Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இந்த வன்னி அரசைதானே ஒரு 2 வருடம் முதல் கழுவி ஊத்தினீர்கள்? தம்மை மூர்க்கமாக எதிர்ப்போரை பற்றி இப்படியான கதைகளை திமுக ஐடி விங் கிளப்பி விடுவது வழமை என்பதை உங்களால் மறுக்க முடியாதுதானே🤣. திருட்டு தீம்கா ப்ரோ 🤣
  2. அதிமுக கொடுக்குமா என்பதை சொல்ல முடியாது, ஆனால் அடுத்த தேர்தலில் விஜையோடு சேராவிடால் அதிமுக அடிவாங்கும். விஜையும் பெரிதாக வெல்ல முடியாது. திமுக கரை சேர்ந்து விடும். விசிக விஜை பக்கம் வராது என நினைக்கிறேன். பாஜக வை தொட யாரும் தயாரில்லை. மிஞ்சி இருப்பது, அதிமுக, காங், தேமுதிக, பாமக, உதிரிகள்தான். இவர்கள் விஜை தலைமையில் கூட்டணி இல்லாவிடினும், தேர்தலுக்கு முந்திய சீட் பகிர்வு வைத்தால் மட்டுமே திமுகவை அகற்ற முடியும். இதை நோக்கியே விஜை நகர்கிறார் என நினைக்கிறேன்.
  3. எதிர்ப்பு பார்பனியம், வர்ணாசிரமம் அதன் வழிவந்த கொள்கைகளுக்கே ஒழிய பிராமண தனி நபர்களுக்கு, கூட்டத்துக்கு அல்ல. மேலே நான் பார்பனியம் என குறிப்பிட்ட இன மேலாண்மைவாத racial supremacy கொள்கையின் இன்னொரு பெயர்தான் ஹிந்துதுவா, சனாதனம். இந்த சனாதனக்கு எதிராக அடக்கபடும் மக்களிடம் இருந்து எழுந்தவைதான் அம்பேத்கரின் தலித்தியமும், பெரியாரின் திராவிடமும். பார்பனியமும், தலித்தியமும், திராவிடமும் ஒத்த கொள்கைகள் அல்ல. பார்பனியம் அடிப்படையிலேயே மனித குல விரோதமானது. ஆனால் திராவிடமும், தலித்தியமும் மனித குல முன்நோக்குக்கானது. திராவிடத்தை சிலர் கைகொண்டு கொள்ளை அடிப்பதால், ஹைஜாக் பண்ணி அரசியல் இலாபம் அடைவதால், அது பார்பனியம் போல ஒரு மோசமான தத்துவம் என கூற முடியாது. பெரியார் பார்பனியத்யை எதிர்த்தார். பார்பனிய சாதி, தனி நபர்களை அல்ல. சீமான் எதிர்ப்பது தெலுங்கு வம்சாவழியினரை, தனி நபரை.
  4. விஜயகாத் அப்படி சொல்லி, பின் கூட்டணி வைத்து - நம்பகதன்மை இழந்தார். சீமான் அப்படி சொல்லி விட்டு - 8% வாக்கு வங்கி இருந்தும் ஆம்மஞ்சல்லிக்கு பயனற்ற, தன் சுய செல்வாக்கை, செல்வத்தை மட்டும் உயர்த்தும் அரசியல் செய்கிறார். இருவரில் இருந்தும் பாடம் படித்த விஜை - ஆரம்பக்திலேயே கொள்கை உடன்பாடு உள்ளோரோடு கூட்டணி என்கிறார் என நினைக்கிறேன். உண்மையில் விஜை அதிமுகவோடு, காங்கிரசையும் சேர்த்து 45%+45+10% சீட்டுகளை பங்கிட்டு ஒரு உடன்படிக்கை செய்தாலே போதும். அடுத்த தேர்தலில் கணிசமான இடத்தை பெறலாம். இது அதிகாரத்தை அடையும் கணக்கு. இதில் கொள்கை அடிப்படையில் எதிர்க்க எதுவும் இல்லையே.
  5. நேற்று வரை விஜையை இன்னொரு தமிழ் தேசிய சக்தி என வரவேற்ற நீங்கள், நேற்றைய சீமானின் பேச்சுக்கு பின் நிலை மாறுகிறிர்கள்? ஏன்? சீமான் விசுவாசமா? விஜையை ஏன் முகமூடி என்கிறீர்கள். என்னை போல் அவரும் இரெண்டிலும் அதிக வேறுபாடு காணாத, இரெண்டிலும் பல நன்மைகள் இருப்பதை உணரும் ஒருவராக இருக்கலாம்.
  6. மேலே ரசோ எழுதியதையே நானும் சொல்கிறேன். திராவிட இனம் = 5 மொழிவாரி இனங்களின் கூட்டுப் பொதுப்பெயர். திராவிட அரசியல் சித்தாந்தம் = தமிழ் நாட்டில் ஆரிய சித்தாந்ததுக்கு எதிராக நீதி கட்சி, பின் பெரியாரால் எழுப்பபட்டது. நீங்கள் இனப் பகுப்பை, சித்தாந்தத் தோடு போட்டு குழப்பி கொள்கிறீர்கள். மெட்ராஸ் மாநிலமாக இருந்த போதே மற்றைய 3 தென் மானிலங்களாக பிரிந்த பகுதிகளில் திராவிட சித்தாந்தம் பரவவில்லை. அவர்கள் ஒன்றில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ் அல்லது ஜனதா கட்சி (பின்னாளில்)தான். தமிழர் பகுதியில்தான் அநேகம் பிராமண எதிர்ப்பு அரசியல் நிலை கொண்டது. இதன் ஆரம்பகால பெயர் பிராமணர் அல்லாதோர் சங்கம். அப்போ 5 மொழி பேசுவோரும் ஒன்றாக இருந்தமையால், பிராமண எதிர்ப்பு அரசியல் என்ற தத்துவத்தை பிராமணர் அல்லாதோருக்கு பொதுவாக திராவிடம் என்ற சொல் உள்ளே வருகிறது. ஆனால் இதன் இனவழி அடையாளப்பொருள் மொழி வாரி மாநில பிரிப்போடு செத்து விடுகிறது. இப்போ திராவிடம் என்றால் அது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரித்தான அரசியல் தத்துவம் மட்டும்தான். இதை திராவிட சித்தாந்தம் என சொல்லுவது கசக்கிறது என்ரால் பெரியாரிசம் என சொல்லி விட்டு நகருங்கள். சுருங்க சொல்லின், ஆரியத்தை இரு வகையில் எதிர்க்கலாம். தமிழ் தேசியம் அல்லது திராவிடம். மூன்றாவதாக இரெண்டு வழியையும் சேர்த்து, தமிழனாய் உணர்பவன் எல்லாம் தமிழன் என்ற அடிப்படையில் இன்னும் சிறப்பாகவும் எதிர்க்கலாம். முந்தி சைவமா, வைணமவா என நம் மன்னர்கள் அடிபட்டார்கள், அதே போல் மூவேந்தர் அடிபட்டார்கள். கடைசியில் தஞ்சையை மராட்டியனிடமும், மதுரையை நவாப்பிடம் கொடுத்ததுதான் மிச்சம். இதை ஒத்த ஒரு வீண் வேலைதான் இந்த திராவிடம் vs தமிழ் தேசிய போலி விவாதமும். இதை தூண்டி விடுவதில் முன் நிற்பவர்கள் “ஒற்றுமை கிலோ என்ன விலை” என கேட்கும் ஈழத்தமிழர்கள் என்பது வியப்பில்லை. கொள்கை மோதல், பிரதேச மோதல், இயக்க மோதல், இயக்க-உள் மோதல் என தமது தலையில் மண்ணை அள்ளி கொட்டி கொண்ட ஒரு இனம், இப்போ தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு நிலையை உருவாக்கி விட உழைக்கிறது.
  7. கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். பல வகைகளில் இது தமிழர் பகுதியில் ஒரு திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். கிழக்கு மாகாணத்தை கணிப்பது ஓரளவு இலகு. திருமலை தமிழரசு 1 மட் தமிழரசு 2, பிள்ளையான் 1, முஸ்லிம் 2. என வரும் என நினைக்கிறேன். முஸ்லிம் 1, என்பிபி 1 என ஆகவும் கூடும். அம்பாறையில் இருக்கும் வாய்ப்பை எல்லாரும் கேட்டு வெற்றிகரமாக கெடுப்பார்கள் என நம்புகிறேன். யாழில் என் பி பி, அருச்சுனா என இரு வலுவான வாக்கு பிரிப்பாளர்கள் இந்த முறை என்ன பாதிப்பை தருவார்கள் என்பது ஒட்டுமொத்த மாவட்ட முடிவுகளை கணிக்க கடினமானதாக்கி உள்ளது. சுமந்திரன், சிறிதரன், டக்கிளஸ் கிட்டதட்ட உறுதி என நினைக்கிறேன். மிகுதி 3 இடம்கள் - லாட்டரிதான். வன்னி - சுத்தமாக ஐடியா இல்லை. சிங்களவர் + கணிசமான தமிழர் + முஸ்லிம் வாக்குகளால் ஒரு தமிழர் தரப்பு சீட்டை என்பிபி லபக்க கூடும்.
  8. @வீரப் பையன்26 மகிந்த-ரணில் ஒப்பீடு திசை மாற்றும் உத்திக்கான உதாரணம் மட்டுமே🙏.
  9. இது உங்களதும் உங்கள் தாத்தாவினதும் வழமையான பாணிதான். நான் சீமானை விமர்சித்தால் - ஏதோ நான் திமுகவை விமர்சிக்காதவன் போல உருட்டுவீர்கள். மகிந்தவை விமர்சித்தால் அப்போ நீ ரணில் ஆளா என கேட்பதை போன்ற திசை மாற்றும் உத்தி இது. திமுக, காங்கிரஸ், திருமா, அதிமுக அனைவரையும் நான் எவ்வளவு கடுமையாக யாழில் விம்ர்சித்துள்ளேன் என்பது அம்னீசியா இல்லாதோருக்கு தெரியும். பேராண்டி பாசத்தில் சீமானை ஆதரிக்கும் பெரியவர்களிடம் நடுநிலை பற்றி லெக்சர் கேட்க வேண்டிய நிலையில் நான் இல்லை என நம்புகிறேன்🤣.
  10. நான் சொன்ன தம்பி நீங்கள் அல்ல. உங்களிடம் இந்த கேள்வி கேட்ட அன்றே நீங்கள் இதே பதிலை சொல்லி விட்டீர்கள். நாதம் தான் பிஜேபி யை நேரடியாகவே ஆதரிக்கிறேன் என ஒத்து கொண்டார். கள்ள மெளனம் காப்பது வேறு ஒருவர். இந்த திரியிலும் எழுதுகிறார். ——————- 1. விஜை- மோடி உறவு பற்றி @ வாலி முன்னர் திண்ணையில் எழுதினார். அதே போல் @ரசோதரன் இதே திரியில் ஆனந்தின் பிஜேபி தொடர்பு பற்றி எழுதியுள்ளார். நிச்சயம் அவதானிக்க வேண்டிய விடயம். கூட்டணி வைக்க மாட்டார் என நினைக்கிறேன். 2. கூட்டணி வைத்தால் சீமானை எதிர்ப்பதை போலவே எதிர்ப்பேன் உங்கள் சிதறட்டும், சிறக்கட்டும் கோஷங்கள் கொஞ்சம் சிரிப்பை தருகிறது. 5 மொழி பேசும் நிலங்கள் இருந்த போது திராவிடமாக இருந்த கொள்கையின் தற்போதைய வடிவம்தாம் தமிழ் நாட்டின் தமிழ் தேசியம். காலத்துகேற்ப கூர்ப்படைந்த திராவிட கொள்கைதான் தமிழ் நாட்டின் தமிழ் தேசியம். ஒன்று வீழ்ந்து இன்னொன்று வாழும் என்பது மாயக்கணக்கு, செயற்கையான பிரிப்பு, false dichotomy.
  11. தெளிவான குழப்பம்தான். என்பிபி க்கு போடும் தமிழர், மாகாணசபை இப்போ இருப்பதே போதும் அல்லது இதுவும் வேண்டாம், மேற்கு நாடுகள் போல் இனவாதம் குறைவான ஒரு ஒற்றையாட்சி இலங்கையே போதும் என நினைத்தே என்பிபி க்கு போடுகிறார்கள். அதாவது அடைய/கிடைக்க/தரமாட்டாத தீர்வை கேட்பதை விட, மும்மொழி கொள்கை செவ்வனே அமல்படும், இனவாதம் களையப்பட்ட, புதிய இலங்கையை நாமும் பங்காளிகாகி கட்டி எழும்புவோம் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. பட்டறிவு இது நடவாத காரியம் என எமக்கு உணர்தினாலும், அவர்கள் இதை முயற்சித்துத்தான் பார்ப்போமே என நினைக்கிறார்கள்.
  12. நான் என்ன ரஜனிகாந்தா மகளுக்கு யாருக்கு வாக்கு போடுங்கள் என அட்வைஸ் பண்ண. நான் இப்போ ஒரு வாக்காளராக இருப்பின் டாக்டர் அர்ஜூனாவின் அணியில் பிரதான வாக்கை செலுத்தி, ஆனால் விருப்பு வாக்கை அர்ஜுனாவுக்கு போடாமல் விடுவேன். இதற்கு ஒரே காரணம் அவர்கள் தமிழ் தேசிய வழியில் வரும் புதியவர்கள் என்பதே. ஆனால் அர்ஜுனா மனநல தளம்பல் உள்ளவர், எனவே அவரை தவிர்ப்பேன். சிங்களத்துக்கு வாக்களித்தால் எதுவும் நடக்கும் என நான் கூறவில்லை. இதுவரை மக்கள் யாரும் பெரும் அளவில் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. அங்கயன், விஜயகலா, போன்றோரின் தனிப்பட்ட செல்வாக்கே அங்கே எடுபட்டது. ஆனால் NPP அப்படி அல்ல. முந்தைய கம்யூனிஸ்டுகளுக்கு பின், முதல் தடவை ஒரு சிங்கள கட்சிக்காக வாக்கு யாழில் விழுகிறது. செல்வாக்குக்கு காரணம் - தமிழ் தேசிய கட்சிகளினதும், புலம்பெயர் அமைப்பு தலைமைகளினதும் கையாலாகாத, அயோக்கிய, திருட்டுத்தனங்கள். மக்களை நான் எங்கும் எப்போதும் குறை கூறியதில்லை. மக்கள் தீப்பே மகேசன் தீர்ப்பு. எப்படி கழுவி ஊத்தியும் என்ன, இந்த இருவரும் மீண்டும் வரத்தான் போகிறார்கள். அங்கால கஜன்ஸ், சுரேஷ், சித்தர் எல்லாரும் இவர்களை ஒத்தவர்கள்தான். இவர்கள் கையில் தமிழ் தேசிய அரசியல் இருக்கும் வரை தேர்தலுக்கு தேர்தல் அது சிறுத்து, சிறுத்து போகும் என்றே நினைக்கிறேன். ஒட்டு மொத்தமாக தமிழ் தேசிய அரசியலை அரங்கில் இருந்து அகற்றும் வரை இவர்களும் அகல போவதில்லை.
  13. என்னிடம் அப்படி கூறியவருக்கு நான் நீங்கள் மேலே எழுதியதையே பதிலாக கொடுத்தேன்🙏.
  14. 🤣 ஓ…அப்ப தெரிஞ்சு கொண்டுதான் ஆதாரம் கேட்டீர்களா🤣. அதுவும் நல்லதுக்குத்தான் - மீண்டும் ஒரு தடவை சீமானின் இரெட்டை வேடத்தை எல்லோருக்கும் நினைவு படுத்த முடிந்தது. திமுக பிஜேபி யுடன் கள்ள உறவில் இருக்கிறதா, தகாத உறவில் இருக்கிறதா என்பதை நான் மறுக்கவில்லையே. திமுகவை போல் சீமானும் சுயநலனுக்காக பிஜேபி யுடன் சேர்ந்தவர், அயோக்கியர் என்பதே என்வாதம். அதுக்கு ஆதாரம் கேட்டீர்கள். ஆதாரத்தை வழங்கி உள்ளேன்.
  15. நிச்சயமாக…. இலங்கையிலேயே நம்பகமான கருத்து கணிப்புகள் ஏதும் இல்லை எனும் போது எனது உரையாடல்கள் வெறும் அவதானிப்புகள் மட்டுமே. விஞ்ஞான முறைப்படியான கருத்து கணிப்புகள் கூட பிழைப்பதை நாம் மேனாடுகளிலேயே கூட காண்கிறோம். எனவே நான் சொல்வது ஒரு பார்வை மட்டுமே. அத்தோடு இதில் நீங்கள் சொல்வது போல நிச்சயம் confirmation bias உம் இருக்கும். சிங்கள மக்களின் இனவாதம் மீது உங்களை போலவே எனக்கும் அசராத நம்பிக்கை உண்டு. ஆனால் அண்மையில் ஒருவர் எனக்கு சொன்னது “நீங்கள் அறிந்த நாடு இல்லை இது இப்போ. அவர்களும் மாரி விட்டார்கள், நாங்களும் மாறி விட்டோம், இனி ஒரு பெரும் இன முறுகல் வர வாய்ப்பில்லை. நீங்கள் பழையதையே நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.” எனக்கு இது கொஞ்சம் மிகைப்பட்டதாகவே தோன்றியது. ஆனாலும் ஏனைய நாடுகளில் இப்படி பரம வைரிகளாக இருந்த இனங்கள் பின்னர் சேர்ந்து வாழ்ந்தமை நடந்துள்ளது என்பதையிம் மறுக்க முடியவில்லை. காலம் பதில் சொல்லும்.
  16. தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு என்றால் அது சாதி அரசியல்தான். இதை தூண்டி விடுபவர்களில் முதன்மையானவர் சீமான். குறிப்பாக தான் நாடார் சாதி எனிலும், எளிதில் உணர்ச்சி வசப்படகூடிய தேவர் சாதி மக்களை குறிவைத்து சீமான் நகர்வுகள் இருக்கும். ஆனால் இன்று அந்த மக்களே விழித்து கொண்டு, தேவர் சமாதியில் அரசியல் பண்ண வந்த சீமானை எதிர்த்து கோசமிடும் காட்சி. தமிழக மக்களின் அரசியல் முதிர்ச்சிக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. https://x.com/Vinosh_Selvam/status/1851548926282973609
  17. இல்லை இதுதான் உங்கள் போன்றோரின் பிழை. நடப்பதை சொன்னால், சொல்லுபவருக்கு வண்ணம் பூசுவதில் நேரத்தை கடத்தி விட்டு, சொன்ன விசயம் நடந்த பின் வானத்தை பார்ப்பது🤣. அனுரவுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் தமிழர் சுய நிர்ணயத்தின் சவப்பெட்டியில் விழும் ஆணிகள் என்பதே என் நிலைப்பாடு. ஆனால் களயதார்த்தம் வேறு. நான் மேலே எழுதி இருப்பது களயதார்தத்தை, என் அரசியல் தெரிவை/ஆலோசனையை அல்ல.
  18. இது மும்பையில் பீஜேபி வேட்பாளர் தமிழ் செல்வனை தான் ஆதரித்து வாக்கு கேட்டதாக அண்ணனே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம். பிகு இந்த இரு காணொளிகளும் இதே யாழில் பலதடவை முன்பே பதியப்பட்டவை. அந்த திரிகளில் நீங்களும் பன்கெடுத்திருந்தீர்கள். இப்போ அப்படி எதுவும் நடக்கவில்லை என ஆதாரம் கேட்கிறீர்கள். மறதியா? இல்லை வாசகர் மறதி மேல் அசரா நம்பிக்கையா🤣
  19. அவதூறும் இல்லை, இவதூறும் இல்லை. இதோ அண்ணன் வாயை வாடகைக்கு விட்டு, மோடியை வாயாரப்புகழ்ந்த காணொளி.
  20. மிக தெளிவான பார்வை. பாயாசம், தேவர் ஜெயந்தி பற்றிய உங்கள் கூற்றுடன் முழுவதும் உடன்பாடுதான். ஆனால் தமிழ் நாடு நாள் விடயத்தில் திமுகவுக்கு மாறான நிலைப்பாட்டை எடுத்தாலும், சங்கரலிங்கனார், அண்ணா இருவரின் முயற்சியையும் சுட்டி காட்டி, ஒரு கண்ணியமான அணுகுமுறையை கடைபிடிக்கிறார். சீமானை போல “அண்ணா தமிழருக்கு துரோகம் இழைத்தார்” என வரலாற்றை புரட்டவில்லை. சீமான், விஜை இருவரும் அரசியல் செய்யும் நோக்கம் வேறு. ஒரு தோல்வி பட இயக்குனராக - சிங்கிள் டீக்கு நடிகர்களுக்கு வசனம் சொல்லி கொடுக்கும் இணை இயக்குனராக போக வேண்டிய நிலையில், அரசியலுக்கு வந்து, பஜரோ, ஊட்டி எஸ்டேட், காளிமுத்து மகள் என செட்டிலாகிவிட்டவர் சீமான். அவரின் நோக்கம் ஒரு போதும் தேர்தலில் வெல்லுவதில்லை. அவரின் நோக்கம் எல்லாம் இதை வைத்து மேலும் எப்படி சம்பாதிப்பது என்பதே. ஆனால் விஜை அப்படி அல்ல, சும்மா பப்படம் எடுத்தாலே பெரிய ஹிட் ஆகும் நடிகர். அவர் வருவது - புகழுக்காக. முதலமைச்சர் ஆவதுதான் குறி. ஆகவே இருவரும் ஒன்றல்ல. ஆனால் விஜை இறங்கி வேலை செய்ய வேண்டும். இல்லாவிடின் தேறாத கேசுதான். இந்த கருத்தில் ஈழத்தமிழன் அரசியல் ஞானம் உடையவன், தமிழ் நாட்டு தமிழன் காட்டுமிராண்டி என்பதாக ஒரு தொனி தெரிகிறது. ஆனால் உண்மை எதிர்வளமானது. 75 வருடங்களில் வன்முறை இல்லா அரசியல் கலாச்சாரத்தை கைக்கொண்டு, சரியான தலைமைகளை தேர்ந்து, இந்தியாவின் 2ம் மாநிலமாக வளர்ந்து நிற்பவர்கள் அவர்கள். தமிழக மக்கள் அரசியல் தன்மையானது. வாழ்க்கை சுட்டி, கல்வியறி அதிகமாய் இருந்தும் ஒரு நியாயமான விடுதலை போராட்டத்தையே போட்டடித்த கூட்டம் நாம். ஒப்பீட்டளவில் அரசியல் காட்டுமிராண்டிகள் ஈழத்தமிழர்தான். தன்மையான தமிழக அரசியல் கலாச்சாரத்தில் ஈழத்தமிழர் பாணி காட்டு மிராண்டி அரசியல் செய்பவர் சீமான்.
  21. நல்ல யோசிக்க வைத்த, நீண்ட கருத்து. நிறைய நேரம் எடுத்து எழுதியிருப்பியள் என்ன🤣. அண்ணன் ரொம்பவே அரண்டு போய் உள்ளார். திருமா ஏன் சும்மா துள்ளுறார்? திமுக காரனை விட. இத்தனைக்கும் விஜை சொன்னதை வைத்து திமுக கூட்டணியிலேயே விசிக அதிக சீட்டுக்கு நெருக்கலாம். திமுக தலைமையோடு தனிப்பட்ட நட்பு காரணமாக ராஜபக்சவை சந்தித்து மாபெரும் தவறை செய்தது போல, இப்போ வலுக்காண்டியாக விஜையை எதிர்கிறார். ஸ்டாலினுக்காக.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.