Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33035
    Posts
  2. மலையான்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    177
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19134
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/01/24 in Posts

  1. நாங்களே துரோகிகளை உருகவித்து, உருவாக்கி, அதை அழிப்பதாக நினைத்து அதனாலேயே அழிந்தோம்............ மீண்டுமா.....
  2. மரண பலம் -----சுப.சோமசுந்தரம் சமீபத்தில் எனக்கு ஒரு விஷயம் வேடிக்கையாகத்தான் இருந்தது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன் சமூக வலைத்தளங்களின் Memes நாயகனாக சித்தரிக்கப்பட்டவர் திரு. விஜயகாந்த். இன்று இந்திரன், சந்திரன் என்று அதே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் திருவாளர் வெகுசனமும் கொண்டாடும் நபரானார் அவர். ஒரு வாரத்திற்கு முன் என் ஆச்சி (அப்பாவின் அம்மா) தனது 103 வது அகவையில் இயற்கை எய்தினாள். நான் சிறுவனாய் இருக்கும்போது என் அப்பா அரசுப்பணியில் ஒரு கிராமத்தில் பணியில் இருந்ததால் அங்கேயே ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். "எங்கிருந்தெல்லாமோ நம் ஊரைத் (பாளையங்கோட்டை) தேடி வந்து பிள்ளைகளப் படிக்க வைக்கிறார்கள். நீ இந்தப் பட்டிக்காட்டிலா (!!!) பிள்ளையைச் சேர்ப்பாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து என்னை உரிமையுடன் தூக்கி வந்து பாளையில் அந்தக் காலத்திலேயே இருந்த கான்வென்ட்டில் சேர்த்துப் படிக்க வைத்தாள் என் ஆச்சி. நான் நானாக ஆனேன். அதனால் அவளிடம் பாசத்தில் கட்டுண்டே வாழ்ந்திருக்கிறேன். கடைசிக் காலத்தில் அவளைக் கவனிக்க ஆள் அமர்த்தியபோது, செலவுக்கு என்னிடம் அதிகம் வாங்கலாம் என்றும், "அவன் எனக்காக எதுவும் செய்வான்" என்றும் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறாள். பெற்று வளர்த்து ஆளாக்கியதற்கு அவளது பிள்ளைகள் கடமைப்பட்டவர்கள். என்னைப் பாசத்துடன் குறிப்பிட்ட காலம் வரை வளர்த்ததற்கும், கடைசிக் காலத்தில் கூட என்மீது நம்பிக்கயை வெளிப்படுத்தியதற்கும் நானும் கடமைப்பட்டவன். எனவே நாங்கள் அவள் வாழுங்காலம் இயன்றவரை அவளைத் தாங்கிப் பிடித்தோம். ஆனால் நிறைய மனிதர்களுக்கு அவள் சிம்ம சொப்பனமாகவே வாழ்ந்தாள். மருமகள்களுக்குக் கொடுமையான மாமியாராகவே வாழ்ந்தாள். வேற்று மனிதர்களிடமும் ஓரளவு அப்படியே ! கடைசிக் காலத்தில் தன்னைக் கவனிக்க அமர்த்தப்பட்டவர்களைக் (caretakers) கேவலமாக நடத்தியதில் சுமார் பதினைந்து பேர்களை மாற்ற வேண்டியிருந்தது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. அவள் வாழுங்காலம் (காரணத்தோடு) அவளைத் தூற்றிய சிலர் அவளது மரணத்தில், "103 வயது ! கொடுத்து வைத்த ஆன்மா. அதிலும் ஏகாதசி அன்று இறந்ததால் வைகுண்ட பிராப்தி !" என்றெல்லாம் அவள் புகழ் பாடினார்கள். மனதுக்குள் வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டேன். எனக்கு அவள் நல்ல ஆச்சி. அவ்வளவே! அதற்காக அவள் நல்லவள், உத்தமி என்றெல்லாம் நான் பேசித் திரிந்தால் அது சுயநலமாகத்தானே முடியும் ! அல்லல் பட்டவர்களின் துன்பத்தை உணர்ந்து, பிறிதின் நோய் தந்நோயாகக் கொள்ளும் பக்குவம் எனக்கு வேண்டாமா ? மரணத்திற்கு மனிதனைப் புனிதனாக்கும் ஆற்றல் உண்டோ ? நகைச்சுவை நடிகர் முத்துக்காளை ஒரு படத்தில் சொல்வதைப் போல, முடிந்தால் நாமெல்லோரும் செத்துச் செத்து விளையாடலாமோ !
  3. இந்த அணிவகுப்பு மரியாதையை வழங்கியதனூடாக சிங்களம் தனக்கு ஒரு நண்பனை உருவாக்கியுள்ளது. கனடாத் தமிழர்களின் ஒரு பலமான ஆழுமையை துரோகியாக காட்டுவதனூடாக எம்மை நாம் பலவீனப்படுத்தும் செயலைச் செய்கிறோம். எதிரிகளை எப்படி எனது வழிக்குக் கொண்டுவரலாம் என்பதைத்தான் ஒரு புத்திசாலி யோசிப்பான். (சிங்களம் அதைத்தான் செய்கிறது ) இங்கே நாமோ, புதிது புதிதாக எப்படி எதிரிகளை உருவாக்கி எங்களை நாமே பலவீனப்படுத்தலாம் என்பதை யோசிக்கிறோம். எதிரிகளை எப்படி உருவாக்கி, தம்மைத் தாமே எப்படி அழித்துக்கொள்ளலாம் என்பதற்கு ஈழத் தமிழ் இனம் ஒரு மிகச் சிறந்த உதாரணம். 😏
  4. கனடா பல விதமான உதவிகளை பல நாடுகளுக்கும் செய்து தான் வருகிறது. தமிழ் அகதிகளை அரவணைத்துக் கொண்டு இன்னொரு பக்கம்.. தமிழினப் படுகொலையின் போதும் அது மறைமுகமாக பங்களித்துள்ளது. அது வேறு விவாதிக்கப்பட வேண்டிய விடயம். ஆமாம்.. அது தான் கனடாவில்.. சட்டரீதியாக்கிட்டாங்கள். சும்மா எல்லாம் அவிழ்த்துவிடக் கூடாது. சொறீலங்காவில் கஞ்சா வளர்க்க அமைச்சர் பரிந்துரைக்க.. சொறீலங்கா பொலிஸ் போதைவஸ்து கடத்திறவனை பிடிக்குதாம். போதைவஸ்து கடத்துவதே பொலிஸ். இதில...???! இவர் என்ன அறிவுரையை வழங்குவார்..??! இனப்படுகொலையின் அங்கமாகவும் ஆக்கிரமிப்பின் அங்கமாகவும் சொறீலங்கா பொலிஸ் இருக்குது. அதனை தவிர்த்து தமிழ் மக்களின் நலன் குறித்து பேச முடியாது. தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச உரிமையில் கூட.. பொலிஸ் அதிகாரங்களை தர மறுக்குது சிங்களம். இந்த இடத்தில் சொறீலங்கா பொலிஸுக்கு வெள்ளையடிப்பது.. அதுவும் ஒரு புலம்பெயர் கனடிய தமிழரை கொண்டு வெள்ளையடிப்பது தற்செயலானதல்ல. நன்கு திட்டமிட்ட செயல். தொங்க வேண்டிய இடத்தில் தொங்காமல் விட்டுத்தான்.. எமக்கான நீதி.. உரிமைகளை இழந்து நிற்கிறோம். அதே தவறை திரும்ப திரும்பச் செய்யக் கூடாது. தனிநபர்களின் போலிப் புகழ் தேடலுக்காக. அந்த பல நூறு வட்டங்களும் மாசுபட்ட ஒரு பொலிஸ் என்றால் அது சொறீலங்கா பொலிஸ். நான் சொல்லவில்லை.. ஆண்டு தோறும் வெளிவரும்.. மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் சொல்கின்றன. அவர்களும் தேவை இல்லாத ஊஞ்சலாடினமாக்கும். உங்களுக்கு சொறீலங்கா பொலிஸூக்கு குஞ்சம் கட்ட வேண்டிய தேவை இருக்கலாம். நமக்கில்லை. தெரிகிறது... ஆனால் நிச்சயமா தெரியவில்லை. இதுவே போதும். அறியாமல் செய்கிறாங்கள் என்று சொல்லிவிட்டுப் போகலாம். அறிந்து செய்தாலும். ஆனால் இதுகள் சொந்த இனத்தின் இத்துனை துயர்களையும் அழிவுகளையும் கண்ட பின்னும்.. சொறீலங்கா பொலிஸில்.. உண்மையான நேர்மையான சர்வதேச தரத்திலான.. மாற்றங்களை கோராமல்.. போலிப் புகழ்ச்சி செய்து.. கேடயம் வாங்கிச் செல்வது எந்த வகையில்.. சொறீலங்கா பொலிஸ் தன் தரத்தை மேம்படுத்த.. தன்னை திருத்திக்க.. தன் தவறுகளுக்கு பொறுப்பேற்று குற்றவாளிகளை தண்டிக்க.. கப்பம் ஏவல் கொள்ளை கொலை..கடத்தலில் கூட்டுப் பங்காளியாக இருப்பதை விட்டொழிக்க தூண்டும்..??! இவை எதுவுமே நிகழாமல்.. சொறீலங்கா பொலிஸ் உருப்படுற மாதிரியே தெரியவில்லை. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பகிரங்க குற்றச்சாட்டுக்களை சுமக்கும் ஒரு கொடிய பொலிஸ் சேவைக்கு.. கனடா உதவுவது எந்த வகையில்.. கனடாவின் கொள்கைகளுக்கு அமைவாகும்.. இதை கனடாவிடம் கேட்க வேண்டிய ஒரு நபர்.. சொறீலங்கா பொலிஸூக்கு வெள்ளையடிச்சு கேடயம் வாங்கிச் செல்வதன் நோக்கமென்ன..??! சொறீலங்கா பொலிஸில் உள்ளவர்களில் பலர் குற்றவாளிகள். அவர்களை தண்டிக்காமல்.. நீதியின் முன் நிறுத்தாமல்.. சொறீலங்கா பொலிஸ் உருப்படாது. அதேபோல்.. சொறீலங்கா பொலிஸை அரசியலுக்கு அப்பால் கண்காணிக்கக் கூடிய சுயாதீன அமைப்புக்கள் இன்றி.. சொறீலங்கா பொலிஸ் உருப்பட வாய்ப்பில்லை. மாறாக.. சொறீலங்கா பொலிஸின் கடந்த கால நிகழ்கால குற்றங்களை மறைத்து குற்றவாளிக் குலாமாக இருக்கும் சொறீலங்கா பொலிஸுக்கு வெள்ளையடிப்பதால்.. எந்த மாற்றமும் வராது. அதேபோல்.. தமிழர் பிரதேசங்களில் இருந்து.. இனப்படுகொலையின் அங்கமான சொறீலங்கா பொலிஸ் வெளியேற்றப்பட்டு.. பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். தமிழீழ காவல்துறைக்கு ஒப்பான நேர்மையும் கண்ணியமும் கட்டுப்பாடும் செயல்திறனும் மிக்க ஒரு காவல்துறையை தமிழர் தரப்பு கட்டியமைப்பது அவசியம். தமிழர் பகுதி வாழ் முஸ்லிம்களும்.. சிங்களவர்களும்.. விகிதாசார அடிப்படையில் உள்வாங்கப்பட வேண்டும். இதனை கனடாவிடம்.. வலியுறுத்த துரையப்பாவின் எச்சங்கள் தயாராமோ..?!
  5. 2009 க்குப் பின் தமிழர்களுக்கு இதெல்லாம் தனிநபர் வியாபாரமாப் போச்சு. ஆளாளுக்கு சொறீலங்கா சிங்களவனின் காலில் வீழ்ந்து..சரணாகதி அடைவதெல்லாம்.. டிப்ளோமசி.. பாசிட்டிவ் திங்கிங். உங்கட சுமந்திரன் செய்யாததா.. கண்டது என்ன 15 ஆண்டுகள் கடந்து விட்டன. உங்கட சம்பந்தர் செய்யாததா.. 50/60 ஆண்டுகள் கடந்து விட்டன. உங்கட சி ரி சி ஈழத்துக்குள் இமாலயத்தை கொண்டு வரப் போட்டினம்.. பிரகடனம் என்னாச்சு.. பிரண்டு போச்சா. அடிப்படையில் எம்மவர்களுக்கு டிப்ளோமசி என்றாலே என்னென்று தெரியாது. எதிரியின் காலில் போய் நேரடியாக வீழ்வதும்.. அவனை பாராட்டி வியாபாரம் வாங்குவதும்.. கேடயம்.. விருது.. பத்திரமும் வாங்குவதென்றால்.. அது டிப்ளோமசி கிடையாது. டிப்பொசிட்.. இன் பின்.. தான். நீங்களும் சில பல ஆங்கிலப் பதங்களை எழுதி இவையை ஏதோ பெரிய வித்துவான்களாக காட்ட நினைக்கிறீர்கள்.. நிச்சயம் சிங்களத்தின் காலில் வீழ்ந்தோ.. முதுகை வருடியோ.. அவனை பாராட்டியோ.. உங்கட டிப்ளோமசி அமையும் என்றால்.. அதனை எத்தனையோ பேர் செய்து முடிச்சிருப்பினம். சிங்களத்திடம் அது சுய சலுகை வாங்கிப் பிழைப்பை ஓட்ட உதவலாமே தவிர.. தமிழ் மக்களுக்கு அணு அளவும் விமோசனம் வராது. இனியும் மக்களிடம்.... உங்களின் சொந்த சுயலாபங்களை இட்டான.. சிங்களவனிடம் சரணாகதி அடைவதை எல்லாம் டிப்ளோமசின்னு சொல்லிக்கிட்டு வராதீர்கள். ஹரி ஆனந்த சங்கரி.. கனடா எம் பி. உலகத்தமிழனத்துக்கு தலைவர் கிடையாது. அவரை மையப்படுத்தி.. தமிழர் உரிமை கோரலும் இல்லை. எனவே.. அவர் மக்களுக்கான.. நேர்மையான வழியில் செல்லும் வரை.. வரவேற்கப்படுவார். எதிரியின் போக்கில் போவதாக மக்கள் உணரும் பட்சத்தில்... மிச்சத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனந்த சங்கரி எடுத்துக்காட்டு.
  6. 1. நிஷான் துரையப்பா, 1973 இல் கொழும்பில் பிறந்து, கனடா சென்று, யூனிவர்சிட்டியில் இளமானியாகி, 1995 இல் பொலிஸ் கான்ஸ்டபிளாகி, பலவருட சேவையின் பின் 1.6 மில்லியன் மக்கள் வாழும் மிசுசுகா, பீல் பிராந்தியத்தின் பொலிஸ் தலைமை அதிகாரியாகியுள்ளார். 2. முன்னர் கனடாவில் தமிழ் குழுக்களை அடக்க, இலங்கை பொலிஸ் அதிகாரி, சுந்தரலிங்கம் என நினைக்கிறேன், உதவியை பெற்றது கனடா. இதுபோல் பொலிஸ் பிரிவுகள் தமக்கிடையே ஆட்களை, நடைமுறைகளை, தகவல்களை பரிமாறுவதும், விஜயங்கள் செய்வதும் வழமையே. இப்படி வரும் உயரதிகாரிகளுக்கு இப்படி மரியாதை கொடுப்பதும் வழமையே. 3. ஆனால் அல்பிரட் துரையப்பா - சரியாகவோ அல்லது பிழையாகவோ - தமிழின விடுதலை போரினை எதிர்க்கும் தமிழர்களின் முகமாக, தமிழர், சிங்களவரால் நோக்கப்படுகிறார். ஆகவே இந்த வகையில் இவரின் வருகை கூடிய முக்கியத்துவம் பெறுகிறது. 4. நிஷான் - இதுவரைக்கும் இந்த துறைசார் வருகையை மீறி எதுவும் சொல்லவில்லை. 5. பார்ப்போம். சொல்வதை, செய்வதை வைத்து இதில் நாம் முடிவு எடுக்கலாம். தனியே துறைசார் நடவடிக்கையுடன் மட்டுப்பட்டால் - அலட்டிகொள்ள வேண்டியதில்லை. இல்லை எனில் எதிர்வினையாற்றலாம்.
  7. இணையத்தில் வாசித்து, யூரியூப் காணொளிகள் பார்த்து பெற்ற தகவல்களின் பிரகாரம் இவர் பொலிஸ் துறையில் அதீத திறமைசாலிகளில் ஒருவர். இவரது பதவி இன்னும் ஐந்து வருடங்களுக்கு அண்மையில் நீடிக்கப்பட்டு உள்ளது. வட அமெரிக்காவில் பெரியதொரு பிரதேசத்து காவல்துறைக்கு பொறுப்பாக எங்களில் ஒருவர் உள்ளது எமக்கு பெருமையை அளிக்கும் விடயம் மட்டுமல்ல எமது துறைகளில் நாம் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய ஊக்குவிப்பும் ஆகும். பீல் என அழைக்கப்படும் பிரதேசத்துக்கு மட்டும் அல்ல ஒன்றாரியோ மாகாணத்தின் பொலிஸ் அமைப்புக்களின் தலைவரும் இவர் என கூறப்படுகின்றது. இப்படிப்பட்ட ஒருவருக்கு யாழ் யாழ் கருத்துக்களத்து ஜாம்பவான்கள் பாடம் எடுக்கின்றார்கள் என்றால்.. ஆஹா.. எந்தப்பக்கம் திரும்பி புளகாங்கிதம் அடைவது என தெரியவில்லை.
  8. 🤣 ஒருமுறை @அக்னியஷ்த்ரா எழுதினார். இப்பவே புலம்பெயர்ந்த பலரின் பிள்ளைகள் கலப்பினத்திருமணம். இன்னும் இரெண்டு சந்ததி போக புலம்பெயர் தமிழ் சமூகம், ஒரு கலவை கலரில், கலவை பண்பாட்டுடன், செம்பாட்டு தலையுடன் நிக்கும் என்று. அது உண்மை. அதில் தப்பும் இல்லை. இதுதான் காலம் எனும் காட்டாறின் நியதி. தாங்கள் வெள்ளைகாரன் நாட்டில் அவன் பாணியில் வாழலாம். அங்க செண்டை அடிச்சாத்தான் தப்பு🤣. நாகரும், இயக்கரும், வேடரும், இப்போ மலையாளிகளாய் போய் விட்ட சேரரும், சோழரும், பாண்டியரும், இப்படி பலரும் கலந்த சாம்பாருதான் ஈழத்தமிழர். இனங்களுக்கு தனிதுவம் இருக்கிறது. ஆனால் எந்த இனமும் இந்த உலகில் தனியாக, சுயம்பாக, கலப்பில்லாமல் இருந்ததில்லை. இனகுழுக்கள் ஒன்றில் இருந்து ஒன்று பண்பாட்டு கூறுகளை கடன் வாங்கி கொண்டே இருக்கும்.
  9. வாழிய வாழிய வாழியவே! --------------------------------------- யாழை நாம் மீட்டுவோம் யாவையும் தேடுவோம் காவியம் படைத்துக் கவிதையும் பாடுவோம் கதைகளும் எழுதுவோம் கருத்துப் படங்களும் வரைந்துமே கருத்துடன் மோதுவோம் புத்தியைத் தீட்டுவோம் கத்தியை ஏந்திடோம் சத்திய வேள்வியில் சரித்திரமானவர் நினைவொடு வருகின்ற ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று மகிழ்வோமே! களத்திலே இணைந்த நாம் முகங்களைப் பார்க்காது நலன்களைத் தேடிடும் நட்புகள் ஆகினோம் நாளையும் தொடருவோம்! மோகனத் திருமகன் செதுக்கிய யாழிலே நிழலொடு நியாயினி நுணாவிலாரொடு பலருமாய் இழுக்கின்ற தேரென யாழ்க் களமது யுகங்களைக் கடந்துமே வாழிய வாழிய வாழியவே! பிறக்கின்ற ஆண்டிலே கள உறவுகள் யாவர்க்கும் உளமொடு உடல் நலன் சிறப்புடன் மிளிர்ந்திட வாழ்த்துகின்றேன் வாழிய வாழிய வாழியவே!
  10. சிறிலங்கா இனப்படுகொலையரசையும், அதனை நிகழ்த்தி முடித்த இனக் கொலைஞர்களையும் காப்பதில் தமிழர்களும் அக்கறைகாட்டுவது ஒன்றும் புதிதல்ல. இனப்படுகொலை தொடங்கியகாலம் முதல் உள்நாட்டிலே சிங்களத்தைக் காத்த தமிழ்த் தரப்புகள் இருந்தன. அதே இனஅழிப்பைக் கரணியமாக முன்வைத்து புலம்பெயர்ந்த தரப்பிலும் சிறிலங்கா இனப்படுகொலையரசையும், அதனை நிகழ்த்தி முடித்த இனக் கொலைஞர்களையும் காப்பதற்கெனவும் தமிழர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானது அல்லவே. இந்தந் திரியிலே தலைப்புத் தொடர்பாகத் தொடங்கிப்பின் 'துறையப்பாவின் பேரன் யார்,, என நீண்டு விரிந்து துரோகியா, துரோகியில்லையா நாளைக்கு இன்னும் பலருக்குப்பட்டம் கொடுப்பீர்களா, அந்த விழாவுக்கு நாமும் வரலாமா என நீண்டு செல்கிறது. அதிற் தவறேதும் இல்லைத்தான். களமென்றால் கருத்தாடவும் குளமென்றால் நீந்தவும் வேண்டும்தானே. ஆனால், இங்கே நீந்துவதோடு சிறிலங்காவுக்குத் தங்கமுலாம் பூசலும் நடக்கிறது. துறையப்பா யார்? அவர்தொடர்பான வரலாற்றுத் தகவல் என்ன? தமிழருக் எதிராக என்ன செய்தார், என்பவற்றையும் தேடலாம் அல்லவா? நியாயப்படுத்துவதற்கான தேடலைப்போல், அவரது அநியாயங்களையும் தேடுவது நன்று என்பதே பொதுநிலைப் பண்பாக இருக்கமுடியும். சிறிலங்காவினது பிரதமாராக இருந்த சிறிமாவோவால் தமிழரது பண்பாட்டுத் தலைநகராக விளங்கும் யாழ் மண்ணிலே தமிழ் ஆராய்ச்சி மாநாடானது, உலகத் தமிழ் அறிஞர் பெருமக்களது பங்களிப்போடும், வருகையோடும் ஷஷஉலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,, நடைபெறுவதா(?) என்ற இனவன்மத்துடனான தடைகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்றதைப் பொறுக்காது சிங்களப் காவற்றுறையெனும் காடையரைப் பயன்படுத்தித் தமிழர்களை கொன்றதைத் தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்களின் நினைவாலயம் இன்றும் இருக்கிறது. (தெரியாதவர்கள் யாழ்ப்பாணம் சென்றால் பார்க்கலாம்.) ஆனால், கொலைஞர்கள் இன்னும் தண்டிக்கப்படவுமில்லை. சிங்களம் ஒப்புக்காவது வருத்தம் தெரிவித்ததும் இல்லை. இடங்களைக் கொடுக்க மறுத்து மாநாட்டைக் குழப்பியடித்து சிறிமாவோ அரசின் தமிழினக் கொலைக்கு உடந்தையாக இருந்த துறையப்பாவின் வம்சத்துக்கான நன்றிக்கடனோடு, தமக்கான வெள்ளையடிப்பையும் சிறிலங்காக் காட்டுமிராண்டிக் காவல்துறை மேலிடம் செய்கிறது. அண்மையில் வட்டுக்கோட்டைப் பகுதியிலே விசாரணைக்கென அழைத்துச் சென்று காவாலித்துறைக் காவலில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி யாழிலும் இடம்பெற்றதாக நினைவு. ஒருவேளை இந்தக் படுகொலைகளை அறியாதவர்களுக்காக, ஏனென்றால் யாழ்பாணத்தில் அப்படியொரு படுகொலை நடந்ததா என்ற வினா எழும்பினாலும் ஆச்சரியப்படமுடியாதுபோல் தெரிகிறது. 1974.01.10 அன்று தமிழாராய்ச்சி மாநாட்டின்போது படுகொலைசெய்யப்பட்டோர்: 01) வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15 – மாணவன்) 02) பரம்சோதி சரவணபவன் (வயது 26) 03) வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32) 04) ஜோன்பிடலிஸ் சிக்மறிலிங்கம் (வயது 52 – ஆசிரியர்) 05) புலேந்திரன் அருளப்பு (வயது 53) 06) இராசதுரை சிவானந்தம் (வயது 21 – மாணவன்) 08) இராஜன் தேவரட்ணம் (வயது 26) 09) சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56 – ஆயுள்வேத வைத்தியர்) 10) சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14 – மாணவன்) ஆகியோர் உள்ளடங்கலாகப் பதினொரு பேர் கொல்லப்பட்டுள்ளனர். படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என்பது கவனத்திற்குரியது. படுகொலைக்குத் தலைமைதாங்கிய சிங்கள அதிகாரி, மேலதிகாரியாக அப்போதைய பிரதமாரான சிறீமாவோவால்(சிறிலங்கா சுதந்திரக் கட்சி) பதவி உயர்த்தப்பட்டார் போன்ற சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டதே சிறிலங்கா அரசும் அதன் காவல்துறையும் என்பதைத் தமிழினம் அறிந்ததே. இன்னுமொரு உண்மை தெரிந்தாகணும், அதாவது இவரது குடும்பத்தினர் 1974இல் ஏன் கொழும்பில் இருந்து அகதியாப் போனது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. யப்பானியர்களின் நீண்ட ஆரோக்கியமான ஆயுளுக்கான காரணங்கள்
  12. திருவேட்கை by ப.தெய்வீகன் 01 லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான். வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து வாங்கினார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட நூலால் நெய்யப்பட்டதைப் போன்று சிலர் உளம் கனிந்து ஆனந்தப் பெருக்கு அடைந்தனர். கரோலினாவின் கைகளைப் பிடித்தபடி, கைக்குட்டைகளையும் அங்கே கூடியிருந்தவர்களையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அல்பேர்ட். வீட்டில் தகப்பனும் தாயும் வைத்திருந்த கைக்குட்டைகளை, அல்பேர்ட் ஒருபோதும் தொட்டறிந்ததில்லை. தந்தை மோர்கனின் கைக்குட்டையை எடுத்துப் பார்ப்பதற்கே அல்பேர்ட்டுக்குத் துணிவிருக்கவில்லை. ஒருநாளிரவு குளிர் மிகுந்திருந்தது. தணலடுப்பில் குளிர்காய்ந்தபடி புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த தாயிடம் அல்பேர்ட் கேட்டான். “அம்மா எனக்குமொரு கைக்குட்டை வேண்டும்” “என் வைரமே! கைக்குட்டையானது உனது பெருமைகளில் ஒன்று. நீ அடைய விரும்பும் உன்னதங்களில் முதன்மையானது. அதனை அணிந்து கொள்ள ஒரு மொழியிருக்கிறது. அது உன் வசப்படும் நாள் வரைக்கும் காத்திரு. இதன் மகத்துவம் இப்போதுனக்குப் புரியாது. அப்பாவும் நானும் அழகான கைக்குட்டையொன்றை உனக்குப் பரிசளிப்போம். அது வரை காத்திரு” என்றாள். ஆனால், இன்று கரோலினாவுடன் சந்தையில் நின்று கொண்டிருந்த அல்பேர்ட்டிற்கு வண்ணமான கைக்குட்டைகளையும், அதனை வாங்கி களிப்புறும் மக்கள் திரளையும் கண்டு மூச்சு வேகமானது. “என்னால் பெற இயலாத ஒன்றா இது?” என்ற கேள்வி எழுந்தது அவனுக்கு. அவனுக்குள் ஒரு தீ மழை இறங்கிற்று. தன்னுடைய சிறகுகளை விரித்துத் தாழப்ப றந்திறங்கும் கழுகின் மூர்க்கம் அவனுக்குள் அலகு தீட்டியது. வட்டத் தொப்பியணிந்து கைக்குட்டையை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த வயோதிகனை இலக்கு வைத்தான். அவருடைய கையிலிருந்த கைக்குட்டையைப் பறித்துக் கொண்டு உயரப் பறக்கும் வேகத்தோடு ஓடி மறைந்தான். தன் குஞ்சைப் பறிகொடுத்த திகைப்போடு கழுகை விரட்டுபவளைப் போலவே கரோலினா, அல்பேர்ட்டை துரத்தினாள். “அல்பேர்ட் அல்பேர்ட்… ஓடாதே நில்லு” வீதியின் குறுக்காய் பாய்ந்து வந்த குதிரை வண்டியில் மோதி இடறி விழுந்தான் அல்பேர்ட். கரோலினா ஓடிச் சென்று அவனைத் தாங்கிப் பிடித்தாள். இருவரின் மூச்சிரைப்பும் வீதியில் கூடி நின்றவர்களை நோக்கி குற்றத்தால் அதிகரித்தது. அல்பேர்ட் தாழ்த்திய தனது முகத்தை நிமிர்த்தாமல் பூமியையே பார்த்தான். அதிவேகமாக வந்த கைக்குட்டை கடைக்காரன் கரோலினாவை முதுகில் உதைத்து விழுத்தினான். அல்பேர்ட் விசுக்கென ஓடித் தப்பித்தான். கரோலினாவும் கைக்குட்டையும் வீதியில் பேசு பொருளாகின. இரண்டு போலீஸார் கூட்டத்தை விலத்திக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். இரண்டு நாட்களிலேயே வோர்விக் நீதிமன்றத்தில் கைக்குட்டை திருடிய குற்றவாளியென கரோலினாவுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்வ வல்லமைகளாலும் தனது மகனைக் காப்பாற்றிய மோர்கன் குடும்பம் வோர்விக் நகரைவிட்டு வெளியேறினார்கள். குற்றத்தின் வேதனையில் நெளிந்தபடி அல்பேர்ட் தாயிடம் சொன்னான். “அம்மா, கைக்குட்டையைத் திருடியது நான்தான். இவர்கள் ஏன் கரோலினாவை தண்டிக்கிறார்கள்?” சுவாசத்தில் வெக்கையும் அவமானமும் இருந்தது. பிளவுண்ட தன்னுடைய சொற்களை நடுங்காமல் தொகுத்து, ஒரு சூரியோதம் போல புன்னகையோடு அல்பேர்ட்டின் தாய் சொன்னாள். “அவர்கள் ஏழைகள். தண்டிக்கப்படுவதற்காகவே பூமிக்கு வருகிறார்கள். நீ அவர்களைப் பற்றி கவலை கொள்ளாதே” அல்பேர்ட் தனது கண்களைத் தடாலென மூடிக் கொண்டு “கரோலினா என்னை மன்னித்துக் கொள்” என்றான். லண்டன் நீதிமன்றத்தில் ஐந்து வருடங்களுக்கு அதிகமாகச் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் தனது காலனித்து நாடான ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு முடிக்குரிய பிரித்தானிய அரசு தீர்மானித்தது. கரோலினாவும் அவளது ஒரே மகனுமான டேவிட்டும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார்கள். அழுகையை உண்டாக்கும் திகிலோடு காற்று மூச்சு வாங்கி பறந்து போனது. ஆயிரத்து நாநூற்றி எழுபத்து ஆறாம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்தாறாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மழையும் காற்றும் மிரட்டியது. ஆனாலும் குற்றவாளிகளைக் கப்பலில் அனுப்பும் முடிவில் பிரித்தானியா தாமதிக்கவில்லை. கடலில் விழுந்து அழுகினாலும் கவலையில்லையென அதிகாரிகள் அறிவித்தனர். கைக்குட்டை திருடிய குற்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட நூறுபேர் உட்பட நூற்று நாற்பது குற்றவாளிகளுடன் “பிறின்ஸ் ஒவ் ஹம்ஷயர்” கப்பல் புறப்பட்டது. கரோலினா டேவிட்டை அணைத்து வைத்தபடி அமர்ந்திருந்தாள். விரிந்த கடலில் விழும் மானுடர் கண்ணீர் தனித்த கழிவு. 02 ஆஸ்திரேலியாவின் வன் டீமன் தீவுக் கரையைக் கப்பல் வந்தடைந்தது. கைதிகள் இறக்கப்பட்டார்கள். அந்நியத்தின் காற்று முகம் மோத கரோலினா மகனைத் தூக்கி வைத்திருந்தாள். குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படும் அநீதியின் துறைமுகமென காணும் வெளிமுழுதும் நீண்டிருந்தது. கரோலினாவின் கண்ணீர் கனத்து விழுந்த கப்பல் அலைகளில் நிதானமற்று ஆடியது. நீதியின் உப்பு பூமியில் மிஞ்சுமென்று அவளால் நம்ப முடியாமலிருந்தது. ஈரக்காடுகள் சூழ்ந்த மலையுச்சியில் உறைந்து கிடந்த சிறை. நூற்றுக்கணக்கான பெண் சிறைவாசிகளோடு அடைக்கப்பட்டாள். குழந்தைகளைப் பராமரிப்பதற்குப் பிரத்தியேக இடம். சுண்ணாம்பு சுவர்களாலான நீண்ட மண்டபத்தில் ஆடைகள் தயாரிக்கும் முழு நேர வேலை. ஏழு வருட தண்டனையை ஒவ்வொரு நாளாக எண்ணத் தொடங்கினாள் கரோலினா. பணியிடத்தில் அழுது அரற்றுபவர்களின் மேனியைச் சிறையதிகாரிகளின் கசையடிகள் ரத்தம் பார்த்தன. சிலர் மாதக் கணக்கில் இருட்டறையில் வீசப்பட்டார்கள். நீண்ட வெள்ளை துணிகளைத் தொட்டிகளில் முக்கியெடுத்து, சாயம் பூசுகின்ற வேலையைப் பார்த்து வந்தாள் கரோலினா. இழந்த வாழ்வின் வண்ணங்கள் எல்லாமும் கரைந்து போனதெனும் துயர் நுரைக்க கதறி அழுவாள். லண்டனில் கைக்குட்டை கடைக்காரன் தரையில் அழுத்தி விளாசிய அவமானச் சீழ் கொதித்து வலித்தது. தண்ணீர் கொண்டு வந்த வாகனத்துக்குள் பதுங்கி சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட பெண் கைதிகள் எல்லோர் முன்னிலையிலும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். டேவிட்டை அணைத்த கரோலினாவின் கைகள் அச்சத்தில் நடுங்கின. நெஞ்சு அதிர்ந்தது. குற்றமே செய்யாமல், தண்டனைக்குள் தலை கவிழ்த்துக் கிடக்கின்ற பாரம். தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தாய்மையின் தவிப்பு ஓலமாய் அவளுக்குள் எரிந்தது. ஐந்து வருட சிறைத்தண்டனை பூர்த்தியானவர்களில் நன்நடத்தையின் அடிப்படையில் சிலர் விடுதலை செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் அவர்கள் விரும்பிய தொழிலைச் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கரோலினாவும் டேவிட்டும் விடுதலையாகியும் கொஞ்ச நேரம் சிறையின் முன்பாக அமர்ந்திருந்தனர். அவள் டேவிட்டின் மடியில் தலை வைத்து, வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணீர் பெருக்கில் அவனது கால்களை நனைத்தாள். “அம்மா, நாம் இப்போது குற்றமற்றவர்களா?” “டேவிட், எப்போதுமே குற்றமற்றவர்கள் நாம். ஆனாலும் எப்போதும் தண்டிக்கப்படுவோம்” என்றாள். “ஏனம்மா?” “பூமியில் நாதியற்றவர்களை இப்படித்தான் பாலைப் புழுதி மூடும்” என்றாள். டேவிட் கரோலினாவை முத்தமிட்டான். “பூமி நமக்கெனப் படைத்த குடிசையொன்றும் குற்றமற்ற சூரியனும் இங்கு இருக்கும். எழுந்து செல்வோம்” என்றான். 03 லீட் பகுதியில் குடியேறினார்கள். அருகிலிருந்த கிராமத்துப் பாடசாலைக்கு டேவிட்டை அனுப்பினாள். அங்கேயே ஒரு சிற்றுண்டியகத்தை வைத்துக் கொண்டாள். எல்லா விதமான பலகாரங்களையும் விற்று வருவாயை ஈட்டினாள். ஒரு நாள் அதிகாலையில் சமையல் கட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கரோலினா மயக்கமாகி சரிந்தாள். பாத்திரங்களின் சத்தம் கேட்டு உறக்கம் விழித்த டேவிட் தாயின் மூச்சற்ற உடலைக் கட்டியணைத்தான். அவளது கால்களைத் தொட்டு அம்மாவென்று கதறினான். பூமி நன்றாக விடியும் வரை தாயின் கைகளைப் பற்றி வெறித்துக் கொண்டிருந்தான். குற்றமற்ற சூரியன் எழுந்து குடிலினுள்ளே ஒளி புகுந்தது. தாயின் பெருந்துயர் அவனுள் தகித்துக் குழம்பென உருப்பெருத்தது. நீதியால் வஞ்சிக்கப்பட்ட இனிமையான வாழ்வை இனி எவராலும் தர முடியாதென உணர்ந்தான். திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்ட தனது தாயின் அழிவிற்கு அவன் பதில் சொல்ல விரும்பினான். படிப்பை நிறுத்தினான். சிற்றுண்டியகத்தில் முழு கவனத்தையும் செலுத்தினான். முன்பிலும் பார்க்க பலர் உணவருந்த வந்தார்கள். தன்னிடம் ரொட்டியும் தயிர்க்கட்டியும் வாங்கும் அனைவருக்கும் இலவசமாக ஒரு கைக்குட்டையைக் கொடுக்கத் தொடங்கினான் டேவிட். தாயின் வாழ்விலிருந்து உதிர்ந்த வண்ணங்களை, ஒவ்வொரு கைக்குட்டைகளிலும் கோர்த்தெடுத்தான். இரவில் பல மணி நேரம் விழித்திருந்து கைக்குட்டைகளை உருவாக்கினான். அதன் பிறகு, காலையில் ரொட்டி செய்ய வேண்டிய மாவைப் பிசைந்து வைத்துவிட்டு, படுக்கைக்குப் போனான். டேவிட்டின் ரொட்டியைவிட, லீட் பகுதியெங்கும் அவனது கைக்குட்டையே பிரபலமானது. இலவச கைக்குட்டை பற்றிக் கேட்டவர்களிடம் தனது தாய்க்கு நேர்ந்தவற்றைச் சொன்னான். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிப் பெண்ணைப் பிரித்தானிய நீதிமன்றம் எவ்வாறு கடூழியச் சிறைக்குத் தள்ளியதென்ற சரித்திரம் லீட் பிரதேசத்தில் அனைவரிடமும் பரவியது. பாடசாலையிலுள்ளவர்கள் டேவிட்டின் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக வருத்தம் தெரிவித்தார்கள். நீண்ட இரவுகளாய் தனித்திருந்து துயரத்தின் துணியால் அவன் கைக்குட்டைகளைச் செய்தான். “ உன்னுடைய அம்மாவின் பொருட்டு நீ கைக்குட்டைகளை வழங்கியது போதும்” என்றனர். “நான் கைக்குட்டையை உங்களிடம் தருவதாக நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நான் அளிப்பது, நீதியின் கறையால் அழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையை, அவளது மேன்மையைக் கருக்கிய ரத்தம் உலராத கொடுமையின் நான்கு மூலை கொண்ட நினைவுச் சின்னத்தை” டேவிட் சொன்னான். 04 இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டு இயேசு பாலன் பிறந்த அன்றைக்குத் தேவாலயம் ஒன்றின் முன்பாக டேவிட்டின் சந்ததிப் பேத்தியான மிஷேல் கைக்குட்டையை எல்லோருக்கும் வழங்கினாள். அவளுக்கும் எனக்குமிடையே காதல் உண்டானமைக்குப் பெரிய காரணங்கள் எதுவுமில்லை. அவளுடைய மூதாதையர்களைப் போல நானும் ஆஸ்திரேலியாவுக்குக் கடல் வழியாக வந்தவன். சொந்த மண்ணில் யுத்தத்தினால் கசக்கி வீசப்பட்ட கைக்குட்டைகளைப் போல குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டார்கள். கரோலினாவைத் திருடியென வீதியில் அறைந்ததைப் போல, எங்களைத் தமிழர்கள் என்று கொன்று குவித்த தீவிலிருந்து வந்தடைந்தேன். மிஷேலும் நானும் முதன் முறையாகக் கலவியில் முயங்கி மீந்திருந்தபோது, அவள் சொன்னாள். “நானும் நீயும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும்போது பூமிக்கு நீதி திரும்பிவிடும்” “அப்படியான எந்த அசட்டு நம்பிக்கையும் எனக்கில்லை மிஷேல். பூமிக்கும் நீதிக்குமிடையே பெரும்பாழ் தோன்றிவிட்டது” என்றேன். “தளராதே, இந்தப் பூமிக்கு எங்கள் கைக்குட்டை நீதியை அழைத்து வரும் திலீபா. நான் கைக்குட்டையைக் கையளிப்பது போல, எனக்கு நீ குழந்தையை அளிக்க வேண்டும்” “மிஷேல். நீ என்ன சொல்ல வருகிறாய்” “நீ ஆயுதங்களாலும், கொடூர வஞ்சகங்களாலும் அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மிச்சம். கொல்லப்பட்ட குழந்தைகள். நாங்கள் கையளிக்கும் கைக்குட்டைகள் போல. இந்தப் பிரபஞ்சம் முழுதும் புலம்பெயரும் பறவைகள் கிளைகளில் அமர்ந்து பறப்பதைப் போல, ஆசுவாசம் கொள்ள எம்மிடமிருப்பது நினைவுகள் மட்டும் தான்” “எமக்குப் பிறக்கப் போகும் குழந்தை எப்படி நினைவாக இருக்கும்” “இருக்கும். நினைவு என்பது இறந்த காலத்தில் உறைந்தது மட்டுமல்ல. நிகழ்வதும் தான். நாம் வழங்கும் கைக்குட்டை நினைவா? நிகழ்வா? நீயே சொல்” அவளை இறுக அணைத்து முத்தமிட்டுச் சொன்னேன். “பூமிக்கு நீதி திரும்பிவிடும் மிஷேல். உன்னுடைய முப்பாட்டன் டேவிட் பிறந்ததும், அவனை நல்லூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்வோம்” “ஆனாலொன்று திலீபா. அவனை நாம் கடல் வழியாக அழைத்துச் செல்ல வேண்டும். சமுத்திரம் முழுதும் கைக்குட்டைகளை நிறைக்க வேண்டும்” என்றாள். “இங்கிருந்து போவதற்குச் சாத்தியமில்லை. அங்கிருந்து வேண்டுமானால் கடல் வழியாக வந்துவிடலாம்” “அது எப்படி” “அகதிகள் வருவார்கள் அல்லவா” கடல் முழுதும் அகதிகள் படகுகளில் கையசைத்து ஆஸ்திரேயாவின் கடற்கரையில் கரையொதுங்கினார்கள். மிஷேல் சொன்னாள் “ அவன் வந்திறங்கியிருப்பான். வா சென்று பார்க்கலாம்” “ஆர்?” “எங்களுடைய பிள்ளை” என்று சொல்லி கட்டி அணைத்தாள். எனக்குள் ஒரு கடல் அந்தியொளியில் அலையற்று அசைந்தது. https://vallinam.com.my/version2/?p=9442
  13. வணக்கம்...உறவுகளே. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.... இலங்கைப் பொலிசுக்கோ,ஆமிக்கோ ,ஏன் சனதிபதிக்குக்கூட .. வேலையில்லை என்றுதான் கருதவேண்டிக்கிடக்கு....தமிழகத்தில் சிறுவர் பாட்டுப்போட்டியில் வென்ற கில்மிச்சவுக்கும்,வெல்லாத அசானிக்குமே...கேடயம் கொடுக்கிற நிலமையில் நாடு இருக்குது..சனாதிபதி போன் எடுத்து வாழ்த்திகிறார்...இப்படியிருக்க ஒரு நகரசபை பொலிசு அதிகாரி ...நாட்டிற்குப் போனால் என்ன செய்வினம்....அவர் சொந்தலீவிலை போனாரோ,சொந்தங்களை பார்க்கப் போனாரோ தெரியாது...எப்படா...எங்கை யாரைபிடித்து எம்மை தூயவனாக்குவம் என்று திரயிறவைக்கு ...கனடா பொலிசு மாட்டிவிட்டார்...இந்த கேடையம் கொடுத்த தென்னக்கோனே ..அங்கு நடைபெற்ற சர்ச் தாக்குதலில் குற்றவாளீ...றணிலின் தயவால் ஒரு வருசத்துகு வேலை கிடைச்சிருக்கு...இப்போது அங்கு அரசியல் வறுமை ...அதற் குப் பிச்சைபோட ..தமிழர்தான் வேணும்...அங்கை போற எந்த தமிழனுக்கும் ஆலவட்டம் வீசுவினம்...இப்ப அது தொடர் கதை..அதை யாழில் லென்ஸ் வைத்துக் .. காட்டுகினம்
  14. ஒரு பச்சை மிளகாய் இரண்டாயிரம் ரூவாய் வித்தாலும் எங்கடை வீரன்கள் தோட்டப்பக்கம் போகான்கள். ஒன்லி கனடா இல்லாட்டி லண்டன் பக்கம் தான் அம்புக்குறி போட்டு வைச்சிருக்கிறாங்கள்.🤣 சில்லெடுத்த சின்னையா ஆதங்கம் 😎
  15. துரையப்பா அரசியல் ரீதியாக தமிழரசு கட்சிக்கு சவால், அதை அகற்ற பாவிக்கப்பட்டதுதான் துரோகி பட்டம். ஈழ தமிழர் அகராதியில் இருக்கும் அருவருக்கதக்க சொல் "துரோகி".
  16. யாழ்கள உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
  17. யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் 2024 ம் ஆண்டு இனிய புதுவருட வாழ்த்துக்கள்........! 💐
  18. எனக்குத்தெரிய - நீங்கள் மேலே சொன்ன எந்த இனமும்….இன்னொரு இனத்தின் பண்பாட்டு கூறை வெறுத்தொதுக்குவதில்லை. பிரான்சில், சர்வசாதாரணமாக அமேரிக்க பண்பாட்டை காணலாம். இங்கிலாந்தில் ஒரு ஆங்கில திருமணத்தில் இத்தாலிய உணவை பரிமாறினால் - யாரும்….ஐயோ எங்கே மீனும் கிழங்கும் என கூப்பாடு போடுவதில்லை. சீனர்கள் இங்கிலாந்து கலாச்சாரத்தை அப்படி நேசிப்பார்கள். வெள்ளி கிழமைகளில் going for a curry என்பது கிட்டதட்ட இங்கிலாந்தின் கலாச்சாரமாகி விட்டது. அதேபோல் chicken tikka எண்டு ஒரு புதிய கறி வகையையே இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர். டோனர் கெபாப் என புதிய வகை கெபாப் துருக்கியரால் ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது. உலகம் எங்கும், எப்போதும் இதுதான் வரலாறு போகும் பாதை. உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.
  19. நானும் கனடாவில் இருப்பதனால்..2 உதாரணம் சொல்கின்றேன்..எனதுவீட்டு முற்றத்தில் நின்ற வாகனத்தின் பிற்பக்கத்தில் யாரோ இடித்து பாரிய சேதம்…என்னவென்று தெரியவில்லை…பொலிசுக்கு அறிவித்து ..இரு ஆபிசர்ஸ் வந்தினம் ..மிக இள ம் பையன்கள்.. ஒருவர் தமிழ்..இன்னொருவர் பாகிஸ்தான்….இவையை கண்டவுடன் ..அதிர்ச்சி..அந்த நம்ம அதிகாரி மகனின் வகுப்புத் தோழன் ..அத்துடன் எமதுவீட்டில் பிரத்தியோக பாடம் படித்த மாணவனும்…அப்ப நானும் மனுசியும் ..எமக்கு நீதி கிடைத்துவிட்டதுபோல் …மள மள என்றூ கொட்டித்தீர்த்தம்…எல்லாவற்றையு பொறுமையாக கேட்டுவிட்டு …அன்ரி..அங்கிள்..இதுவாகனம் சடுதியாக திருப்பும்போது ஏற்பட்ட அடி..நீங்கள் என்னதான் …ஆதாரங்கள் சொன்னாலும்..அதனை நாமும் எமது சட்டமும்தான் ..முடிவு செய்யும்…தனிப்பட்ட முறையில் என்னால் எதுவும் எதுவும் செய்ய முடியாது… இப்படித்தான்..சிறீலன்க சென்ற நம்ம அதிகாரியிடம் ..தென்னக்கோன் கொட்டித் தீர்த்திருப்பாரு.. குளிரவக்க கேடயமும் கொடுத்திருப்பார் அதிகாரி தம்முடைய நிலையைச் சொன்னாலும் இதை கீழிருந்துபார்த்த சிங்களப் பத்திரிகைக்காரரும் ..தம்முடைய கற்பனைக்கு எழுதிகிழித்திருப்பினம்..அதை அப்படியே ..யாழில் உள்ள சிரீலன்கா நலன்விரும்பிகள்… ..சீனாவும் தானாவும் ஒன்றாயிட்டினம் என்று பீத்துகினம் ஒருநண்பருக்கு ஏற்பட்டது…குடும்பத்தகராறு…பொலிசுவரை சென்று…கோட்சுவரை போயாச்சு.. லாயரை வைச்சாச்சு…..லாயர் யாரென்றால்..மகனுடன் படித்தவர்…நம்ம வீட்டிலும் வந்து படித்தவர்…அப்ப அந்த நண்பர் சார்பாக ..லாயரிடம் நானும் மனைவியும்… நண்பபரின் இக்கட்டான சூழ்நிலை பற்றி எடுத்துரைத்தோம்..அன்பாக கேட்ட லாயர்தம்பி….சொன்னது ..சூழ்நிலை விளங்குது..ஆனால் சட்டம் இடம்தராது….இப்படித்தான் .. நம்ம ஆபிசரும் எல்லாவற்றையும் உன்னிப்பாக கேட்டிருப்பாரு…ஆனல் கனடாவில் சட்டத்தை மீறமுடியாதே…ஆனால் யாழில் பக்க வாத்தியாகாரர் தமக்கேற்றவாறு தாளத்தை மாற்றி…லங்கா மாதாவுக்கு…ஜெயவேவா போடவைப்பினம்
  20. இனவாத சிங்களச் சிறிலங்காவுக்கு தன்ரை நாட்டு பிரச்சனையை தானே தீர்க்க வக்கில்லை. இந்த திறத்திலை....... துரையப்பாவின்ரை பேரன் கேக்குதோ´?
  21. இனித்தான் இப்படியெல்லாம் சாப்பிட முயற்சிக்க வேண்டும்.......ஆனால் வாராவாரம் ஏதாவது விழாக்கள், வைபவங்கள் வந்து உணவுப் பழக்க வழக்கங்களை தூக்கிச் சாப்பிட்டுட்டுப் போயிடுது......! 😂 பகிர்வுக்கு நன்றி நுணா......!
  22. நல்லதொரு கதை. நன்றி கிருபன்
  23. சமூக ஊடகங்கள் எங்கும்.. முழுக்க ஆபாசப் படங்களும்.. தனிநபர் ஆபாசச் சுருள்களும் பெருகிவிட்டன. பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே.. இப்ப சிமாட் போன் வழியாக.. காட்ட வேண்டியவையை காட்டி..பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற.. அவையோ.. சில நிமிடங்களில்.. பல ஆயிரம் பார்வைகளை தாண்ட.. பிரசித்தமுன்னு ஏ ஐ முன்னுக்குத் தள்ளுகின்றன. அதுபோக..சமூக வலை தளங்களின் ஊடாக.. இந்த பிசினஸ் இப்ப கொடிகட்டிப் பறப்பதாகக் கேள்வி. என்ன பள்ளிப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் தான்.. முன்னர் ஒரு ஏ படம் பார்ப்பதற்கே.. சமூகம் குளறியடிக்கும்.. அதில் நன்மைகளும் உண்டு. அறியா வயதில் தவறான வழியில் செல்வதை தடுப்பதாக அமைந்தாலும்.. இன்று ஒரு பாதுகாப்பும் இல்லை. எல்லாம் கையில் கிடக்குது. போனை வைச்சு என்னத்தை நோட்டுறாய்ங்கன்னு.. யார் கண்காணிக்க முடியும். இப்ப ஆபாசப்படங்களை அவரவர் விருப்பப்படி தானே எடுத்து சமூக வலையில் தரவேற்றினம். இதில.. இவை என்னடான்னா...???! இயன்றவரை.. சமூக வலையில்..நாம் காண நேரிடுபவையை.. எல்லாம் பிளாக் செய்தும் ரிப்போட் செய்தும்.. வருகிறோம். இப்படி.. எல்லாரும் செய்தால் அன்றி.. இதை தடுப்பது இலகு அல்ல. சமூக வலை ஊடகங்கள் குப்பையாகிவிட்டன. இப்ப எல்லாம் ஆன்டிங்க.. சமையல் சமைக்கிறாய்ங்களோ இல்லையோ.. ஆடையை கண்ணாடியா போட்டிட்டு வந்துடுறாய்ங்க. இதில.. கண் பகலாபாத் கிண்டு வதையா கவனிக்கும்..??!🤣
  24. கிறீன் ரீ… வெள்ளைகளின் கொக்ககோலபோல யப்பானிஸ் ரெஸ்ரொரன்ற்களில் கிரீன் ரீ இருக்கும்.. கொட் or கோல்ட் எந்த வடிவத்திலும் இருக்கும்.. அங்கிருக்கும் அனைத்து சொப்ற் ரிங்க்ஸ்களும் கிரீன் ரீயை based பண்ணியே இருக்கும்..
  25. இது மிகவும் அபந்தமான குற்றச்சாட்டு. யாரும் அந்த கனடிய பொலிஸ் நபரை... துரோகி என்று சொல்லவில்லை. மேலும்.. குறித்த நபர் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐநாவால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிங்கள அரச பயங்கரவாதக் கட்டமைப்பாகச் செயற்பட்ட சொறீலங்கா பொலிசுக்கு.. ஒரேயடியாக அடிக்க முயலும் வெள்ளைடிப்புக்கும்... அதுவும் மிகவும் முன்னேற்றகரமான பொலிஸ்துறை என்று அடித்து விட்டு புகழ் தேடிக் கொள்ள முனைவதுமே இப்போதைக்கு.. கண்டிக்கப்படுகிறது. அதுவும் கனடா போன்ற உச்ச மனித உரிமைகளை மக்கள் உரிமைகளை பாதுகாக்கக் கோரும் பொலிஸ்துறையில் இருந்து கொண்டு வாய் கூசாமல் சொல்லும் போலிப் புகழ்ச்சி.. சொறீலங்கா பொலிஸை தவறாக வழிநடத்துவதோடு.. அது மேற்கொண்ட கொள்ளும் மனித இன விரோதச் செயற்பாடுகளை இன்னும் பலமாகத் தொடரவே வழி செய்யும். இதுதான் கனடா பொலிஸ் காட்டும் பாதை என்றால்.. கனடா பொலிஸை இனங்காட்டியமைக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். மற்றும்படி.. இவரை துரோகி என்பதால்.. மட்டும் சிங்களம் இவரை போலிப் புகழ்ந்து.. தன் வசப்படுத்தனும் எனறில்லை. சுயநலமிக்க.. எத்தனயோ.. தமிழர்கள்.. சந்தர்ப்பத்திற்காக சிங்களத்தின் காலடியில் வீழ காத்துக்கிடக்கிறார்கள். அந்த நாய் வாலுகளை.. எது கொண்டும் நிமிர்த்த முடியாது. என்ன தான் சனாதன தர்மம் போதித்தாலும்.
  26. இல்லையே.. சொறீலங்கா பொலிஸை சுத்தமென்றெல்லோ சொல்லி இருக்குது. உண்மையான ஒரு பொலிஸ் அதிகாரின்னா.. தனது நாட்டில் உள்ள பொலிஸ் விசேடங்களைச் சொல்லி.. அதனை உதாரணமாக்கி.. சொறீலங்கா பொலிஸ் துறை முன்னேற்றகரமாகவும்.. மனித உரிமைகளுக்கு.. மக்களின் உரிமைகளுக்கு கூடிய மதிப்பளித்தும் செயற்பட வேண்டும் என்று சொல்லி இருக்கனும். ஏனெனில்.. சர்வதேச அளவில் சொறீலங்கா பொலிஸ்படைக்கு எதிராக பல மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்களோடு.. போர்க்குற்றச் சாட்டும் உள்ளது. அப்படி இருக்க..?????!
  27. அப்போ.. துரையப்பா.. தமிழரசுக் கட்சிக்கு எதிராகத்தான் செயற்பட்டார். ஏனெனில்.. சொறீலங்கா சுதந்திரக் கட்சி ஆளாக. உரிமை கோரிய தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல...??! அப்போ துரையப்பாவுக்கு.. உலகத் தமிழாராட்ச்சி மாநாட்டில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு.. காரணம்.. தமிழரசுக் கட்சி..???! துரோகி என்ற பதம் எல்லா நாடுகளினதும் வரலாற்றில் உள்ளது. துரோகத்தின் பெயரால்.. பிரித்தானிய முடிக்குரியவர்களை போட்டுத் தள்ளின வரலாறு கூட அவர்களின் வரலாற்றில் உண்டு. இப்படி எல்லா நாடுகளிலும் இருக்குது. துரோகிகளை துரோகிகள் என்று இனங்காண்பதில் எந்தத் தவறும் கிடையாது. மாறாக துரோகங்களை மக்கள் இனங்காணவும் தடுக்கவும் அது உதவலாம். உங்களுக்கு ஒவ்வாது விடில்.. ஒதுங்கி இருக்க வேண்டுமே தவிர.. மக்களை அழிக்க முற்படக் கூடாது. துரையப்பா செய்தது சொந்த மக்களை அழித்து தன்னை தன் பதவியை காத்துக் கொள்ள முனைந்தது.
  28. இவர் காலத்தில் எங்கள் உறவினர்கள் உட்பட பலர் சொறீலங்கா பொலிஸ் சேவையில் இருந்து சுயமாக விலகிச் சென்றார்கள். சொறீலங்கா பொலிஸின் தமிழர் விரோத.. தமிழ் மக்களின் அரசியல் உரிமை கோரலை.. தவறாகக் கையாள ஆரம்பித்ததற்காக. ஆனால் அல்பிரட் துரையப்பா செய்தது... பேரினவாத.. அதிகார சிங்களத்தின் கட்டளைக்கு அமைய தமிழ் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. இப்ப புரியுதா.. மக்களின் தாகம் எது என்று அறியாதவன்.. எப்படி மக்களின் பிரதிநிதியாக இருக்கலாம். சொந்த மக்களின் மீது அக்கறை இருந்திருந்தால்.. ஒரு பொலிஸ் அதிகாரி தானாக பதவி விலகும் போது.. ஒரு மக்கள் பிரதிநிதி என்ன செய்திருக்க வேண்டும்..??! அந்த மக்களை அதே பொலிஸை ஏவி அடக்குவதா..???!
  29. The Joke Song by Brandi Carlile You're feeling nervous, aren't you, boy? With your quiet voice and impeccable style Don't ever let them steal your joy And your gentle ways To keep 'em from running wild They can kick dirt in your face Dress you down, and tell you that your place Is in the middle, when they hate the way you shine I see you tugging on your shirt Trying to hide inside of it And hide how much it hurts Let 'em laugh while they can Let 'em spin, let 'em scatter in the wind I have been to the movies, I've seen how it ends And the joke's on them You get discouraged, don't you, girl? It's your brother's world for a while longer We gotta dance with the devil on a river To beat the stream Call it living the dream, call it kicking the ladder They come to kick dirt in your face To call you weak and then displace you After carrying your baby on your back across the desert I saw your eyes behind your hair And you're looking tired, but you don't look scared Let 'em laugh while they can Let 'em spin, let 'em scatter in the wind I have been to the movies, I've seen how it ends And the joke's on them Let 'em laugh while they can Let 'em spin, let 'em scatter in the wind I have been to the movies, I've seen how it ends And the joke's on them Ooh, ooh, ooh, ooh Ooh, ooh, ooh, ooh Source: Musixmatch
  30. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .
  31. புதிய வரிகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்று பலரும் குழம்பி கொண்டு உள்ளார்கள் இந்தநேரத்தில் ஏன் இந்த அணில் ஏன் கோமணம் இல்லாமல் வடக்கு பக்கமாய் ஓடுது ?
  32. 2024 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! 🎉🎉
  33. கனடா நாட்டில் காவல் துறை உயர் பதவியில் இருக்கும் ரோஷான் துரையப்பாவுக்கு வாழ்த்துகள்.
  34. கள உறவுகள் யாவருக்கும் 2024 இனிய புது வருடமாய் அமைய வாழ்த்துக்கள்.
  35. கள உறவுகள் யாவருக்கும் 2024 இனிய புது வருடமாய் அமைய வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி மகிழ்வோடும் செல்வ வளமோடும் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
  36. பெற்றோல் டீசல் மண்ணெண்ணை போன்றவை விலை ஏறினால் சகலதும் விலை ஏறிப் போயிடுமே?
  37. இந்திய தீபகற்பத்தின் கிழக்குக்கரையில், வட-கிழக்கு பருவமழையை நம்பி பயிர் செய்யும் பல்வேறு பட்ட மக்கட் கூட்டங்களுக்கு ஒரே சமயத்தில் விளைச்சல் திருவிழா harvest festival வருவது அத்துணை ஆச்சரியமான விடயம் அல்லவே. அத்தோடு வானசாஸ்திரப்படியும் சூரியன் இடம்மாறும் நாள் இது. பல்வேறு ஐரோப்பிய குடிகள்கூட, summer solstice, winter solstice, harvest festival ஐ ஒன்றாக கொண்டாடுவதை காணலாம். மனித குலத்தின், கலாச்சாரத்தின், பண்பாட்டின் வரலாறு மிக சிக்கலானது. காலத்தின் படி மாறககூடியது. தொடர்பு வெளி, உள் ஆளுமைகளால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கும். களப்பிரர் காலத்துக்கு முந்திய தமிழர் பண்பாடு இப்போ இல்லை. அதை இப்போ கொண்டு வந்தால் யாழின் கலாச்சார காவலர்களுக்கு ஜன்னி கண்டு விடும்🤣. அதேபோல் இன்று எதை நாம் தமிழர் கலாச்சாரம் என கருதுகிறோமோ அது நாளை அப்படியே இருக்காது. எமது செண்டையை நாமே தொலைத்து விட்டு, இப்போ அது அந்நிய பண்பாடு என மாரடிக்க்கிறோம் - இதுவும் மேலே சொன்ன மாற்றத்தின் அங்கம்தான். இதை சொல்லியும் விளங்காவிடில் ஒரு விவேக் ஜோக்கை போட்டு கடந்து போகவேண்டியதே.
  38. கணேசதாசன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  39. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த அவைகளுக்குள் வாழ்ந்த காலங்களை இரைமீட்க முடிகின்றது.......! 👍 நன்றி கிருபன்......!
  40. சிறிய மாற்றங்கள் செய்த பின்னர் கடந்த சில தினங்களை விட நேற்று மாலையில் இருந்து பக்கங்களைத் திறக்க எடுக்கும் நேரம் குறைவாக இருக்கும்.
  41. உப்பிடி சொல்லி நம்பர் வாங்கி…. வென்ற ஆக்கள் கன பேர். சொன்ன காசை… தரச் சொல்லி கேட்டால் சண்டைக்கு வாறாங்கள். அதுக்குப் பிறகு…. முதல் காசு வேண்டாமல், ஒருத்தருக்கும் நம்பர் குடுக்குறதில்லை. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.