goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by goshan_che
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஒம் அவர்தான் இப்போ FSP தலைவர் - 2012 வரை இலங்கை அரசுக்கு கூட இவர் யார், வந்து போவது எதுவும் தெரியாது என்கிறனர் ( இடைபட்ட காலத்தில் இலங்கை அரசில் ஜேவிபி பங்காளியாகி, அனுர கபினெட் அமைச்சராக இருந்தார் - ஆனால் கட்சியை இயக்கியது - யார் என்பதே தெரியாத குமார்). பின்னர் உள்வீட்டு குழப்பத்தில் இவரை கட்சியே மாட்டி விட்டது. இதற்கும் இனவாதமே கடைசியில் காரணம் ஆகியது என்பார்கள். இன்னுமொருசாரர் இந்த பிரிவு பொய் நாடகம், இப்போதும் குமார்தார் ஜேவிபியை வழிநடத்துகிறார் என்கிறனர். ஜனாதிபதி தேர்தல் நேரம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தனக்கும் குமாருக்கும் எந்தவித உடனடி தொடர்பும் இல்லை என மறுத்தார் அனுர. கட்சியின் பழைய உறுப்பினர் என கேள்விப்பட்டேன் அவ்வளவே என்றார். ஆனால் முன்பு ஒரு தடவை கேகாலையில் குமாரின் வீட்டில் தங்கி அவரின் தாயாரிடம் ஆங்கில கற்றேன் என கூறியது பின்னர் இன்னொரு வீடியோ வடிவில் வெளிவந்தது. ஏனைய கட்சிகள் போல அல்ல, ஒரு வல்லரசின் உளவு நிறுவனம் போல ரகசியமான அமைப்பு ஜேவிபி. எமது மக்களுக்கு இவர்கள் வரலாறு, தன்மை, கொள்கை பற்றி அதிகம் தெரியவாய்பில்லை என நினைக்கிறேன்.
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
ஓம்…அது பெளத்தர்கள் போனால்… ஏனைய மதத்தவர், இனத்தவர் அப்படி செய்யத்தேவையில்லை…இனவாதமற்ற சிங்களவர் அப்படி எதிர்பார்ப்பதும் இல்லை. 1978 க்கு பின் நேற்று அமைந்த அமைச்சரவைதான் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை. இத்தனை காலத்தில் எந்த முஸ்லிமாவது இப்படி செய்ததுண்டா? இவ்வளவு ஏன் - நான் மேலே பட்டியல் இட்ட பல தமிழ் அமைச்சர்கள் பிக்குகலிடம் மரியாதை நிமித்த சந்திப்புக்களை நிகழ்தியுள்ளனரே? இப்படி நடந்ததுண்டா? இவர்கள் அமைச்சர்கள் கூட இல்லை. வெறும் பின்வரிசை எம்பிகள். நாக விகாரையில் போய் எமது பண்பாட்டின் படி கைகூப்பி அல்லவா வணக்கம் வைக்க வேண்டும்? @குமாரசாமி @zuma நீங்கள் எப்போதாவது ஒரு விடயத்தில் ஒரு பிக்குவை சந்திக்க நேர்ந்தால் காலில் விழுவீர்களா? விழுந்துள்ளீர்களா? எத்தனையோ துறைகளில் அலுவலகத்துக்கு பிக்குகள் வரும் போது தமிழர், முஸ்லிம்கள் மட்டும் காலில் விழாது இருப்பார்கள். நாளைக்கே இவர்களுக்கு எம்பிகள் இப்படி செய்தது ஒரு மறைமுக அளுத்தத்தை தராதா? அடுத்து என்ன… தமிழ் பாடசாலை மாணவர்களை விகாரைகளுக்கு கல்வி சுற்றுலா கூட்டிப்போய் இதையே???? உண்மையில் இதன் பின்னால் உள்ள சூக்கும அரசியல் உங்களுக்கு புரியவில்லையா?
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
ஓ அப்டியா…தரவு பிழைக்கு மன்னிப்பும், திருத்தியமைக்கு நன்றியும். நாகவிகாரை என்றதும் நையினா தீவு என நினைத்து விட்டேன். எங்கள் காலத்தில் ஆரிய குளத்தடியில் விகாரை இருந்ததாம் என்று மட்டுமெதான் தெரியும். அது சரி….. ஐயர், பாதர், மெளவி கள் காலில் விழுந்து பிரண்ட சிலமன் ஏதும்? ஆரியகுள பிக்கு காலில் விழுவது தப்பில்லை நயினாதீவு எண்டால் தப்பு என சொல்லமாட்டீர்கள் என நினைக்கிறேன். பிகு இப்போ செய்தியை சரியாக எடிட் செய்துள்ளேன்.
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
வெறும் லிங்காக தருகிறேன் பாருங்கள். https://x.com/godfreypy1/status/1858133106081124572 @நியானி யாழில் அப்டேட்டுக்கு பின் பல embedded videos சில நேரம் போனபின் தெரிகிறது இல்லை. அதே. @valavan வழமை போல் ஆதாரம் இருக்கா பாணி கேள்வி அல்ல, உண்மையிலேயே இந்த பீடாபதி எம் சார்பாக பேசுபவரா? இதுவரை நான் சில தனிபிக்குகள் பேசி மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன், விகராதிபதிகள் எமது நியாயத்தை பேசி கேட்டதில்லை.
- புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்!
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
முற்றிலும் மாறுபடுகிறேன். புலமை பரிட்சை என்பது பல பின் தங்கிய மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறிப்பாய உதவும் ஏணி. பல கிராமபுற மாணவர்கள் கனவில் கூட நினைக்க முடியாத கொழும்பு பாடசாலைகளில் கல்வியும் விடுதி வசதியும் பெற்றுக்கொடுக்கும் திறவுகோல்.
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஒ….உலப்பன வில் இவர் கைதான வீட்டை போய் பார்த்துள்ளேன். ஆங்கிலேயர் கட்டிய bungalow style வீடு. அங்கே அத்தநாயக்க என்ற பணக்காரர் வேடத்தில் வசித்து வந்தாராம்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
முதல் ஆளாக நான் ஆஜர் 🤣. ஆனால் நான் சொன்னது மேல வசி சொன்னது போலதான். நாம் பண்டா, சிறில் மத்யூவை எதிர் கொண்டது போல் நேரடியாக மூர்க்கமாக அவர்கள் ஞானசார, டான் பிரசாத், ரணவக்க, கமன்பில வை எதிர் கொள்ளவில்லை. அவர்கள் ஆட்களை வைத்தே அவர்களை காயடித்தார்கள். இனியும் ஜேவிபியை எப்படி கையாள்கிறார்கள் என்பதை இருந்து பாருங்கள்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
பிழை திருத்தம் குமார் குணரட்னத்தின் தாயாரும் தமிழரே (மலையக தமிழர்).
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
இது உண்மைதான்… எமது பள்ளிகூடத்தில் ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் போது சிங்கள மாணவர்கள் வெத்திலையோடு போய் ஒவ்வொரு டீச்சர் காலிலும் வீழ்ந்து வணங்குவார்கள். ஒரு முறை மாத்தறைப்பக்கம் வாகனத்தில் ஒரு அமைச்சு செயலாலர் அடங்கிய குழுவுடன் பிரயாணித்தேன் (நான் ஊர் சுற்றி பார்க்க போனேன் -சிறிய வயது, குரூப்பில டூப்பு) - அவரின் ஊரைத்தாண்டி போகும் போது - திடீரென வண்டியை ஓரம் கட்ட சொல்லி விட்டு மனிசன் பாய்ந்து சைக்கிளில் போன தன் பள்ளி ஆசியர் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இது அவர்கள் கலாச்சாரம். ஆனால் நாம் இப்படி செய்வோம் என அவர்கள் எதிர்பார்க்க கூடாது. அந்த எதிர் பார்ப்பு, இனவாதம். நான் ஒவ்வொரு முறை நயினாதீவு போனாலும் போய் கெளதமுக்கும் ஒரு சல்யூட் போட்டே வருவேன். கொழும்பு மயூரபதி அம்மனில் அப்பவே பல சிங்களவர் வந்து எலுமிச்சை விளக்கு எல்லாம் ஏத்துவார்கள். ஆனால் காலில் ஏன் விழுவான்? காலில் விழுவோம் எண்டு வேண்டுதலோ🤣.
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ரோஹண விஜேவீரவின் மறைவுக்கு பின் தப்பியோடி பின் - 1991 இல் சோமவன்ச அமரசிங்க பிரேமதாசாவுடன் டீல் போட்டு, இலண்டனில் இருந்து திரும்பி வந்து, வீரவன்ச, கலப்பதி, டில்வின், லால் காந்த, ஹேரத்தை சேர்த்து ஜேவிபியை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்தார். இது வெளியுலகுக்கு சொல்லப்படும் கதை. இதே சமயம் - விஜேவீரவுக்கும், உபதிஸ்ச கமநாயக்கவுக்கும் அடுத்த நிலையில் இருந்து - ரஞ்சன் விஜேரத்ன கண்ணில் மண்ணை தூவி ஒஸ்ரேலியா போய் -அங்கிருந்து கட்சியை வழி நடத்தி, பின் பிறிதொரு பெயரில் இலங்கை வந்து போய் இருந்த கட்சியின் மிக முக்கிய உயர்பீடம்தான், சிங்கள தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்த குமார ஐயே எனப்படும் குமார் குணரட்ணம். இவரின் அண்ணா ரஞ்சித்தும் மத்திய குழுதான் ஆனால் 87 இல் கொல்லப்பட்டார் ஆகவே இவர்கள் தமது ஆள் என்றால் வேற்று இன, மதத்தினரையும் ஏற்பார்கள் என்பது சரியே. ஆனால்…. இவர்கள் ஆள்….என ஆவதற்கு…. இன அடையாளம் துறந்து, வர்க்க அடையாளம், அவர்கள் சொல்லும் இனவாத அடையாளத்தை ஏற்க வேண்டும். அதாவது யாழ் எம்பிகள் செய்ததை போல சொல்லாமலே பிக்குகள் காலில் போய் விழ வேண்டும். சிங்கள பேரினவாதத்தின் flavor வேறுபடும். அதில் ஜேவிபியின் சுவை, KFC secret recipe மாதிரி தனிச்சுவை. ஆனால் அதுவும் பேரினவாதம்தான். இது…. இதுதான் முஸ்லிம்ள் பற்றி மிக பெரும்பான்மையான சிங்களவர் மனநிலை.
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
நல்ல செய்தி. இதை வரவேற்கும் அதே வேளை, அவர்களே அடாத்தாக தனியார் காணியை பிடித்து விட்டு இப்போ வெளியேறுகிறார்கள் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. கள்ளன் களவெடுத்ததை மீட்க நாம் போராடியும் முடியவில்லை. இப்போ கள்ளனாக திருப்பி தருவதால் கள்ளன் காலில் விழுந்து நன்றி சொல்ல தேவையில்லை. மீண்டும் இன்னொரு அரசாங்கம் வந்து எமது காணியை மீளப்பறிக்கலாம் - அப்படி பறிக்க முடியாத நிரந்தரத்தீர்வே எமது அபிலாசை.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
ஒரு வேளை எங்கேயும் வாசிக்காமல், எதையும் பார்க்காமல் - இருந்த இடத்தில் இருந்து ஞான திருஸ்டியில் தகவல் அறியும் வல்லமை அவர்களுக்கு இருக்குமோ🤣. கஸ்தூரி நடிகை மட்டும் அல்ல, ஆங்கிலத்தில் socialite என்பார்களே அப்படி தமிழில் ஒரு சமூக-பிரபலம். அவரை பற்றி அறிந்திருப்பது அதிசயமல்ல, அறியாமல் இருப்பதுதான் வழமைக்கு மாறானது. அப்பெல்லாம் நாங்கள் ஷாட்ஸ் போட்டு ஸ்கூல் போற டைம். மிகவும் மெல்லிதாக, எடுப்பான முக இலட்சணத்தோடு, டஸ்கி கலரில் பாலுமகேந்திரா ஹீரோயின் வெட்டில், மிஸ்மெட்டிராஸ் எண்டு கஸ்தூரியை குமுதம், விகடன் எமக்கு அறிமுகம் செய்தது.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
கதை கதையாம்…காரணமாம்🤣. உண்மையான காரணம் வேறு. க்ளூ - ராதிகா நடித்து பேமஸ் ஆன சீரியல்🤣 பிரதமரும் தன் சிநேகிதி ஒருவருக்கு என விசேட புதிய பதவி ஒன்றை உருவாக்கியுள்ளார் என்கிறனர்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கிறார் என கேள்விப்பட்டேன். உங்கள் மேல் பிழை இல்லை - அவர்கள் போட்டபடியேதான் போடவேண்டும் என்பது விதியாயிற்றே.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
புளு வேட்டையர் ஒரு பக்கா பொய்யர்தான். ஆனால் செய்தி உண்மை. யாழில் பதிவை இணைத்துள்ளேன்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
தினக்குரலே, அவ்வளவு நலிந்து போயா இருக்கிறார் ஜயதிஸ்ஸ🤣. #நளிந்த.
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
யாழ் ஆரியகுளத்தடியில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர். இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை. டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. - சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இலங்கையில் எவரும் தமிழ் பேசும் சமூகம் என உணர்வதில்லை. இது வெறும் வார்த்தை மட்டுமே. அவர்கள் சோனர் அல்லது இலங்கை முஸ்லிம்கள் - தனி இனப்பிரிவு என்கிறது அரசியலமைப்பு சட்டம். அவர்களும் அவ்வாறே உணர்கிறனர். அதே போல் இந்திய வம்சாவழி தமிழர், இலங்கை தமிழர் என இரு பிரிவுகள் இருப்பதையும் இலங்கை குடிசன மதிப்பீடுகள் ஏற்கிறன. இதில் நீங்கள் சொன்ன இரு தமிழ் அமைச்சர்களும் இந்திய வம்சாவழியினரே. இலங்கை வம்சாவழி (வடக்கு-கிழக்கு) தமிழரும், சோனகர் போலவே அமைச்சரவையில் இடம் இல்லாமல் ஒதுக்கலுக்கு ஆகியுள்ளனர். இதில் சரஜோ அக்கா - அசித்த எனும் சிங்கள வைத்தியரை மணம் முடித்து மாத்தறையில் வாழ்பவர். இவர்கள் இருவரையும் காட்டி - இலங்கை தமிழருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கபட நாடகம்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இதன் பின்னால் இருப்பது பெளத்த சிங்கள மேலாண்மைவாதம் என்றே நான் நினைக்கிறேன். தமிழர்களை அடக்கி ஆகி விட்டது. ஆனால் யுத்தத்தை பாவித்து முஸ்லிம்கள் தம் இருப்பை அதிகரித்ததுடன் மிகவும் உயர் பதவிகளிலும், குறிப்பாக வியாபாரம், வங்கி துறைகளை கையில் வைத்துள்ளார்கள் என்பதும், தமிழரை தட்டி வைத்தது போல இனி இவர்களையும் தட்டி வைக்க வேண்டும் என்பது பேரினவாதத்தின் அடுத்த இலக்கு. 1. முதலில் அவர்கள் பகுதியில் அவர்களின் வாக்கு வங்கிக்கு ஆபத்தாக இருந்த மலையக தமிழரை நாடு கடத்தி அவர்கள் வாக்குப்பலத்தை பாதிக்கும் கீழாக்கினர். 2. பின்னர் நம் மீது இனவழிப்பு போர் 3. இப்போ முஸ்லிம்களின் முறை. இவர்கள் மீதும் வன்முறையை திணித்தார்கள் ஆனால் அதை அவர்கள் வடிவாக கையாண்டபடியால் - இப்போ மறைமுக ஒதுக்கலில் இறங்கியுள்ளார்கள். ஒவ்வொரு முறை ஒரு சிறுபான்மையை அடக்கும் போதும் - ஏனைய சிறுபான்மைகள் அதை வரவேற்கும் அல்லது காணாமல் இருக்கும்படி செட்டப் செய்வார்கள். முஸ்லிம்களை பொறுத்தவரை - அறகலவுக்கு ஆக்கி கொடுத்த பிரியாணி எல்லாம் வீணாப்போய்டே என்ற நிலைதான். அமைச்சு செயலாளர்களில் ஒரு தமிழ் பெயர் தென்படுகிறது. மருந்துக்கும் ஒரு முஸ்லிம்மும் இல்லை.