Everything posted by goshan_che
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
யாழ் ஆரியகுளத்தடியில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர். இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை. டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. - சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இலங்கையில் எவரும் தமிழ் பேசும் சமூகம் என உணர்வதில்லை. இது வெறும் வார்த்தை மட்டுமே. அவர்கள் சோனர் அல்லது இலங்கை முஸ்லிம்கள் - தனி இனப்பிரிவு என்கிறது அரசியலமைப்பு சட்டம். அவர்களும் அவ்வாறே உணர்கிறனர். அதே போல் இந்திய வம்சாவழி தமிழர், இலங்கை தமிழர் என இரு பிரிவுகள் இருப்பதையும் இலங்கை குடிசன மதிப்பீடுகள் ஏற்கிறன. இதில் நீங்கள் சொன்ன இரு தமிழ் அமைச்சர்களும் இந்திய வம்சாவழியினரே. இலங்கை வம்சாவழி (வடக்கு-கிழக்கு) தமிழரும், சோனகர் போலவே அமைச்சரவையில் இடம் இல்லாமல் ஒதுக்கலுக்கு ஆகியுள்ளனர். இதில் சரஜோ அக்கா - அசித்த எனும் சிங்கள வைத்தியரை மணம் முடித்து மாத்தறையில் வாழ்பவர். இவர்கள் இருவரையும் காட்டி - இலங்கை தமிழருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கபட நாடகம்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இதன் பின்னால் இருப்பது பெளத்த சிங்கள மேலாண்மைவாதம் என்றே நான் நினைக்கிறேன். தமிழர்களை அடக்கி ஆகி விட்டது. ஆனால் யுத்தத்தை பாவித்து முஸ்லிம்கள் தம் இருப்பை அதிகரித்ததுடன் மிகவும் உயர் பதவிகளிலும், குறிப்பாக வியாபாரம், வங்கி துறைகளை கையில் வைத்துள்ளார்கள் என்பதும், தமிழரை தட்டி வைத்தது போல இனி இவர்களையும் தட்டி வைக்க வேண்டும் என்பது பேரினவாதத்தின் அடுத்த இலக்கு. 1. முதலில் அவர்கள் பகுதியில் அவர்களின் வாக்கு வங்கிக்கு ஆபத்தாக இருந்த மலையக தமிழரை நாடு கடத்தி அவர்கள் வாக்குப்பலத்தை பாதிக்கும் கீழாக்கினர். 2. பின்னர் நம் மீது இனவழிப்பு போர் 3. இப்போ முஸ்லிம்களின் முறை. இவர்கள் மீதும் வன்முறையை திணித்தார்கள் ஆனால் அதை அவர்கள் வடிவாக கையாண்டபடியால் - இப்போ மறைமுக ஒதுக்கலில் இறங்கியுள்ளார்கள். ஒவ்வொரு முறை ஒரு சிறுபான்மையை அடக்கும் போதும் - ஏனைய சிறுபான்மைகள் அதை வரவேற்கும் அல்லது காணாமல் இருக்கும்படி செட்டப் செய்வார்கள். முஸ்லிம்களை பொறுத்தவரை - அறகலவுக்கு ஆக்கி கொடுத்த பிரியாணி எல்லாம் வீணாப்போய்டே என்ற நிலைதான். அமைச்சு செயலாளர்களில் ஒரு தமிழ் பெயர் தென்படுகிறது. மருந்துக்கும் ஒரு முஸ்லிம்மும் இல்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவரின் கணவர் சிங்கள இன சத்திரச்கிச்சை நிபுணரான ஹசித்த ஆவார்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நீங்கள் சொன்ன எதிலும் முரண்பாடில்லை. ஆனால் இப்படி ஒரு தலைமைதுவம் இல்லாதா வங்குரோத்து இனமாக நாம் திட்டமிட்டு 2009 இருந்து ஆக்கப்பட்டுள்ளோம். இந்த சதியின் முக்கிய, முடிவு அங்கமே ஜேவிபி. அருச்சுனாவின் இயலுமையில் எனக்கும் அதிக நம்பிக்கை இல்லை, ஆனால் இவர்கள் எல்லோரையிம் விட அருச்சுனா அணியில் நேர்மையான, இளமையான, கறைபடியாத இளைஞர்கள் இருந்தார்கள். அவர்களை இனம் கண்டு வாக்கு போட முடியாத அளவுக்கு எமக்கு கூட்டாக மூளை மழுங்கி விட்டதே என்ற ஆதங்கம்தான்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இல்லை பொறகு தமிழ் தேசியம் அருச்சுனா கையில் கொடுத்த கெளசல்யா போல் ஆகி விடும்🤣. உங்களை தேசியபட்டியல் மூலம் உள்ளீர்க்க வேண்டும் என நான் சாகும் வரை உண்ணும் விரதம் இருக்கப்போகிறேன்🤣.
-
தமிழகத்தின் திரையரங்குக்கு பெட்ரோல் குண்டு வீச்சு - சர்ச்சையை கிளப்பிய “அமரன்”
பாட்டு என்றால் நான் பாகவதர், TR மஹாலிங்கம் முதல் அனிருத், சிட் ஶ்ரீராம் வரை கேட்பேன். இப்போ யாரு என்ற ஒரு புலம்பெயர் ரப்பர்தான் காரில் ஓடுது.
-
தமிழகத்தின் திரையரங்குக்கு பெட்ரோல் குண்டு வீச்சு - சர்ச்சையை கிளப்பிய “அமரன்”
மூன்று நாலு வருடத்துக்கு ஒரு படம் தியேட்டரில் பார்ப்பேன். டிவியில் படம் பாத்து 15 வருடம் இருக்கும். ஆனால் விகடன், தட்ஸ்தமிழ், டிவிட்டரில் சினிமா தகவல்களை தவறாது வாசிப்பேன்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
நன்றி @நீர்வேலியான் @ரசோதரன். நீங்கள் இருவரும் சில வருட இடை வெளியில் அக்பர் ஹால் வாசிகள் என்பது புரிகிறது. நீர்வேலியானை போலவே, சென்ரல்பாங் குண்டு வெடிப்பு நேரம் நான் பள்ளியில் இருந்தேன். சத்தம் கேட்டு, விபரம் அறிந்தத்தும் எமது வகுப்பில் உள்ள பிரளிக்காரன் ஒருவன் டீச்சரின் மேசை மேல் ஏறி சென்ரல் பாங்க் கவிண்டிட்டாம் எண்டு பாட, இன்னும் கொஞ்ச பேர் அவனோடு சேர்ந்து கைதட்ட…சிங்கள மாணவர்கள் டென்சன் ஆகி விட்டார்கள். முழு வகுப்புக்கும் அடிப்போட பிளான் பண்ணுவதை அறிந்த பிரதி அதிபர் உடனடியாக வந்து எங்களை அரை நாளில் வீட்டுக்கு அனுப்பினார்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
சரோ அக்கா குருபரனுக்கு அழகு தமிழில் கொடுத்த பேட்டி. இப்போ விளங்குகிறதா @நிழலி மாத்தறையில் ஒரு சீட் வெல்ல எதை எல்லாம் இழக்க வேண்டும் என்பது? இவர்கள்தான் மும்மொழி கொள்கையை நடைமுறை செய்ய போகிறார்கள்🤣. அது சரி மைத்திரி ஆட்சியில் இருந்த மொழி அமலாக்கல் அமைச்சு இந்த முறையும் இல்லை என்பதை கவனித்தீர்களா?
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
இவர்களை யூனியில் ஜெப்பாஸ் என அழைப்பார்கள் எனக்கேள்வி. ராகிங் என்ற பெயரில் சராசரிக்கு மேல் செல்வ பின்புலம் உள்ள மாணவர்களை கொடுமைப்படுத்துவார்களாம். உண்மையா? நான் பார்த்த மட்டில் அமைச்சரவையில் அநேகம் பலவருட ஜேவிபி கொள்கையில் புடம் போட்டு வந்த ஆட்கள்தான் என நினைக்கிறேன். என் பி பி என்ற பெயரில் 5 வருடத்துள் உள்வாங்கப்பட்ட ஜேவிபி அல்லாத useful idiots - பெரிதாக இல்லை. அந்த useful idiots - 2/3 எடுக்க பயன்பட்டார்கள். @தமிழ் சிறி சரோஜா பால்ராஜ் எந்த மொழியில் பதவி ஏற்றார்? அவருக்கு தமிழ் நன்றாக வரும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
click bail - லைக்ஸ் கிடைக்கும் என்றால் தற்கொலை செய்து அதை வீடியோ போடுவார்கள்🤣. இன்னொரு பில்டப் அனுர 5 வாகனத்துக்கு மேல் தொடராக போவதில்லை என. கிட்டதட்ட ரணில் போனது போலவே போகிறார்….ஆனால் வாகனங்கள் இடைவெளி விட்டு தொடருகிறன.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை… எனக்கும் அனுரவின் புஞ்சி அம்மேவுக்குமான திருமணப்பேச்சு சில சொல்லமுடியாத காரணங்களால் குழம்பி விட்டது அதுதான் காரணம்🤣. பகிர்வுக்கு நன்றி அண்ணா. இனி தமிழர் முஸ்லிம்கள் எதை கேட்டாலும்…. இலங்கையராக உணருங்கள், இனத்தின் அடிப்படையில் அன்றி நாட்டின் அடிப்படையில் சிந்தியுங்கள், woke, political correctness என சொல்லி வாயை அடைத்து விடுவார்கள். இது என்ன - அனுரவின் ஜனாதிபதி தேர்தல் முடிவு நேரம், என் பி பி, ஜேவிபி யினர் சிரச டிவியின் நேரலையில் பச்சை இனவாதமாக எழுதினார்கள். சிலர் வடக்கு கிழக்குக்கு மின்சாரம் கொடுக்க கூடாது, தொப்பிகளும் **** தெமிளோவும் திருந்த மாட்டார்கள் என எழுதினர்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் சிரித்தது …..ஒரு வடக்கு-கிழக்கு அமைச்சர் கூட இல்லை என்பதற்கு. மக்கள் மாற்றம் விரும்பி முதல் முறையாக ஒரு சிங்கள கட்சிக்கு வடக்கின் இரு தேர்தல் மாவட்டங்களையும் அள்ளி கொடுத்தமைக்கு ஒரு சமிஞ்ஞை கூடவா காட்ட முடியாது? கீழே உள்ள செய்தித்திரியில் அனுர ஆதரவு தமிழர், முஸ்லிம்களின் கதறலை - கொமெண்ட்ஸ்சில் போய் வாசியுங்கள். அவர்களின் கதறலை -woke, political correctness என சொல்லி அடித்து மூடுகிறார்கள் இனவாதிகள். https://www.dailymirror.lk/top-story/President-retains-Defence-Finance-and-Digital-Economy-Ministries/155-296203#
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
🤣 இடுக்கண் வருகால்….🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அப்படியா? பகிர கூடிய காரணமா? அப்போ ஏன் வேட்பாளாராக நிறுத்தி எம் தலையில் கட்டினார்கள்? எப்பவுமே ஓவர் பில்டப் கொடுப்பவர்கள் கடைசியில் கள்ளர் என்றே ஆகும். உலகில் அரசியல்வாதிகள் அதிக சம்பளம் எடுக்கும் ஊர் சிங்கப்பூர். அப்போதான் கை நீட்டமாட்டார்கள் என்பதால். இவர்கள் ஒண்டும் சுத்தம் இல்லை - அனுரவுக்கு என கொடுத்த மாடிவெல வீட்டில், எம்பி இல்லாத லால்காந்த பலவருடம் வாழ்ந்தார். இதுவும் ஊழல்தான். இதுவரை இந்த சின்ன ஊழலுக்குத்தான் வாய்ப்பு எனவே அதை செய்தனர். இனித்தான் உண்மையில் கைசுத்தமா என தெரியும்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அட அனுரவே யாழ்பாணத்தான் பிறகு நமக்கென்ன கவலை. அனுர பிரிகேட் 🤣 மூணு சீட் கொடுத்த யாழ்பாண மானஸ்தனுக்கும் நாலு ரூபா சாப்பாடா…ஐயகோ🤣. இதுதான் ஜேவிபி. 2/3 எடுத்தவுடன் என் பி பி முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக களர்கிறது. உள்ளே இருந்து வர்க்கவாத, இனவாத ஜேவிபி வரும் போது…. கோசானின் ஊகங்கள் எல்லாம் புரியும்🤣.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
பனங்கொட்டை சுவைத்தல் மட்டும்தானாம்🤣 போக போக தெரியும். அமைச்சரான தமிழர் இருவரும் கதிர்காமர் 2.0 டமாரா குணநாயகம் 2.0 தான். முத்திரை தயார் - மையில் தோய்ப்பதா இல்லையா என அடுத்த நடவடிக்கைகளை பார்த்து முடிவு செய்வோம். கப்டன்_சிறி அனுர பிரெகேட் கட்டளை அதிகாரி.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அண்ணை, அமைச்சரவை என்பது ஜேவிபி மத்திய குழு அல்ல. கட்சி சினியாரிட்டி பார்த்து பதவி கொடுக்க. அது நாட்டில் உள்ள சகல தரப்பினரும் உள்ளடக்கப்பட்ட ஒரு கூட்டு ஆட்சி பொறிமுறை (கூட்டாட்சி அல்ல). நீங்கள் பின் கதவு என கேவலமாக எழுதும் தேசிய பட்டியல் இதற்காகவே அமைக்கப்பட்டது. அதாவது ஒரு நிபுணத்துவம், அல்லது பிரதிநிதிதுவம் பாராளுமன்றில் அல்லது அமைச்சரவையில் தேவைப்படும் போது, தேர்தல் மூலம் வெல்லாத ஒருவரை உள்ளே கொண்டு வரும் முறை. இங்கே வடக்கு கிழக்கு தமிழர், முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதிநிதிதுவம் வழங்க நிபுணர்கள் இருவரை தேசியபட்டியல் மூலம் உள்ளே ஈர்த்திருக்கலாம். அல்லது சிறிபவாநந்தராஜாவுக்கு ஒன்றை கொடுத்திருக்கலாம். நாம் எல்லோரும் லங்கா மாதாவின் பிள்ளைகள், எல்லோருக்கும் நாட்டின் அரசாட்சியில் பங்கு உண்டு என மனதார நம்பும் கட்டி அப்படித்தான் செய்திருக்கும். ஆனால் ஜேவிபி அப்படி செய்யவில்லை. இவர்களில் லால்காந்த, ஹிரிணி, ஹேரத் தவிர மீதி அனைவரும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்தான். சிங்கள அமைச்சர்கள் சிலரும், ஜேவிபி உறுப்பினரே அல்ல. ஹிரிணி கூட என் பி பி உறுப்பினர் மட்டுமே. ஜேவிபி அல்ல. இங்கே அமைச்சரான பலரை விட MH ஆக இருந்த சிறிபவாநந்தராஜா நிர்வாக அனுபவசாலி. ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை - தமிழர் என்பதால். ஆனால் அவர் போய் வெட்கம் இல்லாமல் பிக்குவின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்🤣.
-
வடக்கு பறிபோனது கிழக்கு பலமடைந்தது
இந்த வீதியின் உள்ளே காணிகள் உள்ள மக்கள் - ஜனாதி பதிக்கு பலர் சேர்ந்து கையொப்பம் இட்டு கடிதம் அனுப்பியும் ஒரு பதில் தன்னும் இல்லையாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அனுமதி அளிப்பார். ஆனால் புலிகளை நேரடியாக நினைவு கூறும் பாடல், படங்கள், பதாதைகள், அவர்கள் கொள்கைகளை பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விஜயவீரவின் மகனை வாழ விட்டவர்கள், ஏன் பாலச்சந்திரன் வரை போய் அழித்தார்கள் என்பதில் இருக்கிறது இதற்கான விடை. 100% கூடவே எமக்கு கண்ணுக்கு புலப்படும் ஜேவிபி ஒன்று…. அதை கட்டுப்படுத்தும் நிஜ தலைமை வேறு ஒன்று….. அனுர…டில்வின் எல்லாம் பொம்மைகள்தான்…. நிஜ அதிகார மையம், கடும் வர்க்கவாத, இனவாத போக்குடையது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பயப்படாதேங்கோ உங்களை அனுர பிரிகேட்டில் சேர்க்கமாட்டோம். ஆனால் ஆட்சி என்பதும் நாடு என்பதும் கட்சி அரசியலையும் தாண்டிய விடயம். வடக்கு-கிழக்கு தமிழர், முஸ்லிம்களுக்கு அவர்கள் பிரதேசத்தில் உரிமையை பகிர வேண்டும், அல்லது பெயரளவிலாவது மத்திய அரசில் இடம் கொடுக்க வேண்டும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பெளத்த சாசனத்துக்கு தனி அமைச்சு. ஆனால் அதில் பெயருக்கும் ஏனைய மத அமைச்சுக்கள் சேர்க்கப்படவில்லை. 2/3 பெரும்பான்மையை கொண்ட கட்சி ஏனைய கடைகளில் இருந்து ஆட்களை அமைச்சராக்காது என்பது தெரிந்ததே. ஆனால் JVP இப்போ முன்னிலை படுகிறது, NPP இனி கொஞ்சம் கொஞ்சமாக பிந்தள்ளப்படும். வடக்கில் இருந்து ஐந்து போடுகாய்களை அனுப்பினோமே அவர்களில் ஒருவருக்காவது?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வடக்கு கிழக்கில் இருந்து எவரும் இல்லை …..ப்..பூ…ஹா…ஹா…. அந்த இருவருமே…தெற்கில் பிறந்து வளர்ந்த பெயரளவு தமிழரே…. வச்சு செய்தல் ஆரம்பம்🤣 🤣…..நல்ல அறிவுரை… இது யாழ்கள அனுர பிரிகேட்டுக்கும் பொருந்துமா?
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இல்லை ஆனால் நீங்கள் ஆடுவது போல் அனுர காவடி யாழில் வேறு எவரும் ஆடுவதில்லை. ஆகவேதான் விளாசல். அது சரி @satan @கிருபன்@ஏராளன் யாழ் என் பி பி எம்பிகள் போய் புத்த பிக்கு காலில் விழுந்து புரளும் வீடியோ ஒன்றை வாட்சப்பில் பார்த்தேன். இதன் இணைப்பு இருந்தால் இணைக்க முடியுமா? சும் + ஜயம்பதி வரைந்த்தார்கள். ஆனால் மைத்திரியை பதவிக்கு கொண்டு வந்த ரணில், அனுர, மைத்திரி, ஆகியோர் இதில் ஈடுபட்டனர்.