goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
Everything posted by goshan_che
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இல்லை, என் நியாபகம் சரியானால் - எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்கும் போதே தேர்தலுக்கு முன் கூட்டணியில் இருந்தாலும், இனி நாம் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக தொடர்வோம் என அறிவித்துவிட்டார். அந்த அறிவிப்போடு கூட்டணி முறிந்து விட்டது. தேர்தலுக்கு பின்னும் கூட்டணி தொடர்வது என்பது இப்போ திமுக+விசிக இருக்கும் நிலை போன்றது. அப்படி ஒரு உறவில் அதிமுக+தேமுதிக அன்றைய தேர்தலுக்கு பின் இருக்கவில்லை. இதன் பின் பலவருடங்கள் அதிமுக - தேமுதிக உறவு மோசமான பின், அடுத்த தேர்தல் சமயம், தேர்தலுக்கு சில மாதம் முன்புதான் மநகூ ஐடியா கருக்கொண்டது. இந்த தரவைத்தான் சொன்னேன். அதே போல், 4 வருடம் எதிர்கட்சியாக எதிர்த்த அதிமுகவுடன் அடுத்த தேர்தலில் தேமுதிக கூட்டு வைப்பதும் சரியாக இருந்திராது, ஆகவே அடுத்த தேர்தலில் விஜயகாந்த் முன்பு இருந்த தெரிவுகள், 1. அவர் தலைமையில் கூட்டணி 2. திமுக கூட்டணி ஆகவே வைகோ பேச்சை கேட்டு, விஜகாந்த் அதிமுக கூட்டை உடைக்கவில்லை. கூட்டு உடைந்த சில வருடங்களின் பின்பே மநகூ உருவானது. சீமானும் கூட்டணி வைக்க வேண்டும் என்ற உங்கள் கூற்றை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. கூட்டணி முறிவு எப்போ நடந்தது என்ற தரவை மட்டுமே குறிப்பிட்டேன். இப்போ சீமான் கூட்டணி வைப்பது பற்றிய என் கருத்து. ஊரில் சில ஆண்கள் பெயரை கெடுத்து கொண்டதால் எவரும் அவருக்கு பெண்கொடுக்காமல், கலியாணம் பண்ணாமல் இருப்பார்கள். ஆனால் கேட்டால் நான் கலியாணம் எல்லாம் கட்டமாட்டேன் எண்டு உதார் விடுவார்கள். சீமான் நிலையும் அதுவே. அவருடன் சேரப் பலர் தயார் இல்லை என்பது விஜை அவரை வேணும் எண்டே வெட்டி விட்டதிலே தெரிகிறது. இதுவரை எந்த கட்சியாவது நாம் சீமானுடன் கூட்டணி வைப்போம் என கூறியதுண்டா? ஈழத்தில் எம் மக்களிடம் தலைவருக்கு இருக்கும் இடம் போன்றது தமிழகத்தில் பெரியாருக்கு மக்கள் மனதில் இருக்கும் இடம். ஈழத்தில் தலைவரை, தமிழக்கதில் பெரியாரை தூற்றி கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியாது. தலைவரை, பெரியாரை எதிர்க்கும் ஒரு 10% குறுக்கு புத்தி கூட்டத்தின் வாக்கு மட்டும் கிடைக்கும். இலங்கை தேர்தல் முறை இது டக்லசுக்கு ஒரு சீட்டை தொடர்ந்து வழங்குகிறது. தமிழ்நாட்டு முறையில் சீமானுக்கு அதுவும் இல்லை. ஆனால் ஈழத்தில் டக்லஸ் சோடு வேறு எந்த தமிழ் கட்சியும் கூட்டுக்கு ரெடி இல்லை. இதே நிலைதான் சீமான் விடயத்தில் தமிழகத்திலும்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
கருணாநிதியை விமர்சிப்பது = நாம் விட்ட பிழைகளை மறுப்பது/மறைப்பது என்ற சமன்பாடு, இங்கே சிலர் எனக்கு சீமானை எதிர்பது=திமுகவை ஆதரிப்பது என போடும் சமன்பாடு போல் தெரிகிறது எனக்கு. ——— இதற்காக அவர்கள் நாட்டு அரசியலில் நாச சக்கிதியை முன் தள்ளுவது பிழைதான். ஆனால் இந்த நாச சக்தி அங்கே ஒரு நாளும் வெல்லாது. ஆனால் இதை நம்மில் சிலர் ஆதரிப்பதால் அங்கே எமக்கு பெருவாரியான எதிரிகள் உருவாகி விட்டுள்ளார்கள். 2009 க்கு பின் விசிலடிக்க ஆள் கிடைக்காமல் அலைந்த ஒரு மொக்கு கூட்டம், எமக்கு சொருகிய இன்னொரு ஆப்பு இது. விஜை தமிழ் தேசிய அரசியல் என சொல்லும் அதே வேளை, மிக தெளிவாக அம்பேத்கரை உள்ளே கொண்டு வந்து, தலைவரை தேவையில்லாமல் இழுக்காமல் விட்டதன் பின்னால் உள்ள தெளிவு - இவர்களுக்கு விளங்கும் என நான் நினைக்கவில்லை.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
@valavan உங்கள் கருத்தை ஒட்டி என் கருத்து. சீமான் விஜையை எதிர்த்த காரணங்கள் இரண்டு. 1. சீமான் கருவறுப்பேன் என்ற திராவிட கொள்கையை, விஜை தன் கண்ணில் ஒன்று என்றது. பெரியாருக்கு மாலைபோட்டபோது கூட அமைதியாக இருந்தார். ஆனால் விஜை அப்படி ஒரு கொள்கை விளக்கம் கொடுத்த பின், சீமான் எதிர்த்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அல்லது விஜை தள்ளினார். இனி, ஒன்றில் விஜை திராவிடம் என் ஒரு கண்ணில்லை என சொல்ல வேண்டும். அல்லது சீமான் திராவிட கொள்கையும் தனக்கு ஏற்பு என சொல்லி, திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை கைவிட வேண்டும். இது இரெண்டுக்கும் வாய்பில்லை என நான் நினைக்கிறேன். 2. யார் முதல்வர் வேட்பாளர் என்ற போட்டி. இத்தனை காலம் சீமான் உழைத்ததே இந்த பதவிக்குதான். அதேபோல் நம்பர் 1 ஸ்டார் சம்பளத்தை விட்டு விஜை வந்ததும் இந்த பத்விக்குத்தான். அடுத்து இன்னொர் விடயம், விஜய், சீமான் இருவரும், தலைவரோ, அம்பேத்கரோ இல்லை. அந்தளவு கொள்கைவாதிகள் அல்ல. ஆகவே இந்த உறவாடி கெடுத்தல் எல்லாம்¥ வெறும் கற்பனை கதைகளே. விஜைக்கு தமிழ்நாட்டில் வாக்கு எங்கே இருக்கிறது என புரிகிறது. அதாவது திராவிட கொள்கை வாக்கு வங்கியில் ஒரு பங்கு, தமிழ் தேசிய வாக்கு வங்கியில் ஒரு பங்கு எடுக்க நினைக்கிறார் விஜை. அதை தனதாக எடுத்து கொள்கிறார். இது முழுக்க முழுக்க வாக்கு வங்கி கணக்கு. முன்னர் கருணா பிரிந்த சமயம் - யாழில் சிலர் முதலில் அப்படி எதுவும் இல்லை என எழுதினார்கள், பின்னர் ரணிலை ஏமாற்ற தலைவரும் கருணாவும் பிரிவு போல் நடிப்பதாகவும் எழுதினர் சிலர். அதே போலத்தான் வந்த வெள்ளம் நிண்ட வெள்ளத்தை கொண்டு போய் விடுமோ என்ற பதற்றத்தில் தம்மைதாமே தேற்றி கொள்ள சிலர் சொல்லிகொள்ளும் கதைதான் இந்த உறவாடி கெடுக்கும் கதை.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இது தரவு பிழை என நினைக்கிறேன். ஜெ யுடன் விஜயகாந்த் கூட்டு வைத்து, தேர்தல் முடிந்து அவர் எதிர்கட்சி தலைவரானதுமே அவரின் ஜெ யுடனான கூட்டணி முறிந்து விட்டது, எதிர் கட்சி, ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்க ஜேர்மனி இல்லையே தமிழ் நாடு. அப்புறம் விஜயகாந்த நாக்கை துருத்தி பேசி, உறவு முற்றிலுமாக பகை என்றான பின்பே வைகோ மக்கள் நல கூட்டணி ஐடியாவோடு வந்தார்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இருக்கிறது? எப்படி தெரியுமா? மனிதர்களாக, தமிழர்களாக. இதில் புலிகள் செய்தது சரியா, எத்தனை வீதம் சரி என்பது கருது பொருள் அல்ல. யுத்தத்தை எப்படியாவது வெல்லவேண்டும் என்ற முனைப்பில், தமிழர்கள் மீது போர்குற்றம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தனியே புலிகள் மீது மட்டும் அல்ல. அந்த யுத்தத்தை நிறுத்த ஒரு மனிதனாக, சக தமிழனாக கருணாநிதி தன்னால் முடிந்த அத்தனையையும் செய்திருக்க வேண்டும். அப்படி ஒரு சக தமிழனாக, மனிதனாக நாம் எதிர்பார்த்தது தவறில்லை. அப்படி செய்யாத அவரை தூற்றுவதும் தவறில்லை.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
👆இதில் ஒவ்வொரு சொல்லுடனும் உடன்படுகிறேன். 👆 இதனோடும் உடன்படுகிறேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
என் பக்கம் நியாயம் இல்லாத போது, அதை சுட்டும் வகையில் போது, அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளேன், கேட்ப்பேன். மேலே நீங்கள் சொன்ன கருத்தை, கடந்துதான் போனேன், நீங்கள் நேரடியாக என்னை போல இந்த திரியில் கருத்து எழுதியோரை சுட்டி எழுதியபோதும், அதை ஒரு மனித வழு என கடந்தே போனேன். அதன் பின் பல கருத்துக்களை எழுதினேன், அதை பற்றி ஒரு சொல்கூட எழுதவில்லை. குழுவாத மனோநிலை தலைக்கேறிய இன்னொருவர், ஏதோ உங்கள் கருத்துக்கு வலுச் சேர்பதாக நினைத்து, அதே பிழையான, நியாயமற்ற கருத்தை மீள எழுதிய பின்பே, இதை டீல் பண்ணுவதை தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்தேன். நாம் எல்லோரும் பிழை விடுவது வழமை. இது நாளைக்கு எனக்கும் நடக்கலாம் என்பதை உணர்ந்தே உள்ளேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
தானாக வந்து சொறிவது… அதே மொழியில் பதில் கொடுத்தால்… இனி பதில் தரமாட்டேன் என ஓடுவது….🤣 கடந்த மூன்று நாளில் இப்படி ஓடிய மூன்றாவது வது திரி இது🤣. விஜை சம்பந்தபட்ட திரி என்பதால் ஒரு விஜை பாடலோடு திரியை நிறைவு செய்யலாம் (சீண்டல் தொடர்ந்தால் திரி நீளும்) என நினைக்கிறேன். Badass ம்மா….உரசாம ஓடிடு…. லியோ…..ஒ…ஒ…
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
15/100. மாணாக்கரின் பெறுபேறு மிகவும் பின் தங்கி உள்ளது. கடும் முயற்சி தேவை. சாதாரண சித்திக்கு 40/100 எடுக்க வேண்டும்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
சீமான்-காதலரே, யாழ்களத்தில இதவிட பெரிய வசவுகளை எல்லாம் இடது கையால் டீல் பண்ணி இருக்கேன்🤣. இதுக்கு சு……. சுண்டு விரல் கூட தேவையில்லை. சின்ன விரல் நிகம் போதும் 🤣. இன்னும் முயலவும். முன்னேற இடமுண்டு.
-
பொய் கூறும் டக்ளஸ்! சுமந்திரனுக்கும் பதவி இல்லை: அநுர தரப்பு உறுதி
வெட்கம் கெட்ட பிழைப்பு.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
எனக்கும் சீமான் காதலர்களோடு பேசப்பிடிப்பதில்லை. சீமானை போலவே என் மீதும் காதல் வயப்பட்டு விடுவார்களோ என்ற பயம்தான்🤣. ஆனால் மறைமுக சுட்டல், குத்தல், சொறிச்சேட்டைகளை கண்டும் காணாது போக நான் ஒன்றும் டீசண்டான கருத்தாளர் அல்ல. திரியை பூட்டினாலும் பூட்டாவிட்டாலும் ஐ டோன் கேர். என்னை நோக்கி பூவை எறிந்தால் பூ… பவ்வியை எறிந்தால்…பவ்வி…
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
புரிகிறது….. முன்பே எழுதியதுதான் அண்ணா. கருணாநிதியாலோ வேறு எவராலோ நடந்ததை நிறுத்த முடிந்திராது. ஆனால் பதவியாவது ஹைகோர்ட்டாவது என தூக்கி எறிந்து விட்டு கருணாநிதி வந்திருக்க வேண்டும், அப்படி வரும் படி அவரை ஏனையோர் தூண்டி இருக்க வேண்டும். குறிப்பாக வீரமணி. இங்கே பலர் இலவசமாக வக்காலத்து வாங்கி வைரமுத்து. திருமா… இப்படி கருணாநிதி காதுக்கு நெருக்கமாய் இருந்தோர். இது துரோகம்தான். மறக்க முடியாதுதான். ஆனால் திமுக, அதிமுக, போல அல்ல தி. க தொண்டர்கள். நான் அப்போ தமிழ் நாட்டில் இருந்தேன். நா.த. க வில் இருந்து விலகிய கல்யாணசுந்தரம் அப்போ கல்லூரி மாணவன் அல்லது விரிவுரையாளர்…கம்யூடிஸ்டுகளோடு சேர்ந்து…இவர் போன்றோரும்…தி. க வினரும் தம்மால் முடிந்தளவு முயன்றார்கள். ஒவ்வொரு நாளும் கருணாநிதி கோட்டைக்கு போகும், வரும் போது வேறு வேறு இடங்களில் நின்று கொழுத்தும் வெய்யிலில் போராடுவார்கள். ஆனால் இது மிக சொற்பமானோரே. ஜல்லி கட்டுக்கு எழுந்த கூட்டத்தில் 1/100000 ஒன்று கூட சேர்வதில்லை. எல்லோரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது…கூடாது. அதுதான் “சுட்டல்” என சொல்லி விட்டேனே, எனது பெயரை குரிப்பிட வேணும் என்பதில்லை. நான் செய்த விடயத்தை சுட்டல் செய்தால் நான் பதில் கொடுப்பேன். தாத்தா பேரனுடன் கொஞ்சுவதை தனி மடலில் வைத்தால் எவரும் கேட்கப்போவதில்லை. நான் செய்த விடயத்தை நாகரீகம் அற்ற செயல் என பொது வெளியில் சுட்டல் செய்யின்…பதில் வரும். அது சீமான்-காதலரான ஆணாக இருந்தாலும். அருமையான ஆதாரம். இணைப்பு உள்ளதா?
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
நான் யாழில் இல்லாத போது பல சம்பவங்கள் நடந்திருக்கும் போலயே🤣 ————————— இவ்வளவு நடக்குது…..இலண்டனில் சிறிக்கு டிரைவர் வேலை பார்த்தவர் கமுக்கமாய் இருக்கிறார்.
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
நானும் சகதியில் இறங்க வேண்டாமே என யோசிக்கிறேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
நிச்சயமாக நீங்கள் புத்திசாலிதனமாக நடப்பதை புரிந்து கொள்கிறேன். உங்களுடனும் “கருத்தாடல்” செய்தே தீர வேண்டும் என்ற தீரா ஆசை ஏதும் எனக்கும் இல்லை என்பதையும் பணிவன்புடன் அறியத்தருகிறேன். ஆனால்…… நான் உட்பட சிலர், செய்தி திரியில், கருத்து எழுதியதை….ஏதோ வாழ்த்து திரியில் கருத்து எழுதியது போல் திரித்து எழுதி…எமக்கு நாகரீக வகுப்பு எடுக்க வெளிகிட்டால் அதுக்கு பதில் வந்தே தீரும். உங்கள் தாத்தாவிடமோ, பாட்டியிடமோ, முப்பாட்டனுடனோ நீங்கள் - என்னை சுட்டி பொது வெளியில் எழுதினால், அதை கடந்து போவதா இல்லையா என்பதை நான் மட்டுமே தீர்மானிப்பேன். புரிய முயல்வீர்கள் என நம்புகிறேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
நிச்சயம் அறிவு ஜீவி விளையாட்டுக்கு உங்களுடன் நான் வரவில்லை. செய்தி திரியில் வாழ்த்து சொன்னால் எனக்கு அது மேட்டர் இல்லை. ஆனால் நான் விதிப்படி நடந்து கொண்டுள்ளேன், ஆகவே நான் நடந்து கொண்டமை பற்றி கேள்வி கேட்டால் அதுக்கு பதில் கொடுப்பேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இது செய்தி. இதை விஜை வந்து யாழ் களத்தில் ஒரு வாழ்த்து திரியாக திறக்கவில்லை. செய்தி திரியில் கருத்து சொல்லாமல், வாழ்த்து சொல்லி விட்டு, கருத்து சொன்னவன் மீது பிராது வேறு🤣. # புரிதலாவது புரியாணியாவது.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
தாத்தாவுக்கு மறதி வரலாம் வயது அப்படி? பேரனுக்குமா? இது வாழிய, வாழிய பகுதி அல்ல. தமிழக செய்திகள் பகுதி. இதில் விஜை என்ற அரசியல்வாதி சீமான் என்ற அரசியல்வாதிக்கு வாழ்த்துச்சொன்ன செய்தியும் அதை பற்றிய உரையாடலும் வழமை போல் இடம்பெறுகிறது. ஒரு கருத்து களத்தில் எந்த பகுதியில் நிற்கிறோம் என்ற நிதானம் கூட இல்லை, இதில் மற்றவனுக்கு நாகரீகம் பற்றி வகுப்பெடுப்பும், தாத்தா-பேரன் பரஸ்பர முதுகு சொறிதலும் வேறு🤣.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
திமுக, அதிமுகவின் கோரமுகம். இதில் வீரமணியையும் சேர்த்துக்கொள்ளலாம். எல்லோர் வாயையும் கட்டிய தலைமை பூசாரி கருணாநிதி. அதன் பிந்தான் எவரையும் நம்பி பலனில்லை என்பது எமக்கு உறைத்தது. இதில் பிரித்தானியாவும், பிரான்சும் திமுக அதிமுகவை விட மோசமாக நடந்து கொண்டன. ஆனால் அவற்றை நாம் திராவிட இயக்கங்களை எதிர்ப்பது போல் எதிர்ப்பதில்லை. ஏன் என்றால் அது நாம் இருக்கும் மரத்தின் கொப்பு. தமிழ் நாடு? அப்படியில்லை. ஆகவே அங்கே என்ன விசத்தையும் வளர்த்து விட நாம் ரெடி. ஆனால் நீங்கள் சொல்லும் ஒரு விடயம் சரி, 2009 இன் பிந்தான் தமிழ் தேசியம் Vs திராவிடம் என்ற முரண் வலிந்து உருவாக்கப்பட்டது. ஆகவே மேலே புலவர் செய்தது 2009 க்கு முன்னான வரலாற்றை தன் இஸ்டபடி எழுதும் முயற்சி என்பது சரியாகிறது.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
கொள்கை அளவில்??? நீங்களா இப்படி எழுதுவது…. தமிழ் நாட்டை விட சாதி மறுப்பை கடுமையாக நடைமுறைபடுத்தினார்கள். யாராவது வறணி ஆட்கள் இருந்தால் கேட்டுப்பாருங்கள்🤣 இது முழுக்க முழுக்க இப்போ நீங்கள் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டுக்காக வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி. புலிகள், ஈழத்தில் தமிழ் தேசியம். தமிழகத்தில் திராவிடம். அவரவர் நிலத்தில் அந்தந்த கொள்கை என உணர்ந்து அந்த வரையறைக்குள்தான் நிண்டார்கள். தலைவர் இருக்கும் வரை சீமான் திராவிடத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் என்றால் அப்படி செய்ய அவர் அனுமதிக்கப்படவில்லை.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இதை ஏற்கலாம். இதை பிழை என்றும் சொல்ல முடியாதே? அவர்கள் தாம் வரித்து கொண்ட முற்போக்கு கொள்கைகள் இன்னொரு தமிழ் மண்ணிலும் நிலை பெற வேண்டும் என எண்ணினர். அதிலும் பல குப்பைகளை தவிர்த்து விட்டு தலைவர் மீது தனி அக்கறை காட்டினர். ஏன்? பலர் தத்துவம் பேசினாலும் செயலில் முற்போக்காளர் தலைவர் என்பதை கண்டு கொண்டதால். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. திக, புலிகள் இடையான உறவு யூகே லேபர், அமெரிக்கன் டெமோகிரட்ஸ், கன்சேவேடிவ்-ரிபப்ளிகன் உறவு போல, ஒத்த கொள்கை உடைய அமைப்புகளின் பரஸ்பர நட்பு உதவி என்ற எல்லையை தாண்டவில்லை. அப்படி தாண்ட கூடாது, அவரவர் விடயத்தில் மற்றவர் தலையிட கூடாது என்பதில் திகவும், தலைவரும் உறுதியாகவே இருந்தனர்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
டிஸ்கி டிஸ்கி போடலாமா என யோசித்தேன். பொறகு கோஷான் அந்த சாதியா, இந்த சாதியா என பல பி எச் டி ஆய்வு கேள்விகளை சிலர் மனதில் அது ஏற்படுத்தி விடும் என்பதால் தவிர்கிறேன்🤣.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
எவ்வளவு பெரிய லிஸ்ட்டு.. வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொன்ன சீமான்! அன்புத் தம்பி விஜயை மறக்கலையே! Rajkumar RPublished: Saturday, November 9, 2024, 19:25 [IST] சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இதை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் சீமான் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அவருக்கும், பிற தலைவர்களுக்கும் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர்," நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் 'சகோதரர்' சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியிருந்தார். சீமான் பிறந்தநாள் அன்று விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் ஆரோக்கியம் என்று பார்க்கப்படுகிறது. விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்த சீமானுக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருப்பதை நாம் தமிழர் கட்சியினர் கூட பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார் சீமான். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில்,"என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த, முன்னாள் முதல்வர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக-தமிழ்நாடு முன்னாள் தலைவருமான அம்மையார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் பெருமதிப்பிற்குரிய பெருந்தகை எங்கள் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களுக்கும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கும், மனித நேய அறக்கட்டளை நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா சைதை துரைசாமி அவர்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும், புரட்சித்தமிழன் பேரன்பிற்கினிய அண்ணன் சத்தியராஜ் அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஐயா டி.டி.வி.தினகரன்அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பு அண்ணன் முனைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும், பாஜகவின் மகளிர் அணி தேசியச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச்சகோதரி வானதி சீனிவாசன் அவர்களுக்கும், அன்பு அண்ணன் நடிகர் இராமராஜன் அவர்களுக்கும், அண்ணன் இயக்குநர் விக்ரமன் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் அன்பிற்கினிய இளவல் சேது.கருணாஸ் அவர்களுக்கும், மற்றும் அரசியல், திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும், உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன்." என கூறியுள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-katchi-leader-seeman-celebrates-birthday-thanks-vijay-and-others-for-wishes-653199.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
நான் களத்துக்கு திரும்பிய அன்று, ஒரு பெருந்தகை, நான் குழுவாதம் இல்லாமல், தனிமனித தாக்குதல்களை தவிர்த்து கருத்தாடுவேன் என எதிர்பார்ப்பதாக இன்னொரு உறவிடம் சொல்லி இருந்தார். கண்டா வரச்சொல்லுங்க. பிறைமறி ஸ்கூல் பிள்ளையள் போல எங்காவது குருப்பா பிரிஞ்சு மாபிள் அடிச்சு கொண்டு நிற்கிறாரோ தெரியவில்லை🤣.