Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. அவளைப் படிக்க நான் அவளிடம் என்ன இரவல் வாங்கலாம்? அனுபவத்திலை இருந்து ஒன்று இரண்டு அவிட்டு விட்டால் நானும் ஏதாவது செய்து பார்க்கலாம்😀
  2. ஒரு சரியான கட்டமைப்பு இல்லாததால்தான் புலம்பெயர் தமிழர்கள் தங்களால் முடிந்த உதவிகளை தங்களுக்கு ஏற்ற வழியில் செய்கிறார்கள். ‘மக்கள் யாரிலும் தங்கியிருக்காது தாங்களே சுயமாக வாழ வழி ஏற்படுத்தித் தர வேண்டும்’ என்ற எண்ணம் அன்று இருந்தது. அது நன்றாகவே செயற்பட்டுக் கொண்டும் இருந்தது. இன்று நிலமை வேறு. அப்படியான கட்டமைப்பை தாயகத்தில் உள்ளவர்கள்தான் ஏற்படுத்த வேண்டும்.
  3. கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில், இரயிலில் பயணிப்பதற்காக, இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின் இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத்தில், நீங்கள் ஆணா? பெண்ணா? என்ற கேள்வியில் எங்கே ‘ஆம்’ என்று போடுவதில் அவருக்குச் சிக்கல் வந்தது. காரணம் அவர் ஆணும், பெண்ணும் இல்லாத மூன்றாம் பால். கோபத்துடன் அவர் இரயில் திணைக்களத்துக்கு இது விடயமாக மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். பதில் அவருக்கு அனுகூலமாக இல்லாததால், நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றார். இரயில் திணைக்களம் அவருடன் சமரசம் செய்ய முயற்சித்தது. அவருக்கேற்பட்ட மன அழுத்தத்துக்கான நட்ட ஈடாக 1000 யூரோக்களைத் தருவதாகவும் கேட்டுப் பார்த்தது. அவர் உடன் படவில்லை. “இது ஒருவரது தனிப்பட்ட விடயம் அல்ல. பொதுவானது. ஆகவே உங்கள் (இரயில் திணைக்களம்) படிவங்களில் மாற்றங்களைச் செய்யுங்கள். அதுவும் ஆறு மாதங்களுக்குள்” என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆறு மாதங்கள் குறைவானது ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறோம் என இரயில் திணைக்களம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர் குறிப்பிட்ட படிவத்தில் மட்டுமல்ல, எங்களது முழு ‘சிஸ்ரத்திலும் மாற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பெரும் பணமும், கால அவகாசமும் தேவை என்றார்கள். இப்பொழுது மாற்றம் செய்து விட்டார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. இந்தப் பிரச்சினை இன்று யேர்மனியில் உள்ள சகல நிறுவனங்களுக்கும் இருக்கிறது. திரு,திருமதி என்று விழிக்காமல் எல்லோருக்கும் பொதுவாக ‘ஹலோ” என்றே அழைக்கலாமா? என குளம்பிப் போய் இருக்கிறார்கள். ஓரினச் சேர்க்கையாளர்களின் குடும்ப வாழ்வை யேர்மனியும் அங்கீகரிக்கிறது. அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் எந்தச் சிக்கல்களும் இல்லை. யேர்மனியில் வளரும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களே பாலியல் சம்பந்தப்பட்ட விபரங்களை சொல்லித் தருகிறார்கள். பாடசாலைகளிலும் பாலியல் சம்பந்தமான விடயங்களை ஆசிரியர்கள் விளக்குகிறார்கள். ஆகவே ஓரினச் சேர்க்கையாளர்களின் பிள்ளைகளும் தங்கள் பாதுகாவலர்கள் போல் மாறி விடுவார்களோ என்ற அச்சம் தேவையற்றது. தவறாக ஏதும் நடந்தாலும்,பாடசாலையில் பிள்ளைகளின் நடத்தையை ஆசிரியர்கள் அவதானித்து அது சம்பந்தமான திணைக்களத்துக்கோ (Jugendamt), பாடசாலை அதிபருக்கோ அறிவித்து விடுவார்கள். ஓரினச் சேர்ககையாளர்களும் எங்களைப் போன்று வாழப் பிறந்தவர்கள். அவர்களுக்கான உரிமையையும், மதிப்பையும் தருவதுதான் முறையானது.
  4. ஆட்டையை போடுவதில் நான் வல்லவன். ‘ஒரு சிங்கத்தின் சிந்தனை’ உங்களின் சிந்தனையாகவும் இருந்திருக்கிறது. எங்களுக்குள் பேசி ஒரு சமரசத்துக்கு வருவோமா?😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.