Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. நல்லதொரு பாட்டு இணைப்புக்கு நன்றி அல்வாயன்.
  2. டாக்ரர் அர்ச்சுனா பதவியை ராஜினாமா செய்யாமல் தேர்தலில் நின்றதால் அவரை பாராளுமன்றுக்கு போகவிடாமல் தடுக்க சிலர் ஓடித் திரிவதாக வதந்தி.?
  3. அரசியல் வருகைக்கு முன்னர் மகிந்த ஜேவிபிக்காக பைல்களுடன் ஐக்கிய நாடுகள் சபை ஏறி இறங்கியவராமே?
  4. ஆளில்லா விமானத்தை மொஸ்கோவரை அனுப்பி குண்டுவீச்சு நடத்தும் போதே சாத்துப்படி இருக்கு என்று யோசித்தேன்.
  5. பார்ப்போம்.காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
  6. சத்தியலிங்கம் குறித்த தமிழரசு கட்சியின் தீர்மானம்: மன்னாரில் கடும் எதிர்ப்பு தமிழரசுக் கட்சிக்கு கிடைக்க பெற்ற தேசியபட்டியல் ஆசனத்தை ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள சத்தியலிங்கத்திற்கு வழங்குவதாக கட்சியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு மன்னார் உட்பட பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ப. சத்தியலிங்கம் 4033 வாக்குகளையே பெற்று தோல்வியுற்றுள்ள போதிலும் இலங்கை தமிழரசுக் கட்சி அவருக்கே தேசிய பட்டியலை வழங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிவித்திருந்தார். சுமந்திரனின் பின்புலத்தில் சத்தியலிங்கத்திற்கு தேசியபட்டியல் ஆசனம் வழங்குவதற்கான செயல்பாடு இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை மக்கள் எதிர்பார்த்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. முன்னதாகவே, மாகாண சபை ஆட்சி காலத்தில் சுகாதாரதுறையில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதற்காக அமைச்சு பதவியை இழந்த சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. குறிப்பாக சத்தியலிங்கம் இம்முறை தேர்தலில் வெறும் 4033 வாக்குகளை மாத்திரம் பெற்றிருந்தார். அவரை விட மன்னார் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட இளம் சட்டத்தரணியான செல்வராஜ் டினேசன் தனது முதலாவது தேர்தலில் 6518 வாக்குகளை பெற்றுள்ளார். மக்களின் நிலைப்பாடு ஆனால், தகுதிவாய்ந்த அவருக்கு தேசியபட்டியல் ஆசனம் வழங்காது ஊழல் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்களை சேர்த்து பல கோடிகள் செலவு செய்து தனது பிள்ளைகளை ரஷ்யாவில் மருத்துவ கற்கைக்காக அனுப்பி வைத்துள்ள சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் மக்கள் விமர்சித்து வருகின்றனர். கடந்த தேர்தலை விட இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வன்னியில் வாக்குகள் குறைந்துள்ள நிலையில் அடுத்த தேர்தலில் மொத்தமாக வாக்குகளை இல்லாமல் ஆக்குவதற்கு சத்தியலிங்கம் போன்ற ஊழல்வாதிகளுக்கு சுமந்திரனின் உதவியுடன் தேசிய பட்டியல் வழங்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், சத்தியலிங்கத்திற்கு தேசியபட்டியல் வழங்கும் செயற்பாட்டுக்கு தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் மாத்திரம் இல்லாமல் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உட்பட பலர் எதிராக தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mannar-people-against-sathyalingam-on-social-media-1731853320
  7. சரோஜா பால்ராஜ் மிகவும் பிரபலமும் பரிட்சயமுமான ஒரு தொழில் சங்கவாதி 20 வருடங்களாகளுக்கு மேலாக மக்கள் பிரச்சினைகளை பேசிவருபவர். மாத்தறை தமிழர்கள் குறைந்த அளவில் வாழ்ந்தாலும், அனுரா அலையில் இன வேறுபாடின்றி ஓட்டுகள் வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழ் வாக்குகள் முகம்களுக்கு தான் விழுகிறது. என்பிபி வாக்குகள் கட்சிக்கே முதன்மை பெறுகிறது. இந்த பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கினர் முகமறியாதவர்களே. இனப் பிரச்சனை தீர்வு என்ற ஒன்றை ஐஎம்எவ் வைத்துள்ளதே?
  8. இவர்களின் கையாள் ஒராள் இங்கு தான். (வட கரோலினா)இருக்கிறார். மாவீரர் தினத்துக்கு வந்தால் விசாரித்துப் பார்க்கலாம்.
  9. அதன் முதல் வரியே புடுங்குப்பாடு. ஏக்கயராஜ்ய உள்ளுக்கும் நிறைய புடுங்குப்பாடு. மேலே உள்ள காணொளியைக் கேழுங்கள். எவ்வளவு தந்திரமாக சிங்களவர்களுடன் சேர்ந்து ஏமாற்றுகிறார்.
  10. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு, கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் காங்கிரஸ், உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியினர் பெற்ற மகத்தான மற்றும் வரலாற்று வெற்றிக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. மாற்றத்தக்க ஆட்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் பார்வையில் இலங்கை மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இந்த முக்கிய ஆணையை பார்ப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு இந்தநிலையில், வெளிப்படையான, பொறுப்புடைமையை உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சக்தியின்; உறுதிமொழியையும் காங்கிரஸ் பாராட்டியுள்ளது. அத்துடன் புதிய அரசாங்க நிர்வாகம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை காங்கிரஸ் தமது கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றிவிட்டு, ஜனநாயகத்திற்கும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமையளிக்கும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு, தேசிய மக்கள் சக்தியின் முன் இருக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தமது கடிதத்தில் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தல் அறிக்கையின்படி, நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்போது, அனைவருக்கும் நீதி, உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக எஞ்சியுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அரசாங்கத்தை கனேடிய தமிழ் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துடன் தொடர்புடைய நீண்டகால அநீதிகளை வலியுறுத்தி, தேசிய மக்கள் சக்தியின், தமது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, அந்த சட்டத்தை ரத்து செய்வதன் முக்கியத்துவத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இராணுவ ஈடுபாடு தற்போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை மீளப் பெற்றுக் கொடுக்கவேண்டும். அத்துடன் சட்டவிரோத காணி சுவீகரிப்புகளை நிறுத்துமாறும், நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பவேண்டும் என்றும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் சமூகத்தின் கலாசார மற்றும் மத பாரம்பரியத்தைப் பாதுகாக்க, தமிழ் வழிபாட்டுத் தலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும். அத்துடன் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய பௌத்த கோயில்கள் கட்டப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கனேடிய காங்கிரஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்படும் வரை, 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன், உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், பிராந்திய நிர்வாகத்தை வலுப்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் அந்த காங்கிரஸ் கோடிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவப் பிரசன்னத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் சீரமைக்க வேண்டும். அத்துடன், உள்ளூர் வர்த்தகங்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாக விவசாயம் மற்றும் விருந்தோம்பல் போன்ற வர்த்தக முயற்சிகளில் இராணுவ ஈடுபாட்டை நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் கடிதம் வலியுறுத்தியுள்ளது. இந்தநிலையில், இலங்கையில் நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தாம் தயாராக உள்ளதாக, கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. https://tamilwin.com/article/ceylon-tamil-congress-congratulate-anura-1731803743 தொடங்கீட்டாங்கையா தொடங்கீட்டாங்க. @Kapithan னை உடனடியாக மேடைக்கு அழைக்கிறோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.