Everything posted by goshan_che
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
@Justin ஒரு சின்ன அல்ல பெரிய உதவி🙏. நீங்கள் உங்கள் நிலைப்பாட்டைபெரியாரை எதிர்க்கும்/சீமானை ஆதரிக்கும் படி மாற்றிகொள்ள முடியுமா? பணய கைதிகள் பரிமாற்றம் போல - உங்களை கொடுத்து, யாழில் ஒரு 3/4 பேரை ஒவர் நைட் எனது நிலைப்பாட்டுக்கு மாற்றிகொள்ள விரும்புகிறேன் 🤣.
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
சிங்கன்… நான் எம்பி…என் காரில்தான் வருவேன் என ஒரே அடமாம்🤣. # சின்னத்தம்பி ஹைகோர்ட்டை செத்தான்
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
இருவருமே ஒரே அணியில் ஒன்றாக ஒரே அரசியல் செய்தவர்தான். சம், சும் மின் அத்தனை செயலிலும் மாவைக்கும் பங்கு, பொறுப்புகூறல் உண்டு. 2009 இல் சம்பந்தன் போனை நூத்து விட்டு குப்புறபடுத்தவர் எண்டால், மாவை போனை நூத்து விட்டு ஒருக்களித்து படுத்தவர். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் மாவை விடயத்தில் மட்டும் அனுதாபம் வருகிறது எனில் அது யாழ்பாணம்/சாதி/மதம் சார்ந்த இரெட்டை நிலை என்பதே என் கருத்து. மற்றும்படி சாவு திரியில் கிரியை செய்வது அநாகரிகமானது என்பதில் எனக்கு முழு உடன்பாடே. வயசு, மூளையில் இரத்த கசிவு - மீண்டு வந்தால் அபூர்வம் என நினைகிறேன்.
-
”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
நான் ரெடி…ஏற்பாடுகளை தொடங்குங்கோ….🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வாய்ச்சொல்லு சூனியம் என்பார்கள். நேற்று @வீரப் பையன்26 டம் கேள்வி கேட்டபோது நகைசுவையாக காளி அம்மாளை, காலிஅம்மாள் என எழுதினேன். இன்று இந்த வீடியோ கண்ணில் படுகிறது. @பாலபத்ர ஓணாண்டி @வீரப் பையன்26 அண்ணன் இப்படி காளியாத்தாவை சில்லு சில்லாக உடைத்தது அண்மைய நிகழ்வா?
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
உங்கள் நண்பர் பயம்தான் எனக்கும். நீர்வேலியான் வீடியோவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து விட்டு நான் முடிவு செய்யலாம் என உள்ளேன்🤣.
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
நம்பி டவுன் லோடு பண்ணலாமா? சீன தயாரிப்பு… பொறகு கோஷான் குளியல் வீடியோ வந்தால்?🤣
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இந்த காணொளியில் பேட்டி கொடுப்பவர்: 1. முத்துகுமார் கொலையை செய்த இரு பெரிய ரவுடிகளை சீமான், “செய் எது நடந்தாலும் நான் பாத்துகிறேன்” என வழிநடத்தினார் என்கிறார். 2. ஐஜி ஜாபர் சேட் வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கினார் என்கிறார். 3. சிபிசிஐடியில் கூட வழக்கு நகரவில்லை, தாம் முயன்று கோர்ட்டுக்கு வரவைத்தனர் என்கிறார். 4. கண்கண்ட சாட்டிசியை சாட்டை துரை, அவரின் மனைவி, மாமானார் மிரட்டி வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கினார் என்கிறார். —————- 1. இதில பலது நான் சில வருடம் முன்பு, யாழில் எழுதியது. 2. இந்தியாவில் வசிக்கும் எவரும் - இந்த கொலையை RAW செய்தது என சொல்ல மறுக்கிறார்கள், அல்லது பயப்படுகிறார்கள். 3. புலிகளால் பயிற்றபட்ட, தனி தமிழ்நாடு கொள்கையில் நின்ற, நாதக மூலம் ஒரு நிஜ தமிழ்தேசிய புரட்சியை செய்ய முனைந்த முத்துகுமாரை அகற்ற RAW முடிவெடுத்தது என்பது ஒன்றும் நம்பமுடியாததல்ல.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இந்த வீடியோவில் சொல்லப்பட்டவை 1. தொடங்கும் போது முத்துகுமார் தான் நாதக ஒருங்கிணைப்பாளர். சீமான் தற்காலிக ஒருங்கிணைப்பாளர். 2. முத்துகுமாரை சீமான் முன்பு தன் அரசியல் குரு என்றுள்ளார். 3. முத்துகுமார் கொலையில் சந்தேகம் சிதம்பரம் மீதும் சீமான் மீதும். 4. முத்துகுமாரின் மனைவியை மறுமணம் செய்து கொண்ட சாட்டை துரைமுருகன், அவர்கள் நிலத்தில், ஒரு எழுச்சி சின்னமாக இருந்த முத்துகுமார் கல்லறையை இடித்து அழித்துள்ளார். 5. நாதக கட்சி ஆபிசில் பலருக்கு படம் உண்டு, முத்துகுமாருக்கு இல்லை. 6. பேட்டியின் ஆரம்பத்தில் முத்துகுமாருக்கு புலிகள் பயிற்சியளித்தமை, வீரப்பன் தொடர்பு என்பன பேசப்படுகிறன. முத்துகுமாரின் பிண்ணனி அறிய இது உதவும். கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்ட கதைதான் நாதக. நாம் தமிழர் தலைவரே முத்து குமார்தான் அந்த கொலையில் சீமானுக்கு சம்பந்தம் இருக்கு - நேரடியாக குற்றம் சுமந்துகிறார் பேட்டி காணப்படுபவர்.
-
”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
போரின் முடிவில் தமிழருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்திருந்தால்… நோபல் பரிசும் கிடைத்திருக்கலாம். நாடும் வளம் பெற்றிருக்கும்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
👆இது சாபமோ, கோபமோ இல்லை. என்னால் இதற்கு மேல் கன்வின்ஸ் பண்ண முடியவில்லையே என்ற ஆதங்கம்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இங்கதான் டிவிஸ்டே… கட்சி ஆரம்பிக்கபட்ட போது…,, முண்ணணி ஒருங்கிணைப்பாளர் முத்து குமார். இவர் தமிழ் தேசியம் சார்ந்து கொள்கை நிலைப்பாடுகளை கட்டுப்படுத்துவார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - இவர் பொது மக்கள் மத்தியில் கட்சியை எடுத்து போவார். இவர்களின் கீழ் ஏனையோர். ஏனைய ஒருங்கிணைபாளர்களுக்கு துறைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் இரெட்டை தலைமையான சீமானுக்கும், முத்துகுமாருக்கும் துறைகள் இல்லை. தலைமை, முண்னனி என்ற அடைமொழிகள் மட்டுமே. கட்சி இந்திய தேசியத்தை எதிர்க்கும், தமிழ் தேசியத்தை அதற்கு மாற்றாக நிறுத்தும். இதுதான் கட்சியின் அடிப்படையாக இருந்தது. ———- இதன் பின் முத்துகுமார் வழிக்கு வராததால் றோ அவரை போட்டு தள்ளியது. சீமானே எல்லாமும் ஆகினார். தேர்தல் அரசியலில் ஈடுபடும் இந்திய தேசியத்தை ஏற்கும் இன்னொரு கட்சி ஆகியது நாதக. கீழே ஒரு லிங்க் கொடுக்கிறேன். தன்னோடு சேர்ந்து கட்சி ஆரம்பித்தவரை, எப்படி விலக்கி கதைக்கிறார் சீமான் என பாருங்கள். முத்துகுமார் அறிமுகம் இல்லாதவர் என்கிறார். அறிமுகம் இல்லாதவரையா கட்சியில் முண்ணனி ஒருங்கிணைப்பாளர் ஆக்கினார்? https://www.facebook.com/share/v/162ZcBRq5e/?mibextid=wwXIfr ஏன் முத்துகுமாருக்கான இடத்தை சீமான் இப்படி சிறுப்பித்து அவர் எல்லாம் சும்மா யாரோ மணி அனுப்பிய பையன் என சொல்கிறார்? வழமையா செத்தவனை வைத்து அரசியல் செய்யும் சீமான் ஏன் இவரை மட்டும் மறைக்கிறார்? இத்தனைக்கும் பிறகும் ஒரு பொய் கஞ்சா வழக்கில் ஸ்டாலின் ஏன் சீமானை தூக்கி உள்ளே போட மறுக்கிறார்? எல்லா கேள்விகளுக்கும் விடை… RAW. அடிப்படையில் றோவால் ஹாண்டில் பண்ணபடும் சீமான், ரோவின் தலைமையில் எந்த கட்சி இருக்கிறதோ அதன் சொல்படி ஆட நிர்பந்திக்கபட்டவர். இன்றைக்கு அது பிஜேபி. நாளைக்கு அது காங்கிரஸ் அல்லது மூன்றாம் அணி. பிகு @பாலபத்ர ஓணாண்டிஅண்மையில் நீங்கள் வருத்திய ஒரு சம்பவத்தை எழுதினீர்கள். அதே போல் இந்த சீமான் ஆதரவுக்காக நீங்கள் இன்னும் சில அல்லது பல வருடங்களில் வருந்தத்தான் போகிறீர்கள்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
https://www.naamtamilar.org/2011/02/நாம்-தமிழர்-கட்சியின்-மா-8/?amp=1 நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தளபதி சுப.முத்துகுமார் அவர்கள் வெட்டிகொலை – நாம் தமிழர் கட்சி இரங்கல். தலைமையகம்பிப்ரவரி 16, 2011 நாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் அவர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முத்துகுமார் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முத்துகுமாரின் மரணத்தை அடுத்து நாம் தமிழர் கட்சியின் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
இது 12 மணத்தியால கணக்கு மாரியோ அண்ணை. 🤣🤣🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அருமை அண்ணா, அருமை. சில அவதானிப்புகள். 1. சீமான் சாதி அரசியலை வெறுமனே கடந்து போவவர் மட்டும் அல்ல, அருந்ததியர் மீது நேரடியாக துவேசத்தை கக்கியவர், ஆணவகொலைகளை நியாப்படுத்தியவர், சாதி தலைவர்களான முத்துராமலிங்கம் போன்றோரை தேசிய தலைவர்கள் என போற்றுபவர், தான் உட்பட சாதி எண்ணிக்கை பார்த்துத்தான் தேர்தல் சீட் கொடுப்பவர் (ஏனைய கட்சிகளை போலவே). சாதிகளை குடிகள் என சொல்லி. குடிகள்தான் இனத்தேசியத்தின் அடிப்படை என உளறியவர். 2. நீங்கள் கூறியமாதிரி தெரிந்த நீரோடை போல இல்லை, ஆனால் இந்த விடயம் பற்றி யாழில் முன்பே பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது. 3. தமிழ்நாட்டு அரசியலின் உண்மை முகம் தெரிந்த உங்களை போன்ற ஒருவர் யாழுக்கு வந்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. யார் எப்படி குடைந்தாலும், யாழை விட்டு போய்விடாதீர்கள் 🙏.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
திருத்தம் றோ சிலீப்பர் செல் சீமான் போட்டு கொடுத்ததால், க்யூ பிராஞ்சிடம் மாட்டி - நாதகவின் முதல் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் போல் தானும் கொல்லப்படலாம் என பயந்து இந்தியாவை விட்டு ஓடிப்போனார். வழக்கே இல்லாமல் டென்மார்க்குக்கு ஓடி வந்த நாம், புலிகளுக்கு உதவினார் என க்யூ பிராஞ் தேடும் ஒருவரை எள்ளி நகையாடலாமா பையா? நீங்கள் போற்றும் கார்திக் மனோகரன் சொல்கிறார் புலிகளுக்கு கடைசிகாலத்தில் உயிராபத்தை பாராது உதவியவர் சந்தோஷ். இப்படி எமக்காக ரிஸ்க் எடுத்து, சினிமா வாழ்வை தொலைத்து, நாட்டை விட்டே ஓடிபோகும் படி ஆன ஒருவரை இப்படி திட்ட எப்படி உங்களால் முடிகிறது? நாதம், கொண்டை அப்படியே தெரியுதப்பா 🤣. வேதனம் வந்துட்டு போல.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
ஒன்றை நினைவில் வைக்க மறக்க வேண்டாம்… தலைவரை கொல்ல, மாத்தையா, தமிழக சிறையில் இருந்து தப்பிய போராளியை வைத்து றோ எப்படி வலை பின்னியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எமது போராட்டத்தை காயடிக்க அந்தளவு மினகெட்ட றோ - எந்தளவுக்கும் போகும். றோவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று - தமிழக/ஈழதமிழர் இடையே மாறா பகையை மூட்டி விடுவது. அதன் மூலம் ஈழத்தமிழரை மேலும் தனிமை படுத்தி, இந்தியாவை விட வேறு கதி இல்லை என ஆக்குவது. ஈழத்தமிழர்களை இந்தியாவை தவிர வேறு எவருடனும் நெருங்க விட கூடாது - இது இந்தியாவின் இலங்கை கொள்கையில் ஒரு முக்கிய அங்கம். எம்மை மேற்குக்கு எதிராக திருப்புவது…. எம்மை திராவிட கொள்கைக்கு எதிராக திருப்புவது…. இரெண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இதுவரை நாம் தமிழரின் முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துகுமாரை றோ கொலை செய்தபின், சீமான் உயிருக்கு பயந்து றோவின் ஏஜெண்டாக மாறினார் என நினைத்தேன். ஆனால் இப்போ 2008 க்கு முன்பே plan பண்ணி, வேல்முருகன், கெளத்தூர் மணியை ஏமாத்தி தமிழகத்தில் இருந்த புலிகள் வலையமைப்பில் RAW plant பண்ணிய சிலீப்பர் செல் ஆக சீமான் இருக்க கூடும் என யோசிக்கிறேன்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இவர் செய்தியை காவி வரும் messenger இல்லை அண்ணா - அவரே மெசேஜ் சொல்லுகிறார். உதாரணமாக மகிந்த சீமானை ஆதரித்தால்- மகிந்தவின் ரெக்கோர்ட்டையும் பற்றி கதைப்பது போலவே இது. ஆகவே அவரை சூட் பண்ணலாம். ———- அண்மையில் சந்தோஷ், அமரதாஸ், ராஜ்குமார், கார்திக், வேல்முருகன் சொல்வது இதைத்தான்👇 1. சீமான் தலைவர் போட்டோ என நாம் காண்பவை - போலியானவை 2. ஆனால் தலைவரை சீமான் சில நிமிடங்கள் சந்தித்தார் 3. இது வெறும் ஹாய், ஹவ் ஆர் யூ சந்திப்பு. இதன் போட்டோவும், வீடியோவும் சந்தோஷ் வசம் உள்ளது. 5. துப்பாக்கி பயிற்சி ஏதும் கொடுக்கபடவில்லை. அது எல்லாளன் படபிடிப்பு தளத்தில் சீமான் ஆசை பட்டு துவக்குடன் போஸ் கொடுத்து எடுத்த படம். இதன் ஜியோ லொக்கேசன் உள்ள மூலப்பிரதியிம் சந்தோசிடம் உண்டு. 4. பாலாமை கறி, கடலுணவு சாப்பிடாத சந்தோசுக்கு, சந்தோசை ஏமாற்றி ஆட்டுக்கறி என புலிகள் கொடுத்தது. அதை தன் கதை என சீமான் சொல்கிறார். இதை போல தடா சந்திரசேகரனனுக்கு நடந்ததையும் தனது என்கிறார். 5. தலைவரோ மதிவதனியோ சீமானை வீட்டுக்கு கூப்பிட்டு கையால் சாப்பாடு போட்டு, மணிக்கணக்கில் அரசியல் பேசவில்லை. (இது ஈழ போராட்டத்தை அனுபவித்தோருக்கு எப்போதோ தெரிந்த விடயம்). 6. புலிகள் சீமானை அதிகம் நம்பவில்லை( இதுவும் புலிகளை பற்றி அறிந்தோருக்கு புதிய செய்தி அல்ல). 7. விஜி அண்ணியை அருகில் வைத்து கொண்டு சாவுகளத்தில் இருந்து பேசிய சேரலாதனுடன் ஸ்கைப் பேசியதால், சேரலாதன் சீமான் தொடர்பை முறித்து கொண்டார். 7. சூசை போன் எடுத்தது சந்தோசுக்கு. அந்த முழு உரையாடல் சந்தோஷ் வசம் உள்ளது. அதில் சீமானை போலவே ஏனையோர், வைகோ, மணி யையும் சூசை குறிப்பிட்டார். 👆 இவை இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க பட்வில்லை. ஆனால் சீமான் கதைகள் போல அல்லாமல் இந்த கதையாடலில் (narrative) அதிக உள்முரண்கள் இல்லை. அத்தோடு புலிகளின் சந்தேககுணம், இயங்கும் விதத்துடனும் இது ஒத்து போகிறது.
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
சம்பந்தன் இறப்பில் யாழில் அவருக்கு சில உறுப்பினர்களே வசவுகளால் கிரியை செய்தார்கள். அதே நிலைதான மாவைக்கும் என பார்க்க ஆவலாய் உள்ளேன்.
-
சிவமோகனை இடைநிறுத்தியமைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது! – கைவிரித்தது நீதிமன்றம்
ஐயோ… இப்ப anti -சும் அங்கிள் மாருக்கு ஆசிட் குடித்தது போல இருக்குமே🤣
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இதுக்கேன் மன்னிப்பு அண்ணா.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஒருவரது முந்திய எழுத்தை வைத்து, அவர் போல எழுதுவது ஏ ஐ மூலம் சாத்தியமாகி உள்ளது. That’s what makes writing special, and AI chatbots are learning to do just that. Claude has received a new feature that can mimic your writing style by learning from your written pieces. https://www.croma.com/unboxed/claude-ai-can-now-adapt-to-your-unique-writing-style#:~:text=Claude AI can now adapt to your unique writing style&text=That's what makes writing special,learning from your written pieces. இனிமேல் யாழ் போன்ற கருத்துகளங்களில் எல்லாம் ஏ ஐ பூந்து விளையாடப்போகிறது🤣. இப்போதே ஆரம்பமாகி விட்டது. கருத்தாளரின் நம்பகதன்மையோடு, களங்களின் நம்பகதன்மையும் கேள்விகுறியாகும். ஒரு ஏஜெண்ட் காணும்…பத்து பேர் மாதிரி எழுதலாம். ஏலவே உள்ளவர் போல எழுதி குழப்பத்தையும் உண்டு பண்ணலாம்.
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு Mathivanan MaranUpdated: Tuesday, January 28, 2025, 15:20 [IST] சென்னை: ஈழத்தில் பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார்; வகை வகையான அசைவ உணவுகளை பிரபாகரன் மனைவி மதிவதினி சமைத்துக் கொடுத்தார்; தமது பாதுகாப்புக்கு மெய்ப்பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டு மேடைகளில் பேசிவருவது அத்தனையும் கட்டுக்கதை; திரிபுவாதம்- பிறருக்கு நடந்தவற்றை தனக்கு நடந்ததாக திரித்து பேசி வருகிறார்; அத்துடன் பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாட்டம் நடத்துகிறார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படக் கலைஞர் -போட்டோகிராபர் அமரதாஸ் கடுமையாக குற்றம்சாட்டி இருக்கிறார். Also Read துப்பாக்கிகள் மீது பிரியப்பட்ட சீமான் அப்போது, திரைப்பட இயக்குநராக சீமான் ஈழத்துக்கு வந்திருந்தார். 2,3 நாட்கள் எல்லாளன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கும், சீமான் வந்தார். அங்கே இருந்த நவீன ரக துப்பாக்கிகள் மீது சீமானுக்கு அலாதியான பிரியம் இருந்தது. இதனால் அவற்றை வைத்து போட்டோ எடுக்க வேண்டும் என விரும்பினார். நான் தான் அந்தப் படங்களை எடுத்தேன். அந்தப் படத்தின் ஸ்டில்போட்டோகிராபராக நான் பணியாற்றும் போட்டோக்களும் இருக்கின்றன. Coimbatore | IT Company fires 2000 employees overnight | Oneindia Tamil சூட்டிங் போட்டோ எடுத்தது நான்தான்.. பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்த போது எடுத்த படங்கள் என தமிழ்நாட்டில் சீமான் வெளியிட்டிருப்பவை அனைத்தும் என்னால் எல்லாளன் திரைப்பட படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவைதான். அந்தப் படங்களை உற்று நோக்கினால் சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தக் கூடிய தெர்மகோல் சீமானின் பின்னால் இருக்கும். அதேபோல சீமான் துப்பாக்கி ஒன்றை தமது கை இடுக்கில் வைத்திருப்பார். பொதுவாக ஆயுதங்களைக் கையாள்வதற்கு என ஒரு முறை இருக்கிறது. சீமான் பிடித்திருப்பது போல கை இடுக்கில் வைத்துக் கொண்டு எல்லாம் சுட்டுவிடவும் முடியாது. அதேபோல படப்பிடிப்பு நடந்த இடத்தில் ஒரு குண்டு கூட சுடவும் முடியாது. சில கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை ராணுவ முகாம் இருந்ததால் அப்படி பயிற்சி எடுக்கவும் முடியாது. Recommended For You திரித்து பொய் பேசும் சீமான் சீமானுக்கு பிரபாகரன் ஆயுதப் பயிற்சி தரவே இல்லை. அதற்கான சூழலும் அப்போது அங்கு இல்லை. அதேநேரத்தில் எல்லாளன் படத்துக்காக தமிழ்நாட்டில் இருந்து வந்து பல மாதங்களாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ்-க்கு இத்தகைய துப்பாக்கி சுடும் வாய்ப்பு தரப்பட்டது. அது பயிற்சி அல்ல. சந்தோஷ்க்கு ஆமைகறியும் ஒரு முறை வழங்கப்பட்டதாக அறிந்தேன். இப்படி ஒளிப்பதிவாளர் சந்தோஷுக்கு நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் தமக்கு நடந்ததாக திரித்து பொய் பேசி வருகிறார் சீமான். சீமான் மீது விடுதலைப் புலிகள் அதிருப்தி அத்துடன் பிரபாகரனுடன் சீமான் சந்தித்தது சில நிமிடங்கள்தான். அப்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் உடன் இருந்தார். அப்போது போட்டோ எடுக்கப்பட்டது உண்மை. ஆனால் அதனை சீமானிடம் தரவே கூடாது என விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியாக சொல்லிவிட்டது. ஏனெனில் சீமான், கொழும்பு வழியாக விமானத்தில் வந்திருந்தார்; மற்றொன்று சீமான் புகழ் விரும்பியாகவே இருக்கிறார் என்பதை விடுதலைப் புலிகள் அந்த சில நாட்களிலேயே உணர்ந்திருந்தனர்; இதனால் தமிழ்நாட்டுக்கு சென்ற உடன் இந்த படங்களை எல்லாம் சீமான் வெளியிடலாம்; இதனால் எல்லாளன் படப்பிடிப்புக்காக தமிழ்நாட்டில் வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணங்களால் சீமானுக்கு இந்த படங்களைத் தரவே கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர். You May Also Like பிரபாகரன் உணவு பரிமாறவே இல்லை மேலும் சீமானுக்கு பிரபாகரன் உணவு பரிமாறவும் இல்லை; பிரபாகரன் மனைவி மதிவதினி விதம் விதமாக அசைவ உணவுகளை சமைத்துப் போடவும் இல்லை. 2008-ம் ஆண்டு காலத்தில் ஈழத்தின் களச் சூழல் அப்படியானதாகவும் இல்லை. போர் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த தருணம். பிரபாகரன், சீமானை சில நிமிடங்கள்தான் சந்தித்தார்; அதன் பின்னர் வேறு சில முக்கியமான சந்திப்புகளுக்கு சென்றும்விட்டார். சீமான் சொல்வது போல ஒரு மாதமோ, 2 அல்லது 3 மாதமோ ஈழத்தில் தங்கி இருக்கவில்லை. சில நாட்களிலேயே சீமான் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஈழத்தில் தவறு செய்த சீமான் - திருப்பி அனுப்பிய புலிகள் சீமான் ஈழத்தில் இருந்த போது ஒரு தவறு செய்திருந்தார்; அத்துடன் பிரபாகரனை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டும் என நச்சரித்தும் கொண்டிருந்ததால் அவரை உடனே அங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்பதில்தான் புலிகள் உறுதியாக இருந்தனர். ஆனால் அப்போது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லாளன் படப்பிடிப்பில் கரும்புலி இளங்கோவாக பாத்திரம் ஏற்று நடித்த புகழ்மாறன் உள்ளிட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர்; இதனால் சீமான் சில நாட்கள் கழித்தே தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாடும் சீமான் அத்துடன் வீரச்சாவடைந்த புகழ்மாறனுடன் இருக்கும் படத்தை காண்பித்து அவர்தான் தமக்கு மெய்ப்பாதுகாப்பாளராக பிரபாகாரனால் நியமிக்கப்பட்டிருந்தவர் என்றெல்லாம் சீமான் கதை பேசி வருகிறார். தமிழ்நாட்டில் சீமான் பேசி வருவது அத்தனையும் கட்டுக்கதைகள்தான். தற்போது பெரியாரா? பிரபாகரனா? என சீமான் பேசுவது பிரபாகரனை முன்வைத்து நடத்தும் அரசியல் சூதாட்டம். தம்மை புலிகள் யாரும் கேட்கப் போவது இல்லை என்ற போக்கினால் திரித்து பேசிக் கொண்டிருக்கிறார். இது மோசடித்தனமானது. இந்தப் போக்கு தமிழ்த் தேசியத்தில் இருந்து அடிப்படைவாதம் நோக்கியதாக இருக்கிறது. இது ஆபத்தானது. பிரபாகரனுடன் இருப்பது பொய்யான போட்டோ பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படங்கள் அனைத்தும் போலியானவை; சித்தரிக்கப்பட்டவை. அந்தப் படங்கள் உண்மையானவை எனில் எப்போது எங்கே எடுக்கப்பட்ட என்ற பதிவுகள் அந்த படங்களில் இருக்க வேண்டும் அல்லவா? அதை சீமான் தரப்பு வெளியிட்டிருக்கலாமே? ஏன் இத்தகைய சர்ச்சை? சூட்டிங் படங்கள் என நிரூபிக்க தயார் சீமான் துப்பாக்கியுடன் நிற்கும் படங்கள் அனைத்தும் எல்லாளன் சூட்டிங் ஸ்பாட்டில்தான் எடுக்கப்பட்டன என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க நான் தயாராகவே இருக்கிறேன். அந்த படங்கள் அனைத்தும் எங்கே எப்போது எடுக்கப்பட்டன என்பது டிஜிட்டல் காமிராவில் பதிவாகி இருக்கின்றன. இவ்வாறு அமரதாஸ் தெரிவித்துள்ளார். (நன்றி: சன் நியூஸ் செய்தி) https://tamil.oneindia.com/news/chennai/eelam-photographer-amardoss-slams-ntk-seemans-political-gamble-in-the-name-of-prabhakaran-675099.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
மிக்க மகிழ்ச்சி. சந்திப்போம். பிகு உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. என்ன AI பயன்படுத்துகிறீர்கள்?