Everything posted by valavan
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
மேலங்கி அணியாமல் ஏன் செல்லவேண்டுமென்று கீழே உள்ள இணைப்பில் விளக்கம் தந்துள்ளார்கள், ஆன்மீக வழிபாடு சம்பந்தமான விளக்கங்களை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம். ===================================================== கோவிலுக்குள் சட்டை அணியாமல் ஏன் செல்ல வேண்டும்..?கோவிலுக்கு செல்வதால் உடல் ரீதியாக ஏற்படும் நல்ல மாற்றங்கள் என்ன..? கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம் சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது. இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது. பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. நம்முடைய முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை நாம் உணர வேண்டும் https://www.facebook.com/sunderesasharma/videos/கோவிலுக்குள்-சட்டை-அணியாமல்-ஏன்-செல்ல-வேண்டும்கோவிலுக்கு-செல்வதால்-உடல்-ரீதியாக-/1964023683853672/
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
உலகில் ஒவ்வொரு இனத்துக்கும் உடைகள், உணவு பழக்கங்கள், மதங்கள்,வழிபாட்டு முறைகள், கலாச்சாரங்கள் உண்டு. அடுத்தவனையும் சட்டத்தையும் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்காதவரை அவரவர் வாழ்க்கைமுறையில் வாழ்ந்திட்டு போகலாம், நமக்கு அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றாலோ விமர்சனத்துக்குரியது ஒன்று என்றாலோ அதிலிருந்து விலகியிருக்கலாம் யாரும் எதுவும் சொல்ல போவதில்லை. சீனாக்காரனிடம்போய் நீங்கள் எதுக்கு பாம்பு திங்கிறீர்கள் என்றோ, இஸ்லாமியர்களிடம்போய் எதுக்கு சுன்னத் பண்ணுகிறீர்களென்றோ யாரும் கேட்கமுடியாது கேட்பதை பிற மதங்களை பின்பற்றும் அரசுகள்கூட சட்டப்படி சரியென்று அங்கீகரிக்காது.
-
நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகளை உருவாகும் கல்வித்திட்டமே தேவை ; பிரதமர் ஹரினி
இது மிக பெரும் ஒன்றிணைந்த கல்வி சமூகத்தை கட்டியமைக்கும் திட்டம் , எவ்வளவு தூரம் சாத்தியமாக்குவீர்களோ தெரியாது. ஆனால் முடிந்தவரை இப்போதிலிருந்தே படிப்படியாக ஆங்கில கல்வி முறைமையை இலங்கை முழுவதும் அறிமுகபடுத்துங்கள், அவரவர் தாய்மொழி கட்டாய பாடமாக இருக்கட்டும். சிங்களவனுக்கும் தமிழனுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் இளம் தலைமுறையாவது மேற்குலக சிறுவர்கள்போல் தமக்குள்ளேயே ஒரு நட்புறவை உருவாக்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாக்குக்காக வன்மம் வளர்க்கும் அரசியலையும் அரசியல் வாதிகளையும் ஓரளவாவது ஓரம் கட்டலாம். ஆக குறைந்தது உயர்தரம்வரை படித்தால் கூட ஆங்கில அறிவின்மூலம் இணையவழி கல்வியின் மூலமாகவாவது சர்வதேச கல்விதரத்தை அடையலாம் வேலை வாய்ப்புகள் பெறலாம். சொந்த மொழியில் பாடத்திட்டங்களை கற்றுவிட்டு பல்கலைகழகம் கிடைக்கவில்லையென்றால் அப்பன் தொழிலையோ அல்லது அகப்பட்ட தொழிலையோ செய்துகொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடியபடி மறுபடியும் படிக்காத ஒரு சமூகம் போலவே வறுமையுடன் இளைஞர்களின் எதிர்காலம் தொடரும். இன்று மேற்குலகம் முழுவதும் இந்தியர்கள் பரந்து விரிவதற்கு அவர்களின் ஆங்கிலவழி கல்வியே 70% மான காரணம் மீதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டங்கள்.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை, ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
குற்றம் புரியாதவர்களை பொலிஸ் ஏன் தேடி வரபோறான் கோஷான், சுவிசிலும் பொலிஸ் அடியில் பிரபலமான அரோ, செங்காலன் என்று ஒரு சில கன்ரோனுகள் உண்டு அடி வெளியில் தெரியாது. பிரான்சில் பொலிஸ் போகமுடியாத அடையார் கறுவல் ஏரியாவுகளுமுண்டு என்று சொல்வார்கள். அடி பின்ன்னி எடுப்பதில் GIGN எனப்படும் பிரெஞ்ச் பொலிஸ் பிரிவு பெயர் போனது என்றும் சொல்வார்கள், எதுக்கும் GIGN கிட்ட அந்தகாலத்தில் தவணை முறையில் கேட்டு வாங்கின நம்ம @விசுகு அண்ணா வந்து விளக்கம் தருவார் என்று நம்புகிறேன், சும்மா கலாய்க்கிறேன் டென்ஷன் ஆகுறாரோ தெரியல. இஸ்லாமியர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் வெறுப்புணர்வு தோன்றியதோ அதேபோல இந்தியர்களுக்கெதிராக மேற்குலகில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இந்த இரு சமூகமும் ஓரிடத்தில் தமது எண்ணிக்கை அதிகமானால் புறசூழல்பற்றி எதுவும் சிந்திக்காது ஒரு நாட்டிற்குள் தமக்கென்று ஒரு தனிநாடு உருவாக்குவார்கள். அமெரிக்கா கனடாவில் எப்போதோ தோன்றிவிட்டது. இந்தியர்கள் பெரும்பான்மையான இடத்தில் இஸ்லாமியர்களைபோலவே அவர்கள் ஆட்களை தவிர வேறு எவருக்கும் வேலை கொடுக்கமாட்டார்கள் பகுதிநேர வேலைக்குகூட எடுக்க மாட்டார்கள், அதனால் வெள்ளைக்காரர்கள்கூட வேலை வாய்ப்பு பெறமுடியாமல் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதுதான் சோகம். இந்த சம்பவங்கள் மட்டுமல்ல இந்தியாவில் புளூ பிலிமைபார்த்துவிட்டு இங்கு வந்து வெள்ளைக்காரிகள் என்றால் எல்லோருமே படுக்கைக்கு உரியவர்கள் என்பதுபோல் நடந்து கொள்வது அவர்களை பார்த்து ஹிந்தி பாட்டு பாடுவது, சில வருடங்களின் முன்பு பாதாள ரயிலில்பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, எதிரே ஒரு வெள்ளைக்காரி அமைதியாக புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் பார்த்தாலே ஏதோபெரிய உத்தியோகத்திலிருப்பதுபோல் தெரிந்தது, சைட் சீட்டில் இருந்த இந்தியர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அவ கவனிக்கவே இல்லை , திடீரென்று எழுந்து நேரம் என்னமேடம் என்று கேட்டார் அவரும் சிரித்தபடியே சொன்னார் ,இத்தனைக்கும் அவனிடமும் போன் இருந்திருக்கும், ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றபோது தேங்க்யூ மேடம் என்று சொல்லிட்டு அந்த பெண்ணின் தலையை பிடித்து உதட்டில் அழுத்தி கிஸ் பண்ணிட்டு இறங்கி போனான். கதவை பூட்டிட்டு ரயில் கிளம்பிவிட்டது அந்தபெண் அப்படியே நிலை குலைந்து போனார் இயல்புக்கு வரவில்லை , ரிசு எடுத்து வாயை துடைத்துக்கொண்டே இருந்தார். அடுத்த ஸ்டேஷன் வந்ததும் நான் ஜம்ப் பண்ணி அடுத்த பெட்டியில ஏறிட்டன், அவனில உள்ள கோபத்தில் எனக்கு ஒரு காட்டு காட்டிவிட்டால் என்னாகும் மானம்?
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
அதை எப்படி என் வாயால சொல்றது ஈழப்பிரியன் அண்ணா எதுக்கு வெளிநாடு வந்தோம் ஏன் உயிரோட வாழ்றோம் என்ற காலகட்டம் எல்லாம் இருந்தது அதனாலதான் மேலதிக தகவல்கள் கேக்ககூடது எண்டு எஸ்கேப் ஆனேன் 😃
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
ஜேர்மனியில் 7 வருஷம் குப்பை கொட்டியிருக்கிறேன், மேலதிக தகவல்கள் கேக்க கூடாது வளவன் மனசு ரொம்ப கஷ்டப்படுமல்லோ தமிழ்சிறி🤪 அதவிட சுவிஸ் பொலிஸ்தான் மிகவும் சிறந்தது, இரவிரவா பிடிச்சு ஏத்தி அவர்கள் சட்ட உதவி பெறாதபடி விடியும் நேரம் பிளைட் கடலுக்கு மேல பறந்து கொண்டிருக்கும்.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
ஆனா ஒண்டு தமிழ்சிறி ஜேர்மன்காரன் சும்மாவே பஸ்ஸில வெளிநாட்டுக்காரனுக்கு பக்கத்துல இருக்கமாட்டான், ஆஹ் ஊஹ் எண்டால் எவ்வளவுகாலம் ஜேர்மனியில இருந்தாலும் சைஸ்ச அவுஸ்லாண்டர் எண்டு திட்டுவான், மற்ற வெளிநாட்டுக்காரர்போல அமைதியா இருக்கமாட்டான் ஒரு அளவுக்குமேல போனால் இளைஞர்கூட்டம் குருவிகூட்டம் எண்ட பெயாரில் ரவுண்டு கட்டி அடிப்பாங்கள், ஆயுத தாக்குதல்கூட செய்வாங்கள்.பொலிசும் ஜேர்மன்காரனுக்குத்தான் முதலிடம். அதனால இந்த விளையாட்டுகள் அவனிட்ட எடுபடாது. நோ கோஷான், அதையும் தாண்டிய வீரபாண்டிய கட்ட பொம்மனுகள், இல்லையெண்டால் வீடியோவில் 2:11 பொலிஸ்காரனையே நீ ஸ்டேஷனுக்கு போ எண்டு சொல்லிவாங்களா? உலகத்துல எங்கேயும் பொலிஸ்தான் கலவரம் பண்ணுறவங்கள வீட்ட போ எண்டு சொல்லும் , இது ரொம்ப புதுசா இருக்கு இவங்ககிட்ட இந்த உலகம் கத்துக்க வேண்டியது ஏராளம் இருக்கு.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
அதுல சோகம் என்னண்டால் ஓணாண்டி அமைதியா வாழுற தென்னியந்தியர்களுக்கும் சேர்த்து மொத்த போறானுகள், அல்லது தற்காலிக விசாவில் இருக்குறவங்கள திருப்பி அனுப்ப போறானுக. நம்மாக்கள் எதுக்கும் இலங்கை எண்டு சேர்ட்டில எழுதிக்கொண்டு போறது உசிருக்கு உத்தரவாதம். ஜேர்மனியிலும் வட இந்தியர்களின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரிப்பதாக ஒரு கேள்வி, வெள்ளைக்காரன் வட இந்தியனுக்கு அடிக்கேக்க நீங்களும் சேர்ந்து நாலு ஊமை குத்தா குத்திவிடுங்க தமிழ்சிறி
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
சில வருடங்களின் முன்னர் அவுஸ்திரேலியாவில் இதே வேலையை பார்த்து வட இந்தியர்கள் இரவு பகல் எந்த நேரத்திலும் நடமாட முடியாதபடி அந்நாட்டு இளைஞர்கள் தாக்கினார்கள், பின்பு இன நல்லிணக்கத்திற்காக அந்த அரசு ஏஆர் ரஹ்மானை கூப்பிட்டு இசை நிகழ்ச்சி எல்லாம் நடத்திச்சிது, இசை நிகழ்ச்சிமுடிய நிகழ்ச்சியில் தமிழ்பாட்டு அதிகம் பாடினதுக்காக வடக்கனுக குழம்பினாங்களாம். அதாவது கலவரத்தை அடக்க நடந்த இசை நிகழ்ச்சியில் கலவரம்.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
- தனியாளாக வாக்கு கேட்டுத் திரியும் அர்ச்சுனா.
பாத்தேன், அதை இணைச்சதே நான்தானே 😛- தனியாளாக வாக்கு கேட்டுத் திரியும் அர்ச்சுனா.
அப்போ ஈழப்பிரியன் அண்ணாவின் ஆதரவு வைத்தியர் அர்ச்சுனாவுக்கா? இது முதலே தெரிஞ்சிருந்தா சுமந்திரனுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியிருப்பன். ஒருபக்கம் வைத்தியர் தன்னைதான் அடுத்த தேசிய தலைவர் எண்டு சொல்லிக்கொண்டு திரியிறார் எண்டு ஒரு குரூப் பிரச்சாரம், மற்றப்பக்கம் அர்ச்சுனா இரண்டு திருமணம் செய்தவர் எண்டு அடுத்த குரூப் இன்னொரு பக்கம் தேசியதலைவருக்கு பிறகு பிறந்த வேற ஒருத்தனும் மனிசன் இல்லையெண்டு ஒரு முன்னாள் போராளி அர்ச்சுனாகிட்டயே சொல்ல அவரு அசடு வழிந்ததும் ரசனைதான் டக்ளஸ் என்னடான்னா தேசிய தலைவரென்றால் அது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்தானாம் இன்னொரு குரூப் என்ன இருந்தாலும் சுமந்திரன் எம் அரசியலுக்கு அடித்தளம் போட்டவராம், சீமேந்து விக்கிற விலையில அவரோட தியாகமும் மெச்சதக்கது. ஆனாலும் அர்ச்சுனாக்கு ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்பிருக்கு என்பதே அங்குள்ளவர்கள் கருத்து கெளசல்யா உட்பட்ட மீதி ஐஞ்சுபேருக்கும் கஷ்டமாம் இந்த தேர்தல் முடியும்வரை இவங்க பண்ணு அளும்புகள பாத்தா >>>>>>>>>- தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன்
அப்படியே இந்த தவகரனுக்கு மட்டும் தனியே ஒரு கவிதை எழுதுங்கோ அண்ணை, கிளிநொச்சி சந்தைக்குள்ள புகுந்து சனத்தட்ட அநுரவுக்குத்தான் வாக்கு போடுங்கோ என்பதை அவர்கள் வாய்க்குள்ளாலயே புடுங்கி எடுக்க என்னமா படாத பாடு படுகிறார். தேர்தல் முறைமைப்படி பொதுமக்களிடம் தனிப்பட்ட ரீதியில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கருத்து கணிப்புக்கள் நடத்துவதே தவறு என்று நினைக்கிறேன், இதெல்லாம் எப்படி அனுமதியோ தெரியல,- கோத்தாபயவுக்கு எதிரான அரகலய போராட்டத்தின்போது புலம்பெயர் புலிகள் தலையீடு! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
உங்கள் ஆட்சியை வீழ்த்தியதில் பெரும் பங்காற்றியவை. பொருளாதார நெருக்கடி முறையற்ற நிர்வாகம் ,ஊழல் பொருளாதாரத்தில் உச்சம் தொட்டுவிட்ட மேற்கத்தைய நாடுகளே ஒரே காலகட்ட பகுதியில் மேற்கொள்ளாத திட்டங்களையெல்லாம் வெத்தலை பாக்கு சுண்ணாம்புக்கே பக்கத்து வீட்டில் கடன் வாங்கும் இலங்கையில் மேற்கொண்டது உங்களுக்கே நீங்கள் அடித்துக்கொண்ட சாவுமணி. தாமரை கோபுரம், துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், ஒரே மூச்சில் அமுலுக்கு கொண்டுவந்த சேதன பசளை விவசாய திட்டம் என்பவை 75% காரணம் என்றால் அத்துடன் சேர்ந்து பொருளாதார நெருக்கடிக்கு தோள் கொடுத்து கொரோனாவும் வந்து உங்கள் பாவங்களின் பெயரால் இடியாய் இறங்கி குடும்ப ஆட்சியை சுடலைக்கு அனுப்பியது. எப்படி எல்லா நெருக்கடியும் ஒரேநேரத்தில் உங்களை சூழ்ந்து உங்களை தேர்வு செய்த மக்களே மூண்டே வருஷத்தில் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்று சிந்தித்து பார்த்தால் எல்லாத்தையும் மீறிய சக்தி ஏதோ ஒன்று இருக்கிறது என்று நம்பத்தான் தோன்றுகிறது அது ஓரிருநாளில் துடிக்க துடிக்க கொல்லப்பட்டு மண்ணுக்கு வந்து தம் உறவுகளுடன் வாழமுடியாமல் அலறியபடி பூமிக்கும் அண்டவெளிக்குமிடையே எம் நிலத்தை பார்த்தபடி அலையும் பல்லாயிரம் ஆத்மாக்களின் சாபமும், அவர்களை நினைத்து இன்றுவரை அழுதுகொண்டிருக்கும் லட்சம் உறவுகளின் சாபமாகவும் கூட இருக்கலாம். புலம்பெயர் புலிகள் சொன்னால் சிங்களவர்கள் கேட்பார்களா? அப்போ சஜித்தை தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்ற வன்மத்தில், 90 வீத சிங்களவர்களால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் சித்தப்பு கோட்டபாய புலம்பெயர் புலிகள் சொல்லித்தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா? புலி பூச்சாண்டி காட்டி சிங்களவர்களின் ரத்தத்தை சூடாக்கி ஆட்சியை பிடிக்கும் பழைய எத்தனங்கள் உங்கள் அப்பன் சித்தப்பன் காலத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது, இப்போ அவர்களின் பிரச்சனை பிறநாடுகள்போல் வேகமாக பொருளாதார வசதியில் முன்னேறவேண்டும் என்பதே. எனவே நாட்டை நாசமாக்கினீர்கள் என்ற கோபம் முள்ளிவாய்க்காலை நாங்கள் என்றும் நினைவில் வைத்திருப்பதுபோல் சிங்களவர்கள் மனசில் சில தசாப்தங்களுக்காவது தொடர்ந்தே ஆகும். தாங்கிக்குங்க அண்ணனுக்காக இதை நீங்க தாங்கித்தான் ஆகணும்.- "பாதுகாப்பை குறைத்துவிட்டனர் என்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம்" - சந்திரிகா
லண்டனில் கல்யாணவீட்டில் செருப்பை திருடுறவங்கள்போல திரிஞ்சதுக்கு இப்போ இலங்கையில் இருக்குற பாதுகாப்புக்கு என்ன குறைச்சல? நாங்கள் உங்களை தேடி தேடி கொல்ல, மொக்குத்தனமான மதவாத போராட்டம் நடத்துகிறவர்கள் போல் இனம் அல்ல, ஆயுதபோராட்டம் என்பது ஒரு போராட்ட வடிவமாக இருந்தது முயன்று பார்த்தோம் முடியவில்லை, அவரவர் வேலையை பார்க்க அடுத்த கட்டத்துக்கு போய்விட்டோம். ஆனால் ஆயுதபோராட்ட காலத்தில் நீங்கள் செய்த மகா பாதகங்கள் உங்கள் மனசை உறுத்துது அதனால் இன்றும் பயத்தில் மேலதிக பாதுகாப்பு கேக்குது. ஆயுத போராட்ட காலத்தின்ன் பின்னர் தமிழர்களின் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்த ஒரே ஜனாதிபதி அம்மையார் அவர்கள், வந்தவுடன் தமிழர்களுக்கு செலுத்திய புகழ்மிக்க நன்றிக்கடன்கள்: நவாலி தேவாலயம் படுகொலை நாகர்கோயில் பள்ளி மாணவர்கள் படுகொலை செம்மணி புதைகுழி படுகொலைகள் ஜெயசிக்குறு நடவடிக்கை படுகொலைகள் குமார் பொன்னம்பலம் படுகொலை மிருசுவில் படுகொலைகள் கிழக்கில் விஷேட அதிரடிப்படை மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையின் தமிழர்மீதான படுகொலைகள் அப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், இப்படி ஆயிரக்கணக்கானவர்களை சிரித்துக்கொண்டே கொன்றவர்களுக்கு தமது ஒத்தை உயிரென்றால் எவ்வளவு உயிர்பயம் வருது. நம்மில் சிலரிடையே இன்றும் தேர்தலை புலிகள் புறக்கணித்ததால்தான் மஹிந்த ஆட்சிக்கு வந்து எல்லாமே அழிந்து போனது என்று, சரி தேர்தலை புறக்கணிக்காமல் சந்திரிக்காவை தமிழர்கள் ஆதரித்ததால் மட்டும் என்ன நடந்தது? அக்காலகட்டத்தில் தங்கு தடையின்றி இழுவை மல்டி பரல்கள் , மோட்டர் குண்டுகள்,ஆயுதங்கள் முல்லைவரை எமது அமைப்பினால் கொண்டுவந்து இறக்கப்பட்டதால்தான் ஜெயசிக்குறு நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இல்லையென்றால் அன்றைக்கே ஒரு முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு முடிவு சந்திரிக்காவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.- அரசியல் சதிகள் அம்பலம்
விளங்க நினைப்பவன் , நான் எங்கே எழுதி இருக்கேன் சுமந்திரன் அமைச்சர் பதவியை பெறபோகிறார் என்று? நான் அர்த்தப்படுத்தியது பதவியென்று முன்னைய ஆட்சியிலிருந்ததுபோல் ஜனாதிபதி சட்டத்தரணி, அது,இது , மானே தேனே, பொன்மானே என்று எதாச்சும்... நிராகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அமைச்சர் பதவியென்று நான் அர்த்தப்படுத்தியது டக்ளசை, அவரும் ஓடோடி போய் அநுரவ சந்திச்சார் இல்லையா அதனால. நானும் பாக்கிறன் விளங்க நினைப்பவனின் அலசல்கள் இப்போலாம் கொஞ்சம் ஓவராதான் போய்க்கிட்டிருக்கு 😉- பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சசிகலா இரவிராஜ் மீது சாவகச்சேரியில் தாக்குதல்.
ஆம் இதுக்கு முதலும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது பக்கத்து வீட்டுக்காரி நடத்திய பாரிய ராணுவ தாக்குதல் அது, இப்போ இது இரண்டாவது தாக்குதல் , அவர் யாருக்கு என்ன தீங்கு செய்தார் அந்த சொக்கநாதரின் திருவிளையாடலை ரவிராஜின் மனைவிமீதா காட்டணும்? இப்படிப்பட்ட கொலைவெறி தாக்குதல் கண்ணாடிக்கு பக்கத்தில நடந்தும் கண்ணாடில சிறுவெடிப்புகூட ஏற்படேல்ல போல? இது ஒரு மெடிக்கல் மிராகிள், நம்ம காரில எல்லாம் ஒரு கல்லு குறுணி பட்டானே வெடிப்பு விழுது.- அரசியல் சதிகள் அம்பலம்
இதுபற்றி நானுட்பட பலரும் பல தடவை கருத்து பகிர்ந்ததுதான், தமிழ்சிறி நீங்கள் Mention பண்ணியதால் சொல்கிறேன். சுமந்திரனை தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதியாக தமிழர்களும் ஏற்றுக்கொண்டதில்லை சிங்களவர்களும் ஏற்றுக்கொண்டதில்லை அப்படியிருக்கும்போது இவர்களின் தீர்மானங்கள் ஆலோசனைகள் எந்த வகையில் செல்லுபடியாகும்? இவர் பற்றி ஒருமணிநேரமாக இவர்கள் உரையாடுவது அநாவசியமற்ற ஒன்றாகவே பலருக்கு படும், அடுத்து எமது அரசியல் தேர்வுகளாக எது இருக்க வேண்டும் யார் இருக்க வேண்டும் தலைமை தாங்கவேண்டும் என்பதை கற்றறிந்த இவர்கள் கை நீட்டி காட்டினால் அல்லது அடையாள படுத்தினால் அதில் ஒரு பயன் இருக்கும். சுமந்திரன் முன்னைய ஆட்சிகள்போல் சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு பதவிகளை பெற்று இந்த ஆட்சியிலும் வண்டியோட்டலாம் என்று நினைக்கிறார் போலும், ஆனால் நேற்று கிளிநொச்சியில் நடந்த கூட்டத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி , தமது கட்சியை சாராதர்களுக்கும் உங்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் எவருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருக்கிறார், இந்த காணொலியில் 31:57 நிமிடத்திலிருந்து அவர் கருத்துக்கள் உள்ளன. ஒருவேளை தென்பகுதி கட்சிகள் மட்டுமல்ல ,கடந்தகால தமிழ்கட்சிகள் மற்றும் சுமந்திரன் வகையறாக்கள் பற்றி யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் மக்கள் மனநிலையை நாடி பிடித்து பார்த்தும் இந்த கருத்தை சொல்லியிருக்கலாம். தேர்தலின் பின்னரே சிங்களத்தின் முகங்கள் தெளிவாகும். தமிழர் தேசியத்தை உறுதியாக நகர்த்த வேண்டுமென்றால், புலத்திலும் நிலத்திலும் உள்ள தமிழர்கள் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும், துரதிர்ஷ்டவசமாக புலத்திலும் பல பிரிவு தாயகத்திலும் பல பிரிவு , சிங்களவனிடம் உரிமை கேட்கபோக அரசியல் பேரம் பேச ஓரணி, ஒரே குரல் ஒற்றுமை வேண்டும் அது எங்கே வாழ்கிறது? அதனால்தான் இதுவரை தமிழர் தேசியம் பெயரில் குப்பை கொட்டிய அனைத்து கட்சிகளும் இந்த பொது தேர்தலில் ஓரம் கட்டப்படவேண்டும், நேர்மையும் திறமையுமுள்ள புதியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாக வேண்டும், தாயகத்தில் அரசியலும், புலத்தில் பொருளாதாரம் ஆலோசனைகள் , சர்வதேச தொடர்புகள் என்றும் ஒன்று சேர்ந்து ஒரேகோட்டில் நகர வேண்டும் என்பதே அங்கலாய்ப்பு இதெல்லாம் எந்தளவில் சாத்தியமாகும் என்பது காலத்தின் முடிவு., இந்த பொது தேர்தலில் தமிழர் அரசியலில் பெரும் மாற்றம் வேண்டும் புதியவர்களின் கையில் மக்கள் ப்ரதிநிதித்துவம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதே அங்குள்ள பெரும்பாலான மக்களின் விருப்பாக இருப்பதாகவும் தெரிகிறது. அப்படி புதியவர்களின் கையில் பொறுப்புகள் போனாலும் இந்த தேர்தல் அவர்களை இனம் காண மட்டுமே உதவி செய்யும், அடுத்த தேர்தலில்தான் அவர்களின் ஒற்றுமையும் அர்ப்பணிபும் நேர்மையும் கொண்டு ஒரு உறுதியான தமிழர் தலைமையாக தேர்தலை தமிழர் பகுதியிலிருந்து தேர்தலை எதிர்கொள்ள பயன்படும். ஒரே தலைமைத்துவமாக சிங்களத்துடன் பேரம் பேச தகுதி பெறும். இது எல்லாம் நக்கவேண்டும் நடந்தால் நல்லாயிருக்கும் ,அதுவரை எங்கே செல்லும் இந்த பாதை கேஸ்தான்.- இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
சில மாதங்கள் முன்பு பொதுவெளியில் ஹிஜாப் அணியாததால் ஒரு மாணவியை காவல்துறை அடித்தே கொன்றார்கள் பின்பு அது ஈரான் முழுவதும் பெரும் கலவரமானது. அதுக்கே அப்படியென்றால் அரை நிர்வாணமாக நின்றதுக்கு பொதுவெளியில் தூக்கிலிடுவார்களா, அல்லது தலையை வெட்டுவார்களா, இல்லை ஏற்கனவே வெட்டிவிட்டார்களா என்றே தோன்றும். ஐரோப்பா அமெரிக்கா பக்கம் அகதியா வரும் இஸ்லாமிய ஆண்கள் வந்து முதல் வேலையாக ஒரு வெள்ளைக்கார பெண்ணை பிடிப்பதுக்கு அவர்கள் மதத்தில் ஹராம் என்று சொல்லப்படும் பப் கிளப், பார், மேற்கத்திய இசை நிகழ்ச்சி என்று முழுமூச்சாக அலைவார்கள், ஆனால் அவர்களின் பெண்கள் கண்களைகூட தெளிவாக பார்க்க முடியாதபடி கறுப்பு உடையினால் மூடவேண்டுமென்றும் குரானை படித்தபடி அறைக்குள் முடங்கி கிடக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஆண்களை ஊர்மேய விட்டுவிட்டு பெண்களை மட்டும் மதத்துக்காக ஆயிரம் கட்டுப்பாடுகள் விதித்து கொல்வது எந்தவகை இறைநம்பிக்கை என்று எழுத்துகூட்டி படிச்சாலும் புரியாது. உடை என்பது மதத்தை கொண்டோ கலாச்சாரத்தை கொண்டோ எவர்மீதும் திணிக்கப்படுவது ஏற்புடையதல்ல, உடைகள் கண்ணியமானதாக இருந்தாலே போதுமானது. பெரும்பாலான ஈரான் ஈராக், ஆப்கான் பெண்கள் மேற்கத்தைய நாடுகளுக்கு வந்ததும் ஜீன்ஸ் ரீஷேர்ட்ட்க்கு மாறிவிடுகிறார்கள், ஒரு சிலர் மூடிக்கொண்டு திரிகிறார்கள் என்றால் அது அவர்கள் சுயவிருப்பு கிடையாது மதவெறியினால் வீட்டில் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்திலேயே தம் விருப்பை வேறு வழியின்று வெளிக்காட்ட முடியாமல் வாழ்கிறார்கள். ஏற்கனவே பலரை சொந்த அம்மா அப்பா சகோதரர்களே கொன்றும் இருக்கிறார்கள், பெரும்பாலான ஈரான் ஈராக் ஆப்கான் நாட்டு மக்கள் பிறருடன் நட்பாக பழக கூடியவர்கள், உலக நாகரிகத்துடன் சேர்ந்து கல்வி தொழில் என்று தமதுபாட்டில் நிம்மதியாக வாழகூடியவர்கள், அவர்களை மதவெறியூட்டி நாசமாக்குவதே இந்த பள்ளிவாசல் தொழுகைகளில்தான், இஸ்லாமியர்கள் அனைவருமே தமது மதம்தான் பெரியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாதவர்கள்,தமது மதம்தான் உலகத்தை ஆளனும் என்று மனசுக்குள் நினைப்பவர்கள் ஆனால் எல்லோருமே அதை பிற சமூகத்தில் திணிக்க நேரடியாக முயற்சிக்காதவர்கள். நம்மில் அல்லுலூயோ கோஷ்டி என்று ஒரு கூட்டம் நல்லாயிருக்குறவனை பிடிச்சு ஆண்டவர் வருகிறார் அடுத்த பஸ்ஸில எண்டு சொல்லி தண்ணிக்குள்ள தலையை முக்கியும் மேளங்களை அதிக ஒலியில் காதுக்கு கிட்ட கொண்டுப்போய் அறைந்தும் மனநோயாளி ஆக்குவார்கள், ஆனால் ஒரிஜினல் கத்தோலிக்கர்கள் எந்த மதவெறியுமில்லாது அவர்கள் வழிபாடு வாழ்க்கை, நட்புறவு என்று இருப்பார்கள். அதேபோல்தான் இந்த கூட்டமும் பலவீனமானவர்களை மதவெறியூட்டி மண்டையை கழுவி அடுத்த மதக்காரனை கொல்லவும், சக உயிர் என்று சிந்திக்காமல் தமது உறவு பெண்களை ஆயிரம் கட்டுப்பாடுகள் போட்டு கொல்லவும் செய்கிறார்கள். ஈரானை பொறுத்தவரை கொமேனி எனும் மதவெறி தலைவன் காலமாகும்வரை அடிப்படைவாதத்தில் சிக்கி தவிக்கும் பெண்கள் நிலமை கவலைக்கிடம்தான், அவரின் காலத்தின் பின்னர் ஓரளவாவது குறையும் வாய்ப்பு உண்டு என்பதே உலக மக்கள் எண்ணம்.- பெண்களை சீரழித்த நீங்க எதில் அடிபட்டு..? சீமானுக்கு எதிராக விஜய் 'தங்கை' நடிகை விஜயலட்சுமி ஆவேசம்
- யார் இந்த யூதர்கள்?
- பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகள் இன்றி வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க முடியாது - பாதுகாப்பு அமைச்சு
தற்கால கட்டத்தில் பெரும் ராணுவ முகாம்களுக்கும் உயர் பாதுகாப்பு வலயத்திற்கும் யாரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதை தெளிவாக சொன்னால் சிங்களவர்களும் தமிழர்களும் அறிந்துகொள்ள வாய்ப்பாயிருக்கும்.- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
சுவைப்பிரியன், அவர்களுக்கு உழைத்தே ஆகவேண்டிய நிலை வந்தே தீரும், வெளிநாட்டிலிருந்து காசு அனுப்புகிறவர்களுக்கு வயசு போக அவர்களின் வாரிசுகள் இலங்கையிலிருப்பவர்களுக்கு பணம் அனுப்ப போவதில்லை, நான் கஷ்டப்பட்டு உழைக்கிற காசை இவர்களுக்கு அனுப்ப நான் என்ன லூசா என்றுதான் கேட்பார்கள், இனிவரும் சந்ததிக்கு வெளிநாடு வருவது எல்லாம் சாத்தியமில்லாத ஒன்று வந்தாலும் அகதி மனுவை ஏற்காமலே திருப்பி அனுப்புவான்,குளம் வற்றிவிட்டால் கொக்குகள் இரைதேடி பறந்தே ஆக வேண்டும், அதையும் மீறி இவர்கள் வேலைக்கு போகவில்லையென்றால் போரினால் வாழ்வாதாரமிழந்து தடுமாறும் பெண்கள் முன்னாள் போராளிகள் , எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் வாடும் ஆயிரக்கணக்கான ஏழைகளும் அந்த இடத்தை நிரப்புவார்கள். புத்தன், யாதும் ஊரே யாவரும் Listen என்று அவர்களும் நினைத்திருந்தால் தரப்படுத்தல் வந்திருக்காது, கொழும்பிலிருந்து அடித்து கப்பலில் ஏற்றி அகதியாக, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பும் நிலமையும் வந்திருக்காது, சுனாமிக்கு அடுத்தவன் தந்த காசையே தமிழனுக்கு கொடுக்க கூடாது என்று நீதிமன்றம் செல்ல சொல்லியிருக்காது, ஒரேமொழி பேசும் மக்கள் கூட்டமுள்ல வடக்கு கிழக்கையும் பிரிச்சுவிட சதி பண்ணியிருக்காது. தகுதிகள் பார்த்து வேலைக்கமர்த்த தாய்வான்போல விமானம், தொலைபேசி,கார்கள் கம்பியூட்டர்களுக்கான மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடுவார்களென்று நினைக்கவில்லை, உள்ளூர் உற்பத்தியுடன் இணைந்து சந்தை வாய்ப்புக்களை கண்டறிவதும் இறக்கி ஏற்றும் வியாபார முயற்சிபோல் அங்கிருந்து இறக்கி மீள் உருவாக்கி மறுபடியும் ஏற்றுமதி செய்யும் தொழில் முயற்சிகளாகவே அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இவையெல்லாம் எந்தவேகத்தில் ஆரம்பிக்கப்பட போகின்றன நடைமுறைப்படுத்தப்பட போகின்றன என்பது வேறு விஷயம், மேற்குலகம்போல பலநூறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட போவதும் இல்லை, அந்த பிராந்திய மக்களை பணிக்கமர்த்த ஒப்பந்தம் போடாமலிருந்தால் பிற இனத்தவர்கள் வேலைக்கு வந்து அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிடுவார்கள் , அரசும் அவர்கள் ஆட்களென்றால் அதற்கான தங்குமிடங்கள் வேலைதிட்டங்களை அசுர வேகத்தில் செய்யும். பிறகு அது ரோட்டால சும்மா போனா ஆசாரியை கூப்பிட்டு சார் பிளீஸ் எனக்கு ஒரு ஆப்பு அடிச்சிட்டு போங்க என்று சொன்ன கதையாகிவிடும், முதலீடுகள், தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் வரியே அரசுக்கும் பிற இனங்களுக்கும் ஒருவகை வருமானம்தானே அது போதும் அவர்களுக்கு. இது எல்லாம் சிங்களத்துடன் முதலீடுகளை ஆரம்பிக்கவேண்டுமென்ற அவசரம் அல்ல இப்படியாவது எந்த உதவிகளும் இல்லாத எம்மக்கள் கூட்டத்தின் வறுமை ஒழியாதா என்ற ஏக்கம்தான்.- கிழக்கில் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்க முனைகிறதா இஸ்ரேல் ?
மறைமுகமாக இலங்கைக்குள் இஸ்ரேலியர்களை அனுமதிக்ககூடாது என்பதை சுருக்கமாக சொல்கிறார்கள். எங்கோ இருக்குற காசாவுக்காக இலங்கையில் இவர்கள் போராடலாம் சுவரொட்டி ஒட்டலாம் ஊர்வலம் போகலாம்,பதாகைகள் தாங்கி நிற்கலாம், மதவழிபாட்டிடங்களில் சிறப்பு தொழுகை நடத்தலாம்ஆனால் பிறநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள், தமது இனம் மதம், மொழி,கவலைகளை ஆகியவற்றை அடையாளபடுத்தகூடாது அப்படியா? அதாவது இலங்கை என்பது இஸ்லாமியர்கள் சொற்படிதான் கேட்கவேண்டுமா? காசாவில் மக்கள் கொல்லபப்டுவது கவலையான விஷயம்தான் ஆனால் ஒரிஜினல் இஸ்லாமியநாடுகளான எகிப்தின் துறைமுகமூடாகத்தான் கப்பல் கப்பலாக வெடிமருந்துகள் ஆயுதங்கள் அமெரிக்க ஐரோப்பாவிலிருந்து இஸ்ரேலுக்கு கடத்தப்படுகிறது அந்த இஸ்லாமியநாடுகளுக்கெதிராக பொங்கலாமே ஏன் தயங்குகிறார்கள்? மைத்திரி ஆட்சியில் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா , ரிஷாத், கிழக்கு முதலமைச்சர் நசீர் ,மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் ஒரு மாகாணத்தில் முதலைமைச்சரும், ஆளுனரும் முஸ்லீம் என சிங்கள அரசின் மறைமுக ஆசியுடன் அதிவேகமாக காணிகள் அபகரிப்பு, வியாபாரம், மதமாற்றல்,மதராசா, பள்ளிவாசல் என்று தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கும் செயலில் இறங்கிய இவர்கள் சஹ்ரான் குண்டுவெடி தாக்குதலால் நிலமையே தலைகீழாகி சிங்களவர்களால் தூக்கியெறியப்பட்டு கொடுக்குகள் புடுங்கப்பட்டதால் இன்று அமைதிபோல் நடிக்கிறார்கள். ஐஎஸ் ஐஎஸ் , தலீபான், அல்கெய்டா கொடிகட்டி பறந்தபோது இங்கிருந்தபடி இன்ஷா அல்லாஹ் இன்னும் ஐஞ்சு வருஷத்தில் அமெரிக்கா , ஐரோப்பா எல்லாம் இஸ்லாமியநாடுகள் ஆகபோகிறது இறைவன் பெரியவன் என்றெல்லாம் முழங்கிய இவர்கள், அடுத்தவன் நாடுகளை உங்கள் மதநாடுகளாக்க நீங்கள் துடிக்கலாம் அடுத்தநாட்டுக்காரன் வந்து உங்கள் ஊரில் அவன் மொழியில்கூட எதுவும் எழுதகூடாது அப்படியா? இலங்கை எனும் நாட்டில் உள்ள காத்தான்குடியில் அனைத்தும் பச்சைமயமாக்கி அறிவிப்பு பலகைகள்கூட அரபி மொழியில் வைத்து இன்னொரு சவுதியின் மாதிரியை நீங்கள் உருவாக்கலாம், அடுத்தவன் வீடு எடுத்துகூட நீண்டகாலம் தங்ககூடாது அப்படியா? ஒரு நாட்டிற்குள் உல்லாச பயணிகளாக வருகிறவர்கள் எது செய்யலாம் செய்யகூடாது என்று தீர்மானிக்கவேண்டியது அறிவுறுத்த வேண்டியது அந்நாட்டு அரசுகள், வன்முறைகளில் அவர்கள் ஈடுபடாதவரை அந்த விடயங்களில் அறிவுரை சொல்லவும் ஆட்சேபனை செய்யவும் அறிக்கைவிடவும் நீங்கள் யார்? ஒருநாட்டில் பிறநாட்டுக்காரன் ஆக்கிரமிப்பு தவறுதான் ஆனால், நீங்கள் இங்கேயிருந்துகொண்டு சின்வாருக்காகவுய்ம், நசருல்லாவுக்காகவும் , இஸ்மாயில் ஹனியேவுக்காகவும் அழ முடியுமென்றால் அவனும் இங்குவந்து தனது போர் வீரர்களுக்காக அழலாம் அதில் எந்த தவறுமேயில்லை. காசாவில் குழந்தைகள் பெண்கள் கொல்லப்படுவது வேதனையானது மறுப்பதற்கில்லை இதே கவலையை ஒக்ரோபரில் இஸ்ரேலில் நுழைந்து பெண்கள் குழந்தைகள் முதியவர்களை கமாஸ் கொன்று குவித்தபோது உங்கள் கவலைகள் இதேயளவில் இருந்ததா? குழந்தைகளுக்குகிடையில் ஏது இஸ்ரேல் காசா என்று வித்தியாசம்? எங்காவது இஸ்ரேலின் கை பெருமெடுப்பில் ஓங்கும்போது மட்டுமே தோல்வியை சகிக்க முடியாமல் பெண்கள் குழந்தைகள் பற்றி இவர்கள் கவலை இருக்கிறது, மற்றும்படி அல்லாஹு அக்பர் என்று கூவியபடி. 3'H எனப்படும் ஹமாஸ் ஹுத்தி, ஹிஸ்புல்லாவுக்கு கோஷம் போடுவது மட்டும்தான் பெரும்பாலான முஸ்லீம்களின் கவலையெல்லாம் காசா மக்களைபற்றிய கவலையைவிட கமாஸ் ஹிஸ்புல்லா ஹுத்தி ஈரான் எல்லாம் இஸ்ரேலுக்கு அடிக்கவேண்டும் அவன் படை பலத்தை அழிக்கவேண்டும், சும்மாவாச்சும் தினமும் இஸ்ரேலின் 500 படையினர் கொல்லப்பட்டனர், 25 மெர்காவா டாங்குகள் அழிக்கப்பட்டன என்று சொல்லவேண்டும் என்பதிலேயே உள்ளது, அதுதான் உண்மை செய்தி மற்ற ஊடகங்களெல்லாம் பொய் சொல்கின்றன என்று வேறு தூஷணத்தில் திட்டுவார்கள்.. நீங்கள் அவனை அழிக்க நினைத்தால் அவன் உங்களை அழிப்பான் அப்புறம் எதுக்கு இடைநடுவில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கவலைபடுகிறீர்கள் உங்கள் கவலையில் ஏதாவது நியாயம் உள்ளதா? - தனியாளாக வாக்கு கேட்டுத் திரியும் அர்ச்சுனா.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.