Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. எப்படி இருந்த மனிசன். ஒரு காலத்தில் ரஜனியை கதறவிட்டவர். மகனுக்காக மாறி மாறி கூட்டணி வைத்து, கட்சியில் இருந்து பலரை வெளியேற்றி…இப்போ விஜைக்கு நூல் விடும் நிலை. ஆனால் விஜை ஏற்க வேண்டும். திருமா…இல்லன்னா (காடுவெட்டி) குரு மா🤣.
  2. கூடுதலாக நமது மருத்துவர் இராமதாசு ஐயாவின் பாமக சின்னமும் மாங்காய். அவரின் தொண்டர்களும், வன்னியண்டா…சத்திரியண்டா…ஆண்ட பரம்பரைடா எண்டு…டாட்டா சுமோவின் வெளியால சால்வையை கையிறு போல கொழுவி தொங்கி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக போகும் அளவுக்கு மடையர்கள். இவர்களையும் மாங்கா என்பார்கள். அன்பு மணி இராமதாசை மாங்கா மணி என்பார்கள்.
  3. அண்ணன் எவ்வழியோ தம்பிகளும் அவ்வழியே. அண்ணன் அரசியலில் தான் எதிர்பார்த்த படி தன்னோடு கூட்டணி வைக்கவில்லை என்றால் அவரை கூ முட்டை என்பார். தம்பி கருத்துக்களத்தில் களைத்துப்போனதும், அஃறிணை பாவிப்பு, சக கருத்தாளரை கூ முட்டை என விளித்தல் என இறங்கி விடுவார்கள். இப்படியானவர்களால்தான் தமிழ் தேசியம் என்றாலே நாகரீகம் அற்ற, கெட்ட வார்த்தை பேசும், பேச்சில் வன்முறை காவும், காமுகர்களான மனிதர்களின் அரசியல் என்ற விம்பம் தமிழ் நாட்டில், மிக வலுவாக வளர்கிறது. இதனால்தான் சொல்கிறேன் சீமானும் அவர் தம்பிகளும் தமிழ் தேசியம் என்ற பாலில் கலந்த நஞ்சுகள். இவர்களை எதிர்ப்பதை விட தமிழ் தேசியத்து செய்ய கூடிய தொண்டு வேறில்லை. வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும், நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும், தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும், வீரமும், களத்தே போட்டு வெறுங்கையோடு வீடு புக்கான், இலங்கை வேந்தன்🤣
  4. வெற்று வார்த்தைகள். இரெண்டின் நோக்கமும் அதிகாரத்தை அடைந்து அதன் மூலம் நன்மை மக்களுக்கு செய்வதுதான். திராவிடத்தை பாவித்து சுயநலன் அடைந்தது கருணாநிதி குடும்பம். தமிழ் தேசியத்தை வைத்து சுயநலன் அடைந்தது சீமான். இரு கயவர்கள் இரு கொள்கைகளை தவறாக பயன்படுத்தியது கொள்கைகளின் தவறல்ல. பொய். மதுக்கடைகளை திறப்பது திமுக எனும் கட்சி. மதுக் கடையை திறவுங்கள் என்பது திராவிட அரசியல் தத்துவத்தின் அங்கம் அல்ல. அதே போல் இலட்சிய தமிழ் தேசிய மண்ணாக இருந்த புலிகளின் நடைமுறை அரசில் கூட மதுக்கடைகள் இருந்தன. ஆகவே இது கொள்கை சம்பந்த பட விடயமே அல்ல. சீமானுக்கு தமிழ் தேசியம் என்றாலே என்ன என்று தெரியவில்லை. லெட்ப் ஹாண்ட் டீலிங்
  5. என்ன…மானமுள்ள பொண்ணு என்று மதுரையில கேட்டாக… மன்னார் குடியில் கேட்டாக… என்பதாக இருக்கிறது தம்பிகள் கதை🤣. விஜை 15 தரம் சீமான் வீட்டை போய் அட்வைஸ் எடுத்தா ஒரு சி சி டி வி ஆதாரம் கூடவா இருக்காது? அப்படியே போனாலும் அங்கே அரசியல் அட்வைஸ்தான் பெறபட்டது என்பதை எதை வைத்து உறுதியாக கூற முடியும்? அண்ணன் லைக்காவுக்கு ஆதரவு கொடுத்ததை போல வேறு பல விடயங்களில் தரகு வேலை பார்த்திருக்கலாம். அப்படி ஒரு தரகு வேலைக்காக விஜை போயிருக்கலாம். அண்ணனை போலவே தம்பிகளும் நல்லா கதை கட்டுகிறார்கள். ———————- ஒரு தன்னிலை விளக்கம் இங்கே சிலர் சீமானுக்கு இருப்பது போல நான் ஒன்றும் விஜைக்கு நேர்ந்து விட்ட ஆடு இல்லை🤣. விஜை அசின் பின்னால் ஓடி கொண்டிருந்த காலத்தில் இருந்து தமிழ் நாட்டில் திராவிடத்தை உள்ளீர்த்து தமிழ் தேசியம் எப்படி காலூன்ற வேண்டும் என நான் விரும்பினேனோ, எழுதினேனோ அதை விஜை சொல்வதால் - அவரை ஆதரிக்கிறேன். இதற்காக விஜைக்கு நிச்சயம் மரண முட்டெல்லாம் கொடுக்க மாட்டேன். சீமான் போல செயல்பட்டால் அவரின் பர்னிச்சரும் உடைக்கப்படும். எப்போதும் போல - விசுவாசம் கொள்கைகளுக்கே அன்றி தனி நபர்களுக்கு அல்ல.
  6. அண்ணன் தம்பி முதுகில் ஏறி நோகாமல் நொங்கு தின்னப்பார்த்தார்.. அண்ணனை எப்படி கழட்டி விடுவது? யோசித்த தம்பிக்கு கிடைத்த ஐடியாதான் படக்கொழுவல்🤣. அருமையான உருவக கதை ரசோ👏. 👆🤣
  7. அன்ரி நாடாரா? நான் பிராமணர்…….வாலியடிங்க, வாயிலடிங்க…அந்தணர் என்றல்லவா நினைத்தேன். இவா கொஞ்ச காலம் ஜேர்மனியிலும் வசித்தவா….🤪
  8. அப்படியே கான மயிலை டிலீட் பண்ணி போட்டு, கோழி, வான் கோழி எண்டிட்டியள்🤣. ஐ லைக் இட் யா.
  9. நான் திமுக-பிஜேபி கள்ள உறவை பற்றி கூறினால் உபிக்களும் இப்படித்தான் பதில் சொல்வார்கள். சந்திப்போம்.
  10. பதில் ரொம்ப சிம்பிளானது ப்ரோ… எப்படி திமுக+ பிஜேபி கள்ள உறவோ அதே போலத்தான், திமுக+நாதக கள்ள உறவும். சீமான் ஸ்டாலினை போய் சந்தித்தது, உதய்யோடு இரவிரவாக டெலிபோனில் கொ(கெ)ஞ்சுவது எல்லாம் இதற்காகத்தான் ப்ரோ. விஜலட்சுமி விவகாரம், அருந்ததியர் விவகாரம் என பலதில் சீமானை திமுக காப்பாற்ற இந்த கள்ள உறவுதான் காரணம். ஊழல் விசாரணையும் அப்படியே.
  11. மஞ்சள் பை கூட இல்லாமல் வந்த சீமானுக்கு எப்படி ஜப்பான் இறக்குமதி பஜோரோ, மலை நாட்டில் நிலம், இன்னும் பல சொத்துக்கள் சேர்ந்தது? 2009 நடிகர் போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது சீமானிடம் சிங்கிள் டிக்கு காசில்லை. இன்று? அன்றில் இருந்து இன்றுவரை முழு நேர அரசியலில் இருப்பவருக்கு இந்த 15 வருடத்தில் எப்படி வந்தது இந்த செல்வம், புது புது ஆடைகள், போன், யாரினது என்றே தெரியாத பலகோடி பெறுமதியான வீடு எல்லாம்? இரு பகுதியும் கள்ளர்தான். களவு எடுக்கும் அளவுதான் வேறு. சீமான் இன்னும் கஜானாவுக்கு கிட்ட வரவில்லை, வந்தால் கருணாநிதியை ஒரு மூலையில் வைப்பார். #சின்ன கருணாநிதி சீமான் எதிர்ப்பு = திமுக ஆதரவு இல்லை. புரியும் என நம்பவில்லை.
  12. 1. தனிப்பட்ட தாக்குதலுக்கு பதில் இல்லை 2. திமுக இவ்வளவு ஊழல் செய்வல்ததை நானும் ஏற்கிறேன் - ஆனால் எவரும் கோர்ட்டால் குற்றம் தீர்க்கபடவில்லை. அதாவது ஆதாரம் இல்லாத களவு. வெறும் அவர் சொன்னார், இவர் சொன்னார் கதைதான். 3. இதே போலத்தான் சீமானின் களவும்.
  13. 2026 இல் மட்டும் அல்ல கடந்த 15 வருடமா மக்கள் பதிலை தெளிவாக சொல்லி கொண்டுதான் உள்ளார்கள். 2026 இல் டிவிட்டர், பேஸ்புக், டிக்டொக் மற்றும் உன்குழாயில் நா த க தனி மெஜோரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்பதை நானும் ஏற்கிறேன்.
  14. நீங்கள் கருணாநிதி கள்ள ரயில் ஏறி வந்ததை ஆதாரத்தோடு நிறுவும் போது… சர்கரியா கமிசன் கருணாநிதி ஊழலை ஆதாத்தோடு நிறுவும் போது… ராசா, கனிமொழி அலைக்கற்றை ஊழல் ஆதாரத்தோடு நிறுவப்படும் போது, ரஜீவின் போபர்ஸ் ஊழல் ஆதாரத்தோடு நிறுவப்படும் போது… நானும் இதை ஆதாரத்தோடு நிறுவுவேன். எந்த கள்ளன் களவு எடுப்பதை போட்டோ எடுத்து வெளியிடுவான் ப்ரோ.
  15. நீங்களும் திமுக கொள்ளை அடித்ததை கண்ணால் காணேல்லதானே ப்ரோ அதுக்காக அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை என்றாகாதே. நான் அவர் கைதாக வாய்புள்ளது, பொலிஸ் சம்மன் அனுப்பி தேடுகிறது என்றே எழுதினேன். ஐந்து மொழி வல்லுனர் உங்களின் தாய்மொழி கிரகிப்பு குறைபாட்டுக்கு நான் பொறுப்பில்லை.
  16. மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'! Mathivanan MaranUpdated: Monday, November 4, 2024, 14:38 [IST] சென்னை: 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள்; அவர்கள் இன்று தமிழர்கள் இனம் என சொல்லும் போது எப்பவோ வந்த பிரமாணர்களை தமிழர்களே இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? என்று நடிகை கஸ்தூரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் அருந்ததியர்கள் என பேசிய பஞ்சாயத்தே முடியாத நிலையில் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் என பேசியிருப்பது கடும் சர்ச்சையாகி இருக்கிறது. ஆரியர்கள் வருகை தந்தது உண்மை: பிராமணர்கள் பாதுகாப்பு கோரும் ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க.. அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள். அந்தப்புர சேவைக்கு வந்த தெலுங்கர்கள்: அதை எல்லாம் மறந்துவிட்டு தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க.. இவ்வாறு கஸ்தூரி பேசினார். சீமான் போல பேச்சு: நடிகை கஸ்தூரியின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் அருந்ததியர்கள் என பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போது சீமானைத் தொடர்ந்து தெலுங்கர்களை தமிழ்நாட்டு மன்னர்களின் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என நடிகை கஸ்தூரி பேசியிருப்பது புதிய பஞ்சாயத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. https://tamil.oneindia.com/news/chennai/a-new-controversy-erupts-over-actress-kasturis-remarks-about-telugu-people-651735.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி ஒரு தோல்வி பட இயக்குனர் வெறுப்பரசியலை கையில் எடுத்து நல்ல சுக போகமாக இருப்பதை கண்ட மார்கெட் இல்லாத நடிகைக்கும் தானும் அதே போல் வாழ ஆசை வந்துள்ளது.
  17. இந்த கார்டூனிஸ்ட் பாலாவுக்கு horsepower என்பது என்ன என்பதும், கார் இயந்திரங்கள் ஏன் இன்றும் ஹோஸ்பவர் அடிப்படையில் வலு எண்ணப்படுகிறன என்பது தெரியாது என நினைக்கிறேன். ஒரு வண்டியில் ஒத்தை குதிரையை பூட்டி ஓடினால் அது 1 horsepower, அதே வண்டியில் 2 குதிரையை பூட்டி ஓட்டினால் அது 2horsepower. 2>1. ஆனால் நாதக மாதிரி வண்டியில் ஆயிரம் குதிரையை பூட்டினாலும் பலனில்லை, ஏன்னா வண்டிச் சாரதி, காசை வாங்கி கொண்டு நிமிடத்துக்கொரு யூ டர்ன் அடிப்பவர்🤣.
  18. தட் ஊருல உள்ள ரவுடி எல்லாம் என்னை அடிச்சு ஓஞ்சு போய் ஊரக்காலி பண்ணிட்டான் மொமெண்ட்🤣
  19. தட் தம்பி அப்படி ஓரமாய் போய் விளையாடு மொமெண்ட். சீமானை இப்போவெல்லாம் எல்லோரும் லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணுகிறார்கள்.
  20. பொது நல அறிவிப்பு கற்பிணிகள், இளகிய மனம் படைத்தோர், தம்பிகள் இந்த யூடியூப் வீடியோவிற்கு வந்துள்ள கமென்ஸ்சை வாசிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும்🤣.
  21. பெண்களை சீரழித்த நீங்க எதில் அடிபட்டு..? சீமானுக்கு எதிராக விஜய் 'தங்கை' நடிகை விஜயலட்சுமி ஆவேசம் Mathivanan MaranUpdated: Sunday, November 3, 2024, 16:08 [IST] சென்னை: நடிகர் விஜய் லாரியில் அடிபட்டு சாவார் என சாபமிடுகிற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல பெண்களை சீரழித்தவர்; அவர் எதில் அடிபட்டு சாவார்? என நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும் என திமுகவுக்கு தெரியும்; விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என அவருக்கு தெரியும்; நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கிறீர்கள் எனவும் அந்த வீடியோவில் நடிகை விஜயலட்சுமி காட்டமாக விமர்சித்துள்ளார். விஜய் அண்ணனுக்கு சாபமா?: இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் நடிகை விஜயலட்சுமி கூறியிருப்பதாவது: என்ன மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுறீங்க? நேற்று விஜய் அண்ணனுக்கு, ஒன்னு ரோட்டோட இந்த பக்கம் இரு; இல்லைன்னா அந்த பக்கம் இரு.. சென்டரில் இருந்தா லாரி அடிச்சு செத்துப் போயிடுவேன்னு சாபம் எல்லாம் விடுறீங்க? உத்தமரா நீங்க?: நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுவதற்கு.. நான் உங்க ரூட்டுக்கே வருகிறேன். அண்ணன் விஜய் ஆகட்டும் இல்லை திமுகவாகட்டும்.. கொள்கை ரீதியாகத்தானே தவறு பண்ணி இருக்காங்க.. அதாவது உங்க பிரகாரம் மக்கள் ஒன்றும் சொல்லலை.. நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க.. பெண்கள் சீரழிப்பு: So கொள்கை ரீதியாக தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா.. எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு எங்களை நடுரோட்டுல.... விட்டீங்களே.. நீங்க எது அடிச்சு சாகப்போறீங்க மிஸ்டர் சீமான்? ஆபாச வீடியோ வருதாமே?: முதலில் உங்க கட்சியில் இருக்கிற ஓட்டையை எல்லாம் போய் சரி பண்ணுங்க போங்க.. உங்க கட்சியில் நிறைய ஊழல் நடந்துகிட்டு இருக்காம். அடுத்தாப்ல திருச்சி சூர்யா வந்து உங்க ஆபாச வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம்.. அதை எல்லாம் என்ன என முதலில் போய் பாருங்க.. கூமுட்டை மாதிரி.. : திமுகவுக்கு என்ன செய்யனும் என திமுகவுக்கு தெரியும்.. விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என விஜய் அண்ணனுக்கு தெரியும். இப்படி எல்லாருக்கும் அவங்க வேலை என்ன என்பது நன்றாகவே தெரியும். தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையை ஒழுங்கா பார்க்க தெரியாம காலையில் எழுந்தது முதல் சும்மா பப்ளிசிட்டி செய்து கொண்டு, சபித்துக் கொண்டு நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கீங்க.. ஓகேவா? 24 மணிநேரமும் நான் சாபம் விடுறேனே: ஏதோ பெரிய உத்தமர் மாதிரியும் கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க.. 24 மணிநேரமும் பெங்களூரில் இருந்து நான் உங்களுக்குதானே சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.. அதனால கொள்கை ரீதியாக தவறு செய்தவங்க லாரி அடிச்சு சாவாங்க அப்படீன்னா நீங்க தமிழ்நாட்டு மக்கள் செ.....ல அடிச்சே சாவீங்க. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/actor-vijayalakshmi-slams-naam-tamilar-chief-seeman-remarks-against-tvk-president-vijay-651607.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel டிஸ்கி அண்ணனின் ஆபாச ஆடியோவை மிமிக்கிரி என முட்டு கொடுத்தது போல், இப்படி ஆபாச வீடியோ வந்தால் அதை AI என முட்டுகொடுக்க வருமாறு, நா.த.க கில்மா பாசறை அறைகூவல் 🤣.
  22. தமிழகத்தில் பெருகி வரும் யாழ்ப்பாணப் பனை! ‘பனைமரக்காடே பறவைகள் கூடே’ என ஒரு திரைப்படப்பாடலில், இலங்கை நாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியைப் பற்றி எழுதியிருப்பார், கவிஞர் வைரமுத்து. அந்தளவுக்குப் பெருமை வாய்ந்தவை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பனை மரங்கள். இவை நம் நாட்டில் உள்ளபனைமரங்களைக் காட்டிலும் சற்றுத் தடித்துக் காணப்படும். தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலை யாழ்ப்பாணப் பனைகள் வளர்வதற்கு ஏற்ற நிலையில் இருப்பதால், பலரும் இம்மரங்களை இங்கு பயிரிட்டுள்ளனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இம்மரங்கள் அதிகளவில் உள்ளன. யாழ்ப்பாணப் பனைமரங்கள் குறித்து, செஞ்சி அருகே உள்ள பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த பனை விவசாயி விஜயராமனிடம் பேசினோம். “நான் சின்ன வயசா இருக்குறப்போ எங்க பகுதியில இருந்து மரம் ஏறுறதுக்காக நிறையபேர் திருப்புவனம் பக்கம் போவாங்க. எங்கப்பாவும் அடிக்கடி போவார். ஒருமுறை இங்கேயிருந்து நிறையபேர் அப்படிப் போனப்போ, அந்தப்பகுதியில கிடைச்ச யாழ்ப்பாணம் பனை விதைகளை எடுத்துட்டு வந்து, இந்தப்பகுதியில பரவலா விதைச்சு விட்டாங்க. கிட்டத்தட்ட ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இது. அப்போ விதைச்சு வளர்ந்த மரங்கள்தான் இப்ப நின்னு பலன் கொடுத்துட்டுருக்கு. இந்தப்பக்கம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் யாழ்ப்பாணப் பனைமரங்கள் இருக்கும். என் வயல் ஓரத்துலேயே 300 பனைமரங்கள் இருக்கு. அதுல கிட்டத்தட்ட 200 மரங்கள் யாழ்ப்பாண ரகம்தான். இந்த மரங்கள்ல அதிகமாகப் பதநீர் கிடைக்கும். மாசி மாசத்துல இருந்து ஆனி மாசம் வரைக்கும் சீசன் இருக்கும். சீசன் சமயங்கள்ல பனை விதைகள், பனங்கிழங்கு, பதநீர்னு விற்பனை செய்வோம். பனம் பழங்களைச் சேமிச்சு வெச்சு விதை எடுத்து மண்ணுக்குள்ள புதைச்சு வெச்சா மூணு மாசத்துல பனங்கிழங்குகள் கிடைக்கும். பெரும்பாலும் கிழங்கை நாங்களே ஒரு கிழங்கு மூணு ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவோம். வியாபாரிகளும் தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. ஆனா, வியாபாரிங்க ஒரு கிழங்குக்கு ஒரு ரூபாய்தான் கொடுப்பாங்க. சீசன் நேரங்கள்ல பதநீர் விற்பனை நல்லாயிருக்கும். மரங்கள்ல சுண்ணாம்பு தடவுன பானைகளைக் கட்டி பதநீர் இறக்குவோம். ஒரு பாளையில ஒரு வேளைக்கு ஒரு லிட்டர்ல இருந்து ஐந்து லிட்டர் வரை பதநீர் இறங்கும். தினமும் ரெண்டு வேளையும் மரம் ஏறுவோம். இந்தப் பகுதிகள்ல நம்ம நாட்டு ரக மரங்களையும் சேர்த்து மொத்தம் ரெண்டு லட்சம் பனைமரங்கள் இருக்கு. நம்ம பனை மரம், அடிப்பகுதியில இருந்து மேல்பகுதிக்குப் போகப்போக மெல்லிசாக இருக்கும். ஆனா, யாழ்ப்பாணப் பனை மரங்கள் அடிப்பகுதியும், மேல் பகுதியும் தடிச்சிருக்கும். நடுவுல மெலிஞ்சுருக்கும். யாழ்ப்பாணப் பனைமரங்களோட ஓலைகள் பூ விரிஞ்ச மாதிரி பார்க்க அழகா இருக்கும்” என்ற விஜயராமன் பனைமரங்களைக் காட்டியபடியே தொடர்ந்தார். “இப்போ நிறைய பேர் பனை விதைகளை வாங்கிட்டு போறாங்க. யாழ்ப்பாணப் பனை விதைகளுக்குக் கொஞ்சம் கிராக்கி அதிகம். யாழ்ப்பாணப் பனை விதைகளை மற்ற விதைகளைவிட ஒரு ரூபாய் அதிகமா வெச்சுத்தான் விற்பனை செய்றேன். போன வருஷம் 200 யாழ்ப்பாணப் பனை மரங்கள்ல இருந்து ரெண்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சது. எந்தப் பயிர் கைவிட்டாலும், பனை எங்களைக் கைவிடாது” என்றார், விஜயராமன். யாழ்ப்பாணப் பனை விதைகளை அதிகளவில் நடவு செய்திருக்கும் ‘எழில்சோலை’ மாசிலாமணி, “நான், பனை விதைகளை வாங்கலாம்னு போனப்போ ‘யாழ்ப்பாணப் பனை விதைகள்’ இங்க கிடைக்கும்னு விவசாயிகள் சொன்னாங்க. நான் ஆச்சர்யத்தோட பார்க்கவும் அந்த மரங்களைக் காட்டி விளக்கிச் சொன்னாங்க. இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் சிறப்பு வாய்ந்த உணவு வகைகளில் பனை சார் உணவுப்பொருள்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அவங்களோட பாரம்பர்ய உணவு பனை உணவுதான். யாழ்ப் பாணத்துக்குச் சுற்றுலா வர்றவங்களும் பனை உணவுகளை விரும்பிச் சாப்பிடுவாங்க. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1981-ம் வருஷம் 11 மில்லியன் (ஒரு கோடியே பத்து லட்சம்) பனை மரங்கள் இருந்ததாகச் சொல்றாங்க. இலங்கையில் பனை மேம்பாட்டுக்காகப் ‘பனை அபிவிருத்திசபை’ ஆரம்பிச்சுப் பனைத்தொழிலை மேம்படுத்திட்டு இருக்காங்க. அதேமாதிரி தமிழ்நாட்டிலும் பனை பத்தின விழிப்பு உணர்வை அதிகரிக்கணும்” என்றார் அக்கறையுடன். தொடர்புக்கு மாசிலாமணி, செல்போன்: 94436 38545 துரை.நாகராஜன் - படங்கள்: தே.சிலம்பரசன் நன்றி- பசுமை விகடன்- #jaffna #palmyrah https://www.facebook.com/share/p/17rDnXcNKW/?
  23. யாழ். வடமராட்சியில் ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பம்.! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் இன்று (11) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவர் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் பிரதம விருந்தினாராக கலந்து கொண்டு பனம் விதை நடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மேலும் வாசிக்க….. https://tamilwin.com/article/jaffna-one-lakh-seeds-project-1730543964#google_vignette
  24. பிற்சேர்க்கை பாடலின் இசை, குரல் எல்லாம் அற்புதமாக இருந்தாலும், மூன்றாம் பந்தியில் பாதி+இரெண்டாம் பந்தியில் மீதி என கொத்துப்பரோட்டா போட்டு பாடலில் உயிரையே சிதைத்து விட்டார்கள் 👎👎👎. —————- எனக்கு பிடித்த வர்ஷன் சஞ்சய் சுப்ரமணியத்தினுடையது👇.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.