Everything posted by goshan_che
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
ஒத்து கொள்கிறேன். மொழிவாரி பிரிப்பின் போது தமிழகத்தில் தங்கிவிட்ட, அதன் பின் தமிழகத்தை தன் தாய் நிலமாக, தமிழை தன் இன அடையாளமாக மனதார ஏற்கும் சீமான் ஒரு தமிழரே! சீமானை தமிழர் இல்லை என்பவர்கள் இனத்தூய்மைவாதிகள். அதேபோல் எப்படி விஜை, ஜோச்சப் விஜை என்பது எனக்கு பொருட்டல்லவோ அதே போலத்தான் சீமான், சைமன் என்பதும். ஆனால் தன் சொந்த அடையாளங்களை மறுதலிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் சந்தேகம் உண்டு.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
ம்ம்ம்… இந்த பிளேட்டின் பின் பக்கமும் நல்லாத்தான் இருக்கு 🤣. சம்பந்தம் இல்லாமல் இல்லை, இருவரும் கையில் எடுத்தது இனத்தூய்மைவாத அரசியலை என காட்டவே அந்த டிஸ்கி. நீங்கள் கருணாநிதியை சொருவினால் கூட வழமையான உங்கள் திசை திருப்பும் பாணி என கடந்து போகலாம். நீங்கள் பாவித்தது சாதிய வசவை, தெரிந்து கொண்டே, அதுவும் நான் சீமானை எதிர்ப்பது கருணாநிதி மீதான என் சாதிய பாசத்தால் என்ற தொனியில் - அதுதான் சம்பவமாகி போய்ட்டு🤣. மேலே நீங்கள் கொடுத்த தன்னிலை விளக்கம் எல்லாம் உங்களுக்கும் வாசகர்களுக்குமிடையானது. என்னை பொறுத்தவரை நான் பிரதேசவாதி என கருதும் வகைப்பாட்டுள் உங்கள் செயல்பாடு அடங்குகிறது. அவ்வளவே. இதை வாசகர் சிரிப்பிற்கே விட்டு விடுகிறேன். கூட்டமைப்பு தமிழ் தேசிய அரசியலுக்குள் குளறுபடி செய்கிறது எனவே நான் தமிழ் தேசிய அரசியலை கருவறுக்க உறுதி பூண்ட, அதற்கு துரோகம் இழைத்த, வடக்கு-கிழக்கு பிரிவினையை தொடர்ந்து தூண்டி அதை மேலும் நலிவடைய செய்யும் கருணா, பிள்ளையானை ஆதரிக்கிறேன், ஏனையோரையும் அவர்களுக்கு ஆதரவாக திருப்புகிறேன் என்ற அதி அற்புத கொள்கை முடிவை தலைவர் எடுத்திருப்பார் என நான் நினைக்கவில்லை. அதுசரி…. இப்ப எல்லாம் அவரவர் தம் அம்மணத்தை மறைக்க தலைவரை போர்வை போல போத்தி கொள்வது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது🤣.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
உங்கள் care ஐ அல்லது don’t care ஐ வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை. கஸ்தூரி பற்றிய திரியில் சம்பந்தமே இல்லாமல் சாதிய வசை சொல்லை பாவித்து, தெரிந்து கொண்டே பாவித்து, அதில் என்னையும் இழுத்து, எனக்கும் கருணாநிதிக்கும் ஒரு சாதிய பாசமோ? என்ற தொனிப்பட நீங்கள் எழுதியதற்கான எதிர்வினையே இதுவரை நடந்தது. அதில் இனதூய்மைவாத, சாதிய வாத, பிரதேசவாத பழைய உதாரணங்களை எடுத்து காட்டும் படி ஆகிற்று. சர்சைக்குரிய சாதிய பதிவு👆
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
நாம் கதைத்து கொண்டிருப்பது பிள்ளையானுக்கு வீழ்ந்த, விடும் வாக்குகள் பற்றி. பிள்ளையானின் அரசியல், அதை நீங்கள் இன்றும்(?) ஆதரிப்பது பற்றியது. இதில் ஏன் கருணாவுக்கு வீழ்ந்த வாக்குகள் எண்ணப்படுகிறன. அப்படியே ஆயினும், முஸ்லிம் ஆதிக்கம், கல்முனை தரமுயர்த்தல் இரெண்டும் கருணா, பிள்ளையானால் தீர்க்கப்பட்டு விட்டதா? ஆகவே உங்கள் ஹீரோக்களும் சீரோக்கள்தான். மற்றையவர் தேசிக்காய்கள் என்றால் உங்கள் ஹீரோக்கள் சுண்டங்காய்கள்🤣. அவர்கள் எலக்சனுக்காக பேசுவதை அப்பாவி பாமர மக்கள் நம்பினால் கூட பரவாயில்லை. ஆனால் படித்தவர்கள் கூட? அப்படியே ஆயினும், மகிந்த இனவாதிதான், இனப்படுகொலையாளந்தான் ஆனால் முஸ்லீம்களின் வாலை வெட்டினார், வீதிகளை புனரமைத்தார் எனவே அவருக்கு நான் பிரச்சாரம் செய்கிறேன் எனும் சிங்கள வாக்காளருக்கும் உங்களுக்கும் ஒரு வேறுபாடுமில்லை. அவர் இனவாதி. நீங்கள் …. இது அந்த சமயம் நீங்கள் யாழில் எழுதியமைக்கு மாற்றாக உள்ளது. அந்த தேர்தலில் பிள்ளையான் மட்டிலும், கருணா அம்பாறையிலும் கேட்டார்கள். நீங்கள் தெளிவாக சொல்லி இருந்தீர்கள்…இந்த முறை உங்கள் வாக்கும், உங்களை சூழ உள்ளோர் வாக்கும் இவர்களில்ளுக்கே என்பதை நீங்கள் உறுதி செய்வீர்கள் என. ஆதாரம் கேட்டு திரியை நீளடிப்பதாயின் அது உங்கள் விருப்பம். எனக்கு இந்த ஆதாரம் காட்டும் விடயத்தில் முன்பு போல் ஆர்வம் இல்லை, அதே போல் யாழில் இப்போ தேடுவதும் கடினமாக உள்ளது - இது மாத்தி மாத்தி எழுதுவோருக்கு வசதியாயும் போய்விட்டது.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான். பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
நீங்கள் மட்டும் அல்ல, கருணாவை பிள்ளையானும்தான் எதிர்கிறார். நிச்சயமாக - பிள்ளையான் இன ஒற்றுமைக்கு, இனத்துக்கு, செய்த அத்தனைக்கும் பிறகு எவர் ஒருவர் அவருக்கு வாக்கு போடுகிறாரோ - அவர் நிச்சயம் பிரதேசவாதிதான். ஒட்டு மொத்த மட்டகளப்பும் அவருக்கு வாக்கு போட்டாலும் அதுதான் உண்மை. மகிந்தவுக்கு பெருவாரியாக வாக்கு போட்டதால் சிங்களவர் இனவாதிகள் இல்லை என வாதிட முடியாதுதானே? அந்த புனர்வாழ்வு கழக பெண்னுக்கு நிகழ்ந்தது, அவர் யாழ்ப்பாண பெண், ஊருக்கு போக விழைகிறார், போகும் வழியில் இல்லையா? இதையே குற்றம் சாட்ப்பட்டவர் ஒரு மட்டகளப்பு பெண்ணுக்கு இதுவரை செய்யவில்லை அல்லவா? இதில் உள்ள பிரதேசவாத கோணம் மெத்த படித்த உங்களுக்கு புரியவில்லை. நம்பீட்டோம். ஆகவே என்னை நீங்கள் மையவாதி என்றும் அழைக்கலாம், மையவாடி என்றும் அழைக்கலாம். நாமிருவரும் பொதுவெளியில் எழுதும், எழுதிய கருத்துகள், எடுத்த நிலைகள் எம்மை யார் என அடையாளம் காட்டும் 🤣. நான் பெத்த ஷாட் ஓ, பெட் ஷீட்டோ… உங்கள் எழுத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு. Blonde ஐ பழுப்பு என எழுதலாம் நாகரீகமாக…நக்கல் தொனியில் “செம்பட்டை” என எழுதியது …. இப்போ அதுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம்… யாழில் எல்லாரும் பால்குடி என நினக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
அப்போ இது சாதிய வசவு சொல் என அறிந்தே பயன்படுத்தி உள்ளீர்கள். மலையாளி என்பது இன அடையாளம். வசவு அல்ல. நீங்கள் அவரை என்னவாக அழைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது என் தொழில் அல்ல. ஆனால் ஒரு முற்போக்கான பொது இடத்தில் ஒரு தாழ்தப்பட்ட சாதியினை சேர்ந்தவரை அவர் சாதி சொல்லி அழைத்தால் கூட பரவாயில்லை, சாதிய வசை சொல்லை, அது வசை என தெரிந்தே நீங்கள் பயன்படுத்தியதைதான் சுட்டி காட்டினேன். இதில் கயவன் கருணாநிதியை நீங்கள் எப்படி அழைத்தாலும் எனக்கு பொருட்டில்லை. கருணாநிதியோ, மகிந்தவோ சாதிய வசவால் அவர்கள் அழைக்கப்படும் போது அதை சுட்டி காட்டுகிறேன் அவ்வளவே. அப்பட்டமான சாதிய கருத்து இது. என்னை கடுப்பேத்துவதாக நினைத்து உங்கள் உண்மை முகத்தை நீங்கள் உலகறிய செய்கிறீர்கள்.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
யாரு @அக்னியஷ்த்ரா வா? பிரதேசவாதம் தலைகேறி, டீ ஆர் ஓ பெண்ணை வெலிகந்தையில் வைத்து வன்புணர்ந்து, டம்ப் பண்ணியவருக்கு ஆதரவாக வாக்கு போட என 2020 இல் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு டிக்கெட் எடுத்து போனேன், என்னை சூழ உள்ளவரையும் அவருக்கே வாக்கு போடுமாறு கேட்கிறேன் என யாழில் எழுதிய அண்ணல் அவர். அதே போல் புலம்பெயர் தமிழருக்கும், வெள்ளையினதவருக்கும் பிறந்த பிள்ளைகளை “செம்படைகள்” என யாழில் எழுதியவரும் இவரே. சாதிய எண்ணம், பிரதேசவாதம், இனத்தூய்மை வாதம் எல்லாம் அண்ணன் தம்பிகள்தான். கன்னங்கர கொடுத்த இலவச கல்வி, தகமைகளை கொடுக்கும், வெளிநாட்டு வேலை வாய்ப்பை, செல்வத்தை கொடுக்கும், மனத்தின் அழுக்கை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும். உண்மைக்கு நன்றி.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
நீங்கள் எழுதியதில் இருந்தே தெரிகிறதே, சின்ன மேளம் என ஒருவரை அடையாளம் காண்பது, ஒருவரின் சாதியை, அதுவும் சாதி உட்பிரிவை கொண்டு அவரினை ஆர் என அடையாளம் கண்டு அதன் படி அவருக்கு உரிய மரியாதையை கொடுப்பது. அதாவது பெரிய மேளம் என்றால் ஒரு மரியாதை, சின்ன மேளம் என்றால் இன்னொரு மரியாதை. இதைத்தான் சா-தீய எண்ணம் என்பார்கள். இங்கே கருணாநிதியை, ரெண்டு பெண்டாட்டி காரன் என பழித்திருக்கலாம். தமிழின கொலையாளி, துரோகி என பழித்திருக்கலாம். இன்னும் எவ்வளவோ இருக்கு அந்த ஈனப்பிறவியை பழிக்க. ஆனால் நீங்கள் பழிக்க எடுத்து கொண்ட சொல் சின்ன மேளம். எப்பொருள் யார் யார் வாயும் கேட்கலாம் ஆனால் உள்ள கிடக்கை அவர் அவர் எழுத்தில் வெளிவந்து விடும்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
எதிரிகளை அழிக்க எத்தனையோ வழிகள் உண்டு…… முதல் வழி மன்னிப்பு. ———- இனத்தால் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டு அரசியலில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் சீமான் என்கின்ற சைமன் செபஸ்டியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிகு பிறந்த நாளில் இயற்பெயரில் சொல்லும் வாழ்த்து மட்டுமே பலிக்கும் என்பது ஐதீகம்🤣. அண்ணன் கொடுத்த கூமுட்டையை வாங்கி அதை கொண்டே அண்ணனுக்கு கேக் அடிச்சு குடுத்திட்டாப்பல🤣. முன்னர் திக வில் இருந்து திமுக பிரிந்த போது, இப்படித்தானம் பெரியார் கடுமையாக திமுக/அண்ணாவை எதிர்த்தார். ஆனால் அண்ணா எதிர்வினை எதுவும் காட்டாமல், தொடர்ந்தும் பெரியாரை கண்ணியமாக நடத்த, பெரியாரின் எதிர்ப்பு பிசு பிசுத்து போனது என்பார்கள்.
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இதுதான் நடக்கும் என நினைக்கிறேன். மின்ஸ்க் II உடன்படிக்கைக்கு திரும்புவதாக ஒரு நாடகம் ஆடப்படும். ரஸ்யா ஒப்புக்கு கிரைமியா தவிர் ஏனைய பகுதிகளை கொடுப்பது போல் ஒரு நாடகம் அரங்கேறும். ஆனால் அங்கே மறைமுக ரஸ்ய அரசு நடக்கும். உக்ரேன் மிகுதி பகுதிகளை தக்க வைக்கும். ஆனால் இனிமேல் எதிர்க்க முடியாதளவுக்கு உக்ரேனின் ஆயுத பலம் முதுகெலும்பு உடைக்கப்படும். மறைமுக ரஸ்ய ஆட்சி நடக்காத பகுதிகளில் - ஒவ்வொரு நாளும் அரசியலில் ரஸ்யா தலையிடும். முடிவில் செலன்ஸ்கி மட்டும் அல்ல, நேட்டோ, மேற்கு, ஈயு நோக்கி நகர ஆசைபட்ட அத்தனை பேரும் ஒன்றில் கொல்ல அல்லது நாட்டை விட்டு வெளியேற அல்லது அபிலாசைகளை கைவிட வேண்டி ஏற்படும். டிரம்ப் ஆட்சி முடிய, நாலு வருடத்தில் உக்ரேன் பெலரூஸ் போல காயடிக்கப்பட்ட ரஸ்ய காலனி ஆகி விடும். யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் கையை பிசைந்தபடி நடப்பதை பார்ப்பார்கள். இல்லை என்றால் அமெரிக்கா நேட்டோவில் இருந்தே வெளியேறும் என இவர்கள் மிரட்டப்படுவார்கள். வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி ஒரு சொந்த செலவில் தன் நாட்டு நலனுக்கு சூனியம் வைக்கும் நடவடிக்கையை நினைத்துக்கூட பார்க்க மாட்டார். ஆனால் டிரம்ப் செய்வார். அவருக்கு நாட்டு நலன் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தான் (புட்டின் வைத்துள்ள பாரதூரமான ஆதாரங்களில் இருந்து) தப்ப வேண்டும். அவ்வளவுதான். நிச்சயம் அமைதி வரும். உக்ரேனுக்கு, அது 2009 இல் மகிந்த எமது தேசத்துக்கு தந்த அவமானகரமான அமைதியை ஒத்து இருக்கும். அங்கு போலவே இங்கும் புறா பறக்கும், அது புறா இல்லை ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய அபிலாசைகளை தின்று கொழுத்த பருந்து என்பதை அந்த இன மக்கள் மட்டும் மெளன சாட்சிகளா குறிப்பில் வைப்பார்கள்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இதை புட்டினும் அறிவார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
மறந்து போய் மன்னிப்பு மசோதாவில் கையொப்பம் வைக்காமல் போகாதவரை ஓக்கே🤣. இதை விட ரஸ்யா நேட்டோவில் தானே இணையலாம் 🤣.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ஏன் கஞ்சத்தனம் - ரெண்டு 00 ஆ போட்டு விடச்சொல்லுவம் 🤣.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
ஓ…அப்படியா…ஆனால் இதில் குற்றம் புரியாத ஆட்களும் சட்ட உதவி மறுக்கப்பட வாய்புண்டு. பிரெஞ் பொலிஸ் பிடித்து விசாரிச்சு போட்டு…சரி..சரி…சீக்கிரம் இங்கிலாந்துக்கு போ என விட்டு விடுவார்கள்🤣. ஆனால் குழப்படி செஞ்சு மாட்டினால் அடிதான். அதுவும் அந்த கடும் நீல யூனிபோர்ம் காரர், கடும் அடி🤣. ஆனால் வட ஆபிரிக்கர் அதிகம் உள்ள இடங்களில் கூட்டமாக காவாலிகள் பொலிசை எதிர்ப்பதும் உண்டு.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வாவ் வாழ்துக்கள் தோழர். நாங்கள் உங்கள் ஊர் தேர்தலில் ஆர்வம் காட்டுவது நடப்பதுதான். ஆனால் அங்கே இருந்து போட்டியில் குதிக்கும் அளவுக்கு ஈழ அரசியலில் ஆர்வம் இருப்பது புதுசு கண்ணா, புதுசு.. மெச்சத்தக்கது👍. ஒரு இடமும் வெல்லாது போனால் இன்னும் நல்லா இருக்கும். ஆனால் எனக்கு புள்ளி போயிடும். ஆகவே ஒன்றோடு பிழைச்சு போகட்டும்🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ராஜபக்சக்களின் உடனடி குடும்பத்தில் எவரும் போட்டியில் இல்லை. மருமகன் சுசீந்திர போட்டியிடுகிறார் என நினைக்கிறேன். நாமல் கூட அம்பாந்தோட்டையிலும் கூட இறங்கவில்லை. அவர்களே தமது வாய்ப்பை அப்படி நம்பும் போது நாமும் அதை நம்பத்தானே வேண்டும்🤣. ஆனால் தேசியபட்டியலில் நாமல் முதல் இடத்தில் உள்ளார். காரணமாகத்தான்….. 2020 இல் யு என் பி எந்த மாவட்டத்திலும் ஒரு இடம் கூட வெல்லவில்லை. ஆனால் ஒட்டு மொத்தமாக நாட்டில் விழுந்த வாக்கின் அடிப்படையில் 1 சீட் கிடைத்தது. நாமலும் இப்படி உள்ளே வருவதுதான் பிளான். இது நடக்க அதிக சாத்தியம் உள்ளதாக நானும் நினைக்கிறேன்.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
இதுக்கு பிரெஞ் பொலிஸ்தான் சரி. ஊமை குத்தா குத்துவானுவோ. முடியவே முடியாது…நாங்கள் அப்படி சொல்ல உங்களை விடமாட்டோம்🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது…. ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது….🤣 ————————— கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம் 2. சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 3. வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4. டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம் 5. ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6. செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 7. சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம் 8. அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை 9. முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10. ஐங்கரநேசன்( சுயேட்சை குழு இல்லை 11. நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 12. சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13. சரவணபவன் ( சுயேட்சை குழு இல்லை 14. அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15. தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 16. எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை 17. சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 18. சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு இல்லை 19. ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20. மனோ கணேசன் (கொழும்பு மாவட்டம்)ஆம் 21. ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம் 22. விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை 23. சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) ஆம் 24. சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25. செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம் 26. குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம். வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27. யாழ் மாவட்டம் - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1 28. வன்னி - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1 29. மட்டக்களப்பு -தமிழரசு கட்சி2 30. திருமலை - ஐக்கிய மக்கள் சக்தி 1 31. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 3 32. நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 3 33. அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 5 34. கொழும்பு தேசிய மக்கள் சக்தி 12 35. திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 2 36. அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37. யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்). 38. மானிப்பாய் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 39. உடுப்பிட்டி தமிழரசு கட்சி 40. ஊர்காவற்றுறை ஈழமக்கள் ஜனநாயக கட்சி 41. கிளிநொச்சி தமிழரசு கட்சி 42. மன்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 43. முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44. வவுனியா தமிழரசு கட்சி 45. மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46. பட்டிருப்பு தமிழரசு கட்சி 47. திருகோணமலை தமிழரசு கட்சி 48. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49. எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50. எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52. தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 5 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54. தமிழரசு கட்சி 6 55. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56. தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57. இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1 58. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 61 59. தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 131 60. புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 13 பலர் தேர்தல் தொகுதி, தேர்தல் மாவட்டம் இடையான வேறுபாட்டை உணரவில்லை என நினைக்கிறேன். பியதாசவுக்கு விழும் வாக்குகள் அனைத்தும் எமது வெற்றியை மேலும் உறுதிசெய்யும் என்ற சுமந்திரனின் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நானும் அமைதி காக்கிறேன்🤣.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
-
சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை
சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣