Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. valavan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1570
    Posts
  2. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    9
    Points
    35602
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7054
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    53011
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/20/23 in all areas

  1. பகிடிக்குத் தான் இரண்டு பேரும் சொல்லியிருக்கிறீர்களென்றாலும், இந்த சமூக வலைத் தளங்களில் வரும் போலித் தகவல்களை ஆதாரமாக வைத்துக் கட்டுரை எழுதும் ஆய்வாளர்களால் தான் புலம் பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு வேரூன்றியது. சில கட்டுரைகள் deadpan comedy போல இருக்கும்: உதாரணமாக பதிவுகள் இணையத்தில் ஒரு வருடம் முன்பு, ஜோதிகுமார் என்ற சிவப்புப் சட்டைக்காரர் எழுதியிருக்கும் தகவலைப் பாருங்கள்: "....போரின் மூன்றாவது சுற்று இப்படியாய் முடிவடைந்த நிலையில் அடுத்த நான்காவது சுற்று, ரஷ்யாவின் இலத்திரனியல்-மின்னியல் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டது. எலன்-மஸ்க் (Elon Musk) தனது Starlink செய்மதிகளை உக்ரைனுடன் தொடர்புபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவைப்படும் Terminalகளையும் உக்ரைனுக்கு தந்துதவி ரஷ்ய தாக்குதல்களால் செயலிழந்து போன உக்ரைன் அலைவரிசைகளை மீள உயிர்ப்பிக்க உதவப் போவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, ரஷ்யா, கீவ்வின் மிக உயர்ந்த தொலைதொடர்பு கோபுரத்தை துல்லிய குண்டுவீச்சுகளால் தாக்கியழித்து, அங்கே பணியாற்றிய ஐந்து ஊழியரையும் கொன்றொழித்து விட்டதாய் உக்ரைனே அறிவித்தது. அதாவது எலன் மஸ்க்கின், Starlink செய்மதிகளின் தொடர்பாடல், ரஷ்யா படைத்தரப்பால் ஏட்டிக்குப் போட்டியான நிலையில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பதிலடியான நடைமுறை மேற்கொண்டதன் மூலம், மேற்படி நான்காம் சுற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போரை, விண்வெளி நோக்கி விஸ்தரிக்க எடுக்கப்பட்ட நகர்வு, முதலடியிலேயே நிறுத்தப்பட்டது" அதாவது, உக்ரைனின் வானலை வழி தொலைத்தொடர்பை ரஷ்யா குறிவைத்துத் தாக்கி வந்த நிலையில், செய்மதி மூலம் உக்ரைனை வெளியுலகோடு இணைக்கும் நோக்கில் Starlink வழங்கப் படுகிறது. "உள்ளூர் வானலைக் கோபுரத்தை அழித்ததால், ரஷ்யா செய்மதித் தொடர்பை அழித்து விட்டதாக ஜோதிகுமார் எழுதுகிறார். இது தொழில்னுட்பம் புரியாமையா அல்லது, "வாசிப்பவர்கள் கேனையர்கள்" என்ற நம்பிக்கையா என்பது இவர் போன்ற கட்டுரையாளர்களுக்கே வெளிச்சம்! 😂
  2. கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் இக்கட்டத்தில் யாழ்நகர் எரியத் தொடங்கியிருந்தது. பலாலி முகாமிலிருந்து பல ட்ரக்குகளில் கிளம்பிய ராணுவத்தினர் தாக்குதல் நடந்த திருநெல்வேலிப் பகுதியை வந்தடைந்தனர். பலாலியிலிருந்து திருநெல்வேலி வரையான வீதியெங்கும் இருந்த கடைகளை சேதப்படுத்தியவாறே அவர்கள் வந்திருந்தனர். திருநெல்வேலிச் சந்தியை அடைந்ததும், தமது ட்ரக்குகளை சந்தியில் நிறுத்திவிட்டு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை ஆரம்பித்தனர். செல்லக்கிளி மறைந்திருந்து கண்ணிவெடித் தாக்குதலை நடத்திய கடையினை உடைத்ததிலிருந்து அவர்களின் பழிவாங்கும் தாக்குதல்கள் ஆரம்பித்தன. அப்பகுதியின் அருகில் புலிகள் பதுங்கியிருந்து தாக்குதலை மேற்கொண்டதாக அவர்கள் கருதிய மதில்களை உடைத்தனர். பின்னர், வீதியின் இரு மருங்கிலும் இருந்த வீடுகளை ஒவ்வொன்றாகக் கொழுத்தத் தொடங்கினர். வீதியில் தாம் எதிர்கொண்ட பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். அன்று தமது வெறியாட்டம் முடிந்து முகாம் திரும்பிய ராணுவத்தினர் திங்கட்கிழமை மீண்டும் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர். கல்வியங்காட்டுப் பகுதியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சைக்கிள் ஒன்றில் வந்துகொண்டிருந்த 10 வயதுச் சிறுவனைக் கண்ட இராணுவத்தினர் அவனை நிற்குமாறு உத்தரவிட்டனர். ஒரு கையில் பாண் ஒன்றை ஏந்தியபடி சைக்கிளை மிதித்துவந்த அந்தச் சிறுவனும் உடனடியாக சைக்கிளை விட்டு கீழிறங்கவே, அவனருகில் சென்ற இராணுவ வீரன் ஒருவன் அச்சிறுவனின் தலையில் துப்பாக்கியால் சுட்டான். அச்சிறுவன் அவ்விடத்திலேயே இறந்து வீழ்ந்தான். சிறுவனது உடலும், அவன் மிதித்துவந்த சைக்கிளும், காவி வந்த பாணும் அவ்விடத்திலேயே மாலைவரை கிடந்ததாக சாட்சியங்கள் கூறுகின்றன. "அவனது மூளைப்பகுதி சிதறி தலையின் வெளியே கசிந்துகொண்டிருந்தது" என்று தனது புத்தகத்தின் முனசிங்க குறிப்பிட்டிருக்கிறார். கொல்லப்பட்ட சிறுவனைத் தான் பார்த்தபோது நீண்ட பெருமூச்சு ஒன்றைத்தவிர வேறு எதுவும் தன்னால் செய்ய இயலவில்லை என்று அவர் கூறினார். வீதியின் இருபக்கத்திலும் இருந்த பகுதிக்குள் ராணுவ வீரர்கள் ஊடுருவிச் சென்றிருந்தனர். அங்கிருந்த வீடுகளை அவர்கள் எரித்துக்கொண்டே சென்றதுடன் கண்ணில் அகப்பட்டவர்களைச் சுட்டுக் கொன்றபடி சென்றனர். இவ்வாறான வீடொன்றில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிகள் இருப்பதைப்பார்த்த ராணுவத்தினர் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதுடன் வீட்டிற்கும் தீமூட்டினர். மாதகல் முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற ராணுவத்தினரும் இதேவகையான படுகொலைகளில் ஈடுபட்டனர். மானிப்பாய் நகர்ப்பகுதிக்குச் சென்ற அவர்கள் வீதியால் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியொன்றினை மறித்து, அதிலிருந்தவர்கள் கீழே இறங்குமாறு பணித்தனர். பஸ்ஸினுள் இருந்து கீழே இறங்கிய ஒன்பது பாடசாலை மாணவர்களை வரிசையில் நிற்குமாறு கட்டளையிட்டனர். பின்னர் அம்மாணவர்கள் மீது திடீரென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது ஆறு மாணவர்கள் அவ்விடத்திலேயே இறந்துவிழ, ஏனைய மூவரும் கடுமையாகக் காயப்பட்டனர். இவ்வாறே வல்வெட்டித்துறை முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற இராணுவத்தினரும் கடைகளையும் வீடுகளையும் எரிக்க ஆரம்பித்தனர். ஒரு நாளில் மட்டும் இந்த மூன்று இடங்களிலும் 51 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டனர். யாழ்ப்பாண அரசாங்க அதிபரினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் இப்படுகொலைகள் ஆவணப்படுத்தப்பட்டு இருந்தன. குறைந்தது நூறு வீடுகளும் கடைகளும் அன்று இராணுவத்தால் எரியூட்டப்பட்டன என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மாணவர்கள் ஆடி 24 ஆம் நாளன்று இரவு ராணுவத் தளபதி வீரதுங்க குருநகர் முகாமிலேயே தங்கியிருந்தார். அவர் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருந்தார். கொழும்பில் நடக்கும் கலவரம் குறித்த அறிக்கைகள் அவருக்கு வந்துகொனண்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் தனது இராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளை அவர் திங்கட்கிழமை காலை 10 மணிக்குப் பின்னரே பார்க்கச் சம்மதித்தார். திருநெல்வேலிப் பகுதிக்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்து முனசிங்க இவ்வாறு குறிப்பிடுகிறார், "1983 ஆம் ஆண்டு, ஆடி 25 ஆம் நாள், காலை 10 மணியிருக்கும். நாம் எமது வாகனங்களில் ஏறி திருநெல்வேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். தளபதி வீரதுங்கவும் எம்முடன் இணைந்துகொண்டார். எல்லாத்திசைகளிலிருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுவதை நாம் அனைவரும் கேட்டோம். திருநெல்வேலியை அடைந்த நாம், சிறு குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு திக்கில் நடக்கத் தொடங்கினோம். வீதியின் இரு பகுதியிலும் இருந்த பகுதிகளுக்குள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினரை நோக்கி அனைத்தையும் நிறுத்திவிட்டு உடனடியாக வீதியை நோக்கி வருமாறு உரக்கக் கத்தினோம்". "இலங்கை இலகு கலாட்படையின் தளபதி லெப்டினன்ட் ரஜீவ் வீரசிங்க என்னுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்தன. சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனது உடலைக் கண்டபோது பெருமூச்சொன்றினை விடுவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியவில்லை. அவன் ஓட்டிவந்த சைக்கிளும், காவிவந்த ஒரு இறாத்தல் பாணும் அவனது சடலத்திற்கருகில் அப்படியே கிடந்தன. அவனது தலைப்பகுதி சிதறிக் கிடக்க மூளை வழிந்து வீதியில் ஓடிக் கிடந்தது. அவனை மிக அருகில் வந்து சுட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது". "அதேவேளை, நாம் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் ராணுவ வீரர் ஒருவர் பதுங்கியிருந்து எம்மை நோக்கித் தனது துப்பாக்கியை திருப்புவதை நான் கண்டேன். என்னிடம் பிஸ்ட்டல் ஒன்று மாத்திரமே இருந்தது. லெப்டினன்ட் வீரசிங்கவிடம் அவரது பிரத்தியேக துப்பாக்கி இருந்தது. ஒருகணம் அந்த ராணுவ வீரன் எம்மைக் கொல்வதற்காகவே பதுங்குவதாக நான் நினைத்தேன். தெய்வாதீனமாக வீரசிங்கவுக்கு அந்த ராணுவ வீரனை நன்கு தெரிந்திருந்தது. ஆகவே, வீரசிங்க அவனைப் பார்த்து "வீதிக்கு வா" என்று கட்டளையிட, அவனும் வெளியே வந்தான். திருநெல்வேலிச் சந்திப்பகுதியில் அக்கிரமங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினரை மீள வெளியே இழுத்துவர எமக்கு குறைந்தது ஒரு மணித்தியாலமாவது எடுத்திருக்கும். தளபதி வீரதுங்க மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்டார். படுகொலைகளிலும், சொத்தழிப்புக்களிலும் ஈடுபட்ட ராணுவத்தினர் கைதுசெய்யப்பட்ட அதேவேளை சில இடைநிலை அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டன. அன்று மாலையே கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினரை அநுராதபுரம் தடுப்புச் சிறைச்சாலைக்கு நாம் அனுப்பி வைத்தோம்". "இதேவகையான படுகொலைகள் வல்வெட்டித்துரை மற்றும் மாதகல் முகாம்களைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் அரங்கேறின. பின்னர், மாதகல் முகாம் அதிகாரியான மேஜரும் அவரது ராணுவத்தினரும் தம்மை வேறு முகாம்களுக்கு மாற்றவேண்டாம் என்றும், தாம் மாதகல் முகாமிலேயே தங்கியிருப்பதற்கு அனுமதி தருமாறு வேண்டிக்கொண்டதாகவும் நாம் அறிந்தோம். மாதகல் முகாமின் பொறுப்பதிகாரியான ராணுவ மேஜர் முகாமை விட்டு ராணுவத்தினர் வெளியே செல்லக்கூடாது என்று வாயிலின் முன்னால் நீட்டிப் படுத்துக்கொண்டதாகவும், ஆனால் அவரைத் தூக்கி வாயிலின் வெளியே எறிந்துவிட்டு தமது ட்ரக்குகளில் ஏறிச்சென்ற ராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் எமக்குக் கூறப்பட்டது". இராணுவத் தளபதி இந்த நாட்களில் நடந்துகொண்ட விதம் குறித்து பல வினாக்கள் எழுந்தன. அப்பாவித் தமிழர்களை தனது இராணுவத்தினர் படுகொலை செய்துவருகிறார்கள் என்கிற செய்தி அவருக்கு மீண்டும் மீண்டும் ரேடியோ அறையிலிருந்து அறிவிக்கப்பட்டே வந்தது. ஆனால், மறுநாள் காலை 10 மணிவரை அவர் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. ஏன்? மேலும், ஜனாதிபதி ஜெயவர்த்தனவைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளை சுமார் இருவாரங்கள் முடிந்தபின்னரே தாம் அறிந்துகொண்டதாகக் கூறினார். மஞ்செஸ்ட்டர் கார்டியன் பத்திரிக்கையின் நிருபர் டேவிட் பெரெஸ்ஃபபோர்ட் ஜெயாரிடம் யாழ்ப்பாணப் படுகொலைகள் குறித்து ஆவணி 7 ஆம் திகதி வினவுகையில், "யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைப் படுகொலை செய்த ராணுவத்தினரை இதுவரை நீங்கள் விசாரிக்காதது ஏன்?" என்று கேட்க, "எனக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் இந்தப் படுகொலைகள் பற்றித் தெரியவந்தது. இப்போது நாட்கள் சென்றுவிட்டன‌, இனிமேல் விசாரிப்பதில் பயனில்லை" என்று வெகு சாதாரணமாகத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்து வீடு 2001 ஜெயாரிடம் பேசிய பெரெஸ்போர்ட், "யாழ்ப்பாணதில் சிறுவர்கள் வயோதிபர்கள் உட்பட 51 பொதுமக்களை உங்கள் இராணுவத்தினர் படுகொலை செய்திருக்கின்றனரே?" என்று கேட்டபோது, "அத்தனை பேர் சாகவில்லை சுமார் இருபது வரையிலான மக்கள் இறந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்" என்று அலட்சியமாகப் பதிலளித்தார். மேலும், யாழ்ப்பாணத்துப்படுகொலைகள் நடத்தப்பட்டு இரு வாரங்களுக்குப்பின்னரே தான் அதுகுறித்து அறிவிக்கப்பட்டதாகக் கூறிய ஜெயார், இராணுவத்தினர் தன்னிடமிருந்து இவ்விடயத்தை மறைத்துவிட்டார்கள் என்றும் கூறினார். அப்படியானால், ஜனாதிபதி ஜெயாரிடமிருந்து இந்த படுகொலைகளை இராணுவத் தளபதி வீரதுங்க மறைத்தது ஏன்? யாழ்ப்பாணத்துப் படுகொலைகளும், தெற்கில் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளும் உண்மையாகவே ஜெயாரினால் பிரஸ்த்தாபிக்கப்பட்ட "தமிழருக்கான இறுதித் தீர்வு" எனும் திட்டமிட்ட இனக்கொலைக்குள் அடக்கமா என்கிற கேள்வி எழுகிறது. இந்த வினாக்களும், சந்தேகங்களும் இன்றுவரை தமிழர்களின் மனங்களில் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த சந்தேகங்களே பிரபாகரனை போராடும்படி முந்தள்ளி விட்டிருந்தன. 1984 ஆம் ஆண்டு பங்குனி மாதம், தமிழினக்கொலை நடத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகும் நிலையில் இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரத்தாப்பிடம் பேசிய பிரபாகரன், "எமது பார்வையில் 1983 ஆடியில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையானது நன்கு திட்டமிட்ட ரீதியில், ஒருமித்த வழிநடத்துதலில், அதிகாரத்திலிருந்த கட்சியின் இனவாத முக்கியஸ்த்தர்களால் நடத்தப்பட்டதாகவே உணர்கிறோம்" என்று கூறினார். பிரபாகரனை உருவ‌மைத்த அவரது சிந்தனையின் வெளிப்பாடான இந்தக் கேள்வி பதில் பகுதியை இங்கே இணைக்கிறேன், அனித்தா பிரதாப் : 1983 ஆம் ஆண்டு ஆடி 23 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் இலங்கை இராணுவத்தின் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் நடத்துவதற்கு உங்களின் தாக்குதல் காரணமாக முன்வைக்கப்பட்டது. இவ்வாறான பாரிய பழிவாங்கும் தாக்குதல்கள் நீங்கள் நஎதிர்பார்த்தீர்களா? பிரபாகரன் : ஜூலை இனக்கொலையினை தமிழ்ப் போராளிகளின் பதுங்கித் தாக்குதலுக்கான வெறும் பழிவாங்கலாக நீங்கள் பார்க்கக் கூடாது. இப்படிப் பார்ப்பது நடத்தப்பட்ட இனக்கொலையினை மிக இலகுவாக கடந்துசெல்லக் காரணமாகிவிடும். ஆண்டாண்டு காலமாக தமிழருக்கெதிரான இன வன்முறைகளை இந்த நாடு தொடர்ச்சியாக அரங்கேற்றியே வந்திருக்கிறது. எமது போராளி இயக்கம் ஆரம்பிக்கும் முதலே தமிழர் மீதான இனக்கொலைகள் நடந்தே வந்திருக்கின்றன. எமது தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னரும் திருகோணமலயில் தமிழர்கள் மீது திட்டமீட ரீதியில் படுகொலைகளும், சொத்தழிப்புக்களும் நடந்திருந்தன. ஆகவே, தமிழர் மீதான திட்டமிட்ட இனவன்முறைகளை ஒரு தாக்குதல் சம்பவத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது தவறு. நாங்கள் நீண்ட நெடிய‌ கெரில்லாப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். பல கெரில்லாத் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்களை நாம் நடத்தி பல சிங்கள இராணுவத்தினரையும், பொலீஸாரையும் கொன்றிருக்கிறோம். ஆடியில் எம்மால் நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதல்கூட எமது போரட்டத்தின் இன்னொரு சம்பவமே அன்றி வேறில்லை. ஒட்டுமொத்த வன்முறைகளுக்கும் ஒரு தாக்குதல் நிகழ்வே காரணமானது என்று எண்ணுவது மிகவும் தவறானது. ஆடியில் எம்மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை பார்க்கும்போது, அவை எம் மக்களை கொல்வதற்காக மட்டுமே நடத்தப்படவில்லையென்பதும், கொழும்பில் எம்மக்களின் பொருளாதாரப் பலத்தினைச் சிதைக்கவும், வாழ்வாதாரத்தை அழிக்கவும் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வீர்கள். எமது பார்வையில் ஆடியில் நிகழ்த்தப்பட்ட படுகொலையென்பது மிகவும் திட்டமிட்ட வகையில், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஆட்சியதிகாரத்தில் இருந்த இனவாத சக்திகளால் அரங்கேற்றப்பட்ட இனக்கொலையாகவே பார்க்கிறோம். ஆரம்பத்தில் இப்படுகொலைகளுக்கான ஒட்டுமொத்தப் பழியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது சுமத்திவிடவே சிங்கள இனவாத அதிகார மையம் முயன்றது. பின்னர் திடீரென்று இடதுசாரி கட்சிகளை நோக்கி இனவாதிகள் தமது விரலை நீட்டினர். ஆனால், இன்றும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் இனவாத தலைமைப்பீடமே இப்படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள்.
  3. பொன்னங்கண்னி கீரை சோறு..
  4. இதை... படம் எடுத்த படப் பிடிப்பாளர், தற்போது மூக்கு உடைந்து மருத்துவமனையில் உள்ளார். 🤣
  5. ஜெயாருக்கெதிராகத் திரும்பிய சிங்களவரின் கோபம் http://ahfesl.free.fr/Images/Image_blak_july_1983_04.jpg ஆத்திரத்துடனும், உணர்வு மேலீட்டுடனும் கனத்தைப் பகுதியில் குழுமியிருந்த சிங்களவர்களுக்கு முதன்முதலாக கட்டளைகளைப் பிறப்பித்துத் தலைமை தாங்கியவர்கள் நாரஹேன்பிட்ட‌ ராணுவ முகாமிலிருந்து வந்த ராணுவத்தினரே. தோண்டப்பட்டிருந்த குழிகளுக்கருகில் சென்ற அவர்கள், அருகிலிருந்த மண்ணை அக்குழிகளுக்குள் தள்ளி அவற்றினை மூடினார்கள். பின்னர், "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் எம்மிடம் தரப்பட வேண்டும், அவர்களை நாய்களைப் போல்ப் புதைக்க விடமாட்டோம்' என்று உரக்கக் கோஷமிடத் தொடங்கினார்கள். இந்தக் கோஷங்கள் அங்கே குழுமியிருந்த சிங்களவர் கூட்டத்தின் உணர்ச்சி நரம்புகளை உசுப்பிவிட, அவர்களும் ராணுவத்தினருடன் சேர்ந்து கோஷமிடவும் கலகத்தில் ஈடுபடவும் தொடங்கினர். "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை அவர்களிடம் உறவினர்களிடம் கொடுத்துவிடு" என்று அரசாங்கத்தை நோக்கிக் கோஷமிடத் தொடங்கினர். மரணச் சடங்கினை மேற்பார்வையிட அங்கு அனுப்பப்பட்டிருந்த உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் கபூர், மயானத்தின் ஒரு பகுதியில் மக்கள் கோஷமிட ஆரம்பித்ததையடுத்து, அப்பகுதிக்குச் சென்றார். அவர் அப்பகுதியை அடைந்தபோது, கூட்டத்திலிருந்தவர்கள் மரப்பலகை ஒன்றினால் அவரை இடிக்கவே அவர் நிலை தடுமாறி கீழே வீழ்ந்தார். அதிஷ்ட்டவசமாக, தோண்டப்பட்ட குழிகளுக்குள் அவரைத் தள்ளி வீழ்த்த அவர்கள் எடுத்த முயற்சியை அவரால் தடுக்க முடிந்தது. கனத்தை மயானத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களைத் துரத்தும் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் கபூர் ‍ 24, ஆடி, 1983 அங்கு குழுமியிருந்த சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்களின் கலகம் கட்டுக்கடங்காமல்ப் போனது. ரேமண்ட் மலர்ச்சாலையின் ஊழியர்களால் மரணச் சடங்கிற்காக கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த பித்தளையிலான கட்டமைப்புக்களும், வளைவுகளும் கலவரக் காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. மயானத்தின் அப்பகுதியிலிருந்த ஏனையவர்களின் கல்லறைகளை அவர்கள் உடைத்து நாசம் செய்தார்கள். பல கல்லறைகளின் நினைவுக் கற்கள் பிடுங்கி எறியப்பட்டன. கலவரக்காரர்கள் வந்திருப்பது தமது கொல்லப்பட்ட உறவுகளுக்கு வணக்கம் செலுத்துவதற்காக அல்ல என்பதை உணர்ந்துகொண்ட கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கிருந்து அகன்று சென்றுவிட, அவர்களுடன் பிரித் ஓதவென்று அழைக்கப்பட்டிருந்த பிக்குகளும் அச்சத்தில் மெல்லக் கழன்றுகொண்டனர். மாலை 7 மணி ஆகிக்கொண்டிருந்தது. உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவும், பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகலவும் மீண்டும் கனத்தை மயானத்திற்கு வருகை தந்தனர். தனது நுவரெலிய விடுமுறையினைப் பாதியில் கலைத்துவிட்டு கனத்தைக்கு வந்திருந்த பொலீஸ் அத்தியட்சகர் ருத்ரா ராஜசிங்கத்திடம் அவர்கள் நேராகச் சென்றனர். மயானத்தில் நிலவரம் எப்படியிருக்கிறது என்று அவர்கள் கேட்கவும், நிலைமை சிறிது சிறிதாக மோசமாகிக்கொண்டு வருகிறது என்று அவர் பதிலளித்தார். இதனையடுத்து, "நீங்கள் இங்கேயே இருந்து நிலைமையினைக் கட்டுக்குள் வைத்திருங்கள், நாங்கள் உடனடியாக ஜனாதிபதிக்கு தற்போதைய நிலைமையினை நேரடியாகச் சென்று அறிவிக்கிறோம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஜெயாரின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேசுக்குச் சென்றனர். சுமார் மாலை 7:30 மணியளவில் எமது புகைப்பிடிப்பாளர் பியதாசவும் ஊடகவியலாளர் ஒருவரும் லேக் ஹவுஸ் நிலையத்திற்குத் திரும்பியிருந்தனர். அவர் வரும்போது கனத்தைப் பகுதியில் தன்னால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களைக் காண்பித்தார். கலவரபூமியாகக் காட்சியளித்த கனத்தை மயானத்தை அவர் தத்ரூபமாகப் படமாக்கியிருந்தார். இரண்டாவது பதிப்பிற்குச் செல்லும் பத்திரிக்கைகளில் அப்புகைப்படங்களை உள்ளடக்குவதே அவரது விருப்பமாக இருந்தது. ஆனால், லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தலைவர் ரணபால போதினாகொட, டெயிலி நியூஸின் ஆசிரியர் அலுவலகத்திற்கும், ஜெயாரின் வீட்டிற்கும் இடையே தொடர்ச்சியாகப் போய்வந்துகொண்டிருந்ததுடன், கனத்தைக் கலவரத்தை பெரிதாகப் பிரசுரிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டதுடன், டெயிலி நியூஸ் ஆசிரியர் மணிக் டி சில்வாவிடம், "அபாயகரமான சூழ்நிலையொன்று வலுப்பெற்று வருகிறது" என்று தலைப்பிட்டால்ப் போதும் என்று பணித்தார். ஆனால், பியதாசவுக்கோ நிறுவனத்தின் தலைவரின் செயல் அமைதியைத் தரவில்லை. தான் எடுத்துவந்த புகைப்படங்களை போதினாகொடவிடம் காட்டிய அவர், "நிலைமை எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது" என்று ஆவேசத்துடன் கூறினார். பின்னர் என்னிடம் வந்து பின்வருமாறு கூறினார், "சபா, கவனமாக இருங்கள். இப்போது சிங்களவர்களின் கோபம் அரசாங்கத்தின் மீதே இருக்கிறது. ஆனால், இந்த கோபத்தை தமிழர்களின் மீது திருப்பிவிட முக்கியமான சிலர் முயற்சித்து வருகிறார்கள்". பியதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் அரசியல்த் தலைமைப் பீடத்துடன் நெருங்கிய தொடர்புகளிருந்தன. அவற்றினூடாகவே நிலைமையினை அறிந்துகொண்ட அவர் என்னிடம் கூறினார் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். மேலும் என்னுடன் பேசும்போது, "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டார்கள் அவர்கள்" என்றும் கூறினார். ராணுவத்தினரின் உடல்களைத் தம்மிடம் தருமாறு உறவினர்கள் தொடர்ச்சியாக ராணுவ அதிகாரிகளைக் கேட்டுவந்ததனால், அவர்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டோம் என்று அதிகாரிகள் பதிலளித்தைத் தான் பார்த்ததாக பியதாச கூறினார். மேலும், கனத்தை மயானத்தில் கூட்டு மரணச் சடங்கினை அரசு நடத்தத் தீர்மானித்தன் நோக்கம், தாக்குதலில் அகப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் முற்றாகச் சிதைந்து சேதமடைந்து விட்டதனால், அவற்றினைத் தனித்தனியாக அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைப்பது கடிணம், ஆகவேதான் கூட்டு மரணச்சடங்கினை அரசு நடத்த முடிவெடுத்தது என்றும் அவர்கள் உறவினர்களிடம் கூறியிருக்கின்றனர். லேக் ஹவுஸின் இரண்டாவது நிருபரும், அவரது உதவியாளரும் இரவு 8:30 மணிக்கு நிலையத்திற்குத் திரும்பினர். கனத்தையில் நடக்கவிருந்த மரணச் சடங்குகள் அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்டு விட்டதாக மயானம் முழுவதிலும் ஒலிபெருக்கியால் அறிவிக்கப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம் கடுமையான கலவரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறினார்கள். "மக்கள் ஜனாதிபதிக்கெதிராகவும், அரசாங்கத்திற்கெதிராகவும் கோஷமிட்டபடி வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று அவர்கள் கூறினர். நாம் இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, கொழும்பு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் கூட்டமொன்று இரவு 8:30 மணியளவில் மயானத்திற்குள் நுழைந்திருக்கிறது. அவர்கள் கம்மியூனிஸ்ட் கட்சியின் அதிருப்தியாளர்கள். அந்த மாணவர் கூட்டத்திலிருந்த இருவர் அங்கு குழுமியிருந்த சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது , "ராணுவத்தினரின் மரணங்களுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் அரசாங்கமுமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று ஆவேஷமாகக் கூறினர். பின்னர் ஆத்திரத்துடனும் உணர்வு மேலீட்டுடனும் காணப்பட்ட மக்கள் கூட்டத்தை ஜனாதிபதியின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேஸ் நோக்கி வழிநடத்திச் சென்றனர். ஆனால், ஜனாதிபதியின் இல்லம் நோக்கிய சிங்களவரின் பேரணியை பொலீஸார் இடைமறித்தனர். அரசுக்கெதிரான உணர்வு மேலீட்டு வருவதை உணர்ந்துகொண்ட உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன, ஜனாதிபதியில் இல்லத்தை ஆர்ப்பாட்டக் காரர்கள் அடைவதைத் தடுக்கும் நோக்கில் வேர்ட் பிளேசுக்கான தொடக்கப் பகுதியிலும், கின்ஸி வீதியிலும் தடைகளை ஏற்படுத்தி பொலீஸாரை காவலுக்கு அமர்த்தினார். உணர்வு மேலீட்டுடன் ஆவேசமாக கணத்தையை விட்டு வெளியேறி வந்துகொண்டிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழு, தம்மை எதிர்கொள்ள பொலீஸார் தயாராகி வருவதை அறிந்ததும், கூட்டத்திலிருந்து மெல்ல நழுவிச் சென்றுவிட்டனர். இவர்களுள் பலர் தமது வீடுகளுக்கே திரும்பியிருந்தனர். சுமார் இரவு 10 மணியிருக்கும். லேக் ஹவுஸில் அந்நேரம் பணிபுரிந்துகொண்டிருந்த எல்லோரும் பொரள்ளைப் பகுதியிலிருந்து ஆகாயம் நோக்கிப் புகைமண்டலம் மேலெழுந்துவருவதைக் கண்ணுற்றோம். நான் உடனடியாக தீயணைப்புப் படையினருடன் தொடர்புகொண்டேன். மறுமுனையில் பேசிய தீயணைப்புப் படையின் அதிகாரி, கனத்தையிலிருந்து வெளியேறி வந்த ஆர்ப்பாட்டர்க் காரர்கள் பொரள்ளைச் சந்தியிலிருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளை எரிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். சிறிது நேரத்தில் அப்பகுதியிலிருந்து பாரிய தீச்சுவாலைகள் மேலெழுந்துவருவதை எம்மால் காண முடிந்தது. டெயிலிநியூஸ் ஆசிரியர் அறையிலிருந்து பார்க்கும்போது, கோட்டைப் புகையிரத நிலையம், புறக்கோட்டை சந்தைப்பகுதி மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல பிரதேசங்களை எம்மால் தெளிவாகப் பார்க்கமுடியும். கொழும்பு எரியத் தொடங்கியிருந்தது !
  6. எழுத்தாளர் இன்னும் சிவப்பு சட்டையில் தான் திரிகிறார் போலும்?
  7. 3 மீற்றர் நீளமான துண்டுக் காணியில்... 2 AC பூட்டிய மாடி வீடு.
  8. இராணுவத் தளபதியின் சீற்றம் "ராணுவத் தளபதி வீரதுங்கவுக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் கொழும்பிலிருந்து வந்திருந்தன.அவற்றுள் ஒன்று பாதுகாப்புச் செயலாளரிடமிருந்தும் இன்னொன்று ஜனாதிபதியிடமிருந்தும் வந்திருந்தன. கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி அவர் பேசுவது எங்களுக்குப் புரிந்தது. தனக்குக் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளிடம் மரணச் சடங்குகள் நடைபெறவேண்டிய விதம் குறித்த பணிப்புரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தின் பின்னர் அவர் மிகுந்த சீற்றத்துடன் யாரிடமோ பேசுவது கேட்டது. "எனது நாயைக்கூட யாழ்ப்பாணத்திலோ வவுனியாவிலோ நான் புதைக்கமாட்டேன்" என்று அவர் ஆவேசமாகக் கூறினார். கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டிலிருந்தே அவர் அவ்வாறு பேசினார்". "பின்னர் எம்முடன் பேசிய அவர், அரச அதிகாரிகள் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை யாழ்ப்பாணாத்திலோ அல்லது வவுனியாவிலோ எரித்தோ அல்லது புதைத்துவிடும்படி" தன்னிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார். சேபால ஆட்டிகல கொழும்பு கனத்தை மயானத்திற்குச் சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்து, அரசாங்கத்திற்கெதிரான சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வு அதிகரித்து வருவது கண்டு, மீண்டும் அலுவலகம் திரும்பியிருந்த பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகலவே உடல்களை யாழ்ப்பாணத்திலோ அல்லது வவுனியாவிலோ எரித்து விடும்படி ராணுவத் தளபதியைக் கேட்டிருந்தார். கனத்தைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஒன்று உருவாகிவருவதாக புலநாய்வுத்துறையினர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவுடன் கனத்தை மயானத்திற்கு மாலை 6 மணியளவில் நிலைமையினை ஆராயும் பொருட்டு செயலாளர் ஆட்டிகல சென்றிருந்தார். எனது ஆசிரியரான ஆரன் மாலை 4 மணிக்கு என்னைத் தொலைபேசியில் அழைத்தபோது நான் தெகிவளையில் அமைந்திருந்த எனது வீட்டில் இருந்தேன். கனத்தை மயானத்தில் மரணச் சடங்குகள் நடைபெறவிருப்பதால் என்னை உடனடியாக அலுவலகம் வரும்படி அவர் அழைத்தார். திருநெல்வேலிக் கண்ணிவெடித் தாக்குதல் பற்றி எனக்கு அப்போது தெரிந்தே இருந்தது. அன்று இரவு பணியில் நான் ஈடுபட்டிருந்ததால், மாலை 6 மணிக்கு அலுவலகம் செல்வதே வழமை. டெயிலிநியூஸ் பத்திரிக்கையின் உப ஆசிரியராக நான் அப்போது கடமையிலிருந்தேன். ஆரன் என்னுடன் பேசும்போது, "கனத்தையில் மரணச் சடங்கினை நடத்துவது எனும் முடிவு இன்னமும் இரகசியமாகவே இருக்கிறது. மாலை 5 மணிக்கு சடங்கினை நடத்தப்போவதாக செய்தி வந்திருக்கிறது. செய்தி நிருபர்களையும், புகைப்படப் பிடிபாளர்களையும் அங்கு வருமாறு அதிகாரிகள் கோரியிருக்கின்றனர். நான் பியதாசவையும் இன்னும் இரு நிருபர்களையும் அங்கே அனுப்பப்போகிறேன்" என்று கூறினார். பியதாச எமது செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய சிறந்த புகைப்படப் பிடிப்பாளர். இவ்வாறான கோரிக்கைகளை அரசாங்கம் ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்திற்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் அனுப்பியிருந்தது. மாலை 5 மணிக்கு லேக் ஹவுஸ் நிலையத்திற்கு நான் சென்றபோது நிலைமை சுமூகமாக இருப்பதாகவே தெரிந்தது. மாகாணத் தலைநகரங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் பதிப்புக்கள் ஓரளவுக்கு முற்றுப்பெற்ற நிலையில் புலிகளின் தாக்குதலை தலைப்புச் செய்தியாக அவை காவி இருந்தன. சுமார் மாலை 4:30 மணியளவில் பியதாசவும் செய்தியாளர்கள் இருவரும் கனத்தைக்கு கிளம்பிச் சென்றனர். அவர்களுடன் தினமின‌, தினகரன் ஆகிய சகோதரப் பத்திரிக்கைகளின் நிருபர்களும் சென்றனர். மாலை 5 மணிக்கு ரேமண்ட் மலர்ச்சாலையிலிருந்து எம்முடன் பேசிய எமது செய்தியாளர் மரணச் சடங்குகள் தாமதமடைவதாகக் குறிப்பிட்டார். "சடலங்கள் இன்னமும் பலாலியை விட்டு நீங்கவில்லை. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இங்கு கூடிவருகிறார்கள். மக்கள் கூட்டமொன்றும் அதிகரித்து வருகிறது" என்று கூறினார். மரணச் சடங்கிற்கான ஆயத்த வேலைப்பாடுகள் பூர்த்தியாகி விட்டதாகக் கூறிய அவர், சில ராணுவ வீரர்களும், பொலீஸாரும் மயானத்தினுள்ளும், வெளியேயும் காவலுக்கு நிற்கிறார்கள் என்றும் கூறினார். சடலங்களைப் புதைப்பத்கற்கான குழிகள் தோண்டப்பட்டு, ராணுவ பாண்ட் வாத்தியக் குழு வரவழைக்கப்பட்டு, பிரித் ஓதுவதற்கு பிக்குகள் கூட்டிவரப்பட்டு, தொலைக்காட்சிக் கமெராக்கள் ஒழுங்குசெய்யப்பட்டு, வளைவு வெளிச்சங்கள் ஏற்றப்பட்டு அப்பகுதி மரணச் சடங்கிற்கு ஆயத்தமாகி இருப்பதாக அவர் கூறினார். ஆனால், உயர் ராணுவ அதிகாரிகளோ அல்லது பொலீஸ் அதிகாரிகளோ அப்பகுதியில் காணப்படவில்லையென்றும் அவர் கூறினார். மேலும், கொல்லப்பட்ட ராணுவத்தினருக்கு மரியாதை செய்யும் முகமாக சில அமைச்சர்கள் அப்பகுதிக்கு வந்திருப்பதாகவும் எமக்குக் கூறப்பட்டது. ரேமண்ட் மலச்சாலை பலாலியிலிருந்து ராணுவத்தினரின் உடல்கள் வருவதற்கு ஏன் தாமதமடைகிறதென்பதற்கான காரணம் எவருக்குமே அங்கு தெரிந்திருக்கவில்லை. விமானப்படை விமானம் ஒன்றின்மூலம் பலாலியிலிருந்து கொழும்பு இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு உடல்கள் கொண்டுவரப்படவிருந்த நிலையில், வீரதுங்க குருநகரிலிருந்து பலாலிக்கு உலகுவானூர்தி ஒன்றின்மூலம் சென்றடைந்தார். உடல்கள் கொழும்பிற்கு கொண்டுசெல்லப்படவிருக்கின்றன என்று யாழ்த் தளபதி பல்த்தசார் வீரதுங்கவுக்குக் கூறியதையடுத்து, தானும் உடல்கள் கொண்டுசெல்லப்படுகையில் கொழும்பு செல்லும் நோக்குடன் அவர் பலாலிக்குக் கிளம்பிச் சென்றார். யாழ் வைத்தியசாலை சவ அறையிலிருந்து மாலை 5 மணிக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் என்னிடம் கூறினர். மேலும், பலாலியில் இருப்பவர்களே அனைத்தையும் தாமதப்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர். கொழும்பிலிருந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்துகொண்டிருப்பதால் பலாலியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் குழப்பமான நிலையில் காணப்படுவதாகவும் எமக்குக் கூறப்பட்டது. பலாலி ராணுவத் தளத்தில் அப்போதிருந்த உயர் அதிகாரியொருவர் இக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ஜெயவர்த்தனவின் கட்டளைகளே என்று கூறினார். தளபதி வீரதுங்கவை அன்றிரவு குருநகரில் இருக்குமாறு கட்டளையிட்டதன் மூலம் அனைத்து விடயங்களையும் தாமதித்துக் குழப்பியது ஜெயவர்த்தனவே என்று அவர் கூறினார். தினமினப் பத்திரிக்கையின் கல்கிஸ்ஸைப் பகுதி நிருபர் இரத்மலான விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உடல்கள் கொண்டுவரப்படுவதைச் செய்தியாக்கப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் என்னுடன் பின்னர் பேசுகையில், "இரத்மாலனை விமான நிலையத்தில் எல்லாமே குழப்பமாக இருக்கிறது. யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்றே எவருக்கும் இங்கு தெரியவில்லை" என்று சிங்களத்தில் தகாத வார்த்தைகளைச் சேர்த்துப் பேசினார். கனத்தை மயானம் - பொரள்ளை, கொழும்பு கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உறவுகள் சிலர் குழுமியிருந்த பொரள்ளை ரேமண்ட் மலச்சாலையிலும் இதேவகையான குழப்பநிலை காணப்பட்டது. மேலும், அவ்வேளை உடல்கள் தாக்கப்படவிருக்கும் கனத்தை மயானத்திற்கு கூட்டம் கூட்டமாக பலர் வரத் தொடங்கியிருந்தார்கள். எவருமே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது நிதானத்துடன் நடந்துகொள்ளவோ முயலவில்லை. யாவுமே மிகவும் குழப்பகரமாகக் காணப்பட்டது. அப்பகுதிக்கு வந்திருந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் தாம் எண்ணிய வழியில் கூடியிருந்தவர்களை ஒவ்வொரு வகையில் வழிநடத்த, அப்பகுதி கலவர பூபியாகக் காட்சியளித்தது. நேரம் செல்லச் செல்ல, குழப்பமான சூழ்நிலை கலவரமாக மாற்றமெடுத்தது. குழப்பநிலையினை உருவாக்கும் நோக்கில் கூட்டம் ஒன்று மயானத்திற்குள் நுழைவதனை எமது நிருபர்கள் அவதானித்தார்கள். தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டு, வெண்ணிற டீ சேர்ட்டுக்களும், கட்டைக் காற்சட்டைகளும் அணிந்த இக்கூட்டம் ஏலவே திட்டமிட்டது போன்று சவக் குழிகள் தோண்டப்பட்டிருந்த இடத்தினை நோக்கிச் சென்றது. முதலில் இக்கூட்டத்தினை ரஜரட்ட ரைபிள் படைப்பிரிவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், இவர்கள் பொரள்ளை வீதியில் , நரஹேன்பிட்ட பகுதியில் இருக்கும் ராணுவ முகாமின் வீரர்கள் என்பது தெரியவந்தது.
  9. தாயக மக்களுக்கு அவசியப்படும் விடயத்தை அணுகிய 'கனடாவுக்கு போக வழி ' எனும் திரி, திரியை ஆரம்பித்தவரின் கோரிக்கைக்கு ஏற்ப திரி பூட்டப்படுகின்றது.
  10. தனியார் ராணுவம் என்றால் என்ன? சோழர்களும் பேரரசை விரிவாக்க அதை பயன்படுத்தினார்களா? எனும் திரியில் ஆக்கபூர்வமான கருத்தாடலை விடுத்து சொற்களின் நுண்மை பற்றிய விவாதம் தொடர்வதால் திரி பூட்டப்படுகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.