goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by goshan_che
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு… ஊத்தி கொடுக்குறவன் பேச்சு இரவே போச்சு🤣
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
நான் ஒரு தொப்பி கடை வைத்திருக்கிறேன். வாடிக்கையாளர் தொப்பியை அளவுபார்த்து, அதை சரியான தொப்பி என வாசகர் இனம் கண்டால் நான் பொறுப்பல்ல. (வடையை சுட்ட காகம் உங்களை போல் அல்ல, அது சிரிப்புகுறிமட்டும் போட்டு விட்டு பறந்து விடும், மலை விழுங்கி காகம்).
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
சுமா, தயவு செய்து இந்த பொய் பித்தலாட்ட கதைகள் வேண்டாம். 1. மட்டகளப்புக்கு ஒரு யாழ் எம்பியை ஒருங்கிணைப்பாளராக போடுவதும், 2. நுவரலியாவுக்கு ஒரு மட்டகளப்பு எம்பியை ஒருங்கிணைப்பாளராக போடுவதும் எவ்வளவு பிழையோ அதை ஒத்த பிழைதான் இதுவும். இது அதிகாரபரவலாக்கம், localism சம்பந்தமானது. மாகாண அதிகாரம், மாநில சுயாட்சி கூட கொடுக்க வேண்டாம்….அந்த மாவட்ட மக்களின் மாவட்ட ஒருங்கிணைப்பை அந்த மாவட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேற்கொள்வதே முறை. இது ஜனநாயகத்தின் அடிப்படை. டக்ளஸ், அங்கயன், விஜயகலா எல்லோரும் அந்த மாவட்ட மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள். சந்திரசேகரன் அப்படியல்ல. இது குறித்து எழுதுவது பிரதேசவாதம் அல்ல - குறித்த மாவட்ட மக்களை மட்டம் தட்டி, மலையக மக்களோடு அவர்களை கோத்து விடும் கீழான பேரினவாத அரசியலை வெளிக்காட்டுகிறோம் அவ்வளவே. முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை ஏன்? ஏன் என்றால் தகுதியான முஸ்லிம் எம்பிகள் என் பிப்பியில் இல்லை. அதே போல் யாழிலும் ஒரு தகுதியான என் பி பி எம்பி இல்லை? யாழ்மாவட்டத்தில் ஒரு முன்னாள் MS இருக்கிறார். அவரோடு ஒப்பீடு செய்தால் சந்திரசேகரனின் நிர்வாக அனுபவம் என்ன? ஏன் அவரை போட முடியாது? இதுதான் கேள்வி. எனக்கு தெரியும் பல வெள்ளை இனத்தவர் அனுரவை விட ஜனாதிபதியாக தகுதி உள்ளவர்கள் - ஏன் அவர்களை இலங்கை ஜனாதிபதியாக்குவதுதானே? டக்லஸ் வச்சிருந்த அதே சொப்பன சுந்தரி கடற்தொழில் அமைச்சுத்தான் இவருக்கும். யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்றால் துரையப்பாவையே குத்த விட்டிருக்கலாம் இல்லையா? நாம் ஒவ்வொருவரும் நாட்டிலும், வெளிநாட்டிலும் அரிசி முக்கியமா, அபிலாசை முக்கியமா என முடிவுக்கு வரவேண்டும். பெரும்பான்மையின் முடிவு அரிசிதான் எண்டால் சரி ஏற்கலாம். உண்மையிலேயே மேலே சந்திரசேகரனை நியமித்ததன் பின்னால் உள்ள பிரித்தாளும் தந்திரம் உங்களுக்கு விளங்கவில்லையா? நாளைக்கு ஹிஸ்புல்லாவை யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்கினால் அதையும் வரவேற்று, எதிர்ப்போரை மதவாதிகள் என்பீர்களா?
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற 'ஃபெங்கல்' புயல் - எங்கு மழை பெய்யக்கூடும்?
ஈழத்தாய் போல ஹெலிகாப்டரில் இருந்து யாரும் பார்த்தார்களா?
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
கட்டாயம் ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சராக இருக்க வேண்டும் என்பது நியதி இல்லை என நினைக்கிறேன். யாழில் 3 எம்பிகள் என்பிபிக்கு இருக்கும் போது தலைவராக தெற்கில் இருந்து ஒருவரை போடுவதன் பிண்ணனி வெளிப்படையானது.
-
திருப்பத்தை சந்திக்க உள்ளது சீமானின் அரசியல்!
அடிப்பதற்கு ஒரே ஒருவன் இருந்தால் அடித்து விடலாம்…. வெளுப்பதற்கு ஒரே ஒருவன் இருந்தால் வெளுத்து விடலாம்…. ஆனால் இருப்பதோ சீமானும்…சாராய சிறியும் 🤣 நான் என்ன செய்வேன்…
-
தேர்தல் முடிவினை வைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள் ; சீன தூதுவருக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பதில்
பல்கலை கழகங்கள் ஒரு சமூகத்தின் ஆய்வுகூடங்கள். தனியே அறிக்கை அரசியல் செய்யாமல் - இதில் இருந்து ஒரு காத்திரமான தலைமையை உருவாக்க இந்த மாணவர்கள் முன்வர வேண்டும். அது தீபச்செல்வன், கஜேந்திரன் போல அல்லாமல் இருக்க வேண்டும்.
-
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் காலமானார்
இதே போல் இலங்கையின் கடைசி தேசாதிபதியான மகாபிரபு (Viscount) சோல்பெரியின் மகனும் அவருக்கு பின் சோல்பெரி பிரபு பட்டத்தை பெற்றவருமான 2ம் சோல்பெரி பிரபு -யோகர்சாமியின் சீடராகி துறவறம் பூண்டார். 1986 வரை கைதடி ஆசிரமத்தில் வாழ்ந்தார் என்கிறது விக்கி.
-
மாவீரர் தினத்திற்கு அனுமதி அளித்த ஜனாதிபதிக்கு நன்றி!- செல்வம் அடைக்கலநாதன்
ஏன் தம்பி மீதான விசாரணையை அடித்து நூக்க அனுர உதவி தேவையோ? பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதான மனிதருக்கு இவரின் பதில் என்ன?
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மாவீரர் நாளை கொண்டாட அனுமதித்ததாக கூறி அனுரவுக்கு ஏன் சாராயக்கடை சிறி மாவீரர் நாள் நடக்க முன்பே அவசரப்பட்டு நன்றி நக்கினார்? மேலே குசா அண்ணை கூறியது போல இனவாதம் அப்படியேதான் இருக்கிறது. தாம் ஊழல் வழக்குகளில் இருந்து தப்ப - அனுரவுக்கு வெள்ளை அடிக்கிறனர் சாராய சிறி போன்றோர். இது 2ஜி வழக்கில் இருந்து தப்ப கருணாநிதி ஆடிய நாடகத்தின் சின்ன வேர்ஷன்.
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
இஞ்ச ஏதோ பெருசா நடந்திருக்கு…நான் தான் மிஸ் பண்ணிட்டன்🤣
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
நான் என்ன கனகபுரத்தில் இருந்தா எழுதுகிறேன்? முதலாவது செய்தி - 3மாவீரர்களின் தாயாரை மேற்கோள் காட்டி இருந்தது. அந்த மாவீரரின் தாயாரிடம் இன்னும் சாராயக்கடை சிறி மன்னிப்பு கேட்டதாக தகவல் இல்லை. அந்த அடிப்படையிலும், சாராய சிறி எப்படி பட்ட கோக்குமாக்கு அரசியல்வாதி, ஊழல் மன்னன், என நான் அறிந்து கொண்டதன் அடிப்படையிலும் என் முதலாவது கருத்து இருந்தது. அதன் பின் நீங்கள் வந்து இதில் ஏற்பாட்டு குழு சிறியை தலையிடவே விடவில்லை என்றீர்கள். நீங்களும் கனகபுரத்தில் இருந்து எழுதவில்லை என தெரியும். ஆனாலும் சிறியின் அரசியலுக்கு நெருங்கியவர், அவர்க்ளின் உள்விடயங்கள் தெரிந்தவர் என்ற வகையில் நீங்கள் கூறியதை வைத்து அடுத்த கருத்தை எழுதினேன். நான் என்ன சிறியின் அடிப்பொடியா உள்வீட்டு விபரங்கள் தெரிய? நீங்கள் சொல்வது உண்மையாகினும் சிறி இந்த தாயிடம் மன்னிப்பு கோராதது அவர் இவர்களை எப்படி மதிக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது. ஒரு தமிழ் தாய் ரணில் காலில் விழ சம்-சும் பார்த்துகொண்டிருந்ததை போன்ற செயல் இது. #அண்டக்காக்கயா சொன்னா, சாதா காக்காய்கு கோவத்தை பாரேன்🤣 ம்ம்ம்ம்…. சாராய சிறி என்னிடம் வேலை கேட்டு வருகிறார் என்றா நான் எழுதினேன்? 10 ம் ஆண்டு தமிழ் இலக்கணம் புத்தகத்தில் படித்திருப்பீர்கள்? ஆல் விகுதி. என்னிடம் ஒரு நிறுவனம் இருந்தால்… சாராய சிறி ஓய்வுபெற்ற அதிபர்தான்… இப்போ இலங்கையில் சில மாவட்ட அரச அதிபர்களே…ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லாத ஆட்கள். செயல்திறன் கிலோ என்னவிலை என கேட்பவர்கள். சிறி பா உ ஆக இருந்து இந்த இனத்தின் மீட்சிக்கு உழைத்து கிழித்ததை, தமிழரசு கட்சி தலைவராக கிழித்ததை வைத்துத்தான் என் கருத்து இருந்தது.
-
வெள்ள அனர்த்தம்; யாழ்ப்பாணத்திற்கு முதற்கட்டமாக 12 மில்லியன் ரூபாய் நிதி
மூன்று எம்பிகளுக்கு தலா நாற்பது லட்சம்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அனுர பிரிகேட் எங்கே?
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
நல்ல வேலை.
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
எழுதுவதும் எழுதாததும் உங்கள் விருப்பம் அண்ணை. நான் என் காதுக்கு எட்டிய தகவல்களை எடை போட்டு, அவை எனது மனதுக்கு சரி எனப்பட்டால் அதை எழுதுவேன். ஆதாரம் கேட்டால் - நீங்கள் இதே போல் மனதுக்கு பட்டதை எழுதும் போது ஆதாரம் காட்டவில்லை, முடியாது என்பதை நினைவுபடுத்துவேன். நன்றி வணக்கம். இடம் தேதி அறியத்தரவும். சா.க சிறியையை அடிப்பதால் சுமனை அடிக்க கூடாது என்று ஒரு விரதமும் இல்லை🤣
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
இந்த சுப்ரமணிய சிவாவை போலி லெட்டர்ஹெட்டை மொக்குத்தனமாக அடிக்க வைத்து - அதன் மூலம் தன் மீதான உண்மையான பார்பெமிட் வாங்க சிபாரிசு செய்த குற்றச்சாட்டை திசை திருப்பியதே பார் சிறிதான் அண்ணை.
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
நீங்கள் இருவரும் சுத்துமாத்து சுமன் பெட்டி வாக்கியதை ஆதாரபூர்வமாக நிறுவும் வரை நானும் சாராயக்கடை சிறி யின் ஊழலை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் 🤣. மேலே விசுகு அண்ணா சொன்னது போல் - அநேகம் பேர் சிறி அண்ணா போல் அப்பாவித்தனமாக கள்ளன் ஆதாரம் வைத்து களவு எடுப்பான் என நினைப்பதில்லை. அனைவருக்கும் இவர் எப்படி விஞ்ஞான ரீதியில் சாராயக்கடை ஊழல் செய்தார் என்பது தெரியும். ஆனால் டக்ளசின் மணல் கொள்ளையை நிறுவ முடியாது…. ஆனால் டக்லஸ் இன்னும் ஒரு தொகுதியில் வெல்கிறார். அப்படித்தான் இதுவும். மாவீரர் வாரம் தொடங்க முதலே சாரா சிறி அனுரவுக்கு ஆதரவு நல்கி, நன்றி நக்கியதில், மன்னிகவும் நல்கியதில் இருக்கு தேவையான ஆதாரம். நான் சிறியை சாராயக்கடை சிறி என அழைப்பது தவறு என யாரும் கண்டால், குறிப்பாக அது வதந்தி என நம்புவோர் நிர்வாகதிடம் முறையிடலாம். நிர்வாக முடிவுக்கு கட்டுப்படுவேன். சா.சிறிக்கு வக்காலத்து வாங்குவோர் இதுக்கும் முடிந்தால் பதில் சொல்லவும். இந்தாள எல்லாம் ஒரு தலைவர் எண்டுகொண்டு🤣. எனக்கு ஒரு நிறுவனம் இருந்தால் பைல் தூக்கும் வேலைக்கும் எடுக்க மாட்டேன்.
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
அனுரவோடு சேர்ந்து அமுக்காவிட்டால்…வெகுவிரைவில் வெளியே வரும். அவர் இந்த விடயத்தில் கொடுத்த விளக்கத்தை நீங்கள் நம்புகிறீர்களா? தலைவர் வந்ததும் சேர்த காசை தருவோம் என புலம்பெயர் கள்ளர் சொன்னது போன்றதே அவரின் விளக்கம். கிளிநொச்சியில் குறித்த நபருக்கு பார் லைசன்ஸ் கொடுக்கும் படி சிறி அரசுக்கு அளுத்தம் கொடுத்தார். இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும். ———- ஒரு மாவீரரின் தாயை அவமதிக்கவில்லை… ஒழுங்குபடுத்தியதில் தவறு… சரி விசயம் வெளி வந்ததும் அவர் வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்க வேண்டாமா? ஒரு விளக்கேத்துவதில் செயல்திறனை காட்ட முடியவில்லை…. இவர் எல்லாம் சமஸ்டி வாங்கி….🤣
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
சாராயக்கடை சிறியிடமும் அவரின் அடிப்பொடிகளிடமும் வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்.
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
அமிரை கண்டால் ஜீப்பை காணோம், ஜீப்பை கண்டால் அமிரை காணோம்🤣
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
நன்றி. நான் பஜேரோக்களை கண்டது 1987 க்கு பிந்தான். பெட்டி போல இருக்கும் இந்த மொடல் பஜேரோக்களுக்கு சிங்கள பகுதியில் பெயர் “பலாத்சபா”. மாகாண சபை உறுப்பினருக்கு கொடுக்கப்பட்டதால். அமிருக்கு என்ன வகை ஜீப் கொடுத்தார்கள் என அறிய ஆவலாக உள்ளது. அப்போ அரச அதிகாரிகள் பாவித்தது போல பச்சை நிற ஜீப்போ அல்லது நிசான் பட் ரோல், டொயோட்டா லாண்ட் குருசர்? அல்லது பஜேரோ? தெரிந்தவர் கூறவும்
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
77 இல் கோஷான் மகான் இன்னும் இப்பூவுலகில் அவதரித்திருக்கவில்லை🤣. ஆகவே நியாபகம் எல்லாம் இல்லை🤣, ஆனால் “கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்” என விமர்சிக்கப்பட்டதாக வாசித்துள்ளேன். அது பஜரோ வகை ஜீப்பா? ஆங்கிலத்தில் epitaph என்பார்கள். ஒருவரின் கல்லறையில் அவர் வாழ்வை அல்லது பேர்சலல்னாலிட்டியை ஓரிரு வார்த்தையில் எழுதுவது. சிறி சேர் கல்லறையில் இதை எழுதலாம்🤣
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
சிவாஜி லிங்கம் இந்த விடயத்தில், பார்வதி அம்மா விடயத்தில் (மட்டும்) போற்றுதலுகுரியவரே. ஓரிரு நிறைகளை வைத்து பல குறைகளை காணாமல் விடுவதும் தப்பே.
-
யாழில் பேரிடர் பணியில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்தில்!
காணவில்லை (அ)கெளரவ சாராயக்கடை சிறி பா.உ