Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு.. நிர்மல் குமார் - ராஜ்மோகனுக்கும் பதவி தந்த விஜய் Nantha Kumar RUpdated: Friday, January 31, 2025, 15:43 [IST] சென்னை: விசிகவில் இருந்து விலகி தவெகவில் இன்று இணைந்த ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்புகளை நடிகர் விஜய் வழங்கி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். தற்போது கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. கட்சி சார்பில் மொத்தம் 120 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் நியமனங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெகவின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதோடு புதிய மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பை அவர்வெளியிட்டு வருகிறார். சென்னையில் இன்று தவெகவில் முக்கிய பிரமுகர்கள் விஜய் முன்னிலையில் இணைந்தனர். அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பிரபல பேச்சாளரும், யூடியூபருமான ராஜ்மோகன் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்தனர். கட்சி அலுவகத்துக்கு வந்த 3 பேரையும் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரேவற்றார். அதன்பிறகு 3 பேரும் கட்சியில் அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் இணைந்தனர். கட்சியில் இணைந்த 3 பேருக்கும் உடனடியாக தவெகவில் பதவி என்பது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதவ் அர்ஜுனா தவெகவின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவெகவில் மிகவும் முக்கிய பொறுப்பாகும். ஏனென்றால் தேர்தல் சார்ந்த பணிகளை ஆதவ் அர்ஜுனா மேற்கொள்ள உள்ளார். அதாவது வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம், அவர்களுக்கான பயிற்சி பட்டறை, தேர்தலுக்கு கட்சி தொண்டர்களை தயார் செய்யும் பணியை ஆதவ் அர்ஜுனா மேற்கொள்ள உள்ளார். ரசிகர் மன்றமாக, மக்கள் மன்றமாக உள்ள ரசிகர்கள் தவெகவின் தொண்டர்களாக மாறி உள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைத்து பணி செய்யும் வகைகளை ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்த பொறுப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல் தொடர்பான பணியை மேற்கொண்ட அனுபவம் ஆதவ் அர்ஜுனாவுக்கு உள்ளது. பிரபல அரசியல் வியூகரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தமிழக அரசியல் களத்தை பற்றி அவர் அறிந்து வைத்துள்ளார். கடந்த 2016, 2019 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் திமுகவின் அரசியல் வியூக வகுப்பாளர்களுடன் சேர்ந்து ஆதவ் அர்ஜுனாவும் செயல்பட்டார். 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பை தொடங்கியிருந்தார். அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சியில் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டார். விசிக இப்போது திமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் தான் விசிகவில் இருந்து கொண்டே திமுகவை கடுமையாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார். இதனால் அவர் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் இப்போது தவெகவில் சேர்ந்துள்ளார். அதேபோல் அதிமுகவில் இருந்து விலகிய தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமாருக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். இவருக்கு பக்கப்பலமாக சிடிஆர் நிர்மல் குமார் செயல்பட உள்ளார். அதேபோல் பிரபல யூடியூபரும், பேச்சாளருமான ராஜ்மோகன் தவெகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒரு கட்சி என்றால் அதற்கு கொள்கைகள் என்பது மிகவும் முக்கியம். அதோடு கட்சியில் இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் வரை கொள்கைகள் என்பது சென்றடைய வேண்டும். அப்போது தான் கட்சி கொள்கை ரீதியாக வலுவாக நிலைத்து நிற்கும். அந்த வகையில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி ராஜ்மோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் சிறந்த பேச்சாளர்களாக அறியப்படும் நிலையில் அவர் இனி தவெகவின் கொள்கைகளை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்வார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/chennai/aadhav-arjuna-ctr-nirmala-kumar-and-rajmohan-joins-vijays-tvk-party-and-gets-important-posting-de-676065.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி 1. லாட்டரி மார்டீனின் மருமகன் ஆதவ். மார்ட்டின் தனது குடும்ப உறவு ஒருவர் ஆட்சி அதிகாரத்தை எடுக்க கூடிய சகல பகுதியிலும் இருக்கும்படி பார்த்து கொள்வார் என்பார்கள் (யார் ஆட்சிக்கு வந்தாலும் மார்ட்டினின் லாபி அதிகாரத்து அருகே இருக்கும்). ஆதவ் விஜையிடம் போனது மார்ட்டின் விஜையின் வாய்ப்புகளை அங்கிகரிப்பதாக கொள்ளலாம். ஆனால் ஊழலில் சிக்காதவாறு விஜை பார்த்து கொள்ள வேண்டும். 2. காளியம்மா - நேர காலத்தோட கிளம்புமா. பெண் கொ.ப.செ வெற்றிடம் அப்படியேதான் இருக்கு.
  2. மன்னிக்கவும். தரவுப்பிழை. காந்தி வைசிகர். பிராமணர் அல்ல. ஆனால் மோடி போல பிராமண அடிவருடி. நேரு கஸ்மீரி பண்டிட்.
  3. ஆனால் தென்னிந்திய மக்களும், அவர்களுக்குள் இருந்த தமிழ் மக்களும் இதற்கு தயாராக இருக்கவில்லை. இன்றும் இல்லை. காந்தி நேருவின் இந்திய சுதந்திர மாயையில் சிக்கி இருந்தார்கள். இதனால் ஏற்பட்ட கடுப்பில்தான் பெரியார் கரிநாள் என அறிவித்தார் என நினைக்கிறேன். வாய்ப்பே இல்லை. ஹைதரபாத் நவாப் தனி நாடு பிரகடனம் பண்ணி, இந்திய படைகள் அவரை போரில் தோற்கடித்தன. இதே போல் மேலும் சில ராஜ்ஜியங்களும் மிரட்டப்பட்டு வலபாய் பட்டேலால் வழிக்கு கொண்டு வரப்பட்டன. பாகிஸ்தானை சாட்டி காஸ்மீர், அதேபோல் மிரட்டி பணியவைக்கப்பட்ட சிக்கிம். மெடிராஸ் மாகாணத்தில் தனிநாடு கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நடந்திருப்பின் அன்றி அன்றைய இந்தியாவில் இது சாத்திய பட்டிராது. ஆனால் பெரியாரால் கூட மக்களை இதற்கு திரட்ட முடியவில்லை. இந்திய தேசியவாதம் அவ்வளவு வலுவாக இருந்தது, இன்னும் இருக்கிறது. இன்றைய இந்தியாவில் சாத்தியமே இல்லை.
  4. காங்கிரஸ்சுக்கு இருந்த அமோக மக்கள் ஆதரவு. *****, நேரு எல்லாரும் பிராமாண சமூகத்தவரே.
  5. அதே. 0.1% ஆங்கிலேயர் கையில் இருந்து 3% பிராமணர்கள் கைக்கு அதிகாரம் மாறிய பொறிமுறைதான் இந்திய சுதந்திரம்.
  6. நியாயமான கேள்வி. இதே போல்தான் பல்வேறு பெயர்களில் சீமானை ஆதரித்து அறிக்கை விடுபவர்களும்.
  7. இதன் பொருள் - இந்தியா வை வெள்ளைகாரரிடம் இருந்து (பிராமணிய) கொள்ளைகாரர்கள் கைப்பற்ற போகிறார்கள் என்ற சரியான எதிர்வுகூறல். இன்று வரைக்கும் தமிழர்களாகிய நமக்கு இந்திய, இலங்க சுந்தந்திர நாட்கள் கரி நாட்களாகத்தானே அமைந்து விட்டன? இதே காரணதுக்காக (பெரியார் திராவிடர் உரிமை, அம்மேத்கர் தலித் உரிமை) அம்பேத்கர் இலண்டன் வட்டமேசை மாநாடு வரை வந்து சுதந்திரத்தை கேள்வி கேட்டுள்ளார். இந்திய சுதந்திரம் பல இனவழி தேசிய இனங்களுக்கு அடிமை சாசனம். ஆகவேதான் அது ஒரு கரி நாள். இன்றும்.
  8. நம்மட ஜி @கிருபன் ஐ கேட்டால், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், புளிச்ச மாவு ஜெயமோகன் என ஒரு லிஸ்ட் போடுவார். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு எழுத்து பிடிக்கும் என நினைக்கிறேன். காலத்தையும் பொறுத்தது. முன்னர் அந்த புத்தகத்தை தூக்க கஸ்டபடும் வயதில் வரதராசனாரின் கயமை பிடித்தது. பின்னாளில் அவரின் நெஞ்சிலோர் முள்ளை படிக்க முனைந்தும் முடியவில்லை.
  9. என்ன அதிசயம்… பார் ஶ்ரீயின் இலண்டன் டிரைவர் தான் இன்னார்தான் என்று இந்த திரியில் ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் கொடுக்கிறார்…. அடுத்து தன் உறவினர் பெயரில் பார் லைசன்ஸ் இருப்பதையும் ஒத்துகொள்வார்…ஒத்து கொள்ளவைக்கப்படுவார்😎 #எடுடா ஸ்கிரீன் ஷாட்ட 🤣
  10. அவர்கள் 12 மணத்தியால கணக்குக்குள் வரவில்லை என நினைக்கிறேன்🤣.
  11. இந்த திரியை வாசிக்கும் போதே, இந்த பழைய புத்தக வாசத்தை நீங்கள் மோப்பம் பிடித்து வர எவ்வளவு நேரம் எடுக்கும் என யோசித்தேன்🤣. இதோ வந்துட்டியள்🤣 எனக்கு தெரிய (நான் வாசித்த மட்டில்) இருவர் இதற்குள் அடங்குவார்கள் என நினைக்கிறேன். 1. தோப்பில் முகம்மது மீரான் 2. செங்கை ஆழியன்
  12. ஐ பாட்டுக்கட்டம்…. அடுத்தது டூயட் போல கிடக்கு🤣 ஏதோ பண்ணுங்க🤣🤣🤣 எஸ் ஏ சி படம் மாரி ஒரு சிலுக்கு சாங் கட்டாயம் தேவை என்று சொல்லாதவரை ஓக்கேதான்.
  13. ஓம் கோஷான் பபா…ஜஸ்டின் பழுதாக்கி போட்டார் 🤣. நீங்கள் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் குழுவாதத்தை தீண்ட முடியாது நாதம். ப்ரோ, இதைத்தான் நான் 11 வருசமா எழுத…இல்லை…இல்லை என என்னுடன் திரி திரியாக மல்லு கட்டினீர்கள். இது எந்த மலை என்ற விபரம் கிடைக்குமா? அண்ணாமலை இல்லைத்தானே? தலைவர் சீமானை ஒரு பிரச்சாரகராக மட்டுமே தெரிவு செய்தார். 36 இலட்சம் வரவு மூணரை கோடி நட்டம் - இதில் இலாபமும் இல்லை பெருமையும் இல்லை.
  14. அருமையான நகரம், சென்மொரிஸ், செமார்ட் (உச்சரிப்பு தவறலாம்) எனும் அல்ப்ஸ் மலைவாசஸ்தலங்களிடையே உள்ள ஒரு போக்குவரத்து சந்தி. நகரை ஒட்டி ரைன் நதி பளிங்கு போல ஓடிகொண்டிருக்கும். இங்கே இப்படி ஒரு அநியாயம் தமிழ் பிள்ளைகளுக்கு நடந்தது என்பதும், அது மூடி மறைக்கப்பட்டது என்பதும் ஆச்சரியாமாக உள்ளது. சுவிசிலும் நியோநாஜிகள் உள்ளார்கள் என தெரியும் ஆனால் இப்படியான செயல்களை செய்யும் அளவுக்கு ஜேர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரியில்தான் இருப்பார்கள் என நினைத்தேன்.
  15. அந்த காணியின் ஓனர் - சீமானின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன். தூபியை உடைத்தே விட்டார்கள்.
  16. நியாமாய்யா இது 🤣… தலைப்பை வாசித்து விட்டு…. ஆதாரத்தோட சிங்கன் களமிறங்கீட்டான் என்றல்லவா ஓடோடி வந்தேன்🤣🤣🤣.
  17. அருச்சுனா சார் (சார் எண்டு எழுதாட்டில் கடித்து வைப்பார்), நீங்களும் தங்கமும் விலகி மயூரனுக்கு வாய்ப்பை கொடுங்கள். மேலும் நல்ல இளைஞர்களை அவர் பக்கம் திருப்பி ஒரு நிஜாமன மாற்றை உருவாக்குங்கள். அதுதான் நீங்கள் செய்ய கூடிய மிகபெரிய நன்மை.
  18. சா…இப்படி ஒரு திரி யாழில் ஓடி கனகாலம்…. டிவி டெக் எடுத்து பார்த்த அதே சிறுவன் கோஷானாக பாதி விளங்கியும், பாதி விளங்காமலும் பார்த்துகொண்டிருக்கிறேன்🤣
  19. மனதில் பட்டவை சில 1. @பாலபத்ர ஓணாண்டி கட்டாயம் தன் பழைய ஐடியை வெளிகாட்ட வேண்டியதில்லை. அதை வெளிக்காட்டி - படங்கள் தரவேற்ற பட்டது நிருபணமானாலும், படம் யாரிடம், எப்படி பெறப்பட்டது என்பதோ, “இதே போல் பலரிடம் பணம் பெறப்பட்டதாக கேள்விப்பட்டேன்” என்பதோ நிருபணமாகாது. இவற்றை ஓணாண்டி நிருபிக்க இன்னும் பலதை பொதுவெளியில் கூற வேண்டி வரும். ஆனால் ஓணாண்டிக்கு இன்னும் ஒரு கெளரவமான தெரிவு மிச்சம் இருக்கிறது. நான் சொன்னதை என்னால் ஆதாரம் காட்டி நிருபிக்க முடியாது ஆகவே அமரதாஸ் மீதான குற்றசாட்டை நான் வாபஸ் வாங்குகிறேன் என சொல்லலாம். அவர் நிலையில் நான் இருந்தால் இப்படித்தான் செய்வேன். 2. அமரதாஸ் கைவசம் இருந்த படங்களை இலங்கை அரசிடம் கையளித்து ஊரிலேயே சுக போகமாக வாழ்ந்திருக்கலாம். இப்படி வாழும் பலரை எனக்கு தெரியும். அப்படி இல்லாமல் இதை வெளிகொணர்ந்த அவர் போற்றுதலுக்குரியவரே. அவர் பணம் கேட்டாலும் கூட இலங்கை அரசின் கோரப்பிடியில் இருந்து தானும், ஆதாரங்களும் தப்பத்தான் கோரி உள்ளார். எப்படி பார்த்தாலும் அமரதாஸ் என் மனதில் இன்னும் உயர்ந்தே உள்ளார். அமரதாஸ் இது உங்கள் கண்ணில் பட்டால் - இனத்தின் சார்பாக நன்றி🙏. 3. @பாலபத்ர ஓணாண்டி க்கும் பெரிய நன்றி - மேலே நான் எழுதியவைக்கு அப்பால் - இதை வெளிகொணர நீங்கள் முயன்றுள்ளீர்கள். சொந்த பணத்தை கொடுத்து வெளிகொணர்ந்துள்ளீர்கள் (நீங்கள் சொல்வது உண்மையானால்). நன்றி🙏. பிகு ஆனால் ஒரு நரிக்கு மரண முட்டு கொடுக்கப்போய் உங்கள் மீதான நம்பிக்கையை மீள முடியாதவாறு சிதைத்து கொண்டுள்ளீர்கள்.
  20. உங்களை போல அன்றி, நான் ஆண்களுடன் ஓரம்போவதில்லை🤣
  21. @Nathamuni ஓணாண்டி, பையன் வேற டீம். நீங்கள் வேற டீம். நீங்கள் #team Sri Lanka 🤣. உங்களுடன் இன்னும் ஒருவர்தான் சேர்த்தி😎
  22. ஓணாண்டியாரின் மைன்ட் வாய்ஸ், அடேய்களா, கருத்து எழுதினாத்தானே நான் ஏறுக்குமாறா கதை சொல்லுவதை கண்டு பிடித்து எனக்கு மொக்காடு போடுவீங்க… இனி வெறும் வீடியோதான்…🤣 யாழ் சேவர் பிரண்டாலும் பரவாயில்லை. நீங்களாச்சு, நிராஜ் டேவிட் ஆச்சு🤣
  23. கறிக்கான விளக்கமும் முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு மட்டும் அல்ல, இதை போல பல கேள்விகளுக்கு பதில் தரமுடியாத…. அது என்ன….ஆ…..நிறைகுடம் நீங்கள் என்பது யாழ் அறிந்ததுதான்🤣. இனி என்ன எஸ்சாகிவிட்டு நிர்வாகத்தின் மீது பழியை போடவேண்டியதே🤣. பிகு நீங்கள் இங்கே எனக்கான பதிலில் ஜஸ்டின் அண்ணாவை இழுத்து குழுவாதம் ஏற்படாதா என ஏங்குவது புரிகிறது 🤣. வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  24. இதற்குத்தான் முன்பு உங்களிடம் ஒரு கேள்வி எழுப்பினேன். பத்துப்பாட்டு, எட்டு தொகை, பதிண்கீழ்கணக்கு….இதில் எந்த இலக்கியதில் “தமிழ்” என்ற சொல் மொழியை அன்றி இனத்தை குறிப்பதாக முதலில் வருகிறது? திராவிடம், தமிழ் என்பது எல்லாமுமே பின்னாநாளில் நாம் பயன்படுத்திய பெயர்கள். சிந்து சமவெளி நாகரிகம் என்கிறோம் அவர்கள் தம்மை அந்த பெயரால் அழைத்திருக்கமாட்டார்கள். ஆனால் அதே formula உதயநிதிக்கு பொருந்தாது🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.