Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19138
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8910
    Posts
  3. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    10720
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/25/23 in all areas

  1. புலிகளுக்கு முகாம்களை அமைக்க உதவிய குளத்தூர்மணி குளத்தூர் மணியும் நெடுமாறனும் பிரபாகரனுக்குத் தொடர்ச்சியாக உதவிவந்தார்கள். இதனால் இவர்கள் இருவரின் மீதும் பிரபாகரன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். பிராபகரனுக்கு தாம் வழங்கிய உதவிகள் குறித்து இவர்கள் செய்தியாளர்களிடம் பல விடயங்களைக் கூறியிருந்தனர். குளத்தூர் மணி 56 வயது நிரம்பியவர் (2005), வீரப்பன் சர்ச்சையில் பேசப்பட்ட முன்னாள் வன இலாகா அதிகாரியின் மகனே இவர். பத்திரிகையாளரிடம் பேசிய மணி, "ஆம், குளத்தூரில் அமைந்திருக்கும் எனது வீட்டுத் தோட்டத்தில்த்தான் முதலாவது பயிற்சி முகாமை நான் நடத்தினேன். பின்னர் அவர்களுக்கு வசதியான ஒரு இடத்திற்கு முகாமை மாற்றிக்கொண்டோம்" என்று கூறினார். முகாம் அமைக்கப்படும் பகுதியை தான் அடிக்கடி சென்று பார்வையிட்டதாகக் கூறிய மணி, "சில சமயங்களில் நான் அவருடன் பயணம் செய்திருக்கிறேன்" என்றும் பத்திரிக்கையாளரிடம் கூறினார். குளத்தூர் முகாமை நிர்மாணிப்பதில் ஈடுபட்டிருந்த போராளிகளில் ஒருவர் அக்காலத்தில் அங்கு நிகழ்ந்தவை குறித்த சில தகவல்களை புலிகளுக்குச் சார்பான ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்தார். "1983 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். மதுரையில் இருந்த எமது பாதுகாப்பு வீட்டிலிருந்து பஸ்ஸில் பயணமானோம். மலைப்பாங்கான காட்டுப்பகுதியொன்றில் நாம் இறங்கிக்கொண்டோம். எமக்கு வழிகாட்டியாக வந்தவர் சேறும் சகதியும் நிறைந்த வீதியொன்றினூடாக முதலில் அழைத்துச் சென்றார், பின்னர் அந்தவீதி சிற்றொழுங்கையாக மாறியது. நாங்கள் சுமார் ஆறு மணித்தியாலங்கள் நடந்து கற்கள் நிறைந்த பகுதியொன்றினை அடைந்தோம். இதுவே உங்களின் பயிற்சி முகாமுக்கான சிறந்த பகுதி என்று எமக்கு வழிக்காட்டியாக வந்தவர் எங்களைப் பார்த்துக் கூறினார்" என்று நினைவுகூர்ந்தார். அந்த பாறைகளுடன் காணப்பட்ட பகுதியே பின்னர் பாரிய பயிற்சி முகாமாக மாறியது என்று அவர் கூறுகிறார். போராளிகளே அந்தப் பாறைகள் நிறைந்த நிலத்தை முழுமையான பயிற்சி முகாமாக மாற்றினார்கள். காட்டை வெட்டிச் சுத்தம் செய்த அவர்கள், தற்காலிகக் கொட்டகைகளை அமைத்துக்கொண்டார்கள். ஒற்றையடிப்பாதையாக இருந்த நடைபாதையினை மோட்டார் வாகனங்கள் வந்துசெல்லும் பாதையாக மாற்றினார்கள். பிரபாகரன் அடிக்கடி இந்த முகாமிற்கு வந்துசென்றார். முகாமின் கட்டமைப்பை தானே திட்டமிட்ட பிரபாகரன், அது தான் திட்டமிட்டதன்படியே கட்டப்படுவதை உறுதிப்படுத்திக்கொண்டார். மாலை வேலைகளில் இந்த முகாமில் இருந்தே கைத்துப்பாக்கிப் பயிற்சிகளை அவர் நடத்தினார். சிறுமலையில் அமைக்கப்பட்ட முகாம் உட்பட இன்னும் சில சிறிய முகாம்கள் திருப்பரங்குன்றம் மற்றும் அழகர்மலை ஆகிய மதுரை மாவட்ட பிரதேசங்களில் பின்னாட்களில் புலிகளால் அமைக்கப்பட்டன. புளொட் அமைப்பின் பிரதான பயிற்சிமுகாம் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓரத்தநாடு பகுதியில் அமைக்கப்பட்டது. மேலும் ஒரு முகாம் மதுரை மாவட்டத்தின் தேனிப் பகுதியில், தமிழ்நாடு ‍ கேரளா எல்லையில் இருந்த இயற்கை அழகு நிரம்பிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு புளொட் போராளிகள் தமது முகாமிலிருந்து மலைப்பாங்கான‌ பகுதி நோக்கி அணிவகுத்துச் செல்வது வழமையாகக் காணப்பட்டது. அந்தக் கட்டத்தில் புளொட் அமைப்பே போராளி அமைப்புக்களில் பெரியதாகக் காணப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் புளொட் அமைப்பின் பயிற்சி முகாம்கள் போராளிகளால் நிரம்பி வழிந்ததது. இதனால் சென்னையின் இதயப்பகுதியான நந்தனத்தில் திருமண மண்டபம் ஒன்றினை புளொட் வாடகைக்கு அமர்த்தி தமது போராளிகள் பலரை தங்கவைத்தது. திருமண மண்டபத்தில் மொட்டை மாடியில் புளொட் போராளிகள் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். டெலோ அமைப்பின் பிரதான முகாம்கள் சேலம் மாவட்டத்தில் கொள்ளி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தன. இதனைவிடவும் காஞ்சிபுரம் பிரதேசத்தில் இருந்த மகரல் எனும் கிராமத்திலும் சென்னைக்கு அருகில் இருந்த போரூர் பகுதியிலும் சில முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஈ.பி.ஆர்.எல் எப் இன் பிரதான முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணம் பகுதியிலும் சிறியளவான முகாம்கள் ஸ்கந்தபுரம், திருச்சி மற்றும் பழனி ஆகிய பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்தன. ஈரோஸ் அமைப்பின் முகாம்கள் சென்னையின் மீனாம்பாக்கம், வேதாரணியம் மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டி இறுதிப்பகுதியில் சுமார் 30 பயிற்சி முகாம்களில் தமிழ் ஈழப் போராளிகள் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். தில்லி அதிகாரிகளின் தகவல்களின்படி ஆரம்பத்தில் சில முகாம்கள் மட்டுமே அமைக்கப்பட்டன. பின்னர் சிறியதும், பெரிதுமாக 30 முகாம்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு அமைப்பிற்கும் சென்னையில் ஒரு முகாம் இருந்ததோடு மேலும் பத்து மாவட்டங்களில் வேறு முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தன. தமது பிரதேசங்களில் அமைக்கப்பட்ட பயிற்சி முகாம்கள் குறித்து அப்பிரதேச மக்கள் அறிந்தே இருந்தனர். "பையன்கள்" என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட அவர்களுக்கு தம்மாலான உதவிகளை அவர்கள் செய்துவந்தனர். பல சந்தர்ப்பங்களில் வீட்டில் இருந்த உணவுப் பொருட்களும் போராளிகளுக்கு மக்களால் வழங்கப்பட்டன. இந்த முகாம்களுக்கு அருகில் வாழ்ந்த மக்கள் உணர்வுபூர்வமாக போராட்டத்தில் தமது பங்களிப்பினைச் செய்திருந்தனர். பலவிடங்களில் உள்ளூர் இளைஞர்களும் போராட்டத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட விரும்பினர். ஆனால் எந்த போராளி அமைப்பும் தமிழ்நாட்டு இளைஞர்கள் தம்முடன் இணைந்துகொள்வதை விரும்பவில்லை. உமா மகேஸ்வரன் என்னுடன் பேசும்போது பல தமிழ்நாட்டு இளைஞர்கள் பிடிவாதமாக போராளிகளுடன் இணைய முயன்றுவந்தனர் என்று குறிப்பிட்டிருந்தார். "நாங்கள் போரிட்டு சிங்களை வீழ்த்துவதே சரியான வெற்றியாக இருக்கும் என்று அவர்களிடம் சமாதானமாகக் கூறி அனுப்பி வைத்தேன்" என்று அவர் கூறினார். "வீரத் தமிழர்கள் நாங்கள், தனித்துப் போரிட்டே வெல்வோம்" என்று நான் கூறியபோது அவர்கள் உணர்வெழுச்சியால் ஆர்ப்பரித்தனர் என்று உமா மேலும் கூறினார்.
  2. காலத்தால் அழியாத பாடல்கள் இணைப்புக்கு நன்றி.
  3. புன்னகையில் பூ பூக்கும் திருமகளே .........! 😍
  4. ஆயுதங்களுக்காக இந்தியாவில் தங்கியிருப்பதைத் தவிர்த்த பிரபாகரன் பாண்டிச்சேரியில் ரோ அதிகாரிகளுடனான இரகசிய கூட்டம் நடந்ததன் பின்னர் பிரபாகரன் மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் அடிக்கடி பயணித்து வந்தார். சென்னையில் அவர் பாலசிங்கம் தம்பதியினர் தங்கிருந்த சாந்தோம் சாலை விடுதியில் தங்கியிருந்தார். அதுவே அக்காலத்தில் புலிகளின் அலுவலகமாகவும் தொழிற்பட்டு வந்தது. அந்த அலுவலகம் எப்போதும் ஆட்களால் நிரம்பியிருந்தது. இது பாலசிங்கத்தின் செயற்பாடுகளுக்குக் குந்தகமாக அமைந்ததுடன் பிரபாகரனின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலாக மாறியிருந்தது. ஆகவே, 1983 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பாலசிங்கம் தம்பதியினர் தமது வாழிடத்தை சென்னைக்கு வெளியே அமைந்திருந்த திருவாண்மியூருக்கு மாற்றியிருந்தனர். சென்னைக்கு வரும்போதெல்லாம் பிரபாகரன் இங்கேயே தங்கினார். அடையார் பகுதியில் ஓரளவிற்கு விசாலமான வீடொன்றினை வாடகைக்கு எடுத்துக்கொண்ட புலிகள் அங்கேயே தமது அரசியல் அலுவலகத்தினைத் திறந்தனர். இந்த அரசியல் அலுவலகத்திலிருந்துதான் பாலசிங்கமும் அடேலும் உள்நாட்டு, சர்வதேச ஊடகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த அலுவலகத்தில்த்தான் சக்கரட்ட பயிற்சிமுகாமுக்கு கொண்டுசெல்லப்படுமுன் புலிகளின் போராளிகளுடன் பிரபாகரன் சந்தித்துப் பேசிவந்தார். பொன்னம்மான், அப்பையா, கிட்டு ஆகியோரும் பிரபாகரனை இந்த அலுவலகத்தில் சந்தித்தே சென்றிருக்கிறார்கள். இவர்களுள் அப்பையாவே வயதில் மூத்தவராக இருந்தார். நாற்பதுகளின் இறுதியில் இருந்த அவர் புலிகளின் கண்ணிவெடி தயாரிக்கும் பிரிவில் கைதேர்ந்தவராக விளங்கினார். 1983 ஆம் ஆண்டின் இறுதி நான்குமாத காலத்தில் பிரபாகரன் நான்கு விடயங்களில் அக்கறை செலுத்தினார். இவை அனைத்துமே அவரது வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தவை. அத்துடன் புலிகளின் வரலாறு, தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டம், இலங்கையின் வரலாறு ஆகியவற்றிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியவை. அவையாவன, 1. இந்தியப் பயிற்சித் திட்டத்திலிருந்து உச்ச பயனைப் பெற்றுக்கொள்வது. 2. மட்டக்களப்புச் சிறையுடைப்பு. 3. விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்களின் பங்களிப்பு. 4. அவரது தனிப்பட்ட காதல் விவகாரம் தமிழ்நாட்டு அரசியல்வாதியான நெடுமாறனுடன் கிட்டு இந்திய ஆயுதப் பயிற்சித் திட்டத்தினை ஒரு வரப்பிரசாதமாக இறுதியில் உணர்ந்துகொண்ட பிரபாகரன் அதிலிருந்து உச்சபயனை தனதியக்கம் அடைந்துகொள்ளவேண்டும் என்று திடசங்கட்பம் பூண்டார். இந்திய இராணுவ அதிகாரிகளிடமிருந்து தாம் கற்றுக்கொண்ட மரபுவழிப் போராட்ட வழிமுறையின் மூலம் புலிகளை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றியமைக்கும் சிந்தனையில் அவர் ஈடுபட்டார். எனது ஊரான அரியாலையைச் சேர்ந்த புலிகளின் போராளியான சந்தோசமும் அக்காலத்தில் சென்னையில் பிரபாகரனுடன் தங்கியிருந்தார். பிராபகரனின் சிந்தனையில் அன்று ஓடிக்கொண்டிருந்த விடயங்கள் குறித்து நான் அவரிடம் வினவினேன், பிரபாகரன் இரு விடயங்கள் குறித்து தீர்மானமாக இருந்ததாக சந்தோசம் கூறினார். அதாவது, இந்தியாவினால் வழங்கப்பட்டுவரும் பயிற்சி என்பது நெடுநாள் நீடிக்கப்போவதில்லையென்பதும், போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் அவற்றினை எப்போதுமே தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க இந்தியா முயலும் என்பதுமே அவையிரண்டும் ஆகும். இந்தியா தனது வெளிவிவகாரக் கொள்கையினை தூக்கி நிறுத்தியதன் பின்னர் தமிழ்ப்போராளிகளுக்கு தான் வழங்கிவரும் பயிற்சியினை நிறுத்திவிடும் என்று பிரபாகரன் தனது போராளிகளிடம் கூறிவந்தார். "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்போது நிலைபெறுகிறதோ, அன்றே அவர்களுக்கு எமது தேவை இல்லாது போய்விடும். நாளையே ஜெயவர்த்தன இறந்துபோக சிறிமா ஆட்சிக்கு வந்தால், இந்தியா எம்மை முற்றாகக் கைவிட்டு விடும். ஏனென்றால், அதன்பின்னர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவான ஆட்சி இலங்கையில் ஏற்படுத்தப்படும்" என்று பிரபாகரன் கூறியதாக சந்தோசம் நினைவுகூர்ந்தார். தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து தன்னை விலத்திக்கொள்ள இந்தியாவுக்கு இன்னொரு காரணமும் ஏற்படலாம் என்பதை பிரபாகரன் உணரத் தலைப்பட்டிருந்தார். தமிழ்ப் போராளிகளுக்கான பயிற்சிகளை இந்தியா வழங்குவது சர்வதேசத்தில் தெரியவந்து, அதற்கெதிரான பலமான எதிர்ப்பும் விமர்சனங்களும் வெளிவருமிடத்து இந்தியா பின்வாங்கிவிடும் என்று அவர் கருதினார். மேலும் ஜெயவர்த்தன இந்தியாவுடன் அனுசரித்துச் செல்வதென்பது ஒருபோதும் நடக்கப்போவதில்லை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். இவ்வாறான காரணங்களால் பின்வரும் இருவிடயங்களைச் செய்திடவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். முதலாவது இந்தியப் பயிற்சி நடக்கும் காலம்வரை அதிலிருந்து முழுமையான பயனைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது, இந்தியாவிடம் மட்டுமே தங்கியிருக்காது தமக்கான சொந்த பயிற்சியினையும், ஆயுத வளங்களையும் தேடிக்கொள்வது. இந்த இரண்டு காரணிகளுமே பின்னர்வந்த 4 வருடங்களில் பிரபாகரனின் கொள்கைக்கும் திட்டமிடல்களுக்கும் அடிப்படையாக‌ அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை. புலிகளுக்கான பயிற்சித் தளங்களை தமிழ்நாட்டிற்கும் வன்னிக்கும் விஸ்த்தரிக்க அவர் தீர்மானித்தார். அக்காலத்திலேயே புலிகள் மதுரையிலும் வன்னியின் சில பகுதிகளிலும் பயிற்சி முகாம்களை நடத்திக்கொண்டிருந்தனர். அந்த முகாம்களை மேலும் பலப்படுத்துவதுடன் புதிய, பரந்த வலைப்பின்னல் முகாம்களை கட்டியெழுப்பவும் அவர் உறுதிபூண்டார். அதேகாலத்தில் தனது இயக்கத்தின் ஆயுதக் கையிருப்பைப் பெருக்கவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டார். "இந்தியாவை நாம் ஆயுதங்களுக்காக நம்பியிருக்கும்வரை நாம் அவர்களது அடிமைகளாகவே இருப்போம்" என்று பிரபாகரன் கூறியதாக சந்தோசம் என்னிடம் சிறித்துக்கொண்டே கூறினார். ஆகவே, சுதந்திரமான ஆயுதச் சேகரிப்பில் அவர் இறங்கினார். "இவையே பிரபாகரனின் புத்திசாதுரியமான முடிவுகளாக இருந்தன" என்று ரமேஷ் நடராஜா என்னிடம் தெரிவித்திருந்தார். இதனை மிகத் தெளிவாக தினமுரசு பத்திரிக்கையில் 1996 முதல் 1999 வரையான காலப்பகுதியில் "அல்பிரெட் துரையப்பா முதல் காமிணி வரை" எனும் தலைப்பில் அவர் எழுதிய அரசியல்த் தொடரில் குறிப்பிட்டிருக்கிறார். பிரபாகரனின் திறமைகளை, பலங்கள் அவரது வெற்றிகள் தொடர்பாக தினமுரசில் தான் தொடர்ச்சியாக எழுதிவந்ததனால் தனது அமைப்பான ஈ.பி.டி.பி இற்குள் கடுமையான எதிர்ப்பினைத் தான் சம்பாதித்துக்கொண்டதாக அவர் கூறினார். "மற்றைய இயக்கங்களும் பிரபாகரனின் திட்டமிடல், சிந்தனையாற்றல், பலங்கள் ஆகியவற்றை உதாரணமாகக் கொண்டு தம்மையும் வளர்த்துக்கொள்ளலாம் என்கிற காரணத்திற்காகவே அவர் பற்றி எழுதினேன்" என்று அவர் தனது எழுத்துக்களுக்கு நியாயம் கற்பித்தார். ரமேஷ் எனப்படும் அற்புதராஜா நடராஜா ‍- ஈ.பி.டி.பி தனது மூத்த போராளிகளை வட இந்தியாவிற்கு பயிற்சிக்காக பிரபாகரன் அனுப்பிவந்தபோதிலும், தமிழ்நாட்டில் தாம் அமைத்திருந்த பயிற்சி முகாம்களையும் அவர் விஸ்த்தரிக்கத் தொடங்கினார். தில்லியின் சக்ரட்டா பயிற்சி முகாமிற்கு 200 போராளிகளை பிரபாகரன் அனுப்பியிருந்தார். பின்னர் இப்பயிற்சி முகாம் பங்களூருக்கு மாற்றப்பட்டபோது ,மேலும் பல போராளிகள் பிரபாகரனால் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 1983 ஆம் ஆண்டி இறுதிக் காலப்பகுதியில் தனது இயக்கத்துக்கான ஆயுதக் கொள்வனவு வலையமைப்பினை பிரபாகரன் ஆரம்பித்தார். விடுதலை வேட்கை எனும் தலைப்பில் அடேல் பாலசிங்கம் எழுதிய புத்தகத்தில் சர்வதேச ஆயுதச் சந்தையில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர் இனால் வழங்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டது என்று எழுதுகிறார். "உண்மையாகவே நாம் தங்கியிருந்த அறையில் ஒருமுறை பெருமளவு ஏ.கே 47 ரக துப்பாக்கிகளும் ரொக்கெட் லோஞ்சர்களும் நிரம்பிக் காணப்பட்டது. அவ்வாறே மில்லியன் கணக்கான ரூபாய்களும் எமது அறை அலுமாரியில் வைக்கப்பட்டிருந்தன‌" என்று அவர் மேலும் கூறுகிறார். இந்தியாவுக்கு வெளியே சுதந்திரமான ஆயுதக் கொள்வனவில் ஈடுபட வேண்டும் என்று நினைத்த இன்னொரு போராளித் தலைவர் புளொட்டின் உமா மகேஸ்வரன் ஆகும். ஆனால், அவருக்கு வெளிநாடொன்றில் இருந்து கப்பலொன்றில் கொண்டுவரப்பட்ட‌ 40 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான துப்பாக்கிகளும் ஏனைய ஆயுதங்களும் சென்னையில் இந்திய சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டன. அதனை விடுவிப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன. இந்தச் சம்பவத்தின் மூலம் அனைத்துத் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கும் இந்தியாவினால் செய்தியொன்று வழங்கப்பட்டது. அதுதான், அவர்கள் தமது ஆயுதத் தேவைக்காக இந்தியாவையே நம்பியிருக்க வேண்டும் என்பதும், அதனை மீறி வெளியுலகில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டால் இந்தியா அதனை அழித்தே தீரும் என்பதுவுமே அது. ஆனால், பிரபாகரனால் இந்தியாவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவ்வப்போது தனக்குத் தேவையான ஆயுதங்களைக் கொண்டுவர முடிந்திருந்தது. தமிழ்நாட்டு சுங்கத்துறையினர் இதற்கு பிரபாகரனுக்கு உதவியாக இருந்தார்கள் என்பதைச் சொல்லத்தேவையில்லை. 80 களின் ஆரம்ப காலத்திலேயே பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த குளத்தூர் மணி தமிழ்நாட்டில் பயிற்சிமுகாம்களை நிறுவுவது எனும் பிரபாகரனின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்து அபரிதமான அதரவு கிடைத்தது. 1983 ஆம் ஆண்டி இறுதிப்பகுதியில் தமிழ்நாட்டில் இரு பாரிய பயிற்சி முகாம்களை பிரபாகரனினால் அமைத்துக்கொள்ள முடிந்தது. முதாலவது முகாம் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு அருகிலிருந்து காட்டுப்புறக் கிராமமான குளத்தூரில் அமைக்கப்பட்டது. இரண்டாவது மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் பகுதியில் இருந்த காட்டுப்புறக் கிராமமான சிறுமலையில் அமைக்கப்பட்டது. குளத்தூர் முகாமினை உருவாக்குவதற்கு திராவிடர் கழகத்தின் செயற்பாட்டாளராக அன்று இயங்கிவந்த குளத்தூர் மணி பிரபாகரனுக்கு உதவியிருந்தார். முகாமிற்கு அருகிலிருந்த கிராமங்களிலிருந்து போராளிகளின் உணவுத்தேவைக்காக தானியங்களை அவர் எடுத்துவந்து கொடுப்பார். இவ்வாறே சிறுமலை முகாமிற்குத் தேவையான உதவிகளை நெடுமாறன் கவனித்து வந்தார்.
  5. பயிற்சியின் நிறைவில் கண்கலங்கிய கிட்டுவும், யதார்த்தை உணர்த்திய பிரபாகரனும் மூன்று இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. தில்லியின் இதயப்பகுதியில் அமைந்திருந்த ராமகிருஷ்ணபுரம், தில்லி விமான நிலையத்திற்கு அருகில் இருந்த டெஹெரா டன் மற்றும் சக்கிரட்ட ஆகிய பகுதிகளிலேயே பல பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் சாதாரண பயிற்சிக்கு கொண்டுவரப்பட்ட போராளிகள் தனித்தனியாகத் தங்கவைக்கப்பட்டனர். விசேட பயிற்சிகளுக்கென்று அழைத்துவரப்பட்ட போராளிகளை, அவர்கள் வேறு வேறான இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் ஒரு முகாமிலேயே தங்கவைக்கப்பட்டனர். ஆனால், புலிகளின் போராளிகளை ஏனைய அமைப்புக்களின் விசேட பயிற்சிப் போராளிகளுடன் தங்கவைப்பதை அதிகாரிகள் தவிர்த்துக்கொண்டனர். புலிகளின் போராளிகளை தொடர்ந்தும் தனியாக வைத்தே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. புலிகளை இரகசிய ராணுவப் பயிற்சி நிலையமான சக்கிரட்ட பகுதியில் தங்கவைத்து பயிற்சியளித்தனர். இப்பகுதி இந்திய ராணுவப் புலநாய்வு அதிகாரிகளினால் "கட்டமைப்பு ‍ 22 " என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த முகாமிலேயே சீன ஆக்கிரமிப்பிற்குட்பட்டிருந்த திபெத்தில் சீன அரசின் நிர்வாகத்திற்கெதிராகப் போராடிவந்த திபெத்தியப் போராளிகளுக்கு ரோவும், அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தன. புலிகளின் போராளிகளுக்கு இந்த முகாமினை ஒதுக்குமாறு ரோ வினால் புலிகளைப் பயிற்றுவிக்கென அமர்த்தப்பட்ட அதிகாரியான‌ காவோ தனது உதவியாளர்களுக்குப் பணித்திருந்தார். இந்தியப் பயிற்சிக்காக தனது போராளிகளை அனுப்புவது தொடர்பில் தலைவர் தனது சந்தேகங்களைக் கொண்டிருந்தார். சிங்களப் பேரினவாதத்திற்கெதிராக தான் முன்னெடுத்திருக்கும் போராட்டத்திற்கும், இந்தியா போராளிகளுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்திற்கும் இடையிலான பாரிய வேற்றுமையினை அவர் தெளிவாக உணர்ந்தே இருந்தார். ஆனாலும், இந்திய பயிற்சியினைப் பாவித்து மாற்றியக்கங்களைக்கொண்டு இந்தியா புலிகளை பிற்காலத்தில் அழித்துவிடும் நிலைமை உருவாகலாம் என்று தலைவரிடம் கூறிய அரசியல் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம், புலிகளும் இந்தியப் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசி தலைவரைச் சம்மதிக்க வைத்தார். பாலசிங்கம் கூறியதன்படி நிகழுமானால் தமிழரின் தாயக விடுதலைப் போராட்டம் முற்றாகவே அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்துகொண்ட பிரபாகரன் இந்தியப் பயிற்சியை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தார். ஈரோஸின் பாலக்குமார் "இந்தியாவும் ஈழத்தமிழர்களும்" எனும் தலையங்கத்துடன் 1988 ‍- 1989 ஆம் ஆண்டுகளில் புலிகளால் வெளியிடப்பட்ட பதிவில் இதுகுறித்த விபரங்கள் பகிரப்பட்டிருந்தன. இப்பதிவில் தமிழ்ப்போராளிகளுக்கு பயிற்சியளிப்பதில் இந்தியா கொண்டிருந்த உறுதியை பிரபாகரன் உணர்ந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்தியப் பயிற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ள மறுக்குமிடத்து இந்தியாவினால் பயிற்சியளிக்கப்படும் ஏனைய இயக்கங்கள் தாம் புதிதாகப் பெற்றுக்கொண்ட பயிற்சியினைப் புலிகளை அழிக்கப் பயன்படுத்தலாம் என்பதை உணர்ந்துகொண்டார். புலிகளின் அழிப்பென்பது தமிழரின் தாயக விடுதலைப் போராட்டத்தினை முடிவிற்குக் கொண்டுவந்துவிடும் என்று அவர் அஞ்சினார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. "மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியே எமக்கு வழங்கப்பட்டது. ஆனாலும், எமது சக்தியைப் பாவித்து நாம் பல பயிற்சி முகாம்களை அமைத்துக்கொண்டு எமது இராணுவ பலத்தினை வளர்த்துக்கொண்டோம். இந்தியாவிடம் தங்கியிருக்காமல் எமது வளங்களைப் பாவித்து எமக்குத் தேவையான ஆயுதங்களையும் நாம் பெற்றுக்கொண்டோம்" என்று புலிகளின் அப்பதிவு மேலும் கூறுகிறது. பிரபாகரன் பற்றிய இந்தப் பதிவு மேலும் தொடரும்போது அவர் கொண்டிருந்த சிந்தனையும், மதிநுட்பமான முடிவுகளும் போராட்டத்தினை முன்கொண்டு சென்றது குறித்து நாம் மேலும் மேலும் அறிந்துகொள்ள முடியும். தனது போராளிகளைத் தனியான முகாம் ஒன்றில் வைத்து பயிற்சியளிக்குமாறு பிரபாகரன் ரோ அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். ரோவும் அதற்குச் சம்மதித்திருந்தது. பயிற்சிகளின் ஆரம்பத்திலிருந்தே போராளி அமைப்புக்களில் புலிகளே திறமையானவர்கள் என்பதை ரோ அதிகாரிகள் அறிந்திருந்தனர். ரோ வின் கைக்கூலிகளாக தனது போராளிகள் மாற்றப்படுவதைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் பிரபாகரன் எடுத்திருந்தார். அக்காலத்தில் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்ட இளைஞர்களுக்கு இயக்கப் பெயர் வழங்கப்படுவது வழமையாக இருந்தது. இதற்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது போராளியின் குடும்பம் இலங்கை இராணுவத்தினரிடமிருந்தோ அல்லது பொலீஸாரிடமிருந்தோ துன்புருத்தல்களை எதிர்கொள்வதைத் தடுப்பது. இரண்டாவது போராளிகளுக்கு புதியதொரு அடையாளத்தைக் கொடுப்பது. புதிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒருபோராளி அவ்வியக்கத்திற்கும், இலட்சியத்திற்கும் எப்போதும் விசுவாசமாக செயற்படுவார் என்கிற எதிர்ப்பார்ப்பு இருந்தது. மேலும், தமது முன்னைய வாழ்விலிருந்து முற்றான விலகலையும் இயக்கப் பெயர்கள் போராளிகளுக்கு வழங்கின. புலிகள் இயக்கத்தில் இந்த நடைமுறை ஒரு மதத்தைப் போல பின்பற்றப்பட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். போராளிகள் தமது இயக்கப் பெயர்களையே பாவிக்கவேண்டும் என்றும் ஏனைய போராளிகளின் இயற்பெயரை எக்காரணத்தைக் கொண்டும் அறிந்துகொள்ள முயலக் கூடாது என்கிற கடுமையான கட்டளையும் இருந்தது. போராளிகளின் குடும்பங்களின் விபரங்கள் எதிரிகளுக்குக் கிடைக்கப்பெறுவதைத் தடுக்கவே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட தனது போராளிகளிடம் பேசிய பிரபாகரன் எக்காரணத்தைக் கொண்டும் தமது இயற்பெயர்களை இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டாம் என்று பணித்திருந்தார். இயக்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களையே போராளிகள் இந்திய அதிகாரிளிடம் கூறி வந்தமையினால் அவர்களது குடும்ப விபரங்கள் குறித்து ரோ அதிகாரிகளால் அறியமுடியாது போய்விட்டது.பொன்னமானின் உண்மையான பெயர் அவரது வீரமரணத்தின் பின்னரே வெளியே தெரியவந்தது. 1987 ஆம் ஆண்டு நாவற்குழியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தொன்றில் அவர் வீரமரணம் அடைந்திருந்தார். இந்தியப் பயிற்சி அட்டவணை மிகவும் கடுமையாகக் காணப்பட்டது. காலை 8 மணிக்கு உடற்பயிற்சிகளுடன் நாள் ஆரம்பிக்கும். காலையுணவு ஒன்பது மணிக்கு பரிமாறப்பட்டது. பயிற்சிகளுக்கான தேற்றம் மற்றும் தேற்றத்தினை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் செயற்பாடுகள் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை நடத்தப்பட்டன. மரபுவழிப் போர்முறை மற்றும் கரந்தடிப்படைப் போர்முறை ஆகியனவற்றிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. வகுப்புக்களில் நடத்தப்பட்ட பயிற்சிகள் ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தே வழங்கப்பட்டு வந்தன. மதிய உணவு பிற்பகல் 1 மணியிலிருந்து 2 மணிவரை பரிமாறப்பட்டது. பிற்பகல் முழுவதும் துப்பாக்கிச் சூடு நடக்கும் மைதானத்திலேயே கழிக்கப்பட்டது. அனைத்துப் போராளிகளுக்கும் எஸ்.எல்.ஆர், ஏ.கே. 47, எம் ‍ 16, ஜி 3, எஸ்.எம்.ஜி, .303, ரிவோல்வர்கள், பிஸ்ட்டல்கள், ரொக்கெட் லோஞ்சர்கள் மற்றும் கிரணேட்டுக்கள் ஆகியவற்றில் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சிகளின்போது திறமையாகச் செயற்பட்டதன் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட சில போராளிகளுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டன. விசேட பயிற்சிகளின்போது வெடிகுண்டுகளைத் தயாரிப்பது, கண்ணிவெடிகளைப் புதைப்பது, தாங்கியெதிர்ப்பு ஆயுதங்களைக் கையாள்வது, தொலைத்தொடபு மற்றும் புலநாய்வு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. டெலோ அமைப்பிலிருந்து ரோ அதிகாரிகளினால் தெரிவுசெய்யப்பட்ட குழு ஒன்றிற்கு திருகோணமலைத் துறைமுகத்திற்கு வந்துசெல்லும் கப்பல்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக பிரத்தியேகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. டெலோ அமைப்பின் இந்தப் பிரிவில் பயிற்றப்பட்ட முன்னாள் உறுப்பினர் ஒருவர் என்னுடன் பேசுகையில் ரோ அதிகாரிகளால் தாம் தெரிவுசெய்யப்பட்டதாகவும், கப்பல்களை அடையாளம் காண்பது, அது எந்த நாட்டிற்குரியது என்பதைக் கண்டறிவது, அக்கப்பல் எவ்வகையைச் சார்ந்தது போன்ற விடயங்களை அறிந்துகொள்வதற்கான பயிற்சிகள் தமக்கு வழங்கப்பட்டதாகக் கூறினார். மும்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்தியக் கடற்படையினரால் பயிற்றுவிக்கப்பட்ட இந்தக் குழுவினர் கப்பல்களைப் புகைப்படம் எடுப்பது, கப்பலுக்கான தொலைபேசி அழைப்புக்களை இடைமறித்து ஒட்டுக் கேட்பது போன்ற புலநாய்வுச் செயற்பாடுகளில் தேர்ச்சி பெற்றனர். இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான கருவிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டதோடு நீருக்கடியில் சென்று உளவுத்தகவல்களை சேகரிப்பது போன்ற விடயங்களிலும் இக்குழுவினர் இந்திய கடற்படையினரால் பயிற்றப்பட்டனர். டெலோ அமைப்பைச் சேர்ந்த அந்த முன்னாள்ப் போராளி என்னிடம் பேசும்போது திருகோணமலை துறைமுகத்தினைக் கண்காணிப்பதே இந்தியாவின் முக்கிய குறிக்கோளாகத் தெரிந்ததாக கூறினார். திருகோணமலை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள்ச் செல்வதைத் தடுப்பதே இந்திய அதிகாரிகளின் ஒரே நோக்கமாக‌ இருந்ததாகவும், இதற்கான பயிற்சியில் தாம் காட்டிய ஈடுபாட்டினையடுத்து ரோ அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்திருந்ததாகவும் கூறினார். ரோ அதிகாரிகளினால் தெரிவுசெய்யப்பட்ட டெலோ அமைப்பின் ஒரு குழுவினர் ஐந்து முக்கியமான புலநாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பயிற்றப்பட்டனர். அவையாவன, 1. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் இராணுவ உதவிகளை அவதானிப்பது 2. இலங்கையின் உள்நாட்டுப் போரில் பிரித்தானியாவின் முன்னாள் போர்வீரர்களைக் கொண்டியங்கும் கூலிப்படையான கீனி மீனி சேர்விஸஸின் செயற்பாடுகளை அவதானிப்பது 3. பாக்கிஸ்த்தான் மற்றும் சீனாவுடனான இலங்கையின் தொடர்புகளை அவதானிப்பது 4. வொயிஸ் ஒப் அமெரிக்கா எனப்படும் அமெரிக்காவின் வானொலி நிலையத்தின் செயற்பாடுகளை அவதானிப்பது 5. திருகோண‌மலை துறைமுகத்தினை அவதானிப்பது. இங்கிலாந்துக் கூலிப்படையான கீனி மீனியின் பயிற்றுவிப்பாளன் ஒருவனுடன் சிங்கள விசேட அதிரடிப்படையினர் பயிற்சிகளை ஒருங்கிணைத்திருந்தவர்கள் இராணுவ அதிகாரிகள். இவர்கள் ரோவுக்காக வங்கதேசம், சிக்கிம், பாக்கிஸ்த்தான் ஆகிய பகுதிகளில் பணிபுரிந்தவர்கள். ஏனையவர்கள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள். விசேட பயிற்சிகளுக்கென்றும் தனியான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்ததுடன், போராளிகள் தில்லியில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின்னரும் இந்த விசேட பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தன. சங்கர் ராஜியும் டக்கிளஸ் தேவானந்தாவும் என்னுடன் பேசும்போது சில அதிகாரிகள் இலங்கை குறித்த தகவல்களைத் திரட்டுவதிலேயே அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறினர். இலங்கையில் இருக்கும் வீதிகள், புகையிரத பாதைகள், பாலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைந்திருக்கும் கட்டுமானங்கள் குறித்த வரைபடங்களைத் தயாரிக்குமாறு அதிகாரிகள் தம்மிடம் பணித்ததாகக் கூறினர். பயிற்சியில் ஈடுபடும் போராளிகள் இந்த விபரங்களை இந்திய அதிகாரிகளிடம் கையளிப்பது அவர்களின் கடமை என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் தம்மிடம் பயிற்சி பெறுபவர்களை அவ்வப்போது ரோ அதிகாரிகள் பரீட்சித்துப் பார்ப்பார்கள். அவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. உண்மையாகவிருத்தல், நன்னடத்தை மற்றும் குறிபார்த்துச் சுடுதல் போன்றவற்றிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. புலிகளின் போராளிகளே பயிற்சியாளர்களின்போது இந்திய அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றனர். பயிற்சி முடிந்தபொழுது நடத்தப்பட்ட விடைபெறுதல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. புலிகளைப் பயிற்றுவித்த இராணுவ அதிகாரிகளில் ஒருவர் இறுதி விடைபெறும் உரையினை ஆற்றிக்கொண்டிருக்கும்போதே அழத்தொடங்கினார். புலிகளின் தரப்பில் பேசிய கிட்டுவும் மிகவும் நெகிழ்ந்து காணப்பட்டார். சொற்கள் தொண்டையில் சிக்கிக்கொள்ள கண்கள் கண்ணீரால் நிரம்பியதாக கூடவிருந்த போராளிகள் கூறியிருந்தனர். சென்னைக்குத் திரும்பியபோது இந்த நிகழ்வினை பிரபாகரனிடம் பொன்னம்மான் தெரிவித்தார். சிறிது நேரம் மெளனமாகச் சிந்தித்துவிட்டு பிரபாகரன் பேசத் தொடங்கினார், "ஒரு குறிக்கோளுக்காகவே நாம் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அவர்களோ (இந்தியர்கள்) வேறொரு நோக்கத்திற்காக எமக்குப் பயிற்சியளித்தார்கள். எமது குறிக்கோளுக்கு எதிராக அவர்கள் தமது இராணுவத்தை இறக்கினால் அவர்களுடன் சண்டையிடுமாறு நான் கிட்டுவைக் கோருவோன். கிட்டுவும் இந்திய இராணுவத்துடன் சண்டையிட்டே ஆகவேண்டும்" என்று கூறினார். சுமார் நான்கு வருடங்களுக்குப் பின்னர் இந்திய இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவது என்று பிரபாகரன் முடிவெடுத்தபோது இந்த நிகழ்வினை கிட்டு நினைவுகூர்ந்தார்.
  6. என்ன உறவோ என்ன பிரிவோ.......! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.