Everything posted by goshan_che
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
கடனை நாடுதான் அடைக்க வேண்டும். ஆகவே மக்களுக்கு தொடர்பு உள்ளது. கடன் இல்லாத நாடுதான் தன் மக்களுக்கு நலத்திட்டங்களை கொடுக்க வேண்டும் என்றால் - ஜேர்மனி உட்பட உலகில் எந்த நாடும் நலதிட்டங்களை செயல்படுத்த முடியாது. உங்களுக்கு வீட்டு, வாகன கடன் இருப்பதால் பிள்ளையளுக்கு நல்ல உடுப்பு வாங்கி கொடாமல் விடுவதில்லைத்தானே? வரியிறுப்பாளருக்கும், வரிகட்டும் வசதி இல்லாதவருக்கும் இலவசம். இல்லாதவருக்கும் சேர்த்து இருப்பவர் வரியாக கட்டுவார். இதுதான் வரி வகுப்பின் அடிப்படையே. மேலே சொன்னது போல் இது இலவசம் அல்ல, சேவை பெறும் தறுவாயில் இலவசம்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதை ஆங்கிலத்தில் free at the point of delivery என்பார்கள். அதாவது சேவை வழங்கும் தறுவாயில் இலவசம். ஜேர்மனியிலும், யூகேயிலும் அரச மருத்துவ சேவை இந்த அடிப்படையில்தான் நடக்கிறது. அதாவது தனிமனிதர்களி வரி அல்லது காப்புறுதிவாங்கி, அதை வைத்து தேவைப்படும் சகலருக்கும், சேவை வழங்கும் போது (at the point of delivery) இலவசமாக வழங்கப்படும். இலங்கையிலும் இப்படித்தான். வரிப்பணம்+கடன்+உதவிகள் கொண்டு, at the point of delivery கல்வியும், மருத்துவமும் இலவசமாக கொடுக்கப்படுகிறன.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இல்லை. உங்களுக்கு வாழ்க்கை சுட்டெண் பற்றி தெரிந்திருக்கும். இப்போ இதை மனித முன்னேற்ற சுட்டெண் என்பார்கள். Human Development Index. இதில் முன்னுக்கு நிற்பது பின்லாந்து போன்ற நாடுகள். இலங்கை ஒப்பீட்டளவில் பராவாயில்லை. காரணம்? இலவச கல்வி, இலவச மருத்துவம், இத்யாதிகள். இவை இல்லாவிட்டால் பாகிஸ்தான் போல இருந்திருக்கும் இலங்கை. சுட்டெண் பற்றிய தகவல் கீழே. இதில் தெற்காசியாவில் பச்சை நிறத்தில் உள்ள ஒரே நாடு இலங்கை. மற்றும் மாலதீவு. https://en.m.wikipedia.org/wiki/List_of_countries_by_Human_Development_Index
- சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நீங்கள் இங்கே சொல்வதும் நான் அதற்கு மேலே சொன்னதும் இரெண்டுமே ஜேர்மனி முன்னேறியதன் பின்னால் உள்ள சூழமைவுதான். அதே போல் இலங்கை பின்னடைந்தமைக்கு அரசியல்வாதிகள் பெரும் காரணம். ஆனால் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையை சின்னாபின்ன படுத்தியமை போல அமெரிக்கா ஜேர்மனியை சின்னாபின்ன படுத்தவில்லை. 2ம் உலக யுத்தத்தின் பின் மேற்கு ஜேர்மனியை நல்வழி படுத்துவதில், தூக்கி விட்டதில் அமெரிக்காவின் பங்கு கணிசமானது. துரதிஸ்டவசமாக அப்படி ஒரு உதவி இலங்கைக்கு கிடைக்கவில்லை. இலங்கை சீரழிந்தமைக்கு இதுவும் ஒரு காரணம். உங்கள் முன்னைய கருத்துக்கு திரும்பி வந்தால் - “இலவசங்கள்” அல்லது “நலத்திட்டங்கள்” வளர்ந்த, வளர்முக நாடுகள் அனைவரும் செய்வதுதான். இதை செய்யும் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதை வைத்து இந்த திட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என கூறமுடியாது🙏.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
இன்னொரு விசயம் @குமாரசாமி அண்ணை, நீங்கள் மேற்கை போல அல்ல, ரஸ்யா கூட்டாளிகளை கைவிடாது என்ற தொனிப்பட எழுதினீர்கள். 1989 இல் ஆப்கானிஸ்தானில் ரஸ்யா என்ன செய்தது என்பதை மறந்துவிட்டு. ஆனால் இப்போ?
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
ராணியோ, கூனியோ யூதருக்கு எவரும் பொருட்டல்ல. அவர்களின் இருப்பை தக்க வைப்பதே முதன்மையான கொள்கை. மீதி எல்லாம் இரெண்டாம்பட்சமே.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சிலர் ஊரறிந்த கள்ளர். சிலர் நசுக்கிடா கள்ளர். ஆனால் சூழமைவு என்று ஒன்றும் உள்ளது. எதையும் தனியே வெற்றிடத்தில் வைத்து பார்க்க முடியாது.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
நீங்கள் தனியே எழுதுவதோடு மட்டும் நில்லாமல் மற்றையவர் எழுதுபவற்றை வாசிக்கவும் வேண்டும் என்பது என் பணிவான விண்ணப்பம். இங்கே உக்ரேன் ஆதரவாக எழுதும் எவரும் அமெரிக்கா பாசத்தின் உறைவிடம் என்றோ உக்ரேனை எப்போதும் கைவிடாது என்றோ எழுதியதில்லை. நாம் எழுதும் சமயத்தில் அமரிக்கா ஆப்கானை கைகழுவிய ஈரம் கூட காயவில்லை. ஆகவே அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்குவரின் உக்ரேன் பாடு கஸ்டம்தான் என்பதை இங்கே உக்ரேன் ஆதரவாளர்கள் பலரும் பலதடவை எழுதியுள்ளனர். அதுதான் நடக்கிறது. அதே போல் ஆக்டோபர் 2023 இல் காசா போர் ஆரம்பமாக முதலே @வாலி இது மத்திய கிழக்கில் எப்படி எதிரொலிக்கும், என்ன நடக்கலாம் என்பதையும் சொல்லி இருந்தார். அவர் சொன்னது போலவே ஹாமாசின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புலாவின் பல்லு புடுங்கபட்டுள்ளது, பக்கத்தில் இருந்தும் அசாத்தை காப்பாற்ற முடியாதவாறு ஈரான் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவாவது அறிவித்து விட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது, புட்டின் வெட்ககேடாக கையறு நிலையில் சிரியாவில் நிற்கும்படி ஆகியுள்ளது. ஆகவே கண்ணை மூடி கொண்டு உங்கள் மேற்கு வெறுப்பை மந்திர உச்சாடனம் செய்யாமல் - ஏனையோர் எழுதுவதை தயவு செய்து வாசியுங்கள்🙏.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
பெயர்தான் வேறு வேறே தவிர வல்லூறு அரசு எப்போதும், எங்கும் வல்லூறு அரசுதான். 90 இல் இப்படிதான் இந்தியா வரதராஜபெருமாளுக்கும் செய்தது. ஆனால் இந்த வல்லூறுகளை அடியோடு பகைக்கவும் முடியாது. அப்பவும் அழிப்பார்கள்.
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
அசாத் ரஸ்யாவுக்கு எஸ்ஸாகி விட்டார். அவரின் படைகள் எல்லை தாண்டி ஈராக்குக்கு ஓடி விட்டன? ஆனால் அவர்கள் வசமிருந்த பலமான இராணுவ தளபாடங்கள் நாளை இஸ்ரேல் நோக்கி திரும்பினால்? இது மட்டும் அல்ல கோலன் குன்றுகளை தனதென அறிவித்ததோடு சிரியாவின் அதி உயர் மலையான Mount Heron ஐயும் இஸ்ரேல் ஆக்கிரமித்து விட்டது. இதில் இருந்து சிரியா, ஈரான் பக்கம் இருந்து வரும் ஆபத்துகளை கண்காணிக்கலாமாம். டமாஸ்கசும் ஆட்டிலறி எல்லைக்குள் வருமாம்.
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
அமரிக்க அதிபர் தேர்தல் திரியில், டிரம்ப் வெண்ட பின் நான் எழுதியதை வாசிக்கவும்.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
ரஸ்யாவை நம்பினோர்…. பூ ஹா ஹா ஹா
-
அதிகரிக்கும் கேக்கின் விலை
அப்ப இனி பாண் தட்டுப்பாடு என்றால் கேக்கும் சாப்பிடமுடியாது.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இந்த இனத்துக்காக நான் படுற துன்ப துயரங்கள் இருக்கே….🤣
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
வாழ்த்துக்கள். நீங்கள் மட்டும் அல்ல எல்லா நாடுகளும் இப்படித்தான் ஒரு கூட்டு மனோநிலையில் சிந்திக்கிறன. ஜேர்மனியில் - அரசுக்கு வரும் வருவாயில் மக்களின், ஜேர்மன் நிறுவனங்களின் வரி அதிகம். இலங்கையில் - அரசுக்கு வரும் வருவாயில் அந்த நாட்டு மக்கள், நிறுவனங்கள் கட்டும் வரியும் உள்ளது, ஆனால் ஏழை நாடு என்பதால் இது போதியளவு இல்லை. ஆகவே கடனால் வரும் காசும், வெளிநாட்டு தொழிலாளர் அனுப்பும் காசு என்பனவும் சேர்கிறன. ஜேர்மனியை போலவே இலங்கையும் இந்த பொது கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து தன் மக்களுக்கு கூட்டு மனோநிலையில் செலவழிக்கிறது. பிகு ஜேர்மனியை போல் இலங்கை ஆபிரிகாவில் காலனிகளை வைத்து கொள்ளை அடிக்கவில்லை. ஜேர்மன் பெருநிறுவனங்கள் போல் உலகயுத்தத்தை வைத்து இலங்கை நிறுவனங்கள் ஏதும் கொழுக்கவில்லை. ஜேர்மனிக்கு அமேரிக்கா இட்ட மார்ஷல் பிளான் உதவி (கடன்? பிச்சை?) போல் மிகபெரிய உதவியை இலங்கைக்கு யாரும் செய்யவில்லை. ஆகவே ஜேர்மனி போல் இலங்கை பொருளாதாரத்தில் வளரவில்லை (இது மட்டுமே காரணம் அல்ல). அதற்காக இலங்கை தன் மக்கள் மீது அக்கறை படாமல் இருக்க முடியாதுதானே.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
எப்படி எம்மை சிங்களவரோடு ஒற்றுமையாக்க முடியாதோ, அதே போலத்தான் முஸ்லிம்களையும் எம்மோடு ஒற்றுமையாக்க முடியாது. நான் வாங்கோ ஒண்ணுக்கு இருப்பம் என சொல்லவில்லை. தற்போதைய குடிசன பரம்பல் அடிப்படையில் சுயாட்சி அலகுகளை பிரித்து கொள்வோம் என்கிறேன். அவர்கள் வயிற்றில் இருந்து அதிகமாக விழுவது அவர்கள் கெட்டித்தனம். தேவைப்படும் உடல் உறுப்புகள் அவர்களுக்கு ஆளுக்கு ரெண்டு, ரெண்டு இல்லைத்தானே? மிகுதி உங்கள் கெட்டித்தனம்🤣
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இலங்கையில் கொடுப்பது மட்டும் என்ன அனுர, ரணில், மைத்திரி, மகிந்த வீட்டு பணமா? ஜேர்மனி பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு - அதன் கஜானாவை மக்களின், நிறுவனங்களின் வரிப்பணம் நிரப்புகிறது. அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு ஜேர்மனி செலவழிக்கிறது. இலங்கை பொருளாதாரத்தில் பிந்தங்கிய நாடு - அதன் கஜானவை வெளிநாட்டு கடனும், அந்நிய செலாவணியும், உதவிகளும் நிரப்புகிறன. அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு இலங்கை செலவழிக்கிறது.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
I am not even sure he has any powers here to abuse. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பிரின் சிறப்புரிமைகள் பெருமளவில் பாராளுமன்ற வளாகத்துக்குள்தான். சம்மன் பண்ணும், விசாரிக்கும் அதிகாரம் பாராளுமன்ற தனி உறுப்பினர்களால் அன்றி தேர்வு குழுக்கள் வழியாகவே பிரயோகிக்க படும். ஒரு வாக்காளரின் விடயம் சம்பந்தமாக ஒரு எம்பி கடிதம் மூலம் கேள்வி கேட்டால், குறித்த கால அவகாசத்தில் பதில் போட வேண்டும். இலங்கையிலும் இப்படித்தான் என நினைக்கிறேன். இங்கே கடிதம் போடாமல் அருச்சுனா நேரில் போயுள்ளார். பணிப்பாளர் முறையாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்கிறேன் என்றால் ஒத்து கொள்வதுதான் முறை. சேர் என அழைக்கவேண்டும் என அடம்பிடிப்பது எல்லாம் லுச்சாத்தனம். திரு அருச்சுனா இராமநாதன் கெளரவ பா உ அவர்களே என அழைத்தால் போதும் என நினைக்கிறேன். இவர் இதை பாராளுமன்றில் சிறப்புரிமை மீறலாக எழுப்பும் போது - சபாநாயகர் என்ன செய்கிறார் என பார்போம். அருச்சுனா விதிகளை படித்து விட்டு போய் இருந்தால் - இலங்கை பாராளுமன்ற விதிகளின் படி அவர் சரியாக இருக்கவும் வாய்புள்ளது. என்னால் நீங்கள் தந்த இணைப்பில் அப்படி எதையும் காணமுடியவில்லை. ஆனால் மிக மேம்போக்காகவே வாசித்தேன். சோசல் காசு எடுத்த பிள்ளை பெறாதவரின் காசை பக்கத்து வீட்டு பிள்ளையா கட்டும்? அது இலவசம் தானே? டீடெயில் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆனால் welfare state இன் அடிப்படை தத்துவம் எங்கும் ஒன்றேதான். அது… உழைக்கும் போது வரி அல்லது, காப்புறுதியாக செலுத்துங்கள். உழைக்கமுடியாவிட்டால் அரசு உங்களுக்கு மினிமம் பாதுகாப்பை தரும்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நீங்க மாம்பழ வாக்காளர்தானே? முன்பே சொன்னதுதான் - அருச்சுனா பனி என தெரிந்தும் நான் போட்டிருப்பேன் ஏன் எண்டால் மிச்சம் எல்லாம் ஏழரை நாட்டுச் சனி.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
மக்கள் இந்த கோரிக்கையை உடைய கட்சிகளை தேர்தலில் ஆதரிக்கும் வரை கோரிக்கை வலுவாகவே இருப்பதாகவே கொள்ள முடியும். தர மறுப்பதால் கேட்காமல் இருக்க முடியாது. எடுப்பது கடினம் என்பதால் முயலாமலும் இருக்க முடியாது. மக்கள் சுயாட்ச்சி கோரிக்கையை கைவிடும் வரை.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஒட்டு மொத்தமாக அங்கே எந்த இனத்துக்கும் போகாது. முஸ்லிம்கள் ஒண்டும் வானத்தில் இருந்து நேற்று விழுந்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் அவர்கள் வாழிடம் மீது எம்மை போலவே உரிமை உண்டு. அதனால்தான் அவர்களுக்கு அவர்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசசபைகள் அடிப்படையில் ஒரு நிலத்தொடர்பற்ற எமக்கு நிகரான அலகை கொடுக்க நாம் உடன்பட வேண்டும் என்கிறேன். எஞ்சும் சிங்கள பகுதிகளை மொனராகல, பொலநறுவ, அனுராதபுரத்துடன் இணைத்து விட்டு, தமிழ் பகுதிகளை வடக்குடன் இணைக்கலாம். இல்லை என்றால் இப்போ இருக்கும் கிழக்கு மாகாண எல்லையோடே விடலாம். மூவரும் சரிக்கு சரி என்பதால் எந்த ஒரு குழுவும் தனியே ஆட முடியாது. இல்லை…கீழே விளக்கம். இல்லை மூவினங்களும் தமது தனித்துவம் பாதுகாக்கபடுவதாக உணரும் போது, இப்போ அனுர சொல்லும் போலி இலங்கை தேசிய ஒற்றுமை போல அன்றி, உண்மையிலேயே அனைவரும் சமபங்காளிகள் எனும் உணர்வின் அடிப்படையிலான கெளரவமான ஒற்றுமை உருவாகும். தமிழர் அலகில் ஏனைய இருவரும் சிறுபான்மை, முஸ்லிம்கள் அலகில் மற்றைய இருவரும் சிறுபான்மை, மீதம்முள்ள அலகுகளில், ஒட்டு மொத்த இலங்கையில் தமிழரும், முஸ்லிம்களும் சிறுபான்மை -ஆளை ஆள் அனுசரித்து நடக்க வேண்டும். அதை சட்டம் மூலம் உறுதியும் செய்யலாம்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அருச்சுனா ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் - அவருக்கு விழுந்த வாக்குகளில் கணிசமானவை protest votes. தமிழ் கட்சிகளுக்கும் போட முடியாமல், என்பிபிக்கும் போட முடியாமல் இருந்தவர்கள் போட்ட வாக்குகள். அவரிடம் வாக்காளர் எதிர்பார்ப்பது reality show வை அல்ல. அதற்கான காலம் முடிந்து விட்டது. ஊழலை விசாரிக்க ஒரு எம்பிக்கு ஏனையோருக்கு இல்லாத பல சிறப்பு வழிகள் உள்ளன - ஏற்கனவே பிரச்சனையான மனிதரை நானே போய் விசாரிப்பேன் என்பது சரியான அணுகுமுறை அல்ல. With great power comes great responsibility அருச்சுனா இதை உணர்ந்து நடக்க வேண்டும். தமிழ் தேசியத்துக்கு இதுதான் கடைசிச்சந்தர்பம் என தேர்தல் முடிவின் பி கூறிய அருச்சுனா - அதை உணர்ந்து நடக்க வேண்டும். அவருக்கு வாக்கு போட்டவர்களை அவரே அடுத்த முறை என்பிபி க்கு அனுப்பிவிட கூடாது. ம்ம்ம்ம்….முதலில் நீங்கள் வாழும் நாட்டில் சோசல் காசு கொடுப்பதை நிறுத்துங்கள்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இல்லை. ஆனால் இதே லொஜிக்கின் படி பார்த்தால் பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரமே கொடுத்திருக்க கூடாது. ஏன் எண்டால் இலங்கை ஆட்சியாளர்கள் 76 வருடமாக மோசமான ஆட்சியைத்தான் வழங்குகிறனர். தமிழ் அரசியல்வாதிகள் சரியில்லை ஆகவே தமிழருக்கு சுயாட்சி தேவையில்லை என்றால் - இலங்கை ஆட்சியாளர்கள் சரியில்லை ஆகவே ஆட்சியை மீள பிரித்தானியாவிடம் கொடுக்க வேண்டும் எனவும் வாதிடலாம். தமிழர்களுக்கு உரிய அதிகாரம் அவர்களின் சுய உரிமை. அதை அவர்கள் போட்டடிக்கலாம் அல்லது சிறப்பாக பாவிக்கலாம். அது அவர்களின் பிரச்சனை.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஏது… ஏதோ காணி நில அதிகாரம் புலிகளுக்கானது எண்ட மாதிரி போகுது கதை🤣. காணி நில அதிகாரம் தமிழருக்கான தேவை, புலிகளுக்கான தேவை அல்ல. இந்த அதிகாரத்துக்கான தேவை புலிகளுக்கும் முன்னும், அவர்கள் காலத்திலும், புலிகளுக்கு பின்னும் இருக்கிறது. காணி, நில அதிகாரம் ஏன் தேவை? வடக்கு கிழக்கில் தமிழர் பாரம்பரிய மண்ணை சிங்களமயமாக்கலை தவிர்க்க. அதாவது இன்னொரு திரியில் விளங்கபடுத்தியபோல அம்பாறையில், திருகோணமலையில் ஆனது போல் இதர வடக்கு-கிழக்கு பகுதிகளிலும் ஆவதை தடுக்க. இனப்பிரச்சனை என்பது தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையான நில, தன்னாட்சி அதிகாரம் பற்றியது. இதற்கு தீர்வு, தமிழரையும், சிங்களவரையும் சமமாக ஒரே அமைப்பின் கீழ் நடத்துவதல்ல (அப்படி நடக்காது என்பது வேறு விடயம்). தமிழருக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் அவர்கள் காணியை, அவர்கள் காவல்துறையை நிர்வகிக்கும் அதிகாரத்தை கொடுப்பதே இதற்கான தீர்வு. பிரித்தானியாவில் எல்லாரும் சமமாக நடத்தபடுவதால், ஸ்கொட்லாந்துக்கும், வேல்சுக்கும் தனி அரசாங்கம் தேவை இல்லை என்பதல்லவே? அதுபோலவே இதுவும்.