Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ஓஓ..... போன பஸ்ஸுக்கு கைகாட்டுகிறார்கள்! அப்படிப்பட்டவர்கள் தான். வருகிற பஸ்ஸில் ஏறவும் மாட்டார்கள், ஏறுகிறவர்களையும் இழுத்து விழுத்திகொண்டே இருப்பார்கள், போன பின், பஸ்ஸை நிறுத்தினோம் அதற்கிடையில் பஸ் போய் விட்டது என்று உச்சுக்கொட்டுவர்.
  2. ஒவ்வொருவரும், நான் ஜனாதிபதியோடு முன்பே கதைத்தேன், படித்தேன், விளையாடினேன் என்று முண்டியடித்துக்கொண்டு வருவதைப்பார்த்தால் தெரியவில்லையா? ஆனால் சேர்ந்து பணியாற்றுவோம் என்றவரின் சத்தத்தை காணவில்லை. ஊரிலே தான் இருக்கிறாரா? யார் ஜனாதிபதியானாலும் முன்னுக்கு தெரிபவர்களை இந்த முறை காணமுடியவில்லையே. சஜித் வந்திருந்தால்; அரியம் பாராளுமன்ற வீதியாலேயே போகமுடியாமல் செய்த்திருப்பார்கள். நாங்கள் சிங்களத்துக்கு போட்டு அனுராவை சமாளிக்கவில்லை, எங்களது தேவையென்ன, எதற்கு முயற்சிக்கிறோம் என்று கோடிட்டு காட்டியிருக்கிறோம். அதனால எங்களை பாருங்கள் நாங்களும் உங்களோடு கதைத்தோம் என சமாளிக்க வேண்டியதில்லை. எங்கள் செயல் எமது தேவையை கொண்டு சேர்த்திருக்கிறது, செய்ய வேண்டியதை கவனத்தில் எடுக்க வேண்டியது அவர்கள்.
  3. காரணம்? ம் ...... வெளியில சொல்லாதீங்கோ, பலபேர் உங்கள் கூட்டணியில் சேர்வார்கள், நீங்களும் சேர்ந்து போட்டியிடலாம் தேர்தலில், வாக்குகள் எண்ணவே கஸ்ரப்பட்டு உங்களை வெற்றியாளராக்கி அறிவிப்பர்.
  4. காரணங்கள் வெவ்வேறு இருக்க, இவரொருவர் தான் சொல்லித்தான் நடந்ததென்கிறார். பாராளுமன்ற தேர்தலில் தெரியும் இவரின் விலாசம் எங்கே என்று.
  5. குடிப்பிரியர்கள் வாக்குப்போட மாட்டார்கள், அது சரியா? போதை என்று வந்தால்; அரசியல் வாதிகள், காவற்துறை, இராணுவம் எல்லாம் சேர்ந்து அனுராவை மேலே கொண்டு போகப்போகிறார்கள்.
  6. இந்த அரசு நிலைத்தால், அது நடக்கக்கூடியதல்ல. ஒவ்வொருவன் உண்ணும் உணவுக்கும் கஸ்ரப்பட்டே உண்ணவேண்டும். ஆதலால் இந்த அரசை நிலைக்க விடமாட்டார்கள், சும்மா இருந்து வயிறு வளர்த்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள். விசேடமாக லஞ்சம், ஊழல் ஒழிப்பு, உழைப்பே முக்கியமாக கருதப்படும். இந்தியாவின் நிலையை சீனா முழுமையாக எடுக்கும். இந்த அரசில் இவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியதாயினும் அவசரம் எல்லாவற்றையும் தலை கீழாக்கிவிடும். நாட்டை சுரண்டியதுகள் சும்மா இராதுகள். இனவாதம், ஊழல் கருவிலேயே ஊறி விருட்ஷமாய் நிக்கிறது. அதை அதன் பாட்டில் போய் மெதுமெதுவாகவே களைய வேண்டும். எனக்கென்னவோ நேர்மையான தேர்தலை நடத்த, மாற்றங்களை ஏற்படுத்த போய் கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்து விடுவாரோ என தோன்றுகிறது. சிறியர் விசுக்கிற விசையை பாத்தா ஒருவரும் தாங்க மாட்டார்கள். இனிமேல் வெளிநாட்டுக்கும் தப்பி ஓட முடியாதே. அரசியல் வாதிகளின் பெஞ்சன் எல்லாம் இனி குறைக்கப்பட்டு, அவர்கள் ஆற்றிய சேவையை கணக்கீடு செய்து அதற்கு தகுந்தவாறு வரையறை செய்தால்; நாடு முன்னேறும், மக்களின் நிலை புரியும் இவர்களுக்கு. மக்களின் பணத்தில் இவர்கள் சொகுசு வாழ்க்கை, மக்கள் அடிமை வாழ்வு. ஐயோ! களத்தில் கலவரம் வெடிக்கப்போகுது, நான் ஓட்டம்.
  7. இது, இவருடைய ராஜதந்திரம்! முன்னொரு காலத்தில், ஒரு அணி வடக்கில் திரண்ட போது, நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் போகவும் மாட்டோம் என்றவர், பின்னாளில் அணி என்றால்; முன்னுக்கு போய் நிற்பார். இப்போ பொது வேடட்பாளர்என்றவுடன் கரிச்சுகொட்டுறார். பாருங்கள் பின்னாளில் எப்படி மாறுவாரென்று. காலம் அப்படி! ரணிலுக்கு, மற்றையவருக்கு வாக்கு போட்டவர்களை சாடவில்லை, இவருக்கு சாட்டையடி விழுகுது, தனக்கு எதிரானதாக சித்திரிக்கிறார். அரியத்தாரோ யாரையும் சாடவில்லை, தான் செய்ய வேண்டியதை செய்தேன் என்பது போலுள்ளார். மெல்லென பாயும் தண்ணீர் கல்லையும் ஊடறுத்து பாயுமாம், வெழுத்தோடும் நீர் அனைத்தையும் அழித்தோடுமாம்.
  8. அட, நீங்களுமா? அதை கந்தையருக்கு விளக்கமாக சொல்லுங்கோ. பாவம் அவர்! நம்பி காரியத்தில் இறங்கப்போறார். உங்களுக்குள்ளும் இப்படியொரு பேயிருக்கா?
  9. அப்போ .... அவர், சுமந்திரன் சொன்னதால் சஜித்திற்கு போடவில்லை என்கிறீர்கள்... காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்!
  10. நிச்சயமாக, சுமந்திரன் சொல்லித்தான் மக்கள் வாக்களித்தனர், வாக்களிக்காமல் விட்டனர் என்பதெல்லாம் தங்களை தாங்களே ஏமாற்றும் செயல் மட்டுமல்ல தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் கூட. சரி, சும் சொல்லித்தான் சஜித்துக்கு போட்டார்கள், அரியத்துக்கு போடவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், யார் சொல்லி ரணிலுக்கு போட்டார்கள் ? பியதாசாவுக்கு போட்டார்கள்? பியதாசாவுக்கு போட தெரிந்தவர்களுக்கு இவர்கள் கைகாட்டியவர்களுக்கு போடத்தெரியவில்லையா? அது அவரவர் விருப்பம். ஒன்று, வெறுப்பு, ஏமாற்றம், யார் வந்து நமக்கு என்ன ஆகப்போகுது சும்மா போட்டுவிடுவோம் என்கிற மனநிலை. ஏன், ஒருவர் வாக்குசீட்டை கிழித்துப்போட்டார், அதை செய்யச்சொல்லி யார் சொன்னது? சரி... இவர் கைகாட்டின வேட்பாளர் வென்றாரா? எல்லோரும் அவருக்கு வாக்கு போட்டிருந்தால், அனுராவுடன் எந்த மூஞ்சியோடு போய் பேசுவார். அவர் ஒரு வெற்றியாளரை இனங்காண முடியாதவர் மூன்று பேரிடமும் பேசினாராம் ஆனால் சஜித்தை தெரிவு செய்ய முடிவு செய்தாராம். காரணத்தை ஏன் மக்களுக்கு அறிவிக்கவில்லை? மக்களிடம் வாக்கு கேட்பவர் அதற்கான காரணத்தை விளக்காதது ஏன் ?அப்படியென்றால் அவர்கள் அதை அறிவதற்கு தகுதியற்றவர்களா? இந்த வாதம் ஒரு மக்களின் பிரதிநிதிக்கு ஏற்றதா? சர்வாதிகாரம் போல் தெரியவில்லையா? நம்புவதா இல்லையா என்பது மக்களின் பொறுப்பு. விளக்க வேண்டியது இவரின் கடமை. கேள்வி கேட்பது வாக்களிக்கும் மக்களின் உரிமை. நம்ப மாட்டார்கள் என்று எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்? அப்படியானால் உங்களுக்கே தெரியும் தகுந்த காரணமில்லை, அல்லது அந்தகாரணம் மக்களுக்கானதல்ல என்பது. காரணம் சொல்லாமல் கைகாட்டி வாக்கு போட்டு களைத்ததால் தான் மக்கள் தங்கள் முடிவை தாங்களே எடுக்கத் தொடங்கினர். அதற்கு அவர்களை குற்றம் சொல்வதும் சாபமிடுவதும் கேலி பண்ணுவதும் முறையல்ல. நான் ஜனாதிபதியாவேன் என்று அரியம் நினைக்கவில்லை மக்களும் நினைத்துப்போடவில்லை அது நடக்கிற காரியமுமில்லை. நாங்கள் இவர்களுக்கு வாக்களித்துக்கொண்டேயிருக்கிறோம், ஆனால் இவர்கள் எங்களை அந்நியராக நடத்துகின்றனர், நாங்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்கின்றனர், இவர்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும்? எங்களது இந்த முடிவுக்கு காரணம் என்பதை கேளுங்கள்! என்கிற தோற்றப்பாடே, இந்த பொது வேடபாளர். எந்த காரணத்தை வைத்து இது முன்னிறுத்தப்பட்டதோ அதை அனுரா தெளிவாக பத்திரிகை பேட்டியில் சுட்டிக்காட்டியிருந்தார். எங்களது கோரிக்கை போக வேண்டிய இடத்துக்கு போயிருக்கிறது. சர்வதேசம் ஒன்று கூறுமாம், சிங்களம் ஒன்று கூறுமாம். ம்..... நாங்கள் அடித்து விரட்டப்படும்போது இவர்கள் என்ன செய்தார்கள், சொன்னார்கள்? அவர்கள் எதை செய்தாலென்ன, சொன்னாளென அனுபவிப்பது நாமல்லவா? எனது புண்ணுக்கு நான் தான் மருந்து தேட வேண்டும். அவர் வந்த வேலை தமிழ் தேசியத்தை சிதைப்பது. ஆ அது இன்னும் மூச்சிழுக்கிறது என்பதே அவரது ஆதங்கம். இனிமேல், மக்கள் மத்தியில் தன் வார்த்தை எடுபடாது, அதை வைத்து பிழைக்க முடியாது, தான் எடுத்த பணி நிறைவுறாமல் பாதியிலே தேங்கி நிக்கிறதே என்கிற ஏமாற்றம். அவரை பணியிலமர்த்திய நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன, அகற்றப்பட்டுவிட்டதே என்கிற கவலை இப்படியெல்லாம் குற்றம் சாட்ட வைக்கிறது. இவர் சொல்லித்தான் மக்கள் வாக்குப்போட்டனர் என்கிற காரணம் அடுத்த தேர்தலில் நிரூபணமாகும். அதுவரை பொறுத்திருங்கள்.
  11. இருவருக்கும் நல்ல ஆப்பு! ஏறச்சொன்னால்; எருதுக்கு கோபம். இறங்கச்சொன்னால்; முடவனுக்கு கோபம். இப்போ யாருக்கும் எதுவும் சொல்லத்தேவையில்லை, யாருக்கும் கோவம் வராது.
  12. இந்த தேர்தல் வந்ததுதான் வந்தது, கந்தையருக்கு அதைப்பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து வருகுது.
  13. அவரது கடைசி சாதனை, தேர்தலில் மகளுக்காக தனது கடைசி வாக்கை செலுத்திய பின்னரே மூச்சை நிறுத்திக்கொண்டார். இறுதிவரை அரசியல். அவரது காலத்தில் இனப்பிரச்சினையை அருமையாக தீர்த்திருக்கலாம் இந அபிமானம் விடவில்லை. மஹிந்தா தீர்த்திருக்கலாம் சுயநலம் விடவில்லை. இனத்தை வைத்து பிழைத்து நாட்டை அழித்து தொடரவும் செய்தார்கள்.
  14. இவர் ஒரு அறிக்கை, சுமந்திரன் வேறொரு அறிக்கை. தோற்றது அரியம் என்பது இவர்களின் கனவு. அரிய நேந்திரனுக்கு போதிய கால அவகாசம் இல்லை, அனுரவைப்பற்றி மக்களுக்கு தெரியாது, ரணில் நரியென்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் சஜித்துக்கு போட்டார்களேயொழிய இவர்கள் சொல்லி போட்டிருப்பார்களென நினைக்கவில்லை. இருந்தாலும் அடுத்த தேர்தலில் இவர்களின் வண்டவாளம் தெரியத்தானே போகுது. அப்போ பாப்போம் அதுவரை சிலாகிக்கட்டும்.
  15. சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார், எல்லா கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இருக்கிறோம் எல்லோரும் எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் வெல்லும் கட்சியுடன் இணைந்து செயற்படுவோம் என்றார். என்ன..... கொஞ்சம் கூட எதிர்பார்ப்பார். எப்போ அனுரா கூப்பிடுவாரென காத்திருக்கிறார்கள், அனுரா கூப்பிடுவாரோ தெரியவில்லை. சஜித், தான் ஒத்துழைப்பு வழங்குவேனென கூறியிருக்கிறார். நாமலும் அதையே கூறியிருக்கிறார். அவர் பெரும் பதவி எதிர்பார்ப்பார். ரணில் தனது குழந்தையை ஒப்படைப்பதாக நாத்தழுதழுத்தார்.. பதுக்கல் பேர்வழிகள் தப்பியோடவும்முடியாது, விசாரணைகளில் இருந்து தப்பவும் முடியாது, தானாகவே விழுவார்கள். இல்லையேல் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டோமே என பின்னாளில் அங்கலாய்ப்பர். சிலர் தலைமைக்கு தெரியாமல் ரகசிய டீலும் போடலாம்.
  16. இந்தியா என்கிற சனியனை தூர வைத்தாலே நம் நாட்டின் பாதிப்பிரச்சனை தீரும். நம்மை பிடித்த சனியன், நமது காலைச்சுத்தின பாம்பு. வெகு சீக்கிரம் நம்மை விட்டு விலகாது. வலிய வழிய மூக்கை நீட்டும்.
  17. ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்கிற கோஷத்துடன் கதிரையேறுகிறவர்கள் அதிலே நிலையாய் இருந்ததுதான் வரலாறு. அதற்கு முற்றுப்புள்ளி!
  18. பொறுத்திருங்கள், அனுரா யாரை அரவணைக்கிறார்என்பதே கேள்வி. நாடு இக்கட்டில் இருக்கும்போது பதவியை ஏற்கச்சொல்லி அழைப்பு முதலில் சஜித்துக்கே விடுக்கப்பட்டது, அவரோ தயங்கி விட்டார். அதைவிட வடிவேலு நகைச்சுவை வசனத்தில், பகிரங்கமாக, கட்சியின் முடிவுப்பிரகாரம் சஜித்துக்கும், அரியத்துக்கும்,ரணிலுக்கும் குத்தினேன் என்று கூறினார். அதற்கு சிரிக்கலாம் அதேநேரம் சிந்திக்க கூடியது. இவ்வாறு கூறிவிட்டு எந்த மூஞ்சியோடு அனுராவோடு பேச முடியும்? எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒட்டு மொத்தமாக வாக்குகளை அளித்து என்ன நன்மை பெற்றோம்? ஏமாற்றப்பட்டதே வரலாறு. ஏதோ ஒரு சிங்கள கட்சிக்கு மாறி மாறி வாக்களித்து ஒன்றுக்கும் உதவாதவர்களாகவே கருத்தப்பட்டோம். நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிக்கிறோமாம். எந்த நம்பிக்கையில்? காலம் முழுவதும் ஏமாற்றப்பட்ட வரலாறு இருக்கும்போது நம்பிக்கை எங்கிருந்து? யாரிடமிருந்து வந்தது? தலைவர்கள் நம்பிக்கையற்றவர்கள், ஒரு கொள்கை இல்லாதவர்கள், ஒரு தலைவன் இல்லை, கட்சி பிரிந்திருக்கிறது, எல்லோரையும் அணைத்துப்போகதெரியவில்லை, விரட்டுவது, வெருட்டுவது, சவால் விடுவது, கட்சி மக்களுக்காகவா, மக்கள் கட்சிக்காகவா? போன வருடம் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவெடுத்தவர்கள் பங்காளிக்கட்சிகளுக்கு அந்த முடிவை தெரிவித்தனரா? விளக்கமளித்தனரா? பத்திரிகை வாயிலாக அறிந்த அவர்கள் விளக்கம் கேட்டபோது, ஏதோ சொல்கிறார்கள். ஏன் அதை நேரடியாக சொல்லியிருக்கலாமே? தமிழரசுக்கட்சியின் பெயரை பாவிக்கக்கூடாது என கட்டளையிடுகிறார். அப்போ, அதன் உண்மை நோக்கமென்ன? மாவையர் எல்லாவற்றுக்கும் தலையாட்டுவார், தலைமைத்துவ பண்பு இருக்கிறதா அவருக்கு? அனிஞாயத்தை தட்டிகேட்கும் தைரியம் இருக்கிறதா அவருக்கு? இவர்களை நம்பி மக்கள் இனியும் இவர்களை தொடரலாமா? எழுபத்தைந்து வருடங்களாக வாக்குப்போட்டு ஏமாந்தே, மக்கள் இந்த முடிவுக்கு வந்தனர். அதற்கு இவ்வளவு கோபம், வெறுப்பு. அப்போ, மக்களுக்கு எவ்வளவு வெறுப்பிருக்கும். அதிலும் அவர்கள் தெரிந்த வேட்ப்பாளர் தோல்வியை தழுவியுள்ளார். அவர் வென்றிருந்தாலும் கூட எதுவும் நடவாது. பழைய குருடி கதவைதிறவடி கதைதான். அரியம் முழு நம்பிக்கையுடன், மக்களுக்கு நேர்மையாக நடக்கும் பட்ஷத்தில் நம்மால் சாதிக்க முடியும். ஆனால் இவர்கள் தனி வழியில் செல்வதே தமிழருக்கு செய்யும் உதவி. சிலந்தியும் ஏழு முறை விழுந்து எழுந்துதான் தன் அழகான கூட்டை கட்டுகிறது. யாரும் எடுத்தவுடன் வெற்றி பெறுவதில்லை. தொடர விடாமல் தடுப்பார்கள். நீந்த நினைக்கிறவன் நீரில் இறங்கவேண்டும், மூச்சு பிடித்து தொடரவேண்டும். தாண்டு விடுவேன் என அஞ்சுகிறவன் அடுத்தவர் கதையை கேட்பவன் நீரிலே இறங்கக்கூடாது. கரையிலே நின்று தண்ணீர் ஆழம் அதனால் இறங்கமாட்டேன் என்று முதுகு காட்டி ஓடி விடவேண்டும்.
  19. அவருக்கு தெரியும், தனக்கு எந்த கட்சியும் ஆதரவு கொடுக்காது, ஆனால் தொந்தரவு கொடுத்து விரட்டுவார்கள் என்பது. மக்கள் பலம் உண்டு, ஆதலால் நீதிமன்றத்தின்மூலமே காரியங்களை கையாளும்போது இவர்கள் நொறுங்க, நொறுக்க வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் அவரும் மாற வாய்ப்பிருக்கிறது பதவியை தக்க வைக்க. அல்லது உதறிவிட்டு வெளியேற வேண்டும். எல்லாம் தெரிந்தே கால் பதித்துள்ளார். ஊழல்வாதிகள் அடங்கியிருக்கிறார்கள், ஆடத் தொடங்குமுதல் அடக்கிவிட வேண்டும். அப்போதே சவாலை சமாளிக்க முடியும் அவரால்.
  20. கந்தையர்! இலங்கை அரசியலில் என்றும் இல்லாத வரலாறு காணாத அதிசயம், ஒரு நிகழ்ச்சி, அனுரா கத்தோலிக்க கர்தினாலை முதலில் சந்தித்திருக்கிறார். மஹிந்த கூட்டம் சிறை செல்ல தாயாராக வேண்டும். இங்கே பிக்குகள் குழம்புமென அனுராவுக்கு தெரியாத சிறுகுழந்தையா அவர்? ஆனால் தமிழருக்கு எடுத்த எடுப்பில் தட்டில் வைத்து தருவார் என்று நான் சொல்லவில்லை. எங்கே அடியை ஆரம்பித்தால் மற்றவை தானாக சரியுமென தெரிந்திருக்கிறார். நாங்கள் ஊழல் செய்யவில்லை, முடிந்தால் எந்த நாட்டிலேயும் வழக்கு தொடர்ந்து நிரூபியுங்கள், என்று நாமல் சவால் விட்டார். அதற்கு முதல், இவர்களை எப்படி விசாரணை வலையத்துக்குள் கொண்டு வருவது என்று நிதானித்தே வைக்கிறார் ஆரம்ப அடியை. அரியத்தார் இவருடன் இணைந்து செயற்படுவார் என நினைக்கிறன். நீதிமன்றம் சட்டம் மூலமே தனது நகர்வுகளை செய்வார்.
  21. அவரை அனுரா அழைக்கப்போவதுமில்லை, பேசப்போவதுமில்லை. தன் இனத்தை காட்டிக்கொடுத்து, விற்று வயிறு வளர்க்கும் ஜென்மங்களை அவர் தேடமாட்டார். அப்படியென்றால் தேர்தலுக்கு முன், சும்மா ஒரு மரியாதைக்காக கூட அவரை சந்திக்கவேயில்லை யாழ்ப்பாணம் வந்தபோது. இவருக்கு ஓடி ஒளிக்க நாடுகளுமில்லை இந்தியாவுக்கு போகலாம் .........?
  22. இல்லை, பௌத்தத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பது கடந்த கால மக்களின் சிந்தனை தெளிவுபடுத்தியுள்ளது. மஹிந்த பட்டாளத்துக்கு இந்த நிலை வந்து நாட்டை விட்டு தப்பியோடும் நிலை வருமென்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் அவர்களுடபட. நாடு முன்னேற வேண்டுமென்றிருந்தால்; அதுவும் நடக்கும் காலம் வரும்போது. சும்மா தெண்டத்துக்கு மக்களுக்கு சுமையாயிருந்து அவர்களில் வயிறு வளர்த்து இந்த கூட்டம் பெருகி, நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிய பிரச்சினை!
  23. திருடர்கள். அவர்களுக்கு பிரபுக்கள் அந்தஸ்து. ஆமாம்... மக்களின் பணத்தில் இவர்கள் பிரபுக்கள். அவசர பயணம், தாங்களாகவே தங்களை காட்டிக்கொடுக்கிறார்கள். அவர்கள் அரசியலில் வென்றபோது இப்படியான கைதுகளின் மூலமே எதிரிகளை காலில் விழ வைத்தனர். இப்போ இவர்கள் மடியில் கனம், அதனால் தப்ப முயற்சிக்கிறார்கள். கடைசி வரை வெல்வோம் என்று காத்திருந்து ஏமாந்தவர்கள் இறுதியில் மாட்டுப்பட்டார்கள். டக்ளஸ் ஹிஹி...... அவரை வளர்த்தவர்களுக்கே இந்த நிலை என்றால்; அவரின் நிலை என்ன என்று சிந்திக்கிறார். முன்பெல்லாம் அரச பதவியேறியவுடன், இவரை அழைத்து பணி கொடுப்பது வழக்கம். இப்போ அந்த அழைப்புக்காக காத்திருக்கிறாரோ என்னவோ, சுமந்திரன் வாழ்த்துச் சொல்லி கேட்கவில்லை. அவரும் தப்பி விட்டாரோ அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரோ தெரியவில்லை, விசாரித்துப்பாருங்கள்.
  24. ம்....... இல்லையேல் தப்பிப்பிழைக்க முடியாதே, இனவாதம் ஊழல் கலாச்சாரம் மறைந்து இவர்களையும் மக்கள் மறந்து விடுவார்கள். அரசியல் ஊழல் இவற்றை நம்பி வாழப்பழகிய கூட்டமல்லவா!
  25. இறந்த தம் உறவுகளை அமைதியான வழியில் நினைவுகூர யாருக்கும் ஜனநாயக நாட்டில் உரிமை உள்ளது. அதை தடுக்க, இழப்பை அறியாதவர்களுக்கும் இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கும் உரிமையில்லை, சமாதானத்துக்கும் நாட்டின் அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தால் போதும். தாங்களாகவே தலையைகொடுக்க விரும்ப மாட்டார்கள். மக்களின் பலம், ஊழல் குழப்ப காரருக்கு சாதகமாயில்லை. சரத், தேரர்கள் போட்ட ஓலம், கொழுத்திய தீ பற்றவில்லை கடந்த வருடம். ஓடித்தப்பவும் முடியாது, பொறியில் மாட்டிய மூஞ்சூறு மாதிரி தப்பிக்க வழிதேடுவார்களே ஒழிய இதிலெல்லாம் மினக்கெடாமல். மிக இலகுவாக விசாரணைக்குழு வழியில் இழுக்கப்படுவார்கள். பொறுத்திருந்து பாப்போம். ஊழல்வாதிகளாலும் இனவாதிகளாலும் போற்றி வளர்க்கப்பட்ட பிக்குகள் கொஞ்சம் வீதிக்கிறங்கும். பௌத்தம் இல்லாமல் ஆக்கப்படப்போகிறது, அதற்கான ஒரு பாதுகாப்புமில்லை என்று இவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டையும் தாண்டியே அனுரா வென்றார். ஆகவே பௌத்தம் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது. இல்லையேல் மகிந்த பட்டாளத்துக்கு ஏற்பட்ட நிலையே பிக்குகளுக்கும் வரும். சும்மா இருந்து சாப்பிட்டு பழகிய அவர்கள் உழைத்துச்சாப்பிட தயாரா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.