Everything posted by goshan_che
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நீங்கள் சொன்னதை நான் ஜோக் அடித்தேன் எண்டா நினைச்சீங்க. எனக்கு தெரிந்தது சுஷ்மிதா சென், ரீமா சென், றியா சென், மூன் மூன் சென் தான். நீங்கள் அமர்தியா ரேஞ். அதுதான் உங்களுக்கு கொஞ்சம் ஒத்தூதினேன்🤣. ஓமோம்…இந்த ரொம்ப எளிய சூத்திரம்தான். அதிமுக தீமை செய்தது - பார்தீர்களா திராவிட கட்சி தமிழரை வஞ்சிக்கும் விதத்தை. அதிமுக நன்மை செய்தது - அது பெயரில் மட்டும்தான் திராவிட கட்சி. பிகு சும்மா வீடியோவை பார்த்தே அண்ணன் மாரி பேச கற்றுகொண்டுள்ளீர்கள். நவீன துரோணரும் ஏகலைவனும்.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இதை இப்படியே விடக்கூடாது. விஜி அண்ணி விலகி போனாலும்…அவர் மேல் சீமான் வழக்கு போட்டு, தான் குற்றமற்றவர், அவர் சொன்னது பொய் என நிறுவ வேண்டும் என்கிறீர்களா? பிகு அண்ணனுக்கு பட்டக்ஸ்சுக்கு கீழ பாம் வைப்பது அவர் ஆட்களேதான். நீங்கள் அருணாவை ஆதரித்தபோது, சீமானை ஆதரிப்பதும் அவர்களை வெளிகொணரும் ஒரு spy ops என்பதை இப்போ நான் நம்ப தலைப்படுகிறேன்.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
https://ta.quora.com/தமிழகத்தில்-யார் தமிழகத்தில் உள்ள மொத்த அணைகள்,115. அதில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்,கட்டப்பட்டவை 90. சுதந்திரத்திற்கு பின், ஐந்தாண்டுத் திட்டங்களில் அணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. எனவே காங்., ஆட்சியில், 19 ஆண்டு களில், 25 பெரிய அணைகள் கட்டப்பட்டன. 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஐந்தாண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு, ஓராண்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் ஆட்சி செய்த, 21 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும், 36 அணைகள் கட்டப்பட்டுள்ளன. எம்ஜிஆர் , ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமைகளில், அதிமுக செய்த 32 கால ஆட்சியில், மொத்தம் 29 அணைகள் கட்டப்பட்டுள்ளன. பிகு குவோராதான் ஆனால் கூகிளில் சும்மா தேடினாலே இந்த தகவல் எல்லாம் வரும்.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நான் எங்கே ஜோக் அடித்தேன். 95% ஜோக் அடிக்கவே இல்லை.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
அப்பா…ஒரு மாரி உண்மைய உளராம பேசி முடிச்சிட்டன்🤣. சும்மா ஒரு கருத்த எழுதினா…ஏதோ அமெர்தியா சென் மாரி என்னையவே போட்டு குடையிறது🤣
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நீங்க அப்படியா நினைச்சீங்க… தம்பிக்கு எப்பவுமே விளாட்டுத்தான்… ஐயோ…ஐயா எதிர் கட்சியை பார்த்து நான் கேட்கிறேன்…. ஜேர்மனி, அமெரிக்கா, ரஸ்யாவில் கூட திராவிட மாடல் இல்லை அவை வளர்ந்வில்லையா?
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
என்ன பொசுக்குன்னு இப்பிடி சொல்லி புட்டீக…. அண்ணைமார், தம்பி எல்லாம் ஆசுபத்திரி போகாத குறை🤣… மந்திரத்தை மறந்துட்டீங்க போல… “திராவிடத்தால் வீழ்ந்தோம்” எங்கே சொல்லு… திராவிடத்தால் வீழ்ந்தோம்… சிக்குமங்கு சிக்கு மங்கு சிக்கு பப்பா… உழைத்து வாழவேண்டும், திரள்நிதியில் வாழ்ந்திடாதே… யோவ் சும்மா இருங்கையா…ஒரு அளவுக்கு மேல நானே உண்மையை உளறிடுவேனோன்னு பயமா இருக்குயா…அவ்….
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
மண்டேலாவின் முதல் தேர்தலில் கூட 95% கிடைக்கவில்லை. என்னையா கூத்து இது🤣 1967 இல் இருந்து தமிழ் நாட்டை தொடர்சியாக ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் கொள்கைதான் தற்போதைய தமிழ் நாட்டின் பொருளாதார வளர்சிக்கு காரணமாகும் என்று குறிப்பிடுவது சரி அல்ல. தமிழ் நாட்டின் வளர்சிக்கு வெள்ளைகார்கள், அதற்கு முன் களப்பிரர்கள், மூவேந்தர்கள், சங்க கால மன்னர்கள் ஆகியோர் பங்களிப்பும் முக்கியமாகும்🤣.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
இது இனி நடவாத காரியம். தமிழ்நாட்டின் விடிவெள்ளி…அப்படி…இப்படி…என புகழப்படும் காமராஜர் அடித்த ஆப்பு அது.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
ஏற்கனவே தமிழ்நாடும் ஏனைய தென்னிந்திய+மஹாராட்ஸிடிரா+குஜராத் இணைந்து வழங்கும் நிதியில்தான் ஒண்டும் உதவாத ஹிந்தி பெல்ட் மாநிலங்கள் ஓடுகிறன. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இராமர் கோவிலில் மினகெடாமல், வத வத என பெத்து போட்டு விட்டு சோம்பேறிகளாய் மக்களை இருக்க விடாமல், அளவான குடும்பம், பெண்ணுக்கு கல்வி, அதிக இட ஒதுக்கீடு என முற்போக்காக நகர்வன. ஹிந்தி பெல்ட் பிள்ளை பெற்று நாட்டுக்கு சுமை ஏத்த மட்டுமே இலாயக்கு. கூட்டாட்சியில் நிதி பங்களிப்பும் ஒரு முக்கிய அம்சம். மக்கள் தொகை ஒப்பீட்டளவில் கட்டுக்குள் இருப்பதே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மத்திய அரசுக்கு அதிக நிதி அளிக்க காரணம். எனவே இதையே காரணமாக வைத்து எம்பி சீட்டை குறைப்பது அநீதியானது. உழைப்பவனுக்கு குறைய சீட், ஓசியில் பிள்ளை பெறுபவனுக்கு கூட சீட் என்பது கூட்டாட்ச்சி தத்துவத்தை மீறும் செயல். மாநிலங்களின் வகிபாகத்தை கணக்கிடும் போது தனியே சனத்தொகையை மட்டும் கருத கூடாது. எந்த மாநிலங்களால் இந்தியா முன்னோக்கி போகிறது என்பதும் முக்கியம்.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
என்னப்பா இது… அண்ணை ஒருவர் தமிழ்நாட்டில் “வள்ர்கிறேனே மம்மி” கட்சி, 3வது(2வது?) பெரிய கட்சி, 2026 இல் தனித்து நின்று சரித்திரம் படைக்க போகும் கட்சி (ஆனால் பெட் கட்ட கேட்டேன், மொள்ள மாறி விட்டார்🤣) என்றாரே? அத்தாட்டி பெரிய கட்சி போய் இருக்க வேண்டும் அல்லவா?
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இது பொதுவான கேள்வி அந்த துப்பாக்கிதாரி கேஸ் என்னவாயிற்று? ஒருவர் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்தால் - அதை காட்டி பொலிசாரோடு முரண்பட்டிருந்தால் - ஏன் வழக்கு போடவில்லை? இது மிக கடுமையான குற்றம். மாறாக… அவர் அனுமதியோடு துப்பாக்கி வைத்திருப்பின், அதை மீள ஒப்படைத்து…அதை அராஜக திமுக ஆதரவு பொலிசின் தோல்வி என நாதக கொண்டாடி இருக்க வேண்டும். இரெண்டும் இல்லை… கேசை அமுக்கி விட்டார்களா? திமுக, சீமான், பாஜக எல்லோரும் இந்திய ஒருமைப்பாடு, தமிழ் தேசியத்தை சிதைப்பது என வரும் போது ஒரே அணிதான்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இப்படி ஒரு சதி கட்சிக்கு எதிராக நடப்பது தெரிந்தும் ஏன் மெளனம் காக்கிறார்? உடனடியாக அப்படி ஒரு விங் எமது கட்சியில் இல்லை - இது பொய் என அல்லவா அறிவிக்க வேண்டும். அப்படி ஒரு விங் இல்லை என்பதை நான் ஏற்கிரேன். ஆனால் அந்த வீடியோவை வெளியிட்டோர் நாதக, சீமானை சுற்றி உள்ளோர்தான். துப்பாக்கிதாரி பிடிபட்டதும், அவர் யார் என்ற உண்மையை மறைக்க இட்டு கட்டபட்ட கதை இந்த ex-Indian Army Wing. இதை நாம்தான் பேசுவோம் - திமுக உட்பட எந்த இந்திய கட்சியும் பேசாது -காரணம் இது இந்திய ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு சம்பந்தபட்ட விடயம். பிகு இந்த வீடியோவை வெளியிட்டவர்களும், பரப்பியவர்களும் நாதகவினரே.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
சீமான் மத்திய அரசு செய்வதை எல்லாம் எதிர்பதாக வாயால் வடை சுடுவார்…. ஆனால் செயல் என்று வந்தால் பாஜக அதன் கூட்டணி கட்சிகளோடுதான் அவர் நிற்பார். உரக்க கத்தும் - கள்ள மெளனி அவர். மேலே புறக்கணித்த கட்சிகள் எல்லாம் பாஜக சார்பு நிலை எடுப்பன, அதுதான் குரூப்பில டூப்பு என்றேன். இது தமிழக நலன் சார்ந்த விடயம், பாஜக கூட்டணியில் ராஜ்யசபா சீட் எடுத்த பாமக, திமுகவை மிக கடுமையாக சாடும் அதிமுக, தவெக கூட இதில் பங்கெடுத்துள்ளன. நாதக கூட பங்கெடுத்து தம் கருத்தை சொல்லி விட்டு, திமுக நாடகம் அடுகிறது என்ற கருத்தையும் சொல்லி விட்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
இன்று, மத்திய பிஜேபி அரசால் தமிழ்நாட்டின் மக்களவை பிரதிநிதிதுவம் குறைக்கபடக்கூடாது என திமுக, அதிமுக, பாமக, விசிக என எதிரும் புதுருமான சகல கட்சிகளும் ஒரே அணியில் திரண்ட சமயம்👇. யார் ஆப்செண்ட் என மட்டும் கேட்க்ககூடாது 🤣. அப்படி கேட்டால் நீங்கள் வான்கோழி🤣 முதல்வர் ஸ்டாலினுக்கு ஃபுல் சப்போர்ட்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்த தலைவர்கள்! Vignesh SelvarajUpdated: Wednesday, March 5, 2025, 14:27 [IST] மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்தது. இப்படிச் செய்தால், மாநிலத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளது எனவும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மாநில உரிமையை காக்க அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 58 கட்சிகள் மட்டுமே பங்கேற்றனர். பாஜக, புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி, நாதக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகள் பங்கேற்கவில்லை. Indian Stock Market | Trump போட்ட சொடக்கு! ரத்தக்களரியாகும் Indian Stock Market தலைவர்கள் கருத்து இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கூறிய முக்கிய கருத்துகள் பின்வருமாறு: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானத்திற்கு அ.தி.மு.க முழு ஆதரவு அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2% என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதியின் சராசரி மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இருக்காது. - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொள்கை முரண்களை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக கூடியிருக்கிறோம். கலந்துகொண்டுள்ள கட்சிகளுக்கு பாராட்டுகள். இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள். ஜனநாயகம், கூட்டாட்சி இரண்டும் நம் இரண்டு கண்கள். இவை தேசிய அளவில் நிலைபெற்று இருக்க தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கையே போதுமானது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு முயற்சி தேவையற்றது. தேர்தல் வரும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கான உரிய நிதியை வழங்காதது, மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவது இதையெல்லாம் பார்த்தால் எதேச்சதிகார போக்குதான் தெரிகிறது. - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தமிழ்நாடு தொகுதி வரையறைக்கு எதிராக இல்லை; தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிப்படையாமல் மறுவரையறையை நேர்மையாக, வெளிப்படையாகச் செய்ய வேண்டும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொகுதி மறுசீரமைப்பில் தலித் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக்கூடாது. ஏற்கனவே சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் சீரமைப்பு நடந்துள்ளது. Also Read - விசிக தலைவர் திருமாவளவன். தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் அனைத்து தென் மாநில முதல்வர்களையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும். ஒருமித்த கருத்தை உருவாக்கி ஒரு கூட்டமைப்பாக சென்று நாம் வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது, அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு உறுதியான தீர்வு கிடைக்கும். - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் "தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். இது தேவையற்றது. தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையே தொடர வேண்டும்." - தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் "தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பான கூட்டத்தை கூட்டியுள்ளது. மாநில அரசின் தீர்மானத்தை தேமுதிக முழுமையாக ஆதரிக்கிறது" - தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சி மாநாட்டை முதலமைச்சர் நடத்த வேண்டும். ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் - தமிமுன் அன்சாரி "தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு மக்களை அடக்க நினைத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கும். - தமமுக நிறுவனர் ஜான் பாண்டியன் "தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முறையாக திமுக தலைமையிலான அரசு குரல் கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர்." - கொங்கு இளைஞர் கட்சி தலைவர் உ.தனியரசு "நிதானமும் தெளிவும் கொண்ட முதலமைச்சர் அவர்களால் மட்டும்தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். எனவே நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எங்கள் ஆதரவு உண்டு." - ஸ்ரீதர் வாண்டையார் https://tamil.oneindia.com/news/chennai/all-party-meeting-led-by-cm-stalin-insists-on-retaining-tamil-nadu-s-parliamentary-representation-685157.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards 👆குரூப்பில…டூப்பு🤣
-
ராணுவ ரகசியம்
தகவல்களுக்கு நன்றி. மிக சிறந்த வழி ஒரு ஆட்டோவை பிடித்து போவதுதான் 🤣. எனது பயண கட்டுரையில் எழுதி உள்ளேன் 500 மீட்டருக்கு கூட ஆட்டோ பிடித்து அவமானப்பட்டுள்ளேன். எந்த அவமானமும் ஓக்கே, ரேபீஸ் தொற்றோடு ஒப்பிடுகையில். #வீரம் அறவே கூடாது. ஒரு கேள்வி கரடியை கண்டால் எழும்பி நிற்க வேண்டும், நம் கைகளை உயர்த்தி நம்மை பெரிதாக காட்ட வேணும் என எங்கோ வாசித்தேன். அதேபோல் நேற்று ஒரு வனக்காவலர் புலி நிற்கும் மனிதனை தாக்குவது குறைவு, உட்கார்ந்த நிலையில்தான் தாக்கும் என்ற ஒர் வீடியோவும் பார்த்தேன். இதே “பெருபிக்கும் டெக்னிக்” நாயோடு வேலை செய்யாதா? இல்லை எனில் ஏன்?
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
ஹிட்லர் போல் இழப்பதற்கு எதுவும் இல்லை சும்முக்கு இப்போ . அது அல்லது இது. எதுவும் ஓக்கே. சிறிக்கு அதுவும் போய் இதுவும் போககூடும். காலம் விசித்திரமானது. அரசியல் அதை விட விசித்திரமானது. நேற்று வெற்றி போல தெரிந்தது இன்று தோல்வியாகும். நேற்று தோல்வி போல் தெரிந்தது இன்று வெற்றியாகும்.
-
Fight Star Championship போட்டியில் வெற்றியீட்டிய ஈழத்தமிழர்.
வாழ்த்துக்கள். என்ன விளையாட்டாம்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் சொன்ன ஆண்டை யும் பின் குறிப்பையும் கவனித்தீர்களா? (Wink, wink).
-
ராணுவ ரகசியம்
எங்கள் பகுதிக்கு சுழற்சியில் வந்துள்ளார்கள். அப்போ நான் ஸ்கொலர்சிப் காலம். மெட்டிராஸ் ரெஜிமெண்ட் இருக்கும் நாட்களில் எப்போதும்…கோவில்…பட்டம் விடும் இடம்…கிரிகெட் விளையாடும் இடத்தில் என் வயது பையன்களுடன் பேச்சு கொடுத்தபடி இருப்பார்கள். அவர்கள் கேள்விகள் அநேகம் - புலனாய்வு தகவல் திரட்டல் என்பது பின்னாளில் உறைத்த விடயம். அதே போல் இன்னொரு விடயம் - பெண்கள் பாலியல் வன்கொடுமை வெளியே தெரிந்த அளவுக்கு கூட ஆண் சிறார்கள் மீது இவர்கள் செய்தது வெளி வரவில்லை. கொழும்பிலும், இந்தியாவிலும், இலண்டனிலும் சில கதைகளை கேட்டபோது - நான் தெய்வாதீனமாக தப்பி கொண்டேன் என்பதும், படித்தவராக இருந்தும் என் பெற்றார் எவ்வளவு அப்பிராணிகளா இருந்துள்ளனர் என்பதும் உறைத்தது. இராணுவம், இராணுவம்தான். ஆனால் அதிலும் கேடு கெட்டது இந்திய இராணுவம்.
-
ராணுவ ரகசியம்
நீங்கள் யாழில் நிலைப்பீர்கள் என்ற நம்பிக்கை துளிர்கிறது. அந்த மணம் (வாசமா கடவுளே) வருவது - சப்பாத்தியில் சப்பாத்து பொலிஷில் உடுப்பு தோய்க்கும் சவர்காரத்தில் குளிக்கும் சவர்காரத்தில் கடலை என்ணையில் பாமாயிலில் தலைக்கு வைக்கும் எண்ணையில்… என பல ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன🤣. அவர்கள் ஓடும் வாகனத்தின் புகையில் கூட இது இருப்பதையும், அவதானித்துள்ளேன். ஆனால் ஒரு தரம் சென்னை-பம்பாய் ரயில் பயணத்தில் ஒரு கூட்டம் இந்திய ஆமிகாரருடன் பயணித்தேன். மணம் இல்லை. இலங்கையில் தம் பிரசன்னத்தை அறிய, இரவு வேளைகளில், இதர இடங்களில், ஏதோ ஒரு மணத்தை கலந்தார்களோ? நாய்கள் உச்சா போவது போல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அரையிறுதிக்கு போகும் 4 அணிகளையும் சரியாக கணித்தும். ஓடர் மாறியதால் எனக்கு அரையிறுதியில் எந்த புள்ளிகளும் இல்லை. ஆனால் யாரும் 1,2 அணிகளை சரியான ஓடரில் கணித்தால் அவர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். இதைதான் விதி விளையாடியது என்பார்கள் போலும் 🤣. எப்போதும் தமிழன் இப்போது வெல்லலாம்….ஆனால் 2026 இல் புலவர்தான் ஆட்சி அமைப்பார். பிகு T20 WC 2026 🤣
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
உண்மை.
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
இந்த கோணத்தில்தான் சீமானின் அரசியல் எதிரிகள் இதை அணுகுவார்கள். நீங்கள் சொல்வது போது இது சீமான் வாழ்வில் ஒரு தீராத வடுவாகவே இருக்கும். சீமான் குற்றவாளி, குற்றமற்றவர் என தீர்ப்பு வருவதை விட, இப்படி முடிவதே சீமானின் எதிர்களுக்கு மிகவும் சாதமகானது. இதை வைத்து வாழ்நாள் பூராவும் சீமானை வெளுப்பார்கள். நானும் எந்த நிலைக்கும் இறங்கி சீமானை வெளுக்க தயார்தான். ஆனால் இது மிக அநீதியானது. பிகு விஜி அண்ணி உயிருக்கு ஆபத்து ஏதும் வந்து விடக்கூடாது என்பதே சீமானின் இப்போதைய பெருங்கவலையாக இருக்கும். திமுக காரனே போட்டு தள்ள கூடும். அப்படி ஏதும் நடந்தால் சீமானின் அரசியல் வாழ்வுக்கு சங்குதான்.
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ Mani Singh SUpdated: Tuesday, March 4, 2025, 14:24 [IST] இனி எந்த கம்ப்ளைண்டும் கொடுக்க மாட்டேன்.. கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் எந்த ஆக்ஷனும் யாரும் எடுக்கப்போவதில்லை. இதனால் எந்த போராட்டமோ.. எந்த வித கம்ப்ளைண்டோ கொடுக்கப்போவதில்லை.. இது தான் என் கடைசி வீடியோ.. எனக்கு நியாயம் கிடைக்காது.. எனக்கு நியாயம் கிடைக்கவும் விடமாட்டாங்க என்று பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகை கொடுத்த புகாரின் பேரில் சீமானுக்கு எதிராக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காண அறிவுறுத்திய நீதிபதிகள், மேலும் இது தொடர்பாக புகார்தாரரும், தமிழ்நாடு அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். புது வீடியோ வெளியிட்ட நடிகை இதற்கிடையே இது தான் என் கடைசி வீடியோ என்றும், எனக்கு நியாயம் கிடைக்காது.. கிடைக்கவும் விடமாட்டாங்க.. இதை தாண்டி இனி எந்த வித போராட்டமும் நான் பண்ண மாட்டேன்.. இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்று நடிகை புது வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:- நேற்று உச்ச நீதிமன்றத்தில் என்னாச்சு என்பதை மக்களுக்கு சொல்வதற்கு விருப்பப்பட்டேன். ஏனென்றால் நேற்று வந்த தீர்ப்பை வைத்து, செட்டில்மெண்ட் என்று சொல்லி எல்லாரும் எழுத ஆரம்பித்துவிடுவார்கள். நடிகைக்கு இரவோடு இரவாக சீமான் ரூ.10 கோடி செட்டில்மண்ட் பண்ணிட்டாரு என்று.. ஈழத்தமிழர்களோடு கஷ்டப்பட்ட பணத்தை எல்லாம், அவளுக்கு தான் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்று அபாண்டமாக என் மீது பழியை போட்டுவிடுவார்கள். அதனால் நான் இப்போது இதற்கு ஒரு தெளிவினை சொல்லிவிடுகிறேன். என் தரப்பில் யாருமே ஆஜர் ஆகவில்லை சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்ஐஆர் தள்ளுபடி செய்ய சொல்லி வழக்கு தொடர்ந்திருந்தபோது, என் சார்பில் ஒரு வழக்கறிஞர் வாதாடினார். அவர் என் தரப்பு பாதிப்புகளை எடுத்து சொல்லி, அதற்கு பிறகு தான் நீதிபதி உத்தரவு கொடுத்தார். நேற்று உச்சநீதிமன்றத்தில் சீமான் ஒரு வழக்கை கொடுத்திருந்தார் இல்லையா.. அந்த வழக்கில் என் சார்பாக யார் ஆஜரானார்கள். என் சார்பாக யாராவது சென்று, இந்த பெண் இந்த மாதிரி பாதிக்கப்பட்டிருக்கு. சும்மா சும்மா எல்லாம் வழக்கு போடல.. ரொம்ப துன்பப்படுத்தியிருக்கிறார்கள். அந்த பெண் சாகும் அளவுக்கு போயிருக்கிறார்.. நேற்று வரைக்கு அந்த பெண்ணை பாலியல் தொழிலாளி என்று தான் சொல்கிறார்கள் என்று என் தரப்பில் யாராவது சொல்லியிருக்க வேண்டும் அல்லவா.. ஆனால் யாருமே சொல்லவில்லை.. இதனால் சீமான் சொன்ன கோரிக்கையை வைத்து அதனை ஏற்று கோர்டில் ஜட்ஜ்மெண்ட் கொடுத்து இருக்கிறாங்க.. Also Read நீதியும் கிடைக்காது.. நியாயமும் கிடைக்காது இப்போது நான் என்ன கேட்கிறேன் என்றால், நான் ஏதோ சீமானிடம் பேசிவிட்டால், பார்த்தீங்களா காசுக்காக பண்றா.. காசுக்காக பண்றா.. என்று சொல்லி எல்லாரும் கத்துறீங்களே.. நேற்று ஏன் என் சார்பாக யாருமே போயி உச்ச நீதிமன்றத்தில் போராடவில்லை. இந்த கேள்வி கேட்கும் போது, நான் எல்லாருக்கும் என்ன புரிய வைக்கின்றேன் என்றால், முந்தாநாள் நான் கதறி அழுதேன்ல.. அது ஏன் என்று தெரியுமா.. எனக்கு எந்த நீதியும் கிடைக்காது.. எந்த நியாயமும் கிடைக்காது இந்த வழக்கில்.. கிடைக்கவும் விடமாட்டாங்க.. இத புரிஞ்சிக்கிட்டேன்.. சரியா.. இதை தாண்டி இனி எந்த வித போராட்டமும் நான் பண்ண மாட்டேன். சீமானிடம் போய் யாரும், இந்த பெண் ரொம்ப கஷ்டப்படுது.. இந்த பெண்ணின் சாபத்தை கட்டிக்காத.. என்று சொல்லமாட்டாங்க.. எல்லாரும் அவள எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுத்து.. அசிங்கப்படுத்து, கஷ்டப்படுத்து என்ற ரூட்டில் தான் எடுத்து செல்வதால், அந்த அசிங்கத்துக்குல்ல இறங்கி நான் போராட வேண்டும் என்று அவசியம் எனக்கு கிடையாது. Recommended For You இனி எந்த கம்ப்ளைண்டும் கொடுக்க மாட்டேன் இதுவரைக்கு எனக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.. நடிகை இப்போது கூட ஏமாற்றப்பட்டுவிட்டார் என்று மக்கள் நன்கு புரிந்துகொண்டு இருப்பாங்க.. எல்லாரும் புரிஞ்சுக்குவாங்க.. இனி எந்த கம்ப்ளைண்டும் கொடுக்க மாட்டேன் என்று நான் சொல்லிவிட்டேன். கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் எந்த ஆக்ஷனும் யாரும் எடுக்கப்போவதில்லை. இதனால் எந்த போராட்டமோ.. எந்த வித கம்ப்ளைண்டோ கொடுக்கப்போவதில்லை.. இது தான் என் கடைசி வீடியோ.. எனக்கு நியாயம் கிடைக்காது.. எனக்கு நியாயம் கிடைக்கவும் விடமாட்டாங்க.. இவ்வளவு தான்.. இதுதான் என்னுடைய இரண்டு வார்த்தை.. இது தான் என் கடைசி வீடியோ.. இவ்வாறு அந்த நடிகை கூறினார். https://tamil.oneindia.com/photos/oscar-win-anora-movie-tamil-review-oi122188.html?ref_source=OI-TA-Home-Page&ref_medium=Display&ref_campaign=News-Cards#photos-7 வாழ்த்துக்கள் சீமான்…. இரெண்டு மாதம் டைம் கொடுத்தது சுப்ரீம் “மாமா” கோர்ட். நீங்கள் 24 மணிக்குள் சாட்சியை பின்வாங்க வைத்து விட்டீர்கள். இப்படி விஜி அண்ணி பின்வாங்க வைக்கப்படுவது இத்தோடு 3ம் முறை. தமிழ்நாடு அரசு பேசாமால் வழக்கை முடிச்சு வைத்து விடலாம். சுப்ரீம் கோர்ட்டை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது.