Everything posted by valavan
-
புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
ஒருவேளை புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் முதலீடு செய்தால் பலமான எழுத்து ரீதியிலான ஒப்பந்தமொன்றை ஜனாதிபதியுடன் பகிரங்கமாக கைச்சாத்திட்ட பின்னரே இறங்கவேண்டும், வெளிநாட்டு முதலீடாளர்களுடன் ஜனாதிபதி நேரடியாக கையெழுத்திட்டு கை குலுக்கும்போது புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுடன் அது முடியாதா? அதில்: * ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கில் மட்டுமே முதலீடுகள் தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கப்படும். * அரசினதோ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளினதோ எந்தவிதமான நிர்ப்பந்தங்களும் தலையீடுகளும் இருக்க கூடாது * வடக்குகிழக்கில் நிறுவப்படும் தொழில் முயற்சிகளில் வடக்கு கிழக்கில் உள்ள மக்களே பணிக்கமர்த்தப்படுவார்கள், எக்காரணம் கொண்டும் இலங்கையின் பிற பகுதிகளிலிருந்து பணியாளர்களை கொண்டு வந்து திணிக்க கூடாது * முதலீட்டுக்கான ஏற்றுமதி இறக்குமதிகள் முதலீட்டாளர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் இடைதரகர்கள் அனுமதி இருக்க கூடாது. * முறையான அரச பாதுகாப்பு அவசியம் இல்லையென்றால் ஆளை வைத்தே கொளுத்துவாங்கள் இந்த நடைமுறைபடுத்தலில் ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் உடனடியாகவே ரத்தாகும் வகையில் சட்ட சிக்கலின்றி ஒப்பந்தங்கள் போடப்பட வேண்டும். இல்லையென்றால் உள்ளே வரவிட்டு எங்கள் காசில் தங்களோட இனத்தை வாழ வைத்துவிடுவான் சிங்களவன். மஹிந்த ஆட்சிகாலத்தில் லைக்கா நிறுவனம் சில முயற்சிகள் எடுத்து சார்க் மகாநாட்டுக்கெல்லாம் மஹிந்த அரசுக்கு நிதி உதவி செய்து , வவுனியாவில் வீட்டு திட்டம், விடுதலையாகும் போராளிகளுக்கு நிதி உதவி என்று இறங்கியது பின்பு சத்தம் போடாமலே ஒதுங்கி கொண்டார்கள் காரணம் சிங்கள/தமிழ் அரசியல் அழுத்தங்களாக மட்டுமே இருக்க முடியும்.
-
கனடாவில் நகைகடை கொள்ளை
கனடாவில் நகைகடை சம்பவத்தை தொடர்ந்து அடுத்த நிகழ்வாக தியேட்டருக்குள் தீ மூட்டுகிறார்கள் - வீரப்பரம்பரை சார்,
-
மாவீரர்களின் கட்சியான... தமிழரசு அழிந்து போக இடமளியாதீர்கள். -சி.வி.கே. சிவஞானம்.-
நேற்று சந்தையில் ஒரு வேட்பாளர் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு விழுப்புண்ணடைந்த ஒரு முன்னாள் போராளிமுன் போய் நின்று பேசபோய் ஒரே அசிங்கமா போய்ச்சு குமாரு ரேஞ்சுக்கு ஆயிட்டார், போதாக்குறைக்கு ஒரு முன்னாள் போராளி முன் தானும் ஒரு போராளி என்று சொல்லபோக, அவர் கவுண்டமணி பாணியில ஓட்றா எந்திரிச்சு ஓடிர்றா எண்டு கலைச்சுவிட்டார் அப்படியே ஓடி போயிட்டார் அவர்.
-
அமரன் : விமர்சனம்!
அமரன் படம் பார்த்தேன், யூடியூப் விமர்சனங்கள் , படம் பார்த்தவர்களின் கருத்துக்கள் எல்லாம் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை, படம் பார்க்க போகும்போது ரிசு பேப்பர் பலரும் கொண்டு போகிறார்கள் என்றெல்லாம் இருந்தது. அப்படியெல்லாம் இல்லை இது ஏற்கனவே வந்த படம்தான் அதன் பெயர் குருதிபுனல்! கமலஹாசன்தான் அமரன் தயாரிப்பாளர் என்பதால் தனது படத்தையே கொஞ்சம் உல்டா பண்ணி எடுத்திருக்கிறார் போலும். ராணுவத்தின் தியாகத்தை எண்ணி பேப்பர் துண்டுகளுடன் திரையரங்குக்கு போகும் மக்கள் மறுபக்கம் ராணுவத்த்தால் பேப்பர்போல கசக்கி கொளுத்தப்படும் மக்கள் பக்கமும் நின்று யோசிக்கவேண்டும், அதை செய்ய அவர்களின் அரசும் அரசியலும் அனுமதிக்க போவதில்லை. படம் பார்த்தவர்கள் எல்லாம் வசூலில் இது சாதனை படைக்கும், சிவகார்த்திகேயன் சாய் பல்லவிக்கு ஆஸ்கார் விருதுகூட கொடுக்கலாம் என்கிறார்கள், அழுகிறார்கள், ஆனால் குருதிபுனலில் கமல் நடிப்பில் 10 வீதம்கூட சிவகார்த்திகேயனிடம் இல்லை. ஆனால் உண்மையாகவே இந்த கதையில் வந்து இறந்துபோன முகுந்த் குடும்பத்துக்கு யாரும் உதவி செய்யவேண்டுமென்றோ அல்லது அவர்கள் பற்றி பேசவோ இல்லை. இவர்கள் உண்மையாகவே ராணுவ தியாகத்துக்கு அழுகிறார்களா அல்லது ராணுவம்போல் நடித்த கூத்தாடிகளுக்காக அழுகிறார்களா என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். சொந்தநாட்டு ராணுவ தியாகங்களை பார்த்து சிவாஜிகணேசன் அழுகிறமாதிரி அழுகிறார்கள் அது அவர்கள் கடமை , ஆனால் அந்நியநாட்டுக்குள் வந்து எம்மை கொன்றுவிட்டுபோன அவர்கள் ராணுவத்தின் தியாகங்களை நினைத்து ஜனகராஜ் சிரிக்க்கிறமாதிரித்தான் நம்மால் சிரிக்க முடியும்.
-
இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - டக்ளஸ்
ஒவ்வொரு ஆட்சியிலும் பதவி பெற்று ஆசனத்தில் அமர்ந்ததும் பேட்டிகளின்போது ஒருபக்கமா சரிந்துகொண்டு நக்கல் சிரிப்பு சிரித்தபடி , ’'’பிரபாகரன் என்னை கொல்லபாத்தார் அவர் கனவிலும் நினைச்சிருக்கமாட்டார் நான் இருப்பேன் அவர் சாவார் எண்டு’’, ‘’புலிகளுக்கும் முள்ளி வாய்க்கால் நினைவுகளுக்கும் பல்கலை கழக வளாகத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட கூடாது” புலிகளால் எமது இனம் அழிவைமட்டுமே சந்தித்தது என்கிறமாதிரி சொல்லுவீங்களே இந்த தேர்தல் நேரம் அதை எல்லாம் பேசி தமிழர்களிடம் வாக்கு கேக்கலாமே, எதுக்கு அதுபற்றி ஒண்டும் பேசாமல் ஒரு ஆறு ஆசனம் எண்டாலும் தாங்கோ எண்டு அழுகிறீர்கள்? பதவியிருக்கும்போது சிங்களவர்கள் கழுத்திலிருந்து தமிழர்களை பார்த்து கருடா சவுக்கியமா என்று கேட்பது , பதவி பறிபோனதும் மறுபடியும் தமிழர்களிட்டையே வந்து அழுவது. மூன்று தசாப்தங்களாக சிங்களவர்கள் தயவில் தமிழர்களை அதட்டி வாழ்ந்தீர்களே, அதே சிங்களவர்களின் கட்சி ஒன்றில் இணைந்து சிங்கள பகுதியொன்றில் நின்று வென்று காட்டுங்கள் அப்போ தெரியும் நீங்கள் காட்டிய சிங்கள எஜமானர்களின் விசுவாசத்துக்கு சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் ஒரு எலும்பு துண்டாவது உங்களுக்கு போடுவார்களா என்று. இந்த பொது தேர்தலில் தமிழர் பகுதியில் யார் வென்றாலும் பரவாயில்லை, காலம் காலமாக தமிழ்கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் எம்மண்ணிலிருந்து அடியோடு களையப்பட்டு புதியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகி நேர்மையுடன் இவர்கள் கண்முன்னாலேயே நடமாடினால் மகிழ்ச்சி.
-
40 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம்
ஒரு தடவை சார்ஜ் பண்ணினா 160 கிலோமீட்டர் பறக்கலாமா ? அடேங்கப்பா பிரமாதம், அப்போ இடையில சார்ஜ் முடிஞ்சா எமலோகத்துக்கு இலவச விசாவா? ஹை ரெக் விஷயங்களென்பது முறையான பராமரிப்பு பொறுப்பான பயணிகள் சிறப்பான தொடர்பாடல்கள் முக்கியம் சாதாரண ரயில் விஷயத்திலேயே மாசம் ஒருமுறை ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்களை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு பயணிகளை காவு வாங்கும் இந்தியா போன்ற நாடுகளில் இது எவ்வளவு காலம் சாத்தியமென்பது நம்பியார் ஸ்டைல்ல சொல்லணும் என்றால் சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்தான். மிகபெரும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டிய விமான பயணத்தின்போதே பிளைட் லாண்ட் ஆகி விமான நிலையத்துடன் இணைக்க முன்னரே முன்னமே தியேட்டரில் படம் முடிஞ்சு வெளியே யார் முதலில் ஓடுவது என்று செயல்பட்டு விமான பணியாளரிடம் தூஷணத்தில் பேச்சு வாங்கும் மக்கள் கூட்டம் உள்ள இந்தியாவில்... இந்த லிங்கையும் பாருங்க. https://www.youtube.com/shorts/Tk0yeqkP0G4 ஏர் டாக்ஸி பயன்பாடு அதிகரித்தால் ஆக குறைந்தது ரோட்டில ஓடுற டாக்ஸி டிரைவர்கள் வருமானம் போச்சே என்ற கோபத்தில் ஏர் டாக்ஸிக்கு கீழ இருந்து கல்லால எறியவும் வாய்ப்பிருக்கு. கடைசியில ஏர் டாக்ஸி பயணம் இப்படி போக வாய்ப்பிருக்கு
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
அது என்ன தெரியுமா தமிழ்சிறி, இவர்கள் என்னதான் படிச்சிருந்தாலும் இவர்கள் சார்ந்த கட்சியும் அதன் கொள்கைகளும் வாக்குறுதிகளும் பரப்புரைகளும் மிக மிக பழமையான உத்திகள். அந்த உத்திகள் இந்த டிஜிட்டல் காலத்தில் பத்து வயசு பையனைகூட ஏமாற்ற பயன்படாது என்பது தெரியாமலே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.. அதற்கு உதாரணம் இது உழுத வயலை மட்டுமல்ல ஏற்கனவே முளைவிட்ட நிலத்தில் ஏரோட்டும் முதல் தமிழனும் இவர்தான். ஏர் கார ஐயா என்னமோ குனிஞ்சு பாக்குறமாதிரி தெரியுது , அவர் மைண்ட் வாய்ஸ் குறுக்காலபோனது படம் காட்டுறன் எண்டு நான் வைச்சிருந்த ஒரு ஏரையும் உடைச்சு போட்டுதே என்றொரு சுமந்துவ திட்டுற மாதிரி இருக்கு .
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
விபரம் உள்ள நம்ம விளங்க நினைப்பவனிடமிருந்து இப்படியொரு வீணாபோன கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை😶
-
சமஷ்டியே தீர்வெனக்கூறும் தமிழரசுக் கட்சி இருக்கும் போது “நிழல்” கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை - சுமந்திரன்
சமஸ்டி என்ன ஒரு சட்டி பானைகூட உங்களால் வாங்கி தர முடியாது, தேர்தலில் தமிழ்கட்சிகள் படுதோல்வி அடைந்தால் கண்டிப்பா அநுர உங்களது சொத்து விபரங்களையும் கிண்டுவான், இப்போ பேசினா ஒருவேளை தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்களோ எண்ட பயத்துல விட்டு பிடிக்கிறான். இப்பவே முற்றவெளியில் சுண்டல் விக்க பழகுங்க தேர்தலுக்கப்புறம் பொழுது போகும்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
ஆம் கோசான் ஏறக்குறைய ஒரு மாதம் முன்னாடி இது சம்பந்தமாக பலதடவை எழுதிவிட்டேன், அதிலொன்று காலம் காலமாக தமிழ்கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை சிங்கள கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை எனும்போது மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் அதில் மாற்றமில்லை. உங்கள் பயண கட்டுரையை படிக்க வேண்டும் ஊர் புதினம் பக்கமே அதிகமாக குப்பை கொட்டிவிட்டு போவதால் அதை படிக்க தவறிவிட்டேன்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
அவர் ஆரம்பகால யாழ்ப்பாண யூடியூப்பர் , இவருக்குத்தான் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ், இவர் எதேச்சையாக ஒருதடவை அநுரவீட்டுக்குபோய் பிஸ்கட் தேத்தண்ணி எல்லாம் குடிச்சு வந்தார் , , அப்போது இவருக்கு தெரிந்திருக்கவில்லை இலங்கை முழுவதும் இவர் பிரபல்யமாகபோறார் எண்டு, சிங்கள செய்திதாள்கள், தொலைகாட்சியிலெல்லாம் இவர் அநுர வீட்டுக்கு போனதுபற்றி செய்தி வந்தது, வீடியோ போட்டு அண்ணன் விடிய எழும்பி பார்த்தால் அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை, யாழ் யூடியூப்பர்ஸுக்கு 50 பேர் பார்வையிடுவதே பெரிய விஷயம், இவரின் அந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர் , 6000 பேருக்குமேல் கருத்துக்கள் இட்டனர், அதில் முக்கால்வாசிபேர் சிங்களவர் ஒரேநாளில் மேலதிகமாக 100k சப்ஸ்கிரைப்பர்ஸ் அவருக்கு கிடைத்தனர், அத்தோடு அவர் அகில இலங்கை சிங்கள விசிறியானார், உடல் மண்ணுக்கு உயிர் அநுரவுக்கு என்ற ரேஞ்சுக்கு போனார். வெளிநாட்டிலிருந்து எம்மவர் சிலர் இப்படி பண்ணாதீங்கோ எண்டுசொல்லியும் மிரட்டியும் பார்த்தார்கள், தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்கு போன் பண்ணினவர்களின் நம்பரையும் பொதுவெளியில் பகிர்ந்தார். இவர்போல இன்னுமொருத்தர் இருக்கார் அவருக்கு கடந்த ஒரு மாசமா அநுரவை தவிர வேற எதுவும் தெரியாது அவர் : பிரச்சனை என்னவென்றால் பல இளைஞர்கள் இப்போது வேலை வெட்டியைவிட்டு யூடியூப்பே முழுநேர வேலையாக செய்கிறார்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், மாசம் முடிய காசு வேணுமே. அதனால் பரபரப்புக்காக என்ன என்னமோ எல்லாம் செய்து பார்த்தார்கள், என் உயிருக்கு ஆபத்து , இதுதான் எனது கடைசி காணொலி என்றெல்லாம் போட்டு எவராவது பாப்பாங்களா என்று அலைவார்கள், எத்தனைநாளுக்குத்தான் யாழ்ப்பாணத்தை சுற்றிக்காட்டுவது? அவர்களுக்கு இப்போ கிடைத்த வரம் அநுர அலை அதைவைத்து பிழைப்பு ஓட்டுகிறார்கள், அவர்களுக்கு தேவை வருமானம். நிரந்தரவேலை, கல்வி, தொழில் முயற்சி என்று எதுவுமில்லாமல் விடிய எழுந்தால் கமராவும் கையுமாக அலைகிறார்கள், திடீரென்று யூடியூப் வருமானம் ஒருநாள் நின்றுபோனால் வருஷங்களையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு முகட்டை பார்த்துக்கொண்டு முதுகை சொறிய வேண்டியதுதான்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள் 2 நாள்ல திறக்கபோறாங்கள் எண்டு தெரிஞ்சுதான் பயபுள்ள அறிக்கை விட்டிருக்காரு போல, இனிமே என்ன அச்சுவேலி வயாவிளான் வீதியை நான் சொல்லியே ஜனாதிபதி திறந்து வைத்தார் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு ஆயுதமா பயன்படுத்தலாம்.
-
கனடாவில் நகைகடை கொள்ளை
பட்டபகலில் ஒன்பதுபேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொருக்கி நகைகளை மூட்டை கட்டி எடுத்து போகிறார்கள். இலங்கை இந்தியாவில்கூட ஒரு நகைகடைக்கு இவ்வளவு பலவீனமான பாதுகாப்பு இருக்குமா தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த சம்பவத்தின் பின்னால் நம்மவர்களின் கைகளும் இருக்கும் என்றே எண்ண தோன்றும்.
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
யாரோ பேசி போட்டாங்கள்போல, ஏண்டா உலக வல்லரசுகளில் ஒண்டா இருந்துகொண்டு இதெல்லாம் ஒரு உதவியா எண்டு அதனாலதான் மான பிரச்சனையில மல்டி மில்லியன் ரூபா கொடுக்குறான்போல
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
இலங்கை காசுக்கு மூண்டு கோடி, மூண்டு கோடியில் இலங்கையில் இப்போ மூண்டுபரப்பு காணிகூட வாங்க முடியாது, இதை வைச்சு எப்படி இலங்கை முழுவதும் நிவாரணம் வழங்குறது? எனக்கு தெரிந்து சர்வதேச அளவில் ஒருநாடு இன்னொருநாட்டுக்கு செய்த ஆககுறைந்த நிதி உதவி இதுவாதானிருக்கும். பரவாயில்ல, எதுவா இருந்தாலும் உதவி உதவிதான், ஆனாலும் எது குடுத்தாலும் வாங்குவாங்கள் எண்டு தெரிஞ்சு கொடுப்பது எகத்தாளம்.
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
சரிவிடுங்க பெரிசு, பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்று சொன்ன லெனினின் நாட்டுடன் நெருங்கிய பொருளாதார ராணுவ தொடர்பெல்லாம் வைச்சிருந்திருக்கிறீங்க, அடிக்கடி கை குலுக்கி இருக்கிறீங்க அந்த பன்றி தொழுவத்தில் ஜனாதிபதி பிரதமர், அமைச்சர் என்றெல்லாம் பதவி வகிச்சிருக்கீங்க, அப்போ வராத அசிங்கமா இப்போ வந்துட போகுது?
-
வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு 34 ஆவது வருட நினைவு
அதாவது தமிழர்களுக்கு நடுவிலே வாழ்ந்து வியாபாரம் கல்வி வேலை வாய்ப்பு என்று மீண்டும் தமது இருத்தலை உறுதிபடுத்திக்கொண்டாலும் போர்க்கால நிலைகளில் அனைத்து இனத்திற்கும் கசப்பான அனுபவங்கள் தவிர்க்க முடியாமலே உண்டு, ஆனால் முஸ்லீம்கள் மட்டும் பழசை கிளறி கிளறி தமிழர்களுடன் வன்மம் வளர்க்க சொல்லி தமது அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களாம். நாலாயிரம் ராஜநாகங்களுக்கு இடையிலும் மனிதன் வாழ்க்கை நடத்திட்டு போகலாம் நானூறு இஸ்லாமியர்களுடன் ஒன்று சேர்ந்து பிற இனம் வாழ்வதென்பது கையால விசுக்கி காட்டு தீயை அணைப்பதுபோலத்தான் சாத்தியமே இல்லாதது. முன்பெல்லாம் முஸ்லிம்கள் வெளியேற்றம்பற்றி புத்தளம் மட்டக்களப்பில்தான் கிளறி கிளறி வன்மம் வளர்த்தார்கள், இப்போ அவர்களுக்கு எல்லாமே சுமுகத்திற்கு வந்த பின்னரும், 90%க்கு மேற்பட்ட தமிழர்களுடன் அனைத்துவழியிலும் படிப்படியாக வளர்ச்சியின் உச்சம் தொடும் யாழைப்பார்த்து வயித்தெரிச்சலில் யாழ்ப்பாணத்திலும் வன்மம் ஆரம்பிக்கிறார்கள். வன்மம் வளர்க்க தமது தலைமுறைக்கு சொல்லி கொடுக்கிறார்கள். இதே கூட்டத்தில் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து தமிழர்களுடன் எப்படி சகோதரத்துவத்துடன் வாழவேண்டுமென்று தமது இந்த தலைமுறைக்கு சொல்லி கொடுத்திருந்தால் நாமும் சேர்ந்து இவர்களுக்கு தலை தடவிவிட தயங்கவே போவதில்லை. என்னமோ தமிழர்பகுதிக்குள் இவர்கள் இனி ஒருகாலமும் உள் நுழையமுடியாதபடி நிலமை இப்போதும் இருக்கு என்பதுபோல் இவர்களுக்காக அனுதாபப்பட்டு அச்சச்சோ முஸ்லிம்களை வெளியேற்றினது தவறு என்று பூனைக்கு தலையை தடவிவிடுவதுபோல் தடவிவிட்டு பரிதாபப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சில தமிழ் தலை தடவிவிடல் திலகங்களுக்காக ஆவது சரி சரி பழசை மறந்து சுமுகமா வாழ்வோம் என்று இஸ்லாமியர்கள் நினைக்கலாம் . ஒருபோது அதை செய்ய மாட்டார்கள். கிழக்கில் காத்தான்குடி உட்பட்ட சில பிரதேசங்களில் ஏறக்குறைய தனி இஸ்லாமியநாடுபோல் ஆக்கி வைத்திருப்பதையும் கல்முனை பிரதேசசபை விவகாரத்தில் இவர்கள் வளர்க்கும் தமிழர்களுக்கெதிரான விசமத்துக்கும் காரணம் இவர்கள்மீது தமிழர்கள் மேற்கொண்ட இன சுத்திகரிப்பா? 70% வீத தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் 30% வீத இஸ்லாமியர்கள் சுதந்திரமாக வாழலாம் , 70% இஸ்லாமியர்களுக்கு நடுவில் 30% தமிழர்கள் சுதந்திரமா செயற்பட முடியுமா? முடிந்தவரை 100% முஸ்லிம் பிரதேசமாக்கவே துடிப்பார்கள். இன சுத்திகரிப்பில் முன்னணியில் நிற்பவர்கள் யாரென்ற கேள்வியை இவர்களுக்காக பரிதாப படுகிறவர்களிடமே விட்டுவிடலாம்.
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
பையனின் வயசு கொந்தளிக்க வைக்குது , கொந்தளிக்கணும் அப்போதானே பையன், ஆனா பையா யதார்த்தம்னு ஒண்ணு இருக்கு அது நாம் விரும்பாவிட்டாலும் எம்மை ஏற்றுக்கொள்ள வைக்கும். இது பையனுக்கு அறிவுரை சொல்ல இல்லை பொதுவாக மனசில் பட்டதை சொல்கிறேன், உக்ரேனுக்கான உதவிகள் என்று நேட்டோ இதுவரை செய்தது யானை பசிக்கு சோளம் பொரிதான், ஐரோப்பாவின் ஆயுத தொழிற்சாலைகள் உக்ரேனுக்காக இரவுபகல் வேலை செய்தால் உக்ரேனுக்கு ஆயிரக்கணக்கில் செய்மதியால் வழிநடத்தப்படும் ஏவுகணைகள், மல்டி பரல்கள் ஆட்லறிகள், டாங்கிகள், வெடிபொருட்கள் என்று கொடுத்திருக்கலாம், நூற்றுக்கணக்கில் F-16,F-35 கொடுத்திருக்கலாம், கொடுத்திருந்தால் உக்ரேன் படைகள் மொஸ்கோ வரை சென்றிருக்கும், ஆக குறைந்தது ரஷ்யாவின் எல்லைவரை உக்ரேனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கும், .ஆனா அவர்கள் கொடுப்பதோ நூற்றுக்கணக்கில்தான் அதுவும் உக்ரேன் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிய பின்புதான், உலகின் பெரும் வலிமையான விமானபடைகளில் ஒன்றான ரஷ்ய விமானபடையை எதிர்க்க நேட்டோ கொடுத்தது ஆக 16 விமானங்கள், அதுவும் பூரண பயிற்சி பெறாத உக்ரேன் விமானிகளுடன், அதனால்தான் ஆரம்பத்திலேயே ஓரிரு F 16 விமானங்கள் உக்ரேன் விமானபடையின் தவறான இயக்கத்தால் அழிந்தது. ஆனாலும் நேட்டோவின் சிறு உதவியை கொண்டு போரிடும் உக்ரேனையே ரஷ்யாவால் இரண்டு வருடங்களாக முழுமையாக கைப்பற்ற முடியவில்லை . இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தவர்களென உக்ரேனின் மக்கள் தொகை இரு வருடத்தில் ஒருகோடியால் வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஐநா அறிவித்துள்ளது, காசா போரில் ஆயிரம் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வரலாம், ஆனால் பலமடங்கு வலிமைமிக்க எதிரியால் அவர்களும் அழிக்கப்படுவார்கள் அதுதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் அழிவுநிலைக்கு வருகிறதென்றால் அமெரிக்கா நேரடியாக களத்தில் குதிக்கும் என்பதற்கு இப்போதே அவர்கள் இஸ்ரேல் அருகே நிறுத்தி வைத்துள்ள விமானம்தாங்கி கப்பல்கள் சாட்சி, அமெரிக்கா நேரடியாக குதித்த எந்த போரிலும் ஐரோப்பியநாடுகள் அவுஸ்திரேலியா கண்ணை மூடிக்கொண்டு குதிக்கும் என்பதற்கு வியட்நாம் போரிலிருந்து,ஈராக், ஆப்கான் போர்கள் சாட்சி. அவர்களை பொறுத்தவரை தமது மேலாதிக்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எவரும் சவாலாயிருக்க கூடாது, இருந்தால் அழித்தொழிக்கப்படவேண்டுமென்ற கொள்கையிலிருப்பவர்கள். இப்போது காசா நிலவரம் ஏறக்குறைய முடிவுக்கு வருகிறது, வடக்கு காசாவில் கதவு போட்டு பூட்டியமாதிரி சில லட்சம் மக்களை முற்றுகைக்குள்ளாக்கி அந்த கதவினூடாக மக்கள் அனைவரையும் பத்துநாட்களுக்குள் வெளியே வர சொல்லி ஒவ்வொருவராக பரிசோதித்து வெளியே எடுக்கபோறான், அதற்குள் வெளியேறாதவர்கள் கமாஸ் இயக்கத்தினர் என்று முடிவு செய்து அந்தபகுதி முழுவதும் பெரும் அழித்தொழிப்பு போரை ஆரம்பிக்கபோறான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன, இது அச்சுஅசல் முள்ளிவாய்க்கால் முடிவுதான். எனக்கு தினமலரின் பிற செய்திகளுடன் உடன்பாடு இல்லையென்றாலும், இந்த செய்தியில் எந்த பொய்களும் இல்லையென்பதால் இணைக்கிறேன். இந்த ஒரு வருடத்தில் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள் காயப்பட்டவர்களென ஏறக்குறைய இரண்டரை லட்சம் காசா மக்கள் கதை முடிந்தது ,இறுதி முற்றுகையுடன் அது இரட்டிப்பாகலாம் அப்போது இழந்த மக்கள் தொகை மொத்த காசா மக்கள் தொகையில் கால் பங்கு ஆகலாம். வெறும் பூச்சாண்டி காண்பிக்கும் ஈரானை நம்பி அழிந்துபோகும் கமாஸ் தனது நிலத்தையும் மக்களையும் சேர்த்தே அழித்துவிட்டு செல்கிறது. தனது இனத்திற்காக போர் புரிவது மட்டும் போராட்டமல்ல புறநிலைகள், எதிரியின் பலம் அனைத்தும் கணக்கிட்டு புத்திசாலிதனமா செயற்படுவதும் இனத்துக்கான போராட்டம்தான். ஒருவருடமாக எகிப்து கத்தாரில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டாமல் வீம்பு பிடித்து இப்போ அழிவின் நிலைக்கு சென்றுள்ள கமாஸ் தனது மக்களுக்காக எதை விட்டு செல்ல போகிறது என்பதற்கு கீழே சில காணொலிகள். இங்கு சிறியவர்களின் படங்களை மட்டும் ஏன் இணைக்கிறேன் என்றால் பெரியவர்களில் ஏறக்குறைய அனைவருமே ஈரானின் உசுப்பேத்தலை நம்பி கமாசின் பின்னால் நின்று அவர்கள் செய்யும் அனைத்தையும்ஆதரித்து அல்லாஹு அக்பர் என்று கொடி பிடித்தவர்களே.
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
இஸ்ரேலை அழிப்பதோ அல்லது இஸ்ரேலை தோற்கடிப்பதோ எந்த காலமும் சாத்தியமில்லாத காரியம். ஏனெனில் இஸ்ரேல் தோற்கும் என்றொரு கட்டம் வந்தால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் நேரடியாகவே இஸ்ரேலுக்காக களம் இறங்கும். வசதிபடைத்த அரபுநாடுகள் புத்திசாலிதனமாக இந்த போரை தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்தபடி ஒதுங்கிகொண்டன அவர்களுக்கு தெரியும் மேற்குலகின் சக்திபற்றி, அதனால் இவ்வளவு காலமாக அவர்கள் பாலைவன பூமியில் கட்டியெழுப்பிய தமது சொர்க்க வாழ்வை இந்த பிரச்சனைக்குள் மூக்கை நீட்டி இழக்க தயாரில்லை. ஈரான் என்ற கலவர பூமியின் பேச்சை கேட்டு இன்று காசாவிலும் லெபனானிலும் ஏமனிலும் சிரியாவிலும் வளர்ச்சி பல ஆண்டுகள் வாழ்க்கை பின்னோக்கி போயும் பல தலைமுறைகள் அங்கவீனமாகியும் , கட்டியெழுப்பப்பட்ட பூமி சுடுகாடாகியும் எந்த ஈரான் பேச்சைகேட்டு இஸ்ரேலுடன் போர் என்று முழங்கியதோ அத்தனை ஆயுத குழுக்களும் முக்கால் பங்கு அழிந்து எலும்பு கூடாகியும் வெடிகுண்டாலும் ஏவுகணைகளாலும் இன்னொரு பாலைவனம் உருவாக்கப்பட்டுவிட்டது. போராடி பார்த்தோம் முடியவில்லை, எம்மைவிட எம் எதிரி சக்தி வாய்ந்தவனாக இருக்கும்போது எமக்கு இழைக்கப்பட்டது அநியாயமாக இருந்தாலும் வேறு வழி இல்லை போராட்ட பாதையை மாற்றியே ஆகவேண்டும். இல்லையெனில் எஞ்சியிருக்கும் சந்ததியையும் முழுவதுமாக அங்கவீனர்களாகவும் குண்டுகளுக்கும் பலி கொடுத்து அனைத்தையுமே பறிகொடுத்து அடையாளத்தையே இழக்கவேண்டும். நமது போராட்டமும் வாழ்வும் காசா போலவே அமைந்தது ஆனால் எம்மை மீறிய சக்தி எம்மை வென்றபோது எஞ்சியிருந்த போராளிகளும் மக்களூம் ஆயுதமோதல்தான் தீர்வென்று அணிவகுக்கவில்லை, எமது மக்களின் இருப்பை உறுதி செய்ய வேறு வழியின்றி வேறு பாதையை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டோம். எப்படி இந்தியாவை நம்பி எமது போராட்டம் அம்மணமானதோ அதேபோல ஈரானை நம்பி காசா ,லெபனான், ஏமன் கதை முடிகிறது. ஈரான் பாலஸ்தீன லெபனான் மக்கள்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அவர்களை இஸ்ரேலிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற புனித எண்ணம் கொண்டிருந்தால், இஸ்ரேல் காசாவின்மீது போர் பிரகடனம் தொடுத்த அடுத்தவாரமே பெய்ரூட் வழியாக தெற்கு லெபனானுக்கு தமது படைகளை நகர்த்தி இஸ்ரேலுக்குள் நுழைந்து போர் தொடுத்து காசா மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்தியிருக்கவேண்டும். இன்றுவரை அப்பப்போ சிலநூறு ஏவுகணைகளை இஸ்ரேல்நோக்கி ஏவிவிட்டு தன்னை மறைத்துக்கொண்டது, இரண்டுமுறை இஸ்ரேல்மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளும் பாலஸ்தீன மக்களுக்கானதல்ல, முதல்தடவை சிரியாவின் தனது ராணூவ தளபதிகளை இஸ்ரேல் கொன்றதுக்காக , இரண்டாவதாக நசருல்லாவை இஸ்ரேல் கொன்றதுக்காக, தமது ஏவலாளிகள் இறந்த கோபத்தில் வந்த கோபம் அது, ஏதிலியான பாலஸ்தீன மக்கள்மீது கொண்ட அக்கறை அல்ல.
-
இவங்க இப்படிதான்
இந்தியர்களின் தற்கால நடவடிக்கைகள் அருவெருக்கதக்கதாகவும் அந்நாட்டு அரசுகள் மக்களை வெறுப்பேத்துவதுமாகவும் உள்ளது சந்தேகமேயில்லை. நீண்ட காலத்தின் முன்னர் இதற்கெல்லாம் முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள், அவர்கள் யாரென்று கடைசியில் சொல்லிவிடுகிறேன்: பொதுவெளியில் ஒண்ணுக்கடிப்பார்கள். ஹொலண்டிலிருந்து எல்லைவழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு கஞ்சா கடத்துவார்கள். பொது தொலைபேசி பூத்துக்களில் நாணயத்தில் நூலைகட்டி உள்ளேவிட்டு விட்டு பல மணிநேரம் ஊருக்கு பேசுவார்கள். சிகரெட் மெஷினுகளுக்கு உள்ளே கள்ள காசு குத்தியை போட்டு பெட்டிபெட்டியாக எடுப்பார்கள். ஆட்டை திருடி அதனை டெலிபோன் பூத்துக்களில் வைத்து உரித்து பொலிசில் மாட்டுப்பட்டு அது பொது செய்தியாகி பெருமை தேடி தருவார்கள். வேலை செய்யும் பாமில் ஆட்டுடன் உடலுறவு கொண்டு அகில உலகமும் பெருமைபட அமர்க்கள படுத்துவார்கள். பிரான்சில் போதைபொருள் கடத்தலில் கொடிகட்டி பறந்து அதை சுந்தரலிங்கம் எனும் தமிழ் பொலிஸ் அதிகாரியை வரவழைத்தே அந்நாட்டு அரசு அடக்கும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் பெரிய உணவகங்கள் ஹோட்டல்களிலிருந்து மது போத்தல்கள், பியர் கேசுகள், உரிச்ச முழு ஆடுகள் ,ஐஸ்ஸினால் இறுக்கப்பட்ட இறால் பெட்டிகளை குப்பை போடும் இடத்திற்கு கடத்தி சென்று பின்பு வீட்டுக்கு கடத்துவார்கள். சீட்டு பிடிக்கிறேன் என்று சொல்லி சொந்த இனம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசை ஆட்டையை போட்டுக்கொண்டு அமெரிக்காவரை ஓடுவார்கள். வெள்ளைக்காரன் உடல் வேர்வை சிந்தி பயிரிட்ட வெங்காயம் உருளைகிழங்கை சாக்கை கொண்டுபோய் இரவிரவாய் மூட்டையில் அள்ளிக்கொண்டு ஓடுவார்கள். பல பெயர்களில் பதிந்து சமூக உதவிபணம் எடுத்து வாழ்வு தந்த அந்நாட்டு வரி செலுத்தும் மக்களின் பணத்தை இரக்கமின்றி சுவை பார்ப்பார்கள். கோவில் விழாக்கள், வாகன தரிப்பிடங்கள், திரையரங்குகளில் கோடாலி கொத்து துப்பாக்கி சூடு கத்தி சொருவல் என்று அந்நாடு மக்களே நடுங்கும்படி நடந்து கொள்வார்கள். இன்னும் இருக்கு ரொம்ப நீளமாக எழுதவேண்டிவரும் , எழுதிக்கொண்டுபோனால் எனக்கும் போரடிக்கும் யாராவது இதை படித்தால் அவர்களுக்கும் போரடிக்கும் . அவர்கள் யாரென்றால் சாட்சாத் ஈழதமிழர்களாகிய நாங்களேதான். இந்தியர்கள் இப்போது யோக்கியமில்லை, நாங்கள் அக்காலத்தில் யோக்கியமில்லை. ஆக இந்த சேற்றில் கல்லெறிந்தால் அது என்மீதும் தெறிக்க வாய்ப்பிருக்கு.
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!
ஜனநாயக கூட்டணி எப்படியும் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஈழதமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காணும் கால கட்டம் நெருங்கி வருகிறது என்பதை நன்கறிந்த பக்கத்து வீட்டுக்காரியின் இந்த அட்டாக் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது. உள்நோக்கம் கொண்டது. ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால். வன்மையாக கண்டிக்கிறோம்.
-
சிங்கள பௌத்த மனோநிலையையே அநுர அரசாங்கமும் பின்பற்றுகின்றது ; சிறீதரன் தெரிவிப்பு!
பொது தேர்தலின் பின்னர் என்னாகபோகுதோ எம் வாழ்வு என்று அனைவருக்கும் மனசு படபடப்பது புரியுது, அந்த வரிசையில் கீழே உள்ள ஐயா அநுரவை இன்று சந்தித்திருக்கிறார், சுமந்திரன் ஏற்கனவே சந்தித்திருப்பதாக தகவல் , எல்லோரும் அடிச்சு பிடிச்சு அநுரவை சந்திப்பது தமிழ்மக்களின் அபிலாஷைகள் பற்றி பேசவாம், நம்பித்தானே ஆகணும் 'புதிய கடவுச்சீட்டுகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளமையும்' ஏதாவது புதுமையா தமிழ் விசுவாசத்தை காண்பிக்கவேண்டுமென்று பார்க்கிறார் ஆனால் சரிப்பட்டு வரவில்லை, ஆங்கிலத்தை முதல் இடத்தில் வைத்தால் ஆட்டோமெட்டிக்கா தமிழ் மூன்றாம் இடத்துக்குதானே போகும் அதிலென்ன ஆச்சரியம்? அப்படி என்றால் முதலில் குழம்பவேண்டியது சிங்களவர் ஏனென்றால் அடிக்கடி அவர்கள் சொல்லிக்கொள்ளூம் ஒரு பெளத்த சிங்கள நாட்டில் சிங்களம் இரண்டாமிடத்துக்கு போய்விட்டதே.
-
மனவலிமை உடையவரா நீங்கள்?
அதிகம் கோபபடாமல் இருந்தாலே மனவலிமை தானாக வந்துவிடும். கோபம் அதிகம் இருந்தால் அதிக நட்பு வட்டம் இருக்காது, இருக்கும் கொஞ்சமும் புட்டுக்கிட்டு போகும். உடலாலும் மனதாலும் எதிரிகள் அதிகமாகும் , எதிரிகள் அதிகமானால் எந்த மனவலிமை இருந்தாலும் அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை என்பதே அடியேனின் எண்ணம். எதிரிகள் அதிகம் இல்லையென்றால் எந்த சபைக்கும் கெளரவமாய் போய் வரலாம், நம்முடன் அதிக நட்பு கொண்டிராதவன்கூட நமக்கொரு பிரச்சனையென்றால் பரிந்து பேச வருவான். எடுத்ததுக்கெல்லாம் கோபம் கொண்டு தகராறு வளர்ப்பவர்களின் நண்பர்கள்கூட பொறுத்த நேரத்தில் காய் வெட்டிவிடுவார்கள்.
-
கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்க உதவுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்து
இதில் கிண்டலுக்கும் கேலிக்கும் எதுவுமில்லை, வளர்த்த நாயை காணாவிட்டாலே அழுது புலம்பும் மனிதம் பெற்று வளர்த்தவர்களுக்கு என்னானதோ என்று இதுவரை எந்த செய்தியும் இல்லையென்றபோது அவர்களை பொறுத்தவரை இந்த உலகம் அன்றோடு நின்றுவிட்டது, எந்தவகையிலும் இது சாத்தியப்பாடானது அல்ல என்று நமக்கு தெரிந்ததுபோல் அவர்களுக்கும் தெரிந்திருக்கும், அப்படியாவது தாம் வளர்த்தவர்கள் வீடு வந்து சேரமாட்டார்களா என்ற விசும்பல்தான் அது. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாட்டில் எதிர்கால ஆளும் கட்சி தேர்வில் ஓரளவாவது செல்வாக்கு செலுத்தகூடிய தமிழர் வாக்குவங்கி கொண்டது கனடா மட்டுமே, அவர்களே ஆட்சிக்கு வந்ததும் தமிழர் தெருவிழாக்கள், பொங்கல், புக்கையென்று கலந்துகொள்வதோடு ஒப்புக்கு ஒருசில அறிக்கைகள் அவ்வப்போது விடுவதுடன் தம் எல்லையை வரைந்து கொள்கிறார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர் யுத்தம் என்ற அங்கு நடந்ததையே அங்குள்ள எம் மக்களே மறக்கும் நிலைக்கு வந்ததுபோல் வாழ்வை பெரும் எடுப்பில் மாற்றி கொண்டுள்ளார்கள் , ஆனால் இன்றுவரை வாழ்க்கையை 15 வருடங்களுக்கு மேலாக உறங்குவதும் அழுவதும் அழுதுவிட்டு உறங்குவதுமாக இருக்கும் அவர்கள் வலி அனுபவித்து பார்க்க தேவையில்லை நினைத்து பார்த்தாலே எவருக்கும் வரகூடாத கொடூரம்தான்.
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
அவர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை சொத்துக்களை வாங்குவதன்மூலம் பிரதேசத்தை ஆக்கிரமிக்கிறார்கள். வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் காணிகளை வாங்குவதோ தம் பெயருக்கு மாற்றுவதோ முடியாது ஆனால் குத்தகையின் அடிப்படையில் 99 வருஷங்கள் பெற முடியும். வெளிநாட்டவர்கள் இலங்கையில் முதலீட்டு நிறுவனங்களில் 50%மான பங்குகளை கொண்டிருந்தால் அப்பார்ட்மெண்ட் ஹோட்டல் போன்ற சொத்துக்களை வாங்கலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த சிங்களவர் முஸ்லீம் வாக்குகளுக்காக பொங்குகிறார் என்று நினைக்கிறேன், இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டவர்கள் சகலவிதமான இலங்கை அரச அனுமதியுடனேயே சட்டரீதியாக உள் நுழைகிறார்கள் முதலீடுகளில் ஈடுபடுகிறார்கள். சுற்றுலாதலங்களை அண்டிய பகுதிகளில் அப்பாட்மெண்ட், ஹோட்டல்களை வாங்கி தமது பிரஜைகளுக்கு மட்டுமானதாக படிப்படியாக ஆக்குகிறார்கள். இலங்கை மட்டுமல்ல மேற்கத்தையநாடுகள் அனைத்திலுமே பெரும் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் யூதர்கள், அவர்களுக்கு இலங்கையில் சொத்து வாங்குவது தேத்தண்ணி குடிக்குற காசு. இதை சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தினாலன்றி வேறு எந்த அரசாங்கத்தினால் எந்த வழியில் தடுக்க முடியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். விரிவான தகவல்கள் இங்கே: https://www.lankapropertyweb.com/features/property-buying-for-foreigners.php?__cf_chl_tk=MmJCunvYVOIovCM289Vxd4I8sRSt2VJV8ow6yet1vb4-1729761863-1.0.1.1-v2leVM.RZqcpHHjiGHMYm_tJT9Si.yD2lJBGH.TUgK4 இலங்கையில் இஸ்ரேலியர்களின் பரம்பல் எவ்வாறுள்ளது என்பது பற்றி சந்துரு காட்சிபடுத்தியுள்ளார்