Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. அப்போ ஈழப்பிரியன் அண்ணாவின் ஆதரவு வைத்தியர் அர்ச்சுனாவுக்கா? இது முதலே தெரிஞ்சிருந்தா சுமந்திரனுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியிருப்பன். ஒருபக்கம் வைத்தியர் தன்னைதான் அடுத்த தேசிய தலைவர் எண்டு சொல்லிக்கொண்டு திரியிறார் எண்டு ஒரு குரூப் பிரச்சாரம், மற்றப்பக்கம் அர்ச்சுனா இரண்டு திருமணம் செய்தவர் எண்டு அடுத்த குரூப் இன்னொரு பக்கம் தேசியதலைவருக்கு பிறகு பிறந்த வேற ஒருத்தனும் மனிசன் இல்லையெண்டு ஒரு முன்னாள் போராளி அர்ச்சுனாகிட்டயே சொல்ல அவரு அசடு வழிந்ததும் ரசனைதான் டக்ளஸ் என்னடான்னா தேசிய தலைவரென்றால் அது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்தானாம் இன்னொரு குரூப் என்ன இருந்தாலும் சுமந்திரன் எம் அரசியலுக்கு அடித்தளம் போட்டவராம், சீமேந்து விக்கிற விலையில அவரோட தியாகமும் மெச்சதக்கது. ஆனாலும் அர்ச்சுனாக்கு ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்பிருக்கு என்பதே அங்குள்ளவர்கள் கருத்து கெளசல்யா உட்பட்ட மீதி ஐஞ்சுபேருக்கும் கஷ்டமாம் இந்த தேர்தல் முடியும்வரை இவங்க பண்ணு அளும்புகள பாத்தா >>>>>>>>>
  2. அப்படியே இந்த தவகரனுக்கு மட்டும் தனியே ஒரு கவிதை எழுதுங்கோ அண்ணை, கிளிநொச்சி சந்தைக்குள்ள புகுந்து சனத்தட்ட அநுரவுக்குத்தான் வாக்கு போடுங்கோ என்பதை அவர்கள் வாய்க்குள்ளாலயே புடுங்கி எடுக்க என்னமா படாத பாடு படுகிறார். தேர்தல் முறைமைப்படி பொதுமக்களிடம் தனிப்பட்ட ரீதியில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கருத்து கணிப்புக்கள் நடத்துவதே தவறு என்று நினைக்கிறேன், இதெல்லாம் எப்படி அனுமதியோ தெரியல,
  3. உங்கள் ஆட்சியை வீழ்த்தியதில் பெரும் பங்காற்றியவை. பொருளாதார நெருக்கடி முறையற்ற நிர்வாகம் ,ஊழல் பொருளாதாரத்தில் உச்சம் தொட்டுவிட்ட மேற்கத்தைய நாடுகளே ஒரே காலகட்ட பகுதியில் மேற்கொள்ளாத திட்டங்களையெல்லாம் வெத்தலை பாக்கு சுண்ணாம்புக்கே பக்கத்து வீட்டில் கடன் வாங்கும் இலங்கையில் மேற்கொண்டது உங்களுக்கே நீங்கள் அடித்துக்கொண்ட சாவுமணி. தாமரை கோபுரம், துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், ஒரே மூச்சில் அமுலுக்கு கொண்டுவந்த சேதன பசளை விவசாய திட்டம் என்பவை 75% காரணம் என்றால் அத்துடன் சேர்ந்து பொருளாதார நெருக்கடிக்கு தோள் கொடுத்து கொரோனாவும் வந்து உங்கள் பாவங்களின் பெயரால் இடியாய் இறங்கி குடும்ப ஆட்சியை சுடலைக்கு அனுப்பியது. எப்படி எல்லா நெருக்கடியும் ஒரேநேரத்தில் உங்களை சூழ்ந்து உங்களை தேர்வு செய்த மக்களே மூண்டே வருஷத்தில் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்று சிந்தித்து பார்த்தால் எல்லாத்தையும் மீறிய சக்தி ஏதோ ஒன்று இருக்கிறது என்று நம்பத்தான் தோன்றுகிறது அது ஓரிருநாளில் துடிக்க துடிக்க கொல்லப்பட்டு மண்ணுக்கு வந்து தம் உறவுகளுடன் வாழமுடியாமல் அலறியபடி பூமிக்கும் அண்டவெளிக்குமிடையே எம் நிலத்தை பார்த்தபடி அலையும் பல்லாயிரம் ஆத்மாக்களின் சாபமும், அவர்களை நினைத்து இன்றுவரை அழுதுகொண்டிருக்கும் லட்சம் உறவுகளின் சாபமாகவும் கூட இருக்கலாம். புலம்பெயர் புலிகள் சொன்னால் சிங்களவர்கள் கேட்பார்களா? அப்போ சஜித்தை தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்ற வன்மத்தில், 90 வீத சிங்களவர்களால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் சித்தப்பு கோட்டபாய புலம்பெயர் புலிகள் சொல்லித்தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா? புலி பூச்சாண்டி காட்டி சிங்களவர்களின் ரத்தத்தை சூடாக்கி ஆட்சியை பிடிக்கும் பழைய எத்தனங்கள் உங்கள் அப்பன் சித்தப்பன் காலத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது, இப்போ அவர்களின் பிரச்சனை பிறநாடுகள்போல் வேகமாக பொருளாதார வசதியில் முன்னேறவேண்டும் என்பதே. எனவே நாட்டை நாசமாக்கினீர்கள் என்ற கோபம் முள்ளிவாய்க்காலை நாங்கள் என்றும் நினைவில் வைத்திருப்பதுபோல் சிங்களவர்கள் மனசில் சில தசாப்தங்களுக்காவது தொடர்ந்தே ஆகும். தாங்கிக்குங்க அண்ணனுக்காக இதை நீங்க தாங்கித்தான் ஆகணும்.
  4. லண்டனில் கல்யாணவீட்டில் செருப்பை திருடுறவங்கள்போல திரிஞ்சதுக்கு இப்போ இலங்கையில் இருக்குற பாதுகாப்புக்கு என்ன குறைச்சல? நாங்கள் உங்களை தேடி தேடி கொல்ல, மொக்குத்தனமான மதவாத போராட்டம் நடத்துகிறவர்கள் போல் இனம் அல்ல, ஆயுதபோராட்டம் என்பது ஒரு போராட்ட வடிவமாக இருந்தது முயன்று பார்த்தோம் முடியவில்லை, அவரவர் வேலையை பார்க்க அடுத்த கட்டத்துக்கு போய்விட்டோம். ஆனால் ஆயுதபோராட்ட காலத்தில் நீங்கள் செய்த மகா பாதகங்கள் உங்கள் மனசை உறுத்துது அதனால் இன்றும் பயத்தில் மேலதிக பாதுகாப்பு கேக்குது. ஆயுத போராட்ட காலத்தின்ன் பின்னர் தமிழர்களின் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்த ஒரே ஜனாதிபதி அம்மையார் அவர்கள், வந்தவுடன் தமிழர்களுக்கு செலுத்திய புகழ்மிக்க நன்றிக்கடன்கள்: நவாலி தேவாலயம் படுகொலை நாகர்கோயில் பள்ளி மாணவர்கள் படுகொலை செம்மணி புதைகுழி படுகொலைகள் ஜெயசிக்குறு நடவடிக்கை படுகொலைகள் குமார் பொன்னம்பலம் படுகொலை மிருசுவில் படுகொலைகள் கிழக்கில் விஷேட அதிரடிப்படை மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையின் தமிழர்மீதான படுகொலைகள் அப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், இப்படி ஆயிரக்கணக்கானவர்களை சிரித்துக்கொண்டே கொன்றவர்களுக்கு தமது ஒத்தை உயிரென்றால் எவ்வளவு உயிர்பயம் வருது. நம்மில் சிலரிடையே இன்றும் தேர்தலை புலிகள் புறக்கணித்ததால்தான் மஹிந்த ஆட்சிக்கு வந்து எல்லாமே அழிந்து போனது என்று, சரி தேர்தலை புறக்கணிக்காமல் சந்திரிக்காவை தமிழர்கள் ஆதரித்ததால் மட்டும் என்ன நடந்தது? அக்காலகட்டத்தில் தங்கு தடையின்றி இழுவை மல்டி பரல்கள் , மோட்டர் குண்டுகள்,ஆயுதங்கள் முல்லைவரை எமது அமைப்பினால் கொண்டுவந்து இறக்கப்பட்டதால்தான் ஜெயசிக்குறு நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இல்லையென்றால் அன்றைக்கே ஒரு முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு முடிவு சந்திரிக்காவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
  5. விளங்க நினைப்பவன் , நான் எங்கே எழுதி இருக்கேன் சுமந்திரன் அமைச்சர் பதவியை பெறபோகிறார் என்று? நான் அர்த்தப்படுத்தியது பதவியென்று முன்னைய ஆட்சியிலிருந்ததுபோல் ஜனாதிபதி சட்டத்தரணி, அது,இது , மானே தேனே, பொன்மானே என்று எதாச்சும்... நிராகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அமைச்சர் பதவியென்று நான் அர்த்தப்படுத்தியது டக்ளசை, அவரும் ஓடோடி போய் அநுரவ சந்திச்சார் இல்லையா அதனால. நானும் பாக்கிறன் விளங்க நினைப்பவனின் அலசல்கள் இப்போலாம் கொஞ்சம் ஓவராதான் போய்க்கிட்டிருக்கு 😉
  6. ஆம் இதுக்கு முதலும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது பக்கத்து வீட்டுக்காரி நடத்திய பாரிய ராணுவ தாக்குதல் அது, இப்போ இது இரண்டாவது தாக்குதல் , அவர் யாருக்கு என்ன தீங்கு செய்தார் அந்த சொக்கநாதரின் திருவிளையாடலை ரவிராஜின் மனைவிமீதா காட்டணும்? இப்படிப்பட்ட கொலைவெறி தாக்குதல் கண்ணாடிக்கு பக்கத்தில நடந்தும் கண்ணாடில சிறுவெடிப்புகூட ஏற்படேல்ல போல? இது ஒரு மெடிக்கல் மிராகிள், நம்ம காரில எல்லாம் ஒரு கல்லு குறுணி பட்டானே வெடிப்பு விழுது.
  7. இதுபற்றி நானுட்பட பலரும் பல தடவை கருத்து பகிர்ந்ததுதான், தமிழ்சிறி நீங்கள் Mention பண்ணியதால் சொல்கிறேன். சுமந்திரனை தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதியாக தமிழர்களும் ஏற்றுக்கொண்டதில்லை சிங்களவர்களும் ஏற்றுக்கொண்டதில்லை அப்படியிருக்கும்போது இவர்களின் தீர்மானங்கள் ஆலோசனைகள் எந்த வகையில் செல்லுபடியாகும்? இவர் பற்றி ஒருமணிநேரமாக இவர்கள் உரையாடுவது அநாவசியமற்ற ஒன்றாகவே பலருக்கு படும், அடுத்து எமது அரசியல் தேர்வுகளாக எது இருக்க வேண்டும் யார் இருக்க வேண்டும் தலைமை தாங்கவேண்டும் என்பதை கற்றறிந்த இவர்கள் கை நீட்டி காட்டினால் அல்லது அடையாள படுத்தினால் அதில் ஒரு பயன் இருக்கும். சுமந்திரன் முன்னைய ஆட்சிகள்போல் சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு பதவிகளை பெற்று இந்த ஆட்சியிலும் வண்டியோட்டலாம் என்று நினைக்கிறார் போலும், ஆனால் நேற்று கிளிநொச்சியில் நடந்த கூட்டத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி , தமது கட்சியை சாராதர்களுக்கும் உங்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் எவருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருக்கிறார், இந்த காணொலியில் 31:57 நிமிடத்திலிருந்து அவர் கருத்துக்கள் உள்ளன. ஒருவேளை தென்பகுதி கட்சிகள் மட்டுமல்ல ,கடந்தகால தமிழ்கட்சிகள் மற்றும் சுமந்திரன் வகையறாக்கள் பற்றி யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் மக்கள் மனநிலையை நாடி பிடித்து பார்த்தும் இந்த கருத்தை சொல்லியிருக்கலாம். தேர்தலின் பின்னரே சிங்களத்தின் முகங்கள் தெளிவாகும். தமிழர் தேசியத்தை உறுதியாக நகர்த்த வேண்டுமென்றால், புலத்திலும் நிலத்திலும் உள்ள தமிழர்கள் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும், துரதிர்ஷ்டவசமாக புலத்திலும் பல பிரிவு தாயகத்திலும் பல பிரிவு , சிங்களவனிடம் உரிமை கேட்கபோக அரசியல் பேரம் பேச ஓரணி, ஒரே குரல் ஒற்றுமை வேண்டும் அது எங்கே வாழ்கிறது? அதனால்தான் இதுவரை தமிழர் தேசியம் பெயரில் குப்பை கொட்டிய அனைத்து கட்சிகளும் இந்த பொது தேர்தலில் ஓரம் கட்டப்படவேண்டும், நேர்மையும் திறமையுமுள்ள புதியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாக வேண்டும், தாயகத்தில் அரசியலும், புலத்தில் பொருளாதாரம் ஆலோசனைகள் , சர்வதேச தொடர்புகள் என்றும் ஒன்று சேர்ந்து ஒரேகோட்டில் நகர வேண்டும் என்பதே அங்கலாய்ப்பு இதெல்லாம் எந்தளவில் சாத்தியமாகும் என்பது காலத்தின் முடிவு., இந்த பொது தேர்தலில் தமிழர் அரசியலில் பெரும் மாற்றம் வேண்டும் புதியவர்களின் கையில் மக்கள் ப்ரதிநிதித்துவம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதே அங்குள்ள பெரும்பாலான மக்களின் விருப்பாக இருப்பதாகவும் தெரிகிறது. அப்படி புதியவர்களின் கையில் பொறுப்புகள் போனாலும் இந்த தேர்தல் அவர்களை இனம் காண மட்டுமே உதவி செய்யும், அடுத்த தேர்தலில்தான் அவர்களின் ஒற்றுமையும் அர்ப்பணிபும் நேர்மையும் கொண்டு ஒரு உறுதியான தமிழர் தலைமையாக தேர்தலை தமிழர் பகுதியிலிருந்து தேர்தலை எதிர்கொள்ள பயன்படும். ஒரே தலைமைத்துவமாக சிங்களத்துடன் பேரம் பேச தகுதி பெறும். இது எல்லாம் நக்கவேண்டும் நடந்தால் நல்லாயிருக்கும் ,அதுவரை எங்கே செல்லும் இந்த பாதை கேஸ்தான்.
  8. சில மாதங்கள் முன்பு பொதுவெளியில் ஹிஜாப் அணியாததால் ஒரு மாணவியை காவல்துறை அடித்தே கொன்றார்கள் பின்பு அது ஈரான் முழுவதும் பெரும் கலவரமானது. அதுக்கே அப்படியென்றால் அரை நிர்வாணமாக நின்றதுக்கு பொதுவெளியில் தூக்கிலிடுவார்களா, அல்லது தலையை வெட்டுவார்களா, இல்லை ஏற்கனவே வெட்டிவிட்டார்களா என்றே தோன்றும். ஐரோப்பா அமெரிக்கா பக்கம் அகதியா வரும் இஸ்லாமிய ஆண்கள் வந்து முதல் வேலையாக ஒரு வெள்ளைக்கார பெண்ணை பிடிப்பதுக்கு அவர்கள் மதத்தில் ஹராம் என்று சொல்லப்படும் பப் கிளப், பார், மேற்கத்திய இசை நிகழ்ச்சி என்று முழுமூச்சாக அலைவார்கள், ஆனால் அவர்களின் பெண்கள் கண்களைகூட தெளிவாக பார்க்க முடியாதபடி கறுப்பு உடையினால் மூடவேண்டுமென்றும் குரானை படித்தபடி அறைக்குள் முடங்கி கிடக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஆண்களை ஊர்மேய விட்டுவிட்டு பெண்களை மட்டும் மதத்துக்காக ஆயிரம் கட்டுப்பாடுகள் விதித்து கொல்வது எந்தவகை இறைநம்பிக்கை என்று எழுத்துகூட்டி படிச்சாலும் புரியாது. உடை என்பது மதத்தை கொண்டோ கலாச்சாரத்தை கொண்டோ எவர்மீதும் திணிக்கப்படுவது ஏற்புடையதல்ல, உடைகள் கண்ணியமானதாக இருந்தாலே போதுமானது. பெரும்பாலான ஈரான் ஈராக், ஆப்கான் பெண்கள் மேற்கத்தைய நாடுகளுக்கு வந்ததும் ஜீன்ஸ் ரீஷேர்ட்ட்க்கு மாறிவிடுகிறார்கள், ஒரு சிலர் மூடிக்கொண்டு திரிகிறார்கள் என்றால் அது அவர்கள் சுயவிருப்பு கிடையாது மதவெறியினால் வீட்டில் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்திலேயே தம் விருப்பை வேறு வழியின்று வெளிக்காட்ட முடியாமல் வாழ்கிறார்கள். ஏற்கனவே பலரை சொந்த அம்மா அப்பா சகோதரர்களே கொன்றும் இருக்கிறார்கள், பெரும்பாலான ஈரான் ஈராக் ஆப்கான் நாட்டு மக்கள் பிறருடன் நட்பாக பழக கூடியவர்கள், உலக நாகரிகத்துடன் சேர்ந்து கல்வி தொழில் என்று தமதுபாட்டில் நிம்மதியாக வாழகூடியவர்கள், அவர்களை மதவெறியூட்டி நாசமாக்குவதே இந்த பள்ளிவாசல் தொழுகைகளில்தான், இஸ்லாமியர்கள் அனைவருமே தமது மதம்தான் பெரியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாதவர்கள்,தமது மதம்தான் உலகத்தை ஆளனும் என்று மனசுக்குள் நினைப்பவர்கள் ஆனால் எல்லோருமே அதை பிற சமூகத்தில் திணிக்க நேரடியாக முயற்சிக்காதவர்கள். நம்மில் அல்லுலூயோ கோஷ்டி என்று ஒரு கூட்டம் நல்லாயிருக்குறவனை பிடிச்சு ஆண்டவர் வருகிறார் அடுத்த பஸ்ஸில எண்டு சொல்லி தண்ணிக்குள்ள தலையை முக்கியும் மேளங்களை அதிக ஒலியில் காதுக்கு கிட்ட கொண்டுப்போய் அறைந்தும் மனநோயாளி ஆக்குவார்கள், ஆனால் ஒரிஜினல் கத்தோலிக்கர்கள் எந்த மதவெறியுமில்லாது அவர்கள் வழிபாடு வாழ்க்கை, நட்புறவு என்று இருப்பார்கள். அதேபோல்தான் இந்த கூட்டமும் பலவீனமானவர்களை மதவெறியூட்டி மண்டையை கழுவி அடுத்த மதக்காரனை கொல்லவும், சக உயிர் என்று சிந்திக்காமல் தமது உறவு பெண்களை ஆயிரம் கட்டுப்பாடுகள் போட்டு கொல்லவும் செய்கிறார்கள். ஈரானை பொறுத்தவரை கொமேனி எனும் மதவெறி தலைவன் காலமாகும்வரை அடிப்படைவாதத்தில் சிக்கி தவிக்கும் பெண்கள் நிலமை கவலைக்கிடம்தான், அவரின் காலத்தின் பின்னர் ஓரளவாவது குறையும் வாய்ப்பு உண்டு என்பதே உலக மக்கள் எண்ணம்.
  9. தற்கால கட்டத்தில் பெரும் ராணுவ முகாம்களுக்கும் உயர் பாதுகாப்பு வலயத்திற்கும் யாரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதை தெளிவாக சொன்னால் சிங்களவர்களும் தமிழர்களும் அறிந்துகொள்ள வாய்ப்பாயிருக்கும்.
  10. சுவைப்பிரியன், அவர்களுக்கு உழைத்தே ஆகவேண்டிய நிலை வந்தே தீரும், வெளிநாட்டிலிருந்து காசு அனுப்புகிறவர்களுக்கு வயசு போக அவர்களின் வாரிசுகள் இலங்கையிலிருப்பவர்களுக்கு பணம் அனுப்ப போவதில்லை, நான் கஷ்டப்பட்டு உழைக்கிற காசை இவர்களுக்கு அனுப்ப நான் என்ன லூசா என்றுதான் கேட்பார்கள், இனிவரும் சந்ததிக்கு வெளிநாடு வருவது எல்லாம் சாத்தியமில்லாத ஒன்று வந்தாலும் அகதி மனுவை ஏற்காமலே திருப்பி அனுப்புவான்,குளம் வற்றிவிட்டால் கொக்குகள் இரைதேடி பறந்தே ஆக வேண்டும், அதையும் மீறி இவர்கள் வேலைக்கு போகவில்லையென்றால் போரினால் வாழ்வாதாரமிழந்து தடுமாறும் பெண்கள் முன்னாள் போராளிகள் , எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் வாடும் ஆயிரக்கணக்கான ஏழைகளும் அந்த இடத்தை நிரப்புவார்கள். புத்தன், யாதும் ஊரே யாவரும் Listen என்று அவர்களும் நினைத்திருந்தால் தரப்படுத்தல் வந்திருக்காது, கொழும்பிலிருந்து அடித்து கப்பலில் ஏற்றி அகதியாக, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பும் நிலமையும் வந்திருக்காது, சுனாமிக்கு அடுத்தவன் தந்த காசையே தமிழனுக்கு கொடுக்க கூடாது என்று நீதிமன்றம் செல்ல சொல்லியிருக்காது, ஒரேமொழி பேசும் மக்கள் கூட்டமுள்ல வடக்கு கிழக்கையும் பிரிச்சுவிட சதி பண்ணியிருக்காது. தகுதிகள் பார்த்து வேலைக்கமர்த்த தாய்வான்போல விமானம், தொலைபேசி,கார்கள் கம்பியூட்டர்களுக்கான மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடுவார்களென்று நினைக்கவில்லை, உள்ளூர் உற்பத்தியுடன் இணைந்து சந்தை வாய்ப்புக்களை கண்டறிவதும் இறக்கி ஏற்றும் வியாபார முயற்சிபோல் அங்கிருந்து இறக்கி மீள் உருவாக்கி மறுபடியும் ஏற்றுமதி செய்யும் தொழில் முயற்சிகளாகவே அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இவையெல்லாம் எந்தவேகத்தில் ஆரம்பிக்கப்பட போகின்றன நடைமுறைப்படுத்தப்பட போகின்றன என்பது வேறு விஷயம், மேற்குலகம்போல பலநூறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட போவதும் இல்லை, அந்த பிராந்திய மக்களை பணிக்கமர்த்த ஒப்பந்தம் போடாமலிருந்தால் பிற இனத்தவர்கள் வேலைக்கு வந்து அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிடுவார்கள் , அரசும் அவர்கள் ஆட்களென்றால் அதற்கான தங்குமிடங்கள் வேலைதிட்டங்களை அசுர வேகத்தில் செய்யும். பிறகு அது ரோட்டால சும்மா போனா ஆசாரியை கூப்பிட்டு சார் பிளீஸ் எனக்கு ஒரு ஆப்பு அடிச்சிட்டு போங்க என்று சொன்ன கதையாகிவிடும், முதலீடுகள், தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் வரியே அரசுக்கும் பிற இனங்களுக்கும் ஒருவகை வருமானம்தானே அது போதும் அவர்களுக்கு. இது எல்லாம் சிங்களத்துடன் முதலீடுகளை ஆரம்பிக்கவேண்டுமென்ற அவசரம் அல்ல இப்படியாவது எந்த உதவிகளும் இல்லாத எம்மக்கள் கூட்டத்தின் வறுமை ஒழியாதா என்ற ஏக்கம்தான்.
  11. மறைமுகமாக இலங்கைக்குள் இஸ்ரேலியர்களை அனுமதிக்ககூடாது என்பதை சுருக்கமாக சொல்கிறார்கள். எங்கோ இருக்குற காசாவுக்காக இலங்கையில் இவர்கள் போராடலாம் சுவரொட்டி ஒட்டலாம் ஊர்வலம் போகலாம்,பதாகைகள் தாங்கி நிற்கலாம், மதவழிபாட்டிடங்களில் சிறப்பு தொழுகை நடத்தலாம்ஆனால் பிறநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள், தமது இனம் மதம், மொழி,கவலைகளை ஆகியவற்றை அடையாளபடுத்தகூடாது அப்படியா? அதாவது இலங்கை என்பது இஸ்லாமியர்கள் சொற்படிதான் கேட்கவேண்டுமா? காசாவில் மக்கள் கொல்லபப்டுவது கவலையான விஷயம்தான் ஆனால் ஒரிஜினல் இஸ்லாமியநாடுகளான எகிப்தின் துறைமுகமூடாகத்தான் கப்பல் கப்பலாக வெடிமருந்துகள் ஆயுதங்கள் அமெரிக்க ஐரோப்பாவிலிருந்து இஸ்ரேலுக்கு கடத்தப்படுகிறது அந்த இஸ்லாமியநாடுகளுக்கெதிராக பொங்கலாமே ஏன் தயங்குகிறார்கள்? மைத்திரி ஆட்சியில் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா , ரிஷாத், கிழக்கு முதலமைச்சர் நசீர் ,மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் ஒரு மாகாணத்தில் முதலைமைச்சரும், ஆளுனரும் முஸ்லீம் என சிங்கள அரசின் மறைமுக ஆசியுடன் அதிவேகமாக காணிகள் அபகரிப்பு, வியாபாரம், மதமாற்றல்,மதராசா, பள்ளிவாசல் என்று தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கும் செயலில் இறங்கிய இவர்கள் சஹ்ரான் குண்டுவெடி தாக்குதலால் நிலமையே தலைகீழாகி சிங்களவர்களால் தூக்கியெறியப்பட்டு கொடுக்குகள் புடுங்கப்பட்டதால் இன்று அமைதிபோல் நடிக்கிறார்கள். ஐஎஸ் ஐஎஸ் , தலீபான், அல்கெய்டா கொடிகட்டி பறந்தபோது இங்கிருந்தபடி இன்ஷா அல்லாஹ் இன்னும் ஐஞ்சு வருஷத்தில் அமெரிக்கா , ஐரோப்பா எல்லாம் இஸ்லாமியநாடுகள் ஆகபோகிறது இறைவன் பெரியவன் என்றெல்லாம் முழங்கிய இவர்கள், அடுத்தவன் நாடுகளை உங்கள் மதநாடுகளாக்க நீங்கள் துடிக்கலாம் அடுத்தநாட்டுக்காரன் வந்து உங்கள் ஊரில் அவன் மொழியில்கூட எதுவும் எழுதகூடாது அப்படியா? இலங்கை எனும் நாட்டில் உள்ள காத்தான்குடியில் அனைத்தும் பச்சைமயமாக்கி அறிவிப்பு பலகைகள்கூட அரபி மொழியில் வைத்து இன்னொரு சவுதியின் மாதிரியை நீங்கள் உருவாக்கலாம், அடுத்தவன் வீடு எடுத்துகூட நீண்டகாலம் தங்ககூடாது அப்படியா? ஒரு நாட்டிற்குள் உல்லாச பயணிகளாக வருகிறவர்கள் எது செய்யலாம் செய்யகூடாது என்று தீர்மானிக்கவேண்டியது அறிவுறுத்த வேண்டியது அந்நாட்டு அரசுகள், வன்முறைகளில் அவர்கள் ஈடுபடாதவரை அந்த விடயங்களில் அறிவுரை சொல்லவும் ஆட்சேபனை செய்யவும் அறிக்கைவிடவும் நீங்கள் யார்? ஒருநாட்டில் பிறநாட்டுக்காரன் ஆக்கிரமிப்பு தவறுதான் ஆனால், நீங்கள் இங்கேயிருந்துகொண்டு சின்வாருக்காகவுய்ம், நசருல்லாவுக்காகவும் , இஸ்மாயில் ஹனியேவுக்காகவும் அழ முடியுமென்றால் அவனும் இங்குவந்து தனது போர் வீரர்களுக்காக அழலாம் அதில் எந்த தவறுமேயில்லை. காசாவில் குழந்தைகள் பெண்கள் கொல்லப்படுவது வேதனையானது மறுப்பதற்கில்லை இதே கவலையை ஒக்ரோபரில் இஸ்ரேலில் நுழைந்து பெண்கள் குழந்தைகள் முதியவர்களை கமாஸ் கொன்று குவித்தபோது உங்கள் கவலைகள் இதேயளவில் இருந்ததா? குழந்தைகளுக்குகிடையில் ஏது இஸ்ரேல் காசா என்று வித்தியாசம்? எங்காவது இஸ்ரேலின் கை பெருமெடுப்பில் ஓங்கும்போது மட்டுமே தோல்வியை சகிக்க முடியாமல் பெண்கள் குழந்தைகள் பற்றி இவர்கள் கவலை இருக்கிறது, மற்றும்படி அல்லாஹு அக்பர் என்று கூவியபடி. 3'H எனப்படும் ஹமாஸ் ஹுத்தி, ஹிஸ்புல்லாவுக்கு கோஷம் போடுவது மட்டும்தான் பெரும்பாலான முஸ்லீம்களின் கவலையெல்லாம் காசா மக்களைபற்றிய கவலையைவிட கமாஸ் ஹிஸ்புல்லா ஹுத்தி ஈரான் எல்லாம் இஸ்ரேலுக்கு அடிக்கவேண்டும் அவன் படை பலத்தை அழிக்கவேண்டும், சும்மாவாச்சும் தினமும் இஸ்ரேலின் 500 படையினர் கொல்லப்பட்டனர், 25 மெர்காவா டாங்குகள் அழிக்கப்பட்டன என்று சொல்லவேண்டும் என்பதிலேயே உள்ளது, அதுதான் உண்மை செய்தி மற்ற ஊடகங்களெல்லாம் பொய் சொல்கின்றன என்று வேறு தூஷணத்தில் திட்டுவார்கள்.. நீங்கள் அவனை அழிக்க நினைத்தால் அவன் உங்களை அழிப்பான் அப்புறம் எதுக்கு இடைநடுவில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கவலைபடுகிறீர்கள் உங்கள் கவலையில் ஏதாவது நியாயம் உள்ளதா?
  12. ஒருவேளை புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் முதலீடு செய்தால் பலமான எழுத்து ரீதியிலான ஒப்பந்தமொன்றை ஜனாதிபதியுடன் பகிரங்கமாக கைச்சாத்திட்ட பின்னரே இறங்கவேண்டும், வெளிநாட்டு முதலீடாளர்களுடன் ஜனாதிபதி நேரடியாக கையெழுத்திட்டு கை குலுக்கும்போது புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுடன் அது முடியாதா? அதில்: * ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கில் மட்டுமே முதலீடுகள் தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கப்படும். * அரசினதோ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளினதோ எந்தவிதமான நிர்ப்பந்தங்களும் தலையீடுகளும் இருக்க கூடாது * வடக்குகிழக்கில் நிறுவப்படும் தொழில் முயற்சிகளில் வடக்கு கிழக்கில் உள்ள மக்களே பணிக்கமர்த்தப்படுவார்கள், எக்காரணம் கொண்டும் இலங்கையின் பிற பகுதிகளிலிருந்து பணியாளர்களை கொண்டு வந்து திணிக்க கூடாது * முதலீட்டுக்கான ஏற்றுமதி இறக்குமதிகள் முதலீட்டாளர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் இடைதரகர்கள் அனுமதி இருக்க கூடாது. * முறையான அரச பாதுகாப்பு அவசியம் இல்லையென்றால் ஆளை வைத்தே கொளுத்துவாங்கள் இந்த நடைமுறைபடுத்தலில் ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் உடனடியாகவே ரத்தாகும் வகையில் சட்ட சிக்கலின்றி ஒப்பந்தங்கள் போடப்பட வேண்டும். இல்லையென்றால் உள்ளே வரவிட்டு எங்கள் காசில் தங்களோட இனத்தை வாழ வைத்துவிடுவான் சிங்களவன். மஹிந்த ஆட்சிகாலத்தில் லைக்கா நிறுவனம் சில முயற்சிகள் எடுத்து சார்க் மகாநாட்டுக்கெல்லாம் மஹிந்த அரசுக்கு நிதி உதவி செய்து , வவுனியாவில் வீட்டு திட்டம், விடுதலையாகும் போராளிகளுக்கு நிதி உதவி என்று இறங்கியது பின்பு சத்தம் போடாமலே ஒதுங்கி கொண்டார்கள் காரணம் சிங்கள/தமிழ் அரசியல் அழுத்தங்களாக மட்டுமே இருக்க முடியும்.
  13. கனடாவில் நகைகடை சம்பவத்தை தொடர்ந்து அடுத்த நிகழ்வாக தியேட்டருக்குள் தீ மூட்டுகிறார்கள் - வீரப்பரம்பரை சார்,
  14. நேற்று சந்தையில் ஒரு வேட்பாளர் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு விழுப்புண்ணடைந்த ஒரு முன்னாள் போராளிமுன் போய் நின்று பேசபோய் ஒரே அசிங்கமா போய்ச்சு குமாரு ரேஞ்சுக்கு ஆயிட்டார், போதாக்குறைக்கு ஒரு முன்னாள் போராளி முன் தானும் ஒரு போராளி என்று சொல்லபோக, அவர் கவுண்டமணி பாணியில ஓட்றா எந்திரிச்சு ஓடிர்றா எண்டு கலைச்சுவிட்டார் அப்படியே ஓடி போயிட்டார் அவர்.
  15. அமரன் படம் பார்த்தேன், யூடியூப் விமர்சனங்கள் , படம் பார்த்தவர்களின் கருத்துக்கள் எல்லாம் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை, படம் பார்க்க போகும்போது ரிசு பேப்பர் பலரும் கொண்டு போகிறார்கள் என்றெல்லாம் இருந்தது. அப்படியெல்லாம் இல்லை இது ஏற்கனவே வந்த படம்தான் அதன் பெயர் குருதிபுனல்! கமலஹாசன்தான் அமரன் தயாரிப்பாளர் என்பதால் தனது படத்தையே கொஞ்சம் உல்டா பண்ணி எடுத்திருக்கிறார் போலும். ராணுவத்தின் தியாகத்தை எண்ணி பேப்பர் துண்டுகளுடன் திரையரங்குக்கு போகும் மக்கள் மறுபக்கம் ராணுவத்த்தால் பேப்பர்போல கசக்கி கொளுத்தப்படும் மக்கள் பக்கமும் நின்று யோசிக்கவேண்டும், அதை செய்ய அவர்களின் அரசும் அரசியலும் அனுமதிக்க போவதில்லை. படம் பார்த்தவர்கள் எல்லாம் வசூலில் இது சாதனை படைக்கும், சிவகார்த்திகேயன் சாய் பல்லவிக்கு ஆஸ்கார் விருதுகூட கொடுக்கலாம் என்கிறார்கள், அழுகிறார்கள், ஆனால் குருதிபுனலில் கமல் நடிப்பில் 10 வீதம்கூட சிவகார்த்திகேயனிடம் இல்லை. ஆனால் உண்மையாகவே இந்த கதையில் வந்து இறந்துபோன முகுந்த் குடும்பத்துக்கு யாரும் உதவி செய்யவேண்டுமென்றோ அல்லது அவர்கள் பற்றி பேசவோ இல்லை. இவர்கள் உண்மையாகவே ராணுவ தியாகத்துக்கு அழுகிறார்களா அல்லது ராணுவம்போல் நடித்த கூத்தாடிகளுக்காக அழுகிறார்களா என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். சொந்தநாட்டு ராணுவ தியாகங்களை பார்த்து சிவாஜிகணேசன் அழுகிறமாதிரி அழுகிறார்கள் அது அவர்கள் கடமை , ஆனால் அந்நியநாட்டுக்குள் வந்து எம்மை கொன்றுவிட்டுபோன அவர்கள் ராணுவத்தின் தியாகங்களை நினைத்து ஜனகராஜ் சிரிக்க்கிறமாதிரித்தான் நம்மால் சிரிக்க முடியும்.
  16. ஒவ்வொரு ஆட்சியிலும் பதவி பெற்று ஆசனத்தில் அமர்ந்ததும் பேட்டிகளின்போது ஒருபக்கமா சரிந்துகொண்டு நக்கல் சிரிப்பு சிரித்தபடி , ’'’பிரபாகரன் என்னை கொல்லபாத்தார் அவர் கனவிலும் நினைச்சிருக்கமாட்டார் நான் இருப்பேன் அவர் சாவார் எண்டு’’, ‘’புலிகளுக்கும் முள்ளி வாய்க்கால் நினைவுகளுக்கும் பல்கலை கழக வளாகத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட கூடாது” புலிகளால் எமது இனம் அழிவைமட்டுமே சந்தித்தது என்கிறமாதிரி சொல்லுவீங்களே இந்த தேர்தல் நேரம் அதை எல்லாம் பேசி தமிழர்களிடம் வாக்கு கேக்கலாமே, எதுக்கு அதுபற்றி ஒண்டும் பேசாமல் ஒரு ஆறு ஆசனம் எண்டாலும் தாங்கோ எண்டு அழுகிறீர்கள்? பதவியிருக்கும்போது சிங்களவர்கள் கழுத்திலிருந்து தமிழர்களை பார்த்து கருடா சவுக்கியமா என்று கேட்பது , பதவி பறிபோனதும் மறுபடியும் தமிழர்களிட்டையே வந்து அழுவது. மூன்று தசாப்தங்களாக சிங்களவர்கள் தயவில் தமிழர்களை அதட்டி வாழ்ந்தீர்களே, அதே சிங்களவர்களின் கட்சி ஒன்றில் இணைந்து சிங்கள பகுதியொன்றில் நின்று வென்று காட்டுங்கள் அப்போ தெரியும் நீங்கள் காட்டிய சிங்கள எஜமானர்களின் விசுவாசத்துக்கு சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் ஒரு எலும்பு துண்டாவது உங்களுக்கு போடுவார்களா என்று. இந்த பொது தேர்தலில் தமிழர் பகுதியில் யார் வென்றாலும் பரவாயில்லை, காலம் காலமாக தமிழ்கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் எம்மண்ணிலிருந்து அடியோடு களையப்பட்டு புதியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகி நேர்மையுடன் இவர்கள் கண்முன்னாலேயே நடமாடினால் மகிழ்ச்சி.
  17. ஒரு தடவை சார்ஜ் பண்ணினா 160 கிலோமீட்டர் பறக்கலாமா ? அடேங்கப்பா பிரமாதம், அப்போ இடையில சார்ஜ் முடிஞ்சா எமலோகத்துக்கு இலவச விசாவா? ஹை ரெக் விஷயங்களென்பது முறையான பராமரிப்பு பொறுப்பான பயணிகள் சிறப்பான தொடர்பாடல்கள் முக்கியம் சாதாரண ரயில் விஷயத்திலேயே மாசம் ஒருமுறை ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்களை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு பயணிகளை காவு வாங்கும் இந்தியா போன்ற நாடுகளில் இது எவ்வளவு காலம் சாத்தியமென்பது நம்பியார் ஸ்டைல்ல சொல்லணும் என்றால் சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்தான். மிகபெரும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டிய விமான பயணத்தின்போதே பிளைட் லாண்ட் ஆகி விமான நிலையத்துடன் இணைக்க முன்னரே முன்னமே தியேட்டரில் படம் முடிஞ்சு வெளியே யார் முதலில் ஓடுவது என்று செயல்பட்டு விமான பணியாளரிடம் தூஷணத்தில் பேச்சு வாங்கும் மக்கள் கூட்டம் உள்ள இந்தியாவில்... இந்த லிங்கையும் பாருங்க. https://www.youtube.com/shorts/Tk0yeqkP0G4 ஏர் டாக்ஸி பயன்பாடு அதிகரித்தால் ஆக குறைந்தது ரோட்டில ஓடுற டாக்ஸி டிரைவர்கள் வருமானம் போச்சே என்ற கோபத்தில் ஏர் டாக்ஸிக்கு கீழ இருந்து கல்லால எறியவும் வாய்ப்பிருக்கு. கடைசியில ஏர் டாக்ஸி பயணம் இப்படி போக வாய்ப்பிருக்கு
  18. அது என்ன தெரியுமா தமிழ்சிறி, இவர்கள் என்னதான் படிச்சிருந்தாலும் இவர்கள் சார்ந்த கட்சியும் அதன் கொள்கைகளும் வாக்குறுதிகளும் பரப்புரைகளும் மிக மிக பழமையான உத்திகள். அந்த உத்திகள் இந்த டிஜிட்டல் காலத்தில் பத்து வயசு பையனைகூட ஏமாற்ற பயன்படாது என்பது தெரியாமலே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.. அதற்கு உதாரணம் இது உழுத வயலை மட்டுமல்ல ஏற்கனவே முளைவிட்ட நிலத்தில் ஏரோட்டும் முதல் தமிழனும் இவர்தான். ஏர் கார ஐயா என்னமோ குனிஞ்சு பாக்குறமாதிரி தெரியுது , அவர் மைண்ட் வாய்ஸ் குறுக்காலபோனது படம் காட்டுறன் எண்டு நான் வைச்சிருந்த ஒரு ஏரையும் உடைச்சு போட்டுதே என்றொரு சுமந்துவ திட்டுற மாதிரி இருக்கு .
  19. விபரம் உள்ள நம்ம விளங்க நினைப்பவனிடமிருந்து இப்படியொரு வீணாபோன கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை😶
  20. சமஸ்டி என்ன ஒரு சட்டி பானைகூட உங்களால் வாங்கி தர முடியாது, தேர்தலில் தமிழ்கட்சிகள் படுதோல்வி அடைந்தால் கண்டிப்பா அநுர உங்களது சொத்து விபரங்களையும் கிண்டுவான், இப்போ பேசினா ஒருவேளை தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்களோ எண்ட பயத்துல விட்டு பிடிக்கிறான். இப்பவே முற்றவெளியில் சுண்டல் விக்க பழகுங்க தேர்தலுக்கப்புறம் பொழுது போகும்.
  21. ஆம் கோசான் ஏறக்குறைய ஒரு மாதம் முன்னாடி இது சம்பந்தமாக பலதடவை எழுதிவிட்டேன், அதிலொன்று காலம் காலமாக தமிழ்கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை சிங்கள கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை எனும்போது மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் அதில் மாற்றமில்லை. உங்கள் பயண கட்டுரையை படிக்க வேண்டும் ஊர் புதினம் பக்கமே அதிகமாக குப்பை கொட்டிவிட்டு போவதால் அதை படிக்க தவறிவிட்டேன்.
  22. அவர் ஆரம்பகால யாழ்ப்பாண யூடியூப்பர் , இவருக்குத்தான் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ், இவர் எதேச்சையாக ஒருதடவை அநுரவீட்டுக்குபோய் பிஸ்கட் தேத்தண்ணி எல்லாம் குடிச்சு வந்தார் , , அப்போது இவருக்கு தெரிந்திருக்கவில்லை இலங்கை முழுவதும் இவர் பிரபல்யமாகபோறார் எண்டு, சிங்கள செய்திதாள்கள், தொலைகாட்சியிலெல்லாம் இவர் அநுர வீட்டுக்கு போனதுபற்றி செய்தி வந்தது, வீடியோ போட்டு அண்ணன் விடிய எழும்பி பார்த்தால் அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை, யாழ் யூடியூப்பர்ஸுக்கு 50 பேர் பார்வையிடுவதே பெரிய விஷயம், இவரின் அந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர் , 6000 பேருக்குமேல் கருத்துக்கள் இட்டனர், அதில் முக்கால்வாசிபேர் சிங்களவர் ஒரேநாளில் மேலதிகமாக 100k சப்ஸ்கிரைப்பர்ஸ் அவருக்கு கிடைத்தனர், அத்தோடு அவர் அகில இலங்கை சிங்கள விசிறியானார், உடல் மண்ணுக்கு உயிர் அநுரவுக்கு என்ற ரேஞ்சுக்கு போனார். வெளிநாட்டிலிருந்து எம்மவர் சிலர் இப்படி பண்ணாதீங்கோ எண்டுசொல்லியும் மிரட்டியும் பார்த்தார்கள், தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்கு போன் பண்ணினவர்களின் நம்பரையும் பொதுவெளியில் பகிர்ந்தார். இவர்போல இன்னுமொருத்தர் இருக்கார் அவருக்கு கடந்த ஒரு மாசமா அநுரவை தவிர வேற எதுவும் தெரியாது அவர் : பிரச்சனை என்னவென்றால் பல இளைஞர்கள் இப்போது வேலை வெட்டியைவிட்டு யூடியூப்பே முழுநேர வேலையாக செய்கிறார்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், மாசம் முடிய காசு வேணுமே. அதனால் பரபரப்புக்காக என்ன என்னமோ எல்லாம் செய்து பார்த்தார்கள், என் உயிருக்கு ஆபத்து , இதுதான் எனது கடைசி காணொலி என்றெல்லாம் போட்டு எவராவது பாப்பாங்களா என்று அலைவார்கள், எத்தனைநாளுக்குத்தான் யாழ்ப்பாணத்தை சுற்றிக்காட்டுவது? அவர்களுக்கு இப்போ கிடைத்த வரம் அநுர அலை அதைவைத்து பிழைப்பு ஓட்டுகிறார்கள், அவர்களுக்கு தேவை வருமானம். நிரந்தரவேலை, கல்வி, தொழில் முயற்சி என்று எதுவுமில்லாமல் விடிய எழுந்தால் கமராவும் கையுமாக அலைகிறார்கள், திடீரென்று யூடியூப் வருமானம் ஒருநாள் நின்றுபோனால் வருஷங்களையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு முகட்டை பார்த்துக்கொண்டு முதுகை சொறிய வேண்டியதுதான்.
  23. 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள் 2 நாள்ல திறக்கபோறாங்கள் எண்டு தெரிஞ்சுதான் பயபுள்ள அறிக்கை விட்டிருக்காரு போல, இனிமே என்ன அச்சுவேலி வயாவிளான் வீதியை நான் சொல்லியே ஜனாதிபதி திறந்து வைத்தார் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு ஆயுதமா பயன்படுத்தலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.