதாகக் கொண்டிருந்தது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு விடுத்த நிகழ்வுபற்றிப் பேசுவதற்கு பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை மத்தியூ கூட்டியிருந்தார். கொழும்பில் இருந்த இந்தியத் தூதரகத்தின் ஆலோசனைகளின் பெயரில் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பத்திரிக்கையாளர் ஒருவர், இலங்கைக்கு பலனளிக்கும் விதத்தில் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட டென்டரை இலங்கையரசு எதற்காக நிராகரித்தது என்று கேட்டார். அதற்கான பழியினை டென்டர்களை ஆராய்ந்த தொழிநுட்ப அதிகாரிகளின் மீது போட்ட மத்தியூ, இந்திய நிறுவனத்திற்கு எண்ணெய்த் தாங்கிகளைப் பராமரிக்கும் தகைமை கிடையாது என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். அனால், விடாப்பிடியாக மத்தியூவிடம் கேள்விகளை முன்வைத்த இந்தியப் பத்திரிக்கையாளர், எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ள மூன்று நிறுவனங்களும் 1982 ஆம் ஆன்டில், திருகோணமலைத் துறைமுகத்தின் எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு எடுக்கும் ஒரே நோக்கத்துடன் தான் உருவாக்கப்பட்டவை என்றும் குற்றஞ்சாட்டினார். அநுர பண்டாரநாயக்க அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அநுர பண்டாரநாயக்கவும் இவ்விவகாரத்தைப் பாராளுமன்றத்தில் எழுப்பியிருந்தார். இந்தியா, இங்கிலாந்து, ரஸ்ஸியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் உட்பட 8 நிறுவனங்கள் டென்டர்களை அனுப்பியபோதும் கூட, அவற்றை உதாசீனம் செய்துவிட்டே இலங்கையரசு புதிய நிறுவனத்திற்குக் கொடுத்திருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார். மேலும் இந்தியாவின் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் இலங்கைக்கு மிகவும் அனூகூலமானதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் மத்தியூவும், அரசாங்கமும் இணைந்தே இந்த சதியை நடத்தியிருப்பதாக அவர் கூறினார். உலகின் மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலையினை அமெரிக்கர்களுக்குக் கொடுக்கும் முதற்படியே இந்தப் புதிய நிறுவனத்திற்கு இலங்கையரசால் வழங்கப்பட்ட குத்தகை என்றும் அவர் வாதிட்டார். 1987 ஆம் ஆண்டு, தை மாதம் 8 ஆம் திகதி பாராளு மன்றத்தில் பேசிய அநுர , மீண்டும் இந்த குத்தகை விடயத்தை நினைவுகூர்ந்தார். "1983 ஆம் ஆண்டு, எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு விடும் டென்டர் நிகழ்வில் இந்தியாவும் தனது டென்டரை முன்வைத்திருந்தது. இலங்கைக்கு அனுகூலமானது என்று நான் அன்று கூறியதால் என்னை இந்தியாவின் கைக்கூலி என்று இச்சபையில் கேலி செய்தார்கள். மற்றைய எல்லாரையும் விட, இந்தியாவே அதிகளவு லாபம் தரும் திட்டத்தை முன்வைத்திருந்தது. அனால், நாம் என்ன செய்தோம்? இந்தியாவின் திட்டத்தை உதறித்தள்ளிவிட்டு, அனுபவம் அற்ற, செயற்திறனற்ற, குறைவான தரத்தினைக் கொண்டிருந்த சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்குக் கையளித்தோம். அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு வெளிநாட்டுக்காரர். அவரது மனைவியே அதன் உப தலைவர். நிறுவனத்தின் கடை நிலை ஊழியரும் நிர்வாகக் குழுவில் தீர்மானம் எடுப்பவராக பணிபுரிகிறார். இந்தியாவின் கைகளுக்கு எண்ணெய்த் தாங்கிகள் போவதைத் தடுக்கவே அவசர அவசரமாக புதிதாக அமைக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு நீங்கள் தாங்கிகளைக் கொடுத்தீர்கள்" என்று அவர் கூறினார். தனது எண்ணெய் நிறுவனத்தின் திட்டத்தை நிராகரித்து, இன்னொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு எண்ணெய்த் தாங்கிகளை இலங்கையரசு கையளித்தது தொடர்பாக இந்தியா சீற்றமடைந்திருந்தது. திருகோணமலைத் துறைமுகத்தினையும் அதனோடு இணைந்த எண்ணெய்த் தாங்கிகளையும் எப்படியாவது அமெரிக்காவுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்கிற நோக்கத்திலேயே ஜெயவர்த்தனா சிங்கப்பூர் நிறுவனத்திற்குக் கொடுத்தார் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் திடமாக நம்பினர். மேலும், அமெரிக்காவிற்கு திருகோணமலைத் துறைமுகத்தைக் குத்தகைக்குக் கொடுப்பதன் ஊடாக அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றினைச் செய்துகொள்ளவும் ஜெயவர்த்தன முயல்கிறார் என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆகவே, இந்தியா மீண்டும் ஜெயவர்த்தன மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து, இரண்டாவது முறையாகவும் குத்தகைத் திட்டத்தை இரத்துச் செய்யப் பண்ணியது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஜெயாரின் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளுக்கான குத்தகை நாடகம் 1981 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவின் அரசாங்கம் எடுத்த இரு தீர்மானங்கள் இந்தியா கொண்டிருந்த அச்சத்தினை உறுதிப்படுத்தியிருந்தது. முதலாவது தீர்மானம், இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டிஷாரினால் திருகோணமலைத் துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டு பின்னர் பராமரிப்பின்றி கைவிடப்பட்டிருந்த 101 பாரிய எண்ணைத் தாங்கிகளை புணரமைப்பது. இந்தத் தாங்கிகளை புணரமைப்பதற்கு எந்த வெளிநாடு அதிக பணத்தினைத் தருகிறதோ, அந்த நாட்டிற்கே அந்த எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு விடுவதாக ஜெயவர்த்தன அறிவித்ததோடு, 1981 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் டென்டர்கள் இலங்கை அரசால் அனுப்பப்பட்டன. இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிட்டிஷாரினால் கட்டப்பட்ட திருகோணமலை எண்ணெய்த் தாங்கியொன்று அன்று கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ டென்டர்களை பற்றி அறிவிப்பதற்கு பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றினைக் கூட்டியிருந்தார். டெயிலி நியூஸ் பத்திரிக்கைக்காகச் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நானும் அக்கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தேன். இந்தியா இதுகுறித்து கொண்டிருக்கும் கரிசணையினை நீங்கள் டென்டர்களை அறிவிக்குமுன் கவனத்தில் எடுத்தீர்களா என்று நான் மத்தியூவிடம் வினவினேன். இதைக் கேட்டதும் மிகுந்த சீற்றத்துடன் அவர் பின்வருமாறு கூறினார், "எண்ணெய்த் தாங்கிகள் எமது பிரதேசத்திலேயே இருக்கின்றன. நாம் அவற்றை எமக்கு அதிக பணம் தரும் நிறுவனத்திற்கோ அல்லது நாட்டிற்கோ கொடுக்க முடியும். நாம் இந்தியாவிடம் இதுபற்றி கேட்கவேண்டிய தேவை என்ன இருக்கிறது?" என்னிடம் கேட்டார். பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது அமைச்சர் தொண்டைமானும் இந்தியாவின் கரிசணை குறித்துச் சபையில் கேள்வியெழுப்பியிருந்தார். ஆனால், அதனை உடனடியாக மறுத்துப் பேசிய ஜெயவர்த்தன, இந்தியா குறித்து நா அநாவசியமாகக் கவலைப்படத் தேவையில்லை என்று கூறினார். இந்தியப் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தான் வழங்கிய செவ்வியில் ஜெயவர்த்தன பின்வருமாறு கூறினார், "எமக்கு விருப்பமானவர்களுக்கு நாம் அவற்றினைக் கொடுப்போம். இந்த உலகில் எமக்கு பல நண்பர்கள் வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்தக் கூற்றிற்கு இந்தியா உடனடியாகப் பதிலளித்தது. தனது கடுமையான நிலைப்பாட்டினை செய்தி ஆய்வாளர் எம்.ஜி. குப்தாவின் கட்டுரைமூலம் இந்தியா வெளிப்படுத்தியது. "திருகோணமலைத் துறைமுகம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மிகவும் தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. திருகோணமலைத் துறைமுகம் இந்தியாவின் எதிரிகளின் கைகளில்ப் போவதை எந்த இந்திய அரசாங்கமும் அனுமதிக்கப்போவதில்லை. பொறுப்பற்ற அரசாங்கம் ஒன்று நடந்துவரும் இலங்கையில், அந்த நாடு மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகள் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இந்தியா இந்தியா அக்கறை கொண்டுள்ளது. ஆகவே, இவ்வாறான விபரீதமான நகர்வுகளை இலங்கை அரசு மேற்கொள்ளுவதை இந்தியா அனைத்து வழிகளிலும் தடுத்தே தீரும்" என்று அக்கட்டுரை கூறியிருந்தது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் எண்ணெய் நிறுவமான "தி கோஸ்ட்டல் கோபரேஷன்", தனது பேர்முடா கிளையூடாக திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இலங்கையரசிடமிருந்து 29 வருடங்களுக்குக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் ஒப்பந்தம் நிறைவேறும் தறுவாயில் இருந்தபோது, இந்திய அரசாங்கம் அதனைத் தடுத்துவிட்டது. இந்தக் குத்தகை ஒப்பந்தப்படி எண்ணெய்த் தாங்கிகளை பாவிப்பதற்கு முதற்கட்டணமாக 35,000 அமெரிக்க டொலர்களை அறவிடுவதென்றும், பின்னர் வருடாந்த குத்தகையாக 30,000 டொலர்களை அறவிடுவதென்றும், ஒவ்வொரு வருட முடிவிலும் குத்தகைப் பணம் பத்து வீதத்தினால் அதிகரிக்கப்படும் என்றும் ஒத்துக்கொள்ளப்பட்டது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அமெரிக்க நிறுவனம் இக்கிணறுகளை தான் பாவிக்கலாம் அல்லது மூன்றாம் தரப்பொன்றிற்கு குத்தகைக்கு வழங்கலாம் என்கிற அனுமதியும் இருந்தது. மாநாட்டில் பேசிய மத்தியூ, எண்ணெய்த் தாங்கிகள் குத்தகைக்கு விடப்பட்டாலும் கூட, துறைமுகத்தை வெளிநாட்டுக் கடற்படைக் கப்பல்கள் பாவிக்கமுடியாது எனும் இலங்கையரசின் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று கூறினார். ஆனால், அமைச்சரின் கூற்றினை கேள்விகேட்டிருந்த லண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிக்கை, குத்தகை ஒப்பந்தத்தின்படி இத்தடை செல்லுபடியாகாது என்று வாதிட்டிருந்தது. ஆனால், இந்தியாவின் கடுமையான அழுத்தங்களுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தத்தை இலங்கையரசு கைவிட்டது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇந்தியாவின் நலன்கள் திருகோணமலைப் பிரச்சினை திருகோணமலை துறைமுகம்பற்றி இந்திய ரோ அதிகாரிகள் காட்டிய அதீத ஈடுபாடு, அவர்களின் நோக்கம் என்னவென்பதை பிரபாகரனுக்குத் தெளிவாக உணர்த்தியிருந்தது. இந்தியா தனது பாதுகாப்புப் பற்றி அச்சம் கொண்டிருப்பதையும், இப்பிராந்தியத்தின் பலம் மிக்க நாடாக தன்னை உருவாக்கிக்கொள்ள அது விரும்புவதையும் பிரபாகரன் அறிந்தே இருந்தார். ஆகவே, இலங்கையின் தமிழர்களின் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் கரிசணை என்பது, அதன் ஒட்டுமொத்த நலன்களுடன் சம்பந்தப்பட்டது என்பதை அவர் அறியாமல் இல்லை. ஜெயவர்த்தன, திருகோணமலைத் துறைமுகத்தின் கட்டுமாணங்களை அமெரிக்காவின் கடற்படையின் பாவனைக்காகக் கொடுக்கப்போகிறார் என்கிற வதந்தி 1981 ஆம் ஆண்டளவில் பரவியபோது இந்தியா உண்மையாகவே கலக்கமடைந்தது. அதேயாண்டு, சுமார் 9 ஆண்டுகளாக இருந்த தடையான திருகோணமலைத் துறைமுகத்தை வெளிநாட்டுக் கடற்படைகளுக்கு பாவனைக்குக் கொடுப்பதில்லை என்கிற தடையினையும் ஜெயவர்த்தன நீக்கியிருந்தார். இதனையடுத்து அமெரிக்கா பல கடற்படைக் கப்பல்களை திருகோணமலைத் துறைமுகத்திற்கு அனுப்பி வந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை தனது இந்துசமுத்திரத் தளமாகப் பாவிப்பது குறித்து அமெரிக்கா தீவிரமாகச் சிந்தித்து வருகிறது என்று அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் அதிகாரிகளின் தலைவர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ் கூறியபோது இந்தியப் பத்திரிக்கைகள் அலறியடித்துக்கொண்டு இதுபற்றி பரவலாகச் செய்திகளை வெளியிட்டிருந்தன. மேலும் வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியான அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமைச் செயலகமான பென்டகனின் 1980-81 ஆம் ஆண்டு அறிக்கையில், திருகோணமலைத் துறைமுகத்தை இந்துசமுத்திரத்தில் பயணிக்கும் அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களுக்கு தரித்துச் செல்லும் இடமாக பாவிக்க உத்தேசித்திருப்பதாக வந்த தகவலையும் இந்தியப் பத்திரிக்கைகள் கவலையுடன் வெளிக்கொணர்ந்திருந்தன. மேலும், அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தின் ஆதரவுடன் செயற்பட்டு வந்த அமெரிக்க செனட்டர் ஒருவர் அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் வெளியிட்ட கருத்தான, "இந்து சமுத்திரத்தினூடாகப் பயணிக்கும் அமெரிக்காவின் கடற்படைக்கப்பல்களின் வீரர்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் தங்கி ஓய்வெடுக்கவும், களியாட்டங்களில் ஈடுபடவும் தேவையான வசதிகளை அமெரிக்கா செய்ய விரும்புகிறது" என்கிற தகவலையும் இந்தியப் பத்திரிக்கைகள் முக்கிய செய்தியாக வெளியிட்டிருந்தன. இது இந்தியாவுக்குக் கடுமையான சந்தேகத்தைனை ஏற்படுத்தியிருந்ததுடன், இந்திய உபகண்டப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கெதிரான அணியொன்றினை அமெரிக்கா உருவாக்க ஜெயவர்த்தனா துணைபோவதாகவும் இந்தியா கருதத் தொடங்கியது. பனிப்போர் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த அந்தக் காலப்பகுதியில், இந்தியாவைச் சுற்றிவளைத்து, சிறு துண்டுகளாக உடைத்துப் பலவீனப்படுத்துவதே இந்தியா தொடர்பான அமெரிக்காவின் கொள்கையாக அன்று இருந்தது. இஸ்ரேல் - பாக்கிஸ்த்தான் - சீனா ஆகிய நாடுகள் அடங்கிய தென் மண்டல அரைவட்டத்திற்குள் இலங்கையும் வந்துவிட்டால் அவ்வட்டம் பூரணப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவினுள் அக்காலத்தில் நடைபெற்று வந்த தனிநாட்டிற்கான பல கிளர்ச்சிகளை ஊக்குவித்து வந்த அமெரிக்கா, ஒன்றையொன்று எதிர்க்கும் நிலைகொண்ட தனியான சிறிய தேசங்களை இந்தியாவினுள் உருவாக்கிவிட்டால் இந்தியாவை முற்றாகப் பலவீனப்படுத்திவிடலாம் என்றும் எதிர்பார்த்தது.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
1 point- நடனங்கள்.
1 point1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபிரபாகரனை விடுவிக்க சர்வகட்சி கூட்டத்தினை கூட்டிய நெடுமாறனும், சிறையில் பிரபாகரனுடன் திருகோணமலை குறித்துப் பேசிய ரோவும் பழ நெடுமாறன் பிரபாகரனின் துணிகரமான செயற்பாடுகள் மற்றும் போராட்ட இலட்சியம் மீதான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை பற்றி அறிந்திருந்த நெடுமாறன் அந்த செயல்த்திறன் மிக்க போராளியை எப்படியாவது சந்தித்துவிடவேண்டும் என்று விரும்பியிருந்தார். பிரபாகரனைச் சந்திக்க ஆவண செய்யுமாறு அவர் பேபி சுப்பிரமணியத்தை முன்னர் பல தடவைகள் கேட்டிருந்தார். ஆனால், பேபியோ "பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டார்" என்று அடிக்கடி கூறிவந்தார். ஆனால், இன்றோ நிலைமை வேறு. ஆகவே, பிரபாகரனைச் சந்திக்க நெடுமாறனை பாசையூர் உயர்பாதுகாப்புச் சிறைக்கு அழைத்துச் சென்றார் பேபி. அங்கு பிரபாகரனைக் கண்டதும் நெடுமாறன் வியந்துபோனார். இதற்கு முன்னரும் பிரபாகரனை தனது பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் அவர் பார்த்திருக்கிறார், ஆனால், அவர்தான் பிரபாகரன் என்று நெடுமாறனுக்குத் தெரியாது. முகத்தில் வியப்பினை வெளிப்படுத்திய நெடுமாறனைப் பார்த்து, "மன்னிக்க வேண்டும், நான் யாரென்பதை நான் ஒருபோது உங்களிடம் முன்னர் சொன்னதில்லை" என்று பிரபாகரன் நெடுமாறனை நோக்கிக் கூறினார். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது நெடுமாறன் பிரபாகரனை ஒரு முறை சந்தித்திருந்தார். ஆகவே, அன்று சிறைச்சாலையில் பிரபாகரனை சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பேசத் தொடங்கிய நெடுமாறன், "நான் கடந்த வருடம் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, என்னைப்பார்க்க வந்திருந்த சில இளைஞர்களோடு நீங்களும் வந்தீர்களா?" என்று கேட்டார். பிரபாகரன், "ஆம்" என்று பதிலளித்தார். "ஏன் எனக்கு உங்களின் பெயரைச் சொல்லவில்லை" என்று நெடுமாறன் கேட்டார். அதற்குப் பதிலளித்த பிரபாகரன், தன்னை இராணுவத்தினரும், பொலீஸாரும் அப்போது தேடி வந்ததாகவும், நெடுமாறனைச் சந்திக்கச் சென்றிருந்த இளைஞர்கள் குழுவில் பொலீஸ் உளவாளிகளும் இருந்ததாகவும், ஆகவே தான் தன்னை அங்கு அடையாளப்படுத்தியிருந்தால், அவ்விடத்திலேயே தான் கைதுசெய்யப்பட்டிருக்கும் அபாயம் இருந்ததனால் தன்னை யாரென்று அடையாளம் காட்ட விரும்பவில்லை என்றும் கூறினார். நெடுமாறன் கோபப்படவில்லை. தனது பாதுகாப்புக் குறித்து பிரபாகரன் எவ்வளவு அவதானமாக இருந்தார் என்பதை அவர் புரிந்துகொண்டார். பிரபாகரன் பற்றிய அவரது மதிப்பு இன்னும் அதிகரித்துச் சென்றது. பிரபாகரன் கைதுசெய்யப்பட்டது தொடர்பான தனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்த நெடுமாறன், அவரைக் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். அவரை பிணையில் விடுவிப்பதற்கான தன்னாலான அனைத்து முயற்சிகளையும் தான் எடுக்கப்போவதாக அவர் உறுதியளித்தார். மேலும், வெளிநாடொன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஈடுபடுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் பிரபாகரனுக்கு அறிவுரை கூறினார். "ஏன் உங்களுக்குள் சண்டைபிடிக்கிறீர்கள்?" என்று நெடுமாறன் கேட்டார். "உங்களால் ஏன் ஒன்றாகச் செயற்பட முடியவில்லை? உங்களின் சண்டைகளால் உங்களின் போராட்டத்திற்கான உதவியினை ஒருங்கிணைக்க நாம் இங்கு சிரமப்படுகிறோம்" என்று கூறிய நெடுமாறன், உமாவுடனான கருத்துவேறுபாட்டைச் சரிசெய்து விட்டு அவருடன் சேர்ந்து இயங்கவேண்டும் என்று பிரபாகரனைக் கேட்டார். தான் உறுதியளித்ததன்படி நடந்துகொண்டார் நெடுமாறன். ஆனி 1 ஆம் திகதி காமராஜர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டமொன்றைக் கூட்டினார். பிரபாகரனை விடுவிக்கத் தேவையான அனைத்தையும் தான் செய்துவிட்டபடியினால், தான் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று கருநாநிதி நெடுமாறனிடம் அறிவித்தார். எம்.ஜி.அர் தன் சார்பாக பிரதிநிதியொருவரை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்க் கட்சிகளும் அனைத்தும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டன. பேபி சுப்பிரமணியம் பார்வையாளராகக் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலாவது தீர்மானம் போராளித் தலைவர்களை நாடுகடத்தும் விடயத்திற்கு தமிழ்நாடு அரசாங்கம் ஒத்துக்கொள்ளக் கூடாது எனும் கோரிக்கை. இரண்டாவது, இலங்கையால் விடுக்கப்பட்ட போராளித் தலைவர்களை நாடுகடத்தும் கோரிக்கையினை மத்திய அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்பது. மூன்றாவது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தினை தமிழ்நாட்டில் முன்னெடுப்பது. இந்திரா காந்தி அப்போது இது தொடர்பாக திட்டமொன்றினை ஏற்கனவே வகுத்திருந்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா எந்த வகையில் தலையிடலாம் என்கிற பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் ஒன்றினைத் தயாரிக்குமாறு தான் 1980 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனேயே தனது ஆலோசகர்களை அவர் கேட்டிருந்தார். 1977 ஆம் ஆண்டு இந்திரா தோற்கடிக்கப்பட்டு, மூன்று வருடங்களின் பின்னர் 1980 தை மாதம் ஆட்சிக்கு மீண்டும் வந்தவுடன் அவர் செய்த விடயங்களில் இந்த பரிந்துரை அறிக்கையும் ஒன்று. அவருக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி, அவரது அரசாங்கத்தை நிலைகுலைய வைப்பதற்கு தமிழ்ப் போராளிக்குழுக்களை ஒரு கருவியாகப் பாவிக்க வேண்டும் என்பது. தோழிகள் - சிறிமாவும் இந்திராவும் பனிப்போர் நிலவிவந்த அக்காலத்தில் இந்திரா காந்தி சோவியத் அணி நாடுகளின் பக்கம் நோக்கியே செயற்பட்டு வந்தார். ஜெயாரின் அமெரிக்கச் சார்பு நிலைப்பாடும், இஸ்ரேல் - பாக்கிஸ்த்தான் - சீனா ஆகிய நாடுகள் நோக்கிய ஜெயாரின் பயணமும் இந்திராவை எரிச்சலடைய வைத்திருந்தது. 1983 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சிறிமா பண்டாரநாயக்க வெற்றிபெற்றால், இலங்கை அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வரும் என்று இந்திரா எதிர்பார்த்திருந்தார். ஆனால், தேர்தல்களில் சிறிமா பங்கெடுக்க முடியாதபடி அவரது சிவில் உரிமைகளை ஜெயவர்த்தனா பறித்துப் போட்டபோது இந்திராவின் எதிர்ப்பார்ப்பும் முற்றாகக் கலைந்துபோனது. ஆகவே, இந்திராவின் முன்னால் இருந்த ஒரே தெரிவு, வளர்ந்துவரும் தமிழ் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்து ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வதுதான். ஈரோஸ் அமைப்பின் அருளர் எனப்படும் அருளப்பு ரிச்சர்ட் அருட்பிரகாசம் அக்காலத்தில் சென்னையில் தங்கியிருந்த ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்த்தர் அருளர், இந்தியாவுக்கான சோவியத் ஒன்றியத்தின் தூதுவருடன் தான் நடத்திய இரகசியச் சந்திப்புக் குறித்து என்னிடம் கூறியிருந்தார். சோவியத் தூதுவரிடம் பேசிய அருளர், போராளித் தலைவர்களை நாடுகடத்த வேண்டாம் என்று இந்திராவிடம் கூறுங்கள் என்று தான் கூறியதாகக் கூறினார். அதற்கு சோவியத் தூதர் பின்வருமாறு பதிலளித்தார், "கவலைப்பட வேண்டாம். இந்தியாவுடன் இணைந்திருங்கள். இந்திரா காந்தி உங்களை பார்த்துக்கொள்ளுவார்" என்பதுதான். அவர் கூறியது போலவே இந்திரா காந்தி பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் பார்த்துக்கொண்டார். ஆனி மாதம் நடுப்பகுதியில், இந்தியாவின் புலநாய்வுத்துறையான ரோவை சேர்ந்த இரு அதிகாரிகள் பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்புச் சிறைக்கு அவர்களைச் சந்திக்க வந்திருந்தனர். தம்மை இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திய அவர்கள், பிரபாகரன் குறித்தும், அவரது இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் கேட்டு அறிந்துகொண்டனர். இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கிவந்த அவலங்கள் குறித்து கரிசணையுடன் பேசிய அந்த அதிகாரிகள், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் நிலையில் இந்தியா இருப்பதாகக் கூறினர். பின்னர், பிரபாகரன் இந்தியாவுக்கு உதவக் கூடிய நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்று அவரைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்குள் திருகோணமலைத் துறைமுகமும் அடிக்கடி இடம்பெறலாயிற்று. அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே இந்தியாவின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை பிரபாகரன் ஓரளவிற்கு ஊகித்துக் கொண்டார். அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளான ஆவணி 6 ஆம் திகதிக்கு சிலநாட்கள் முன்னரும் அவரை சந்திப்பதற்கு இரண்டாவது தடவையாகவும் ரோ அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால், இந்தியாவிலும், இலங்கையிலும் இடம்பெற்றுவரும் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்த பிரபாகரன், இந்த அரசியல் மாற்றங்களும், நகர்வுகளும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் எவ்வகையான முட்டுக்கட்டைகளை போடப்போகின்றன என்பதையும், அவற்றினைத் தாண்டி போராட்டம் எப்படி வழிநடத்தப்படவேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருந்தார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபிரபாகரனும் உமா மகேஸ்வரனும் சென்னையில் கைதுசெய்யப்பட்டதையடுத்து பிரச்சினை முடிந்துவிட்டதாக எண்ணிக் குதூகலித்த சிங்கள தேசம் தேசிய பாதுகாப்புச் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அதி முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிடவேண்டும் என்று லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் அரசால் பணிக்கப்பட்டன. டெயிலி நியூஸ், தினமின மற்றும் தினகரன் ஆகிய லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் பிரபாகரனும், உமாவும் கைதுசெய்யப்பட்ட செய்தியை மிகவும் பரபரப்பான முறையில் தலையங்கம் இட்டு வெளிப்படுத்தின. மேலும், பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பொலீஸ் அதிகாரி, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இக்கைதுகள் இரண்டும் மிகவும் முக்கியமானவை, அண்மைய வருடங்களில் நடைபெற்ற மிகவும் முக்கியமான நிகழ்வு இது" என்று கூறியதாக டெயிலி நியூஸ் தலைப்புச் செய்தி வெளியிட்டது. போராளித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட செய்தியினை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் டெயிலி நியூஸ் பத்திரிக்கைக் காரியாலயத்திற்கு தொலைபேசி மூலம் அறியத் தந்தபோது நான் அங்கிருந்தேன். செய்திப்பிரிவில் இருந்த அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். பின்னர் இந்த மகிழ்ச்சி ஆசிரியர் அலுவலகத்திற்கும், ஒட்டுமொத்த லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கும் பற்றிக்கொண்டது. நிறுவனத்தின் ஏனைய பகுதிகளில் வேலைசெய்வோர் இச்செய்திபற்றி மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்வதற்கு செய்திச் சேவைக்குப் படையெடுத்துக்கொண்டிருந்தனர். நிறுவனத்தின் வாகன ஓட்டுநர்களின் ஒருவரான ஆரியரட்ண பெருமுச்சுடன், "எல்லாப் பிரச்சினையும் முடிந்தது" என்று கூறினார். இக்கைதுபற்றிய செய்திகளைத் தொடர்ச்சியாகப் பிரசுரிக்குமாறு டெயிலி நியூஸ் கேட்கப்பட்டதுடன், கைதுசெய்யப்பட்ட மூன்று போராளிகளையும் நாடுகடத்துவதன் விபரங்களைத் தொடர்ச்சியாக மக்களுக்கு விளங்கப்படுத்துமாறும் கோரப்பட்டது. இந்தப் பிரச்சாரத்திற்குத் தேவையான தலையங்கத்தை பாதுகாப்பு அமைச்சே தந்தது. "பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் தமது குற்றங்களுக்காக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த தேடப்படும் குற்றவாளிகள்" என்பதே அந்தத் தலைப்பு. பிரபாகரன் 18 கொலைகளுக்காகவும், இரண்டு வங்கிக் கொள்ளைகளுக்காகவும் தேடப்பட்டு வந்த அதேவேளை உமா மகேஸ்வரன் 9 கொலைகளுக்காகவும் ஒரு வங்கிக்கொள்ளகைக்காகவும் இலங்கையில் தேடப்பட்டு வந்தார். இரு போராளித் தலைவர்களையும் கைதுசெய்தமைக்காக தமிழ்நாடு பொலீஸாருக்கு பத்து லட்சம் சன்மாணமாக வழங்கப்படுவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் வீரப்பிட்டிய உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இலங்கை அரசால் தமிழ்நாட்டு பொலீஸாருக்கு சன்மானம் வழங்கப்படுவதாக வந்த அறிவிப்பினையடுத்து மூன்று இந்திய ஊடகங்கள் அதனைச் செய்தியாக வெளியிட்டிருந்தன. தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு இது தொடர்பாக உடனடியாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக தமிழ்நாட்டு பொலீஸ் மா திபரான கே.மோகந்தாஸை தன்னை வந்து பார்க்கும்படி கட்டளையிட்ட எம்.ஜி.ஆர், பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் பொலீஸார் கண்ணியமாக நடத்துவதை உறுதிப்படுத்துமாறு பணித்தார். "பைய்யங்க விஷயத்துல கொஞ்சம் பாத்துப் போப்பா" என்று மோகந்தாசிடம் எம்.ஜி.ஆர் கூறினார். அதற்குப் பதிலளித்த மோகந்தாஸ், தாம் இலங்கையரசு தருவதாக அறிவித்த சன்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். "நாங்கள் சட்டம் ஒழுங்கைப் பற்றி மட்டுமே கவலை கொள்கிறோம். சென்னையும் இன்னொரு சிக்காக்கோவைப்போன்று ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே நான் செயற்படுகிறோம்" என்றும் அவர் எம்.ஜி. ஆர் ஐப் பார்த்துக் கூறினார். டெயிலி நியூஸ் பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் இந்தியா உடனடியாக நாடுகடத்த வேண்டும் என்கிற தொனியில் அரசியல்த் தலையங்கங்களைத் தீட்டி செய்தி வெளியிட்டு வந்தது. இந்தியா எனும் பெரியண்ணன், எப்படி சிறிலங்கா எனும் சிறிய அயல்நாடு தொடர்பாக செயற்பட வேண்டும் என்று உபதேசம் செய்யும் வகையில் இச்செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. 1973 ஆம் ஆண்டு கடத்தலுக்காகக் கைதுசெய்யப்பட்ட குட்டிமணியை அப்போது முதலமைச்சராக இருந்த கருநாநிதி எப்படி இலங்கைக்கு நாடுகடத்தில் இலங்கையரசிற்கு உதவியிருந்தாரோ அதே போன்று எம்.ஜி.ஆர் உம் செயற்படவேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை முன்வைத்தது டெயிலி நியூஸ். 1973 ஆம் ஆண்டு கருநாநிதியின் ஒப்புதலுடன் நாடுகடத்தப்பட்ட குட்டிமணியை இலங்கையிலிருந்து சென்ற பொலீஸார் கையில் விலங்கிட்டு இலங்கைக்கு இழுத்து வந்திருந்தனர். ருத்ரா ராஜசிங்கம் இலங்கை அரசாங்கம் ருத்ரா ராஜசிங்கம் தலைமையில் பொலீஸ் குழுவொன்றினை தமிழ்நாட்டிற்கும் இந்தியத் தலைநகர் தில்லிக்கும் அனுப்பி பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தியிருந்தது. அவர் சென்னையில் தங்கி மோகந்தாஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரு போராளித் தலைவர்களையும் சந்திக்கவேண்டும் என்ற ருத்ரா ராஜசிங்கத்தின் கோரிக்கைக்கு மோகந்தாஸும் உடன்பட்டார். அதன்படி, கொழும்பிலிருந்து வந்திருந்த பொலீஸ் தூதுக்குழுவினரை பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் அடைத்துவைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்புச் சிறைக்கு அழைத்துச் சென்றார் மோகந்தாஸ். ருத்ரா கொழும்பு திரும்பி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் சாதாரண கிரிமினல்களைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால், இலங்கையின் பொலீஸ் மா அதிபர் அறிந்திராத அல்லது பார்க்கத் தவறிய ஒரு விடயம் தான் இரு போராளித் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பொலீஸாரால் கண்ணியமாகவும் கெளரவத்துடனும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது. தலைவர் பிரபாகரன், அவரது தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி, மனைவி மதிவதனி மற்றும் மகன் சார்ள்ஸ் அன்டனி பிரபாகரன் கைதுசெய்யப்பட்டு விட்டார் என்கிற செய்தி யாழ்ப்பாணத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பிரபாகரனின் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தரணியும், தந்தை செல்வாவின் மகனுமான சந்திரகாசனை அமர்த்தினார் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. இதனையடுத்து உடனடியாக தமிழ்நாடு சென்ற சந்திரகாசன் அன்று ஆட்சியில் இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருநாநிதியைச் சந்தித்தார். ஆனால், கருநாநிதி இந்திரா காங்கிரஸுடனான தேர்தல் கூட்டணியில் தொடர்ந்து நிலைத்திருந்தார். ஆகவே, மத்திய அமைச்சரவையில் இருந்த தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக இந்திராகாந்திக்கு செய்தியொன்றினை அனுப்பினார் கருநாநிதி. போராளிகள் இலங்கையரசாங்கத்திடம் கையளிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும் என்பதே அந்தச் செய்தி. "அவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள்" என்று இந்திரா காந்தியை அவர் எச்சரித்திருந்தார். சந்திரகாசன் கிட்டு, பொன்னமான், புலேந்திரன் ஆகியோர் பிரபாகரனின் கைது குறித்து அறிந்துகொண்டதுடன் தாம் தங்கியிருந்த மதுரை முகாமிலிருந்து சென்னைக்கு விரைந்தார்கள். சென்னையில் அப்போது தங்கியிருந்த பண்டிதர் மற்றும் ஏனையோருடன் அவர்கள் இரகசிய கூட்டமொன்றினை நடத்தினார்கள். பிரபாகரன் பொலீஸாரால் விடுவிக்கப்படாது விட்டால், சென்னையில் மிகவும் உயரமான எல்.ஐ.சி கட்டிடத்தின் கூரையில் ஏறிக் குதித்துவிடப்போவதாக எச்சரிக்கலாம் என்று முடிவெடுத்தார்கள். எல்.ஐ.சி கட்டிடம் - சென்னை அங்கிருந்த போராளிகளில் வயதில் கூடியவரும், ஓரளவிற்கு உலக விடயங்களை அறிந்திருந்தவருமான பேபி சுப்பிரமணியம் அவர்களின் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டதும் மிகுந்த ஆத்திரத்துடன் அவர்களை நோக்கிக் கத்தினார். "உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? அதை என்னிடம் விட்டு விடுங்கள். நான் அதைப் பார்த்துக்கொள்கிறேன். அவர்களை நான் எப்படியாவது வெளியில் எடுத்துவிடுகிறேன்" என்று கூறினார். தான் சிறுகச் சிறுக சேர்த்துவந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தமிழ்நாட்டு ஆதரவாளர்களின் வலையமைப்பை இதற்குப் பாவிக்கலாம் என்று அவர் முடிவெடுத்தார். மிகவும் அடக்கமானவராகத் தெரியும் பேபி சுப்பிரமணியம் பொதுமக்கள் தொடர்பாடலில் மிகவும் கெட்டிக்காரராக விளங்கினார். தமிழ்நாட்டில் அவர் தங்கியிருந்த காலத்தில் பல அரசியல்வாதிகள், கல்விமான்கள், தமிழ்ச் செயற்பாட்டாளர்கள், முன்னணி வணிகர்கள், பரோபகாரர்கள் என்று பலரையும் சந்தித்து இலங்கையில் தமிழர்களின் அவல நிலை பற்றியும், அவர்களது போராட்டம் பற்றியும் தெளிவுபடுத்தி வந்ததோடு, ஈழத்தமிழரின் போராட்டத்தின்பால் கரிசணையினை ஏற்படுத்தியிருந்தார். இவர்களுள் மிகவும் முக்கியமானவர் தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பழ நெடுமாறன் அவர்கள். மெலிந்த, உயரமான நெடுமாறன் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்ததோடு, அக்கட்சி இரண்டாக உடைந்தபோது இந்திரா காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டவர். பின்னர், காமராஜர் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கியவர். ஆகவே, நெடுமாறனைச் சந்தித்த பேபி சுப்பிரமணியம், பிரபாகரனை விடுதலை செய்ய அவர் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபிரபா என்று கிசுகிசுத்த கண்ணன் - பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு பாண்டி பஜார் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் தோசை மிகவும் பிடித்திருந்தது. அதிலும் மசாலாத் தோசை என்றால் சொல்லத் தேவையில்லை. பாண்டி பஜார் ரயில்வே நிலையத்திற்கு அருகில் இருந்த உணவகத்தில் அருமையான மசாலாத் தோசைகளைத் தயாரிப்பார்கள், அந்த உணவகத்திற்கு பிரபாவும் உமாவும் அடிக்கடி செல்வதுண்டு. வைகாசி 19 ஆம் திகதி அந்த உணவகத்திற்கு உமா மகேஸ்வரனும், கண்ணனும் வந்திருந்தார்கள். உணவருந்திய பின் பாவலர் பெருஞ்சித்திரனார் வீட்டிற்குச் செல்வதுதான் திட்டம். மாசி 25 ஆம் திகதி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து உமாவும் அவரின் சகாக்களும் அங்கேயே தங்கியிருந்தனர். அதே நாள் மாலை, ஆங்கிலப் படம் ஒன்றினைப் பார்த்துவிட்டு பிரபாகரனும் ராகவனும் அந்த உணவகத்திற்கு உணவருந்த வந்தார்கள். உமாவும் கண்ணனும் கிளம்புவதற்கு ஆயத்தமானார்கள். உமா தாம் வந்திருந்த மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தை முடுக்கிவிடுவதில் கவனத்தைச் செலுத்தியிருக்க, கண்ணன் அவரின் பின்னால் ஏற ஆயத்தமானார். அப்போது பிரபாகரனை கண்ணன் கண்டுகொண்டார். "பிரபா" என்று உமாவின் காதுகளில் இரகசியமாகக் கூறினார் கண்ணன். உடனடியாக தனது காற்சட்டைப் பயிலிருந்து கைத்துப்பாக்கியை எடுக்க உமா முயன்றார். உமாவைக் கண்ட பிரபாகரனும் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தார். சமயோசிதமாகவும், சுறுசுறுப்பாகவும் செயற்பட்ட பிரபாகரன், முதலில் உமாவை நோக்கிச் சுட்டார். ஆனால், குனிந்து தப்பித்துக்கொண்ட உமா, அங்கிருந்து தப்பிச்ச் சென்றுவிட்டார். பிரபாகரனின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்துவந்த 6 தோட்டாக்களில் நான்கு தோட்டாக்கள் கண்ணனின் கால்களைத் துளைத்துக் கொண்டு சென்றன. சூட்டுக் காயங்களிலிருந்து இரத்தம் பீறிட கண்ணன் நிலத்தில் விழுந்தார். சுற்றியிருந்த மக்கள் அதிர்ச்சியில் ஸ்த்தம்பித்து நிற்க சில இளைஞர்கள் பிரபாகரனையும் ராகவனையும் துரத்தத் தொடங்கினர். அவர்கள் இருவரும் ரயில் நிலையம் இருந்த திசை நோக்கி ஓடத் தொடங்கினர். ஆனால், தாம் ஓடிக்கொண்டிருப்பது பாண்டி பஜார் பொலீஸ் நிலையத்தை நோக்கியே என்று தெரிந்தவுடன், தம்மைத் துரத்திவந்து கொண்டிருந்த மக்களை நோக்கி அவர்கள் திரும்பி ஓடினர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டவுடன் நடப்பதை உணர்ந்துகொண்ட பொலீஸ் பரிசோதகர் நந்தகுமாரும், அவரது பொலீஸாரும் அப்போது வீதிக்கு வந்திருந்தனர். மக்களால் பிடிக்கப்பட்ட பிரபாகரனும், ராகவனும் பொலீஸாரிடம் கையளிக்கப்பட்டனர். விரைவாகச் செயற்பட்ட பொலீஸார் பிரபாகரனையும் ராகவனையும் கடுமையாகத் தாக்கிக்கொண்டே பொலீஸ் நிலையம் நோக்கி இழுத்துச் சென்றனர். காயப்பட்ட கண்ணனை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். பாண்டி பஜார் பொலீஸாரைப் பொறுத்தவரை கைத்துப்பாக்கியொன்றினை ஒருவர் பாவிப்பதென்பது மிகவும் அசாதாரண நிகழ்வாகத் தெரிந்தது. அப்பகுதியில் நடக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையேயான சண்டைகளில் பெரும்பாலும் கத்திகளும்,இரும்புக் கம்பிகளும், சைக்கிள் சங்கிலிகளுமே உபயோகிக்கப்பட்டு வந்தன. எவருமே துப்பாக்கிகளைப் பாவித்தது கிடையாது. நந்தகுமார் மிகவும் உறுதியாக நின்றார். சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர், ரயிலுக்காகக் காத்திருந்த உமா மகேஸ்வரனை பொலீஸார் கைதுசெய்தனர். ரயில்வே நிலையத்தில் நின்றிருந்த உமாவின் அருகில் சென்ற பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் அவரது அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டார். அடையாள அட்டையினை காண்பிக்க மறுத்த உமா, பொலீஸ் கொன்ஸ்டபிளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உமாவை கொன்ஸ்டபிள் கைதுசெய்ய எத்தனிக்கவே, உமா அதனை எதிர்த்ததுடன் பொலீஸ்காரரைத் தாக்குவதற்கு தனது கைத்துப்பாக்கியை உருவினார். அது தற்செயலாக வெடித்தது. ஆனால், உமாவை தாக்கிய கொன்ஸ்டபிள், அவரை கீழே வீழ்த்திக் கைதுசெய்தார். பிரபாகரன், ராகவன், உமா ஆகிய மூவரையும் தனித்தனி சிறைகளில் பாஸையூர் பொலீஸ் நிலையத்தில் சாதாரண கிரிமினல் குற்றவாளிகளைப் போல பொலீஸார் அடைத்து வைத்தனர். பிரபாகரன் தனது இயக்கப் பெயரான கரிகாலன் என்பதை பொலீஸாரிடம் தனது இயற் பெயராகத் தெரிவிக்க, உமா அமைப்பினுள் பாவிக்கும் தனது பெயரான முகுந்தனை தனது இயற்பெயர் என்று பொலீஸாரிடம் கூறினார். சாதாரணக் கிரிமினல்க் குற்றவாளிகளைப்போல் அவர்களை நடத்திய பொலீஸார், அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் இந்திய வெடிபொருள் சட்டத்தின் கீழான குற்றங்கள் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். அவர்களின் உண்மையான பெயர்கள் வெளித்தெரிந்தபோது, தமிழ்நாடு பொலீஸார் அதிர்ச்சியில் உறைந்துபோக, இலங்கை அரசுக்கு அதுவரை தேடப்பட்டு வந்த முக்கிய தமிழ் ஆயுத அமைப்புக்களின் தலைவர்கள் பிடிபட்டார்கள் என்கிற மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் இருவரினதும் உண்மையான விபரங்களை அறிந்துகொண்டதும், அவர்களை கண்ணியமாகவும், கெளரவத்துடனும் பொலீஸார் நடத்தத் தொடங்கினர். கொழும்பிலோ அரசும், பாதுகாப்புத்துறையும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் திளைத்திருந்தனர். பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் தமிழ்நாட்டில் கைதுசெய்யப்பட்ட விபரம் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவுக்கும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கும் தெரியப்படுத்தப் பட்டது. உடனடியாக பாதுகாப்புச் சபையைக் கூட்டிய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் வீரப்பிட்டிய, பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து மூன்று முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர். முதலாவது, பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் உத்தியோகபூர்வாமகாக் கோரிக்கை முன்வைப்பது. இரண்டாவதாக பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் தலைமையிலான பொலீஸ் குழுவொன்றினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி அவர்கள் இருவரையும் நாடுகடத்தும் ஒழுங்குகளை தமிழ்நாட்டு பொலீஸாருடன் சேர்ந்து செய்வது. மூன்றாவது, அவர்கள் இருவரையும் கைதுசெய்ய உதவியவர்களுக்கு பத்து லட்சம் இலங்கை ரூபாய்களை சன்மானமாக வழங்குவது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபெரும்பாலான அரச ஊடகங்கள் அப்படித்தான் வசி!1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபழிவாங்கும் குணம் கொண்ட கிழட்டு நரி ஜெயார் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகி பல வருடங்களுக்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டு சண்டே டைம்ஸ் பத்திரிக்கையாளர் ரொஷான் பீரீசுடன் பேசும்போது ஜெயார், "சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது" என்பதைக் காட்டவே விஜய குமாரதுங்க கைதுசெய்யப்பட்டதாகக் கூறினார். "எனது மகனை சிறிமாவோ பண்டாரநாயக்கா கைதுசெய்து, சிறையில் அடைத்து வைத்ததுபற்றி நான் ஒருபோதும் பேசியது கிடையாது" என்று கூறினார். அவரது மகன் ரவி ஜெயவர்த்தன மக்கள் விடுதலை முன்னணியினரின் 1971 ஆம் ஆண்டுக் கலகத்தின்போது சிறிமாவினால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 80 களில் தமிழருக்கெதிரான இனவழிப்பில் ஈடுபட்ட ஜெயாரின் ஒரே புத்திரன் - ரவி ஜெயவர்த்தன ஆனால், ஜெயார் தனது மகனின் கைதுபற்றி அவ்வப்போது பேசியே வந்திருக்கிறார். சிறிமாவின் சிவில் உரிமைகளைப் பறித்து, அவரது அரசியல் எதிர்காலத்தை ஜெயார் அழித்திருந்த நிலையில், அவரைச் சந்திக்கச் சென்றிருந்த அமரபுர நிக்காய பீடத்தின் பெளத்த பிக்குகளின் தலைவரான கொஸ்கொட தர்மவன்சவிடமும் இன்னும் சில பெளத்த பிக்குகளிடமும் பேசிய ஜெயவர்த்தன தனது ஒரே மகனை 1971 ஆம் ஆண்டு கைதுசெய்து சிறையிலடைத்த சிறிமா, தகரக் கோப்பையில் உணவு போட்டார் என்று வன்மத்துடன் கூறியிருந்தார். அப்படியானால், உங்களின் மகனின் கைதுக்காகவா நீங்கள் இன்று சிறிமாவைப் பழிவாங்குகிறீர்கள் என்று பிக்குகள் அவரிடம் வினவியபோது, ஜெயார் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், சிறிமாவின் மீதான கடும்போக்கைக் கைவிடுமாறு பிக்குகள் முன்வைத்த வேண்டுகோளினையும் ஜெயார் முற்றாக நிராகரித்து விட்டார். விஜய குமாரதுங்கவின் கைது கூட தனது மகனின் கைதிற்கான பழிவாங்கலாகவே ஜெயாரினால் செய்யப்பட்டது. சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதற்காக கார்த்திகை 2 ஆம் திகதி அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட நான்காவது திருத்தத்தினை பீலிக்ஸ் ஆர் பண்டாரநாயக்கவும், சி வி விவேகானந்தனும் உச்ச நீதிமன்றத்தில் அதன் நியாயத்தன்மை குறித்து கேள்வியெழுப்பியிருந்தனர். அரச தலைமை வழக்கறிஞர் இந்தத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றுவதாகவும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதாகவும் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார். ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற குழு, 4 இற்கு 3 என்கிற ரீதியில் புதிய திருத்தம்பற்றியோ அல்லது சர்வஜன வாக்கெடுப்புப் பற்றியோ தீர்ப்பளிப்பதற்கு ஏதுமில்லை என்று கைவிரித்து விட்டது. வி என் நவரட்ணம் 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 4 ஆம் திகதி கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சர்வஜன வாக்கெடுப்பினை எதிர்ப்பதென்று முடிவெடுத்தது. சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி. என். நவரட்ணம் தலைமையிலான உறுப்பினர்கள் இந்த முடிவில் தீர்க்கமாக நின்றனர். தனது தொகுதி வாக்களர்களின் ஆதரவின் மூலம் பதவிக்கு வந்த தான், தனது 6 வருட பதவிக் காலம் முடிவுற்றதும் தனது பதவியினை இராஜினாமாச் செய்யப்போவதாக அறிவித்தார். "தொடர்ந்தும் கதிரையைப் பிடித்துக் கொண்டு தொங்குவது மக்களை ஏமாற்றும் செயலாகும்" என்று அவர் கூறினார். அக்குழுவில் இருந்த சிலர், முன்னணி, எதிர்க்கட்சியுடன் இணைந்து சர்வஜன வாக்கெடுப்பினை எதிர்க்கவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனவுடன் இதுகுறித்து ஏற்கனவே ஒரு இணக்கப்பட்டிற்கு வந்திருந்ததுடன், ஜனாதிபதித் தேர்தலில் ஜெயாருக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். ஆகவே, முன்னணியினரின் பாராளுமன்றக் குழு ஒரு சமரசத்திற்கு வந்தது. அதாவது, சர்வஜன வாக்கெடுப்பிற்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் அதேவேளை, எதிர்க்கட்சியுடன் சேர்வதில்லை என்பதே அது. மேலும், 1983 ஆம் ஆண்டு ஆவணியில் முடிவிற்கு வரும் நடப்பு பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் பதவியிலிருந்து தாம் இராஜினாமாச் செய்வதாகவும் தீர்மானித்தார்கள். மேலும், தமது முடிவினை உறுதிப்படுத்தும் முகமாக அனைத்து முன்னணி உறுப்பினர்களும் தமது இராஜினாமாக் கடிதங்களை அமிர்தலிங்கத்திடம் கையளித்திருந்தனர். அதேவேளை, சர்வஜன வாக்கெடுப்பிற்க்நெதிராக முன்னணி கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடாது எனும் உறுதியையும் அமிர்தலிங்கத்திடமிருந்து ஜெயார் பெற்றுக்கொண்டார். ஜெயாருக்கு தான் வழங்கிய வாக்குறுதியின்படி அமிர்தலிங்கமும் அவரது கட்சியும் நடந்துகொண்டனர். அதன் மூலம் வடக்குக் கிழக்கிற்கு வெளியே இருந்த தமிழர்களின் ஆதரவு ஜெயாருக்குக் கிடைக்க ஏதுவாகியது. சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட அமிர்தலிங்கம், அதற்கெதிரான தமது கட்சியின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தார். ஆறு வருடங்களுக்கு மட்டுமே மக்கள் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 வருடங்களுக்குப் பதவியில் நீடிப்பது மனச்சாட்சிக்கு விரோதமானது என்று அவர் கூறினார். மேலும், தமது பாராளுமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி தனது கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் முதலாவது ஆயுட்காலம் முடிவடையும்போது ராஜினாமாச் செய்வார்கள் என்றும் அறிவித்தார். ஆனால், பாராளுமன்ற வாக்கெடுப்பின்போது அவரும், அவரது கட்சியினரும் பாராளுமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை. பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட பாராளுமன்றத்தை நீட்டிக்கும் பிரேரணை 142 வாக்குகளுக்கு 4 வாக்குகள் என்கிற அடிப்படையில் பாராளுமன்றத்தால் 1982 ஆம் ஆண்டு, கார்த்திகை 5 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அநுரா பண்டாரநாயக்க, ஆனந்த திசாநாயக்க, லக்ஷ்மன் ஜயக்கொடி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சியின் சரத் முத்துவெட்டுவே கம ஆகியோர் பிரேரணைக்கெதிராக வாக்களித்திருந்தனர். சர்வஜன வாக்கெடுப்பிற்கான திகதி மார்கழி 22 ஆம் நாளுக்குத் தீர்மானிக்கப்பட்டது. வாக்களர்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட கேள்விகளாவன : நடப்பிலிருக்கும் பாராளுமன்றத்தை இன்னும் ஆறுவருடங்களுக்கு, அதாவது 1989 ஆம் ஆண்டு ஆவணி 4 ஆம் திகதிவரை நீட்டிக்கவும், அத்திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்துவிடவும் அனுமதி தருகிறீர்களா? சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிப்பதுகுறித்து வாக்காளர்களுக்கு அறிவுருத்தல் விடுக்கப்பட்டது. அதன்படி, பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை இன்னும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க விரும்புவோர் விளக்குச் சின்னத்திற்கும், விரும்பாதோர் பானை சின்னத்திற்கும் புள்ளடியிடுமாறு கோரப்பட்டனர். விளக்குச் சின்னத்திற்கு ஆதரவாக ஜெயவர்த்தன பிரச்சாரம் செய்த அதேவேளை, சிறிமா தலைமையிலான எதிர்க்கட்சியினர் பானைச் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவந்தனர். சர்வஜன வாக்கெடுப்பிற்கான தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினை கார்த்திகை மூன்றாம் வாரம் கொழும்பு, கொச்சிக்கடையில் ஆரம்பித்த ஜெயவர்த்தன, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும் புதிய விடயம் அல்ல என்றும், இது 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். சிறிமாவோ மக்களின் விருப்பினை அறிந்துகொள்ளாமல், பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை 1975 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை நிட்டித்தது போல அல்லாமல், தான் மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தை நீட்டிக்க விரும்புவதாக ஜெயார் கூறினார். தனது அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே தற்போதிருக்கும் பாராளுமன்றத்தை தொடர்ந்தும் பேண தான் விரும்புவதாக அவர் கூறினார். சிறிமா அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதால், அந்த வேட்பாளர்கள் தமது தகமையினை இழப்பார்கள் என்கிற தடை இருந்தபோதும், சிறிமாவோ இப்பிரச்சாரங்களில் எதிர்க்கட்சியின் பிரதம பிரச்சாரகராகப் பங்கெடுத்தார். ஏனென்றால், இந்த சர்வஜன வாக்கெடுப்பில் வேட்பாளர்கள் என்று எவருமே இருக்கவில்லை. தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் பேசிய சிறிமா, "உங்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பமிருந்தால், நீங்கள் பானைச் சின்னத்திற்கே உங்களின் வாக்கினை வழங்க வேண்டும். எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்விற்காக நீங்கள் பானைச் சின்னத்திற்கே வக்களிக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். 1931 ஆம் ஆண்டிலிருந்து நாம் பேணிவரும் நடைமுறையினை இதன் மூலம் மட்டுமே நாம் பேணைக்காக்க முடியும்" என்று கூறினார். "பானைக்கு வாக்களிப்பதென்பது எந்தவொரு அரசியற் கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லத் எதிராகவோ வாக்களிப்பது என்று அர்த்தமாகிவிடாது. பானைக்கு வக்களிப்பதன் மூலம் 1931 ஆம் ஆண்டிலிருந்து பாதுகாக்கப்பட்டு வரும் நடைமுறையான பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்யும் உரிமையினை காப்பாற்றிக்கொள்வதாகும்" என்றும் அவர் கூறினார். சர்வஜன வாக்கெடுப்பு நடப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆதரவாளர்களைக் கவரும் விதமான வதந்தியொன்று கொழும்பில் வேண்டுமென்றே அரசால் பரப்பப்பட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கும் முகமாக, அரசாங்கத்தில் மிக முக்கிய பொறுப்பில் அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனவினால் அமர்த்தப்படப் போகிறார் என்பதுதான் அந்த வதந்தி. நான் அமிர்தலிங்கத்திடம் இதுகுறித்து நேரடியாகக் கேட்டேன், "குப்பை" என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்த அமிர், அதனை முற்றாகவும் மறுக்க விரும்பவில்லை. "ஒரு வதந்தியை நான் எப்படி இல்லையென்று மறுக்க முடியும்?" என்று அவர் என்னைப்பார்த்துக் கேட்டார். நாடுபூராகவும் 5,768,662 வாக்காளர்கள் சர்வஜன வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்கள். பதிவுசெய்யப்பட்ட 8,145,015 வாக்களர்களில் இது 70.82 வீதமாகும். மொத்தமாக 3,141,223 வாக்குகள், 54.45 வீதத்தினர் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க தமது விருப்பினைத் தெரிவித்திருந்தார்கள். 2,605,983 வாக்காளர்கள், 45.17 வீதத்தினர், பாராளுமன்ற ஆயுட்கால நீட்டிப்பிற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். எதிர்க்கட்சியினர் மீதான குண்டர்களின் வன்முறைகள், அச்சுருத்தல்கள் என்பவற்றுடனும், தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாகவும் நடத்தப்பட்ட இந்த சர்வஜன வாக்கெடுப்பில் ஜெயவர்த்தன 535,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது, நாடு தழுவிய ரீதியில் வக்களித்தவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தினால் குறைந்து காணப்பட்டது. ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் காட்டிய விருப்பைக் காட்டிலும் அதிக ஈடுபாட்டுடன் சர்வஜன வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்த 228,613 தமிழர் வாக்களர்களுடன் ஒப்பிடும்பொழுது, சர்வஜன வாக்கெடுப்பில் 290,849 தமிழ் வாக்களர்கள் யாழ்ப்பாணத்தில் வாக்களித்திருந்தனர். இவர்களுள் 260,534 வாக்களர்கள் பாராளுமன்றத்தை நீட்டிப்பதற்கு எதிராகவே வாக்களித்தனர். 25,312 வாக்களர்கள் பாராளுமன்றம் நீட்டிக்கப்படுவதை ஆதரித்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் ஜெயவர்த்தனவுக்கு ஆதரவாக வாக்களித்த 44,780 தமிழர்களில் 19,000 தமிழர்கள் அவருக்கெதிராக சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களித்திருந்தனர். இவ்வாறே, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வசித்துவரும் பெரும்பாலான தமிழர்கள் பாராளுமன்றத்தை நீட்டிக்கும் ஜெயவர்த்தனவின் விருப்பிற்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். வன்னி மாவட்டத்தில் 48,968 வாக்களர்கள் இல்லையென்றும், 25986 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். திருகோணமலை மாவட்டத்தில் 51,909 வாக்களர்கள் இல்லையென்றும், 39,429 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 72,971 வாக்களர்கள் இல்லை என்றும், 47,482 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் 91,129 வாக்களர்கள் ஆம் என்றும், 62,836 வாக்களர்கள் இல்லையென்றும் வாக்களித்திருந்தனர். தனது விருப்பிற்கெதிராக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிந்தபோது, இயல்பாகவே பழிவாங்கும் குணம் கொண்ட ஜெயார் தமிழர்களுக்கொரு பாடத்தைப் புகட்ட வேணடும் என்று தருணம் ஒன்றை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபாராளுமன்றத்தை நீட்டிக்க ஜெயார் தீட்டிய சதி அடுத்தபடியாக, தனது திட்டத்தை மக்களை ஏற்றுக்கொள்ளவைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார் ஜெயார். அரச ஊடகங்களான லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினி தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சிச் சேவை ஆகியன ஜெயாரின் இத் திட்டத்திற்காக செயலில் இறக்கப்பட்டன. கார்த்திகை 2 ஆம் திகதி அவற்றிற்கு விடுக்கப்பட்ட அறிவுருத்தலின்படி மறுநாள் அரசால் வெளியிடப்படவிருக்கும் அறிவிப்புக்களுக்கு இவ்வூடகங்களின் நிகழ்ச்சி நிரலில் அதிமுக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படவேண்டும் என்று கூறப்பட்டது. கூறப்பட்டதன்படி, கார்த்திகை 3 ஆம் திகதி இந்த ஊடகங்களில் அதிர்ச்சிதரும் செய்தியொன்று வெளியானது. அந்த அறிவித்தல் ஜனாதிபதி ஜெயாரின் கையொப்பத்தோடு வெளிவந்திருந்தது. "1982 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 21 ஆம் திகதி எனக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் தலைமை தாங்கியவர்களும், அக்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களுமான சிலர் என்னையும், அமைச்சர்கள் சிலரையும் மற்றும் திரு அநுர பண்டாரநாயக்க, பாதுகாப்புப் படைகளில் தலைமை நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளைப் படுகொலை செய்யவும், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை சிறைப்பிடிக்கவும் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, இவர்களின் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில், இராணுவ ஆட்சியொன்றை நாட்டில் ஏற்படுத்தி, தமது தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறியவாறு அரசியலமைப்பை முற்றாக நிராகரித்துவிடவும் இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்". "இந்தக் கயவர்களின் முயற்சி கைகூடுவதனை அனுமதிப்பதா அல்லது எனக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஜனாதிபதி எனும் அதிகாரத்துடன், பாராளுமன்றத்தைத் தொடர்ந்து நடத்திச்சென்று, மக்களுக்கான நற்திட்டங்களை தொடர்வதற்கான மக்கள் ஆணையினை பெற்றுக்கொள்வதா என்பதுபற்றி தீர்மானம் எடுக்கவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். இக்கயவர்களை நான் பாராளுமன்றத்தில் நுழைய அனுமதித்தால், நடைமுறையில் இருக்கும் ஜனநாயக விழுமியங்களை இவர்கள் அழித்துவிட முயல்வதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நக்சலைட்டுக்கள் பாணியிலான அரசாங்கத்தையும் இவர்கள் உருவாக்கி விடுவார்கள்". "மேலும், ஜனநாயக வழிகளில் தொழிற்பட விரும்பும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சிக்குள் தமது அதிகாரத்தை மீளவும் நிலைநாட்டுவதற்கான கால அவகாசமும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நான் கருதுகிறேன்" "ஆனால், நான் இன்று பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் ஒன்றிற்குச் செல்லுமிடத்து, கடந்த ஐப்பசி 20 ஆம் திகதி நிலவரப்படி எனது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 196 ஆசனங்களில் 120 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி 68 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். அது எனக்கு ஒரு பிரச்சினையல்ல. ஆனால், எதிர்க்கட்சி ஒரு ஜனநாயகவிரோத, வன்முறையினை விரும்பும் நக்சலைட் அமைப்பாக இருப்பதை நான்விரும்பவில்லை. ஆனால், ஐப்பசி 29 இல் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அவ்வாறான வன்முறைவிரும்பும் ஜனநாயக விரோத அமைப்பாகவே இருந்தது. ஆகவேதான், பொதுதேர்தல் ஒன்றினை நடத்தி, வன்முறையாளர்களை பாராளுமன்றத்திற்குள் அனுமதிப்பதைக் காட்டிலும், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலம் நடப்புப் பாராளுமன்றத்தைத் தொடரலாம் என்கிற முடிவிற்கு நான் வந்திருக்கிறேன்" என்று ஜெயாரின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. நான் பணிபுரிந்த டெய்லி நியூஸ் பத்திரிக்கையும், ஏனைய லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளான தினமின, தினகரன் ஆகிய பத்திரிக்கைகளும் இந்த நக்சலைட் சதிபற்றி பிரச்சாரப்படுத்தி எழுதியதுடன், அச்செய்தினுள் சூட்சுமமான முறையில் சர்வஜன வாக்கெடுப்பிற்கான அவசியத்தையும் புகுத்தி செய்தி வெளியிட்டிருந்தன. டெய்லி நியூஸ் பத்திரிக்கை, "ஜனாதிபதியைக் கொல்லும் நக்சலைட் சதி முறியடிக்கப்பட்டது" என்று தலைப்பிட்டிருந்தது. ஹெக்டர் கொப்பேக்கடுவ 1982 குற்றவியல் விசாரணைத் திணைக்களம் இந்த நக்சலைட் சதிபற்றி விசாரிக்க அழைக்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியிருந்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கணவருமான விஜய குமாரதுங்கவும் இன்னும் சிலரும் கைதுசெய்யப்பட்டனர். சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேக்கடுவவும் விசாரணைக்கு உடபடுத்தப்பட்டார். விஜய குமாரதுங்க "கிழட்டு நரியொன்று தன்னையும் தனது கொலைகாரக் கூட்டத்தையும் தனது அரசியல் எதிரிகள் கொல்லத் திட்டமிடுவதாக தானே ஒரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றி வந்ததாம்" என்கிற வகையில் ஜெயாரின் பித்தலாட்டங்கள் குறித்து வதந்திகளும், நகைச்சுவைக் கதைகளும் கொழும்பின் அரசியல் வட்டாரங்களில் பரவி வந்தன. தனது சதிக் கோட்பாட்டை உண்மையென்று நிரூபிப்பதற்கு எதிர்க்கட்சியின் தலைமைப்பீடத்தின் சில பெயர்களையும் ஜெயார் வெளியிட்டார். மேலும், எதிர்கட்சியை வழிநடத்திய மேன்மைதங்கிய பெண்மணியும் கைதுசெய்யப்படவேண்டும் என்று அவர் கூறினார். தான் திட்டமிட்டபடியே சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றத்தை இன்னும் 6 வருடங்களுக்கு நீட்டிப்பது உறுதிப்படுத்தப்படும்வரை எதிர்க்கட்சி மீதான கைதுகளையும், விசாரணைகளையும் ஜெயார் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். கொழும்பு அரசியலின் நகைச்சுவைகளுக்கு அப்பால், விஜய குமாரதுங்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் ஜெயாரின் சூழ்ச்சியைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தார். ஆகவே அவரையும், அவர் சார்ந்தவர்களையும் கைதுசெய்து அடைத்துவைக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைமைச் செயலகம் கடுமையான தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கிருந்த மாவட்ட மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்ப் பட்டியலும் கைப்பற்றப்பட்டது. இவர்களும் கொலைச்சதி பற்றிக் கடுமையாக விசாரிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தேர்தல் நாள் கடந்து சென்றவுடன், இவர்கள் அனைவர் மீதிருந்த விசாரணைகளையும் பொலீஸார் நிபந்தனையின்றி கைவிட்டுச் சென்றனர்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointசர்வஜன வாக்கெடுப்பு ஜெயாருடன் அமைச்சர்களும், ரோகண விஜேவீரவும் குட்டிமணியை தனது கட்சியினூடாக பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கு தாம் எடுத்த முயற்சி கடுமையான கணடங்களையும், பின்னடைவையும் சந்தித்திருந்த வேளையில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும் விதத்தில் இன்னுமொரு நடவடிக்கையினையும் ஜெயவர்த்தனா செய்தார். அதுதான் 1983 ஆம் ஆண்டின் மத்தியில் வரவிருந்த பாராளுமன்றத் தேரெதல்களுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தப்போவதாக அவர் விடுத்த அறிவிப்பு. தனது இரண்டாவது ஜனாதிபதிக் காலத்திற்கான பதவியேற்பினை மாசி மாதம் 4 ஆம் திகதிவரை தாமதப்படுத்தியதன் மூலம், ஜெயார் மேலும் மூன்றரை மாதங்கள் தனது முதலாவது ஜனாதிபதிக் காலத்தை நீட்டித்துக்கொண்டார். தனக்கு பாராளுமன்றத்தில் அன்றிருந்த ஐந்தில் நான்கு பெரும்பான்மையினை தனது இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக்காலம் முழுவதற்கும் அனுபவிக்க அவர் விரும்பினார். அநுராதபுரத்தில் ஜனாதிபதித் தேர்தல்ப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை ஜெயவர்த்தன, தனது திட்டம்பற்றி முதன்முதலாக சில தகவல்களை வெளியிட்டார். "இனிவரும் பத்தாண்டுகளுக்கான இலங்கையின் வாக்காளர் வரைபடத்தினை நான் வெளியிட விரும்புகிறேன்" என்று ஜெயார் கூறியபோது பலருக்கும் அது புரிந்திருக்கவில்லை. ஆனால், இப்படிக் கூறியதன் மூலம் தான் அனுபவித்துவந்த பாராளுமன்றம் ஊடான பலத்தினை அவர் இன்னும் ஆறு வருடங்களுக்கு நீட்டிக்க விரும்பியிருந்தார் என்பதை அவருடன் இருந்த வெகு சிலரே உணர்ந்திருந்தனர். தான் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் தனது திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார் ஜெயார். வழமைபோல தனக்கு விசுவாசமான அமைச்சர்களில் ஒருவரைக் கொண்டு இதனை அவர் ஆரம்பித்து வைத்தார். இம்முறை அவர் அனுப்பிய ஆள், பிரதமர் ரணசிங்க பிரேமதாசா ஆவார். ஜெயாரின் கட்டளைப்படி பாராளுமன்றத்தில் பேசிய பிரேமதாசா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேதி குறிப்பிடாத இராஜினாமாக் கடிதங்களை உடனடியாக ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் கையளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு பாராளுமன்றத்தின் தொடர்ச்சியான ஆதரவு தமக்கு வேண்டும் என்பதால், நடைமுறையில் உள்ள பாராளுமன்றம் மேலும் ஆறு வருடங்களுக்கு நீட்டிக்கப்படுவதற்கு மக்கள் ஆணையொன்று கேட்கப்படும் என்றும் பிரேமதாசா அறிவித்தார். பிரேமதாசவின் ஆலோசனைகளை அன்று பின்னேரமே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முழுமனதாக ஏற்றுக்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு பிரேமதாசாவின் கோரிக்கையினை முற்றாக ஏற்றுக்கொண்டு தமது திகதியிடப்படாத இராஜினாமக் கடிதங்களை கையளிக்க ஒத்துக்கொண்டதுடன், சர்வஜன வாக்கெடுப்பொன்றின்மூலம் நடப்புப் பாராளுமன்றத்தினை மேலும் ஆறு வருடங்களுக்கு நீட்டிப்பதையும் ஏற்றுக்கொண்டனர். பாராளுமன்றக் குழுவினருடன் பேசிய ஜெயார், திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்கள் தேவையேற்படும்போது பின்னொரு காலத்தில் பாவிக்கப்படும் என்று கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத கடிதங்கள் பாதுகாப்பாக பெட்டகம் ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டதுடன், இவற்றின்மூலம் பாராளுமன்றத்தின் ஐந்தில் நான்கு பெரும்பான்மையினை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிப்பதற்கான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பூரண ஆதரவினை உறுதிப்படுத்திக் கொண்டதுடன் , அவர்கள் மீதான முற்றான அதிகாரத்தையும் ஜெயார் நிலைநாட்டிக்கொண்டார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointநிறுத்திவிடும் எண்ணமில்லை வசி. எனக்கிருக்கும் கவலை இத்தொடரினை சபாரட்ணம் அவர்கள் முழுமையாக எழுதமுன்னரே அவரும் இறையடி சேர்ந்ததும், எமது போராட்டமும் முற்றாக அழிக்கப்பட்டதும்தான். அதற்காக, நடந்தவற்றை பதிவிடாமல் இருக்கமுடியுமா? ஆகவே, நிச்சயம் அவர் எழுதிச் சென்றதை இங்கு பதிவேன். நேரம் ஒரு பிரச்சினைதான், ஆனால் செய்யாமலும் இருக்க முடியவில்லை. மீண்டும் எனது நன்றி வசி!1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointமுதலில் உங்களின் கருத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் வசி, நான் இத்தொடரைத் தொடர்ந்தும் எழுத ஊக்குவித்துவரும் எனக்குத் தெரிந்த சிலரில் நீங்களும் ஒருவர். மற்றையவர்கள் ஈழப்பிரியன் அண்ணா, புங்கையூரான், இணையவன்..இப்படி ஒரு சிறிய வாசகர் வட்டம். சட்டர்டே ரிவியூ எனது தந்தையார் அடிக்கடி அலுவலகத்திலிருந்து எடுத்துவரும் ஒரு பத்திரிக்கை. ஆங்கிலம் என்கிறபடியினால், அது அரசு சார்புப் பத்திரிக்கையாக இருக்கும் என்றே எண்ணிவந்தேன். மேலும், போராட்ட இயக்கங்களுக்கெதிரான, அரசுக்குச் சார்பான எனது தந்தையாரின் மனோநிலையும் நான் இந்த முடிவிற்கு வர இன்னுமொரு காரணம். நீங்கள் கூறியபடி விக்டர் ஐவன் ஒரு சிங்கள இடதுசாரிப் பத்திரிக்கையாளர். தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த புரிதலைக் கொண்டவர். இந்த ஆவணம் எப்படியிருக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. தலைவர் பற்றி எழுதப்படுவதால் எதையுமே யோசிக்காது ஆரம்பித்து விட்டேன். ஆனால், தொடர்ந்தும் எழுதும்போதே, இது தலைவர் பற்றி மட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஏனைய அரசியல்த் தலைவர்கள், அன்றிருந்த சூழ்நிலைகள் , அரச அடக்குமுறை பற்றியும் பேசுகிறது. ஆகவே, தொடர்ந்தும் எழுதுகிறேன். உங்களின் அரசியல் ஆர்வமும், பொருளியல்த்துறையில் நீங்கள் கொண்டிருக்கும் அறிவும் அற்புதமானது. தொடர்ந்திருங்கள். ஒவ்வொரு வாரவிடுமுறை நாளிலும் குறைந்தது ஒரு சிறிய பகுதியையாவது எழுதிவிட முயல்கிறேன். பார்க்கலாம். மீண்டும் உங்களின் ஊக்கம்தரும் கருத்திற்கு நன்றி !1 point - இலங்கையில் ஆறு மாதங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.