Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    53012
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3030
    Posts
  3. island

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1792
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33659
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/06/24 in all areas

  1. T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது! மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. T20 உலகக்கிண்ணத்தின் போட்டி அட்டவணையின்படி அமெரிக்காவின் 3 மைதானங்களிலும், மேற்கிந்திய தீவுகளின் 6 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி இலங்கை அணி D குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஜூன் 3ம் திகதி நியூ யோர்க்கில் எதிர்கொள்கின்றது. அதனைத்தொடர்ந்து ஜூன் 7ம் திகதி பங்களாதேஷ் அணியையும், ஜூன் 11ம் திகதி நேபாளம் அணியையும், ஜூன் 16ம் திகதி நெதர்லாந்து அணியையும் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது. மொத்தமாக விளையாடவுள்ள 20 அணிகளில் 10 அணிகள் முதல் 29 நாட்கள் அமெரிக்காவில் போட்டியிடுகின்றன. அதன் அடிப்படையில் 16 போட்டிகள் டளாஸ், லவுடர்ஹில் மற்றும் நியூ யோர்க் மைதானங்களில் நடைபெறவுள்ளன. இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நியூ யோர்க்கில் ஜூன் 9ம் திகதி நடைபெறவுள்ளது. அதேநேரம் மேற்கிந்திய தீவுகளின் ஆறு வெவ்வேறு மைதானங்களில் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் அரையிறுதிப்போட்டிகள் ட்ரினிடட் மற்றும் டொபேகோ மற்றும் கயானாவில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப்போட்டி ஜூன் 29ம் திகதி பார்படோஸில் நடைபெறவுள்ளது. போட்டி அட்டவணை ஜூன் 1– அமெரிக்கா எதிர் கனடா (டளாஸ்) ஜூன் 2 – மே.தீவுகள் எதிர் பப்புவா நியூ கினியா (கயானா) ஜூன் 2 – நமீபியா எதிர் ஓமான் (பார்படோஸ்) ஜூன் 3 – இலங்கை எதிர் தென்னாபிரிக்கா (நியூ யோர்க்) ஜூன் 3– ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா (கயானா) ஜூன் 4 – இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து (பார்படோஸ்) ஜூன் 4 – நெதர்லாந்து எதிர் நேபாளம் (டளாஸ்) ஜூன் 5 – இந்தியா எதிர் அயர்லாந்து (நியூ யோர்க்) ஜூன் 5 – பப்புவா நியூ கினியா எதிர் உகண்டா (கயானா) ஜூன் 5 – அவுஸ்திரேலியா எதிர் ஓமான் (பார்படோஸ்) ஜூன் 6 – அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் (டளாஸ்) ஜூன் 6 – நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து (டளாஸ்) ஜூன் 7 – கனடா எதிர் அயர்லாந்து (நியூ யோர்க்) ஜூன் 7– நியூசிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் (கயானா) ஜூன் 7 – இலங்கை எதிர் பங்களாதேஷ் (டளாஸ்) ஜூன் 8 – நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா (நியூ யோர்க்) ஜூன் 8 – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து (பார்படோஸ்) ஜூன் 8 – மே.தீவுகள் எதிர் உகண்டா (கயானா) ஜூன் 9 – இந்தியா எதிர் பாகிஸ்தான் (நியூ யோர்க்) ஜூன் 9 – ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து (ஆண்டிகா) ஜூன் 10 – தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் (நியூ யோர்க்) ஜூன் 11 – பாகிஸ்தான் எதிர் கனடா (நியூ யோர்க்) ஜூன் 11 – இலங்கை எதிர் நேபாளம் (ப்ளோரிடா) ஜூன் 11 – அவுஸ்திரேலியா எதிர் நமீபியா (ஆண்டிகா) ஜூன் 12 – அமெரிக்கா எதிர் இந்தியா (நியூ யோர்க்) ஜூன் 12 – மே.தீவுகள் எதிர் நியூசிலாந்து (ட்ரினிடட்) ஜூன் 13 – இங்கிலாந்து எதிர் ஓமான் (ஆண்டிகா) ஜூன் 13 – பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து (சென். வின்செண்ட்) ஜூன் 13 – ஆப்கானிஸ்தான் எதிர் பப்புவா நியூ கினியா (ட்ரினிடட்) ஜூன் 14 – அமெரிக்கா எதிர் அயர்லாந்து (ப்ளோரிடா) ஜூன் 14 – தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் (சென். வின்செண்ட்) ஜூன் 14 – நியூசிலாந்து எதிர் உகண்டா (ட்ரினிடட்) ஜூன் 15 – இந்தியா எதிர் கனடா (ப்ளோரிடா) ஜூன் 15 – நமீபியா எதிர் இங்கிலாந்து (ஆண்டிகா) ஜூன் 15 – அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து (சென்.லூசியா) ஜூன் 16 – பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து (ப்ளோரிடா) ஜூன் 16 – பங்களாதேஷ் எதிர் நேபாளம் (சென்.வின்செண்ட்) ஜூன் 16 – இலங்கை எதிர் நெதர்லாந்து (சென்.லூசியா) ஜூன் 17 – நியூசிலாந்து எதிர் பப்புவா நியூ கினியா (ட்ரினிடட்) ஜூன் 17 – மே.தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் (சென்.லூசியா) ஜூன் 19 – A2 v D1, ஆண்டிகா ஜூன் 19– B1 v C2, சென். லூசியா ஜூன் 20 – C1 v A1, பார்படோஸ் ஜூன் 20 – B2 v D2, ஆண்டிகா ஜூன் 21 – B1 v D1, சென். லூசியா ஜூன் 21 – A2 v C2, பார்படோஸ் ஜூன் 22 – A1 v D2, ஆண்டிகா ஜூன் 22 – C1 v B2, சென்.வின்செண்ட் ஜூன் 23 – A2 v B1, பார்படோஸ் ஜூன் 23 – C2 v D1, ஆண்டிகா ஜூன் 24 – B2 v A1, சென். லூசியா ஜூன் 24– C1 v D2, சென். வின்செண்ட் ஜூன் 26 – Semi-Final 1, கயானா ஜூன் 27 – Semi-Final 2, ட்ரினிடட் ஜூன் 29 – Final, பார்படோஸ் https://www.thepapare.com/fixtures-revealed-for-icc-mens-t20-world-cup-2024-tamil/
  2. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைக் குழிதோண்டிப் புதைத்தல் யாழ்ப்பாணத்தில் ஆடி 25 ஆம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் நடத்தப்பட்ட‌ சத்தியாக்கிரக நிகழ்வு பற்றிய செய்தி லேக் ஹவுஸ் நிறுவனத்திற்குக் கிடைத்தபோது அங்கிருந்தோர் அனைவரும் மிகவும் அகமகிழ்ந்தனர். பின்னர் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிக்கைகள் ஊடாக இச்செய்தி சிங்கள மக்களிடையே பரவியபோது அந்த மகிழ்ச்சி அவர்களையும் பற்றிக்கொண்டது. இச்செய்தி வெளிவந்தபோது வாராந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திற்காக தகவல்த் திணைக்களத்திற்குச் சென்றிருந்தேன். அமைச்சரவைப் பேச்சாளரும், அரசாங்க அமைச்சருமான ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் மிகுந்த அக்களிப்புடன் இச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார். "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் காலம் முடிவடைந்துவிட்டது" என்று அவர் கூறினார். "இந்தச் சூழ்நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது என்கிற கேள்வியும் எழுகிறது" என்று அவர் மேலும் கூறினார். டெயிலி நியூஸ் பத்திரிகைக்காக சத்தியாக்கிரகம் தொடர்பான செய்தியை நான் எழுதினேன். ஆனந்த திஸ்ஸ தி அல்விஸின் கேள்வியைத் தலைப்பாக இட்டு நான் எழுதிய கட்டுரையில் யாழ்ப்பாணத்திலிருந்து எமது நிருபர்கள் தொலைபேசியூடாக தொடர்ச்சியாக வழங்கிவந்த உடனடிச் செய்திகளையும் கோர்த்து எழுதினேன். "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாதை முடிந்துவிட்டது" என்கிற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. லலித் அதுலத் முதலி உடனடியாக செயலில் இறங்கினார். டெயிலி நியுஸ் மற்றும் சண் பத்திரிக்கைகளில் அவர் ஒரு செய்தியை விதைத்தார். " தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இனிமேல் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றுவதன் மூலம் என்ன பலன் இருக்கப்போகிறது என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பாத அரச தரப்புத் தகவல்கள் கருத்துத் தெரிவிக்கின்றன" என்பதே அவர் விதைத்த செய்தி. அப்படியானால், அவர்கள் யாரைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்? என்கிற கேள்வியையும் அச்செய்தி கேட்டிருந்தது. தலைப்புச் செய்தியாக தாம் இட்டதையே ஆசிரியர்த் தலையங்கமாகவும் சண், டெயிலிநியூஸ் உட்பட்ட ஆங்கில மற்றும் சிங்களப் பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன. இந்தச் செய்திகள், குறிப்புக்கள், தலையங்கங்கள் அனைத்தினதும் நோக்கம் ஒன்றுதான். அதுதான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினை குழி தோண்டிப் புதைத்து விடுவது. தமிழர்களே அக்கட்சியை நிராகரித்துவிட்டார்கள். சிங்கள மக்கள் அதனைத் தூக்கிச் சுமக்கவேண்டிய தேவை என்ன? ஆகவே புதைத்துவிடலாம் என்பதே அவர்களின் செய்தி. முன்னணியினரின் நம்பகத்தன்மையினைக் கேள்விகேட்கும் முடிவு ஜெயவர்த்தனவினாலேயே எடுக்கப்பட்டது. இந்த முடிவினை அவர் எடுப்பதற்கான காரணம் இந்தியாவும் சர்வதேசமும் முன்னணியினருடன் பேசுவதனூடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காணுமாறு அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்திருந்தன. மேலும், தில்லியில் செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பாடான இணைப்பு "சி" இற்கு அமைவாகவே தீர்வு அமையவேண்டும் என்று முன்னணியினரும் தொடர்ச்சியாக் கோரிவந்திருந்தனர். ஆனால், இணைப்பு "சி" இன் அடிப்படையில் ஓரளவிற்கேனும் அதிகாரங்களைத் தமிழர்களுக்கு வழங்குவதை அரசாங்கம் சிறிதும் விரும்பவில்லை. ஆகவேதான், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அரசாங்கம், முன்னணியினரைத் தமிழர்களே நிராகரித்து விட்டதனால், அவர்களுடன் தொடர்ந்து பேசுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது எனும் கேள்வியை முன்வைக்கத் தொடங்கியது. ஆனாலும், தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு யாருடன் அரசாங்கம் இனிமேல் பேசப்போகிறது எனும் கேள்வி தொடர்ந்தது. இதற்கான ஜெயவர்த்தனவின் பதில், "அர‌சாங்கம் யாருடனும் பேச வேண்டிய தேவையில்லை, எதற்காகப் பேசவேண்டும்?" என்பதாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் முன்னணியினரால் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வு தோல்வியில் முடிவடைந்தமை அக்கட்சியினைத் தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதனையே காட்டியது. மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யாமல், தம்மை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியோடு பேச்சுக்களில் ஈடுபடுவதில பயன் ஏதும் இருக்கப்போவதில்லை என்பது உண்மைதான். ஆனால், சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத இலட்சியமான ஈழம் எனும் தனிநாட்டிற்காகப் போராடிவரும் ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் பேசவேண்டிய தேவை இருக்கிறது. ஆனாலும், சுய கெளரவம் கொண்ட எந்த அரசும் பயங்கரவாதிகளுடன் பேசாது என்பதும் திண்ணம். அப்படியானால் நடக்கப்போவது என்ன? தமிழர்களுடன் சமரசப் பேச்சுக்களில் ஈடுபடுங்கள் என்று சர்வதேசம் கொடுத்துவரும் அழுத்தங்கள் இனிமேல் செயல் இழக்கப்போகின்றன. குறிப்பாக இந்தியாவினால் இராஜதந்திர ரீதியில் இதுவரை கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கான அடிப்படை இனிமேல் இருக்கப்போவதில்லை. அரசியல் ரீதியிலான இணக்கப்பாடு ஒன்றிற்கான அழுத்தங்கள் இனிமேல் இல்லாது போகுமிடத்து அரசாங்கம் செய்யவேண்டியதெல்லாம் தமிழர்களின் கவலைகளைப் போக்குவது மட்டும்தான் என்கிற ரீதியில் அரசதரப்பிலிருந்து நியாயங்கள் பேசப்பட்டு வந்தன. அதனையே ஜெயவர்த்தனவும் செய்ய முடிவெடுத்தார். மேலும், பயங்கரவாதத்தினை அழிக்கிறேன் என்கிற போர்வையில் தமிழரின் விடுதலைக்கான ஆயுத ரீதியிலான போராட்டத்தையும் முற்றாக தன்னால் அழித்துவிடமுடியும் என்றும் அவர் உறுதிபூண்டார். பேச்சுவார்த்தையிலிருந்து போர்க்களத்திற்கு களம் மாற்றப்பட்டிருப்பதற்கான நியாயப்படுத்தல்கள் இவ்வாறு அமைந்திருந்தன. பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த அரசியல் அமைப்பொன்றினை முற்றாக நிராகரித்திருக்கும் ஒரு சமூகத்துடன் எப்படி தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட‌ முடியும்? அச்சமூகம் ஜனநாயக அரசியலைக் கைவிட்டு போராளிகளுக்கு தமது விசுவாசத்தை தற்போது காட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், போராளிகளோ ஆயுதத்தின் மூலமாக மட்டுமே பேசலாம் என்கிற முடிவில் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுடன் ஆயுத மூலமாகப் பேசுவதைத் தவிர அரசாங்கமான எமக்கும் வேறு தெரிவுகள் இல்லை என்பதே அந்த நியாயப்படுத்தல்களின் சாராம்சம். ஜெயவர்த்தனவின் போருக்கான நியாயப்படுத்தலை அனைத்துச் சிங்கள ஊடகங்களும் பிரதிபலித்ததோடு அதற்கான முழு ஆதரவினையும் வழங்கத் தொடங்கின. ஆனால், ஒற்றைச் சிங்கள ஊடகவியலாளரான லங்கா கார்டியனின் மேர்வின் டி சில்வா மட்டும் இதனால் வரப்போகும் ஆபத்தினை உணர்ந்திருந்தார். தனது செய்தி ஆய்வில், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் புதைத்தது யார்?" என்கிற தலைப்பில் 1984 ஆம் ஆண்டு ஆவணி 1 ஆம் திகதி கட்டுரை ஒன்றை அவர் வரைந்தார். "இது ஒரு தூரநோக்கற்ற, முட்டாள்த்தனமான நடவடிக்கை" என்று அதனைக் குறிப்பிட்டார். முன்னணியினரின் அரசியலைப் புதைப்பதன் ஊடாக ஜெயாரும் அவரது ஆலோசகர்களும் வெறுமனே அக்கட்சியை மட்டும் புதைக்கவில்லை, மாறாக வன்முறையற்ற - ஜனநாயக வழி இணக்கப்பட்டிற்கான வழியையும் முற்றாகவே புதைத்துவிட்டார்கள் என்று அவர் எச்சரித்தார். "முன்னணியினரைத் தனிமைப்படுத்தி ஒதுக்கிவிடும் கைங்கரியம் முற்றுப்பெற்றுவிட்டது. ஆனால் யாரின் இலாபத்திற்காக இது செய்யப்பட்டது? யாரின் திட்டமிடலின் கீழ் இது செய்யப்பட்டது? சரித்திரமே இதற்கான பதிலை வழங்கட்டும்" என்று தன‌து செய்தி ஆய்வினை அவர் முடித்திருந்தார். சரித்திரம் அதற்கான பதிலை வழங்கியது. மேர்வின் எதிர்வுகூறியது போன்றே தமிழ்ப் போராளிகள் இதனால் இலாபமடைந்தார்கள். மிகச் சிறந்த அரசியல் அவதானியாகவும், இராணுவ திட்டமிடலாளராகவும் வளர்ந்துவிட்டிருந்த பிரபாகரன் தனது அமைப்பிற்காக ஜெயார் உருவாக்கித் தந்திருந்த இந்த அரிய சந்தர்ப்பத்தினை தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திக்கொண்டார். மேர்வின் டி சில்வாவின் எச்சரிக்கையினைச் சற்றேனும் சட்டைசெய்திராத ஜெயவர்த்தன, தனது தூரநோக்கற்ற அரசியல் முன்னெடுப்பில் முற்றாகக் காலெடுத்துவைத்தார். அவரைச் சுற்றி துதிபாடும் குழு ஒன்றிருந்தது. அதுலத் முதலி, ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் மற்றும் காமிணி திஸாநாயக்க என்று அக்குழு அவர் செய்யும் விடயங்களைத் தொடர்ச்சியாக ஆதரித்து, முண்டுகொடுத்து வந்தது. அன்றிலிருந்து சர்வகட்சி மாநாடு என்பது தமிழரின் கவலைகளுக்கு தீர்வு வழங்குவோம் என்கிற போர்வையில், நடைமுறையில் இருந்துவந்த அரசியல் பொறிமுறைக்கான மெருகூட்டலினை மட்டுமே செய்யத் தொடங்கியது. ஜெயாரினால் அமைக்கப்பட்ட இரு குழுக்களும் வெறுமனே இந்த நோக்கத்திற்காக அவரால் பாவிக்கப்பட்டன.
  3. மறக்காமல்,மறுக்காமல் இந்தப் பேச்சை கொஞ்சம் கேட்டு விடுங்கள்........! 👍
  4. மனைவி : என்னங்க, வரும்போது மறக்காம காய்கறி வாங்கிட்டு வாங்க, அப்படியே சுகன்யா உங்களுக்கு ஹாய் சொல்ல சொல்றா... ( இது மனைவியின் மெசேஜ்) கணவன் : யாரு சுகன்யா? எனக்கு ஹாய் சொல்ல சொல்றது.. மனைவி : அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, நீங்க மெஸேஜ் படிச்சிட்டீங்களான்னு கன்பார்ம் பண்றதுக்காகத்தான் அப்படி நான் போட்டு அனுப்பிச்சேன்... கணவன் : இல்ல, நான் இங்க சுகன்யா கூடத்தான் இருக்கேன், நீ எந்த சுகன்யாவை சொல்றேன்னு தெரியல, அதான் கேட்டேன்... மனைவி : இப்போ நீங்க எங்க இருக்கீங்க??? கணவன் : காய் கறி கடையில... மனைவி : அங்கேயே இருங்க 10 நிமிஷத்துல வர்றேன்... கணவன் : சரி சீக்கிரம் வா... 10 நிமிஷத்துல வர்றேன்னு சொன்ன மனைவி 5 நிமிஷத்துல காய்கறி கடைகிட்ட வந்து திரும்பி கணவனுக்கு கால் பண்றாங்க... மனைவி : எங்க இருக்கீங்க?? கணவன் : நீ எங்க இருக்க?? மனைவி : காய்கறி கடையில... நீங்களும் அவளும் எங்க இருக்கீங்க அத சொல்லுங்க மொதல்ல... கணவன் : நான் இன்னமும் ஆபீஸ் ல தான் இருக்கேன் செல்லம்.. நீதான் காய்கறி கடைக்கு வந்துட்டல்ல, அப்டியே உனக்கு என்ன வேணுமோ வாங்கிட்டு போயிடு... நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டாப்ல... யாரு கிட்ட?
  5. இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியும்.
  6. மிக்க நன்றி நுணா.🙏 தங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள்..🙂 மிக்க நன்றி பெருமாள்.🙏 யாவரும் நலம். தாங்கள் மற்றும் குடும்பத்தார் நலமா?🙂 மிக்க நன்றி ஈழப்ப்ரியன்.🙏 நலமா.? குடும்பத்தார் நலமா?🙂 மிக்க நன்றி, கு.சா.🙏 நலமா.? பரிமளம் அம்மணி நலமா?🙂
  7. இது போராளிகளை அல்ல. மலையாளி தனது நாட்டையே காட்டிக் கொடுத்திருக்கிறான். எமக்கு எமனாக வந்தவனெல்லாம் மலையாளியாக இருக்கிறாங்களே?
  8. இந்திராவின் வேண்டுகோள் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு வரும் வழியில் ஜெயவர்த்தன இந்தியாவுக்கும் சென்றார். அங்கு இந்திரா காந்தியை அவர் சந்தித்தார். ஜெயாருடன் பேசுகையில், இலங்கையில் இராணுவ ரீதியில் தலையிடும் நோக்கமோ, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கமோ இந்தியாவுக்குச் சற்றேனும் கிடையாது என்று இந்திரா கூறினார். தனது நிலைப்பாட்டினை முன்னணியினரிடம் தான் தெளிவாகக் கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார் அதன்பின்னர் பேசிய இந்திரா, சர்வக்ட்சி மாநாட்டின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வாக சுயாட்சிகொண்ட பிராந்தியங்களே அமையும் என்று இந்தியா எண்ணுவதாகவும் கூறினார். இதற்குப் பதிலளித்த ஜெயார் சுயாட்சி கொண்ட பிராந்தியங்கள் எனும் தீர்வினை வழங்க எதிர்க்கட்சித் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்க தடைபோட்டுவருவதாகக் கூறினார். அதன் பின்னர் பேசிய இந்திரா, அப்படியானால் மாகாணசபை முறையினை அமுல்ப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், சிங்கள மக்கள் தற்போது இருக்கும் மனோநிலையில் மாகாணசபை முறையினையும் தன்னால் ஏற்படுத்த முடியாது என்று மறுத்தார். "எமக்கான ஆதரவுத் தளத்தினை நாம் இழந்துவிடுவோம், நாம் எல்லோரையும் இழந்துவிடுவோம்" என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் இயங்கிவரும் தமிழ்ப் போராளிகளின் பயிற்சிமுகாம்கள் குறித்த விடயங்களை இந்திராவிடம் காண்பித்த ஜெயவர்த்தன‌ தமிழரின் பிரச்சினைக்கான தீர்வு விரைவில் கிடைக்கப்பெறுவதை தனது அரசாங்கம் விரும்புகிறது என்று இந்திரா கூறினார். இச்சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருந்த ஜெயார், "நான்கூட விரைவான தீர்வினையே விரும்புகிறேன். ஆனால் இலங்கையில் வன்முறையில் ஈடுபட்டு வருவோர் தீர்விற்கான முயற்சிகளுக்குத் தடங்கலாக இருக்கின்றனர். பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து,பயிற்சி முகாம்களை அமைத்து, இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து சிங்கள மக்கள் கோபம் கொண்டிருக்கின்றனர்" என்று பதிலளித்தார். தமிழ்நாட்டில் போராளிகளுக்கான பயிற்சிமுகாம்கள் இருக்கின்றன எனும் ஜெயாரின் கூற்றினை இந்திரா நிராகரித்தார். ஆனால், சுமார் முப்பதினாயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாகவும், அவர்களைப் பராமரிக்கவே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "உங்களுக்கு வேண்டுமென்றால் இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கோ இம்முகாம்கள் குறித்து அனைத்து விடயங்களும் தெரியும்" என்று கூறியதுடன் தன்னுடன் கொண்டுவந்திருந்த, முகாம்கள் அமைந்திருந்த இடங்களின் வரைபடங்கள், அவற்றின் பெயர்கள், ஒவ்வொரு போராளி அமைப்பிற்கும் பயிற்சி வழங்கப்பட்ட முகாம்களின் விபரங்கள், ஒவ்வொரு முகாமிலும் பயிற்றப்பட்டு வந்த போராளிகளின் எண்ணிக்கை, பயிற்சி முகாம்களில் பயிற்றுவாளர்களாகச் செயற்பட்டு வந்த இந்திய இராணுவ அதிகாரிகளின் பெயர்கள், தரங்கள் என்று அனைத்து விடயங்களையும் ஆவண வடிவில் இந்திராவிடம் கையளித்தார். ஜெயார் தன்னிடம் காண்பித்த பயிற்சிமுகாம்கள் குறித்த விபரங்களைக் கண்ணுற்றபோது ஒருகணம் அதிர்ந்துபோன இந்திரா ஒருவாறு சமாளித்துக்கொண்டே அவ்விடயங்கள் குறித்து விசாரிப்பதாகப் பதிலளித்தார். ஜெயார் தன்னிடம் காண்பித்த விடயங்கள் சரியானவைதான் என்பது இந்திராவுக்குத் தெரியும். அவரது ஆச்சரியமெல்லாம் இவற்றினை ஜெயாருக்கு வழங்கியது யாரென்பதுதான். போராளி அமைப்புகளுக்குள் ஊடுருவிய லலித்தும், விலைபோன மலையாளி அதிகாரியும் தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சராகப் பதவியேற்றதும் லலித் அதுலத் முதலி செய்த முக்கியமான விடயங்களில் ஒன்று தமிழ்ப் போராளி அமைப்புகளுக்குள்ளும், இந்திய உளவுத்துறையான ரோவிற்குள்ளும் தனக்கான உளவாளிகளை உட்புகுத்திக்கொண்டதுதான். சென்னையில் செயற்பட்டுவந்த ரோவின் அலுவலகத்திற்கு மலையாளி அதிகாரியான உன்னிகிருஷ்ணன் பொறுப்பாகவிருந்தார். சி.ஐ.ஏ இன் உதவியுடன் லலித் அதுலத் முதலி உன்னிகிருஷ்ணனை விலைக்கு வாங்கியிருந்தார். இவரே தமிழ்நாட்டில் இயங்கிவந்த போராளிகளுக்கான பயிற்சிமுகாம்களின் அமைவிடங்கள் , வரைபடங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இலங்கையின் பொலீஸ் புலநாய்வுத்துறைக்கு வழங்கியிருந்தார். இவற்றினை அடிப்படையாக வைத்தே உதவிப் பொலீஸ் அத்தியட்சகரான சிறில் ஹேரத் ஜெயவர்த்தனவுக்கான ஆவணங்களை தொகுத்து வழங்கினார். இவரது அறிக்கையில் போராளிகள் பயிற்சிகளின்போது பாவித்த ஆயுதங்களின் வகைகள் முதல் பல விடயங்கள் குறிப்பிட‌ப்பட்டிருந்தன. இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜெயாருடன் அதுலத் முதலியும் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது இவர்கள் இருவரும் கடுமையான தொனியைப் பாவித்தனர். பத்திரிக்கையாளர் சந்திப்புக்களின் போது தமிழர்களின் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று உறுதியாகத் தெரிவித்தனர். அங்கிருப்பது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே என்று பிடிவாதமாக நின்றனர். மேலும், அரசியல் ரீதியிலான‌ தீர்வொன்றிற்கு இராணுவ ரீதியிலான வெற்றி தவிர்க்கமுடியாத அங்கமாகும் என்றும் வாதாடினர். "பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை அதிகளவில் கட்டுப்படுத்தி அழித்துவிடுவதூடாக அரசியல்த் தீர்விற்கான சந்தர்ப்பத்தினை அதிகரித்துக்கொள்ள முடியும்" என்று லலித் அதுலத் முதலி பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஆதரித்து வந்த இந்துப் பத்திரிக்கை, இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளால் 30,000 தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தஞ்சம் கோரி வந்துள்ள நிலையில் இதனை இலங்கையின் உள்வீட்டு விவகாரம் என்று கருதமுடியாது என்று வாதாடியது. மேலும், இலங்கையில் இருப்பது பயங்கரவாதப் பிரச்சினையல்ல என்றும் அது கூறியது. "தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித்துவருவதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றே பார்க்கபடுதல் அவசியம்" என்று அது மேலும் கூறியது.
  9. அட ....tin tin ஐயும் இதுக்குள்ள கொண்டுவந்து விட்டது நல்லா இருக்கு.......நாய்க்குட்டிக்கு மாற்றாக யானைக்குட்டி ......சூப்பர்.......! 😂
  10. நீண்ட மாதங்களுக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி..🙏 இந்தக் காணொளியை காண நேரிட்டது..😌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.