Everything posted by goshan_che
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
பதிலுக்கு நன்றி. நானும் உங்களை போலவே அனுர எமக்கு காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள தீர்வை தரமாட்டார் என்றே நம்புகிறேன். இதன் பின் இவருக்கு நான் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும்? 4 வருடத்தை வீணடிக்கவா? ஆகவேதான் அவரின் இனவாத பின்புலத்தை சுட்டி காட்டி, இவரிலும் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை கூறி, எமது மக்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை பெற போராடும் தமிழ் தேசிய அரசியலை முந்தள்ளுகிறேன்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அப்படி ஒன்றும் கடினமான கேள்வி இல்லை அண்ணை. அனுரவுக்கு சும்மா கால அவகாசம் கொடுக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள்தானே. ஆகவே கால அவகாசம் கொடுக்க சொல்வது ஏன்? அவர் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள ஒரு தீர்வை தமிழருக்கு 4 வருடத்தில் தரக்கூடும் என நீங்கள் நினைப்பதாலா? இதற்கு ஆம் இல்லை என இலகுவாக பதில் சொல்லலாம்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
நிச்சயமாக இதை நீங்கள் கேள்வி யாக கேட்பதே அதிசயமாக இருக்கிறது. போராளிகள், மாவீரர்கள் = படை வீரர்கள். அவர்கள் தலைமைக்கு கட்டுபட்டவர்க்ள். அவர்கள் எந்த அரசியல் முடிவையும் எடுக்கவில்லை. ஆகவே அவர்கள் எந்த அரசியல் முடிவுக்கும் பொறுப்பு அல்ல. தலைமையின் அரசியல் முடிவு விமர்சிக்கபட்டால் அது அந்த முடிவின் மீதான விமர்சனமே. தனிப்பட்டு அந்த தலைவர் மீதான விமர்சனம் கூட இல்லை. இதில் என்னளவில் எந்த முரண்பாடும் இல்லை. திருகோணமலை நகரில், குடியேற்ற ஊர்களில், மணலாறில், வவுனியா தெற்கில் எமது நிலம் பறிக்கும் எதிரி எந்தளவு பயத்துடன் இருந்தான் என்பதை 87 யூலை-அக்டோபரில் நேரில் கண்டவன் நான். எமது எதிரி அப்படி பயந்து அதன் பின் நான் கண்டதே இல்லை. இன்று வரை இந்த ஊர்கள் எல்லாம் சிங்களமயப்பட்டு தாண்டி போகும் போது - “தலைவர் ஒரு அப்பழுக்கற்ற போராளியாக அன்றி ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருக்கலாம்” என எண்ணி மருகாத நாட்கள் இல்லை.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
87 ஐ பற்றி இப்பொ கதைப்பாதால் ஏதும் பலன் உண்டா என என்னை கேட்டால்? 2024 முடியும் இந்த நேரத்தில் இல்லை என்பேன். புலிகள் பிழையே விட்டாலும் - இப்போ அவர்கள் இல்லை. அதை இட்டு கதைத்து இனி ஒன்றும் ஆக போவதில்லை. 2009 ற்கு பின்னான 10 வருடம் நாம் சுயபரிசோதனைக்கான review காலம் - அதில் கதைத்தது சரி. வாழ்க்கை முழுவதும் ரிவியூவில் வாழ முடியாது. இனி முன்னோக்கி பார்க்கும் காலம், இப்போ இதை உடைந்த ரெக்கோர்ட் போல மீள மீள சொல்வது தேவையில்லை. அதே போல், பிழையே விடவில்லை, தலைமையை விமர்சித்தால் மாவீரரை அவமரியாதை செய்தது போல என உணர்சி பிழம்பாவதும் வெறும் மாய்மாலம். Move on guys …. புலிகள் மெளனித்து 15 வருடங்கள். இன்னுமா அவர்களை வைத்து வால் தலை என ஆடுவீர்கள்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
உங்களுக்கு பிரெக்சிற், கியூபெக், ஈன்ச் தீமோர், ஸ்கொட்லாந்து இன்ன பல சர்வஜன வாக்கெடுப்புகள் கட்டாயம் தெரிந்து இருக்கும். ஆனால் இது புலிகளின் பிழை அல்ல. இந்த தீர்வை இப்படி திணித்தது இந்தியாதான். ஆனால் எமது தலைமையாக இந்த திணிப்பை புலிகள் எதிர்கொண்ட விதம் பிழை என்பதே என் நிலைப்பாடு.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
நாம் மைத்திரியை, சந்திரிகாவை, ரணிலை, கோட்டவை நிராகரித்த போது அப்படி யாரும் சிரிக்கவில்லையே? உங்களுக்குத்தான் மறந்து விட்டது, உலகத்துக்கு தெரியும் அனுரவும் ஜேவிபியிம் எப்படி பட்ட இனவாதிகள் என. ஆகவே செயல் இல்லாமல் அவர்களை தமிழர்கள் நம்ப தயாரில்லை என்பதை யாரும் வித்தியாசமாக பார்க்க மாட்டார்கள். அவர் மாவீரர்களை அர்த்தபடுத்தியதாக எனக்கு படவில்லை என்றே கூறினேன். அவர் நிச்சயம் புலிகள் அமைப்பின் தலைமையைத்தான் கூறினார். நான் மிக நேரடியாகவே தலைவர் என கூறினேனே?
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
நான் நெகிழ்வு போக்கு காட்டவில்லை என கூறியது அருகே இருக்கும் பிராந்திய வல்லூறுடன். எமது எதிரியுடன் அல்ல. மாற்று கருத்தில்லை. ஆனால் புலிகளின் தலைமையின் கொள்கை முடிவை விமர்சிப்பது, ஏன் நையாண்டி செய்வது கூட - மாவீரரை நையாண்டி செய்வதாகாது. சர்சிலை விமர்சித்தால், பிரித்தானிய படைகளை விமர்சிப்பதாக அர்த்தம் இல்லையே.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அந்த முயற்சியை “காணாது” என புறம்தள்ளிய தலைமைகளை. அதை வரவேற்ற commentariat ஐ. இதில் என்ன சமூகத்தை குறிக்க இருக்கிறது? தமிழர்கள் எம்மிடம் யாராவது நேரடியாக கேட்டார்களா என்ன? உங்களுக்கு 87 ஒப்பந்தம் ஓகேயா, இல்லையா என்று. இல்லைத்தானே.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
@குமாரசாமி இப்போ உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் அனுர 1 அல்லது 4 வருடத்தில், இணைந்தோ அல்லது தனி தனியாகவோ வடக்கு, கிழக்குக்கு மாகாண மட்டத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ள தீர்வை தருவார் என நீங்கள் நம்புகிறீர்களா? ஆம் அல்லது இல்லை என மட்டும் பதில் தரவும்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
மந்தைதனமாக அனுரவை நம்பி, தமிழ் தேசியத்தை கைவிடாமல் காப்பாற்றலாம். எமக்கான காணி உரிமையை தராதவரை இவரும் இனவாதிதான் என்பதை நினைவூட்டலாம். நாம் பிரிந்து நின்றதாலே இவர் எமது பகுதியில் வெல்ல முடிந்தது என்பதை விளங்கபடுத்தி - எதிர்கால ஒற்றுமையை வலியுறுத்தலாம். மிக முக்கியமாக - இந்த அனுர பேய்க்காட்டல் பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87 ஒப்பந்தம், இடைக்கால நிர்வாக சபை போன்ற இன்னுமொரு பேரினவாத பேய்காட்டல் என்பதை புரிய வைத்து - தமிழ் தேசிய அரசியலே நிரந்ததர தீர்வை தரும் என்பதை உணர்த்தலாம். இவர்கள் இருவரும் இனவாதிகள். இவர்கள் ஒரு போதும் எமக்கு காணி, பொலிஸ் அதிகாரம் தாமாக தரபோவதில்லை. இருக்கும் 13 ஐயும் உருவ கூடியவர்கள். எனவே மக்கள் விழிப்புடன் இருந்து இவற்றை பெற போராட வேண்டும்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
கடந்த 76 வருடத்தில் எப்போ அண்ணை சர்வதேச அரசியல் போக்கு எமக்கு சாதகமாக இருந்தது - ஆனாலும் நாம் கேட்பதை கேட்டோம் இல்லையா ? நாம் அனுர ஆட்சியின் ரிப்போர்ட் கார்ட்டை ஆராயத்தேவையில்லை. அது இலங்கை தேசியம் சம்பந்தபட்டது. நாம் இலங்கையின் அரசுகளை, தலைவர்களை எடைபோடும் ஒரே அளவிடை - இனப்பிரச்சனைக்கான தீர்வில் அவர்கள் நிலைப்பாடு. நாம் கூறுவது எதிர்வு கூறலும் அல்ல, பண்டாடநாயக்க-ரணில் போல இன்னுமொரு இனவாதியே அனுரா. தென்னிலங்கையின் இன்னொரு இனவாத கட்சியே ஜேவிபி. மைத்திரி வந்த போது அவகாசம் கொடுத்தோமா? கோட்ட வந்த போது? அவர் ஓடி ரணில் வந்த போது? அப்போ இவருக்கு மட்டும் ஏன் அவகாசம்? அப்படி இவர் மீது நம்பிக்கை வர என்ன இருக்கிறது?
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
வந்திருப்பது சகோதரயாக்களின் ஆட்சி… அவர்களுக்கு market forces என்றாலே நவதுவாரங்களிலும் “எரியுதடி மாலா”தான். ஆகவே இது கொஞ்சம் சிக்கலாக போகும் போலத்தான் இருக்கு. பாடசாலை சீருடையை தைத்து வழங்கல்…. 12 வயதுக்கு கீழ் விளம்பர படங்களில் நடித்தல் ஆகாது என கொஞ்சம் கொஞ்சமாக தம் நனைத்துச் சுமக்கும் பொருளாதார அணுமுறையை புகுத்துகிறார்கள்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இவை எல்லாம் யாழில் பல வருடங்கள் முன்பே எதிரும் புதிருமாக பலமுறை விவாதிக்கப்பட்ட விடயங்கள் வல்லவன். உங்களை விட யாழில் வீரியமாக எழுதிய பலர் - இப்போ அனுரவிற்கு கொஞ்ச காலம் கொடுப்போம், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதிருப்போம், இனவாதத்தை கட்டுப்படுத்த பயங்கரவாத சட்டம் வேண்டும் என்ற அளவிற்கு இறங்கி வந்து விட்டார்கள். இதுதான் 87 இல் எடுத்த சாதுரியமற்ற முடிவுகள் இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை, திம்பு கோட்பாட்டை கொண்டு வந்து விட்டுள்ள இடம். 2009 இன் பின் வந்த, வருகின்ற ஒவ்வொரு வருடமும், 87 இல் ஒரு இனமாக நாம் எந்தளவு பெரிய தவறை இழைத்தோம் என்பதை ஒவ்வொரு படி அதிகரித்தே காட்டி போகிறது. மண்டியிடாத வீரமும், விட்டு கொடாத கொள்கை பற்றும், குடும்பத்தையும் காவு கொடுத்த வீரமும் இன்ன பிற செயற்கரிய பண்புகளும் எவ்வளவு உண்மையோ அதே போலத்தான், நண்பர்கள் யாருமற்ற ஒரு சின்னம் சிறிய இனத்தின் தலைவருக்கு அத்தியாவசியமான நெகிழ்வுபோக்கு இல்லாமல் இருந்தது என்ற உண்மையும். இதை சொல்லும் பாங்கில் முரண்படலாம். செய்தியில் அல்ல.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஐலண்ட் தனக்கான வக்காலத்தை வாங்குவார். வாங்காது விடுவார். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் இங்கே மாவீரர்களோ, போராளிகளோ அவமானப்படுத்தபட்டதாக எனக்கு தெரியவில்லை. 87 இலும் அதன் பின்னும்….இந்திய வல்லாதிக்கத்தை நாம் கையாண்ட முறை நையாண்டிக்கு ஆளாகியது. அது கூட கையாண்ட தலைவர் மீதான நையாண்டி அல்ல. அணுகுமுறை மீதான நையாண்டியே.
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை - இராமலிங்கம் சந்திரசேகர்!
அனுர பாடசாலை சீருடையை தைத்து கொடுக்க போறாராம்… நெய்தல் படை அதற்கு பயன்படுமே?
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை - இராமலிங்கம் சந்திரசேகர்!
கச்சதீவில் இரு பகுதி மீனவரும் வலை உலர்த்த அனுமதி உள்ளது. அதே போல் திருவிழாவுக்கு வழமையான விசா நடைமுறைகள் இன்றி அனுமதிக்கும் முறையும் இருக்கிறது. இந்தியன் பாஸ்போர்ட் மற்றும் இலங்கை வீசா இல்லாமல் இந்தியர்கள் கச்சதீவுக்கு வந்து போகலாம். இவை எல்லாம் கச்சதீவு உடன்படிக்கையின் அங்கங்கள். ஏலவே இருக்கும் இந்த உடன்படிக்கையின் பிரகாரம், இந்திய மீனவர்களை இலங்கை நேவி, கச்சதீவில் வைத்து இந்திய நேவியிடம் கையளிக்கலாம். முன்னர் இப்படி கையளித்த சம்பவங்கள் நடந்துள்ளது என நியாபகம்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இதை இப்படியும் எழுதலாம் 👆👇🤣
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
என்ன நியாயம் இது, சுமந்திரனோட கோவிச்சு கொண்டு கால் கழுவாமல் இருப்பதா🤣. நமக்குத்தானே மணக்கும்🤣. சொறி வரும்🤣. மாகாணசபை தேர்தல் வேண்டும். சுமன் தன் அடிப்பொடிகளை பாவித்து அதில் கேட்க முனைந்தால் - சிறி அதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர் என்ன தமிழரசு கட்சி தலைவரா இல்லை மிக்சர் மாமாவா எண்ட கேள்வி எழும். அதுவும் முடியாவிட்டால்….சிறி, கஜேஸ், செல்வம், விக்கி அணி இணைந்து ஒரு பலமான தேர்தல் கூட்டை அமைத்து, சுமன், அனுர இருவரையும் தோற்கடிக்க வேண்டும். சுமனை சாட்டி கொண்டு இவர்கள் காலம் தாழ்துவதை, பிரிந்து நிற்பதை இனியும் ஏற்க முடியாது.
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை - இராமலிங்கம் சந்திரசேகர்!
டக்கிளஸ் பஸ்சை கடலுக்குள் இறக்கினதுக்கு என்ன பலன் கிடைத்தது என யாருக்கும் தெரியுமா? ———— இலங்கை நேவியை பாரிய எடுப்பில் வடக்கு கடலில் இறக்கி வரும் ஒவ்வொரு டிரோரலையும் எல்லையில் வைத்து திருப்பி அனுப்பலாம். உள்ளே வந்தவற்றை கைப்பற்றி ஏலம் விடலாம். ஆட்களை ஒரு தீங்கும் செய்யாமல் கச்சதீவில் இரு நாட்களுக்கான உலர் உணவுடன் இறக்கி விட்டு விட்டு, வந்து கூட்டி போகும் படி இந்தியன் நேவிக்கு அறிவிக்க வேண்டும். 15 வருடம் சும்மா தண்டமா சோறு போட்டு வளக்கும் இலங்கை நேவிக்கு இது ஒரு ஆக்கபூர்வமான வேலையாக இருக்கும்.
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
கடவுள் பற்றி கமல் சொன்னதுதான். இல்லை எண்டு சொல்லவில்லை…. இருந்தா நல்லா இருக்கும் எண்டுதான் சொல்றேன்…. ஆனா இதுவரைக்கும் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
ஏன்னா எல்லா கூடையும் ஓட்டை கூடை என்பது பட்டறிவுங்க.
-
பாடசாலை சீருடைகள் தொடர்பில் வெளியான தகவல்
இது ஏற்க கூடியதே ஆயினும், இதனால் மிகவும் ஏழ்மையில் உள்ள ஊர்களில் உள்ள டெயிலர்களின் வருமானம் பாதிக்கும். ஆனால் தைப்பதற்க்கான செலவை அரசு பெரிய நிறுவனங்களுக்கு (சீருடை சப்ளையர்) கொடுக்கும். இது ஏழை டெயிலரிடம் எடுத்து பணக்கார கம்பெனியிடம் கொடுக்கும் வேலை. இதை விட தைப்பதற்குரிய காசை பெற்றாரிடம் வவுச்சர் முறையில் கொடுக்கலாம். மிக முக்கியமாக எல்லோருக்கும் ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும் ? இலங்கையில் கொழும்பில் 10 வீடு வாடகைக்கு விடும் செல்வந்தரின் பிள்ளையும் இலவசமாக சீருடை எடுக்கும். இதை means test அடிப்படையில் கொடுக்கலாம். ஏலவே மஹாபொல இப்படிதான் கொடுக்கப்படுகிறது.
-
பாடசாலை சீருடைகள் தொடர்பில் வெளியான தகவல்
இந்த முறைதான் என நான் முன்பு நினைத்தேன் (என் முதலாம் பதிவு)… ஆனால் @குமாரசாமி அண்ணை அப்படி இல்லை என்கிறார். இந்த முறையும் வினை திறனானது அல்ல - ஏன் என்பதை என் முதல் கருத்தில் எழுதியுள்ளேன். ஜனவரி 1 முதல் - 12 வயதுக்கு கீழானவர்கள் விளம்பரத்தில் நடிக்க அடியோடு தடையாம். ஆபாசமாக உடுத்த கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை - ஒட்டு மொத்த தடை! இனிமேல் பேபி ஷெரமி, பம்பர்ஸ் விளம்பரங்களில் எல்லாம் அனுர வைத்தான் நடிக்க வைக்க வேண்டும் 🤣. https://colombotimes.lk/SRI-LANKA-BANS-CHILDREN-UNDER-12-IN-ADS.html
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
1. உள்ளே இருந்தபடியே பிள்ளையான் வென்றார். முன்னர் சந்திரசேகரனும் சிறையில் இருந்தே பாராளுமன்றம் போனார், வருடக்கணக்கில். ஆகவே பிள்ளையானை விசாரணைக்கு அழைத்ததெல்லாம் ஒரு காரணமில்லை. 2. ஜேவிபியில் கேட்டவர்கள் தமிழரும் இருந்தனர். ஒருவர் வென்று எம்பி ஆகி உள்ளார். ஆகவே இங்கே இன்னொரு தமிழரை தேர்த்திருக்கலாம் (விருப்பு வாக்கு) 3. அல்லது சஜித் அணியில் ஒரு தமிழருக்கு போட்டிருக்கலாம். 4. மட்டகளப்பில் மக்கள் சாணக்கியனின் செயல்பாட்டின் அடிப்படையில், தமிழ் தேசிய கொள்கை அடிப்படையில் தமிழரசுக்கு போட்டனர். இதுதான் உண்மை. உங்கள் அண்ணர் தம்பியின் பொழப்பில் மண் விழும் என்பதால் மக்கள் தீர்ப்பை தவறாக வியாக்கியானம் செய்ய வேண்டாம்.
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
ஆனுர பிரிகேட் அப்போ எதிர்த்த “சுமந்திரன் வரைபின்” அடிப்படையில்தான் அனுரவும் தீர்வை அணுகுவார்? @satan போன்ற சுமன் எதிர்ப்பு ஆனால் ஆனுர ஆதரவு ஆட்களுக்கு டெலிக்கேட் பொசிசன்🤣. அதில் இருந்த கொஞ்ச நஞ்ச அதிகார பகிர்வும் கந்தல்? ஒட்டு மொத்த சிங்கள மக்களும் ஏற்கும் தீர்வு - இதில் காணி பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு பகிரபடின் - நானே என்பிபி ஆதரவுக்கு மாறுவேன்🤣 வெறும் வார்த்தை ஜாலம். தமிழ் மக்கள், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள், மூவரதும் எதிர்பார்ப்பும் ஒன்றல்ல. இவர் ஒன்றே என நடிக்கிறார். அனுரவுக்கு அவகாசம் கேட்கும் குரூப்பில் நீங்கள் இல்லையா? உங்கட தோஸ்த்து - பயங்கரவாத தடை சட்டம் அவசியம் எண்ட ரேஞ்சுக்கு இறங்கீட்டார்.