Everything posted by Kavi arunasalam
-
மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்; ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு!!
- கருத்துப்படம் 10.10.2025
From the album: கிறுக்கல்கள்
- இரவில் பாம்பாக மாறும் மனைவி - புலம்பும் கணவன்
புதுசா கல்யாணம் கட்டியிருக்கிறான் போலே- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
- கருத்துப்படம் 09.10.2025
From the album: கிறுக்கல்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உண்மைதான் Suvy, பழைய பாடலில் நான் ரசித்துக் கேடகும் பாடலில் இதுவும் ஒன்று. நல்லதொரு அமைதியான பாடல். திருச்சி லோகநாதனின் அருமையான குரலில் அமைதி தரும் நல்லதொரு பாடல்.- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
கோசான் , 1967க்குப் பிறகு தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது 'தமிழ்நாடு வெற்றிக் கழகம்' (தவெக) ‘ஆட்சியில் பங்கு’ என்று முன்வத்திருப்பது கண்டிப்பாக தேசியக் கட்சிகளை நிச்சயம் கவர்ந்திருக்கும். ஆட்சியில் பங்கு என்றாலும் கடிவாளம் தவெக விடம்தான் இருக்கும். எல்லோருமே பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையே கவனிக்கின்ற நேரத்தில், காங்கிரஸ் சத்தமின்றி தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஜய்க்குச் சேரும் கூட்டத்தைப் பார்த்து திமுக திகைத்திருக்கிறது. அதேநேரம் அவருக்குச் சேரும் கூட்டம் மற்றக் கட்சிகளை அவர்பால் இழுத்துச் செல்லலாம். தை பிறக்கட்டும். காட்சிகள் தெரியும்- ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- கருத்துப்படம் 07.10.2025
From the album: கிறுக்கல்கள்
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
என்ன சொல்லவருகிறீர்கள் குமாரசாமி? சீமான் சினிமாக்காரர் இல்லை என்கிறீர்களா? அரசியலுக்கு எவரும் வரலாம். நான் யாருடைய ரசிகனும் இல்லை. விபத்து நடந்திருக்கிறது. கவலைதான். இங்கே யாரை நோவது என்பதே கேள்வியாக இருக்கிறது. முடிவு வரட்டும். நானும் நாங்களும் முட்டி மோதுவதால் என்ன பயன்? எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் போல வேடம் போட்டு “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டு வந்த சீமானின் நடிப்பு அபாரம். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
கவலைப்படாதே சகோதரா. புலி ஒன்று பதுங்கியிருக்கிறது. அதனால் எப்போதும் பதுங்கியிருக்க முடியாது. வெளியே வரும். உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும் சொல்கிறேன். மீஸா சட்டத்தில் பல திமுக ஆட்களை இந்திரா உள்ளே அள்ளிப் போட்டார். சுடலையையும் அவர் விட்டு வைக்கவில்லை.சிறையில் நல்ல சாப்பாடு போட்டு, சுடலையை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டு அனுப்பியிருந்தார்கள். ஆனால் அதன் பிறகு எம்ஜிஆரை வீழ்த்த இந்திராவோடு கருணாநிதி கூட்டுச் சேரவில்லையா? கை கோக்கவில்லையா? அதுதானே அரசியல். தேர்தல் கூட்டு களநிலவரத்தை வைத்து மாறும். அதிமுக வும் அடுத்த கரையில் தூண்டில் போட்டு காத்து நிற்கிறது. தனித்தா? கூட்டா? எதுவானாலும் பாதிப்பு திமுகவுக்கே. இந்த இடைவெளியில் அண்ணன் கடலில் படகில் போய் ஏதோ செய்யப் போகிறாராமே. அதைப் பாருங்கள். கருர் சோகத்தில் இருந்து மீள அண்ணனின் நகைச்சுவையும் தேவைதானே?- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சரஸ்வதி பூசைக்குப் போன இடத்தில் எடுத்து வந்திருக்கிறீர்கள் போலே? பாடலுக்கு நடனமாடியவர் பெயர் கனகா. இந்தக் கனகா தேவிகாவின் மகள் கனகாவுக்கு முந்தையவர். சரஸ்வதியை வைத்து இடம் பெற்ற இந்தப் பாடலைப் போலவே பஞ்சவர்ணக்கிளி படத்தில் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் என்றொரு பாடல் இருக்கிறது. அதில் கே.ஆர். விஜயா பாட, எல். விஜயலக்சுமி நடனம் ஆடியிருப்பார். பஞ்சவர்ணக்கிளி, கௌரிகல்யாணம் இரண்டையுமே இயக்கியவர் எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சங்கர்.- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
- பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
அவர் எப்பவோ பின் கதவாலே போயிட்டார் எண்டு சொன்னாங்கள்- ஜேன் குடால் (Jane Goodall) - சிம்பன்சிகளின் தோழி!
சில ஆவணப் படங்கள் பார்த்திருகிறேன். 91வயது அரை வாழ்ந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
குமாரசாமி, இதுக்கெல்லாம் கேலிச்சித்திரம் வரைவதோ AIஇல் கேட்டு வாங்கிப் போடுவதோ நன்றாக இருக்காது. நாகரீகமாகவும் இருக்காது. உதாரணத்துக்கு சென்ற வருடம் கள்ளக்குறிச்சியில் (விசச்)சாரயம் குடித்து 67 பேர் இறந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் இறந்த குடும்பங்களும் தலா பத்து இலட்சம் கொடுத்ததுக்குமே நான் ஒன்றுமே வரையவில்லையே.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காசேதான் கடவுளடா படத்தில் இந்தப் பாடலை சுசிலா பாடியிருந்தார், மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி. இசையில், பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். அப்போது இலங்கை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையியில் இந்தப் பாடலை கேட்கும் போது, சில வரிகளுக்குள் மாற்றங்கள் இருந்தது. இந்த மாற்றங்களுக்கான காரணம் தணிக்கையாகும். படம் தணிக்கைக்கு செல்லும் முன்னரே இசைத்தட்டு வெளியிடப்படுவது பொதுவாக இருந்தது. வானொலியில் இந்தப் பாடல் ஒலிக்கும்போது, “எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம் அங்கங்கே தொட வேண்டும் கை பதமாக..." எனப் பாடல் வரிகள் இருக்கும். ஆனால், திரைப்படத்தில் "எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம் அங்கங்கு வர வேண்டும் என் நிழலாக..." என்று இருக்கும்- கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
காலத்துக்கு ஏற்ற கவிதை. அருமை ரசோதரன். கர்ணன் படத்தில் கண்ணதாசன் ஒரு பாடலில் இப்படி எழுதியிருப்பார் புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்- பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
குமாரசாமி, இந்த விடயத்துக்கு எதுக்கு ‘புலம்ஸ்’ஸை கேட்டுக்கொண்டு? பேசாமல் அமைச்சர் ஐயா இராமலிங்கம் சந்திரசேகரருக்கு ஒரு போன் போட்டு சொன்னால், அவர் கவனிச்சுக் கொள்வார்😛- போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் - பொலிஸ்
- கருத்துப்படம் 04.10.2025
From the album: கிறுக்கல்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
“கும்பலைக் கூட்டுறான் கொடியை நாட்டுறான் கொஞ்சநேரம் நின்று பாத்தால் உண்டியலை நீட்டுறான்…” கட்சி வளர்ச்சிக்காக உண்டியலை நீட்டியவர் கருணாநிதி அல்லவா?- ஒரு பயணமும் சில கதைகளும்
நாங்கள் விலங்குகளுக்குச் சளைத்தவர்கள் இல்லை. எங்களிடமும் வடக்கிருந்து மரணிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்போ எல்லாம் மருந்து மாத்திரைகளில் வாழ்வு போய்க் கொண்டிருப்பதால் திசைகளை எல்லாம் மறந்துவிட்டோம். “கப்பலில் வந்த கொண்டையினரை திறக்க கதாநாயகன் வெளிப்படுவார். அவர் கையில் ஒரு புத்தகம் இருக்கும். பார்த்தால் அவர் அந்த நாட்டு மொழி பேசுவார். எல்லோரும் ஆச்சரியமாக அவரைப் பார்க்க”, சும்மாதானே கொண்டையினருக்குள்ளே இருக்கிறேன் என்று நாலு நாளா உங்கள் மொழியை படித்தேன் என்று அவர் சொல்லுவார்”.புஸ்பா 2 படத்தில் இந்தக் காட்சியைச் சொல்லி “யாருக்கு கதை விடுறீங்கள்?” என்று புளூச் சட்டை மாறன் டைரக்டரை வாங்கியிருப்பார். படத்தைப் பார்த்தால் அந்தக் காட்சி ஒரு கனவுக் காட்சி. ஆக படங்களை பார்க்க வைக்க ஒரு புளூச்சட்டை மாறன் தேவைதானே. நீங்கள் கதை சொன்னவிதத்தில் கூடவே நானும் உங்களுடன் பயணித்ததை நீங்கள் கவனிக்கவில்லைப் போலும். நன்றாகச் சொன்னீர்கள். பலதையும் கோர்த்து ஆக்கபூரவமான விசயங்களையும் சேர்த்துச் சொன்னீர்கள். ஏன் எங்களையும் கூட உங்களுடன் சேர்ந்து எழுத வைத்தீர்கள். நன்றி யசோதரன். ஆனாலும் பூனைகளும், பொலிஸுகளும் உங்களை ஏன் நாடி வருகிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவம் இன்று யேர்மனிய அரசுத் தொலைக்காட்சியான Tagesschauவில் செய்தியாக இடம் பெற்றிருந்தது. இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று என்னவெனில், இதுபோன்ற ஒரு அவலமான நிகழ்வொன்றை யேர்மனியரும் சந்தித்திருக்கிறார்கள். 24.07.2010 அன்று யேர்மனியின் டுயிஸ்பெர்க் (Duisburg) நகரில் நடைபெற்ற Love Parade இசை விழாவில், எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெருக்கத்தில், குறுகிய சுரங்க வழியிலிருந்து வெளியேற முடியாமல் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 600க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் இன்றும் மீள முடியாத மனநிலை மற்றும் உடல் பாதிப்புகளில் இருக்கிறார்கள். இந்தத் அவலம் நிகழ்ந்ததும், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுமதி வழங்கிய நகர மேயருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நகர மேயருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிகழ்வை குறித்த மேலதிக தகவலுக்கு, https://en.wikipedia.org/wiki/Love_Parade_disaster Love Parade அவலத்தில் ஒரு குழந்தையும் உயிரிழக்கவில்லை, ஏனெனில் பெற்றோர் அவர்களை விழாவிற்கு அழைத்துச் செல்லவில்லை. இதைத் தங்கள் அபிமான நடிகர்களை, தலைவர்களைக் காணவரும் தமிழ்நாட்டுக் குடும்பங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். எம்ஜிஆர் அரசியலில் இறங்கும்போது அவருக்கு இருந்த அரசியல் ஞானமும், கருணாநிதி மற்றும் திமுக பற்றி இருந்த அனுபவமும், இப்போது அரசியலில் ஈடுபட முயல்கின்ற நடிகர் விஜய்க்கு இல்லை என்பதே உண்மை. திமுக தனது அரசியல் வெற்றிக்காக எந்தெந்த வழிகளையும் நாடும் என்பதை எம்ஜிஆர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். எம்ஜிஆர் தனது கட்சியை தொடங்கிய காலத்தில், மலையாளர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதும், எம்ஜிஆர் படங்களை வெளியிடும் திரையரங்குகளில் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டதுமாகச் சம்பவங்கள் பல நடந்தன. திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, திரைகளை கத்தியால் கிழித்து, எம்ஜிஆர் படத் தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி (சாண்டோ சின்னப்பா தேவர் உட்பட)பல வழிகளிலும் எம்ஜிஆருக்கு கருணாநிதி இடைஞ்சல்கள் செய்தார். ஆனால் இதனை எல்லாம் தாங்கி, எம்ஜிஆர் முதல்வரானார். அவர் நடித்த "நீதிக்குத் தலை வணங்கு" திரைப்படத்தில் உள்ள ஒரு பாடல் வரிகள் இப்படி இருந்தன, "பாதுகாவல் போர்வையிலே ஜாதி இன பேதம் சொல்லி ஊர் பகையை வளர்ப்பவன் நீ ஊரில் உள்ளவரை மோதவிட்டு குள்ள நரி போலிருந்து ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம் முடித்து வைப்பேன் நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்" இந்தக் கருத்துகள் இன்றும் அரசியல் சூழலில் பொருந்தக்கூடியவை. விஜய் அரசியலுக்கு குதித்திருப்பது, நீரின் ஆழத்தை அறியாமல் ஆற்றில் இறங்கி நீச்சலடிப்பது போன்றதொரு நிலை. அரசியல் ஆறு எவ்வளவு ஆழமாக இருக்கிறது, எத்தனை முதலைகள் வாயைப் பிளந்து அங்கே காத்திருக்கின்றன என்பதையும் அவர் சரியாக தெரிந்து கொள்ளவில்லை. கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு, அரசு உடனடியாக நிதி ஒதுக்கியது. முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றார். இப்படியான அறிவிப்பு திமுகவின் பழைய அரசியல் நடவடிக்கை. இது “தகப்பன் பத்தடி பாய்ந்தால், மகன் பதினாறு அடி பாய்கிறான்” என்பதுபோல் இருக்கிறது. கரூரில் நடந்த விபத்தையும், யேர்மனியில் நடந்த Love Parade பேரழிவையும் ஒப்பிடும்போது, இதுவொரு தனிநபர் தவறு அல்ல. அமைப்புகளின், அனுமதிகளின், திட்டமிடலின் தோல்வி என்பதையும் காண முடிகிறது. கூடவே திமுகவின் கருணாநிதியின் அரசியல் பாதை என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். அரசியல் உலகில் முன்நோக்கு, அனுபவம், திட்டமிடல் இன்றி இறங்கும் முயற்சிகள், கடின சோதனைகளுக்கு உள்ளாகும். பார்க்கலாம் விஜய் என்ன செய்யப் போகின்றார் என்று. - கருத்துப்படம் 10.10.2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.