Everything posted by satan
-
வடக்கு, கிழக்கில் பௌத்த இடங்கள் வர்த்தகத்துக்கு
எல்லோருக்கும் வடக்கு கிழக்குத்தான் கண்ணுக்கை குத்துது. தங்களிடம் உள்ளதை பாடுபட்டு பயன்பெறதெரியாது, தமிழன் கஸ்ரப்பட்டு சேர்த்ததை தாம் சுரண்ட வேணும். முற்றுந்துறந்த துறவி பேசுது.
-
வடக்கு, கிழக்கில் சிங்கள பாடசாலைகள் இல்லாமை கவலைக்குரியது - கெவிந்து குமாரதுங்க
படித்த புத்திஜிவிகளும் மத தலைவர்களும் வடகிழக்கில் இரத்த ஆறு ஓடவேண்டும் சம அந்தஸ்து தமிழருக்கு வழங்கக்கூடாது என்று கூப்பாடு போடும்போது, பாடசாலைகள் இருந்தென்ன விகாரைகள் இருந்தென்ன? இவையெல்லாம் உங்கள் அதிகாரத்தை காட்டவே பயன்படுத்தப்படுகின்றது. நல்லிணக்கம் என்பது உங்களைப்போல் மற்றவர்களையும் சமகாக மதித்து ஏற்று வாழ்வதே. சிங்களபாடசாலைகளும் பௌத்த விகாரைகளும் வரலாற்றை திரித்து, இன முரண்பாடுகளை போதித்து வளர்க்கிறது. இதில வடக்கு கிழக்கிலே பாடசாலை வந்தென்னை வராமலென்ன எந்த மாற்றமும் வராது உங்களை திருத்தாவிடில். பௌத்தர் இல்லாத இடத்தில விகாரை, மாணவர் இல்லாத இடத்தில் பாடசாலை என்று அடம்பிடிக்குதுகள். இதுக்குள்ள எங்களுக்கு சிங்களத்தைப்பற்றி பாடம் வேற எடுக்கினம் சிலபேர். இலங்கையில் உள்ள வளங்கள் பெயராலும் துறைகள் பெயராலும் இன்னும் என்னென்ன இருக்குதோ அதுகள் பெயராலும் தமிழர் பூர்வீகங்களை கையகப்படுத்தி வேறு நாடுகளுக்கு தாரை வாருங்கோ.
-
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவ முகாம்கள் அகற்றம் - அடுத்தது என்ன?
காணியில் இருந்து அகற்றிய வீடுகளுக்கு என்ன பதில்? இதை வைத்து அரசியல் செய்பவர்கள் அந்த மக்கள் இழந்தவர்களை கணக்கில் எடுப்பார்களா? இருந்தவாறே காணிகளை அளவீடு செய்து எல்லைகளை இட்டுகொடுப்பார்களா அல்லது மக்களை அடிபட விட்டு வேடிக்கை மட்டும் பார்ப்பார்களா?
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
சிறியர் வேண்டுமென்றே தனது வீட்டில் இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் என்று சாமியாரை தவிர்த்தாரோ? அல்லது நண்பனைப்பற்றி அறிந்திருக்கிற படியினால் சிறியர் தன்னை மட்டுமே, ஹாஹா... கவனிப்பார், எதற்கு அவருக்கு சிரமம் என்று சாமியாரே ஒதுங்கிக்கொண்டாரோ? "கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடுமாம்." ஆறுமுக நாவலர் பூட்டன் தமிழ் பேசா விட்டார்த்தான் ஆச்சரியம்! ஆறுமுக நாவலரைச்சாட்டி சிறியரோட சொந்தங்கொண்டாட ஆளாளுக்கு கிளம்ப போறார்கள். விழா எல்லாம் முடிந்தது. மகனின் கல்யாணத்தில் ஒன்று சேருவோம். இனி மகனுக்கு பெண் பார் படலத்தில் பிரச்சனை இல்லை சிறியருக்கு. நானும் ஆறுமுகநாவலரைப்பற்றி நிறைய வாசித்து அறிந்து வைத்திருக்கிறேன்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஹாஹா...... மோதிரம் போடவா கழற்றவா கடத்தல்? இன்றிலிருந்து இவர்கள் மூவருக்கும் எங்கும் எதிலும் அழைப்போ, அனுமதியோ இல்லையாம். யாரையாவது இவர்கள் சந்திக்க உள்ளே வந்தாலும் உள்ளே அழைத்து தனிப்பட்ட வழியில் பலத்த சோதனையும் கேள்விகளுமாம், ரகசிய கமரா வேறயாம். இதையெல்லாம் தாண்டவேண்டுமென்றால் இவர்கள் கர்ப்பிணிப்பெண் வேடந்தான் போடவேண்டும். இருந்தாலும் இவர்களின் முழிக்கிற முழி காட்டிக்கொடுத்துவிடுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பார்சல் கட்டத்தான் அனுமதியில்லை, சட்டியோட கொண்டுபோனால்....? என்ன.... வாகனம் ஒன்று பெரிசா வேணும் அவ்வளவுதானே.. ஒன்பது வடை போன பானைக்கு இது எம்மாத்திரம்? இதுக்கெல்லாம் மினைக்கெடுவது சுத்த வேஸ்ரூ மூவருக்கும்!
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
விழா உபயகாரரும் இந்தத் திரியை வாசித்திருப்பார்களோ?
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ருசி கண்ட மனம் அழைப்பு தேடுது....? அவரின் தொழில் ரகசியத்தை பயன்படுத்தி கட்டிக்கொண்டு போக. சாமியார் உஷாராகிவிட்டார். இப்படியான ஆட்களை கூப்பிட வேண்டாம் என்று வீட்டில கண்டிப்பான உத்தரவால். அவர்கள் வயிற்றில் அடிக்கிறாராம். இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களையும் உங்கள் மூவரின் தலையில் கட்டி பகிர்ந்தும் அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்ததற்கும் மூவருக்கும் நன்றிகள். எத்தனைபேர் தங்களுக்கு அழைப்பு வந்தா கட்டிக்கொண்டு போகலாமென காத்திருக்கிறார்களோ? எல்லோரின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டதோடு சாமியாருக்கு ஒரு காவலாளியும் ஏற்பாடாம் அவர் பங்கு பற்றும் கொண்டாட்டங்களில்!
-
தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கினை முடிவுறுத்தத் தீா்மானம் – சுமந்திரன் அறிவிப்பு!
ராஜதந்திரம்! இவர்களுக்கு வாக்கு அளிக்கும் மக்களை என்ன சொல்வது? "ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சக்கரையாம்." இப்ப தேர்தல் வருகிறபடியால் ஒரு முடிவுக்கு வருகினை, இல்லையென்றால் ஒரு முடிவு காணாமல் விட்டிருக்க மாட்டினை.
-
மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும்
தேர்தல் காலம் வந்தால் எல்லா அரசியல்வியாதிகளுக்கும் மக்கள் நலனே முக்கியமாக தோன்றும், அதன்பின் வடை கௌவின நரியார்மாதிரி தலை தெறிக்க ஓடுவினம் மக்களை கண்டால். இது அரசியல் வியாதி! அரசியல் இல்லையென்றால் ஏன் சொல்லிக்காட்டவேண்டும், அதுவும் தேர்தல் நேரத்தில்? வாயால வடை சுடுற ஆக்கள் புலம்பி வாக்கு வாங்க கிளம்பி விட்டார்கள். திருவிழா கால பிச்சைக்காரர், திருடர் போல.
-
சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை!
என்னது...... ஒரு ஆட்டுப்பட்டியையே, எப்படி கடத்தியிருப்பார்கள்? அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப்பிடித்திருக்கிறார்? அதுக்குத்தான் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறதே. அது சரி, இந்த வாள்வெட்டுக்குழு, போதைப்பொருளை கடத்துவோரை மட்டும் கைது செய்யமாட்டார்கள், கண்ணை மூடிக்கொண்டு போக விட்டுவிடுவார்கள். வர வர சிவசேனைக்கு பொன்னாடை போத்துற வேலை அதிகரிக்கிறது. அதற்காக ஆட்களை தேடுகிறார்களாம் போர்த்துவதற்கு.
-
யாழ். நகர்ப்பகுதியில் நவீன பொது மலசலகூட தொகுதியை துரிதமாக நிர்மாணிக்க துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!
இவர் கடல் வளத்துறை அமைச்சரல்லவா? எப்போ இந்த துறைக்கு மாற்றப்பட்டார், மாறினார் அல்லது தானாகவே எடுத்துக்கொண்டாரோ? தேர்தல் வருகிறது, தமிழ்த் தலைமைகளுக்கு யோசனை கூறுவது, அவர்கள் கேட்க்கும் தீர்வுகளுக்கு தான் உரிமை கோருவது, கட்சி தாவுவது, அது போலவே தனது அமைச்சு பொறுப்புகளை கைவிட்டு வேறு அமைச்சுக்கு தாவுவது. எதிலாவது நிலைத்து, இதுதான் எனது கொள்கை, இவர்தான் என் தலைவன் என்று இருந்திருக்கின்றாரா? இப்பவே சஜித்துக்கு தூது விட்டு அழைப்புக்காக காத்திருப்பார், அதே நேரம் ரணில் புகழும் பாடுவார், மறுநாள் சஜித்தே சிறந்த தலைவர் என்பார். இவரின் வாழ்வே ஒரு நகைச்சுவை தான்போங்கோ. இவர் மட்டுமல்ல இவர் போன்றோர் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. இதனால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், தீர்வுகள் இழுத்தடிக்கப்படுகின்றன, சமுதாயம் சீர்கெடுகின்றது, சட்ட ஒழுக்கம் பாதிப்படைகின்றது, அதிரடியாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர், லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது அப்பாவிகள் நசுக்கப்படுகின்றனர். பலருக்கு தாங்கள் யார் தங்கள் பொறுப்பு என்ன? எதற்காக தமக்கு சம்பளம் தரப்படுகிறது என்கிற தெளிவே இல்லாமல் கதிரையை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள். பொறுப்பு கூற வேண்டிய தருணத்தில் அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் படுப்பதும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதுபோல் நமது பிரதேசத்தில் உள்ள திறமையற்ற தங்கள் பொறுப்புக்களின் தாற்பரியம், ஒழுங்கு, கொள்கை, அறிவு இல்லாதவர்கள், தெரியாதவர்கள் ஆளுக்கொரு, நாளுக்கொரு விளக்கமளித்து மக்களை குழப்புவதும் பிரச்சனைகளை உருவாக்குவதும் பதில் கூற பொறுப்பெடுக்க வேண்டிய நேரத்தில் கடமைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மறைந்து விடுகின்றனர். இதற்கு யார் காரணம்? "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி."
-
மயக்க மருந்து பற்றாக்குறை : சத்திரசிகிச்சைகள் இரத்து!
றம்புக்வல விளக்க மறியலில்; தட்டுப்பாடு, பற்றாக்குறை.
-
யாழில் ஊடகவியலாளாின் வீட்டின் மீது தாக்குதல் : சொத்துக்களுக்கும் சேதம்!
ம்ம்.... கைது செய்து விடுவார்கள். செய்தவன் காசு கொடுத்தால் தலை கீழாய் நின்றாடுவார்கள். சட்டம் ஒழுங்கு தன் கடமையை சரிவர செய்திருந்தால் இதுபோன்ற செயல்கள் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்குமா? இது எத்தனையாவது சம்பவம்? சம்பந்தப்பட்டவர்கள் தமது கடமையை சரிவர செய்யாமல் லஞ்சம் பெறுவதாலும், திறமை அற்றவர்களாலுமே குற்றங்கள் அதிகரிக்கின்றன, குற்றவாளிகள் தப்பிக்கின்றனர், பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தை கையிலெடுத்து தம்மை பாதுகாக்க முயல்கின்றனர். ஏதோ ஒரு செயலுக்கு பழிவாங்க வேறொரு காரணத்தை சொல்லி சொத்துக்களை அழிப்பது சொத்து சேர்க்க வக்கற்ற சோம்பேறிகளின் செயல். ஏன் நேருக்கு நேர் நின்று எதிர்ப்பை வெளியிட்டிருக்கலாமே?
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யாழ் விஜயம்!
பலத்த வரவேற்புபோலிருக்கிறதே! சஜித் தனது நடன இசைக்குழுவை அழைத்து வரவில்லையோ? சிவ பூசையில் கரடி பூந்த மாதிரி இவர் ஒருவரும், பாதுகாப்புப்படையினரின் அநாகரிக செயலும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்றே கட்டியம் சொல்கின்றன. ஆமா...... முக்கியமான ஒரு விருந்தினரை காணவில்லையே? ஓ ....அவரது எஜமானின் வருக்கைக்காக காத்திருக்கிறாரோ தெரியவில்லை? குருந்தூருக்கும் வழிபடப் போவாரா? தமிழரின் வாக்கு வேண்டுமென்றால் நழுவி விடுவார்.
-
தமிழ்ப் பொதுவேட்பாளரால் சமஷ்டிக்குப் பாதிப்பில்லை! - விக்னேஸ்வரன் விளக்கம்
சட்டாம்பியின் உந்த அறைகூவல் வேறு எதற்காகவாம்? உப்பிடி ஆர்ப்பாட்டம் பண்ணினால் தன்னை அடக்குவதற்கு அழைப்பு விடுப்பார்கள் என எதிர்பார்ப்பு. உந்த அரசியல் தலைவர்கள் மக்களுக்காக உழைக்கப்போவதுமில்லை, வழி நடத்துவதுமில்லை, தங்களுக்குள் ஒன்றுசேரப்போவதுமில்லை. அதனால் மக்கள் உவர்களுக்காக தங்கள் சக்தியை வீணாக்கப்போவதுமில்லை. தங்கள் பாதையில் அவர்கள் செல்ல தொடங்கி விட்டார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவுமில்லை. இன்னும் மக்கள் மக்கள் என்று கர்ச்சிக்கிறார்கள் தங்களை, மக்களை யார், அவர்கள் வேணவா என்பதை அறியாமலேயே.
-
இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்சியங்களை சேகரிக்கும் வெளியகப் பொறிமுறையொன்று செயற்படுத்தப்படுகின்றது - சரத் வீரசேகர
என்ன செய்யலாம்....? நீங்களும் எத்தனை வருடங்களாக சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டிருப்பீர்கள்? நம்புபவர்கள் என்றால் எப்போதோ நம்பியிருப்பார்களே? சாட்சிகளை விட்டு வைத்துவிட்டீர்கள். சாட்சியங்களை எரித்து விட்டு, சேகரித்தவர்களை கடத்தி கொன்று விடுவோமா? டக்கிலஸிடம் பணியை ஒப்படைத்தால் சொதப்பாமல் செய்து முடிப்பார். பயங்கரவாதிகளை இங்கு யாரும் குறிப்பிடவில்லை, போரில் ஈடுபடாத அப்பாவி மக்களை கொன்றவர்களுக்கெதிரான சாட்சியங்களையே சேகரிக்கிறார்கள். முடிந்தால்! நாங்கள் குற்றமேதும் செய்யவில்லை வந்து விசாரணை நடத்துங்கள் என்று வழிவிடுங்கள், இல்லையேல் ஆம் செய்தோம் அது எங்களின்விருப்பம் என்று ஒத்துக்கொள்ளுங்கள். அதைவிட்டு சாட்சி உள்ளதை இல்லையென்று நிறுவ குதர்க்கம் செய்யாதீர்கள்.
-
13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா !
இல்லை, இவர்களை அப்படி பேசும்படி சொல்கிறார்கள். ஏற்கெனவே தமிழரின் இரத்தம் ஓடி குடித்தாயிற்று இனி என்ன புதிதாக ஓடப்போகிறது என்று பிதற்றுகிறார் இவர் போன்றவர்கள். தாங்கள் என்ன செய்தோம் என்பதை ஒப்புவிக்கிறார்கள் தங்களையறியாமலேயே.
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
மருந்தேதும் ஏற்றாமலேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பலரை கொல்லும்போது மரண பயம் தெரிவதில்லை, அப்பாவிகளை சிறைக்கு அனுப்பும்போது அவர்களின் நோய்கள், கவலைகள், நிஞாயங்கள் புரிவதில்லை. தமக்கென்று வரும்போது அத்தனையும் வந்துவிடும் அரசியல்வாதிகளுக்கு. என்ன...... இத்தனை வாதிப்பிரதிவாதங்கள் நடந்து அவர்களை சிறைக்கு அனுப்பினாலும் நாளைக்கு எதுவும் நடவாததுபோல் நாட்டுக்காக சிறை சென்ற வீரர்களாக வரவேற்கப்பட்டு இன்னொரு அமைச்சு கொடுக்கப்பட்டு இன்று இழந்ததை நாளை மீட்டுக்கொள்வார்கள். நாட்டிலே அனர்த்தம், தட்டுப்பாடு, போராட்டம் இப்படி ஏதும் நடந்தாலே அரசியல் வாதிகளின் வங்கிக் கணக்குகளில் பணமழை பொழியும். இவருக்குப்பின்னால் மறைந்திருக்கும் முதலைகள் அகப்படுவார்களா அல்லது வெறும் நாடகந்தானா? இல்லை ..... இப்படி எத்தனையோ கொலை வழக்குகள் பிரபல்யமாக நடந்து தண்டனை அறிவித்து இன்று பதவி சுகத்தோடு இருக்கிறார்கள். வெறும் காலம் சக்தி பண வாத விரையம்!
-
13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா !
இடம், காலம், கர்த்தா, எல்லாம் தெரியுது, கண்ணை மூடிக்கொண்டு தட்டை நீட்டினால் விழும் என்று எதிர்பார்ப்போர், தட்டில் விழுவதை தடுத்தால், எடுத்தால் கண்ணை விழித்துக்கொள்வர். யார் அதை செய்வது? இவர்களை அமர்த்துவதே, அதை செய்ய வேண்டியவர்களே இவர்களுக்கு பின்னால் ஒளிந்திருந்து கொண்டு இயங்குகிறார்கள்.
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
ஜனாதிபதி பொது வேட்பாளரை முழுமூச்சுடன் எதிர்ப்பேன் என்றவர் களத்தில் குதிக்கலாம்.... ஆனந்திக்கு அச்சுறுத்தல்கள், தூதுகள், வசைகள் வரலாம்..... நீ, நான் போட்டிகள் எழலாம்.....எது வேண்டுமானாலும் நேரலாம், இதெல்லாம் நமக்கு புதிதல்ல. பொது வேட்பாளர் வென்றால்; தாம் காட்டிக்கொடுத்து தரகு பணம்பெறுவது ஊரை பேய்க்காட்டி உலா வருவது தடைப்படுமே என்கிற ஏக்கத்தில், ஏதோ தமிழருக்கு சிங்களமே ஜனாதிபதியாகவேண்டுமென்று கொக்கரிக்கிறார். இவ்வளவுகாலமும் யார் ஜனாதிபதியாக இருந்து, தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழர் ஏதிலிகளானார்கள் என்று தெரியவில்லை, ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர் போல் கதையளக்கிறார் ஒருவர். அவரை முதலில் உண்மையை உணர செய்யுங்கள், தற்போதைய முடிவுக்கு தமிழர் வரக் காரணம் என்ன என்பதை தெளிவு படுத்தி, ஜதார்த்ததை ஏற்றுகொள்ளச்செய்யுங்கள். கற்பனையில் வாழும் ஒருவரை நிஜத்துக்கு கொண்டு வாருங்கள். ஏற்கெனவே தான்தான் ஜனாதிபதி எனும் நப்பாசையை வெளியிட்டவர் அவர். மூர்க்கமாக தமிழரை அழிக்க கங்கணம் கட்டும் சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி தமிழருக்கு என்னத்தை வாங்கித்தரப்போறார்?
-
யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
ஒரு நிமிட தடுமாற்றம், வாழ்வு முடிந்துவிட்டது. வைத்தியருக்கும் ஆசை, பாசம், எதிர்பார்ப்பு இருக்குந்தானே, அவர் ஒன்றும் ஞானி இல்லையே. யாராவது அவருக்கு உடனிருந்திருந்தா அதை கடந்து நாம் சொல்வதுபோல் சாதனை படைத்திருப்பார். என்ன செய்வது? விதி எத்தனையோ வடிவங்களில் வரும், அந்த நேரம் மதி மயங்கி இயலா நிலைக்கு போய், இதுதான் சரியான முடிவென காட்டும். அவரை இழந்து வாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களில் யாருக்காவது அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் உடனடியாக உளவள உதவியை நாடவும். ஒரு பழமொழி உண்டு. "ஊருக்கு புத்தி சொல்லுற பல்லிதான் கூழுக்குள்ள விழுந்து சாகிறதென்று." அவர் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார், ஆனா இறுதி நேரம் தப்பிக்க நினைத்திருப்பார், முயற்சித்திருப்பார் இயலாமல் போயிருக்கும். அவ்வளவுதான் அவருக்கு வாழ கொடுக்கப்பட்ட காலம். அன்றெழுதியதை திருப்பி எழுதமாட்டார் அவரை படைத்தவர். பின்னொரு நாளில் இந்த மாதிரியெல்லாம் எழுதிய சாத்தானா இப்படி இறந்தார், இவருகிருந்த அறிவு எங்கே போயிற்று? என்று எழுத வேண்டியும் வரலாம்! யாரறிவா?
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
என்னமா மக்கள் மேல் பாசம் பொங்கி வழியுது இவருக்கு தேர்தல் காலங்களில். மக்கள் வீதியில் அலையும்போது அவர்களோடு இவர் இல்லை, சிங்களத்தோடு கிச்சுமுச்சு விளையாடி மகிழ்ந்திருந்து விட்டு, இப்போ ஓடி வருகிறார் மீண்டும் மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்ய.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
மிகச் சரியான பேச்சுத்தான் அது! சரணடைந்த புலிப்போராளிகளுக்கு, பொது மக்களுக்கு என்ன நடந்ததென தெரியாத, தெரிய மறுக்கும் மக்களின் பேச்சது. பல லட்ஷம் மக்கள் வன்னியில் சிக்குண்டிருந்த போது, வெறும் எழுபத்தையாயிரம் மக்களே உள்ளனர் என்று ஏன் அரசு பிரச்சாரம் செய்தது? மிகுதிப்பேர் அவ்வளவானோரையும் கொல்வதற்காகவா? சரி, மக்களை மீட்க போர் நடத்தியதாக கூறும் பொறுப்புள்ள அரசு, அவர்களை மீட்டு எங்கே தங்க வைப்பதாக என்ன ஆயத்தம் செய்திருந்தது? வெட்ட வெளியில் முள்ளுக்கம்பிகளுக்கிடையில் மந்தைகளைப்போல் தண்ணீர் வசதியில்லை, உணவு வசதியில்லை, சுகாதாரம் கிஞ்சித்துமில்லை. தொற்று நோயாலேயே பல மக்கள் இறந்தார்கள். அப்போ போர்நிறுத்தம் கோரியிருந்தவர்கள் எங்கே போயிருந்தார்கள்? வெள்ளைக்கொடியுடன் சென்றவர்கள் பொறுப்பானவர்களுக்கு அறிவித்தே சென்றார்கள். அவர்களின் மரணத்திற்கு இவர்களின் பதிலென்ன? புலிகளை அழித்த பின்னே தமிழருக்கு தீர்வு என்று சொன்னவர்கள், அவர்களை அழித்த பின் இப்போ, புலிகள் இல்லை தமிழருக்கு தீர்வு என்பது தேவையற்றது, தமிழர் இங்கு வாழ விரும்பினால் வாழலாம் தீர்வு எதுவும் கேட்க முடியாது என சொல்வதன் அர்த்தம் என்ன? நம் தமிழ்த் தலைமைகள் விட்டுக்கொடுக்காத விடையங்களா? செய்யாத சமரசங்களா? எழுதாத உடன்படிக்கைகளா? செய்யாத அஹிம்சை போராட்டங்களா? அவைகளை மதித்ததா சிங்களம்? எதற்கு எழுபத்தாறு ஆண்டுகளாக இந்தப்பிரச்சனை நீடிக்கின்றன? உண்மையான நோக்கத்துடன் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடோ செயற்பட்டிருந்தால் இந்தப்பிரச்சனை எப்போதோ சுமுகமாக தீர்த்திருக்கலாம். ஆனால் சிங்களமே பலதடவை சொல்லியிருக்கு நாங்கள் பிரச்சனைக்குரிய தீர்வை வைக்க முயற்சிக்கும்போதெல்லாம் இந்தியா எங்களை அழைத்து அறிவுறுத்துகிறது என்கிறார்கள். இதுவரையில், நாட்டில் என்ன பிரச்சனை நடைபெறுகிறது எதனால் இவ்வளவு அழிவு ஏற்பட்டது எனஅடையாளம் காணத்தெரியாதவர்களால் எப்படி என்ன தீர்வை வைக்க முடியும்? தமிழருக்கு நாட்டில் பிரச்சனை இல்லை என்கிறார்கள், அபிவிருத்தியே அவர்கள் பிரச்சனை என்கிறார்கள், அயர்லாந்து கொள்கையை யோசிக்கிறோம், தென்னாபிரிக்க கொள்கையை பரிசீலிக்கிறோம் என்று ரீல் விடுகிறார்கள். ஆனா தீர்வேதும் இல்லாமலே தமிழரை அவர்தம் நிலங்களிருந்து விரட்டுகிறார்கள், கோயில்களை உடைக்கிறார்கள். பிரச்னையேதும் இல்லாமலா தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன? எரியூட்டப்பட்டன? பேச்சுக்கள் நடந்தன? உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட்டன? போராட்டம் நடந்தது?
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
சரத் பொன் சேகா உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார், "கிளிநொச்சியோடு நம் போரை முடிவுக்கு கொண்டு வருவதே நமது திட்டமாக இருந்தது, ஆனால் இந்தியாவே நமது போரை தொடர்ந்து செல்ல வற்புறுத்தியது." "மஹிந்தா சொன்னது, "நாம் செய்தது நமது போரல்ல, அது இந்தியாவின் போர். நாம் கேட்காமலேயே போருக்கான சகல உதவிகளையும் வழங்கியது இந்தியா." என பகிரங்கமாக சொன்னார். இந்தியா மௌனம் காத்து அதை ஏற்றுக்கொண்டது. போர் முடிவு பெற்று வெற்றி களிப்போடு மஹிந்தா பாராளுமன்றம் வந்தபோது தங்களையும் அவர்களோடு சேர்த்துக்கொள்ளுமாறு ரணில் கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால் ரணிலே நாட்டைகாட்டிக்கொடுத்து புலிகளுடன் பேசினார் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம், அந்த வெற்றி தமக்கு மட்டும் உரியது என நிராகரித்து விட்டார். எழுபத்தாறு ஆண்டுகளாக சிங்கள ஜனாதிபதிகளை மாறி மாறி தெரிவு செய்து எதை சாதித்தோம் என்றும் விளக்கி முழங்கினால் கேட்கிறவர்கள் விளங்கிக்கொள்ள வசதியாக இருக்கும்.