Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87986
    Posts
  2. vasee

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3311
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    3044
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/22/25 in all areas

  1. இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣 Anusha Nadarajah
  2. வடதுருவ நாடுகளில் தற்போது கோடைகாலம் என கருதுகிறேன், பல உறவுகளை யாழில் காணமுடிவதில்லை, திடீரென உங்களது பதிவுகளும் குறைந்து விட்டது. குழந்தைகளின் திறமை அதன் சூழலில் மட்டுமல்ல அவர்களின் விருப்புகளிலும் தங்கியுள்ளது, அதனை திறமை என கூறமுடியாது எனகருதுகிறேன், ஆர்வம் என கூறலாம் அது தொடர்ந்து ஒரு கலை வடிவம் பெறாமலும் போகலாம் (கலை என்பது கலா எனும் சொற்பதத்திலிருந்து உருவாகியதாகவும் கலா என்றால் தொடர்ந்து வளர்ச்சியடையும் எனும் பொருளாம்). எனது முதலாவது குழந்தை பேச ஆரம்பிக்கும் போது ஒரு மொழியில் பேசினார், அது தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை. எனது மனைவிக்கு ஒரு சந்தேகம் அது முற்பிறவி பற்றியதாக இருந்தது, ஆனால் எனக்கு அந்த மொழி எங்கோ கேட்ட மொழி போன்ற உணர்வு இருந்தது ஆனால் அது என்ன மொழி என புரியவில்லை. அது ஒரு எண்ணிக்கை போல இருந்தது, இணையத்தில் 1, 2, 3 ஸ்பானிஸ் மொழியில் கூறுவது எப்படி என தேடிய போதுதான் புரிந்தது அவர் பேசிய மொழி ஸ்பானிஸ், அவர் ஸ்பானிஸ் பேசுவதற்கு சூத்திரதாரி டோரா எனும் கார்டூன் என கண்டுபிடித்து அந்த வழக்கை வெற்றிகரமாக முடித்துவைத்தேன்🤣.
  3. கற்க கசறும் ------------------ எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமையாவது இருக்கும் என்கின்றார்கள். ஆனாலும் அது என்ன திறமை எங்களிடம் வந்து இருக்கின்றது என்று பலராலும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போய் விடுகின்றது. நாங்கள் சரியான திசையில் தேடுவதில்லை போல. ஒருவேளை இந்த அடிப்படையே பிழையாகவும் இருக்கலாம். திறமை என்று ஒன்று கட்டாயம் அமைவதும் இல்லை போலும். ஒரு வயதுக்குப் பின் ஒழுங்காக நித்திரை கொண்டு எழும்பினாலே, அதுவே பெரிய திறமை என்றாகி விடுகின்றது. ஆகவே இந்த திறமையை துப்பறியும் வேலையை இளமைக் காலத்தில் செய்தால் தான் அதைக் கண்டறியும் சாத்தியம் அதிகம் உண்டு. மேற்கத்தைய நாடுகளில் பாடசாலைகள், கல்லூரிகள், சூழல் என்பன ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிய கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனம் செய்கின்றார்கள். கீழைத்தேய நாடுகளில் சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்ட திறமைகளே ஒரு ஐந்து அல்லது ஆறு தான் இருக்கும். மற்றவை எல்லாமே உருப்படாத விசயங்கள். ஆகவே அங்கே யாராவது தன்னிடம் என்ன இருக்கின்றது என்று கண்டறிந்தாலும், அது அநேகமாக உருப்படாத ஒரு விசயமாகவே அங்கே கருதப்படவும் கூடும். மேற்கத்தைய நாடுகளுக்கு குடிபுகுந்த நாங்கள் எங்களின் வளரும் காலத்தில் தவறவிட்டவற்றை பிள்ளைகளின் மூலமாக இன்று இங்கே பிடித்து விடலாம் என்று நினைப்பதும் உண்டு போல. ஒரு எண்ணை ஒரு தாளில் எழுதி, அதை ஒருவரின் தலைக்கு பின்னால் பிடித்தால், அவர் கண்ணை மூடிக் கொண்டே அந்த எண்ணை சரியாக சொல்லும் ஒரு திறமை இருக்கின்றது என்கின்றார்கள். முதலில் இந்த விடயத்தை, திறமையை ஒரு கோர்வையாக புரிந்து கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. ஆனால் இதற்கு ஒரு ஆசிரியரும், குரு என்பதே சரியான பதம், மாணவர்களும் இருக்கின்றனர். இந்த திறமையில் அடுத்த அடுத்த படிகள் கூட இருக்கின்றன என்று ஒருவர் சொன்னார். இதனால் உருப்படியில்லாத விசயங்கள் என்று அன்று அங்கே சமூகம் பல திறமைகளை வகைப்படுத்திய விதத்தை முற்று முழுதாக தவறு என்றும் சொல்ல முடியவில்லை. இங்கு ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளிடம் இருக்கும் இசைத் திறமையையும் கண்டுபிடித்து விட முயல்கின்றார்கள். இது அன்று அங்கே இருந்த சங்கீதப் பாடம் போல அல்ல. சித்திர ஆசிரியர் அடிக்கின்றாரே என்று சங்கீத ஆசிரியையிடம் ஓடிப் போகும் நிலை அல்ல இது. ஒரு தடவை ஒரு பாடசாலையில் சித்திரத்திற்கும் போகாமல், சங்கீதத்திற்கும் போகாமல் வகுப்பில் பதுங்கியிருந்த சிலரை சித்திர ஆசிரியர் அடித்து பிக்காசோவின் கிறுக்கு சித்திரங்கள் போல ஆக்கினார். பின்னர் அதே ஆசிரியர் கலப்பையை கீறு என்று ஒரு நாள் சொல்லும் போது, எம்ஜிஆரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததில், எம்ஜிஆர் படங்களில் தூக்கிக் கொண்டு திரிந்த கலப்பையை சரியாக பார்க்கவில்லை என்ற உண்மை புரிந்தது. புல்லாங்குழல் தான் வாசிக்கப் போகின்றேன் என்றார் மகள். 'புல்லாங்குழல் கொஞ்சம் கஷ்டம் என்கின்றார்களே, புல்லாங்குழல் போல இருக்கும் வேறு ஏதாவது ஒன்றில் ஆரம்பிக்கலாமே.....................' என்று பணிவாக கேட்டுப் பார்த்தோம். ம்ஹூம்........... புல்லாங்குழல் தான் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவர் ஒற்றைக் காலில் நிற்கும் போதே அவரிடம் என்ன திறமை இருக்கின்றது எனறு நாங்கள் ஊகித்திருக்கவேண்டும். புல்லாங்குழல் விற்கும் கடைக்கு போனோம். அங்கு எல்லா கருவிகளும், வாத்தியங்களும் விற்பார்கள். 'நீங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்றில்லை. ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போங்கள்.......... சரியாக வராவிட்டால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்................' என்றார் கடைக்காரர். பலத்த அனுபவசாலி என்று தெரிந்தது. எழுவாய்கள் இல்லாமலேயே, எவரையும் எதையும் குறிப்பிடாமலேயே, சில வசனங்களை மென்மையாகச் சொன்னார். ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஒன்றை வாங்குவது என்று முடிவெடுத்தோம். பலதை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார் கடைக்காரர். நீண்டு பெரிதாக, பளபளவென்று இருந்த ஒன்றை வாங்கினோம். இது தலைமுறை தாண்டியும் உழைக்கும் என்றார் கடைக்காரர். சில தீர்க்கதரிசனங்களை அவை சொல்லப்படும் போது நாங்கள், அதாவது உலகம், சரியாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை. புல்லாங்குழல் பாடசாலை போய் வர ஆரம்பித்தது. சில இரவுகளில் அதை வீட்டில் கழட்டி, பொருத்துவதும் தெரிந்தது. எங்கள் வீட்டில் இசை அருவியோ அல்லது வெள்ளமோ இன்னும் பாய ஆரம்பித்திருக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை நேரம் பக்கத்து வீட்டில் இருந்து 'கடார்.........படார்..............' என்று தகரக் கூரையில் தடியால் விடாமல் அடிப்பது போல சத்தம் வந்தது. பக்கத்து வீட்டின் பின் வளவுப் பக்கத்தில் இருந்தே சத்தம் வந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கம் சுவருக்கு மேலால் எட்டிப் பார்க்கவும் முடியாத அதி உயர் நாகரிகம் கொண்ட நாடுகள் இவை. ஒரு தடவை அயலவர் ஒருவர் இறந்து போய் ஆறு மாதங்களின் பின்னேயே அவர் இறந்து போனார் என்ற தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் சத்தமே வராமல் அழுதிருப்பார்கள் போல. சில நாட்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் அடிக்கும் சத்தம் வந்து கொண்டேயிருந்தது. பின்னர் ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் தட்டினார். தங்களின் பிள்ளை பாடசாலையில் ட்ரம்ப் பழகுவதாகச் சொன்னார். சில நாட்கள் சமாளித்துக் கொள்ளும்படி கேட்டார். வாத்தியக் கருவியை ஒரு மாதம் வாடகைக்கு எடுத்தார்களா, அல்லது சொந்தமாகவே வாங்கினார்களா என்று நான் கேட்கவில்லை . ஆனால் அவர் சில நாட்கள் என்று சொன்னதால் அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது. பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்களை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு கொஞ்சமும் தயங்காத நாடுகள் மேற்கு நாடுகள். இங்கு ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பாடசாலைப் பருவத்தில் நூற்றுக் கணக்கான பதக்கங்கள் கூட பெற்றுவிடுவார்கள். ஒரு போட்டி என்று சொல்லுவார்கள், ஆனால் அதில் பங்குபற்றும் எல்லோருக்கும் இங்கு பதக்கங்கள் கொடுப்பார்கள். இந்த நடைமுறைக்கு பின்னால் சில உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளுக்கு முதல் ஒன்று இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் போது பெரும் பெருமைப்படும் பெற்றோர்கள், பின்னர் சில வருடங்களிலேயே ஒரு பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு மூடி, வீட்டின் கண்காணாத ஒரு இடத்தில் தள்ளி விடுவார்கள். புல்லாங்குழலுக்கும் கொடுத்தார்கள். பக்கத்து வீட்டு ட்ரம்பிற்கும் கொடுத்திருப்பார்கள். எதற்கும் தயங்கி நில்லாமல் சூரியனை சுற்றிக் கொண்டே விடாமல் சுழலுகின்றது பூமி. அதனால் அடுத்த வகுப்பும் வந்தது. ஒரு நூல் பிடித்தது போல வாழ்க்கை ஒரு கோட்டில் அசையாமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் வேலைக்கு போகும் பெருந்தெருவில், அங்கே காலை நேரங்களில் அசைய முடியாத வாகன நெரிசல் இருக்கும், எதேச்சையாக பக்கத்து வாகனத்தைப் பார்த்தேன். அங்கே ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே வாகனத்தை நெரிசலில் செலுத்த முயன்று கொண்டிருந்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் பார்க்க ஆரம்பித்தேன். அதே பெருந்தெருவில், அதே மனிதர்கள், அதே வேலைகளையே ஒவ்வொரு காலையிலும் செய்து கொண்டிருந்தார்கள். நானும் தான். அடுத்த வருட வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் வருவதில்லையே என்ற எண்ணம் ஒரு நாள் வந்தது. புல்லாங்குழலையும் அந்த வருடம் காணவில்லை என்றும் தோன்றியது. அடுத்த நாள் விடிந்தது. புல்லாங்குழல் பள்ளிக்கூடம் போகவில்லை. 'ஏன்........ புல்லாங்குழல் தேவையில்லையா..........' என்றேன். 'இல்லை........... இந்த வருடம் வேறு வகுப்புகள்........ புல்லாங்குழல் இல்லை.........' என்றார். சங்கீதம் வராவிட்டால் சித்திரம் போல. அடுத்த தலைமுறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது ஒரு புல்லாங்குழல்.
  4. இது யாழ்ப்பாணத்தினை பொருளாதார ரீதியாக வளர்ச்சிக்குள்ளாக்கும், இதனை வரவேற்கவேண்டும் அத்துடன் காங்கேசந்துறை துறைமுகத்தினையும் விரிவாக்கம் செய்து திட்டமிட்ட சாலை ஒருங்கிணைப்பு செய்தால் ஒரு கைத்தொழில் நகரமாக யாழ்ப்பாணத்தினை மாற்றமுடியும். இதனை ஆங்கிலத்தில் Business plan என கூறுவார்கள், இரண்டுவகையான ஆய்வறிக்கைகள் முதாலந்தர ஆய்வறிக்கை (நேரடி ஆய்வறிக்கை), இரண்டாந்தர ஆய்வறிக்கையினை (நிறுவனங்களின் ஆய்வறிக்கை) மூலம் 2 வருட cash flow எதிர்வு கூறலை உருவாக்குதல் உள்ளடங்கலாக இத்திட்டம் உருவாக்கப்படும். இது சாதார வர்த்தக நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்காக நடைமுறையில் உள்ள விடயம், சில வருடங்களின் முன்னர் ஒரு வர்த்தக விடயமாக ஒரு நிறுவனத்தின் முகவரை அணுகிய போது அவர் தனது நிறுவனத்தினூடாக ஒரு கிளையினை குறித்த நகரத்தில் ஆரம்பிக்க உள்ளதாக கூறினார், ஒரு ஆர்வகோளாறில் வர்த்தக திட்டம் வைத்திருக்கிறீர்களா என கேட்டேன் அது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கே வர்த்தக திட்டம் பற்றி தெரிந்திருப்பதில்லை, ஆனால் இணையத்தில் மாதிரி வர்த்தக திட்டம் மற்றும் வழிகாட்டிகளும் உள்ளது, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் முயற்சிக்கலாம்.
  5. ரணிலின் புண்ணியத்தினால் பார் லைசன்ஸ் எடுத்து பினாமிகளை வைத்து பார் நடாத்தி செல்வந்தராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடாளுமன்றில் ரணிலின் சிறப்புரிமை மீறல் குறித்து குரல்கொடுக்க வேண்டும். மக்களின் வயிற்றில் அடித்ததுதான் போகட்டும், கடைசி செஞ்சோற்றுக்கடன் செய்த புண்ணியமாவது கிடைக்கும்! 😁
  6. இந்த கனடா எம்பசியயும் சேர்த்து யாழ்ப்பணத்தில் திறக்கச் சொல்லுங்கோ....புண்ணியமாகும்
  7. தாயைத் தேடும் நெஞ்சங்கள் ....... ! 😀
  8. ஆஹா.... இந்தப் படங்களைப் பார்க்க அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. 👍 மகிந்த, கோத்தா.... ஆகியோர், "உச்சா" போகும் நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள். 😂
  9. Home > செய்திகள் > விலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்டு, வெலிக்கடையில் அடைக்கப்பட்ட ரணில் Friday, August 22, 2025 செய்திகள் கை விலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட ரணில், வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
  10. இதை விளங்கி கொள்ள பெற்றோருக்கு புரிந்துணர்வு வேண்டும் . ஒரு வருடம் வீணா போச்சு என்று பிள்ளையை மனம் நோகாமல் பிள்ளை அதற்குள் கிடந்தது அழுந்தாமல் . வெளிய வா பிடிக்கவிட்டால் வேறு துறையை தெரிந்து எடு ....என ஊக்க படுத்த வேண்டும். இங்கும் கனடாவிலும் நடக்கிறது
  11. மெர்சிக்கும் பிள்ளைகளும் ஒரு மனைவியும் உண்டு . ....... மற்றது அவர்களின் பிள்ளைகளா தெரியவில்லை . ........!
  12. பார் லைசன்ஸ் வாங்கின ஆக்கக்களுக்கும் அவையிண்ட எடுபிடுகளுக்கும் இப்ப வயித்தைக் கலக்கிக்கொண்டிருக்கும். 😀
  13. 🤣.................... டோராவும், போக்கிமோன் பிகச்சுவும், இன்னுமொரு சிறுவர் பாத்திரமும் இங்கு உள்ளூர் தொலைக்காட்சியில் வருவார், பிள்ளைகளுக்கு நிறையவே சொல்லிக் கொடுத்தார்கள்...... இங்கு வட கோளத்தில் கோடை காலம் முடிந்து கொண்டு வருகின்றது. எல்லோரும் விடுமுறைகளை முடித்து வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பாடசாலைகள் இந்த மாதம் ஆரம்பித்துவிட்டன. கல்லூரிகள் இந்த மாதமும், அடுத்த மாதமும் ஆரம்பிக்கின்றன. இந்த கோடை காலம் முழுவதும் இங்கு வந்து எழுதுவதற்கு எனக்கு நேரம் அதிகம் கிடைக்கவில்லை. இன்னும் ஒரு பயணம் இருக்கின்றது............. உங்களின் நாட்டிற்கு............... ஆர்வம் அல்லது விருப்பம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கின்றது. சில பல நேரங்களில் கூட்டத்துடன் சேர்ந்து ஓடிப் போய், பின்னர் உணர்ந்து கொண்டு வெளியேயும் வந்து விடுகின்றார்கள். இங்கு பல்கலைப் படிப்பே அப்படித்தான் இருக்கின்றது. ஒரு வருடம், இரண்டு வருடங்களில் ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு போகின்றார்கள். அவர்களுக்கு பொருந்தும் ஒன்றை தேடும் வசதிகள் இருப்பது மிகவும் நல்ல ஒரு விடயம் என்றே நினைக்கின்றேன்.
  14. அடிப்படையில் ரணில் ஊழல்வாதியல்ல என்பதை எவரும் அறிந்திருந்தபோதும் பழக்கப்பட்ட ஒரு துஷ்பிரயோகத்துக்கு அவரும் பங்காளியாகியிருக்கிறார். ரணிலை விட பல மடங்கு துஷ்பிரயோகம் செய்திருக்கும் ஒருவரை கைது செய்வதற்கான ஒரு ஆரம்ப எச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. நாளைக்கு பிக்குமார்களையும், முன்னாள் இராணுவத்தினரையும், இனவாத சக்திகளையும் திரட்டிக்கொண்டு அக்கைதுக்கு எதிராக ராஜபக்சவினர் கிளர்வதாயின் அதற்கான மனப்பக்குவத்துக்கு தயார்படுத்த ரணிலின் இந்த கைது கணிசமான அளவு உதவும். 1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க 2025ல் ரணில் விக்கிரமசிங்க இலங்கையை ஆட்சி செய்த அதியுயர் பதவியில் இருந்தவர்களில் 1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆங்கிலேயரால் சிறைப்பிடிக்கப்பட்ட பின், 2025ல் சுமார் 210 ஆண்டுகளுக்கு பின்னராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதாகியுள்ளார். இடைப்பட்ட காலத்தில் பிரித்தானிய தேசாதிபதிகளும், 1948 சுதந்திரத்தின்பின் பிரதமர்களும், 1978 அரசியலமைப்பின்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளும் இலங்கை ஆட்சிக்கு தலைமைவகித்தபோதிலும் எவரும் எக்காரணத்துக்காகவும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை. ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையின் மன்னராட்சி காலத்துக்கு பின்னரான - மக்களாட்சி காலத்தின் முதலாவது அரச தலைவர் கைது என்பது ஓர் வரலாறு. இனித்தான் சட்டப்புத்தகங்களும், அரசியலமைப்பின் பக்கங்களும் தீவிரமாக ஆராயப்படப் போகின்றன. குறிப்பாக அரசியலமைப்பின் 35வது சரத்து. பிரதி வட்சப்பில் வந்தது.
  15. கைதாவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ராஜபக்கச குடும்பம் தப்ப எதிர்பாராமல் ரணில் கைதாகியுள்ளார். அடுத்த தேர்தலில் வெல்ல இது ஒன்றே போதும்.
  16. தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் Published By: DIGITAL DESK 3 22 AUG, 2025 | 12:45 PM தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டார்கள் பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/223092
  17. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·Srtodoepsn2a03c1g45576f m2t21th0656mc6t6fuc6g996ti8i4u9h862a · என்றோ படித்தது, இன்றும் நினைவில் நிற்கிறது ஒரு துறவி. அவருக்கு 5, 6 சீடர்கள். ஒருநாள், அவர்களில் ஒருவன் தன் குருவுக்கு முன்னால் வந்து நிற்கிறான். இனி, கேள்வி-பதில் பாணியில், அவர்களுக்குள் உரையாடல் தொடர்கிறது. 'என்ன வேண்டும் உனக்கு?' 'அது, குருவே! அந்த . . . இருக்கிறானே, அவன் . . .' 'நிறுத்து, நிறுத்து. நீ சொல்லப் போகும் சேதி நல்லதா, கெட்டதா?' 'குருவே, அது நல்லது இல்லை குருவே. அதைச் சொல்லத் தான் . . .' 'ஓஹோ, கெட்ட செய்தியா? இருக்கட்டும், இருக்கட்டும். அது உனக்கு எப்படித் தெரிய வந்தது? நீயே நேரில் பார்த்தாயோ?' 'இல்லை, குருவே. எனக்குத் தெரிந்த 2, 3 பேர் சொன்னார்கள்'. 'அதன் உண்மைத் தன்மையை விசாரித்து அறிந்தாயோ?' 'இல்லை, குருவே'. 'சரி, அது போகட்டும். அந்தச் சேதியை நான் தெரிந்து கொள்வதால், எனக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா?' 'அப்படிச் சொல்ல முடியாது, குருவே. ஆனாலும், உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிய வேண்டும் என்று தான் . . .' 'அப்படி ஆனால் சரி. இந்தச் சேதியை என்னிடம் சொல்வதால், உனக்கு ஏதாவது பயன் உண்டோ?' 'அது எப்படிச் சொல்ல முடியும், குருவே?'. 'சரி. இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேள்'. 'நீ என்னிடம் சொல்ல வந்தது நல்ல சேதி இல்லை. அது வேறு யாரோ சொல்லித் தான் உனக்கே தெரிய வந்தது. அதன் உண்மைத் தன்மையை நீ தீர விசாரித்து அறிந்திலாய். அதை நான் தெரிந்து கொள்வதால், எனக்கு எந்த நன்மையும் இல்லை. என்னிடம் சொல்லி, உனக்கும் பயன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை'. 'ஆகையால், நீ என்னிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம். போய், உன்னுடைய வேலையைப் பார்'. குருவின் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்த சீடன், தலை குனிந்தவாறே திரும்பிப் போகிறான். இந்தக் கதையால், நமக்கு விளங்கும் நீதி என்ன? 1. கெட்ட சேதியை வீணாகப் பரப்பலாகாது. 2. ஒரு சேதியின் உண்மைத் தன்மையை நன்கு ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல், அதை இன்னொருவரிடம் சொல்லுவது பிழை. 3. சொல்பவன், கேட்பவன் இருவருக்குமே உதவாத ஒன்றைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இது தான் தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை நோக்கம்; அதி உன்னத நோக்கம்........ ! Voir la traduction
  18. உக்கிரேன் இரஸ்சிய போர் சமாதானமாக தீர்க்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் குறைவடைந்து வருவது போல காணப்படுகிறது, அமெரிக்க அதிபரின் அண்மைய கூற்று இதனை பிரதிபலிப்பதாக இருக்கிறது, உக்கிரேன் தற்காப்பு நடவடிக்கை தாக்குதலின் மூலம் எதிராளியினை தோற்கடிக்க முடியாது என கூறிய அவரது கருத்து, எதிர்வரும் காலங்களில் இரஸ்சியாவிற்குள் உக்கிரேன் இராணுவத்தாக்குதலை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகிறது. இது அமெரிக்காவின் பலத்தின் மூலமான சமாதானம் எனும் நியோகொன்னின் அடிப்படையாகும். ஆனால் எங்கோ நிம்மதியாக இருந்த ஒரு தேசத்தினை பாதுகாப்பற்றதாக்கிவிட்டு, அதன் பாதுகாப்பிற்கு போராடுவதாக பிரமையினை உருவாக்கி மற்றவர்கள் அழிவில் குளிர்காய்பவர்கள் சமாதானம் பற்றியும், அதற்கேற்ப சூழ்நிலை பற்றியும் பேசுவது வேடிக்கை. உக்கிரேன் சுதந்திரத்திற்கு முன்னர் ஏற்றுக்கொண்ட எக்காலத்திலும் நடுநிலையான ஒரு தேசமாகவும், அணுஆயுதமற்ற தேசம் எனும் கோட்பாடும், பின்னர் உக்கிரேனில் இருந்த அணு ஆயுதங்களை ஒப்படைக்கும் போது அதற்கு பாதுகாப்பு உறுதி வழங்கப்பட்டிருந்தது, அந்த பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்ப்பட்ட அணியில் அமெரிக்கா, இங்கிலாந்து இரஸ்சியா என்பன இருந்தன, அதே இரஸ்சியாவினால் உக்கிரேனிற்கு பாதுகாப்பிற்கு அச்சுறத்தல் 2014 இல் நடுநிலையான உக்கிரேன் அரசினை மேற்கின் ஆதரவுடன் மேடான் சதிப்புரட்சியால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் கருங்கடல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரிமியாவில் இருந்த இரஸ்சிய கடற்படை நிலத்திற்கான குத்தகையினை மேற்கு சார்பு உக்கிரேன் புதிய அரசு இரத்து செய்துவிடலாம் எனும் அச்சத்தில் கிரிமியாவினை கைப்பற்றியதுடன் ஆரம்பமானது. 2014 பின்னர் வெளிப்படையாக இரஸ்சியாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்; உக்கிரேன் படை பல அதிகரிப்பு என ஒரு தொடர்ச்சியான அச்சுறுத்தல் நிலவிய நிலையில் இரஸ்சியா 2021 இறுதிப்பகுதியிலிருந்து உக்கிரேன் போர் தொடங்குவதற்கு முன்னர் வரை இரஸ்சியாவிற்கு நேட்டோவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் கோரி வந்தது அது நேட்டோவினால் மறுக்கப்பட்டது, உக்கிரேன் மீதான போருக்கு காரணமாக இருந்தது. போரின் ஆரம்பத்தில் ஏற்படுத்த முயன்ற சமாதான முயற்சிகள் கூட மேற்கினால் திட்டமிட்டு குழப்பப்பட்டு போர் தீவிரப்பட்டது. இந்த போருக்கு அடிப்படைக்காரணம் மேற்கின் இரஸ்சியாவின் இருப்பு தொடர்பான கொள்கை வகுப்பு. உக்கிரேன், இரஸ்சியர்களின் அழிவுகளுக்காக அழுவதெல்லாம் ஆடு நனைகிறதே என அழும் ஒரு ஒநாயின் அழுகுரல். இரஸ்சிய இணைய ஊடுருவிகளால், உக்கிரேன் பாதுகாப்பு துறையில் இருந்த ஆவணங்கள் இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது அதன் விபரங்களை பார்க்கவில்லை ஆனால் அந்த எண்ணிக்கை பார்க்கும் போது தமது சுயநலத்திற்காக மற்றவர்களை கோர்த்துவிட்டு பின்னர் சமாதானம் என தம்மை விளம்பரப்படுத்துவது பின்னர் மீண்டும் பலமாக மோதுங்கள் என கூறும் இந்த மனிதரை நம்பி தொடர்ந்தும் முட்டாள்தனமாக இரஸ்சியாவும் உக்கிரேனும் மோதினால் முட்டாள்களுக்குத்தான் நட்டம். இந்த போர் அழிவிகளின் பின்னராவது குரங்கினை அப்பம் பிரிக்க அழைக்காமல் சம்பந்தப்பட்ட இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்விற்கு வரவேண்டும். சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் இந்த போரினால் பாதிக்கப்படவில்லை, உலகெங்கும் இதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டுள்ளது உலக மக்கள் அனைவரும் விரும்பும் அமைதிக்கு குறுக்கே நிற்கும் அரசுகளை அங்கு வாழும் மக்கள் புறக்கணிக்கவேண்டும்.
  19. இக்காலத்தில் திரையில், கணணித்திரையில் விளையாட்டும் , சேர்ந்து சத்தமிட்டு , பொழுது போக்கும் காலத்திலும் ,அதற்கே அடிமையாகும் சிறார்கள் மத்தியில் இசையில் கவனம்செலுத்தி (ஏதோஒன்றைக் கற்று இருப்பார் ) மிகவும் பாராடட படத் தக்கது . அது இன்னொரு இசைக் கருவியை இயக்க சார்ந்ததாக இருக்கும்.
  20. இப்படித்தான் 6 மாததம் முன்பும் ஒரு செய்தி வந்தது.இப்ப மீன்டும் முதலில் இருந்தா.☹️
  21. ரம்புடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த பெருவெற்றி கிடைத்துள்ளது....அடுத்து பழப்புளி விலை 5 ரூபாவால் குறைக்க முயற்சி எடுக்கப்படும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.