Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. றம்புக்வல விளக்க மறியலில்; தட்டுப்பாடு, பற்றாக்குறை.
  2. ம்ம்.... கைது செய்து விடுவார்கள். செய்தவன் காசு கொடுத்தால் தலை கீழாய் நின்றாடுவார்கள். சட்டம் ஒழுங்கு தன் கடமையை சரிவர செய்திருந்தால் இதுபோன்ற செயல்கள் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்குமா? இது எத்தனையாவது சம்பவம்? சம்பந்தப்பட்டவர்கள் தமது கடமையை சரிவர செய்யாமல் லஞ்சம் பெறுவதாலும், திறமை அற்றவர்களாலுமே குற்றங்கள் அதிகரிக்கின்றன, குற்றவாளிகள் தப்பிக்கின்றனர், பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தை கையிலெடுத்து தம்மை பாதுகாக்க முயல்கின்றனர். ஏதோ ஒரு செயலுக்கு பழிவாங்க வேறொரு காரணத்தை சொல்லி சொத்துக்களை அழிப்பது சொத்து சேர்க்க வக்கற்ற சோம்பேறிகளின் செயல். ஏன் நேருக்கு நேர் நின்று எதிர்ப்பை வெளியிட்டிருக்கலாமே?
  3. பலத்த வரவேற்புபோலிருக்கிறதே! சஜித் தனது நடன இசைக்குழுவை அழைத்து வரவில்லையோ? சிவ பூசையில் கரடி பூந்த மாதிரி இவர் ஒருவரும், பாதுகாப்புப்படையினரின் அநாகரிக செயலும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்றே கட்டியம் சொல்கின்றன. ஆமா...... முக்கியமான ஒரு விருந்தினரை காணவில்லையே? ஓ ....அவரது எஜமானின் வருக்கைக்காக காத்திருக்கிறாரோ தெரியவில்லை? குருந்தூருக்கும் வழிபடப் போவாரா? தமிழரின் வாக்கு வேண்டுமென்றால் நழுவி விடுவார்.
  4. சட்டாம்பியின் உந்த அறைகூவல் வேறு எதற்காகவாம்? உப்பிடி ஆர்ப்பாட்டம் பண்ணினால் தன்னை அடக்குவதற்கு அழைப்பு விடுப்பார்கள் என எதிர்பார்ப்பு. உந்த அரசியல் தலைவர்கள் மக்களுக்காக உழைக்கப்போவதுமில்லை, வழி நடத்துவதுமில்லை, தங்களுக்குள் ஒன்றுசேரப்போவதுமில்லை. அதனால் மக்கள் உவர்களுக்காக தங்கள் சக்தியை வீணாக்கப்போவதுமில்லை. தங்கள் பாதையில் அவர்கள் செல்ல தொடங்கி விட்டார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவுமில்லை. இன்னும் மக்கள் மக்கள் என்று கர்ச்சிக்கிறார்கள் தங்களை, மக்களை யார், அவர்கள் வேணவா என்பதை அறியாமலேயே.
  5. என்ன செய்யலாம்....? நீங்களும் எத்தனை வருடங்களாக சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டிருப்பீர்கள்? நம்புபவர்கள் என்றால் எப்போதோ நம்பியிருப்பார்களே? சாட்சிகளை விட்டு வைத்துவிட்டீர்கள். சாட்சியங்களை எரித்து விட்டு, சேகரித்தவர்களை கடத்தி கொன்று விடுவோமா? டக்கிலஸிடம் பணியை ஒப்படைத்தால் சொதப்பாமல் செய்து முடிப்பார். பயங்கரவாதிகளை இங்கு யாரும் குறிப்பிடவில்லை, போரில் ஈடுபடாத அப்பாவி மக்களை கொன்றவர்களுக்கெதிரான சாட்சியங்களையே சேகரிக்கிறார்கள். முடிந்தால்! நாங்கள் குற்றமேதும் செய்யவில்லை வந்து விசாரணை நடத்துங்கள் என்று வழிவிடுங்கள், இல்லையேல் ஆம் செய்தோம் அது எங்களின்விருப்பம் என்று ஒத்துக்கொள்ளுங்கள். அதைவிட்டு சாட்சி உள்ளதை இல்லையென்று நிறுவ குதர்க்கம் செய்யாதீர்கள்.
  6. இல்லை, இவர்களை அப்படி பேசும்படி சொல்கிறார்கள். ஏற்கெனவே தமிழரின் இரத்தம் ஓடி குடித்தாயிற்று இனி என்ன புதிதாக ஓடப்போகிறது என்று பிதற்றுகிறார் இவர் போன்றவர்கள். தாங்கள் என்ன செய்தோம் என்பதை ஒப்புவிக்கிறார்கள் தங்களையறியாமலேயே.
  7. மருந்தேதும் ஏற்றாமலேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பலரை கொல்லும்போது மரண பயம் தெரிவதில்லை, அப்பாவிகளை சிறைக்கு அனுப்பும்போது அவர்களின் நோய்கள், கவலைகள், நிஞாயங்கள் புரிவதில்லை. தமக்கென்று வரும்போது அத்தனையும் வந்துவிடும் அரசியல்வாதிகளுக்கு. என்ன...... இத்தனை வாதிப்பிரதிவாதங்கள் நடந்து அவர்களை சிறைக்கு அனுப்பினாலும் நாளைக்கு எதுவும் நடவாததுபோல் நாட்டுக்காக சிறை சென்ற வீரர்களாக வரவேற்கப்பட்டு இன்னொரு அமைச்சு கொடுக்கப்பட்டு இன்று இழந்ததை நாளை மீட்டுக்கொள்வார்கள். நாட்டிலே அனர்த்தம், தட்டுப்பாடு, போராட்டம் இப்படி ஏதும் நடந்தாலே அரசியல் வாதிகளின் வங்கிக் கணக்குகளில் பணமழை பொழியும். இவருக்குப்பின்னால் மறைந்திருக்கும் முதலைகள் அகப்படுவார்களா அல்லது வெறும் நாடகந்தானா? இல்லை ..... இப்படி எத்தனையோ கொலை வழக்குகள் பிரபல்யமாக நடந்து தண்டனை அறிவித்து இன்று பதவி சுகத்தோடு இருக்கிறார்கள். வெறும் காலம் சக்தி பண வாத விரையம்!
  8. இடம், காலம், கர்த்தா, எல்லாம் தெரியுது, கண்ணை மூடிக்கொண்டு தட்டை நீட்டினால் விழும் என்று எதிர்பார்ப்போர், தட்டில் விழுவதை தடுத்தால், எடுத்தால் கண்ணை விழித்துக்கொள்வர். யார் அதை செய்வது? இவர்களை அமர்த்துவதே, அதை செய்ய வேண்டியவர்களே இவர்களுக்கு பின்னால் ஒளிந்திருந்து கொண்டு இயங்குகிறார்கள்.
  9. ஜனாதிபதி பொது வேட்பாளரை முழுமூச்சுடன் எதிர்ப்பேன் என்றவர் களத்தில் குதிக்கலாம்.... ஆனந்திக்கு அச்சுறுத்தல்கள், தூதுகள், வசைகள் வரலாம்..... நீ, நான் போட்டிகள் எழலாம்.....எது வேண்டுமானாலும் நேரலாம், இதெல்லாம் நமக்கு புதிதல்ல. பொது வேட்பாளர் வென்றால்; தாம் காட்டிக்கொடுத்து தரகு பணம்பெறுவது ஊரை பேய்க்காட்டி உலா வருவது தடைப்படுமே என்கிற ஏக்கத்தில், ஏதோ தமிழருக்கு சிங்களமே ஜனாதிபதியாகவேண்டுமென்று கொக்கரிக்கிறார். இவ்வளவுகாலமும் யார் ஜனாதிபதியாக இருந்து, தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழர் ஏதிலிகளானார்கள் என்று தெரியவில்லை, ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர் போல் கதையளக்கிறார் ஒருவர். அவரை முதலில் உண்மையை உணர செய்யுங்கள், தற்போதைய முடிவுக்கு தமிழர் வரக் காரணம் என்ன என்பதை தெளிவு படுத்தி, ஜதார்த்ததை ஏற்றுகொள்ளச்செய்யுங்கள். கற்பனையில் வாழும் ஒருவரை நிஜத்துக்கு கொண்டு வாருங்கள். ஏற்கெனவே தான்தான் ஜனாதிபதி எனும் நப்பாசையை வெளியிட்டவர் அவர். மூர்க்கமாக தமிழரை அழிக்க கங்கணம் கட்டும் சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி தமிழருக்கு என்னத்தை வாங்கித்தரப்போறார்?
  10. ஒரு நிமிட தடுமாற்றம், வாழ்வு முடிந்துவிட்டது. வைத்தியருக்கும் ஆசை, பாசம், எதிர்பார்ப்பு இருக்குந்தானே, அவர் ஒன்றும் ஞானி இல்லையே. யாராவது அவருக்கு உடனிருந்திருந்தா அதை கடந்து நாம் சொல்வதுபோல் சாதனை படைத்திருப்பார். என்ன செய்வது? விதி எத்தனையோ வடிவங்களில் வரும், அந்த நேரம் மதி மயங்கி இயலா நிலைக்கு போய், இதுதான் சரியான முடிவென காட்டும். அவரை இழந்து வாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களில் யாருக்காவது அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் உடனடியாக உளவள உதவியை நாடவும். ஒரு பழமொழி உண்டு. "ஊருக்கு புத்தி சொல்லுற பல்லிதான் கூழுக்குள்ள விழுந்து சாகிறதென்று." அவர் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார், ஆனா இறுதி நேரம் தப்பிக்க நினைத்திருப்பார், முயற்சித்திருப்பார் இயலாமல் போயிருக்கும். அவ்வளவுதான் அவருக்கு வாழ கொடுக்கப்பட்ட காலம். அன்றெழுதியதை திருப்பி எழுதமாட்டார் அவரை படைத்தவர். பின்னொரு நாளில் இந்த மாதிரியெல்லாம் எழுதிய சாத்தானா இப்படி இறந்தார், இவருகிருந்த அறிவு எங்கே போயிற்று? என்று எழுத வேண்டியும் வரலாம்! யாரறிவா?
  11. என்னமா மக்கள் மேல் பாசம் பொங்கி வழியுது இவருக்கு தேர்தல் காலங்களில். மக்கள் வீதியில் அலையும்போது அவர்களோடு இவர் இல்லை, சிங்களத்தோடு கிச்சுமுச்சு விளையாடி மகிழ்ந்திருந்து விட்டு, இப்போ ஓடி வருகிறார் மீண்டும் மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்ய.
  12. மிகச் சரியான பேச்சுத்தான் அது! சரணடைந்த புலிப்போராளிகளுக்கு, பொது மக்களுக்கு என்ன நடந்ததென தெரியாத, தெரிய மறுக்கும் மக்களின் பேச்சது. பல லட்ஷம் மக்கள் வன்னியில் சிக்குண்டிருந்த போது, வெறும் எழுபத்தையாயிரம் மக்களே உள்ளனர் என்று ஏன் அரசு பிரச்சாரம் செய்தது? மிகுதிப்பேர் அவ்வளவானோரையும் கொல்வதற்காகவா? சரி, மக்களை மீட்க போர் நடத்தியதாக கூறும் பொறுப்புள்ள அரசு, அவர்களை மீட்டு எங்கே தங்க வைப்பதாக என்ன ஆயத்தம் செய்திருந்தது? வெட்ட வெளியில் முள்ளுக்கம்பிகளுக்கிடையில் மந்தைகளைப்போல் தண்ணீர் வசதியில்லை, உணவு வசதியில்லை, சுகாதாரம் கிஞ்சித்துமில்லை. தொற்று நோயாலேயே பல மக்கள் இறந்தார்கள். அப்போ போர்நிறுத்தம் கோரியிருந்தவர்கள் எங்கே போயிருந்தார்கள்? வெள்ளைக்கொடியுடன் சென்றவர்கள் பொறுப்பானவர்களுக்கு அறிவித்தே சென்றார்கள். அவர்களின் மரணத்திற்கு இவர்களின் பதிலென்ன? புலிகளை அழித்த பின்னே தமிழருக்கு தீர்வு என்று சொன்னவர்கள், அவர்களை அழித்த பின் இப்போ, புலிகள் இல்லை தமிழருக்கு தீர்வு என்பது தேவையற்றது, தமிழர் இங்கு வாழ விரும்பினால் வாழலாம் தீர்வு எதுவும் கேட்க முடியாது என சொல்வதன் அர்த்தம் என்ன? நம் தமிழ்த் தலைமைகள் விட்டுக்கொடுக்காத விடையங்களா? செய்யாத சமரசங்களா? எழுதாத உடன்படிக்கைகளா? செய்யாத அஹிம்சை போராட்டங்களா? அவைகளை மதித்ததா சிங்களம்? எதற்கு எழுபத்தாறு ஆண்டுகளாக இந்தப்பிரச்சனை நீடிக்கின்றன? உண்மையான நோக்கத்துடன் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடோ செயற்பட்டிருந்தால் இந்தப்பிரச்சனை எப்போதோ சுமுகமாக தீர்த்திருக்கலாம். ஆனால் சிங்களமே பலதடவை சொல்லியிருக்கு நாங்கள் பிரச்சனைக்குரிய தீர்வை வைக்க முயற்சிக்கும்போதெல்லாம் இந்தியா எங்களை அழைத்து அறிவுறுத்துகிறது என்கிறார்கள். இதுவரையில், நாட்டில் என்ன பிரச்சனை நடைபெறுகிறது எதனால் இவ்வளவு அழிவு ஏற்பட்டது எனஅடையாளம் காணத்தெரியாதவர்களால் எப்படி என்ன தீர்வை வைக்க முடியும்? தமிழருக்கு நாட்டில் பிரச்சனை இல்லை என்கிறார்கள், அபிவிருத்தியே அவர்கள் பிரச்சனை என்கிறார்கள், அயர்லாந்து கொள்கையை யோசிக்கிறோம், தென்னாபிரிக்க கொள்கையை பரிசீலிக்கிறோம் என்று ரீல் விடுகிறார்கள். ஆனா தீர்வேதும் இல்லாமலே தமிழரை அவர்தம் நிலங்களிருந்து விரட்டுகிறார்கள், கோயில்களை உடைக்கிறார்கள். பிரச்னையேதும் இல்லாமலா தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன? எரியூட்டப்பட்டன? பேச்சுக்கள் நடந்தன? உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட்டன? போராட்டம் நடந்தது?
  13. சரத் பொன் சேகா உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார், "கிளிநொச்சியோடு நம் போரை முடிவுக்கு கொண்டு வருவதே நமது திட்டமாக இருந்தது, ஆனால் இந்தியாவே நமது போரை தொடர்ந்து செல்ல வற்புறுத்தியது." "மஹிந்தா சொன்னது, "நாம் செய்தது நமது போரல்ல, அது இந்தியாவின் போர். நாம் கேட்காமலேயே போருக்கான சகல உதவிகளையும் வழங்கியது இந்தியா." என பகிரங்கமாக சொன்னார். இந்தியா மௌனம் காத்து அதை ஏற்றுக்கொண்டது. போர் முடிவு பெற்று வெற்றி களிப்போடு மஹிந்தா பாராளுமன்றம் வந்தபோது தங்களையும் அவர்களோடு சேர்த்துக்கொள்ளுமாறு ரணில் கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால் ரணிலே நாட்டைகாட்டிக்கொடுத்து புலிகளுடன் பேசினார் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம், அந்த வெற்றி தமக்கு மட்டும் உரியது என நிராகரித்து விட்டார். எழுபத்தாறு ஆண்டுகளாக சிங்கள ஜனாதிபதிகளை மாறி மாறி தெரிவு செய்து எதை சாதித்தோம் என்றும் விளக்கி முழங்கினால் கேட்கிறவர்கள் விளங்கிக்கொள்ள வசதியாக இருக்கும்.
  14. இலங்கையில் யார் அரச கட்டிலேறினாலும் அதை யாழில் உற்சாகமாக கொண்டாட ஒரு வேலையற்ற கூட்டமுண்டு, இந்தியாவில் யார் ஏறினாலும் கொண்டாட ஒரு மத கூட்டமுண்டு, இவர்களாலும் ஒரு பிரயோசனமுமில்லை, அவர்களாலும் ஒரு பிரயோசனமுமில்லை நம்மினத்துக்கு. இதனால் என்ன லாபம்? என்று கேட்டால்; ஒரு பதிலுமில்லை விழா எடுப்போரிடம், தம்மை அசிங்கப்படுத்துவதைவிட.
  15. இலங்கைத்தமிழருக்கு தனிப்பிரதேசம், உரிமை கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக தலையால் நடக்கும் கிந்தியா அதற்கு சம்மதிக்குமா? அங்கே ஒரு இனவழிப்பு நடந்தேறும்.
  16. இதுதான் இலங்கையில் பெற்ற அனுபவம்! பல நாடுகள் சேர்ந்து தர்மத்துக்கு எதிராக செய்ததை இலங்கை தான் செய்தேன் என்று வெற்றி விழா எடுக்குது, அதற்கு இந்தியா பக்கத்துணை என்குது. சேர்ந்து நின்ற நாடுகளுக்கு அது எப்படி யாரால் ஆனது என்கிற உண்மை தெரிந்த படியால் உடனேயே உளவாளிகள் மாட்டுப்பட்டு விடுகின்றனர். இவர்கள் மட்டில் மேற்கு நாடுகள் மிக எச்சரிக்கையாக இருக்கின்றன. இவர்களோ; தாங்கள் பெரிய சீன உளவாளிகள் என்கிற நினைப்பு!
  17. சிங்கள அரசு சலுகைகளையும் சில்லறைகளையும் விட்டெறிந்து உளவாளிகளை வாங்கி பூந்து விளையாடியிருக்கும். ஆனா மேற்கு நாடுகள் அப்படியல்ல, விலைபோனதுகள் விலைபோய்க்கொண்டே இருப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். பெற்றதாயையும் (இனம்) பிறந்த பொன்னாட்டையும் காட்டிக்கொடுப்பவனுக்கு பெரிதாக இருக்கப்போகுது?
  18. ம்ம்..... திருடர் தாயகத்தில் மட்டுமல்ல, எங்கே போனாலும் திருடர் ஏமாற்றுக்காரர் தம் தொழிலை விடுவதில்லை. இரத்தத்தோடு பிறந்த குணம். தம்மை பெற்றெடுத்த பெற்றோரையே ஏமாற்றி அவர்களது கடைசி நேரத்தில் கைவிடும் பிள்ளைகளும் பெருகுகின்றனர்.
  19. நான் நினைக்கிறன்; தனது திறமைகளையெல்லாம் இலங்கையில் பரீட்சித்து பார்த்து உறுதி செய்து கொண்டபின்தான் மேற்கு நாடுகளில் செயற்படுத்த இறங்கியிருக்கும். அவ்வளவு நம்பிக்கையை கொடுத்தது இலங்கையில் அது அடைந்த வெற்றிகள் அனுபவங்கள் அதன் பயிற்சி பாசறையாய் அமைந்தது. இலங்கையையே வெற்றி கொண்டுவிட்டேன், மற்றைய நாடுகள் என்ன சுண்டைக்காய் என நினைத்து இறங்கியிருக்குமோ? இது உலக நாடுகளால் அடையப்போகும் அவமானமே இலங்கையில் இது என்ன செய்தது என்பதற்கு சாட்சியாகும்.
  20. இந்த ஆளுக்கு இலங்கையை மறக்கவும் முடியவில்லை அங்கு வராமல் இருக்கவும் முடியவில்லை. இவர் எப்போதுதான் உண்மையை பேசினார்? ஹிஹி..... அது இவரது மனைவிக்கு தெரியுமோ?
  21. ஏற்கெனவே போலீஸ் நிலையங்களில் இந்தப் பிச்சைக்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை, இனி வீதியிலுமா? இல்லாதவன் பிச்சை எடுத்தால் அவமானம், அரசு பிச்சை எடுத்தால் அதற்கு என்ன பெயர்? இது மட்டுமல்ல உறவுகளை தொலைத்து வீதியில் அலையும் பெற்றோர் இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை, அதையும் காட்டி இலங்கையின் கோரமுகத்தை எல்லோரும் பேசச்செய்ய வேண்டும். மக்களை பிச்சை எடுக்க வைக்கும் அரசாங்கம் அதை நிவர்த்தி செய்யாமல் மறைத்து கனவான் பெயரெடுக்க முயற்சிக்கிறது. இது பெரிய ராஜதந்திரம்!
  22. நாம் உதவி செய்கிறோம் எனும் பெயருக்காகவும் பாராட்டுக்காகவும் எங்களுக்காகவும் செய்யாமல், அவர்களுக்கு நாம் செய்யும் உதவி அவர்களுக்கு வேண்டியதா அதனால் அவர்கள் பயனடைவார்களா என்று அவர்களுடன் கலந்தாலோசித்து செய்வதே உண்மையான உதவி. உதவியென்கிற பெயரில் அவர்களுக்கு உடல் உபாதைகளை வருவிக்க கூடாது.
  23. தங்களது இனவாதமும் அதன் பின்னால் உள்ள திட்டங்களும் மாற்றமடைந்து இதுவரை தாம் பறித்தவற்றை இழந்துவிடுவோமோ, தாம் ஏற்படுத்திய இனவாதம் தங்களுக்கு எதிராக திரும்பி தம்மையே தாக்குமோ, இதனை தொடர்ந்து வருங்காலத்தில் பெரும்பான்மையின மக்களே தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையும் தோன்றலாம் என்றொரு பயம் அவர்களுக்கு. இன்னொரு புறம் எந்தவொரு தகுதியும் இல்லாமல் இனத்தை விற்று அடிமைகளாக சேவகம் செய்து போலிவாக்குறுதிகளும் செல்வாக்கும் காட்டி அமைச்சராக வலம் வருபவர்கள் வருந்தி உழைக்கவேண்டும், கொள்ளையடித்தவற்றை இழக்கவும் தண்டனை அனுபவிக்கவும் வேண்டி வருமேயென திணறுகிறார்கள். ஆனால் தமிழ் வேட்பாளர் எப்படி கருமமாற்றுவார் என்பது வேறு கேள்வி. ஏனெனில் வருபவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாய் வாக்கு பெற்று அல்லது கைகாட்டி வாக்கு பெற்றுக்கொடுத்து அரியணை ஏற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுத்தார்கள்? எவ்வளவோ முயற்சித்து விட்டோம் இதையும் முயற்சிப்பதில் தவறொன்றுமில்லை. அப்படி செய்யும்போது, துரோகிகளையும் அவர்களின் செயற்பாட்டையுமாவது தடுக்காலாமாவென பார்க்கலாம். இவர்கள் வெளிப்படுத்தும் பயம், தமிழ் வேட்ப்பாளரை தடுக்கும் ஆர்வமெல்லாம் இந்த நாட்டில் இனவாதம் என்று ஒன்று வேரூன்றி நாட்டையும் ஜனநாயகத்தையும் தனி மனித சுதந்திரத்தையும் அழிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
  24. ஒருபுறம் அல்லாஹ்வின் பெயரால் கொலை, இன்னொரு புறம் புத்தரின் பெயரால் இனவழிப்பு. இது இரண்டும் நம் நாட்டில் தமிழரை குறிவைத்து இயங்குகிறது. மதத்தின் பெயரால் குறி வைத்து நிகழ்த்தப்படும் வன்முறை உலகுக அமைதிக்கே அச்சுறுத்தல்!
  25. பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டுமல்ல உலகில் தமிழர் வாழும் எல்லா நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பச்செய்ய வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.