Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அப்படி அடிச்சி கொண்டு சாகாமல் ஒற்றுமையாக இருந்துவிட்டால்…. என்ற நப்பாசை எனக்கு…. பயம்…..யாருக்கு என்பதை வாசகளிடம் விட்டு விடுகிறேன்🤣 ரேணுக எந்த சட்டத்தில் கைதானார்?
  2. பயங்கரவாத தடைசட்டம் நீங்கள் சொல்வது போல் எந்த இனவாதி மேல் அனுர அரசால் பாவிக்க பட்டது என்பதை சொல்ல முடியுமா?
  3. அவசரப்பட்டு ஆரூடம் கூறுகிறீர்கள். அரிசி, வெங்காயம் இல்லாமல் ஒரு ஐந்து வருடம் பொறுத்து கொள்ள முடியாதா உங்களால்?
  4. புத்தரின் போதி மரம் போல ஜனாதிபதி மாளிகையில் புதிதாக ஏதும் முளைத்திருக்க கூடும், அதன் கீழ் இருந்தபடியால்… நேற்றுவரை இனவாதியாக இருந்தவர் இன்று இனவாதத்தை துறந்து விட வாய்புள்ளது. அப்படியா?
  5. @putthan ஏன் அவசரம்? கள்வனின் மனித உரிமையையும் மதிக்கும் மனு நீதி கண்ட அனுரனின் ஆட்சி இது. ஒரு ஐந்து வருடம் பொறுங்கள்…பெயர் வெளியிடப்படும்.
  6. அதாவது இனவாதிகளிடம் இருந்து தமிழர்களை பாதுகாக்க பயங்கரவாத தடை சட்டம் அவசியமாகிறது🤣🤣🤣. சாத்ஸ் உங்கள் அக்கவுண்டை யாரேனும் ஹேக் செய்து விட்டார்களா🤣. ப.வா.த.ச வுக்கு இப்படி ஒரு முட்டு கொடுப்பை சரத் வீரசேகரா கூட கொடுத்ததில்லை🤣.
  7. அண்ணை, இப்போ இருக்கிற சிஸ்டம் - குறித்த அளவு துணி எல்லோருக்கும் வழங்கப்படும். அதை அவர்கள் தேவைக்கேற்ப தைத்து போடுவார்கள். ஒரு பாடசாலையில் 100 மாணவர் என்றால். அதற்குரிய துணியை விநியோகஸ்தர் டிலிவர் பண்ணி விட்டு போய்கிட்டே இருப்பார். மாணவர்கள் இதை பெற்று வீட்டில் கொடுக்க, அங்கே அவர்களோ, அருகில் இருக்கும் டெயிலரோ தைப்பார்கள். இது மிகவும் வினைதிறானன முறை. இதில் ஊழல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஊழல் செய்தாலும் மிக இலகுவாக நிறுத்த முடியும். சரி நான் மேலே சொன்ன விதமாக அன்றி நீங்கள் சொன்ன கடைகளில் விற்கும் முறையை பின்பறினாலும்.. இனி சத்தோச போன்ற கடைகளில் இதை போய் தகுந்த அளவுக்கு பெற்று கொள்ளலாம்? தனியார் கடைகளில் இப்படி பெற முடியாது ஏனினெல் அங்கே ஊழல் மீண்டும் எழும். கூடவே இலாபம் இல்லாமல் அவர்கள் இதை தம் கடையில் வைக்கப்போவதில்லை. இல்லை என்றால் இதை விற்பதற்கு அரசு தனியார் கடைகளுக்கு காசு கொடுக்க வேண்டும். மேலும்…யாழ்மாவட்டத்தில் எத்தனை சத்தோசக உள்ளன? அங்கே உள்ள பொருட்களின் தரம் என்ன? அங்கே பொருட்களின் கையொருப்பு (stock) எப்படி இருக்கும் என நீங்கள் கேட்டறிந்தால் - இது ஏன் சரியான செயல் அல்ல என விளங்கும். ஒரு நெடுந்தீவு மாணவன் சீருடை வாங்க, பெற்றார் சகிதம் யாழ் டவுணுக்கு போக வேண்டும். முன்பு என்றால் துணி பாடசாலைக்கு வரும். அங்கேயே உள்ள டெயிலர் தைத்து கொடுப்பார். வெளிநாட்டை பற்றி சொல்லி இருந்தீர்கள். நாம் இங்கே கடைக்கு போய் உடுப்போ அல்லது எமது பிள்ளைகளின் சீருடையோ வாங்குவது முழுக்க முழுக்க சந்தை பொருளாதார அடிப்படையில். ஒரு வெள்ளை பள்ளிகூட சேர்ட் இலண்டனில் 5 பவுண்ஸ் எனில் ஸ்கொடலாந்தின் தீவு ஒன்றில் அது 8 பவுண்ஸ்சாக இருக்கும். ஆனால் இலங்கையில் சீருடைகளை அரசு மானியமாக கொடுக்கிறது. ஆகவே விலையை கூட்டி, விநியோகத்தை விரிவாக முடியாது. அல்லது ஆமி பொலிஸ் போல அரசே விநியோகத்தை நடத்த வேண்டும். அப்படி என்றால் கல்வி திணைக்களம் இதற்கென ஒரு தனி யுனிட்டையே உருவாக்க வேணும். அதற்கு ஆள் அம்பு சேனை என பலமடங்கு செலவாகும். பிகு சிலசமயம் சிறைக்குள் இருந்து பார்த்தால் வெளியில் இருப்பவர்கள் சிறையிருப்பது போல தோன்றுமாம். #நாலு சுவர்🤣
  8. இருந்தால் குடைய மாட்டனா🤣. பாப்பம் @zuma போல் யாரும் சிங்களம் வாசிக்க முடிந்தவர்கள் விடயத்தை தெளிவுபடுத்தக்கூடும்.
  9. இது நடைமுறைச்சாத்தியமா? ஒவ்வொரு பிள்ளை ஒவ்வொரு சைசில் இருக்கும். யார் அளவு எடுப்பார்கள். ஆசிரியர்கள்? அளவு எடுத்து அதை துணி விநியோகிஸ்தருக்கு அனுப்பி… அதை அவர் வெட்டி… மாணவரிடம் வந்து சேர மாணவன் ஒரு சுற்று பெருத்திருப்பான்🤣. கொஞ்சம் கொஞ்சமாக கம்போடியாவின் பொல்பொட் வகை பனிகுணங்களை ஜேவிபி காட்டத்தொடங்கிறது போல தெரிகிறது.
  10. வீரகேசரி வெளியிட்ட செய்திக்கும், டில்வின் கொடுத்த விளக்கத்துக்கும் என்ன வேறுபாடு? எனது மரமண்டைக்கு ரெண்டும் ஒன்று போலவே தெரிகிறது.
  11. இதுகெல்லாம் டப்பு வேணுமே, டப்பு. ஐ எம் பிடம் விவசாயிக்கு நிவாரணம் கொடுக்க பணம் கேட்டால் கிடைக்குமா? அதே நாலு ரூபாய் சாப்பாட்டு சட்டம்🤣. நான் நினைத்ததை விட விரைவாக நாட்டை போட்டடிப்பார்களோ? அரிசி மாபியாவை வேறு பகைக்கிற மாரி போகுது கதை. விரைவில் அதிகாரத்தின் அத்தனை பலங்களையும் பிரயோகிக்க வேண்டி வரலாம்.
  12. கொஞ்சம் காரமாக இருந்தாலும்…கஜன் மீதான எனது எதிர்பார்ப்பும் இதுதான். புலம்பெயர் புலிவால்கள் - அப்படி இப்போ ஒருவருமில்லை - எல்லாரும் அனுர பிரிகேட்🤣.
  13. மட்டகளப்பு தேர்தல் மாவட்டம் பல்லின மாவட்டம் அல்ல. இங்கே ஒரு சிங்கள எம்பி கூட வரமுடியாது. 4 தமிழர் ஒரு முஸ்லிம் அல்லது 3 தமிழர் 2 முஸ்லிம். அம்பாறை, சிங்கள பெரும்பான்மை மாவட்டம். திருகோணமலை மட்டுமே பல்லின மாவட்டம். உண்மையில் இங்கேயும் 2/4 சிங்கள எம்பி வரவேதான் வாய்ப்பு. இந்த முறை என்பிபி க்கு விழுந்த சிங்கள வாக்குகள் + தமிழ் வாக்குகளால் என் பி பி யில் ஹேமசந்திர வென்றுள்ளார். கந்தளாய்யை கந்தளே, குமரன் கடவு கோமரங்கடவல, சேருவில்லு சேருவல என திட்டமிட்டு 76 ஆண்டுகளில் குடியேற்றியதால் மாற்றி அமைக்கப்பட்ட மாவட்டம் திருகோணமலை.
  14. தமிழ் மக்களின் இழப்பை மூலதனமாக்கி—தம் எசமானாரின் பார் ஊழலை மறைக்க ஒருவர் முயல்கிறார் பாரீர்.
  15. ஏன் இலங்கையின் மண்டேலா 2020 தேர்தலை சிறையில் இருந்து கொண்டே வென்ற செம்மல் அல்லவா? அப்படி பட்டவரின் வெற்றியை விசாரணைக்கு கூப்பிட்டது பாதிச்சதாக்கும். தம்பி தோத்துபோனார் எண்ட கவலையில் எமோசனலா எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்🤣. என்னது பழி தீர்ந்ததா🤣🤣🤣. ரணில்தான் இந்த ஊழல் வழக்கில் அக்யூஸ்ட் 1. அவர் சொன்ன மறுப்பை அப்படியே விழுங்கி விட்டீர்கள் நீங்கள்🤣. என்ன எதிர்பார்தீர்கள்? எம்பிகளுக்கு இலஞ்சமாக பார் அனுமதியை கொடுத்தேன் என ரணில் ஓப்புதல் வாக்கு மூலம் கொடுப்பார் என்றா? தமிழருக்குள் ஒற்றுமை தேவை என்பாதால் எல்லாவற்றையும் போத்து மூடினால் என்ன நடக்கும் என்பதை கடந்த காலம் உணர்தியும்?
  16. என்னை பொறுத்த வரை….நான் மேலே சொன்ன காரணங்கள் ஏனைய சிங்கள தலைவர்கள் போலவே அனுர என்பதை காட்டி நிற்கிறது. இதுதான் அனுர பற்றிய தமிழரின் starting point ஆக இருக்க முடியும். அவர் நாட்டில் சட்டதின் ஆளுமையை உருவாக்குவார், ஊழலை ஒழிப்பார், நல்லாட்ட்சி செய்வார் என்பதல்லாம் நல்ல விடயங்களே ஆனால் இவை இலங்கை தேசியம் சம்பந்தபட்டது. தமிழரை பொறுத்தமட்டில் 13 ஐ முழுமையாக அமல் செய்வதே ஆக குறைந்த படி. காணி அதிகாரத்தை தமிழருக்கு பகிர மறுக்கு எந்த சிங்கள தலைவரும் அடிப்படையில் இனவாதிதான். அடுத்த நாலு வருடத்தில் அனுர காணி அதிகாரத்தை தமிழருக்கு பகிர்ந்தால் - அவரை வரவேற்க நானும் தயார். அதுவரை அவரின் கடந்தகால நடவடிக்கை அடிப்படையில் அவரை அணுகுவதே அறிவார்ந்த செயல். Talk is cheap, actions speak louder than words. தன்னை ஒரு இனவாதி என காட்டி கொண்ட அனுரவை அவர் செயலால் இதை மறுதலிக்கும் வரை வெள்ளை அடிக்க, காவடி தூக்க நான் தயார் இல்லை.
  17. உங்களை போல்….. அனுர முள்ளிவாய்க்கால் போரை விரைந்து முடிக்க சொன்ன ஜேவிபியின் தூணாக இருந்தார்…. சமாதான பேச்சை குழப்பிய ஜேவியின் தூணாக இருந்தார்… சந்திரிக்கா அரசில் கபினெட் அமைச்சராக இருந்து தமிழருக்கு ரணில் ஒரு இஞ்சியும் கொடுக்க விடக்கூடாது என வலியுறுத்தினார்…. வடக்கு-கிழக்கை வழக்கு போட்டு பிரித்த ஜேவிபியின் தூணாக இருந்தார் … இதுவரை இந்த பிழைகள் எதற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை, பிழை எனவும் ஏற்கவில்லை, என தெரிந்தும் அனுரவுக்கு காவடி எடுக்கும், வெள்ளை அடிக்கும் ஆள் அல்ல நான். @satan
  18. கிழிஞ்சுது கிருஸ்ணகிரி…. 1. நான் புலிகள் சாரா அமைப்பை உருவாக்கி இருக்க வேண்டும் என சொன்னது எஞ்சிய தமிழர்களை. நாம் ஒரு நெடிய வரலாற்றை கொண்ட இனம். எமக்கு ஒரு இனமாக எமக்கு சுயநிர்ணய அபிலாசை இருக்கிறது. அதை அடையும் எம் முயற்சி புலிகள் கண்டு பிடித்ததல்ல. புலிகளுக்கு 30 வருடம் முன்பே இதற்கான குரல் எழும்பி விட்டது. புலிகள் இடையில் வந்தார்கள், தமக்கு தெரிந்த வகையில் முயன்றார்கள். அவர்கள் முடியும் போது - அவர்கள் முறையையோ, பெயரையோ இனி தொடரமுடியாத அளவுக்கு ஆகி விட்டிருந்தது. ஆனால் அவர்களின் பின்னும் நாம் ஒரு இனமாக இருக்கிறோம். எமது சுயநிர்ணயத்துக்கான தேவை அப்படியே இருக்கிறது. ஆகவே நாம் ஒரு புலிகள் சாரா அமைப்பை நிறுவி இருக்க வேண்டும். இது புலிகளை மறுதலிப்பதோ, அவமதிப்பதோ அல்ல…நாம் இருக்கும் நிலை பற்றிய யதார்த்தத்தை உணர்ந்து செயல்படல் மட்டுமே. இதுநான் 2013 இல் யாழில் எழுத தொடங்கியதில் இருந்து எழுதி வருவது. 2. அரசு புலிகளை அழித்த போது என்ன சொன்னது? அமிரை கொண்டார்கள், நீலனை கொண்டார்கள் - இவர்கள்தான் தீர்வுக்கு தடை. இவர்களை அழிக்க சர்வதேசமும் தமிழ் மக்களும் உதவினால் - நாம் ஒன்றுபட்ட இலங்கைக்கு 13 plus plus ஐ தருவோம். இது மன்மோகனை வைத்து கொண்டு மகிந்த சொன்னது. நான் இப்போ கேட்பது 13 ++ வர 15 வருடம் ஆகியும் முடியவில்லையா? என்பதையே. ஆகவே இது வழமைபோல ஏமாற்று என்பதையே. எத்தனை காலம் எடுத்தேன்? இந்த நிலைப்பாட்டை நான் அவர் இதை சொன்னார் என செய்தி வந்த திரியிலேயே எழுதினேன். 2015 என நினைக்கிறேன். அப்போ நான் இவரின் அரசியலை ஆதரித்தாலும் - இந்த விடயத்தை இவர் இப்படி பேசி இருக்க கூடாது, சட்ட வரைவிலக்கணப்படி சுமந்திரன் சொல்வது சரி என்றே வைத்தாலும், எமது பிரதிநிதியாக இவர் இப்படி சொன்னது அதிகபிரச்ங்கிதனம் என எழுதினேன். அதன் பின் படிப்படியாக இவரின் போக்கை, இவரோடு வேலை செய்து வெறுத்துப்போனவர்களின் அனுபவங்களை கேட்டு, குறிப்பாக இவரும் விக்கியும் ஆடிய ஈகோ ஆட்டம் என்பவற்றை பார்த்து, இவர் மீதான ஆதரவை 2017 இல் இருந்து விலக்கிகொண்டேன்.
  19. இலண்டனுக்கு சிறி வந்த போது சாரதி போல் வளைந்து நெழிந்து சேவை செய்த, வன்னியில் வசித்த, ஆனால் யாழை பூர்வீகமாக கொண்ட ஒருவரின் உறவினர்களின் பெயரில் ஒரு பார் அனுமதி பத்திரம் கிளிநொச்சியில் வழங்கப்பட்டதாக ஊகம் ரெட்டை கட்டி பறக்கிறது. யார் அந்த பெரு…ச்சாளி பிகு சுமனை போட்டு அடிப்பது, எமனுக்கு கவர் எடுக்கவே🤣
  20. நன்றி சுமா. சிறிதரனின் அடிப்பொடிகளுக்கு பேதி ஆரம்பமாகி விட்டது, யாழ்களத்தில் உங்கள் மொழிபெயர்ப்பு லிஸ்ட் வந்ததுமே🤣. இனி நிக்காம போகும் என நினைக்கிறேன்🤣. பல பெயர்கள் இரெண்டு தரம் எடுத்துள்ளார்கள். விக்கி கடிதம் கொடுத்தது போல ஏனைய எம்பிகளும் கடிதம் கொடுத்திருந்தால் மாட்டுவார்கள் என நினைக்கிறேன்.
  21. ஓம் தகப்பன் பண்டாவுக்கு சிங்களம் பெரிதாக எழுத வாசிக்க தெரியாதாம். புனித தோமையர், பின் ஆக்ஸ்போர்ட், அதன் பின் இன்னர் டெம்பிளில் பாரிஸ்டர் என சிங்களத்தில் சொல்லும் களு சுட்த்தா (கறுப்பு-வெள்ளைகாரன்) அவர். ஆக்ஸ்போர்ட்டின் முதல் ஆசிய மாணவர் சங்க செயலாளர் என நினைக்கிறேன். அதே போல் அத்துலத் முதலி முதலாவது ஆசிய மாணவர் சங்க தலைவர் என நினைக்கிறேன். அனுர கொஞ்சம் மந்த புத்திதான். அஜால் குஜாலிலுல் ஆர்வம் அதிகம். அவர் ஒரு கட்சிக்கு போனால் அது சிலமாதங்களில் எதிர்கட்சியாகும் யோகமும் இருந்தது🤣. தொண்டா, அஷ்ரப், டக்லஸ் அநேக காலம் ஆளும்கட்சி. அதேபோல் அனுர அநேக காலம் எதிர்கட்சி🤣. 78க்கு பின் சிறிமாவின் வாக்குரிமை பறிக்கப்பட்ட பின் சு க வை முழுவதும் அழிந்து விடாமல் காப்பாற்றினார். சந்திரிகா விஜே குமாரதுங்கவை முடித்து, குடும்பம், கட்சி சகலதையும் விட்டு வெளியேறிய பின் தாய்க்கும், கட்சிக்கும் பலமாக இருந்தார். குமாரதுங்க, பிரேமதாச மறைய 1993 இல் சந்திரிக்கா நாடு திரும்பி அரசியலில் இறங்கினார். சிறிமா, சந்திரிகாவை ஏற்க, சில காலத்தில் அனுர யூ என்பிபக்கம் தாவினார். பின்னர் மாறி மாறி தாவினார். தந்தையின் கட்சியை, ஆட்சியை அவருக்கு விசுவாசமான அடிப்பொடியாக இருந்த டி ஏ ராஜபக்சவின் மகன்கள் கைப்பறிய காட்சியையும் கண்டு கண்மூடினார். ஆனால் கடைசிவரை மகிந்த இவரை “லொக்கா” (பெரியவர்) என்றே அழைத்தார்.
  22. இருக்கலாம்…எமக்கு முள்ளிவாய்க்காலால் மகிந்த மீது கோவம். ஜேவிபிக்கு பட்டலந்த வால் ரணில் மீது கோவம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.