Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7054
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    2958
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    31995
    Posts
  4. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    1836
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/22/23 in all areas

  1. வானொலி மற்றும் சினிமாவின் பொற்கால நினைவலைகள்... · Rejoindre Sukumar Shan · · காண கிடைக்காத அரிய புகைப்படம் ! இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ். பி. மயில்வாகனம் அவர்களின் கொழும்பு வெள்ளவத்தை இலக்கம் 58 விவேகானந்தா ரோடு இல்லத்துக்கு நடிகர் சந்திரபாபுவும் நடிகர் ஸ்ரீ ராமும் வருகைதந்தபோது எடுத்த புகைப்படம் . சந்திரபாபு மடியில் மயில்வாகனம் அவர்களின் மகளும் மயில்வாகனம் மடியில் அவரது மகனும் அமர்ந்துள்ளார்கள் . பின்னால் வெள்ளை புடவையுடன் காட்சியளிப்பவர் . திருமதி .செந்திமணி மயில்வாகனம் . புகைப்பட உதவி - யசோதா மயில்வாகனம் அவர்கள்.....!
  2. இந்த புரிந்துணர்வு இன்னும் தான் வரவில்லை. முன்னரைவிட விரிவடைந்தே செல்கின்றது.
  3. ஜெயார் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கையினை நிராகரித்த இந்திரா அனைத்துக் கட்சி மாநாட்டில் ஜெயார் முன்வைக்கவிருப்பதாக ஹெக்டர் கூறிய ஐந்து விடயங்களும் பின்வருமாறு இருந்தன, 1. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட அனைத்துச் சட்டங்களும் முழுமையாக வழங்கப்படும். 2. அரசியலமைப்பில் தமிழும் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்படும் 3. வன்முறைகளைக் கவிடுவதாக தமிழர்கள் உறுதியளிக்குமிடத்து அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் 4. பயங்கரவாத நடவடிக்கைகளைத் தமிழர்கள் நிறுத்திக்கொள்ளுமிடத்து அவர்களுக்கெதிராக முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்திக்கொள்ளப்படும். 5. பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக விலக்கிக்கொள்ளப்படும் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிகமாக, தமிழர்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடுமிடத்து அவர்களுடன் பேசுவதற்கு ஜனாதிபதி ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்ட ஹெக்டர், சிறைச்சாலைகளில் தடுத்துவைகப்பட்டிருப்போரை விடுதலை செய்யவும் ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அவர் விரும்புவதாவும் குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு பேசத் தொடங்கிய இந்திரா, அரசாங்கம் முன்வைத்த ஐந்து அம்சத் திட்டங்கள் தமிழர்களின் அபிலாஷைகளைத் திருப்திசெய்யப் போதுமானவையாக இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என்று ஹெக்டரைப் பார்த்துக் கூறினார். அதற்குப் பதிலளித்த ஹெக்டர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மேம்படுத்த முன்வைக்கப்படும் ஆலோசனைகளை செவிமடுப்பதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்திராவிடம் கூறினார். ஹெக்டரிடம் பேசிய இந்திரா, தமிழர்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் ஜெயவர்த்தனவின் அரசாங்கம் பேசுவது அவசியம் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த ஹெக்டர், தனிநாடு எனும் கோரிக்கையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கைவிடாதவரை அவர்களுடன் பேசுவதில்லை எனும் நிலைப்பாட்டில் தமது அரசாங்கம் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த இந்திரா, தமிழர்களுடன் பேசும் விடயத்தை தம்மால் செய்யமுடியும் என்று கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த ஹெக்டர், தான் ஜனாதிபதி ஜெயாருடன் இதுகுறித்துப் பேசிய பின்னரே கருத்துக் கூற முடியும் என்று கூறினார். பேச்சுக்களின் முடிவில் இந்திராவின் ஆலோசகர் நரசிம்மராவ் மற்றும் கோபாலசாமி பார்த்தசாரதி ஆகியோருடன் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை மேம்படுத்துவதுகுறித்து ஹெக்டர் ஆலோசிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆவணி 12 ஆம் திகதி இந்திராவுடன் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்ட ஹெக்டர், இந்தியா பரிந்துரைத்த ஆலோசனை உதவிகளை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி ஜெயார் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். சரித்திர காலம் தொட்டு இரு நாடுகளுக்கு இடையே இருக்கின்ற நெருங்கிய உறவின் அடிப்படியில் இந்திரா செய்ய முன்வந்திருக்கும் உதவிகளுக்காக தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக ஜெயவர்த்தன தன்னிடம் தெரிவித்ததாக ஹெக்டர் இந்திராவிடம் கூறினார். மேலும், இந்தியாவின் அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவேண்டும் என்கிற ஜெயாரின் கோரிக்கையினை இந்திராவிடம் முன்வைத்தார் ஹெக்டர். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திரா பின்வருமாறு கூறினார், "தற்போது மிகவும் அவசியாமானது என்னவென்றால் பதற்றத்தினைத் தணித்து, நம்பிக்கையினை ஏற்படுத்துவதுதான். சம்மந்தப்பட்ட‌ அனைத்துத் தரப்பினரும் எவ்வித அச்சமும் இன்றி, ஒருவரில் ஒருவர் நம்பிக்கை கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் தமக்கிடையே இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலையொன்று உருவாகவேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று கூறினார். மேலும், ஹெக்டருடனான பேச்சுவார்த்தைகள் குறித்து தனது பாராளுமன்றத்தில் தான் பேசவிருப்பதாகவும், இலங்கை ஏதாவது விடயம் தொடர்பாக இந்தியப் பாராளுமன்றத்திற்கு கூறவிரும்பின், அதுகுறித்தும் தன்னால் பேசமுடியும் என்றும் கூறினார்.
  4. தனது தம்பியை இந்திராவிடம் தூதனுப்பிய ஜெயார் ஜெயாருடன் தொலைபேசியில் பேசிய இந்திரா, ஆவணி 5 ஆம் திகதி காலை பாராளுமன்றத்தில் விவாதித்து சட்டமாக்கிய ஆறாவது திருத்தம் குறித்துப் பேசினார். இத்திருத்தச் சட்டத்தின் மூலம் அனைத்துக் கட்சி மாநாட்டில் தமிழர்கள் பங்குபற்றுவதே கடிணமாகிவிட்டிருப்பதாகக் கூறிய அவர், தீர்வுதொடர்பாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் இலங்கையரசு பேசுவதற்கான ஒழுங்குகளை இந்தியா செய்துகொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்குச் சம்மதித்த ஜெயார், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு தனது விசேட பிரதிநிதியாக தனது இளைய சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவை ஓரிரு வாரங்களில் அனுப்புவதாக உறுதியளித்தார். மேலும், தனது சகோதரர் பிரசித்திபெற்ற வழக்கறிஞர் என்றும், அரசியல் யாப்பில் வித்தகர் என்றும் புகழுரைத்தார். அன்று மாலை இந்திய பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் கலையும் மாலை வேளையின்போது ஜெயாருடனான தனது தொலைபேசி உரையாடல் குறித்து இந்திரா உறுப்பினர்களுக்கு அறியத் தந்தார். அங்கு பேசிய இந்திரா, இலங்கையின் ஜனாதிபதி ஒரு வார காலத்திற்குள் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் சமாதானம் ஆகியவற்றை தமிழருக்கான தீர்வினூடாக அடைவது குறித்து ஆராய விசேட பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளதாகக் கூறினார். ஆவணி 11 ஆம் திகதி தில்லியைச் சென்றடைந்த ஹெக்டர் ஜெயவர்த்தன, இந்திரா காந்தியுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். ஆவணி 11 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பொழுது, அண்மையில் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து இந்திய மக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக இந்திரா காந்தி ஹெக்டர் ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தார். இந்தியா எப்போதும் இவ்வாறான வன்முறைகள், படுகொலைகள், பாகுபாடுகளுக்கெதிராகக் குரல் கொடுக்கும் என்று எடுத்துரைத்த இந்திரா, தம்மைக் காக்க வழியின்றி இருக்கும் அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். பின்னர், இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிரதேச ஒருமைப்பாடு போன்றவற்றை இந்தியா மதிக்கிறது என்று இந்திரா ஹெக்டர் ஜெயவர்த்தனவிடம் உறுதியளித்தார். "இந்தியா இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஒருபோதும் தலையிடப் போவதில்லை. ஆனாலும், இரு நாட்டிலும் வசிக்கும் மக்கள் சரித்திர காலம் தொட்டு கலாசார தொடர்புகளைக் கொண்டுள்ளதனால், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டிருப்பதனால், அங்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து இந்தியா பேசாமலிருக்க முடியாது" என்று கூறினார் இந்திரா. இதற்குப் பதிலளித்த ஹெக்டர், நிலைமைகள் வேகமாக வழமைக்குத் திரும்பிவருவதாகவும், பெரும்பாலான அகதிகள் தமது வீடுகளுக்குத் திரும்பியிருப்பதாகவும் கூறினார். மேலும், வீடுகளை இழந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்சினைகள் குறித்து தமது அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். வன்முறைகளின்போது அழிக்கப்பட்ட தமிழர்களின் சொத்துக்களை கைய்யகப்படுத்தவென அரசு அமைத்த அதிகார சபையினை தமிழரின் சொத்துக்களை மீள கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று இந்திராவிடம் கூறினார் ஹெக்டர். தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்தி சிங்களவர்களுக்குக் கொடுத்துவருவதாக வந்த செய்திகளை வெறும் வதந்திகள் என்று புறக்கணித்தார் அவர். தொடர்ந்து பேசிய இந்திரா, பிரதமரின் தேசிய துயர் துடைப்பு நிதியத்தின் ஊடாக பத்து மில்லியன் ரூபாய்களை இந்திய அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க விரும்புவதாக ஹெக்டரிடம் கூறினார் . மேலும், இதற்கு மேலதிகமாக பொதுமக்களின் நன்கொடைக‌ளும் வந்து குவிந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். "தற்போதிருக்கும் அவலநிலைக்கான உடனடி நிவாரணங்களை வழங்கும் அதேவேளை, தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த, அவர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்ய, நிரந்தரமான தீர்வுபற்றிப் பேசுவதை கால தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்" என்று அவர் ஹெக்டரைப் பார்த்துக் கூறினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், ஜனாதிபதி ஜெயார் இதுதொடர்பாக ஏற்கனவே செயலில் இறங்கியிருப்பதாகக் கூறினார். இவ்வாறான முயற்சி வெற்றியளிப்பதற்கு, அனைத்து மக்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி அவர்கள் அரவணைத்துச் செல்லவேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். அதன்பின்னர், தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை எட்டுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜெயார் முன்வைக்கவிருக்கும் ஐந்து அமசத் திட்டம் குறித்து இந்திராவிடம் விபரித்தார்.
  5. அதிக மருத்துவர்கள் வெளிநாடு சென்றதால், உள் நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.