Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி! Vignesh SelvarajPublished: Wednesday, October 8, 2025, 23:32 [IST] நாமக்கல்: அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "திமுக வெற்று கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி திமுக அரசு சாதனை படைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. கரூரில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பிற்கு நீதிமன்றம் சொல்வதற்கு முன்னதாக திமுக அரசு விசாரணை குழுவை ஏன் அமைத்தது. ஒரு துறையின் செயலாளர் திமுகவின் கைக்கூலியாக கரூர் சம்பவத்திற்கு பேட்டியளிக்கிறார். ஏடிஜிபி சொல்வது ஏற்புடையது அல்ல. 41 உயிரிழப்பிற்கு சிபிஐ விசாரணை வேண்டும். தவறு செய்த காவல்துறையை வைத்தே விசாரணை நடத்தினால் எப்படி நியாயம் கிடைக்கும். இந்த சதி த்திட்டத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியுடன் விஜய் ரசிகர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, "பாருங்க.. கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க.. ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்க செவியைத் துளைக்கும்" எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. மேலும் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "சிறந்த ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். உண்மை என்னவென்றால், வறுமை காரணமாக மக்கள் உறுப்புகளை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடப்பதாக திமுக அரசு அமைத்த குழுவே அறிக்கை கொடுத்தது. அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதித்துள்ளனர், ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடுமையாக சாடியிருக்கிறது. இதற்கு என தனி அதிகாரிகள் அமைக்கப்பட்டு, ஒரு மாதம் மேலாகிறது, ஆனால் இன்னமும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் திமுக எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. அண்மையில் கரூரில் 41 பேர் பலியானார்கள், அதற்கு இரவோடு இரவாக போகிறார், குழு அமைக்கிறார், வேகமாக விசாரிக்கிறார். இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா? கிட்னி முறைகேட்டை ஏன் விசாரிக்கவில்லை, கரூர் சம்பவத்தை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன? இதில் தான் உள்நோக்கம் இருக்கிறது. இதெல்லாம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஆழமாகப் பேசமுடியவில்லை. ஒருநபர் கமிஷன் அமைத்த பிறகு யாரும் வெளியில் தகவல் சொல்லக் கூடாது என்பது நியதி. ஆனால் திமுக அரசு கமிஷன் அமைத்து, அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்க வைக்கிறார்கள். கரூரில் ஒரு துயர சம்பவம் நடந்தது. மக்களுக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்று துணை முதல்வர் நினைக்கவில்லை. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போனார், துயரத்தைக் கேள்விப்பட்டு திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார், மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், நேராக திருச்சி சென்று மீண்டும் துபாய் போய்விட்டார், இவரெல்லாம் துணை முதல்வராக இருப்பதற்கு தகுதி இருக்கிறதா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை. இங்கிருந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவிகள் செய்தால் நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆள வேண்டுமா? 41 உயிரிழப்புக்கு நியாயமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறோம், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது காவல்துறை தொடர்பான குற்றச்சாட்டு. இதனை காவல்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்குமா? கிடைக்காது." எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. https://tamil.oneindia.com/news/chennai/eps-hints-at-possible-tvk-aiadmk-alliance-during-kumarapalayam-campaign-741671.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி யோவ் விஜை…. வாய்யா வெளில 🤣… எடப்பாடி சி பி ஐ விசாரணை கோருகிறார்…. அதை கோர வேண்டிய விஜையோ அமைதி காக்கிறார்🤣.
  2. தாமதிக்கபடும் நீதி= மறுக்கப்பட்ட நீதி கண்ணீர் அஞ்சலிகள் ஐயா. சோகங்களிலேயே மோசமானது புத்திரசோகம். அதனோடும் நீதிக்கு எவ்வளவோ போராடினீர்கள். அந்த மனநிறைவோடு விடைபெறுங்கள்🙏.
  3. அப்படியே ஆகினும்… சீமான் இதுவரை விஜி பற்றி சொன்னது எல்லாம் வெறும் அவதூறுதான் இல்லையா? அப்போ அவர் பேச்சை நம்பி விஜயலச்சுமியை யாழில் கீழ்தரமாக எழுதியோர் எப்போ மன்னிப்பு கேட்பார்கள்? ஐயோ ஆமா…. தேர்தல் நேரம்….. இந்த சம்மட்டி அடிய வச்சு… அண்ணன் அப்படியே… ஆட்சிய பிடிச்சுடுவாரு🤣… ஆனானப்பட்ட விஜையையே காத்த புடுங்கி கூப்பில உக்கார வச்சிடானுவோ… இந்த பெட்டி வாங்கி பெரியசாமி எல்லாம் ஒரு ஆளே இல்லை திமுகவுக்கு. முடிந்தால் இந்த முறையாவது டெபாசிட் தேறுமா எண்டு பார்க்கலாம்🤣.
  4. எது தண்டனைகுரிய வழக்கு இல்லை? சீமான் மீது பதியபட்ட வழக்கு இந்திய கிரிமினல் கோவையின் சரத்துகளின் அடிப்படையிலானது. பாலியல் வன்கொடுமை. திருமணம் செய்வதான வாக்குறுதியில் உடலுறவு என்பன கடும் தண்டனைகுரிய கிரிமினல் குற்றங்கள். அதை ஒழுங்காக நீதி விசாரணை செய்யவிடாமல் ஊதி நூத்தது இந்திய மாமா சுப்ரீம் கோர்ட் (சீமானின் உள்ளடி வேலையால்). வழக்கின் அடிப்படையே அப்படியே அமுக்கி விட்டு, அதன் பக்க விழைவான அவதூறுகள் பற்றி எழுதுகிறீர்கள் நீங்கள்.
  5. பிகு விஜி விடயம் ஓவர் என குசி படும் அண்ணன் மாருக்கு. இப்போ சீமான் English Premier League வீரர்கள் செய்வது போல DMK க்கு loan இல் விளையாடுகிறார். ஆகவே திமுக இதை கையில் எடுக்காது. ஆனால் தேவைப்படும் போது நிச்சயம் - “விஜியிடம் மண்டியிட்ட வீரன்” என்ற ரேஞ்சில் இதை பாவிப்பார்கள். அண்ணன் வாயில் சனி 1000 வருட குத்தகையில் உள்ளது. இவர் விஜி அண்ணியை பற்றி ஒரு வார்த்தை விட்டால் போதும் - கோர்ட் உத்தரவை மீறினார், நீதிமன்ற அவமதிப்பு எண்டு கூட ஆகும். கண்ணுங்களாthe circus is not over, it just moved to the next act 🤣.
  6. இப்படி ஒரு நீதி விசாரணை என்றாவது விஜி அண்ணி வழக்கில் நடந்ததா? கடைசியாக சென்னை உயர் நீதிமன்றம் இப்படியான விசாரணை ஒன்றை நடத்தும்படி பொலிசுக்கு அறுதியாக சொல்ல… அண்ணன் டெல்லிக்கு போய், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு தடை வாங்கினார். ஆகவே நடந்தது என்ன என்ற நீதி விசாரணை இல்லாமலே அடித்து நூத்த வழக்கு இது. இன்னுமொரு விசயம்…. தண்டனைக்குத்தான்…நீங்கள் சொன்ன mitigating circumstances எல்லாம்… நீங்கள் தண்டனையையும், மன்னிப்பையும் போட்டு குழப்பிகொள்கிறீர்கள். மன்னிப்புக்கு மூன்றே தகுதிகள் தான்… செய்த குற்றத்தை ஏற்பதும்…அதற்கு மனம் வரும்துவதும்… இனி செய்யேன் என உளமார உறுதி மொழிவதும். இவை மூன்றும் சீமானிடம்மில்லை. அவரின் வக்கீல் மன்னிப்பு கேட்ட ஆவணத்தை கோர்டில் தாக்கல் செய்கிறார்…. அவரின் கொ.ப.செ தூஷண துரை அண்ணன் மன்னிப்பே கேட்கவில்லை என உருட்டுகிறார்🤣. இதே போல் நாளைக்கு போர்குற்ற விசாரணையில் மகிந்தவும் மன்னிப்பு கேட்டாலும் - ஒரே வாதம்தான். இது மாண்பல்ல…கச போக்கிலித்தனம். அண்ணன் போன வாய்தாவின் பின் தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என பேட்டியே கொடுத்தார். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, பொய்யர் திருமகன் சீமான். தலைவரை chef ரேஞ்சுக்கு இறக்கி கதைகட்டிய பொய்யன்… அவர் பேசினாலும், எழுதினாலும் அதில் குண்டு மணியளவு உண்மை இருந்தால் ஆச்சரியம்.
  7. இங்கே உள்ள தம்பிகளை பற்றி எனக்கு அதிகம் கவலை இல்லை. முன்பே சொன்னது போல் எல்லாருக்கும் தலையால் சிந்திப்பது எப்போதும் இயலுவதில்லை. ஆனால் நீங்கள்? சீமானபிமானம் உங்கள் கண்ணை கூடவா மறைக்கிறது. மன்னிப்பு என்றால் அது சகல குற்றங்களுக்கும் ஒன்றேதான். உண்மையில் மனம் திருந்தினால், மகிந்தவும், சீமானும் மன்னிப்புக்கு தகுந்தோரே. ஆனால் தண்டனையில் இருந்து தப்ப கேட்கும் மன்னிப்பு அது எந்த குற்றத்துக்கு கேட்டாலும் - போக்கிரித்தனமே. அண்ணன் ஒரு அட்சயபாத்திரம். அந்த கவலை எவருக்கும் வேண்டாம்.
  8. ஐயா யாரும் பாலியல் விசயம் செய்யும் போது சாட்சி ஏதும் வைத்து கொள்வதில்லை. ஆனால் இந்த வழக்கில் சில பல சாட்டிசிகள் காலத்துக்கு காலம் வந்துள்ளன, வந்துள்ளனர். ஆனால் சீமான் சாட்டிசியே இல்லாதா வெறும் புகாருக்கா டெல்லி வரை போய் மன்னிப்பு கேட்டார்.
  9. இனிமேல் சாகும் வரை “விஜய இலட்சுமியிடம் மண்டியிட்ட அண்ணன் சீமான்” என்பதை மேடைதோறும் அவர்கள் சொல்லுவார்கள். சர்க்கஸ் - யாழ்களத்தில் இருக்கும் சிங்கங்களை குட்டி ஜட்டியோடு டான்ஸ் ஆடவிடுவதில் மாற்றம் வராது. கவலை வேண்டாம்🤣. அவருக்கு கொடுத்த பதில் உங்களுக்கும்தான். ஓங்காலமே எடுத்தாலும் - எனது மன்னிப்பு கேட்பதை பற்றிய ஒப்பீட்டுக்கு உங்கள் எவரிடமும் பதில் இல்லை என்பதே உண்மை.
  10. குற்றம் இரெண்டும் ஒன்றல்ல. ஆனால் மன்னிப்பு என்ற concept ஒன்றுதான். வாழைப்பழத்தை களவெடுத்துவிட்டு மன்னிப்பு கோரியவன் மஹாத்மா… வைரநகையை களவெடுத்துவிட்டு மன்னிப்பு கோரியவன் துஸ்டாத்மா என்பதில்லையே? மன்னிப்புக்கு முதல் தகுதி செய்த தவறுக்கு மனம் வருந்தல் (remorse). அடுத்து தம்மை தாமே திருத்தி கொள்ளல் (rehabilitation). இந்த இரெண்டு R உம் இல்லாத மன்னிப்பு அது கேட்கும் காதிதமளவு கூட பெறாது.
  11. மன்னிப்பு கேட்பது மாண்புதான்…. எப்போது? அது உளப்பூர்வமான மன்னிப்பாக இருக்கும் போது. போன வாய்தாவின் பின் கூட மன்னிப்பு கேட்கமாட்டேன் என வாய் ஜம்பம் அடித்தவர்…இன்று மன்னிப்பு கேட்பது அப்பட்டமான போக்கிரித்தனம். அத்தோடு அண்ணன் தான் பிழையே விடவில்லை என்றார்…தம்பிகளும் அதற்கு வில்லுபாட்டு பாடினர். அப்போ இப்போ ஏன் மன்னிப்பு கேட்கிறார்? ஒன்றில் பிழை விட்டு விட்டு - மக்களுக்கு பொய் சொல்லி விட்டு - இப்போ மன்னிப்பு கேட்கிறார். அல்லது… செய்தாத தவறுக்கு கோழைதனமாக மன்னிப்பு கேட்கிறார். எப்படி பார்த்தாலும் ஒன்றில் சீமான் பொய்யன் அல்லது கோழை என்பதே முடிவாகும். சொல்லுவதுதான் சொல்லுறம் 40% எண்டால் தம்பி-அண்ணன்களாவது சந்தோசப்படுவார்கள்🤣. பிகு தம்பிகளுக்கு ஒரு கேள்வி. நாளைக்கு சோனியா காந்தி, மகிந்த இதே போல் முள்ளிவாய்காலுக்கு மன்னிப்பு கேட்டால்…. மன்னிப்பு கேட்டுவிட்டார்கள் எனவே அவர்கள் மாண்புள்ளோர் என கொண்டாடுவீர்களா? %செய்தாலும் செய்வீர்கள்
  12. பிகு கனக விஜயனின் முடித்தலை மீது கல்லினை வைத்தான் தமிழன் சேரமகன்…. கங்கை கொண்டான் தமிழன் சோழன் மகன்…. இமய வரம்பில் மீன் கொடி ஏற்றினான் தமிழன் பாண்டியன்… இதை எல்லாம் போல்…. டெல்லி வரை சென்று மானத்தை கப்பல் ஏற்றினான்… சைமன் செபஸ்டியன் என்ற கேரளத்து மைந்தன் என நாளை சரிதிரம் பாடும் 🤣. அண்மைய இரு வாரங்களில் விஜைக்கு யாழ்களத்தில் வழங்கப்பட்ட பூரண கும்பம், முதல் மரியாதை இன்று நான் அண்ணன் சீமானுக்கு வழங்குகிறேன். த்…..தூ….. (தம்பிகள்: துப்பினா துடைச்சுகுவோம்🤣)
  13. நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம் Mani Singh SUpdated: Wednesday, October 8, 2025, 12:20 [IST] டெல்லி: நடிகை பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியது. இதேபோல் சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. Also Read இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி மீண்டும் விசாரித்தது. சீமான் தரப்பில் வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக்கோரி ஏற்கனவே கடிதம் வழங்கி இருந்த நிலையில், நடிகை சார்பில் வக்கீல் ஆஜராகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு இடமில்லை என்று கூறினார். இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் வரும் 24ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியது. இந்த நிலையில், சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியுள்ளது. சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-quashes-actress-harassment-case-after-ntk-chief-seeman-apology-741497.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards டிஸ்கி மண்டியிடாத மானம்… முழந்தாளிட்டு…ஊ…. ஊரறிய மன்னிப்பு கேட்ட தருணம்🤣. பிகு பாஜக அனுசரானையில் சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்திருக்காவிடின் சைமனுக்கு விளைவு இன்னும் மோசமாய் இருந்திருக்கும்.
  14. அப்படி இல்லை, அண்ணன் நெய்தல் படை சூழ கடலில் இறங்கியதும் ஒட்டு மொத்த இலங்கை நேவியும் முகாமுக்குள் சுருண்டு கொண்டன. நீங்கள் உங்கள் சந்தோசத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் உண்மை இதுதான்🤣
  15. விஜையால் எப்படி பார்த்தாலும் பாதிப்பு திமுகவுக்கே என்பதில் உடன்பாடுதான் ஐயா. ஆனால் எடப்பாடி, விஜை எம் ஜி ஆர் போல அல்ல. அதே போல் அன்றைய காங்கிரஸ் போல் லோக்சபா தேர்தலில் 50:50 விட்டு தந்தால் சட்டசபையை முழுவதுமாக மாநில கட்சிக்கு தாரைவார்க்கும் கட்சி அல்ல இன்றைய பிஜேபி. இப்போ இருக்கும் நிலையில் அதிமுக+விஜை+பிஜேபி ஒரே அணியில் வரின் 2026 இல் தமிழ் நாட்டில் பிஜேபி அமைச்சர்கள் இருப்பார்கள். அப்போ அரசின் கொள்கை முதல் செயல்திட்டம் வரை கொஞ்சம், கொஞ்சமாக காவி மயமாகும். இது வரலாற்றில் முதன் முறை நிகழும் நிகழ்வாக இருக்கும். அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக, விஜையை முடக்கி தமிழ் நாட்டில் பிஜேபி vs திமுக என்பதே அரசியல் என்ற நிலை உருவாகி விடும். இதைதான் மஹாரஸ்டிராவில் சிவசேனா, பீஹாரில் நிதீஸ், பீஜேபி கூட்டில் அனுபவித்தனர். மேற்கு வங்கத்தில் கயூனிஸ்டை, ஒரிசாவில் பட்நாயக்கை தள்ளி விட்டு (கூட்டு வைக்காமல்) இரெண்டாம் பெரிய கட்சியாக இப்படித்தான் பாஜக வளர்ந்தது. இப்படி ஒரு நிலை வருவதை விரைவு படுத்துவதுதான் விஜையின் வேலை என்றால் - அவர் வராமலே இருந்திருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு. பிஜேபி புகுந்து விடும் என்பது சீமான் பொய்யாக சொல்வது போல் வெறும் வெத்து மிரட்டல் அல்ல. அது ஒரு நியாயமான பயம்.
  16. உங்களுக்கு விசயம் தெரியாதே… அஜித் அரசியலுக்கு வராமைக்கும், அப்பத்துக்கு வச்ச மா புளித்தமைக்கும்… ஆறு மணிக்கு முன் வானம் வெளிக்கவும் கூட…. சீமான் தான் காரணமாக🤣. பிகு ஏனையோரை போல ரஜனியிம் சீமானின் காட்டு கத்தலை லெட்ப்ட் ஹாண்டில்தான் டீல் பண்ணினா. ரஜனி அரசியலுக்கு வராது போக முக்கிய காரணம்கள் தன் மீதே நம்பிக்கை இன்மை / அல்லது சரியான சுய மதிப்பீடு தொடை நடுங்கிதனம் சினிமா பணம், புகழை ரிஸ்க் எடுக்க விரும்பாமை மகள்கள் அட்வைஸ் கொவிட் கொவிட் வந்து மக்களை சந்திப்பது உயிராபத்தாக முடியலாம் என்ற அச்சம் ஏற்பட்டிராவிடின் வந்தே இருப்பார். வந்து விட்டேன் என்று அறிவிப்பே விட்டார். இந்த பனம் பழம் வீழ்ந்ததில் இந்த அண்டங்காக்காவுக்கு ஒரு சம்பந்தமுமில்லை.
  17. விஜை இப்போதான் முதல் தடவை, ஒரு சூழ்நிலை கைதியாகி கொள்கை தவறை விடுகிறார். அல்லது விட ஆயத்தம் ஆகிறார். அதற்கு முன்பே மூக்கு சாத்திரம் பார்த்து அவரின் வரவை எதிர்த்து சரி என நான் இப்போதும் எண்ணவில்லை. விஜை, சீமான், சுமன் இன்னும் அரசியலுக்கு வரும் எவரையும் முந்தங்கிய-பக்க சார்பாக எதிர்க்க கூடாது. அதே சமயம் அவர்கள் வழுவும் போது முரட்டு முட்டு கொடுக்கவும் கூடாது.
  18. இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி! Shyamsundar IUpdated: Sunday, October 5, 2025, 10:07 [IST] சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, நடிகர் விஜய்யின் கட்சிக்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பலத்தைப் பயன்படுத்தி வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய்க்கு ஆதரவாக பாஜக களமிறங்க திட்டமிட்டு உள்ளதாம். விஜய் தனியாக இல்லை என்று தமிழக வெற்றிக் கழக (TVK) தலைமைக்கு ஒரு மூத்த பாஜக தலைவர் தகவல் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜகவும் விரும்புவதாகவும், அதற்கு தவெக துணை இருந்தால் சிறப்பாக இருக்கும். இதனால் பொறுமையாக இருக்குமாறு விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்ட ரீதியாக சிக்கல் விஜய்க்கு இந்த வழக்கில் சட்ட ரீதியாக கடுமையாக சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் பாஜக தரப்பு எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். எங்களுடன் கூட்டணி இல்லை என்றால் நாங்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம், என்று விஜய்க்கு டெல்லி பாஜக தெரிவித்து உள்ளதாம். விஜய் முடிவு என்ன? 2026 தேர்தலில் TVK தனித்துப் போட்டியிடும் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்த புதிய நிகழ்வுகள் அவரது வியூகங்களை மாற்றியமைக்கக்கூடும். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் ஜே பாண்டா அக்டோபர் 6 ஆம் தேதி மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது அவர் மூத்த கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களை சந்திப்பார். அப்போது பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார். முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை நேற்று டெல்லியில் இருந்தார். அவர் கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். இதன்பின் வரும் வாரமே கூட்டணியில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை உருவாகும் என்று பாஜக தலைமை நம்புகிறது. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைக்க அது முயற்சிக்கிறது. இதில் TVK-க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திமுக இந்தச் சம்பவத்திற்கு தவெகவை முழுமையாகக் குறை கூறி வரும் நிலையில், மற்ற கட்சிகள் விஜய் மீது மென்மையாக அணுகியுள்ளன. விஜயை கடுமையாக விமர்சனம் செய்யாமல் அவரை சாந்தமாக அணுக டெல்லி பாஜக திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் அவரை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முடிவு எடுத்துள்ளதாம். விஜய்யின் பேச்சாற்றல் மற்றும் செல்வாக்கு காரணமாக, தவெக வாக்காளர்களை ஈர்க்கும் என்றும், தேர்தலுக்கு முன்னதாக ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் பாஜகவின் மதிப்பீடு கூறுகிறது. DMDK மற்றும் நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளில் இருந்து வாக்காளர்கள் TVK-வை நோக்கி நகரலாம் என்றும் பாஜக கருதுகிறது. ஆனால், அதிமுகவுடனான தனது கூட்டணியைக் குலைக்க விரும்பாததால், பாஜக கவனமாக செயல்பட விரும்புகிறது. அதிமுகவின் வலுவான அமைப்புடன் விஜய் இணைந்தால், NDA-வின் தமிழ்நாடு டார்கெட் வெற்றிபெறும் என்று டெல்லி பாஜக கருதுகிறதாம். https://tamil.oneindia.com/news/chennai/tvk-vijay-alliance-with-bjp-and-aiadmk-is-almost-confirmed-nda-twist-in-tamil-nadu-740691.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards விஜையின் கொள்கை விளக்கத்தை பார்த்து, அதனால் ஈர்க்கபட்டு, திமுக, அதிமுக, சாதிகட்சிகள், பாஜக ஏ டீம், பாஜக பி டீம் தவிர்ந்த ஒரு அரசியல் சக்தி தமிழகத்தில் உருவாக வாய்புள்ளது என கருதிய கோஷான் போன்றோரின் தற்போதைய பரிதாப நிலை 👇🤣
  19. இதில் நான் இந்திய தயாரிப்புகளை தவிர்ப்பது இட்டு யாருக்கும் உபதேசம் செய்யவில்லை. ஆனால் சங்கி, இதில் security, data ரிஸ்க் உள்ளது என்பது உபதேசம்தான். மக்களே, உங்கள் உரையாடல்கள் அனைத்தையும், இதை தரவிறக்குவதன் மூலம் உங்கள் phone இன் ஏனைய security settings இற்கும் ஒரு back door access ஐ இந்திய புலனாய்வுக்கு அமைத்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியாயின் தாரளமாக அரட்டை அடியுங்கள். உபயம் - புலவர் 🤣
  20. இல்லை. உங்கள் தரவழியள் போல் “புறக்கணி சிறிலங்கா” எண்டு போட்டு ஹொலிடே போகும் ஆளில்லை நான். 1987 இல் இருந்து என் வாழ்வில் இந்திய தயாரிப்புகளை தவிர்த்தே வருகிறேன். ஆனால் தவிர்க்க முடியாதவற்றை (எடுத்து காட்டு : உறவினர் மருத்துவம்) தவிர்க்க முடிவதில்லை.
  21. மீண்டும் சொல்கிறேன் - அபத்தமாக கதைக்க கூடாது. வேம்பு அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதே ஆர் எஸ் எஸ் வேலைதிட்டத்தை தமிழ் நாட்டில் முன்னெடுக்கவே. இதன் ஒரு அங்கம்தாம் இந்த அரட்டை. அதனால் பிராமணர் என்பதால் அவரை நான் எதிர்க்கவில்லை. வேம்புவை பற்றி - அவரின் முன்னைய பேட்டிகள் பற்றி கொஞ்சம் வாசித்திருந்தால் - வேம்பு பிராமணர் என்பதால் மட்டும் அவரை சங்கி என்கிறேன் என்ற அரைவேக்காட்டு புரிதல் ஏற்பட்டிராது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.