Everything posted by goshan_che
-
சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?
இதை சொன்னதுக்கு அரியம் அங்கிளும் கொடோன்லயே இருந்திருக்கலாம்.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
இல்லை அவர்களும் இப்படியான வேலைகளை எடுத்து கொடுத்து…பின்னர் வந்து அதை காட்டி வாக்கும் கேட்டுள்ளார்கள். யுத்த முடிவில் ஆசிய வங்கி போன்றவை மத்திய அரசின் மூலம் செய்த சிலதுக்கு பிள்ளையான் உரிமை கோருவதை தவிர….நீங்கள் முந்தள்ளிய பிள்ளையான், கருணா, அமல் எந்த வகையிலும் மட்டு-அம்பாறைக்கு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. திருமலையை திரும்பியும் பார்க்கவில்லை. இவர்களில் அமல் ஒரு போதும் பிரதேசவாததை கையில் எடுக்கவில்லை. ஏனைய அரசியல்வாதிகள் போல அவரும் சுயநலமி. புதிதாக முயற்சித்தேன், அவரை நம்பி ஏமாந்தேன் என நீங்கள் சொல்வது ஏற்புடையது. ஆனால் கருணா, பிள்ளையான் அப்படி அல்ல. அவர்களும் நீங்களும், கூட்டமைப்பின் கையாலாகத, சுயநல, ப்ரொக்சி அரசியலை - யாழ்ப்பாணத்தவர் அல்லது யாழ் அரசியல்வாதிகள் கிழக்கை வஞ்சிக்கிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்தீர்கள். நீங்கள் யாழ் அரசியல்வாதிகள் என்றீர்கள், ஆனால் உங்கள் ஹீரோக்கள் இருவரும் நேரடியாக யாழ் மக்கள் மீதே பழியை போட்டார்கள். இது உங்களுக்கு ஏனோ உறுத்தவில்லை. அவர்கள் கிழக்கு மக்களை போலவே வடக்கு மக்களையும் வஞ்சித்தனர். ஆனால் அந்த உண்மையை நீங்கள் கிழக்கு மக்களிடம் கூறவில்லை. உங்களுக்கும் சங்கிஆனத்தத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவர் மத அடிப்படையில், நீங்கள் பிரதேச அடிப்படையில். இந்த பிரதேசவாத நஞ்சை விதைப்பது இலகு, ஆனால் நிலம் நஞ்சானபின் அதை அகற்றுவது கடினம். கிழக்கில் மட்டும் அல்ல. வடக்கிலும்தான். தமிழ் அரசியலை, யாழ்பாணம், மட்டகளப்பு தேர்தல் தொகுதிக்கான அரசியல் என சுருக்கும் பேரினவாத சதி கிட்டதட்ட வென்று விட்டது, இதில் சுமந்திரன் வகையறாக்கள் போலவே, இப்போ வந்து நம்பி கெட்டோம் என கையை பிசையும் நீங்களும் பங்காளிகளே. இப்போ என் பி பி என்கிறீர்கள். அப்போ உங்கள் அரசியல் ஒரு முழுவட்டத்தை அடைந்து விட்டது. தலைவரில் விசுவாசி என தொடங்கி, பிரதேசவாத பஸ்சை பிடித்து, ஜேவிபியின் இனப்பிரச்சனையா கிலோ என்ன விலை? என்ற அரசியலுக்கு வந்து விட்டீர்கள். உங்களை போல பலரும் இதே இடத்துக்கு வந்துள்ளார்கள்தான். இருக்கும் ஒற்றுமையை ஒவ்வொரு பக்கத்தால் இழுத்து சிதறடித்த பின் இதுவே ஒரே வழி என்பதை உணர்கிறேன். பிகு வேறு திரிகளில் சந்திப்போம்.
-
சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?
இதுக்கு அழகு குணசீலன் கொடோனிலேயே இருந்திருக்கலாம். முடிவு தேர்தல் நாள் அன்று தெரியும் - இதை எல்லாரும் சொல்லமுடியும்🤣. தொடர்சியாக தான் ஆதரித்த கிழக்கு மைய அரசியல், ஒரு பலனையும் தராத நிலையில், பிள்ளையான் ஜெயிலில் இருந்து ஜெயித்தர் என துதிபாடும், நடுநிலை இல்லாமல் தமிழ் தேசிய கட்சிகளை மட்டும் விமர்சிக்கும் இது ஒரு ஆய்வு கட்டுரை அல்ல, பிள்ளையானுக்கான பிரசாரம்.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
இதை நீங்கள் முன் வைத்த போது கருணா, பிள்ளையானை ஆதரிப்பது போல் இல்லை இது என நானும் எழுதினேன். ஆனால் கடைசியில் மட்டகளப்பு கண்ட அபிவிருத்தி என்ன? போஸ்டல் டிபார்ட்மெண்டில் கொஞ்ச பேருக்கு பியூன் வேலை, அமலின் மகனுக்கு ரோயல் கல்லூரி அனுமதி. அமலுக்கு நல்ல வெளிநாட்டு வாகனம். சொல்லி கொள்ளும் படி வேறேதும் உண்டா? ஆங்கிலத்தில் humility என்பார்கள். தமிழில் சுய அடக்கம் எனலாம். It’s time you have some humility. தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து அது தவறாக போன போது - அந்த நிலை எடுத்தவர்கள் மீது என்ன குதி குதித்தீர்கள்? ப்ரொக்சிக்கு ஆதரவு கொடுத்த தேசிக்காய்கள் என்றீர்கள். அப்போ இப்போ நீங்கள் யார்? தெரிந்த கள்ளர்களை ஆதரித்த - ஜிப்சிக்கி ஆதரவு கொடுத்த பாவக்காயா, கோவக்காயா இல்லை தொங்கி கொண்டிருக்கும் முந்திரியா🤣. திரி எங்கோ (சாதிய வசவு) தொடங்கி, எங்கோ வந்து விட்டது.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
ஆனால் ஒரே தேர்தலில் இரெண்டு இடத்திலும் வாக்கு போட்டால் மாமியார் வீட்டுக்குத்தான் போகணும். ஆகவே கருணாவுக்கு நீங்கள் போட்ட தேர்தலில் பிள்ளையானுக்கு போட்டிருக்க முடியாது. நான் கேட்டது கல்முனை தரமுயர்த்தல், காணிகள் அபகரிக்கப்பட்டது பற்றி என்ன செய்தார் என. எதுவுமில்லை. அலிசாகிர் மெளலானாவால் வழிநடத்தப்படும், நடத்தப்பட்ட, கருணா முஸ்லிம்களுக்கு எதிராக தமிழருக்கு இதுவரை ஒரு ஒழுங்கான விடயமும் செய்ததில்லை. சும்மா வாய்சவாடல் விடுவார்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
நீண்ட பதிலுக்கு நன்றி. நீங்கள் சொல்லும் இந்த கருத்து பல வகைகளில் நடக்க கூடியதாகவே தெரிகிறது. எப்படி இந்துதுவா அரசியலை ஆர் எஸ் எஸ் திட்டமிட்டு வழி நடத்தியதோ, நடத்துகிறதோ அது போல் திக வும் செய்கிறது என்கிறீர்கள். தி க இப்படி செய்யும் ஓக்கே ஏற்கிறேன். ஆனால் திமுக? சித்தாந்தம் வாழ வேண்டும் என்பதற்காக விஜையை வளரவிடுமா?
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
ஓம். 4 பகுதிக்கும் சம வாய்ப்பு என்றே நினைக்கிறேன். உண்மையில் 5 வது சீட்டை எடுக்க அனுர அணிக்கு வாய்ப்பு கூட, ஏன் என்டால் வியாழனின் வாக்குகள், முஸ்லிம் வாக்குகள், முன்னைய தமிழ் தேசிய வாக்குகள், பிள்ளையானின் வாக்குகள் எல்லாம் சேரலாம்ழ் ஓம்.
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
சகல தமிழ் தேசிய கட்சிகளும் சேர்ந்து கேட்டால் அம்பாறை திருமலையில் தலா 1 எடுக்க வாய்புள்ளது. அம்பாறையில் இந்த வாய்ப்பு கூட. ஆனால் இந்த முறை தேசிய கட்சிகள் பிரிந்து கேட்பதால், கூடவே பில்லையான் கட்சியிம் கேட்பதால் - வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன். திருமலையில் புலிகள் இருந்த போது மட்டுமே, மக்கள் ஓரணியில் திரண்டு 2 சீட்டை கடைசியாக எடுத்தனர் என நினைக்கிறேன். பிள்ளையான், கருணா வண்டவாளம் திருமலையில் நன்கு உணரபட்டுள்ளது ஆகவே அங்கு அவர்களுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. வீடு, சைக்கிள், சங்கு திருமலையில் வீட்டின் கீழ் கேட்கிறார்கள் என நினைக்கிறேன். இதனால் திருமலையில் 2 சீட் கிடைத்கால் அது பெரிய சந்தோசமாக இருக்கும்.
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
ஓம். பிள்ளையான் வெல்வது உறுதி என நினைக்கிறேன். வியாழனுக்கு சனி மாற்றம் - வேட்பு மனுவில் வேலையை காட்டியதால் - அவர் இல்லை. இந்த முறை ஹிஸ்புல்லா 16 வருடங்களின் பின் முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்தில் கேட்கிறார். காத்தான்குடி வாக்குகள் லம்பாக விழும் என நினைக்கிறேன். அமீர் அலியிம் கேட்கிறார் ஓட்டமாவடி பக்க வாக்குகள் இவருக்கு விழும். இருவரும் ஒரே அணியில் கேட்டிருந்தால் கிட்டதட்ட 2 பேரும் வருவது உறுதியாகி இருக்கும். ஆனால் பிரிந்து கேட்பதால் 1 மட்டுமே உறுதி. இருக்கும் 5 சீட்டில், பிள்ளையான் 1, தமிழரசு 2, முஸ்லிம் வேட்பாளர் 1 - எஞ்சும் 1 சீட்டையே இப்போ கணிக்க கஸ்டமாக இருக்கிறது, ஆனால் இது முஸ்லிம் ஒருவராக அமையவே வாய்ப்புக்கூட. தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக கேட்டிருப்பின் இந்த கடைசி சீட்டை அந்த அணி எடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். வியாழேந்திரனுக்கு போன வாக்குகள் இந்த முறை எங்கே போகும் என யோசித்தால் - இவை தமிழ் வாக்குகள் எனவே முஸ்லிம் வேட்பாளருக்கு போகாது. அதே சமயம் அவர் கட்சி தாவிய பின் அவருக்கு கிடைத்த வாக்குகள். எனவே தமிழ் தேசிய கட்சிகளில் நாட்டம் இல்லாதர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். எனவே இது பிள்ளையானுக்கும் போக கூடும். சுருக்கமாக 5 வது சீட், தமிழரசு, முஸ்லிம், பிள்ளையான் யாரிடமும் போக கூடும் என நினைக்கிறேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
அரசியல் எண்டு வந்தா இனி தினம் ஒரு நினைவு கூரல் மாதம் ஒரு அறிக்கை என இருந்தாதானே மக்கள் நினைவில் வைப்பார்கள்🤣. இதே போல பெரியாருக்கு நேரில் போய் மாலை, சாதி தலைவர் முத்து இராமலிங்கத்துக்கு வீட்டில் வைத்து படத்துக்கு அஞ்சலி செலுத்தியமையும் ஒரு செய்தியை சொல்வதாகவே படுகிறது. இந்த நகர்வுகளின் மூலம் யார் என தெரியவில்லை. விஜை நாம் எவரும் எதிர்பார்க்கா வண்ணம் இயற்கையிலே அரசியல் நுணுக்கம் தெரிந்தவரா அல்லது இப்படி ஒரு ஆள் அல்லது டீம் அவரிடம் இருக்கிறதா என்பது புரியவில்லை. நீங்கள், @வாலி, @பகிடி போல தமிழ் நாட்டு அரசியலை சோசல் மீடியா அலப்பறைகளை தாண்டி அவதானிப்பவர் என்ன நினைக்கிறீர்கள் என அறிய ஆவல். @பாலபத்ர ஓணாண்டிக்கு விஜையினை சூழ இருந்து அட்வைஸ் பண்ணும் ஆட்கள் யார் என்ற முழு விபரமும் தெரியுமாம். நேரம் இன்மையால் இன்னும் எழுதவில்லை. எதுக்கும் ஒரு ரிமைட்டர போட்டு வைப்பம்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
பாவம் 200 ரூபா ஊபிஸ் இலங்கை அரசு நியமித்த பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகள் போல், வேலைக்கு போவது மட்டும்தான் வேலை இப்போ அவர்களுக்கு🤣. நம்ம தலைவர் ரேஞ்சே வேற, ஒருகாதை குரு மூர்த்தி கடிக்க, ஒரு காதை லதா கடிக்க, அடிக்கடி வைரமுத்து போனில் வந்து உருட்ட, சொல்புத்தியும் இல்லாமல், சுயபுத்தியும் இல்லாமல் - கடைசியில் “ஒரு கணம் தலை சுத்திடிச்சு” என உண்மையை ஒத்து கொண்டார் 🤣.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
அன்னாரின் பிறந்த தின வாழ்த்துக்களை கூட, விஜை வாழ்த்துச்சொன்னார் என்ற செய்தியின் கீழ்த்தான் அவரின் ரசிகர்கள் பகிர்ந்து மகிழ்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
-
தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன்
அனுரவோடு தமிழரசு ஐக்கியம் ஆக முதல் சமிக்ஞை கொடுக்கிறார் என நினைக்கிறேன். பரவாயில்லை அப்படியாச்சும் எதையாவது செய்து துலையுங்கோ. ஆனால் வீடு+சைக்கிள்+ சங்கு அம்பாறையில் ஒன்றாக நின்றிருந்தால் பேரம் பேசு வலு இன்னும் கூடி இருக்கும் அல்லவா?
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி. கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால் திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இல்லை இதே போல் யாழில் ரஜனியையும் “சனம்” கிழித்து தொங்கத்தான் விட்டது. அவர்கள் அல்ல அவற்றை வாசித்தும் வாசிக்காதது போல் நடிக்கும் ஓரிருவருக்குத்தான் நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம். #மெடுலா ஓப்பலங்கேட்டா # என்னது முட்டை ஆம்லெட்டா🤣
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
ஏன் யாழ்பாணத்தானான உங்களுக்கு தெரியாது என சொன்னால் - உங்கள் பிரதேசவாதம் அப்பட்டமாக தெரிந்து விடும் என்பதால் யூகேயை இழுக்கிறீர்களாக்கும்.🤣 இங்கே முன்பே எழுதியதுதான் வடக்கு கிழக்கின் எந்த ஊரும் என் சொந்த ஊரே. எனக்கே நான் எந்த ஊரவன் என்ற பிரக்ஞை இல்லாத போது உங்களுக்கும் அது தேவையில்லை🤣. தகவல்கள் பிழை என்றால் சுட்டலாம். பொத்தாம் பொதுவில் நான்-கிழக்குமாகாணத்தான், non-கிழக்குமாகாணத்தான் என்ற பிரதேசவாத கதைகளை விட்டு விட்டு.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
கூட்டமைப்பு பிழை விட்டது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதை பிரதேசவாதத்தால் வந்த பிழை - என வேண்டும் என்றே தப்பாக வர்ணித்து அதன் மூலம் வடக்குகிழக்கு தமிழ் மக்கள் மனதில் மேலும் மேலும் பிரிவினையை தூண்டி, ஒற்றுமையை குலைத்து, அவர்கள் பலத்தை மேலும் சிதைக்க உதவியது அதைவிட பெரிய வரலாற்று பிழை. அதில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. கருணாவுக்குத்தான் வாக்கு போட்டேன் என்கிறீர்கள் - நீங்கள் அம்பாறை வாக்காளர் எனில் பிள்ளையானுக்கு எப்படியிம் போட்டிருக்க முடியாதே🤣. கள்ள வாக்கு போட்டால்தான் உண்டு. ஆனால் அந்த தேர்தலில் அம்பாறையில் பிள்ளையான் கட்சி விலகி கொள்ள அங்கே கருணா கேட்டார். இருவரும் ஒரு துப்பாக்கியின் இரு குழல்கள்தான். நீங்கள் கூட யாழ்களத்தில் கருணாவுக்கு ஆதரவு, பிள்ளையானுக்கு இல்லை என்றெல்லாம் எழுதவில்லை. மட்டு அம்பாறையில் எந்த தமிழ் தேசிய கட்சிக்கும் ஆதரவில்லை. பிள்ளையான், கருணாவுக்கு ஆதரவு என்பதே உங்கள் நிலைப்பாடாக இருந்தது. அதாவது ஸ்டாலின், கோபாலகிரிஸ்ணன் ஆகியோரால் முன் தள்ளபட்ட “கிழக்கு மைய அரசியல்”. அதைத்தான் நீங்கள் ஆதரித்தீர்கள். இப்போ கிழக்கு மைய அரசியல் மையவாடிக்கு போனதும் கருணா அச்சா, பிள்ளையான் கக்கா என புதுக்கரடி விடுகிறீர்கள்🤣. கருணாவும், பிள்ளையானும் கோக்கும் பெப்சியும் போலதான். அடுத்து, கருணா வெல்லவில்லை ஆகவே நானும் அவரும் பொறுப்பல்ல என மெல்ல நழுவ பார்கிறீர்கள் (இதைதான் தமிழகத்தில் நீங்கள் பாவித்த அநாகரீக சொல்லான மொள்ளமாரி என்பார்கள்). நீங்கள் கருணாவுக்கு வாக்கு சேகரிக்கும் முன்பே அவர் எம்பி, பிரதி அமைச்சர், சுதந்திர கட்சி பிரதித்தலைவர். அப்போதும் காணி பிரச்சனை, உங்கள் ஆன்மாவிற்கு நெருங்கிய கல்முனை விடயம் எல்லாமும் இருந்தது? ஒரு கல்லைத்தன்னும் தூக்கிப்போட்டாரா? இல்லை. அப்போ அடுத்த முறை தனியே எம்பியாகி அதுவும் சிங்கள கட்சி எதுவும் சீட் கூட கொடாமல் திரத்தி விட்ட பின், இவர் ஆணி புடுங்குவார் என எப்படி நினைத்தீர்கள். டகால்டி வேலை தானே👇
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
இல்லை உங்கள் எடுகோளே பிழை. 1. நீங்கள் ஏதோ கூட்டமைப்பு கிழக்கில் மொக்குத்தனம் பண்ணியமைக்கு அவர்கள் யாழ்பாணத்தவர் என்பதுதான் காரணம் என்பது போலவும். கிழக்கை மட்டும் அவர்கள் கைவிட்டது போலவும் கதை சொல்கிறீர்கள். இது ஒரு பொய்யாய கதையாடல். False narrative 2. கிழக்கில் என்ன பிழை விட்டதோ அதைத்தான் வடக்கிலும் கூட்டமைப்பு விட்டது. இதில் பிரதேச வஞ்சிப்பு இல்லை. எங்கும் அவர்களுக்கு சுயநலனே பிரதானம். கூட்டமைப்பு மட்டும் அல்ல, சைக்கிள், விக்கி, சங்கு எல்லா கோமாளிகளும்தான். 3. கிழக்கில் கருணா பிள்ளையான் போல வடக்கில் டக்லஸ், கேபி. 4. எவராவது வந்து என்னிடம் எனக்கு வடக்கில் தேசிய கட்சிகள் மீது நம்பிக்கை போய்விட்டது ஆகவே நான் டக்லசை ஆதரிக்க போகிறேன் என்றாலும் என் பதில் மேலே உங்களுக்கு சொன்னதுதான். 5. தேசிய கொள்கையை வரித்து கொண்ட எவரும், விலகி இருக்கலாம், புதியதாக அருச்சுனாவோ, கிருஸ்ணாவோ எவரையும் கொண்டு வர முயற்சிக்கலாம், அருண் தம்பிமுத்து, அங்கயனோடு கூடப்போகலாம், ஆனால் டக்லஸ், கருணா, பிள்ளையான்….இல்லை. அது அடிப்படை கொள்கை விளக்க கோளாறு என்பதைதான் காட்டுகிறது. 6. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டு அரசியல் வேறு, ஈழ அரசியல் வேறு. சீமானை நான் ஏன் எதிர்கிறேன் என்பதற்கு யாழ் முழுவதும் நான் கூறிய விளக்கம் உள்ளது. 7. இதில் சோகம் என்னவெண்டால் யாழில் எல்லாரையும் புரொக்சி, தேசிக்காயென. நக்கலாக என கூறி விட்டு, கடைசியில் நீங்களே பிள்ளையான், கருணா ஒரு ஆணியையும் புடுங்கவில்லை என்றதும். இப்போ அது சும்மா டிரை பண்ணி பார்த்தோம் என கதை விடுகிறீர்கள். பிள்ளையானும், கருணாவும் முஸ்லிம்களை, சிங்களவரை எதிர்த்து கல்முனை, மேய்ச்சல் தரை எதிலும் ஒரு சிறு தீர்வையாவது பெற்று தருவார்கள் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்ப வைத்தோர் - ஒன்றில் தெரிந்தே பொய் கூறினர். அல்லது அடி முட்டாள்.
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
இது உண்மையாயின் திருமதி சுமந்திரன் வழக்கு போட வேண்டும். திருச்சபைக்கு வருவதை ஒருவருக்கு வருவதாக சொல்வதும் - அதை அவர்கள் சட்டவிரோதமாக பாவிப்பதாக சொல்வதும் - பொய்யாயின் பாரிய பொய்கள். ஆனால் இப்படி வழக்கு போட்டால் அதை வைத்து ஒரு சைவ-கத்தோலிக்க முறுகலை உருவாக்கி குளிர்காயலாம் என சங்கி ஆனந்தம் நினைப்பதாகவும் இருக்க கூடும்.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
நான் இப்படி வார்த்தைகளை இந்த திரியிலுமோ வேறு எந்த திரியிலுமோ பயன்படுத்தியதில்லை. ஆகவே நீங்கள் வேறு ஏவரோ ஒரு நாலாம் தர நபருக்கு அவர் இறந்த பின் கொடுத்த 3ம் தர பதில்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நான் இந்த திரியில் என்னை இழுத்து சாதி கதை கதைத்வருக்கு கொடுக்க வேண்டிய ஷாட்டை கொடுத்துள்ளேன். நாங்கள் யூகே யில் அல்ல, உப்பு கராஜில் இருக்கும் போதும் இப்படி சாதி திமிர் கதையள் கதைக்கிற ஆட்களை கண்டால் போட்டு மொத்தி போட்டுத்தான் விடுறது. தெருப்பொறுக்கியில் சீமானை காணவில்லை. இரெண்டும் ஒன்ராக இருக்கும் போது ஏன் பிரிவினை🤣. நான் எந்த அரசியல்வாதியையும் தலைவராக ஏற்றதமில்லை வேலை செய்ததும் இல்லை. பிள்ளையான், கருணாவின் பிரசாரகர் மொள்ளமாரி தலைவர்களை பற்றி பேசுவது - இந்த சிரிப்பையும் வாசகர்களிடமே விடுகிறேன்.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
நீங்கள் மறுபடியும் கூட்டமைப்பு செய்யலாம் நான் செய்ய கூடாதா என நாயகன் டயலாக் பேசினாலும்…. என் பொருள் என் இஸ்டம் என்பதும் உண்மையே ஆனாலும்…. யார் நாவில், எழுத்தில் ஏனைய சாதி, மத (இதற்கான உதாரணங்களை நான் காட்டவில்லை) , இன, பிரதேச மக்கள் பற்றியும், கலப்பின பிள்ளைகள் பற்றியும் எள்ளல், நக்கல், வாதங்கள் சரளமாக பிழங்குகிறது என்பது வாசிப்பவர்களுக்கு புரியும். ஆனால் சாதி கதைகள், வசவுகளை, தெரிந்து கொண்டே, என்னையும் இழுத்து கதைதால் - என் இஸ்டப்படி பொருள் விளக்கம் கிடைக்கும். சனத் ஜெயசூரிய அடிப்பது சிக்சர் ஷொட் சாதிமான்களுக்கு கொடுப்பது சப்பல் ஷாட்.
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
ம்ம்ம்…கத்தோலிக்கர்கள் உதவி செய்வதாக, அதன் மூலம் மக்கள் சுய விருப்பில் மதம் மாறுவதாக தன்னும் கேள்விப்பட்டுள்ளேன். தமிழ் கத்தோலிகரிடையே கலியாணம் முடிப்பதாயினும் இந்து மட்டும் அல்ல, பிற கிறிஸ்தவ சபைகளில் கூட இருப்பது அரிது. ஆனால்… தமிழ் புரொட்டொஸ்தாந்தினர் கொஞ்சம் மேட்டிமை மிக்கவர்களாக, வந்தா வா வா, வரலன்னா போ, கம் ஓ கோ சிக்காகோ என்று இருப்பவர்கள். சுமனை எப்படியிம் அடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சங்கி ஆனந்தம் பேசுவதாகவே எனக்கு படுகிறது. ஆனால் இந்த, மாதம் 1100 டொலர் வருவது விசாரிக்க படல் வேண்டும். பொய் என்றால் சங்கி ஆனந்தத்தை வங்குரோத்து ஆக்கும் அளவுக்கு வழக்கு போட வேண்டும்.
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
நூல் பந்தையே விட்டாலும்🤣
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
கந்தையா அண்ணை பெட்டி வாங்கீட்டார்🤣
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
உங்களுக்கு தெரியாதா? சேர் பி - லூதியானா அருணாச்சலம் - ஜலந்தர் பாரதியார் - ஹைபர் -போலான் 🤣 #வந்தேறி🤣 ——- அண்ணை நான் சொன்னது சங்கி-ஆனத்தத்தின் தலைப்பாகை இந்தியாவில் மடாதிபதிகள் கட்டும் ஸ்டைலில் இருப்பதை. பிகு பாரதியார் காசிக்கு போய் வந்த பின் தான் தலைப்பாகை கட்ட தொடங்கினார் என நினைக்கிறேன். வட இந்திய தழுவலாக இருக்கலாம்.