Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ஹாஹா ....எதுவும் இல்லாதவர்கள் தான் எல்லாம் இருப்பதாக பாவ்லா காட்டி, மக்களை திசை திருப்புவது. மக்கள் தான் வாக்களிப்பது, இவர்கள் மக்களை கேட்டு அறிக்கை விடுவதுமில்லை, மக்கள் பேரம் பேசச்சொல்லி இவர்களை கேட்பதுமில்லை. இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் காலம் கடந்துவிட்டது, இவர்கள் தமக்காக ஒன்று சேராதவரை.
  2. யாருக்கெதிராக? இவர்களுக்கு காவலாக, காரணமில்லாமல் கிறிஸ்தவர்களை குறி வைத்து மறைந்து காத்திருந்திருப்பார். ஆமா AK 47 ஐ எதனால் துடைத்து வைத்திருந்திருப்பார்?
  3. பாவம் பலியாகப்போகும் மக்களும் அவர்கள் வாக்குகளும். தமிழ்த்தேசியம் பேசி வாக்கு சேர்ப்பு, செய்வது சிங்களத்துக்கு சேவை. எல்லாவற்றையும் இழந்து உயிரை துச்சமென நினைத்து ஒருவருக்கு பின்னால் லட்சியத்தோடு திரண்ட மக்கள், அவரின் இழப்புக்கு பின்னால் என்ன செய்வதென தெரியாத மக்களுக்கு ஒரு குள்ள நரியை தலைவனாக காண்பித்து ஒரேயடியாக ஊழல், அதிகார துஷ்பிரயோகம், சமூக சீர்கேடுகள் தாராளமாக விதைக்கப்பட்டுவிட்டன. வாழ்ந்து வீழ்ந்த ஒரு இனம், இலகுவாக எதிரியின் இலக்கில் மாட்டப்படுவது நிதர்சனம். இந்த இலக்கில், பலர் வேறுவழியில்லாமல் நிகழ்காலத்தில் சிக்குகின்றனர், சிலர் வேறு வேறு வழியில்லாமல் நடித்திருக்கின்றனர் கடந்த காலங்களில் என்பதே யதார்த்தம்.
  4. ம்..... பெட்டிகளோடு காணாமற் போகப்போகிறார். கவனம்! பந்தோபஸ்த்தை அதிகரியுங்கள். மக்களைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாதவர், அவர்களின் வாக்கை வைத்து பேரம் பேசித்திரிகிறார்.
  5. என்னடா? எதிர்ப்பு, மாற்று திட்டம், ஏட்டா போட்டியா கிளம்பலையே, திருந்தி விட்டார்களோ என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன்! அந்தா... வந்து விட்டார்கள்! நாங்கள் தேர்தலை பகிஷ்கரித்தால்; கள்ள வாக்கு போட சந்தர்ப்பம் அளிக்கிறோம். அல்லது அப்படி நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் ஏதும் உண்டா இவரிடம்? முதலில் வாக்குப்போடும் மக்களுக்காக ஒரே நேர்கோட்டில் இவர்களை பயணிக்க பயிற்சி அளியுங்கள் மக்களே! மக்களை வெறும் மந்தைக்கூட்டங்களாக அலைக்கழிக்கிறார்கள்.
  6. இதுதான் இவர்களின் இப்போதைய பணி! தங்கள் எஜமானன் காலில் தமிழரை விழ வைத்து வாக்கு அள்ளும் தேர்தல் தந்திரம். புலிகளை விட்டு எடுத்த அடுத்த தேர்தல் பிரச்சாரம். முன்பு, பாராளுமன்றத்தேர்தலின்போது மட்டக்களப்பில் தூஷண பிக்கர் வந்து இறங்கிய காணொளியை தேடிப்பிடித்து பாருங்கள் விளங்கும். பயமுறுத்தி அடிபணிய வைப்பது. முன்பு இராணுவத்தை வைத்து செய்ததை இப்போ, பிக்குகள்வழியாக செய்கின்றனர். அன்று பயங்கரவாதம் இன்று தொல்பொருள். நாளை யாரோ, காரணம் என்னவோ யாரறிவார்? நானறியேன். தமிழருக்கு எங்கே அடித்தால் வலிக்கும், எதை எடுத்தால் இரண்டுபடும் சமூகம் என்று நன்றாக தெரிந்து, தெரிவித்து வைத்து செய்கிறார்கள்.
  7. ம்.....இவர்கள் நிற்பதைப்பாத்தா, களத்தில் குதிக்க துடிக்கும் மல்யுத்த வீரர்களைப்போல் தெரிகிறது. சுமந்துவின் சிரிப்பை பாத்தா, ஏமாற்ற நான் ரெடி, ஏமாற நீங்கள் ரெடியா என கேட்பதுபோல் உள்ளது. ரென்சன் பார்ட்டிகள் ரென்சன் ஆக வேண்டாம், நேற்றுதான் அறிக்கை விட்டார்.... தானும் ரணிலும் தனிநபர் பிரேணை பற்றி பேசியதாகவும் தமிழர்பிரச்சனைகளை தேர்தலுக்குப்பின் தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார்என்றார். அவரின் உறுதிமொழிக்கு என்ன நடந்தது? அவரோ; தான் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று கையை விரித்த கையோடு இவரின் இல்லத்தில் நாமல் சந்திப்பு. இது திடீர் சந்திப்பா அல்லது பேசி வைத்த சந்திப்பா? ஐயா இப்ப பெரிய பிஸி, ஆட்களை தனிமையில் சந்திப்புகளை நடத்துவதில். இவர்களின் பதிலால் விரக்தி, வேதனையுற்ற வேதாளம் மீண்டும் நாளைக்கே அமெரிக்க தூதுவரை இரகசியமாய் சந்திக்க செல்லுமாம்? தமிழர் பிரச்சனை தீர்வில் எல்லா சிங்கள கட்சிகளுமே ஒரே முடிவில் தான் இருக்கின்றன என்பது சுமந்திரனுக்கு தெரியாததேனோ? அப்படி ஒரு மாற்றம் இருந்திருந்தால் இத்தனை அழிவுகளுக்கு பின்னும் மஹிந்தா தருவேன் என்று சர்வதேசத்து அளித்த உறுதி மொழியை தூக்கி கடாசியது ஏன்? பாவம் சுமந்திரன்! ஒரு தடவை, இது நடந்தேறா விட்டால் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்றாரே, அது என்ன> யாராவது நினைவிருந்தால் அறியத்தாருங்களேன்!
  8. தானும் பங்காளியாக மற்றவருக்கு செய்யும்போது ரசிப்பு, இப்போது தனக்கு வந்ததால் படிப்பினை. "செயின் பிற்பகல் விளையும்." "முற்பகல் செயின் பிற்பகல் விளையும்."
  9. இவர் குட்டையை கலக்குகிறார், மீன் அள்ளலாமெனும் கனவில். ஆனா புத்திசாலிகளுக்கு தெரியும், தாம் யார் தயவால் (வாக்கால்) பதவியை ஏற்றோம், அவர்களால் ஏன் கைவிடப்பட்டோம் எதனால் பதவியை இழந்தோம். ஆகவே அவரும் அவ்வாறே அழியட்டும் என வாயை கொடுக்காமல் காத்திருப்பார்கள். இருந்தாலும் புலிகளை வைத்து அரசியல் செய்யும் கனவோடு காத்திருப்பவர்கள் ஏதாவது சொல்லக்கூடும். போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து ராஜ பக்ஸக்களே வெற்றியின் கதாநாயகர்களாக மேடைகளில் வீற்றிருக்கிறார்கள். வெற்றி என்று அறிவித்த அ ந்த தருணத்தை விட இவருக்கு எங்கேயும் இடமில்லை. அந்த வெற்றியே இவருக்கு சிறையை பரிசாக அளித்தது. அதை கூட மறந்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை, இன்னும் அதே மமதையில் பேசுகிறார். இவர் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? இவர் வெற்றி விழா மேடைகளில் தோன்றுவார் என்பதையே இதன்மூலம் கூற வருகிறார். ஊதிப்பெருத்த ஊழல் பெருகுமே தவிர குறையாது இவர் வந்தா. ஒருவேளை மஹிந்தா, கோத்தா சிறை செல்ல நேரிடலாம். இவர் வர சாத்தியமே இல்லை.
  10. இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், நீதி கிடைப்பதைவிட வைத்தியர் அர்ஜுனாவுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்து அவரை இந்த களத்தில் இருந்து அகற்றி விட்டால், தாங்கள் தப்பித்துக்கொள்ளலாம் என சந்திப்புகளை நடத்துவோரும் முறைப்பாடளித்து அவர் குரல்வளையை நசுக்க துடிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே அதிகம். மக்களைப்பற்றியோ அவர்கள் தேவைகள் கவலைகள் இழப்புகள் பற்றியோ சிந்திப்பவர் எவருமில்லை, சிந்திப்பவர் யாரும் பேசக்கூடாது. இத்தனை அழுத்தங்களுக்கும் மத்தியில் முயன்று சேவையாற்றும் நல்ல வைத்தியர்களுக்கு எனது வாழ்த்துக்குள். என்ன செய்வது? ஒரு முசுறு கடிக்க கூண்டோடு அழிப்பது இயற்கையாகி விட்டது. அதனால் உங்களைப்பற்றி யாரும் கதைக்கப்போவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்த அசமந்தம் இன்று நேற்றல்ல புலிகளின் காலத்திலும் அவர்களுக்கு தெரியாமல் தெரிவிக்கப்படாமல் இருந்தது ஒரே இரவில் இரண்டு தாய்மார் அதுவும் பலகாலம் தவமிருந்து இனிமேல் கருத்தரிக்க சாத்தியமில்லை எனும் தருவாயில் நடந்த சோகம். அங்கே இருந்த பொறுப்பான தாதி வைத்தியரின் அறிக்கையை சரியாக வாசிக்காமல் அந்த தாயையும் வருத்தி நடந்த துன்பியல். ஆனா அதன் பின்னும் அந்த தாதி அவர்களின் வலியை புரிந்து கொள்ளாமல் வைத்திய சாலை ஊழியர்களுக்கு பணம் கொடுத்து உங்கள் இறந்த குழந்தையை புதைத்து விடுங்கள் என்று அவர்கள் மனதையும் கொன்றார். சம்பந்தப்பட்டவர்கள் ஏழைகள், இடம் பெயர்ந்த நிலை, கையறுநிலையில், எத்தனையோ கனவு ஆசையோடு வந்தவர்கள் மௌனமாக கண்ணீரோடுவைத்தியசாலையை விட்டு வெறுங்கையோடு கிளம்பினார்கள். "மக்கள் பணியே மகேசன் பணியாகும்."
  11. ம்... உப்பிடி பெருமை பேசிப்பேசியே நாட்டை சுரண்டி குட்டிச்சுவராக்கி இப்போ அரசியலையும் இழந்து புலம்பித் திரிகிறார்கள். இவருக்கும் அவர்களுக்குமிடையில் நடந்த போட்டியில் எங்கள் குருட்டு வழிகாட்டிகள் காட்டிய வழியில் இவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள். இப்போ; அவர்களின் ஆயுதத்தை கையில் எடுத்து, தானே அழியப்போகிறார். இவரை அப்பவே சிங்களமக்கள் மத்தியில் செல்லாக்காசாக்கி விட்டார்கள், கூட இருந்தவர்களே கைவிட்டு ஓடினார்கள். மனிசன் இன்னும் அதை வைத்து வென்று விடலாமென நினைக்கிறார். தலைப்புண்ணுக்கு காலைகாட்டுகிறார். மக்கள் புலிகளை மறந்து வயிற்றைப்பற்றி, அடுத்த வேளை பற்றி யோசிக்கிறார்கள். இவர் இன்னும் புலிக்கனவில் இருந்து மீளவில்லை.
  12. நாட்டை அழிக்க ஒரு நரியை தெரிந்தெடுத்து அதன் கையில் அதிகாரத்தை கொடுத்துவிட்டால் போதும், பல நரிகளுக்கு கொண்டாட்டந்தான் இனி தங்கள் காட்டில் தான் மழை என்று. அந்த நரியை அதிகாரத்திற்கு கொண்டுவர பல நரிகள் முயற்சிக்கின்றன.
  13. அப்போ; சுமந்திரன் புலம்பித்திரிவது அவரது புலம்பலா ? பிரச்சனைக்கான தீர்வு நல்லாட்சி காலத்தில் வரைந்தாயிற்று, நடைமுறைப்படுத்துவதுதான் பாக்கி என்றார். இப்போ; வேறொன்று கூறுகிறார். ஒருவேளை கனவு கண்டாரோ?
  14. அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பராமரிக்க முடியவில்லை, சிகிச்சையளிக்க முடியவில்லை இதற்குள் இவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தாராம் வைத்தியர் அர்ஜுனா எனும் முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர்கள் கைத்தொலைபேசியில் விளையாடினார்களா உரையாடினார்களா என்பதை அர்ஜுனா கண்டிருப்பார் என பயந்தனரோ தெரியவில்லை. இருக்க, மகப்பேற்று விடுதிக்கு வைத்தியர் அர்ஜுனா செல்லும்போது காணொளி எடுப்போரை வெளியே நிற்கும்படியும் யாரையும் காணொளி எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி விட்டே அவர் உட்ச்சென்றார். அப்படியிருக்கும்போது தங்கள் கடமைக்கு இடையூறு விளைவித்தார், காணொளி எடுத்தார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்திருந்தால்; அந்தப்பெண் இன்று உயிரோடு இருந்திருப்பார் அர்ஜுனாவும் இரவோடிரவாக மன்னாருக்கு வந்து தடுப்புக்காவலில் இருந்திருக்க வந்திராது. வைத்தியர் அர்ஜுனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த மோசடிகளை வெளிக்கொணர்ந்த போது தங்களால் பேச முடியாமல் தவித்த மக்கள் தங்களுக்காக ஒருவர் பேசுகிறார் என அவரோடு அணி திரண்டு நின்றார்கள். அதனால் தங்கள் அரசியல் வாழ்வுக்கு சவாலாக வந்துவிடுவார் என அவரை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென அவருக்கெதிராக அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும் காவற்துறையை பயன்படுத்தி அடக்கப்பார்த்தனர். ஆனால் மக்கள் அரசியல் வாதிகளின் முத்திரையையும் சேர்த்தே கிழித்தெறிந்தனர். சம்பவம் நடந்து, வைத்தியர் அர்ஜுனா வந்து பிரச்சனையை வெளிகொண்டுவரும்வரை எந்த அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை, கேள்வி கேட்கவுமில்லை அவர் வந்ததன் பின் அவர் செயற்பாடுகளை விசாரிக்க போயிருக்கின்றனர். அவர் பிணையில் வெளிவந்து மக்கள் அவரை வரவேற்ற நிகழ்ச்சியை பார்த்து ஒரு அரசியல்வாதி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார். அப்போ பார்த்துக்கொள்ளுங்களேன் நமது தலைவர்களின் கடமை, பொறுப்பு எந்த நிலையில் இருக்கிறது. பொறுப்பானவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் அர்ஜுனா ஏன் அத்துமீறி நுழையப்போகிறார்?
  15. அவர் எத்தனை தடவை ஏமாற்றினார் என்றால்; அது யார் தவறு? ஏமார நாம் தயாராக இருக்கும்போது அவர் ஏமாற்றத்தான் செய்வார். நாம்தான் திருப்பி, முன்பும் ஏமாற்றினாய் இப்போ செய்! நாம் நம்புகிறோம் என்று கேட்.பதில்லையே எமது அப்பிராணித்தனத்தை தனக்கு சாதகமாக்கி கொள்கிறார் புத்திசாலி. முகவர் அதற்கான வெகுமதியை பெற்று பாராட்டப்பெறுவார். நாங்கள் செம்மறிக்கூட்டம்.
  16. ம்ம், பெண்கள் பொய் முறைபாடளிப்பதுபோல் ஆண்களும் முறைபாடளிக்க முன்வரவேண்டும்!
  17. யார்......இவரா தீர்த்து வைப்பது? வேலிக்கு ஓணான்கள் சாட்சி சொல்கின்றனர். அப்போ இந்த வார்த்தைப்பிரயோகம் தேவையில்லையே?
  18. அவர் வழி, த.....னி...... வழி! அப்படி நடந்துதான் அவருக்குப்பழக்கம். அப்பதான் தான் நினைத்தபடி அறிக்கை விடலாம். ரணிலோட மட்டுமா பேசுறார்? எல்லோருடனுந்தான் பேசுறார். அவரே வர வேண்டாம் என்கிறார். அவர்கள் தான் ஒருவரையும் கூட்டி வராதேங்கோ, "நாங்க உங்களுடன் மட்டுந்தான், பூட்டிய அறைக்குள்ள பேசுவம்." என்று அடம் பிடிக்கின்றனர். ஆனால் பாவம் அவர்.... பேசியது, பேசாதது எல்லாவற்றையும் அறிக்கையாக வெளிப்படுத்தி விடுவார். இது போதாதா?
  19. இவர் அதிரடியாக களம் இறங்கியது தவறு. அங்கே போய் நின்று கொண்டு, அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார். அதற்கு அங்கு நின்ற ஒருவர், உங்களுக்குந்தான் இருக்கிறது என்கிறார். இவர் செய்திருக்க வேண்டியது அந்தக்குடும்பத்துக்கு ஆதரவாய் இருந்து ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தின் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை பெற்றுக்கொடுத்து இருக்கலாம், இப்போ என்ன நடந்தது? திடீரென களத்தில் குதித்து, போர்களமாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதை வேறு மாதிரி கையாண்டு இருந்தால் குற்றவாளியை சிக்க வைத்திருக்கலாமல்லவா? முன் ஆயத்தம், யோசனை இல்லாமல் இப்படி சுடுகுது மடியைப்பிடி என்று எல்லாவற்றயும் ஒரே நேரத்தில் கையிலெடுத்து இப்படி போட்டுடைக்கலாமா? சாவகச்சேரி நீதிமன்றம் இவருக்கெதிராக பிடியாணை பிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருக்காக ஆயராகும் சட்டத்தரணிகளுக்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதற்கும் ஒரு வரைமுறை உண்டு, அதை மீறுவதனாலேயே இவர் இப்படி விமர்சிக்கப்படுகிறார். அதை அவர் கடைபிடித்திருந்திருந்தால் இவருக்குப்பதிலாக குற்றம் சாட்டப்பட்டவர் அல்லவா கைது செய்யப்பட்டிருப்பார்? இப்போ, எதிரிகள் பலரை ஒன்றாக தனக்கெதிராக இணைத்து விட்டிருக்கிறார். இவர் எங்கு போனாலும் துரத்தப்படுவார், தான் வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்காதவரை!
  20. வைத்தியர் அர்ஜுனா அரசியலுக்கு இன்னும் தயாரில்லை என்றே கருதுகிறேன்.இப்போ அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பல அரசியல் கழுகுகள் தங்களுக்கு சாதகமாகவும் அவரின் இருப்பை இல்லாமல் செய்யவும் பயன்படுத்தும். அதற்கு முதல் அவர் தனது நேர்மையையும் பொறுமையையும் காத்து மக்கள் அவர்மேல் வைக்கும் மதிப்பு உண்மையானது, அவர் மக்களுக்கு உண்மையாய் இருப்பார் என்பதை காட்டுவதே இப்போதைய அவரது முதற் கடமை. இவர்களைபோன்றவர்களையே சிங்களம் தேடும். காரணம்; மக்கள் மதிப்பு, வாக்கு வங்கியை உயர்த்தும், மிக எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவர், எளிதில் ஏமாற்றி எதிலும் சிக்க வைக்கலாம். அவர் செய்தது சரியாகிலும் வரம்பு மீறி செயற்படுவதனால் தனது தொழிலை, மதிப்பை இழந்து சொல்லவந்த உண்மையை நீர்த்துபோகச்செய்து விடுவார் போலுள்ளது. இவர் இப்போ செய்ய வேண்டியது அரசியலல்ல தான் வைத்த குற்றச்சாட்டு உண்மையானது என நிறுவி சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும், தன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபித்து அதிலிருந்து வெளிவரவேண்டும், அதற்கு சட்டத்தரணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி பொறுமை காத்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இப்போ அவர் ஒரே நேரத்தில் பல தோணிகளில் கால் வைத்து சில நாளில் பிரபல்யமடைந்து அரசியல் செய்யும் கனவை விட்டு ஒன்றொன்றாக கவனமாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும். அவர் இந்த தேர்தல் காலத்தை அனுபவமாக கூர்ந்து கவனித்து பின்வரும் நாட்களில் இறங்கலாம், இப்போ அரசியல் முடிவை எடுத்தால் பின்வரும் நாட்களில் மிகுந்த மன அழுத்தத்தை அனுபவிப்பார்.
  21. இவர் தனது அரசியல் பிரவேச விளம்பரத்திற்காக அதிரடி காட்டுவதாக சம்பந்தப்பட்ட வைத்தியர் குற்றம் சுமத்தியிருந்தார். தான் அறிவித்துப்போட்டு வந்ததாக இவர் தெரிவித்திருந்தார். என்ன இருந்தாலும் குட்டையை குழப்பி சம்பந்தப்பட்டவர்கள் பழிவாங்கும் நிலைமை ஏற்படப்போகிறது இவரது அவசரபுத்தியால். ஏற்கெனவே சாதாரண மக்கள் இவர்களது தெனாவெட்டால் துயரம் அனுபவித்து இவரால் ஒரு விடிவு வருமென எதிர்பார்த்தார்கள் அது வெறும் நாடகமாக மாறி சம்பந்தப்பட்டவர்களுக்கு வெற்றியை கொடுக்கப்போகிறது. இவர் கொஞ்சம் நிதானித்து சட்ட ஆலோசனையுடன் காரியத்தை தொடங்கியிருக்கலாம் அல்லது வெளியிலிருந்து உதவி செய்பவர்களின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கலாம். சிங்கள அதிகாரியின் பலத்தை நம்பி பெயரை கெடுத்துக்கொண்டதுதான். "பணிசெய் பலனை எதிர்பாராதே" என்று தன்னால் முடிந்ததை முயன்றிருக்கலாம் சும்மா அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும் நம்பி அவசரப்பட்டுவிட்டார்.
  22. பிக்குகளை குஷிப்படுத்த ஆசிவேண்டி நூல் கட்டும் கலாச்சாரம் இங்கேயுமா?
  23. தேவையேற்பட்டால் தேடி வந்து கும்பிடுவார்கள்,தேவை முடிந்தவுடன் தூண்டி விட்டு தேடித் தேடி இடிப்பார்கள். உவர்களின் கைங்கரியம் தெரியாதா நமக்கு?
  24. அப்பப்போ வைத்தியசாலைகளில் நடந்த ஊழல்கள் அதிகார துஸ்பிரயோகங்கள் ஊடகங்கள் வாயிலாகவும் சில தனிப்பட்ட காணொளிகள் மூலமும் வெளிவந்தன அப்போதெல்லாம் அரசியல்வாதிகளோ சமூக ஆர்வலர்களோ நடவடிக்கை எடுத்திருந்தால், தட்டிக்கேட்டிருந்தால் இவ்வளவுதூரம் போயிருக்காது. முன்னர் வன்னிப்பிரதேச சுகாதார ஊழியர் ஒருவர் இதை வெளிக்கொணர்ந்தபோது அவரது தலைமையக்கத்தோடு தொடர்பு கொண்டு அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை விட்டார்கள். இவர்கள் சரியாக நடந்திருந்தால், அவர் வெளிப்படுத்த வேண்டிய தேவை வந்திருக்காதே. அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், யார் இந்தக்குறைகளை வெளிப்படுத்த முன்வருவர்? தரங்கெட்டவர்கள், நேர்மையாளரை துரத்துவார்கள் அல்லது அவர்களை சுயமாக இயங்க விடாமல் கட்டுப்படுத்துவார்கள். இவர்களுக்கு திறமை இல்லை அல்லது மக்களுக்கு சேவை செய்யாமல் கள்ள உடம்பு வளர்த்து சம்பளம் வாங்க வேண்டும். இதுவும் ஒரு களவுதான். பலவகை இன்னல்களை அனுபவிக்கும் மக்கள் இவர்களுடன் சண்டை இடாமல் பொறுமையாக, தாமதமாகவேனும் பயன் பெற நினைத்து பேசாமல் இருந்திருக்கலாம், கதைத்தால் இப்போ நடப்பதுபோல் தங்களை தாக்கியதாக பொய் பிரச்சாரம் செய்து பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் இதனால் அவசர நோயாளர் பாதிக்கப்படுவார்கள் என நினைத்து பொறுத்துக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் எந்த மனிதனும் நிரந்தரமாக, சுகதேகியாக, அதிகாரத்தோடு, அதே பதவியில் வாழப்போவதில்லையென்கிற உண்மை புரிந்தால் இப்படியெல்லாம் ஆடமாட்டார்கள். இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்! படித்தவர்கள் பதவியில் இருப்பவர்கள் பேசும் பேச்சு; பரதேசி, நீ, டேய், உன்ர பதிவுகளை நீதிமன்றம் ஏற்குமா? அப்போ நீதிமன்றம் ஏற்காதென்றால் எது வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்று பொருளா? நீதிமன்றத்தில் அதற்கும் இடமிருக்கு என்பது பேசியவருக்கு தெரியாதுபோல் உள்ளது. ஒருவர் தன் பாதுகாப்புக்காக கொலை செய்யலாம் என்றால், ஏன் குரல் பதிவு செய்ய முடியாது? ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தால் இறந்தவரின் தொலைபேசியை போலீசார் சோதனையிடுவதன் காரணம் என்ன?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.