Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ஒரு தடவை அமெரிக்க ஜனாதிபதியொருவர் இந்தியாவுக்கு விஜயம் செய்தாராம், அங்கே ஒருவர் பொது இடத்தில் கூச்சமில்லாமல் மலம் கழிப்பதை பார்த்து, ஏன் இந்த நாட்டில் மக்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கேட்டாராம். அவமானத்தால் தலை குனிந்த இந்திய ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியை பழிவாங்க ஒரு காலம் வருமென்று காத்திருந்தாராம். இன்னொருதடவை இந்திய ஜனாதிபதி அமெரிக்கா போனபோது தெருவில் ஒருவர் மலங்கழிப்பதை பார்த்ததும், இந்திய ஜானாதிபத்திக்கு இதுதான் சந்தர்ப்பம் என்று, அமெரிக்க ஜனாதிபதி முன்பு இவரை கேட்ட கேள்வியை இப்போ இவர் அமெரிக்க ஜனாதிபதியை பார்த்து கேட்டாராம். அதற்கு, அமெரிக்கர் கொஞ்சம் பொறுங்கள்; அவரை அழைக்கிறேன், நீங்கள் அவரிடமே இந்தக்கேள்வியை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று அந்த மனிதரை அழைத்தாராம். இவரும் அவரை அழைத்து விசாரித்த போது தனது பூர்வீகம் இந்தியா என்றாராம் அந்த மனிதர். நினைத்துப்பாருங்கள்..... இந்தியா ஜனாதிபதியின் நிலையை, இதற்கு பேசாமலே போயிருக்கலாம், மீண்டும் வாயை குடுத்து புண்ணாக்கி கொண்டோமே என்று நினைத்திருப்பார். இந்தியன் ஆமி வந்தபோது கூட சிலரை கேட்டார்களாம், எதற்கு சண்டை போடுகிறீர்கள்? வீட்டுக்கொரு கிணறு, கழிவறை இருக்கு, வசதியாய் இருக்கிறீர்கள். பின் எதற்கு உங்களுக்குள் சண்டை என்றார்களாம்? அவர்களது பிரச்சனை அது. எங்களது பிரச்சனையை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
  2. நீங்கள் கட்டிய பார்சலை யாராவது தட்டிக்கொண்டு போயிருந்தால் இப்படி சொல்வீர்களா சார்? எப்படியோ சேதாரம் இல்லாமல் கட்டிய பார்சலை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டதால் இப்படி புகழ்கிறீர்கள், ஆனால் சாமியாருக்கும் ஒரு பாசல் காத்துஇருக்கு என்று சொல்லலையே..... அதுதான் எனது கடுப்பு!
  3. உங்கள் சந்திப்பு சுவாரிஸ்சயமாகத்தான் சென்றது. இப்போ அது தனியாக பிரிந்து சேர்ந்தவர்களை காரணம் சொல்லி கழட்டி விட்டிட்டு பாசல் கட்ட வீட்டுக்காரி பேரன் பேத்தியை கூட்டுச் சேர்க்கும்போதுதான், இது என்ன அனிஞாயம்? என தோன்றுகிறது. சாமியார் தானே இந்த வித்தையை உங்களுக்கு கற்றுத்தந்தவர்? நீங்கள் குருவை விஞ்சி விட்டீர்களே!
  4. ம் ..... தங்களது சுயநலத்திற்காக சிங்களத்துக்கு தட்டு வைத்து, ஆரத்தி எடுத்து, வரவேற்பளித்து உள்ளதையும் இழந்து நிற்கிறோம், படித்த கூட்டம் என்று சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் வேலை...... ஒவ்வொரு துறையாக அவர்களிடம் நாமே கையளித்துவிட்டு பிறகு குத்தி முறியிறது. எனக்கு ஏற்கெனவே தெரியும், சிங்களத்தை நம்பி அர்ஜுனா பேட்டி கொடுக்கிறார் முதுகிலே குத்து வாங்கப்போகிறார் என்பது. சிங்களத்தால் எவ்வளவுதான் ஏமாற்றப்பட்டாலும் எங்களது சுயநலம் மாறாது, புத்தியும் வராது. இதுக்குள்ள தோத்துப்போன அரசியல் புழுக்கள் வேற நுழைந்து அரசியல் செய்து தம்மை பிரபல்யப்படுத்த பிரயத்தனம் எடுக்கிறார்கள்.
  5. அட கடவுளே.... இது என்ன அனிஞாயமாய் கிடக்கு! போறவாற இடமெல்லாம் பேரன், பேத்திகளை சொல்லி பாசல் கட்டுறது. விருந்தளித்தவர் வீட்டில் மிச்சம் மீதி விட்டிருக்கார்கள் போலிருக்கே. இனி இவர்களுக்கு அழைப்பு விடும்போது யோசிக்க வேண்டி உள்ளது. அது சரி... சாமியாருக்கு பாசல் கொண்டு வரவில்லையா? இனிமேல் உங்களுக்கு அழைப்பு இல்லை சாமியார் போகிற விருந்துகளில்.
  6. எண்டாலும் சாமியாரின் பரந்த குணம் யாருக்கும் வராது! ம். சாமியாரின் உறவுகளுக்கு மட்டும் உங்களைத் தெரிந்திருந்ததாக்கும்? தனியாக போய் விருந்துண்டால் ஒட்டுமா உடம்பில?
  7. உதுக்குத்தான் சொல்லுறது கிடைச்சதை மூக்கு முட்ட கட்டக்கூடாது என்று. அதுதானேபாத்தேன், அது எப்படி தனக்கு தெரிந்தவர்களை, அழைப்பே இல்லாமல் கூட்டிக்கொண்டுபோய் கச்சிதமாய் பாசல் கட்டிக்கொடுக்க முடிந்ததென்று? இப்பதான் விளங்கிச்சு அதன் ரகசியம்! இருக்காதா என்ன? தனது உறவினர் வைபவத்துக்கு உங்களை அழைத்து வண்டில் கட்டி அனுப்பியவரை உப்பிடி லேசாக அவர்களுக்கு சாமியாரை தெரியாது என்று கைகழுவி விட்டு போகிறீர்களே, ஒருவேளை உங்களை அவரோடு பாத்தால் கெடுபிடி, சோதனை பலமாக இருக்கும் பயத்தில அப்பிடி சொல்கிறீர்களோ?
  8. கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை பழிவாங்கி, தன்னை புனிதராக காட்ட முயற்சிக்கிறார் போலும்.
  9. தான் கொண்ட கொள்கையில் உறுதியில்லாதவரை, நேரம் ஒரு பேச்சு பேசுபவரை யார் மதிப்பார்? சம்பந்தரால் எதுவும் சாதிக்க முடியாமைக்கும் சிங்களமே விமர்சிப்பதற்க்கும் இதுவே காரணம். தீர்வைப்பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி கொடுத்து பாராளுமன்றம் போய் சிங்களமக்கள் விரும்பாத, அவர்களை கோபப்படுத்தும் தீர்வை ஏற்கமாட்டோம் எனும் சபதம் செய்தால் தீர்வை யார் கொடுப்பார்? அவர் ஏமாற்றியது அவரை நம்பி வழியனுப்பிவிட்டு தமக்கு தீர்வு வரும் என்று காத்திருந்த மக்களை. அதனாலேயே மக்களை அவர் சந்திப்பதில்லை, கேள்வி கேட்போரை அதட்டினார். பத்திரிகையாளர் மேல் சீறி விழுந்தார், எச்சரித்தார். யாருக்கும் இடம் விடவில்லை, நடுவுநிலையாக நடந்து நடந்து கொண்டவருமில்லை, மக்களுக்காக மக்களோடு நின்றவருமில்லை, மக்களையும் அவர் கனவுகளையும் ஏமாற்றி அவர்களுக்கு துரோகமிழைத்தார். அதன் வலியை தானே உணர்ந்திருப்பார் தன் இறுதி நாட்களில்.
  10. போலீசார் தமது கடமைகளை செய்யாமல் சமூக சீர்கேடுகளை ஊக்குவிக்கும்போது, பாவம் நாய்களை கொண்டுவந்து என்ன செய்வது? அவற்றுக்கு லஞ்சம் பெறவோ உண்மைகளை மறைக்கவோ பேசவோ முடியாதே, வீணாக மக்களின் வரிப்பணத்தை செலவழித்து அவற்றிற்கு இறுதிக்கடன் செய்யவே முடியும் பொலிஸாரினால்.
  11. தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்ற விடும் புலுடாவாக இருக்கலாம். அல்லது சம்பந்தர் இனி இலையென்பதால் அடுத்த ஏமாந்த சம்பந்தர் என்று நினைத்து அழைக்கலாம் பொறுத்திருந்து பாப்போம்!
  12. இராணுவத்தினர் தங்கள் கிராமத்திற்குள் நுழைகிறார்கள் என்கிற செய்தி அறிந்தவுடன் உடுத்த உடையுடன் மாற்றுத்துணி கூட எடுக்காமல் மக்கள் ஏன் தப்பி ஓடினார்கள்? அவர்கள் கையில் தாம் அகப்பட்டு விடக்கூடாதே என்கிற பயத்தில். அவ்வாறு ஓடாமல் இருந்தவர்களுக்கும் தமது வீட்டை பார்ப்பதற்கு, பாத்திரங்களை எடுத்து வருவதற்கு சென்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், கடலில் மீன் பிடிக்க சென்ற வீட்டு தலைவனை சுட்டுக்கொன்ற சம்பவங்களும் ஏராளம். வன்னியில் இத்தனை லட்ஷம் மக்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? ஒவ்வொரு இடமாக சுற்றி வளைத்து, மனித குலத்திற்கு எதிரான போர் ஆயுதங்களை பயன்படுத்தி குண்டுபோட்டு தாக்கியழித்ததால் மக்கள் அவர்கள் முன்னேறும் பிரதேசங்களை விட்டு வெளியேறினர், அவர்களை புலிகள் அழைத்துச் செல்லவில்லை. தலைநகருக்கு கிளாலிவழியாக சென்ற மக்களை கடலில் அழித்தது யார்? நவாலி தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் மேல் எதற்காக குண்டு போட்டார்கள்? புலிகள் தடுத்ததாலா? தமது மரணத்தை கழுத்திலே சுமந்தவர்கள் அவர்கள். மக்களை பலிகொடுத்து அவர்கள் வாழவில்லை. சரணடைந்த புலிகளும் மக்களும் கொல்லப்பட்டனர், காணாமல் ஆக்கப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் கூட்டிச்சேர்த்த மக்கள், போராளிகள் எல்லோரையும் கொன்று குவித்து, மக்களை புலிகள் கொன்று விட்டார்கள் நாங்கள் புலிகளை அழித்தோம் என்று அறிக்கை விட்டு எல்லோரிடமும் பாராட்டு பெறவே சிங்களம் விரும்பியது, அதற்காகவே தொண்டு நிறுவங்களை பலாத்காரமாக வெளியேற்றியது உண்மை வெளியே வராமல் இருப்பதற்காக, அங்கிருந்த மக்களின் தொகையை குறைத்துக்கூறியது, மக்களை மீட்கப் போர் செய்தவர்கள் அந்த மக்களுக்கான எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை, இறுதி நேரத்தில் தொண்டு நிறுவனங்களை செல்ல அனுமதியளித்து நல்ல பிள்ளை ஆகிக்கொண்டது. பெற்றோரால் கையளிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, விசாரணை செய்து போட்டு விடுகிறோம் என்று அழைத்துச் சென்ற புலிகளுக்கு, கூடச்சென்ற பாதிரியாருக்கு என்ன நடந்தது? சொல்லும் பதில்: அவர்களை புலிகள் கொன்று விட்டார்கள், வெளிநாட்டுக்கு சென்று விட்டார்கள். ஆதாரம் இருக்கிறதா அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றதற்கு? முள்ளிவாய்க்காலில் எல்லாமே மௌனிக்கப்பட்டபின்பு உலங்கு வானூர்தியில் அந்த பிரதேசத்தை பார்வையிட்டமுன்னாள் ஐ. நா. செயலாளர் பான் கி மூன் தெரிவித்தது. பல அடி உயரத்திற்கு புகை மூட்டமாக இருந்ததை அவதானித்ததாக. அதை யார் செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? இதுதான் சிங்களம்! கடைசியில் அரசு, சர்வதேசம் சொல்வதை இந்தியா உட்பட காது கொடுத்து கேட்கவுமில்லை, மதிப்பளிக்கவுமில்லை. அதை அவர்கள் பலதடவை வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள். புலிகள் ஆற்றியது தங்களின் தார்மீக கடமையையும், நம்பியது சர்வதேசத்தின் நடுவுநிலையையும், தங்கள் போராட்டத்தின் நிஞாயத்தை சர்வதேசம் புரிந்து உதவி செய்யுமென்றும். எல்லாம் முடிந்து அவர்களும் மடிந்து விட்டார்கள். அவர்களாலேயே இலங்கையில் நடந்த அடக்கு முறைகள் வெளிவந்திருக்கிறது. அவர்கள் போராடாமல் இருந்திருந்தாலும் எம் இனம் மௌனமாக அழிந்திருக்கும். இவர்களின் போராட்டத்தினால் காலம் தாழ்த்தியிருக்கிறது, வெளிஉலகிற்கு தெரிந்திருக்கிறது. எய்தவன் இருக்க அம்பை நோகும் உங்களை சொல்லிப்பயனில்லை, உங்களுக்கு எங்கள் வலியும் இழப்பும் தெரியப்போவதுமில்லை. யூட், கற்பகம் உட்பட. நீங்கள் விரும்பியபடி எழுதி மகிழுங்கள். சம்பந்தரின் இழப்பை விட, கில்மிசாவின் இசையும் காளியாட்டமுமே மக்களுக்கு முக்கியம் என்பதே இங்கு ஒப்பீடு.
  13. அவருக்குத்தான் எத்தனை சோலி, பாவம் அவர். நேற்றுத்தான் ஆளுநர் காரியாலயத்துக்கு முன்னால் கல்வி பணிப்பாளருக்கு எதிராக கோஷம் போட்டவர், நாளைக்கு ஆளுநருக்கு எதிராக ருத்திரத்தாண்டவம் ஆடப்போறார். ஆளுநர் சாள்ஸ்தான் சச்சியரின் கண்ணில் தெரிவார்.
  14. கடந்த காலங்களில் தேர்தல் நெருங்கும் வேளைகளில் மஹிந்த மாத்தையா சொன்னவை, "நீங்கள் போரில் இழந்த உயிர்களைத்தவிர மற்ற எல்லாவற்றயும் திருப்பி தந்துவிடுகிறேன்." என்று உறுதி கூறினார். மக்கள் ஆதரித்தனரா அவரை? தேர்தல் முடிந்த பின்னர் சொன்னார், வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்தினேன், காப்பற்தெருக்களை அமைத்தேன், அதை செய்தேன், இதை செய்தேன் ஆனால் தமிழ் மக்களின் மனதை என்னால் வெல்ல முடியவில்லை, காரணம் அவர்களின் தலைவனை நான் அழித்தேன்." என்பதே. மாவீரர் மாதம் பிறந்தாலே அத்தனை தடைகளையுந்தாண்டி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தம் வீர புருஷர்களுக்கு வணக்கம் செலுத்த முண்டியடிக்கிறார்களே அதன் அர்த்தம் என்ன? எத்தனை போக்கிரித்தனம் செய்தாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை வெல்ல வைப்பதன் தாரக மந்திரம் என்ன? அன்று தலைவர், அரசியல் பொறுப்பை இவர்களை நம்பி ஒப்படைத்ததால் அதை தோல்வியடையாமல் மக்கள் தாங்கிப்பிடிக்கிறார்கள். இதுதான் மக்களின் கருத்து. யார் என்ன சொன்னாலும் செய்தாலும் மக்கள் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள். சிலருக்கு அது புரிவதில்லை அல்லது புரியாததுமாதிரி கதையளப்பர். அப்போதும் தமிழர் சார்பாக ஒரே ஒரு கட்சி இருந்திருக்காது, முன்னோர் யாரையாவது கேட்டுப்பாருங்கள்.
  15. அதுசரி... யாழ் கல்வி பணிப்பாளருக்கும் சிவசேனை சச்சிக்கும் என்ன கோவம்? அதுக்கு எதுக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்? இவருக்கு கல்வியறிவு இருந்திருந்தால் இப்படி செய்வாரா? நாளைக்கே யாழ் ஆளுநருக்கு எதிராகவும் கோசம் எழுப்புவார். என்னத்தை கனவு காண்கிறாரோ அதுக்கு அடுத்தநாள் வேலையில்லாத சோம்பேறிகளை அழைத்துக்கொண்டு வந்து கூப்பாடு போடுவார். பிக்குகளுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு? இவர்களை கல்லால் எறியாமல் பாயும் படுக்கையும் தேநீரும் கொடுத்து உபசரித்தால் போதும். பதுங்கி புத்துக்குள் இருந்ததெல்லாம் படமெடுத்து ஆட வெளிக்கிட்டுதுகள். தன் மதத்தை பௌத்த சிங்களத்திடம் இருந்து காக்க துப்பில்லை, விகாரையில் விழுந்து கும்பிட்டுக்கொண்டு சிவசேனை அமைப்பாம். சிரிப்பாய்க்கிடக்கு.
  16. ஆஹா...... ரொம்பவே வக்காலத்து வாங்குகிறீர்கள். காயம் பட்ட மக்களுக்கு மருந்து இல்லை, மக்கள் இறக்கின்றனர் மரத்தின் கீழே சிகிச்சை அளிக்கிறோம் என பிரதம வைத்தியர் வேண்டுகோள் வைத்தபோது இவர்கள் ஏன் வரவில்லை? அனுமதிக்கப்படவில்லை? இவர்கள் எங்கிருந்து கோரிக்கை வைத்தார்களோ அங்கு மறுநாள் குண்டுபோட்டு காயம்பட்டவர்களை கொல்ல முடிந்தது எப்படி? அப்போ இவர்களெல்லாம் எங்கே போயிருந்தார்கள்? சாட்சிகளில்லாமல் தாம் அழிக்கப்படப்போகிறோம் என்பதை உணர்ந்த மக்கள் தங்களை விட்டுப்போகவேண்டாமென கதறிய போது ஏன் வெளியேறினார்கள்? யார் வற்புறுத்தலின் பேரில் வெளியேறினார்கள்? வெளியேற்றப்பட்டவர்களால் எப்படி இத்தனை அழிவுகளின் பின் யார், இவர்களை ஏன் அனுமதித்தார்கள் என்பதை யோசித்தால் இவர்கள் யாருக்காக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது புரியும். தங்கள் பிள்ளைகளை உயிரோடு பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என அள்ளிக்கொடுத்து விட்டு கண்ணீரோடு பல ஆண்டுகளாக தெருத்தெருவாக தேடி அலைகிறார்களே, அவர்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாததும் ஏன்? இவர்களை ஒருமுறையாவது சம்பந்தர் சந்தித்து ஆறுதல் சொன்னாரா? சொல்லுங்க சார்! யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின் கீழ் மக்களுக்காக அரசியல் செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல் யாசகர்கள் ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும்.
  17. வீம்புக்கு விதண்டாவாதம் செய்யக்கூடாது. ஆமா, தாம் உண்டு தம் தொழிலுண்டு என்று இருந்த தமிழரை கொன்று அவர் தம் சொத்துக்களை எரித்து உங்கள் பிரதேசத்துக்கு ஓடுங்கள் என்று கப்பலிலேற்றி சொந்தநாட்டிலேயே ஏதிலிகளாக விரட்டியவர்கள் வெற்றிக்களிப்பில் இருந்துகொண்டு மக்களை ஏற்ற கப்பல் விடுவார்களாம் அதை அவர்கள் அனுமதிக்கவில்லையாம். சாதாரண பொதுமக்களே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிந்தும் கோயில், வைத்தியசாலைகள் மீது குண்டு பொழிந்தது ஏன்? தொண்டு நிறுவனங்களை பலாத்காரமாக வெளியேற்றியது ஏன்? உணவுக்களஞ்சியங்களை குண்டு போட்டு அழித்ததும் ஏன்? போர்வலயத்தில் சிக்குண்டிருந்த மக்களின் தொகையை குறைத்து கணக்கு காட்டியது ஏன்? மீட்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதாரம், தங்குமிட வசதி ஏற்படுத்தப்படாதது ஏன்? போரிலே சம்பந்தப்படாத சிறுவர் தங்கியிருந்த செஞ்சோலை மீது குண்டு போட்டு கொன்றதும் அங்கவீனர்களாக்கியதும் ஏன்? வன்னியில் சிக்குண்டவர்கள் தப்பித்துச் செல்லாதவாறும் அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியுலகு அறியாதவாறு தடுத்ததும் யார்? அந்த மக்களுக்கான உணவு மருந்துகளை மறுத்தது யார்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டுவந்த கப்பலை நடுக்கடலில் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியது யார் மக்கள் மீது அவ்வளவு அக்கறையிருந்திருந்தால்? ஏன்.... கோத்தபாய கொம்பனி பலதடவை சொல்லியிருக்கிறார்கள், சர்வதேசம் போர்நிறுத்ததை வலியுறுத்தி தம்மை கட்டாயப்படுத்தியும் அதை ஏற்காமல் தாமே போரை நடத்தி புலிகளை அழித்து போரை முடிவுக்கு கொண்டுவந்தோம் என்றாரே. அப்போ, சர்வதேசம் புலிகளை காப்பாற்றவா போர்நிறுத்தம் கோரியது? போரை உருவாக்கியதே சிங்களந்தான். புலிகள் எங்கிருந்து உருவானார்கள்? ஏன் உருவானார்கள்? அவர்கள் உருவாவதற்கு முன் தமிழ் மக்கள் காயப்படவில்லையா கொல்லப்படவில்லையா? அல்லது வன்னியில் மட்டுந்தான் மக்கள் கொல்லப்பட்டார்களா? மக்கள் ஏன் வன்னிக்கு சென்றார்கள்? தங்கள் சொந்த இடங்களை விட்டு, ஏன் மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தார்கள் அரசாங்கம் மக்களை காப்பாற்றியிருந்தால்?
  18. சொன்ன வாக்கை நிறைவேற்றாமலேயே ஒரு சரித்திரம் மறைந்துவிட்டது. எத்தனை தாகம் இருந்திருக்கும் அவருக்குள்? இழந்தவை போக மிஞ்சியவையையும் தக்க வைக்க முடியவில்லை, தான் கொண்டுவந்த ஓணானை விரட்டவும் முடியவில்லை, அணைக்கவும் முடியவில்லை. வேறொரு தலைவரை உருவாக்கி தன் வெற்றிடத்தை நிரப்ப முயலவில்லை, தமிழ்த் தேசியம் எனும் குதிரையில் பலதடவை சவாரி செய்து சலித்து சென்றுவிட்டார். போய் அமைதியில் இளைப்பாருங்கள்!
  19. இதுதான் உண்மை! தமிழர் பிரதேசங்களில் சமூக, கலாச்சார சீர்கேடுகளை வளர்த்து பணத்துக்கு சேவை செய்து அவர்களை அடிபட வைத்து வன்மங்களை வளர்த்து வேடிக்கை பார்ப்பதோடு மக்களை பிரிந்து நின்று மோதவிட்டு தங்கள் திட்டங்களை இலகுவாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள். எங்கள் நிலத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வழிபட வேண்டும் என கட்டளை விதிப்பதற்கு இவர்கள் யார்? தங்கள் நாட்டில் சட்டம் நீதித்துறை எல்லாமே கேலிக்குரியதாக இருக்கும்போது, மற்றவர்களுக்கு உபதேசிக்க வரிஞ்சு கட்டிக்கொண்டு போய் விடுவார்கள்.
  20. ம்ம்.... அவலங்களையும் இழப்புக்களையும் துயரங்களையும் சுமந்து ஆறுதல் தேடும் மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்கப்படவேண்டும் தாங்கள் தங்கள் மண்ணில் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்து தலைவர்களை தேர்ந்தெடுத்து தமது அபிலாசைகளை நிறைவேற்றுவார்கள் என காத்திருந்து ஏமாந்துள்ளார்கள். அவர்கள் தலைவர்களே தமது எதிரிகளை காப்பாற்றுகிறார்கள். தங்கள் நிலங்களில் நடந்த துயரங்களை எடுத்துச் செல்ல, சொல்ல தயங்குகிறார்கள். ஆனால் இன்று பல நாடுகளில் இந்தப்பிரச்சனை பேசப்படுகிறது அரசியல் செய்கிறது. இது வெறும் வாக்கு அரசியலா? அல்லது மாற்றம் ஏதும் ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பை வழங்குமா?
  21. ம்...... சிறுபான்மை இனத்தை சர்வதேச உதவியுடன் விரட்டி விரட்டி துடிக்க துடிக்க கொல்லும்போது ஒத்தாசை புரிந்து கள்ள மௌனம் சாதித்து ரசித்து விட்டு, இப்போ திடீரென்று சிறுபான்மை மதத்தினர் மீது கரிசனை பிறந்து, கண்டன குரல் எழுப்புவதன் நோக்கமென்ன? ஏதோ பேரம் படியவில்லையோ என நினைக்கத்தோன்றுகிறது. உந்த சலசலப்பிற்கெல்லாம் பிக்குகள் அஞ்சாதுகள்.
  22. அது என்ன தாலிக்கொடியா சங்கிலியா? பெண்களுக்கு அணிவிப்பதை மறந்து தங்களுக்கு அணிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை.
  23. உலகமெலாம் அறிந்த உண்மை அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஈராக்கில் என்ன செய்தது என்பது. அதற்காக ஜூலியன் அசாஞ்செயை சிறை வைப்பதாலோ அல்லது அவரை நிர்பந்தித்து செய்யாத குற்றத்தை ஒப்புவிக்க வைத்து விடுதலை செய்வதாலோ அமெரிக்கா செய்தவை ஒன்றும் செய்யவில்லை என்றாகாது. அது தொடர்ந்து தனது நலனுக்காக பல நாடுகளை பகடை காயாக பயன்படுத்திக்கொண்டே வருகிறது.
  24. அட..... இது யாருக்கு இந்த உபதேசம்? தங்களைப்பற்றியே திரி ஓடுது என்று தெரியாமல்.
  25. எல்லோருக்கும் வடக்கு கிழக்குத்தான் கண்ணுக்கை குத்துது. தங்களிடம் உள்ளதை பாடுபட்டு பயன்பெறதெரியாது, தமிழன் கஸ்ரப்பட்டு சேர்த்ததை தாம் சுரண்ட வேணும். முற்றுந்துறந்த துறவி பேசுது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.