ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
Everything posted by ஈழப்பிரியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் தமிழர்களின் தலைவன் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் வாழ்க.
-
"குமிழி"
தலைக்கனம் எப்படியெல்லாம் தலைவிரித்தாடுகிறது. நன்றி தில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவருக்கு வாக்குப் போட்ட சிங்கள மக்கள் குழம்பப் போகிறார்களே.
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
தமிழினத்தின் தலைவனே எங்கிருந்தாலும் வாழ்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பையா வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறோம்.
-
யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஓர் பகிரங்க மடல்!
யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஓர் பகிரங்க மடல்! எம்மைப்போல் இன்னொரு ஏழைமகன் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இனிமேலும் பாதிக்கப்படக் கூடாதென்பதாற்காகவே பல தடவை சிந்தித்து இம்மடலை வரைகிறோம். கடந்த 08.11.2024 பி.ப 6.45 மணியளவில் எமது தாயாரை யாழ் போதனா வைத்தியசாலையின் 24 ம் இலக்க விடுதியில் அனுமதித்திருந்தோம்.வீட்டில் விழுந்த அவரை அனுமதித்த வேளையில் அவ்விடுதியில் கடமையில் இருந்தவர் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.Umashankar .பி.ப 6.45 ற்கு அனுமதித்த போதிலும் Medical students புடை சூழ தன்னை ஒரு ராஜாவாகப் பாவித்து வலம் வந்த வைத்திய நிபுணர் நோயாளியின் அருகில் கூட வராமல் ஆ செலூலைற்றிஸ் என்றவாறு செல்ல குறுக்கிட்ட எனது கணவர் "Dr அம்மா விழுந்துவிட்டா அதுதான் Admit பண்ணினோம் "என்றார்.ஆ அப்ப Xray போடு என்றவாறு விரைந்து விட்டார்.கிட்டத்தட்ட இரவு 9 மணியளவிலே Xray unit க்கு கொண்டு சென்று மீண்டும் விடுதியில் விட்டுச்சென்றோம். மறுநாள் அவரை 16 A விடுதிக்கு மாற்றியிருந்தார்கள்.Xray இல் எந்த பிரச்சினையும் இல்லை செலூலைற்றிஸ் கே வைத்தியம் பார்ப்பதாகச் சொன்னார்கள்.இப்படியாக வைத்தியம் பார்த்தவர்கள் 11.11.2024 காலை முதல் அவாருக்கு Urine போகாத காரணத்தினால் இரத்தப்பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தனர். மதிய வேளையில் CRP 536 இல் இருப்பதாகக் கூறியிருந்தனர்.மருந்தாளரான மகனுக்கு தாயின் நோயின் தீவிர நிலைமை புரிந்திருந்தது.ஒரேயொரு மகனைப் பெற்ற கணவனையிழந்த அந்த 69 வயதான தாய் நன்றாகவே கதைத்தபடி மகனுடன் இருந்தவர் பி.ப 2 மணியளவில் அவரது அன்புப் பேர்த்தியை காண வேண்டும் என்ற அவாவில் "தம்பி Babyamma வை கூட்டிக்கொண்டு வந்து காட்டுறியோ "என்று கேட்க ஓம் அம்மா என்ற மகன் வீட்டிற்கு வந்து மனைவியையும் 3 பிள்ளைகளையும் அழைத்துச்சென்று பி.ப 3 மணியளவில் விடுதிக்குள் நுழைகின்றார்.தன்னோடு கதைத்திருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாது போகுமென்று அம்மகன் அறிந்திருக்கவில்லை.ஆசையாய் அப்பம்மாவைப் பார்க்கச் சென்ற பேரப்பிள்ளைகள் அடக்கத்தில் போய்க்கொண்டிருக்கும் அப்பம்மாவையே பார்க்க முடிந்தது.Ward ன் Emergency bed க்கு மாற்றியிருந்தார்கள்.Pulse rate high ஆகவும் BP very low ஆகவும் இருந்தது.இரவு 7 மணியளவில் Dialysis செய்வதற்காக அழைத்துச் சென்றார்கள்.அது வரை மகனும் மருமகளும் 3 குழந்தைகளும் விடுதியிலேயே வாடியிருந்தோம்.Dialysis இரவு 11 மணியளவிலேயே முடிவடையும் என்பதால் வீடு திரும்பியிருந்தோம்.இரவு 11.45 மணியளவில் விடுதியிலிருந்த உறவொன்று அழைத்து தாயின் நிலை கவலைக்கிடம் எனக்கூற வைத்தியசாலை விடுதியை 12.11.2024 அதிகாலை 12.10 மணியளவில் சென்றடைய 12.08 மணிக்கு தாயின் உயிர் பிரிந்ததாக கூறிய கடமையிலிருந்த வைத்தியர்கள் இரண்டு மணி நேரத்தின் பின்னர் mortuary இல் சடலத்தை ஒப்படைப்பதாகவும் Consultant inquest போட்டிருப்பதால் பிரேத பரிசோதனையின் பின்னரே சடலத்தை ஒப்படைக்க முடியுமெனக் கூறப்பட்டது. வீடு திரும்பிய மகன் காலை 7 மணியளவில் மீண்டும் வைத்தியசாலைக்குச் செல்ல விடுதிக்கும் பிணவறைக்குமாக மாறி மாறி அலைக்கழிக்கப்பட இறுதியாக பணிப்பாளரின் அலுவலகத்தை நாட அங்கிருந்தவரின் வழிப்படுத்தலி படிவமொன்றைப் பெற்றவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் செல்கிறார்.பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில் மகன்,மருமகள், அயலவர் ஒருவர் மற்றும் இறந்தவரின் சகோதரர் ஒருவர் என நான்கு பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.காலை 10 மணி முதல் நால்வரும் மரண விசாரணை அதிகாரியின் அலுவலக வாசலில் காவலிருக்கின்றனர்.நண்பகல் 12.30 அளவில் வருகை தந்த அவரது விசாரணைகள் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைகள் பூர்த்தியடைய பி.ப 1.08 அளவில் கீறிக்கிழித்த உடலத்தை காண்பிக்கிறார்கள்.பின்னர் மூட்டையாக பெற்சீற்றால் சுற்றியவாறு ஒப்படைக்கின்றனர்.அதற்குள் Gate pass ஐ பெற்றுக்கொள்வதற்காக Overseer அலுவலகத்தில் பல நிமிட காத்திருப்பின் பின்னர் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்ட கீறிக்கிழிக்கப்பட்டு தைக்கப்படாத சடலம் அவர்களின் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பி.ப 2.45 மணியளவிலேயே வீட்டை வந்தடைந்தது. இவ்வளவு சம்பவத்தையும் குறிப்பிடக் காரணம் 1.நான்கு நாட்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று மரணித்தவருக்கு Inquest போட வேண்டிய அவசியம் என்ன? 2.பதின்நான்கு வருடங்களாக Dr.Peranandharaja வின் மருத்துவ clinic செல்லும் நோயாளிக்கு அவரது Full history உள்ள clinic கொப்பிகளை ஆராய்ந்து அனுமதித்த நாள் முதலே சிகிச்சைகளை ஆரம்பித்திருக்க முடியாதா? 3.அனுமதித்த உடனேயே செலூலைற்றிஸ் எனக் கூறியவர்கள் உடனேயே CRP பார்த்திருந்தார்களா? 4.பார்த்திருப்பின் நான்காவது நாளில் CRP 536 ஆகும் வரை வைத்தியம் பார்க்கவில்லையா? 5.அறுபத்தொன்பது வயது தானே என்ற அலட்சியமா? 6.நான்கு நாட்கள் விடுதியில் இருந்து இறந்தவரின் உடலத்தை கீறிக்கிழிக்கலாமா? 7.கிழித்த உடலத்தை தைக்காமல் கையளிக்கலாமா? (பெட்டி ,வாகனம் ,மேளம் என்பவற்றுக்காக ரூ.52000 பேசியிருந்த லக்கி ஹவுஸ் தைத்தமைக்காக மேலதிகமாக ரூ.13000 பெற்றிருந்தனர்.) 8.சமூகத்தில் நல்நிலையிலுள்ள எமக்கு இந்நிலையாயின் பாமர மகனொருவரின் நிலை எவ்வாறிருக்கும்? எமது தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.நாம் உங்கள் நிர்வாகத்தோடு எந்தப் பிரச்சினைக்கும் வரப்போவதில்லை.இருப்பினும் இம் மடலை வரையக் காரணம் நாளை எம்போல் எவரும் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காகவே! எமது சுகாதார அமைச்சர் கண்டி போதனா வைத்தியசாலையின் கழிப்பறையையே சுத்தம் செய்து சென்றிருக்கிறார்.தாங்கள் அவ்வாறெல்லாம் இறங்கத் தேவையில்லை.உங்கள் கதிரையைக் காப்பாற்றுவதற்காய் உங்கள் நிர்வாகத்தின் கீழ் நடக்கும் முறைகேடுகளை கண்டும் காணாமல் விடாமல் இலவச மருத்துவத்தை ஏழைகளைக் காப்பதற்காய் பயன்படுத்துங்கள் என்பதே எமது வேண்டுகோள். இம்மடலால் ஏற்படவிருக்கும் விளைவுகள் ஏழைகளைப் பாதுகாப்பதற்காய் மாறட்டும்.இலங்கை அரசாங்கத்தின் இலவசக் கல்வியால் பட்டதாரியாய் அரசசேவையில் இருக்கும் ஓர் ஏழையின் குரல் ஏழைகளுக்காய் ஒலிக்கிறது! நன்றி. திருமதி.ஷர்மிலா சிவகணேசன் B.A,PGDE,PGD in TESL,M.A ஆசிரியர் யா/வட்டு இந்துக் கல்லூரி. https://www.facebook.com/sarmila.sivakanesan/posts/pfbid02yhzzEoe9FiK9ns42KbP8wbqTTMrUycTWGnsm5sFV4PEC3xfmCkPPnpNee4JYNQYel
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு பிலிப்பைன்ஸ் ஆளை எதிர்பார்க்கிறார்.
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா!
சுமந்திரனிடம் முறையிடப் போகிறோம். நீங்களும் வருவீர்களா சார்?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
விளையாட்டுத்துறையில் இருந்து அரசியல்வாதியாக மாறிய @வீரப் பையன்26 க்கும் பாராட்டுக்கள்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
முதல் மூன்று இடங்களைப் பெற்ற @பிரபா @வாதவூரான் @வாலி ஆகியோருக்கு பாராட்டுக்கள். @கந்தப்பு மிகவும் சிரமமான தேர்தல் ஆணையாளர் பதவியை மனமார ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்து முடித்ததற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். @புரட்சிகர தமிழ்தேசியன் மிகமிக பெருமையாக இருக்கிறது. @கிருபன் ஆசை தோசை அப்பளம் வடை. போட்டியில் பலரையும் கலந்து கொள்ளவைக்க இரவுபகலாக பாடுபட்ட @தமிழ் சிறி க்கும் பாராட்டுக்கள். இன்னும் மூன்று மாதங்களில் கிருபன் நடாத்தவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு விட்டதை பிடிக்க முயலுங்கள்.
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
அது தான் பெயரை மாற்றியுள்ளார்கள். இலங்கை பாராளுமன்றில் பிரதமருக்கு அதிகாரமிருக்கும் போதா ஜனாதிபதிக்கு அதிகாரமிருக்கும் போதா தமிழருக்கு எதிராக அதிகளவான சட்டங்கள் வந்தன.
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
எனக்கும் இதே கேள்வி தான்.
-
வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம்
பாடசாலை வைத்தியசாலை போன்றவை உள்ளுரில் அரசிடம் பணம் வாங்கினால் அதை கட்டுறத்துக்கு உரிய ரென்ரர் போட வேண்டும்.விரும்பிய ஆட்களுக்கு கொடுக்க முடியாது. இடை எப்படியான நிலவரத்தில் இருக்கிறதென்ற அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான் மிகுதி பணத்தை கொடுப்பார்கள். வெளிநாட்டில் பணத்தை வாங்கிய சாவகச்சேரி வைத்தியசாலையை பார்த்தாலே எல்லாமே புரியும். வெளிநாட்டில் இருப்பவன் பணத்தை கொடுத்ததோடு சரி. இன்னும் கொஞ்ச சனம் பாடசாலை வைத்தியசாலை என்றால் பணம் கொடுக்காது. கோவில் என்றால் அள்ளிக் கொடுக்கும்.
-
வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம்
இது வைத்தியசாலைகளுக்கும் பொருந்தும்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பாகனையும் உதவியாளரையும் கொன்று விட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் செய்தி வந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். @suvy
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இது விதண்டாவாதம்.உறுப்பினர்களுக்கு என ஒதுக்கப்பட்ட கதிரையிலேயே அவர் உட்கார்ந்திருக்கிறார். மேடை மேல் இருந்த சபாநாயகரின் இடத்திலா அவர் இருந்தார். வகுப்பறையில் ஆசிரியரின் கதிரை எங்கே இருக்கும் என்று பாடசாலை போகாத எனக்கே தெரியுது. பட்டதாரி உங்களுக்குத் தெரியலையே?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இத்தனையையும் பாவிக்கிறவர்கள் அங்கு போய் என்ன செய்யப் போகிறார்கள்? நல்லகாலம் நான் முதலாவதாக வரலையே என்று @நிலாமதி அக்கா யோசிக்கப் போறாங்க. தான் தான் பிலிப்பைன்ஸ் போகப் போகிறேன் என்ற புழுகத்தில் இதுக்குள்ள ஒருத்தர் முக்கி முனகிக் கொண்டு திரிந்தாரே ஆளைக் காணோம்.15-16 வதாக நிற்கிறார் போல. ஆள் ஏற்கனவே லீவுக்ள எல்லாம் எடுத்து பெட்டியும் அடுக்கியாச்சோ?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பையா எனது பெயருக்கு நேராகவும் இருந்தது. ஓடித்திரியுது போல. 🤣................ வாழ்த்துகள் பிரபா, வாதவூரான், வாலி................... வாலிக்கு விருப்பத் தெரிவு அடிப்படையில் இன்னுமொரு வாழ்த்து.... பிலிப்பைன்ஸ் போய் கூத்தடிக்கப் போகும் ஆள் யாராக இருக்கும்?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அடுத்த நான்கு புள்ளிகளும் உங்களுக்கே கிடைத்தால் நீங்க தான் பிலிப்பைன்ஸ் போகப் போகிறீர்கள்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இந்தப் பிள்ளை பிலிப்பைனஸ் பிள்ளை மாதிரி இல்லை. பிலிப்பைன்ஸ் என்று சொல்லி ஏமாற்றப் போகிறார்கள். முதலாவதாக வருபவர் கவனம்.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இதை அவர்கள் ஏன் முதலே செய்திருக்கக் கூடாது? வழமையைவிட கூடிய புதுமுகங்கள் வரப் போகுது என்று முதலே தெரியும் தானே? கொடுத்த கடிதத்தில் இன்னஇன்ன இலக்க கதிரைகளை தவிர்த்து இருக்கும்படி அவர்கள் அல்லவா முதலே அறிவுறுத்தியிருக்க வேண்டும். முதல்நாள் எங்கேயும் அமரலாம் என்று சொல்லிப்போட்டு இடையில் வந்து எழுப்புவது எவ்வளவு அவமானம்? சில படங்களில் சபையில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவரை எழுப்பி கலைப்பார்கள். அதுபோலவல்லவா இருக்கிறது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தையா அமைதி அமைதி போட்டி இன்னமும் முடியவில்லை. ஏறத்தான முடிய போகுது. அதனால் கீழே நிற்கும் சிலருக்கு பிபி எகிறுது. பிலிப்பைன்ஸ் போகும் வாய்ப்பு அனேகமாக பிரபா வாதவூரான் வாலி ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கலாம்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
Ha ha ha அடபாவிகளா எவ்வளவு கஸ்டப்பட்டு மூளையை கசக்கி பிழிந்து கணக்குப் போட்டு பதிவிட இப்பிடி சொல்றாங்ளே. பிள்ளையை நுள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுற மாதிரி தெரியுது.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
யார் சொன்னது அர்ச்சுனா தவறான இருக்கையில் உட்காந்தார் என்று? எவருக்குமே எந்தக் கதிரையும் ஒதுக்குப்படவே இல்லையே.