Everything posted by goshan_che
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் சிரித்தது …..ஒரு வடக்கு-கிழக்கு அமைச்சர் கூட இல்லை என்பதற்கு. மக்கள் மாற்றம் விரும்பி முதல் முறையாக ஒரு சிங்கள கட்சிக்கு வடக்கின் இரு தேர்தல் மாவட்டங்களையும் அள்ளி கொடுத்தமைக்கு ஒரு சமிஞ்ஞை கூடவா காட்ட முடியாது? கீழே உள்ள செய்தித்திரியில் அனுர ஆதரவு தமிழர், முஸ்லிம்களின் கதறலை - கொமெண்ட்ஸ்சில் போய் வாசியுங்கள். அவர்களின் கதறலை -woke, political correctness என சொல்லி அடித்து மூடுகிறார்கள் இனவாதிகள். https://www.dailymirror.lk/top-story/President-retains-Defence-Finance-and-Digital-Economy-Ministries/155-296203#
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
🤣 இடுக்கண் வருகால்….🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அப்படியா? பகிர கூடிய காரணமா? அப்போ ஏன் வேட்பாளாராக நிறுத்தி எம் தலையில் கட்டினார்கள்? எப்பவுமே ஓவர் பில்டப் கொடுப்பவர்கள் கடைசியில் கள்ளர் என்றே ஆகும். உலகில் அரசியல்வாதிகள் அதிக சம்பளம் எடுக்கும் ஊர் சிங்கப்பூர். அப்போதான் கை நீட்டமாட்டார்கள் என்பதால். இவர்கள் ஒண்டும் சுத்தம் இல்லை - அனுரவுக்கு என கொடுத்த மாடிவெல வீட்டில், எம்பி இல்லாத லால்காந்த பலவருடம் வாழ்ந்தார். இதுவும் ஊழல்தான். இதுவரை இந்த சின்ன ஊழலுக்குத்தான் வாய்ப்பு எனவே அதை செய்தனர். இனித்தான் உண்மையில் கைசுத்தமா என தெரியும்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அட அனுரவே யாழ்பாணத்தான் பிறகு நமக்கென்ன கவலை. அனுர பிரிகேட் 🤣 மூணு சீட் கொடுத்த யாழ்பாண மானஸ்தனுக்கும் நாலு ரூபா சாப்பாடா…ஐயகோ🤣. இதுதான் ஜேவிபி. 2/3 எடுத்தவுடன் என் பி பி முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக களர்கிறது. உள்ளே இருந்து வர்க்கவாத, இனவாத ஜேவிபி வரும் போது…. கோசானின் ஊகங்கள் எல்லாம் புரியும்🤣.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
பனங்கொட்டை சுவைத்தல் மட்டும்தானாம்🤣 போக போக தெரியும். அமைச்சரான தமிழர் இருவரும் கதிர்காமர் 2.0 டமாரா குணநாயகம் 2.0 தான். முத்திரை தயார் - மையில் தோய்ப்பதா இல்லையா என அடுத்த நடவடிக்கைகளை பார்த்து முடிவு செய்வோம். கப்டன்_சிறி அனுர பிரெகேட் கட்டளை அதிகாரி.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அண்ணை, அமைச்சரவை என்பது ஜேவிபி மத்திய குழு அல்ல. கட்சி சினியாரிட்டி பார்த்து பதவி கொடுக்க. அது நாட்டில் உள்ள சகல தரப்பினரும் உள்ளடக்கப்பட்ட ஒரு கூட்டு ஆட்சி பொறிமுறை (கூட்டாட்சி அல்ல). நீங்கள் பின் கதவு என கேவலமாக எழுதும் தேசிய பட்டியல் இதற்காகவே அமைக்கப்பட்டது. அதாவது ஒரு நிபுணத்துவம், அல்லது பிரதிநிதிதுவம் பாராளுமன்றில் அல்லது அமைச்சரவையில் தேவைப்படும் போது, தேர்தல் மூலம் வெல்லாத ஒருவரை உள்ளே கொண்டு வரும் முறை. இங்கே வடக்கு கிழக்கு தமிழர், முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதிநிதிதுவம் வழங்க நிபுணர்கள் இருவரை தேசியபட்டியல் மூலம் உள்ளே ஈர்த்திருக்கலாம். அல்லது சிறிபவாநந்தராஜாவுக்கு ஒன்றை கொடுத்திருக்கலாம். நாம் எல்லோரும் லங்கா மாதாவின் பிள்ளைகள், எல்லோருக்கும் நாட்டின் அரசாட்சியில் பங்கு உண்டு என மனதார நம்பும் கட்டி அப்படித்தான் செய்திருக்கும். ஆனால் ஜேவிபி அப்படி செய்யவில்லை. இவர்களில் லால்காந்த, ஹிரிணி, ஹேரத் தவிர மீதி அனைவரும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்தான். சிங்கள அமைச்சர்கள் சிலரும், ஜேவிபி உறுப்பினரே அல்ல. ஹிரிணி கூட என் பி பி உறுப்பினர் மட்டுமே. ஜேவிபி அல்ல. இங்கே அமைச்சரான பலரை விட MH ஆக இருந்த சிறிபவாநந்தராஜா நிர்வாக அனுபவசாலி. ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை - தமிழர் என்பதால். ஆனால் அவர் போய் வெட்கம் இல்லாமல் பிக்குவின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்🤣.
-
வடக்கு பறிபோனது கிழக்கு பலமடைந்தது
இந்த வீதியின் உள்ளே காணிகள் உள்ள மக்கள் - ஜனாதி பதிக்கு பலர் சேர்ந்து கையொப்பம் இட்டு கடிதம் அனுப்பியும் ஒரு பதில் தன்னும் இல்லையாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அனுமதி அளிப்பார். ஆனால் புலிகளை நேரடியாக நினைவு கூறும் பாடல், படங்கள், பதாதைகள், அவர்கள் கொள்கைகளை பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விஜயவீரவின் மகனை வாழ விட்டவர்கள், ஏன் பாலச்சந்திரன் வரை போய் அழித்தார்கள் என்பதில் இருக்கிறது இதற்கான விடை. 100% கூடவே எமக்கு கண்ணுக்கு புலப்படும் ஜேவிபி ஒன்று…. அதை கட்டுப்படுத்தும் நிஜ தலைமை வேறு ஒன்று….. அனுர…டில்வின் எல்லாம் பொம்மைகள்தான்…. நிஜ அதிகார மையம், கடும் வர்க்கவாத, இனவாத போக்குடையது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பயப்படாதேங்கோ உங்களை அனுர பிரிகேட்டில் சேர்க்கமாட்டோம். ஆனால் ஆட்சி என்பதும் நாடு என்பதும் கட்சி அரசியலையும் தாண்டிய விடயம். வடக்கு-கிழக்கு தமிழர், முஸ்லிம்களுக்கு அவர்கள் பிரதேசத்தில் உரிமையை பகிர வேண்டும், அல்லது பெயரளவிலாவது மத்திய அரசில் இடம் கொடுக்க வேண்டும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பெளத்த சாசனத்துக்கு தனி அமைச்சு. ஆனால் அதில் பெயருக்கும் ஏனைய மத அமைச்சுக்கள் சேர்க்கப்படவில்லை. 2/3 பெரும்பான்மையை கொண்ட கட்சி ஏனைய கடைகளில் இருந்து ஆட்களை அமைச்சராக்காது என்பது தெரிந்ததே. ஆனால் JVP இப்போ முன்னிலை படுகிறது, NPP இனி கொஞ்சம் கொஞ்சமாக பிந்தள்ளப்படும். வடக்கில் இருந்து ஐந்து போடுகாய்களை அனுப்பினோமே அவர்களில் ஒருவருக்காவது?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வடக்கு கிழக்கில் இருந்து எவரும் இல்லை …..ப்..பூ…ஹா…ஹா…. அந்த இருவருமே…தெற்கில் பிறந்து வளர்ந்த பெயரளவு தமிழரே…. வச்சு செய்தல் ஆரம்பம்🤣 🤣…..நல்ல அறிவுரை… இது யாழ்கள அனுர பிரிகேட்டுக்கும் பொருந்துமா?
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இல்லை ஆனால் நீங்கள் ஆடுவது போல் அனுர காவடி யாழில் வேறு எவரும் ஆடுவதில்லை. ஆகவேதான் விளாசல். அது சரி @satan @கிருபன்@ஏராளன் யாழ் என் பி பி எம்பிகள் போய் புத்த பிக்கு காலில் விழுந்து புரளும் வீடியோ ஒன்றை வாட்சப்பில் பார்த்தேன். இதன் இணைப்பு இருந்தால் இணைக்க முடியுமா? சும் + ஜயம்பதி வரைந்த்தார்கள். ஆனால் மைத்திரியை பதவிக்கு கொண்டு வந்த ரணில், அனுர, மைத்திரி, ஆகியோர் இதில் ஈடுபட்டனர்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அந்த ஏக்கிய ராஜ்ஜிய குழுவில் அனுரவும் இருந்தார். அப்போ மகிந்த, கோட்டா ஜனாதிபதியாக இருந்த போதே அவர்கள் கட்சிக்கு போட்டிருக்க்லாமே. என்ன உருட்டு ஐயா இது. ஒரு ஊழல் இல்லாத புதிய, வினைதிறன்னுள்ள தேசிய வழி நிற்கும் தமிழனை காட்டி அவருக்கு போட்டிருக்கலாமே என சொன்னால் - அவர் ஜனாதிபதி இல்லை என்கிறீர்கள்🤣. அப்போ செல்வநாயகம், அமிர்தலிங்கள், தலைவர் (அவர் கைகாட்டிய ததேகூ) இவர்கள் கடைக்கு எல்லாம் போட்டீர்களே அதன் தலைவர்கள் ஜனாதிபதிகளாகவா இருந்தானர்?
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
நல்லதே நடக்கும் நம்புவோம். விஜை 60 சீட் கேட்டுள்ளாராம்… ஆனால் இது மிக குறைவு. அதிமுக+விஜை+திருமா கூட்டணியில் திருமா முதலமைச்சர் வேட்பாளர் என போட்டால் தூள் கிளப்பலாம்.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
கண்ணதாசன் அடி முடி தேடினீர்களா? அப்பறம் வருத்தபட வேண்டி வரப்போகிறது. ஒரே மூச்சில் திராவிடர் என்றும் தமிழன்னை என்றும் ஒரே கூட்டத்தின் வீரத்தை பற்றி எழுதுகிறார். ஆகவே அவரை பொறுத்ததமட்டில் திராவிடர் = தமிழர். அன்ரி எஸ்கேப். விஜி ரேப் கேஸ். இல்லைன்னா பயிற்சி🤣 கண்ணதாசன் செட்டியார். செட்டியும் ரெட்டியும் ஒண்ணு இதை அறியாதார் வாயில் மண்ணு எண்டு முந்தி நாதக தம்பிகள் உருட்டியுள்ளார்கள்.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
அன்றைய சேரர்தான் இன்றை மலையாளிகள் (திராவிடரின் 1/4 பங்கு) மற்றும் ஈழத்தமிழர் (சேர, சோழ கலப்பு). நீங்கள் முந்தி, சரோஜாதேவி, இன்பநிலா, திரைச்சித்திரா போன்ற சஞ்சிகைகளின் சந்தாதாரராக இருந்தீர்களா? சீமான் என்ன சொன்னாலும் கைது செய்யமாட்டார் ஸ்டாலின். காராணம் சீமானின் அரசியல் செல்வாக்கு…. யாரிடம் இருந்து ? மோ……? அமி…..?
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
அரசியலில் இருக்கும் போதுதான். பிரேமதாசா காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் சம்பந்தமாக அன்னையர் முண்ணனி, தொழில் சங்கங்களுடன் சேர்ந்து மகிந்த போராடினார், ஐநா வரைக்கும் போனார். ஆனால் அப்போதும் அவர் சு.க எம்பிதான்.
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
இல்லை உங்களை அடக்கவில்லை. நீங்கள் தமிழ் தேசியவாதி இல்லை எனும் போது உங்கள் எதிர்பார்ப்பு சகல இலங்கையரினதும் வழக்கை மேம்பட்டால் போதும் என்பதே. நீங்கள் தமிழ் தேசியர் இல்லாதபடியால், திட்டமிட்டு குடியேற்றங்கள் மூலம் எம் நிலத்தில் எம் இனப்பரம்பல் சிதைக்கப்படுவதும், விகாரைகள் முளைப்பதும் உங்களுக்கு பொருட்டாயிராது. எமது பகுதியில் நீங்கள் வசிக்கும் நாடு போல ஒரு உள்ளூர் பொலிஸ் இருக்க வேண்டும் என்பதும் உங்கள் அவா இல்லை. எமது பகுதிக்கு என நாம் அனுப்பும் பணத்தை எங்கே எப்படி செலவழிப்பது என்று, கொழும்பு அதிகாரிகள் அன்றி அந்த பகுதி மக்களே செலவழிக்கும் முடிவை எடுக்கும் அதிகாரம் வேண்டும் என நீங்கள் நினைக்க போவதில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழ் தேசியர் அல்ல. நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ளூர் அதிகார பரவலின், மொழி வழி கண்டோன் பிரிப்பின் அத்தனை வரபிரசாதங்களை நீங்கள் அனுபவித்தாலும், இதை எம்ம்மக்களும் பெற வேண்டும் என்ற வீண் அவா உங்களுக்கு இல்லை. அவர்கள் கொழும்பில் இருந்து தொந்தரவு இல்லாமல் ஆளப்பட்டால், போதும் என நீங்கள் நினைக்கிறீர்கள். எனவே நீங்கள் தமிழ் தேசியர் இல்லை. அதனால் அனுரவிற்கு ஆதரவு நல்லினாலும் நீங்கள் அனுர பிரிகேட்டில் இல்லை. அனுர பிரிகேட், தமிழ் தேசியமும் பேசி கொண்டு, அனுரவையும் ஆதரிக்கும் கொன்பியூஸ்ட் கூட்டம்.
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
ஓம்…ஆனால் அதுக்கே நமக்கு முள்ளத்தண்டு சிலிர்த்து விடும்🤣.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
நன்றி ஜி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எனக்கு என்னமோ கொல்வின் ஆர்டி செல்வா, பீட்டர் கெனமன், போன்ற படித்த பெருந்தகைகள் எல்லாம் 1972 தேர்தல் வெற்றிக்கு பின், பாராளுமன்றுக்கு வெளியே நவரங்க ஹலவில் கூடி…. சிறுபான்மைக்கு பாதுகாப்பை கொடுத்த, ஆங்கிலேயர் விட்டு சென்ற சோல்பரி யாப்பை தூக்கி வீசி, நாம் இலண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு முறைப்பாடு அணுகும் உரிமையை பறித்து, மீறப்பட முடியாது என சோல்பரி யாப்பு கூறிய சிறுபான்மையின பாதுகாப்பு சரத்துகளை எல்லாம் கடாசி எமக்கு பொறுத்த ஆப்பை சொருகிய தருணம்தான் நினைவுக்கு வருகிறது.
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
யாழ்கள அனுர பிரிகேட் மைண்ட்வாய்ஸ்: சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
கஸ்தூரியும் கணவரும் பிரிந்து 20 வருடம் இருக்கும் என நினைக்கிறேன். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை மட்டும் என நினைவு. பிற்சேர்க்கை - ஒரு ஆண் குழந்தையுமாம். அதை ஏன் மறைத்து வளர்க்க வேண்டும். நுணலும் தன்வாயால் கெடும். இருக்கலாம். எழுத்து நடை பாரதிதாசன் போலவே உள்ளது. @Kavi arunasalam உங்களுக்கு தெரியுமா?
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
பாரதியா கடிதம் எழுதியது தெரியும் ஐலண்ட். அச்சம் என்பது மடமையடா பாடல் கண்ணதாசன் எழுதியது என நினைக்கிறேன்?
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
இது கண்ணதாசன் அல்லவா?