Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. போலி வாக்காளர் சர்ச்சை: ராகுல் காந்தியின் 5 குற்றச்சாட்டுகளும் தேர்தல் ஆணையத்தின் பதிலும் பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் 7 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (2025 ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் "வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மோசடி" நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். "இயந்திரம் மூலம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வழங்காதது, மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவைத் 'திருட' பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதற்கான சான்றாகும்" என்று ராகுல் காந்தி கூறினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் 'தவறாக வழிநடத்துவதாக' இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், அவர் தனது புகாரை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தான் சொல்வது உண்மை என்று ராகுல் காந்தி நம்பினால், அவர் பிரமாணப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டு புகார் அளிக்க வேண்டும், அல்லது அவர், இந்திய மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். மகாராஷ்டிரா தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியதை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிராகரித்தார். "ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார், பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் 75 லட்சம் வாக்குகள் அதிகரித்ததாகக் கூறினார், இப்போது ஒரு கோடி வாக்குகள் அதிகரித்ததாகக் கூறுகிறார். பொய்யான தகவல்களைச் சொல்லி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஆதாரங்களை ராகுல் காந்தி வழங்கினார். வாக்காளர் பட்டியல் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய முக்கிய கூற்றுக்கள் பற்றிய ஒரு பார்வை. பட மூலாதாரம், ANI 1: 'மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி' குற்றச்சாட்டு முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்: மகாராஷ்டிராவில், ஐந்து மாதங்களில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதற்கான சந்தேகத்தை எழுப்பியது, இந்த சந்தேகத்தை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பகிரங்கமாகக் கூறியிருந்தோம். மகாராஷ்டிராவின் மக்கள் தொகையை விட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, வாக்கு சதவிகிதத்தில் திடீரென ஒரு பெரிய ஏற்றம் ஏற்பட்டது. சட்டமன்றத் தேர்தல்களில் எங்கள் கூட்டணி முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டது, ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதே கூட்டணி வெற்றி பெற்றது. இது மிகவும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. மாநில அளவில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதைக் கண்டோம். இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தோம். மாநிலத்தில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 2: கர்நாடகா தேர்தல் குறித்து ராகுல் காந்தி என்ன சொன்னார்? ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள்: கர்நாடக மக்களவைத் தேர்தலில், உள் கருத்துக் கணிப்புகள் 16 இடங்களை வெல்லும் என்று கணித்திருந்தன, ஆனால் காங்கிரசுக்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் மற்றும் மொத்த வாக்காளர்கள் இருப்பதை தங்கள் ஆய்வில் காங்கிரஸ் கண்டறிந்தது. கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில், 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் 'திருடப்பட்டுள்ளன'. வெவ்வேறு வாக்குச்சாவடிகளிலும் வெவ்வேறு மாநிலங்களிலும் வாக்களித்த சுமார் 11 ஆயிரம் வாக்காளர்கள் கர்நாடகாவில் வாக்களித்தனர். இந்த வாக்காளர்களின் பெயர்கள், வாக்குச்சாவடி எண்கள் மற்றும் முகவரிகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 3: 'போலி வாக்காளர்' ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு: பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளின் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே வாக்காளர், பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா தொகுதியிலும், கிழக்கு லக்னௌவிலும், மும்பையில் கிழக்கு ஜோகேஸ்வரி தொகுதியிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். தனது ஆய்வுக் குழு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். அவர்களின் முகவரிகள் தவறானவை அல்லது முகவரிகள் இல்லை அல்லது அந்த முகவரிகளில் அவர்கள் வசிக்கவில்லை. ஒவ்வொரு வீட்டு முகவரியிலும் 80 மற்றும் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தனி வீடுகளில் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது. புதிய வாக்காளராகப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6, பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற 33,692 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. 4: ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள் ராகுல் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்: ஹரியானாவில், மொத்தம் இரண்டு கோடி வாக்காளர்கள் இருந்த எட்டு தொகுதிகளில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையிலான வித்தியாசம் வெறும் 22,779 வாக்குகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. 90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொன்ன கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் கட்சி சுமார் 60 இடங்களைப் பெறும் என்றும் தெரிவித்தன. கிட்டத்தட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தையும் பாஜக தவறாக நிரூபித்து, பெரும்பான்மையை எளிதாகக் கடந்து 48 இடங்களை வென்றது. 5: தேர்தல் ஆணையம் பற்றி ராகுல் காந்தி என்ன சொன்னார்? "2024 மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் மோதி ஆட்சியில் நீடிக்க வேண்டுமானால் 25 இடங்களைத் திருட வேண்டியிருந்தது. அந்தத் தேர்தலில், பாஜக 33 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 25 இடங்களை வென்றது" என்று ராகுல் காந்தி கூறினார். "இந்திய ஜனநாயகத்தை அழிக்காமல் பாதுகாக்க பாடுபடுங்கள் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் சொல்கிறோம். இந்தத் தகவல்கள் அனைத்தும் எங்கள் கூற்றுக்கு முக்கிய சான்றாகும். கர்நாடகாவின் தகவல்கள் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு வாக்காளர் பட்டியலும் இப்போது ஒரு சான்றாக இருக்கிறது" என்று அவர் கூறினார். "இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், இந்தியக் கொடிக்கும் எதிரான குற்றம் என்பதைவிட குறைவானதில்லை. இது, ஒரு சட்டமன்றத்தில் நடந்த குற்றத்திற்கான சான்று. இந்த வடிவத்தை அவதானித்தால் இதனை நாங்கள் முழுமையாக உறுதியாக நம்புகிறோம். இதை நாங்கள் சரியாக கவனித்து ஆய்வு செய்திருக்கிறோம்." "தேர்தல் ஆணையம் எங்களுக்குத் தரவுகளைத் தரவில்லை, சிசிடிவி காட்சிகளை அழிக்கப் போவதாக அவர்களே கூறினார்கள்... அதனால்தான் அவர்கள் அந்தக் காட்சிகளை அழிக்க விரும்பினார்கள்" என்று ராகுல் காந்தி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுவதாக சில தரவுகளை வெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் ராகுலின் குற்றச்சாட்டுகள் குறித்து நிபுணரின் கருத்து என்ன? ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என்று கூறும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அதிதி ஃபட்ணீஸ், "இது தேர்தல் ஆணையத்தை சுற்றிவளைக்கும் ஒரு செயல். தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு கையாள்வது என்பதுதான் தேர்தல் ஆணையத்திற்கு சோதனையாக இருக்கும்" என்று கூறினார். "தேர்தல் ஆணையம் போன்ற பாரபட்சமற்ற நிறுவனம் ஒன்றிற்கு எதிராக முதன்முறையாக இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் நேர்மையற்ற செயலைச் செய்ததால் பல வாக்காளர்களின் கைகளில் இருந்த வாக்கு என்ற ஆயுதம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் அவரிடம் பிரமாணப் பத்திரம் கேட்டுள்ளது, எனவே இது தர்க்கரீதியானது என்று நினைக்கிறேன். ராகுல் காந்தியிடம் வலுவான ஆதாரம் ஏதேனும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்க மாட்டார்." ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளின் நேரம் குறித்து கருத்து தெரிவித்த அதிதி ஃபட்ணீஸ், பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்த பிரசாரம் அதாவது SIR தொடர்பாக சர்ச்சைகள் தொடரும் நேரத்தில், எதிர்க்கட்சிகள் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்குகின்றன. 'பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அரசியல் பிரச்னைகளில் ஒன்றாக மாறும்' என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பாஜக என்ன சொன்னது? மகாராஷ்டிரா தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியதை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிராகரித்தார். "ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்லி வருவதோடு, பொய்யான அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். இதை நான் எதிர்க்கிறேன். கடந்த முறை மகாராஷ்டிராவில் 75 லட்சம் வாக்குகள் அதிகரித்ததாக அவர் கூறினார், இப்போது ஒரு கோடி வாக்குகள் அதிகரித்ததாகக் கூறுகிறார். பொய்களைச் சொல்லி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார். அவரது கட்சி தனது இருப்பை இழந்துவிட்டது என்பது அவருக்குத் தெரியும். அடுத்த தேர்தலில் பொதுமக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்" என்று மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி கூறினார். "மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தோற்றீர்கள். மக்களவைத் தேர்தலில் மேலும் அதிக இடங்களை இழந்தீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. கர்நாடகாவில், சட்டமன்றத்தில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வந்தாலும் மக்களவை தேர்தல் முடிவுகள் பாதகமாக இருந்தன. மகாராஷ்டிராவில் சட்டமன்றத்திலும், மக்களவையிலும் நீங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது, நாட்டிற்கும் உலகிற்கும் நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள்?" "தர்க்கமும், புத்திசாலித்தனமும் முக்கியம். இந்தியாவில் தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்று உலகிற்குச் சொல்ல முயற்சிக்கிறீர்களா? ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் சென்று இந்திய அமைப்புகளை அவதூறு சொகிறார். தேர்தல்களில் மோசடி நடத்தப்பட்டது உண்மையாக இருந்தால், ஜார்க்கண்டில் உங்கள் வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெற்றனர்? ஜம்மு காஷ்மீரில் நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்?" ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்புப் பற்றி பேசிய பாஜக எம்.பி சம்பித் பத்ரா, "இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் குறித்தும் பேசினார். ராகுல் காந்தி அரசியலமைப்பு நிறுவனம் ஒன்றை தாக்கிப் பேசுவது இதுவொன்றும் முதல் முறை அல்ல. தான் வெற்றி பெற்ற மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை அவர் ஏன் நம் முன் முன்வைக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cewyd0v218no
  2. Published By: DIGITAL DESK 2 07 AUG, 2025 | 04:31 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.இவ்விடயத்தில் எனக்கு உத்தரவாதம் வழங்க முடியாது. ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27 இன் இரண்டின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான எஸ்.சிறிதரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதான குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் 4 பேர், விடுதலை புலிகள் அமைப்பின் 8 உறுப்பினர்கள், ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர் ,ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள 2 கைதிகள், 2 மரண தண்டனை கைதிகள் 2 பேர் வெலிக்கடை, மெகசின், மஹர, தும்பர, பூஸா மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தமது தண்டனைக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் விடுதலையாவார்கள். அல்லது நீதிமன்றத்தின் ஊடாக பிணையளிக்கப்படும் பட்சத்தில் விடுவிக்கப்படுவார்கள் அல்லது மேன்முறையீடு செய்து பிணை பெற்றுக்கொள்ளலாம். சிறைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் ஏற்பாடும் காணப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் என்னை சிலர் சந்தித்தனர். இவ்விடயத்தில் எனக்கு எவ்வித உத்தரவாதமும் வழங்க முடியாது. ஏனெனில் அது நீதியமைச்சின் விடயதானத்துக்குள் உட்படாது. இவ்விடயம் குறித்து ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/222065
  3. 07 AUG, 2025 | 04:33 PM (எம்.மனோசித்ரா) சுகாதார அமைச்சின் சில உயர் அதிகாரிகளின் தீர்மானத்தால் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சுமார் 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது. ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அமைச்சரிடமிருந்து தகுந்த பதில் கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் சுகாதார கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும். எது எவ்வாறிருப்பினும் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலங்கள் தடையற்ற மருத்துவ சேவையை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். நாட்டில் 23,000 சிரேஷ்ட வைத்தியர்கள் காணப்படுகின்றனர். வருடாந்தம் 2,000 வைத்தியர்கள் இந்த கட்டமைப்பில் இணைகின்றனர். எனவே இவர்களுக்கான நியமனங்களை முறையாக வழங்க வேண்டியதும் அவசியமானதாகும். அத்தோடு இடமாற்றங்களும் முறையாக இடம்பெற வேண்டும். அவ்வாறு இடம்பெற்றால் மாத்திரமே சுகாதார கட்டமைப்பின் இருப்பினை தீர்மானிக்க முடியும். சுகாதார அமைச்சின் சுகாதார சேவைப்பிரிவின் பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களின் செயற்பாடுகளால் 23,000 சிரேஷ்ட வைத்தியர்களின் இடமாற்றங்கள் முற்றாக சீர்குலைந்துள்ளன. இது சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்ட ஒரு குழப்பமாகும். ஆனால் சுகாதார அமைச்சரிடமிருந்து இதற்கான ஸ்திரமான தீர்வு கிடைக்கவில்லை. இந்த பிரச்சினை தீவிரமடைந்தமைக்கான காரணமும் இதுவேயாகும். 2025ஆம் ஆண்டுக்கான இடமாற்ற பட்டியல் 9 மாதங்கள் தாமதமாகவே வெளியானது. அதில் சுமார் 5,000 வைத்தியர்கள் உள்ளடங்குகின்றனர். அந்த பட்டியலில் காணப்பட்ட 78 வெற்றிடங்கள் சட்டத்துக்கு முரணாக தன்னிச்சையாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் குறித்த 78 வைத்தியர்கள் மாத்திரமின்றி, பட்டியலுள்ள அனைவரும் பாதிக்கப்படுவர். அது மாத்திரமின்றி பின்தங்கிய பிரதேசங்களுக்கான வைத்தியர் நியமனங்களும் இவ்வாறு தன்னிச்சையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் பிரதான வைத்தியசாலைகள் உட்பட சுமார் 135 பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படவுள்ளது. ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவையும் அவர்கள் இந்த யுகத்துக்கே அழைத்துச் செல்லவே முற்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு அமைச்சரிடமிருந்து தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் பிரச்சினைகளுக்கான முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால் எமது தீர்மானத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை என்றார். https://www.virakesari.lk/article/222066
  4. 08 AUG, 2025 | 08:40 AM இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளா இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் "வாக்கு திருட்டு" நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அவர், 5 வழிகளில் இந்த மோசடி அரங்கேறி உள்ளதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சி பெங்களூரு மத்திய தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் நடத்திய விசாரணையின் கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில், பெங்களூரு மத்திய தொகுதியில் பா.ஜ.க 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது; பெங்களூரு மத்திய தொகுதியில் 1,00,250 போலி வாக்குகளை உருவாக்கி தேர்தல் திருடப்பட்டதாகக் கூறினார். மகாதேவபுரா தொகுதியின் தரவுகளை ஆய்வு செய்யவே பல மாதங்கள் ஆனது என்றும் அவர் கூறினார். மகாதேவபுரா தொகுதியில் பெரும் வித்தியாசம் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாகவும், மகாதேவபுரா தவிர மற்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். மகாதேவபுராவில் 1,14,046 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால், மக்களவைத் தொகுதியை அது கைப்பற்றியது. ஒரு தொகுதியிலிருந்து மட்டும் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசம் எப்படி வந்தது என்று நாங்கள் ஆய்வு செய்தோம். இது மிகப்பெரிய சமநிலையற்ற தன்மை. மகாதேவபுரா தொகுதியை ஆய்வு செய்தபோது, 6.5 லட்சம் மொத்த வாக்குகளில் 1,00,250 வாக்குகள் 5 வெவ்வேறு வழிகளில் திருடப்பட்டதைக் கண்டறிந்தோம்” என்று அவர் கூறினார் 5 விதமான முறைகேடுகள் - அம்பலப்படுத்திய ராகுல்காந்தி ராகுல் காந்தி, இந்த வாக்குகள் 5 வழிகளில் திருடப்பட்டதாக விளக்கினார். போலி வாக்காளர்கள் (Duplicate voters) ஒரே நபரின் பெயர் மற்றும் புகைப்படம் பல வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றது. போலியான மற்றும் செல்லாத முகவரிகள் (Fake and invalid addresses) முகவரி இல்லாத அல்லது சரிபார்க்க முடியாத வாக்காளர்கள். ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் (Bulk voters in a single address) சிறிய வீட்டில் பல குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். செல்லாத புகைப்படங்கள் (Invalid photos) வாக்காளர் பட்டியலில் புகைப்படங்கள் இல்லாத அல்லது அடையாளம் காண முடியாத அளவுக்கு சிறிய புகைப்படங்கள் உள்ள வாக்காளர்கள். படிவம் 6 தவறான பயன்பாடு (Misuse of Form 6) புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6ஐ பயன்படுத்தி முதியவர்கள் மீண்டும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டது. ஆதாரங்களுடன் விளக்கிய ராகுல்காந்தி இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர் என கூறினார். போலி வாக்காளர்கள்: குர்கிரத் சிங் டாங் என்ற ஒருவரின் புகைப்படம் 4 வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் இருந்ததாக சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இதேபோல் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்ற பெயரில் கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். போலியான முகவரிகள்: “ஹவுஸ் எண் 0”, தந்தையின் பெயர் “ilsdfhug,” “dfoigoidf” போன்ற செல்லாத தகவல்கள் கொண்ட 40,009 வாக்காளர்கள் இருந்தனர். ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள்: ஒரு சிறிய வீட்டில் 80 வாக்காளர்கள் வசிப்பதாகவும், “153 Beire club” என்ற மதுபானக் கடையில் 68 வாக்காளர்கள் வசிப்பதாகவும் ராகுல் காந்தி படங்களுடன் விளக்கினார். படிவம் 6 தவறான பயன்பாடு: 70 வயதுடைய ஷகுன் ராணி என்ற பெண், புதிய வாக்காளர் படிவம் 6ஐப் பயன்படுத்தி 2 முறை பதிவு செய்து, 2 வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களித்துள்ளார். புதிய வாக்காளர்கள் எனப் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்றும் ராகுல் காந்தி கூறினார். தேர்தல் ஆணையம் மீது குற்றம் “இது ஒரு தொகுதியில் நடந்த கிரிமினல் குற்றம். இது போன்ற குற்றங்கள் நாடு முழுவதும் பெரிய அளவில் நடந்து வருவதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இது தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக இணைந்து செய்த சதி,” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் ஆதாரங்களை அழித்து வருவதாகவும், நீதித்துறை இதில் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/222092
  5. ஊடகவியலாளர் குமணன் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு - அரசின் இந்த அடக்குமுறையை அனைவரும் எதிர்க்கவேண்டும் - ரஜீவ்காந் Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 08:48 PM ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம் இத்தோடு விட முடியாது அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும்.மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- ஊடகவியலாளர் குமணன் அவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றது. ஏற்கனவே சென்ற வருடம் அவரின் தாய் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டனர். பின்னர் அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை. மீண்டும் தற்பொழுது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். வி.புகள் தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களே கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக செம்மணி விடயங்களை முழு உலகிற்கும் கொண்டு செல்லும் குமணன் போன்ற சுயாதீன ஊடவியாளர் மேல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இந்த நேரத்தில் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம் இத்தோடு விட முடியாது, அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும். https://www.virakesari.lk/article/222082
  6. காசாவில் காயமடைந்த 2000 பாலஸ்தீனியர்களிற்கு தனித்தீவில் மருத்துவசிகிச்சை - இந்தோனேசியா திட்டம் 07 AUG, 2025 | 05:07 PM காசாவில் உள்ள 2000 நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களிற்கு தனித்தீவொன்றில் வைத்து சிகிச்சையளிக்கவுள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான இந்தோனேசியா மக்கள் வசிக்காத கலாங் தீவில் உள்ள மருத்துநிலையமொன்றை பாலஸ்தீனியர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்காக திருத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. யுத்தத்தினால் காயமடைந்த இடிபாடுகளின் கீழ் சிக்குண்டு காயமடைந்த 2000 பாலஸ்தீனியர்களிற்கு இந்தோனேசியா மருத்துவ சிகிச்சையை வழங்கும் என அந்த நாட்டு ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இது காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சியில்லை என தெரிவித்துள்ள அவர் மருத்துவசிகிச்சை முடிந்து காயங்கள் ஆறியதும் அவர்கள் மீண்டும் காசா திரும்புவார்கள் என தெரிவித்துள்ளார். எனினும் இந்த திட்டம் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/222072
  7. ராஜபக்ச - நல்லாட்சி காலத்தை போல தொடர்ந்தும் செயற்படும் பாதுகாப்பு எந்திரம்; ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் - அம்பிகா சற்குணநாதன் Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 05:03 PM மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில் அகற்றவில்லை. இதன் காரணமாகவே ஊடகவியலாளர்கள் சிவில் சமூகத்தினர் உட்பட பலரை பயங்கரவாத விசாரணை பிரிவினரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் தொடர்ந்தும் விசாரணைக்கு அழைக்கின்றனர், கண்காணிக்கின்றனர், அச்சுறுத்துகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அரசாங்கம் விசேட உத்தரவொன்றை பிறப்பிக்காவிட்டால் இது தொடரும் என எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளமை பல வருடங்களாக இடம்பெறும் துன்புறுத்தல்கள் அச்சுறுத்தல்களின் சமீபத்தைய சம்பவமாகும். பயங்கரவாத விசாரணை பிரிவினர் குற்றப்புலனாய்வு பிரிவினர் தகவல் வழங்க கோரி அவரை பலமுறை விசாரணைக்காக அழைத்துள்ளனர், அவரை அச்சுறுத்தியுள்ளனர், அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர் அவரை பின்தொடர்ந்துள்ளனர். இவ்வாறான அழைப்பாணைகள் தொலைபேசி அழைப்புகள், வீடுகளிற்கு செல்லுதல் போன்றவற்றை எதிர்கொண்டவர் குமணன் மாத்திரமில்லை. பல சிவில் சமூக பிரதிநிதிகள் செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள், காணமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் போன்றவர்களும் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர். இன்றும் இது தொடர்வது ஆச்சரியமளிக்கும் விடயம் மாத்திரமில்லை. ஏனெனில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில் அகற்றவில்லை. தற்போது அது முன்னர் போலவே செயற்படுகின்றது. இந்த அரசாங்கம் இவற்றை நிறுத்துமாறு அவர்களிற்கு விசேட உத்தரவை பிறப்பித்தால் ஒழிய அது தொடரப்போகின்றது. விசாரணை, துன்புறுத்தலுக்குக் கொடுக்கப்படும் காரணங்கள் மற்றும் கேள்விகளில் மனித உரிமைகள் பிரச்சினைகள், வெளிநாட்டு நிதியைப் பெறுதல், இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துதல், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்துதல் மற்றும் ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்துடனான ஈடுபாடு ஆகியவை அடங்கும் பாதுகாப்பு நிறுவனங்கள் சட்டபூர்வமான அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட நடவடிக்கைகளை உண்மையில் குற்றமாக்குகின்றன. மேலும் ஒரு சமூகத்தை இன ரீதியாக அடையாளம் காணவும் துன்புறுத்தவும் அரிதான அரசு வளங்களை வீணாக்குகின்றன - தமிழர்கள் இயல்பாகவே சந்தேகத்திற்குரியவர்களாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/222069
  8. சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் 07 AUG, 2025 | 06:28 PM இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத, சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இன்றைய தினம் (7) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு, மீளப் பெற முடியாத வகையில், சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் மூன்றாவது ஆண்டு தொடர்ச்சியும் மற்றும் அதனுடன் தொடர்புடைய கவனயீர்ப்புப் போராட்டமானது 100 நாள் செயல்முறையில் 7வது நாளான இன்று மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அந்தோனியார் புரம் பகுதியில் நடத்தப்பட்டது. "சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே தீர்வாகும்" என்ற ஒரே கோசத்துடன் இந்த போராட்டம் பெரும் எண்ணிக்கையான மக்களின் பங்கேற்பில் நடைபெற்றது. இதன் நோக்கமானது, தமிழர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் மறுபடியும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கவனிக்கப்படவேண்டும் என்பதேயாகும். தொடர்ச்சியாக, 100 நாட்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் இத்தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வரிசையில், இன்றைய போராட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டது. இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவின் 5வது வருடம் இலங்கையின் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம். 1948க்குப் பின்னரான இலங்கையின் 75 வருடகால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கிக் காணப்படுகிறது. இலங்கை அரசானது சிங்கள பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களாலும் தலைவர்களாலும் ஆளப்பட்டு வருகிறது. 1908 முதற்கொண்டு ஏனைய தேசிய இனங்களான வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை. அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. மாறாக, மொழி ரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின. சுதந்திரம் கிடைத்து ஒரு வருடம் நிறைவடைவதற்குள் மலையகத் தமிழர்களுக்கு எதிராக 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து, வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழர்களுக்கு எதிராக 50களில் கிழக்கிலும், மலையகப் பகுதிகளிலும், தெற்கிலும் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகள், சுதந்திரத்துக்குப் பின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் புறக்கணிக்கப்பட்டமை என இனவாதம் விரிவாகியது. அதன் உச்சமாக 1956இல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டமானது அரச கட்டமைப்பை சிங்களமாக்கியது. இதுவே வடக்கு - கிழக்கு தமிழர்கள் தமக்கான "சமஷ்டி" முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை கோரக் காரணமானது. ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் அரசியல் தீர்வு பற்றி பல உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கினாலும், பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மாறாக, இனவாதமும் அடக்குமுறைகளும் அதிகரித்து இறுதியில் தமிழின அழிப்பு யுத்தத்தில் நிறைவுற்றது. போருக்குப் பின்னரான காலத்தில் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கங்கள் அக்கறை காட்டவில்லை. திடமான அரசியல் தீர்வுக்கான உரையாடல்கள் முன்னெடுக்கப்படாமல், தமிழ் மக்களின் அரசியல் தளம் வெறுமையானது. இந்த நிலையை மாற்றி வடக்கு, கிழக்கு ரீதியாக மக்கள் மத்தியில் அரசியல் தீர்வுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி "அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவை" ஆரம்பித்தோம். வடக்கு, கிழக்கின் கிராமங்கள், நகரங்கள் என 100 இடங்களில் இந்த ஜனநாயக வழிப்பட்ட மக்கள் திரள் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு 100வது நாளான 2022 நவம்பர் எட்டாம் திகதி "சமஷ்டி அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்துடன்" நிறைவேறியது. தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவங்களுடன் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. "ஜனநாயகம்", "கட்டமைப்பு மாற்றம்", "இன, மத பேதமின்மை" எனும் கொள்கைகளை முன்வைத்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளன எனும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு மௌனம் காத்துவருகிறது. வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தில் ஆக்கிரமிப்பு, மகாவலி குடியேற்றம் மற்றும் சிங்களமயமாக்கம், பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு "இன மத பேதமின்மை" குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையாகும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை "இன, மத பேதமின்மை" எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது. மேலும், 2015ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1இல் இலங்கை அரசு இணைப் பங்காளராக இருந்து கையொப்பம் இட்டுள்ளது. இத்தீர்மானத்தின் ஏற்பாடு 20ஆனது அரசியல் அதிகாரப் பரவலுக்கான இலங்கையின் கடப்பாட்டை கூறுகிறது. ஆகவே. இனவாதத்தை சார்ந்திருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வுத் திட்டத்தை உடன் முன்னெடுக்கக் கோருகிறோம். சமஷ்டி அரசியல் தீர்வு என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல. அது மிகவும் உயரிய ஜனநாயக அரசியல் அமைப்பின் வெளிப்பாடாகும். போருக்குப் பின் ஜனநாயக அரசியலை முன்னெடுத்துவரும் நாடுகள், எமது அண்டை நாடான நேபாளம் அடங்கலாக, சமஷ்டி முறைமையையே பொருத்தமானதாக ஏற்று அமுல்படுத்துகின்றன. எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட இன அடக்குமுறையையும் முப்பது வருடகால இன அழிப்பு யுத்தத்தையும் எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வாகும். இதுவே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் திடமான அரசியல் அபிலாசையாகும் என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/222073
  9. செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார் - திருமுருகன் காந்தி Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 04:26 PM செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார் என தமிழ்நாட்டின் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, செம்மணி புதைகுழி உள்ளிட்ட தமிழர் மீதான மனித உரிமை மீறல்(ஜெனோசைட்) தகவல்களை போராட்டங்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி ஊடகவியலாளராக செயல்படும் குமணனை 'பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழாக விசாரணைக்கு கொண்டு வந்துள்ளது அனுராவின் அரசு. குமணனின் புகைப்படங்கள் கூர்மையானவை, ஆவணப்படுத்தும் வகையிலான தகவல்களை உள்ளடக்கியவை. உலகளாவிய தரங்களுடனான இப்புகைப்பட பதிவுகள் ஊடகங்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச விசாரணைக்கும் பயன்படுபவை. செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார். இலங்கையின் அனுரா அரசு இடதுசாரி அரசு எனவும் சிவப்பு அலை இலங்கையில் வீசுகிறதெனவும் பரப்புரை செய்யும் தமிழ்நாட்டு இடதுசாரிகள் வரை செம்மணி குறித்தும் குமணன் போன்றோர் மீதான அடக்குமுறைகள் குறித்தும் வெளிப்படையாக பேச வேண்டும். சிங்கள பேரினவாதிகளிடத்தில் கம்யூனிசம் ஒருகாலும் பூக்காது. இந்திய பார்ப்பனியத்தின் நிழலில் பாசிசம் மட்டுமே பூக்கும். சிங்கள பேரினவாதியான அனுராவின் ஜெ.வி.பி - என்.பி.பி அரசிற்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள். https://www.virakesari.lk/article/222064
  10. 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவை மீட்பது எப்போது? - சீமான் கேள்வி 07 AUG, 2025 | 04:18 PM 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? - என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல லட்சம் மதிப்பிலான அவர்களின் விசைப்படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனமே தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இனவெறி அடக்குமுறைகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகும். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 159 மீனவர்களும் - 19 படகுகளும்இ 2022 ஆம் ஆண்டு 237 மீனவர்களும் - 34 படகுகளும்இ 2023 ஆம் ஆண்டு 240 மீனவர்களும் - 35 படகுகளும்இ உச்சமாக 2024 ஆம் ஆண்டு 530 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுஇ அவர்களின் 71 படகுகளும் பறிக்கப்பட்டன. நடப்பு 2025 ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் 64 மீனவர்களும்பிப்ரவரி மாதம் 60 மீனவர்களும்மார்ச் மாதம் 14 மீனவர்களும்ஜூன் மாதம் 8 மீனவர்களும் ஜூலை மாதம் 25 மீனவர்களும் ஆக மொத்தம் 167 மீனவர்களும் அவர்களின் 24 படகுகளும் இலங்கை அரசால் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது இராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் மீண்டும் இலங்கை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் இலங்கை இனவெறி கடற்படையினாரால் வருடம் முழுவதுமே மீன் பிடி தடைக்காலமாய் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது. இரண்டு மாத மீன்பிடி தடை காலத்தின்போது மீனவர் குடும்பங்களுக்கு உதவித்தொகை தரும் அரசு இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவப்பெருமக்கள் மீன்பிடிக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நிலவும் தடைக்கு உதவித்தொகை வழங்க முடியுமா? இலங்கை கடற்படையால் படகுகள் பறிக்கப்படுவதை தடுக்க திறனற்ற அரசு படகுக்கு எரிபொருள் மானியம் கொடுப்பதால் என்ன பயன்? வெற்றுச் சலுகை தருவது மக்களை அடிமையாக்கும் சிந்தனை; உரிமையை பெற்றுத் தருவதுதான் விடுதலைக்கான சிந்தனை! எம் மீனவச் சொந்தங்களின் மீன்பிடிக்கும் வாழ்வாதார உரிமையை பறித்துவிட்டு அரசு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் அவை ஒருபோதும் மீனவ மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது!! ஆகவே இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையை இனியும் நட்பு நாடென கூறுவதை விடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கட்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டுமென வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வழக்கம்போல கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை மீட்க ஒன்றிய அரசிற்கு வெறும் கடிதம் மட்டுமே எழுதுவதை கைவிட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவு வழக்கினை விரைவுப்படுத்திஇ ஐம்பதாண்டு காலமாய் கொடுத்து வரும் வாக்குறுதியை இனியாவது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். https://www.virakesari.lk/article/222062
  11. திராய்க்கேணி படுகொலை; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை - கண்ணீருடன் மக்கள் 07 AUG, 2025 | 03:51 PM அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என 35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் கருத்துக்களை கண்ணீருடன் தெரிவித்தார்கள். 1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின் 35 வது ஆண்டு நினைவேந்தல் திராய்க்கேணி எழுச்சி ஒன்றியம் ஏற்பாட்டில் சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முன்றலில் புதன்கிழமை (6) மாலை இடம்பெற்றபோது அங்கு இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும் அங்கு தெரிவித்த அவர்கள், செம்மணி போன்று திராய்க்கேணியிலும் மனிதப்புதைகுழி உள்ளது. அதுவும் தோண்டப்படவேண்டும். அட்டாளச்சேனை கிழக்கு மாகாணம் பிரதேச கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஆறாம் திகதி நன்கு திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை இன்றும் அந்த மக்களினுடைய இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது அம்பாறை மாவட்டத்தின் அட்டாளச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கின்ற ஒரே ஒரு தமிழ் கிராமம் திராய்கேணியாகும். தமிழர் பண்பாடு மிகுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாகும். சைவ ஆலயங்கள் இந்த கிராமத்தின் தன்மைக்கு ஆதாரமாய் இருக்கும் சான்றுகளாகும். இந்த கிராமத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அதேபோன்று அம்பாறையில் பல பகுதிகளையும் ஆக்கிரமித்து விட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டிருந்த பேரினவாத ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாகவே திராய்க்கேணி மீதான இனப்படுகொலை அரங்கேற்ப்பட்டது. இராணுவத்தினரின் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதியில் உதவியுடன் திராய்கேணி கிராமத்தில் நுழைந்த முஸ்லீம் ஊர்காவல்ப்படையினர். முஸ்லீம்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காடையர்கள் போன்ற இனவழிப்பாளர்கள் அங்குள்ள மக்களை கோயில்களில் ஒன்று சேரும்படி அழைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே அங்கு மக்கள் கூட அங்கிருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள் 54 தமிழர்களை வெட்டியும் சுட்டும் வெறித்தனமாகக் காவு கொண்டனர். முதியவர்களை தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே வைத்து தீயிட்டு கொளுத்திய சம்பவங்களும் இன்றும் அங்கு நேரடியாக பார்த்த உறவுகளினுடைய கண்களில் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தீக்கிரையாக்கப்பட்டதுடன் அன்றைய நாள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த வெறியாட்டமானது பிற்பகல் வரை தொடர்ச்சியாக நீடித்திருந்தது. அம்பாறை மாவட்டத்திலுள்ள செயலகத்திற்குட்பட்ட திராய்க்கேணி எனும் 350க்கு மேலான வீடுகள் அழிக்கப்பட்டன. இந்த திட்டமிடப்பட்ட கொலையிலே சுமார் 40 பெண்கள் விதவை ஆக்கப்பட்டிருந்தார்கள் பலர் அங்கவீனப்பட்டிருந்தார்கள். இவ்வாறாக ஆண்டுகள் கடந்தும் இன்றும் அந்த உயிரிழந்த ஆன்மாக்களுக்கான பிரார்த்தனைகளையும் அஞ்சலிகளையும் செய்து நீதியினை எதிர்பார்த்து வலியோடு திராய்க்கேணி கிராம மக்கள் காத்திருக்கின்றார்கள். மற்றுமொருவர் உரையாற்றும் போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் காரைதீவிலே அகதி முகாம்களில் தங்கி யிருந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தங்களுடைய மண்ணுக்கு திரும்பியிருந்தனர். அதனை தொடர்ந்து அக்கிராமத்தினுடைய அபிவிருத்தி சங்கத் தலைவர் மயிலிப்போடி அவர்கள் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது. காரணம் அவர் 1990 ஆம் ஆண்டு தங்களுடைய கிராமத்திலே இடம்பெற்ற படுகொலைக்கான நீதியினைக்கோரியிருந்ததோடு அங்கு தொடர்ந்து இடம்பெற்ற காணி அபுகரிப்புக்களையும் தடுத்து வந்ததாலும் நீதி மன்றத்தை நாடியதாலும் அவர் அந்த கொலைகளை செய்த கும்பலினரால் கொலை செய்யப்பட்டிருந்தார். இலங்கையில் 1956, 1985, 1990, 2009 வரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வந்திருக்கின்றார்கள். ஆனால் இதுவரை அப் படுகொலைகளுக்கு நீதியோ நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை. எந்த இனமாக இருந்தாலும் ஆலயம் என்பது புனித ஸ்தலமாக இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் இந்து ஆலயங்களில் தான் அதிகமான படுகொலைகள் இடம் பெற்று இருக்கின்றன. ராணுவமும் முஸ்லீம் காடையர்கள் என கூறப்பட்டோரும் இந்த திட்டமிட்ட படுகொலையை செய்தனர். ஆனால் சில முஸ்லீம் மக்கள் அப்படுகொலை இடம்பெறும் போது எம்மை காப்பாற்றினர். அதை நாம் நன்றியுடன் நினைவு படுத்துகின்றோம். வீரமுனையிலும் ஆலயத்தில் வைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்திலேயே 58 தமிழ்கிராமங்களை இலக்கு வைத்து இன அழிப்பு நடத்தப்பட்டது. ஆலங்குளம், மீனோடைக்கட்டு போன்ற கிராமங்கள் ஒரு தமிழர்களும் இல்லாமல் முற்றாக கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் இராணுவமும் முஸ்லிம் காடையர்களும் இணைந்து செய்தார்கள் என்பது மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் இல்லை. அம்பாறை மாவட்ட தமிழர்களின் அடையாளத்தை இல்லா தொழிக்கவேண்டும் என்பதற்காக 1983 களிலிருந்து தொடர்ச்சியாக திட்டமிட்டு பல படுகொலைகளை செய்துள்ளார்கள். உண்மையில் அது நில ஆக்கிரமிப்பின் மறுவடிவமே. அந்த வகையில் குரூரமாக ஈவிரக்கமின்றி மேற்கொள்ளப்பட்ட திராய்க்கேணி படுகொலைக்கு இன்று 35 வருடங்களாகின்றன. 1990களில் ராணுவம் சில முஸ்லிம் இளைஞர்களின் உதவியோடு இங்கு செய்த இந்த குரூர கொலையானது பரம்பரை பரம்பரையாக தமிழ்மக்களின் மனங்களிலே நினைவு கூறப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் அனைவரும் இதில் சம்பந்தப்பட்டார்கள் என்று கூறவில்லை. ஆனால் ஒரு சில முஸ்லிம் இனவாதிகள் முன்னணியில் இருந்து செயற்பட்டதை நேரடியாக கண்ணால் கண்ட திராய்க்கேணி மக்கள் கூறுகின்றனர். இதுபோல் வீரமுனை, உடும்பன் குளம், நாவிதன்வெளி, காரைதீவு, பாண்டிருப்பு போன்ற பல இடங்களிலும் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற்றன. இன்னும் இந்த கொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என கண்ணீர் மல்க குறிப்பிட்டார். படுகொலை செய்யப்பட்ட 54 பேருக்காக ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்றது. ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தி அக வணக்கம் செலுத்தப்பட்டது. படுகொலை சம்பவத்தில் கணவர்மாரை இழந்து விதவைகளான 40 பேரில் நேரிலே கண்முன்னே சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தாய்மார்கள் மற்றும் கிராம தலைவர் உட்பட திராய்க்கேணி எழுச்சி ஒன்றியம் அங்கத்தவர்கள் ஆகியோர் துயர் பகிர்ந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/222050
  12. முன்னைய அரசாங்கங்களின் இனவெறி நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தெரிவிக்கும் அரசாங்கம் ஏன் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகின்றது? - ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கஜேந்திரகுமார் கேள்வி 07 AUG, 2025 | 03:21 PM முன்னைய அரசாங்கங்களின் இனவெறி நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தெரிவிக்கும் அரசாங்கம் ஏன் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டி இந்த கேள்வியை எழுப்பியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னைய அரசாங்கங்கள் தமிழர்கள் குறித்து இனவெறியுடன் நடந்துகொண்டன நாங்கள் அவற்றை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தொடர்ச்சியாக் இந்த அரசாங்கம் தெரிவித்துவருகின்றது. அது உண்மையானால் ஏன் இந்த அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர். ஊடகவியலாளர் குமணணை அவரது சமூக ஊடக பதிவுகளிற்காக விசாரணைக்கு அழைத்துள்ளனர். குமணண் வடக்குகிழக்கிலிருந்து உருவான மிகவும் நம்பகதன்மை மிக்க புலனாய்வு செய்தியாளராக தன்னை தொடர்ச்சியாக நிரூபித்து வந்துள்ளார். மிகவும் உயர்ந்த தர ஆவணப்படுத்தலையும் அவர் முன்னெடுத்து வந்துள்ளார். உலகில் ஊடகவியலாளர்களிற்கு எதிரான மிகவும் விரோதமான ஒரு சூழலில் அவரும் அவரது சகாக்களும் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறான தொழில்சார் நிபுணர்களிற்கு உதவி தேவைப்படும் நேரத்தில் ஆதரவாக நிற்பது சரியான சிந்தனையுள்ள ஒவ்வொரு தனிநபரினதும் கடமையாகும். https://www.virakesari.lk/article/222051
  13. கலாசார சித் ரூ- 2025 நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டம் மூன்றாமிடம்! கலாசார சித் ரூ- 2025 நிகழ்வில் குழு நடனத்தில் கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "சித் ரூ-2025" கலை நிகழ்ச்சி நேற்று(05) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மாகாணங்களிலிருந்து வெற்றி பெற்ற கலை நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றம் செய்யப்பட்டன. கிளிநொச்சி மாவட்டம் வடக்கு மாகாண போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட கிளிநொச்சி மாவட்டம் இவ்வாறு பங்கு பற்றி மூன்றாமிடத்தை பெற்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இலங்கை முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "ஒன்றாக - கைவிடாத" என்ற தேசிய கொள்கைக்கு இணங்க, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் பங்கேற்பவர்களாகவும் பெருமைமிக்க பிரஜைகளாகவும், வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த சமூக சேவைகள் திணைக்களம் அதன் ஒரு மூலோபாயங்களில் ஒன்றாக "சித் ரூ" கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது. குறித்த நிகழ்வு 06 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் புனர்வாழ்வு, வலுப்படுத்தல் மற்றும் பாதுகாப்புக்காக சமூக சேவைகள் திணைக்களத்திற்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 632 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விருது "சித் ரூ-2025" மாகாணப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் வழிகாட்டல் மையங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஜனாதிபதி பரிசுகளையும் விருதுகளையும் வழங்கினார். பிள்ளைகளுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களுடன் குழு புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். மாணவியொருவரால் வரையப்பட்ட ஜனாதிபதியின் புகைப்படம் ஒன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ஷனீ கருணாரத்ன மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தநிகழ்வில் கலந்து கொண்டனர். https://tamilwin.com/article/kilinochchi-3rd-plase-cultural-sidh-ru-2025-event-1754483929
  14. இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழ் பெண்ணொருவர் அந்நாட்டில் சட்டத்தரணியாகி உள்ளார். இந்தியாவில் குடியுரிமை கூட பெறாத ஃபர்ஷானா என்ற இந்த பெண்ணின் இந்த சாதனை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் கீழ் இந்த பெண் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியால் பட்டப்படிப்பு முடித்து சட்டத்தரணி ஆகியுள்ளார். அகதிகள் முகாம் இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்,"1980களில் எனது பாட்டி உள்ளிட்ட என் குடும்பத்தினர் இந்தியாவிற்கு வந்து விட்டார்கள். நான் இராமேஸ்வரத்தில் தான் பிறந்தேன். சில நாட்களின் பின்னர், கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள முகாம் ஒன்றிற்கு எங்களை அழைத்து சென்றார்கள். பாடசாலை படிப்பை முடித்த பின்னர், குடியுரிமை இல்லாததால் பட்டபடிப்பு படிப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் மூலம் படித்து பட்டம் பெற்று சட்டத்தரணியாகியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலப்பகுதியில் நாட்டை விட்டு பல இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். https://tamilwin.com/article/surya-agaram-foundation-eelam-tamil-woman-1754475351
  15. செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றையதினம்(6) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் இந்த எலும்பு கூட்டு தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அகழ்வு பணிகள் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறுவர்கள் , சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/chemmani-mass-graves-updates-tamil-1754502270
  16. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா - செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான, டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, உரிமை கோரப்படாத நிலத்தை, வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து, அதன் ஜனாதிபதி நான் தான் என, தனக்கு தானே அறிவித்துள்ளார். அதிகார பூர்வ மொழிகளாக அதன் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இப்போது இத்தாலியில் உள்ள வாடிகன் நகரத்திற்குப் பின், உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அதிகார பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளதாக, தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. https://tamilwin.com/article/australian-man-20-forms-new-country-1754510124
  17. மன்னாரில் இல்மனைட் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ..! 07 AUG, 2025 | 03:44 PM மன்னாரில் இல்மனைட் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறுகின்ற இளையோரின் போராட்டமான "கருநிலம்" போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதன்கிழமை (06) திருகோணமலை பிரதான கடற்கரையில் 'தளம் சூழலியல் குழுமம்' ஒருங்கிணைப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது திருக்கோணமலையை சேர்ந்த பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும், நலன் விரும்பிகளும், சூழலியல் ஆர்வலர்களும், தளம் சூழலியல் குழுமத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் இளையோரின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவையும், வளச்சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பையும், சூழலியல் பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த கவனயீர்ப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222047
  18. காசாவை ஐந்து மாதங்களிற்குள் முழுமையாக கைப்பற்றுவதற்கு பெஞ்சமின் நெட்டன்யாகு திட்டம் - இன்று அனுமதியளிக்கவுள்ளது பாதுகாப்பு அமைச்சரவை 07 AUG, 2025 | 02:32 PM ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கவுள்ளது என இஸ்ரேல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐந்து மாதங்களிற்குள் காசா முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இன்று அனுமதி வழங்கவுள்ளது. இஸ்ரேலிய பிரதமரின் இந்த திட்டத்தினால் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கும் ஆபத்து ஏற்படும் உயர் இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ள போதிலும் மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களை இடம்பெயரச்செய்யக்கூடிய இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் இன்று அனுமதி வழங்கவுள்ளது என பல ஹீப்ரூ ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தைய பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள ஹமாசினை அழிப்பதும், பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை கொடுப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம். ஹமாசின் பிடியில் 20 பணயக்கைதிகள் உயிருடன் உள்ளனர் என இஸ்ரேல் கருதுகின்றது. காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டம் காசா நகரிலிருந்து ஆரம்பமாகி மத்திய காசா பள்ளத்தாக்கை நோக்கி நகரும். இதன்போது இந்த பகுதியில் உள்ள காசாவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் மாவசி மனிதாபிமான வலயத்தை நோக்கி செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சில அமைச்சர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்ற போதிலும் இந்த திட்டத்திற்கான ஆதரவு பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு கிடைக்கும் பாதுகாப்பு அமைச்சரவையின் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு கிடைக்கும். சிறிய குழுவொன்று கடந்த மூன்று நாட்களாக இது குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. இதன் போது காசா மீதான நீண்டகால நடவடிக்கைகளிற்கான பல திட்டங்களை இஸ்ரேலிய இராணுவத்தின் முப்படை பிரதானி லெப் ஜெனரல் எயால் சமீர் முன்வைத்துள்ளார். திட்டத்தில் உள்ள விடயங்கள் காசா நகரை முதலில் கைப்பற்றி அமெரிக்காவின் ஆதரவுடன் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் நிலையங்களை விஸ்தரிக்கும் திட்டம் இஸ்ரேலிடம் உள்ளது. இதனடிப்படையில் முதற்கட்டமாக காசா நகரில் உள்ள மக்களை வெளியேறுவதற்கான உத்தரவை இஸ்ரேல் பிறப்பிக்கும், இந்த நகரில் ஒரு மில்லியன் மக்கள் உள்ளனர். முதல்கட்டம் பல வாரங்களிற்கு நீடிக்கும். இரண்டாவது கட்டத்தில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கும், இதன்போது இஸ்ரேலுடன் இணைந்து மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்துவார். இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நான்கைந்துமாதங்கள் நீடிக்கும் இஸ்ரேலிய இராணுவத்தின் நான்கு படைப்பிரிவுகளை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளனர் என இஸ்ரேலிய ஊடகங்களான வைநெட், சனல் 13 போன்றவை தெரிவித்துள்ளன. காசா நகரை கைப்பற்றுவதுடன், மத்திய காசாவில் உள்ள முகாம்களை நோக்கி செல்லும் திட்டம் உள்ளதாக கான் என்ற ஒலிபரப்புச்சேவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினர் இதுவரை மத்திய காசாவை நோக்கி நகராதது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மக்கள் காசாவின் தென்பகுதி நோக்கி செல்லவேண்டிய நிலையேற்படும். பணயக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் பகுதிகளில் அவர்களின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படாமல் மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும். இதேவேளை யுத்த நிறுத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கத்தார், எகிப்து போன்ற நாடுகள் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுக்ககூடாது என வற்புறுத்தி வருகின்றன, அமெரிக்கா ஊடாக இந்த செய்தியை இந்த நாடுகள் தெரிவித்து வருகின்றன. அதேவேளை ஹமாஸ் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் இந்த நாடுகள் வற்புறுத்துகின்றன. இதேவேளை மேலும் அதிகளவு காசா மக்களை தென்மாவாசி நோக்கி நகர்த்துவதே இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் என கான் ஒலிபரப்பு சேவைக்கு தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர் காசாவிலிருந்து மக்களை வெளியேறச்செய்யும் திட்டத்திற்கு இது உதவலாம் என குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222049
  19. பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பு அதிகரிப்பு Published By: DIGITAL DESK 3 07 AUG, 2025 | 01:30 PM பல்வேறு சமூக காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்பின் இந்த வியடம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 22.4 சதவீதமான மாணவர்கள் தனிமையை உணர்ந்துள்ளனர். 11.9 சதவீதமான 13–17 வயதுடைய மாணவர்கள் கவலையின் காரணமாக தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர். 18 சதவீதமான மாணவர்களுக்கு உளச்சோர்வு (Depression) அறிகுறிகள் காணப்படுகின்றன. 7.5 சதவீதமான மாணவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை. 75 சதவீதமான மாணவர்கள் உளநலப் பிரச்சனைகளைப் பகிர்வதற்காக நெருங்கிய நபர்கள் இல்லையென தெரிவித்துள்ளனர். இது குறித்து விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவிக்கையில், இலங்கையில் ஏன் இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர். அதேவேளை, பெரியோரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். பல்வேறு சமூக காரணிகள் மற்றும் அழுத்தங்கள் இந்த நிலைமைக்கு பங்களிக்கின்றன என தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் உளவியலாளர் வைத்திய நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவிக்கையில், நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 08 உயிர் மாய்க்கும் சம்பவங்கள் பதிவாகின்றன. 1996 ஆம் ஆண்டு வெளியான உலகளாவிய ரீதயிலான தற்கொலை பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த காலப்பகுதியில், 100,000 பேருக்கு 47 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை அடுத்து அந்த விகிதம் கணிசமாகக் குறைந்தது. தற்போது, 100,000 பேரில் 15 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். வருடத்திற்கு சுமார் 3,500 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை நிலையானதாக உள்ளது." அத்துடன், நாளொன்றுக்கு சுமார் எட்டு உயிர்மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றாலும், ஊடகங்களில் உயிர்மாய்ப்பு சம்பவம் ஒன்று மட்டுமே பதிவாகக்கூடும் எனவும், பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த உயிர்மாய்ப்பு சம்பவங்களின் விகிதம் கணிசமான அளவு குறையவில்லை என்றாலும், அண்மையில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. “இருப்பினும், கடந்த காலங்களைப் போலல்லாமல், ஊடகங்கள் இதுபோன்ற அனைத்து சம்பவங்களையும் வெளியிடுவதில்லை. இது ஒரு பாரிய முன்னேற்றம் எனத் தெரிவித்துள்ளார். நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ நெருக்கடியில் சிக்கி உதவி தேவைப்பட்டால், உடனடியாக உதவிகளை பெற வழிமுறைகள் உள்ளன: - அவசரமான சூழ்நிலைகளில், தேசிய மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: 1926 - சுமித்ரயோ: +94 11 2 682535/+94 11 2 682570 - லங்கா லைஃப் லைன்: 1375 - CCCline : 1333 (இலவச சேவை) https://www.virakesari.lk/article/222035
  20. ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு Published By: DIGITAL DESK 3 07 AUG, 2025 | 03:35 PM ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைத்துள்ளது. ஊடகவியலாளர் குமணன் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டங்கள், நில அபகரிப்பு மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி போன்ற செய்திகளை தொடர்ச்சியாக களத்தில் நின்று வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் அனுப்பப்பட்ட அழைப்பாணையில், வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு, அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222054
  21. செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த செந்தில் வேண்டுகோள் Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 11:28 AM செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, ஆறாம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன், எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள் குறித்து நான் பின்வருமாறு குறிப்பிடுவேன். இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன். மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன. இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்ற கருதப்படுகின்றது. பல தசாப்தங்களாக இலங்கை தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். அவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. மனித படுகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம்மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு குறியீடு. ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழக மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது. இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுகவேண்டும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோரவேண்டும். செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும். நீதி நல்லிணக்கம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்கான தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீள வலியுறுத்தவேண்டும். இந்தியா வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு குறித்து மாத்திரம் குரல்கொடுக்க முடியாது, எல்லைகளிற்கு அப்பால் தமிழ் மக்களின் கௌரவம் உண்மை நீதிக்காகவும் குரல் கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/222030
  22. செம்மணி அகழ்வுக்கு அரசாங்கமும் ஒத்துழைப்பு - இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு Published By: VISHNU 07 AUG, 2025 | 02:12 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) செம்மணி விவகாரம் தொடர்பில் ஒருசில பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நிதி விடுவித்துள்ளது. மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்களென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நடைபெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தை நீதியமைச்சர் காது வழி செய்து என்று குறிப்பிட்டதாக நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் குறிப்பிட்டார். இது முற்றிலும் தவறானது. நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயத்தை நான் தெளிவாக கேட்டிருந்தேன். செம்மணி மனிதப்புதைக்குழி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் உரையாற்றுகையில் திருகோணமலை, மண்டைத்தீவு பகுதியில் உள்ள மனிதப்புதைக்குழிகள் பற்றி குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அனுமானத்தின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க முடியாது. பொலிஸ் அல்லது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளியுங்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார். இந்த விடயத்தை ஒரு தரப்பினர் திரிபுப்படுத்தி பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறானதொரு செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி விவகாரம் தொடர்பில் ஒருசில பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நிதி விடுவித்துள்ளது. மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். எமது ஆட்சியே தொடரும் ஏனெனில் நாங்கள் மக்களுக்கு உண்மையாக செயற்படுகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/222010
  23. Published By: VISHNU 07 AUG, 2025 | 01:59 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது இலவச விசா வழங்குகிறது என எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற இலங்கை மின்சாரம்(திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியில் இருக்கும்போது பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. ஆனால் இன்று இரண்டு மூன்று கொள்கைகளை கடைப்பிடித்த வருகிறது. பாெத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருகின்றன. அந்த பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் மனித கொலைகாரர்கள், யுத்தக்குற்றம் இளைத்தவர்கள். அவர்கள் மன ஆறுதல் அடைவதற்கு இங்கு வருகிறார்கள். அந்தபகுதியில் ஹோட்டல்களை அமைத்துக்கொண்டு, இலங்கையர்களுக்கு செல்ல முடியாது. வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நாட்டுப்பற்று தொடர்பில் கதைத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்னர் இங்குவந்த இஸ்ரேல் இனத்தவர்கள் பாரியளவில் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் அரசாங்கம் தற்போது இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கி இருக்கிறது. அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் எங்கே என கேட்கிறோம். அந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களைவிட தமிழ், கிறிஸ்தவ பெண்கள் மற்றும் பிள்ளைகள் கையாட்களாகி இருக்கிறார்கள். அந்த பிரதேசம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது இராணுவத்தினருக்கு புரிகிறது. ஆனால் பொலிஸார் எதனையும் கண்டும் காணாமல் போன்று, செயற்படுகிறார்கள். அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து யாராவது அழுத்தங்களை கொடுக்கிறார்களோ தெரியாது. இலங்கையில் அறுகம்பை பிரதேசத்தை இஸ்ரேலின் கொலிணியாக்குவதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கப்போகிறதா என கேட்கிறோம். அதேபோன்று யுத்தக்குற்றவாளிகளின் அடைக்கலமாக ஏற்படுத்திக்கொள்ள இடமளிக்கப்போகிறதா என்று கேட்கிறோம். இலங்கை ஜனநாயகம் இஸ்ரேலாக்கப்பட்டு வருகிறது. எனவே இதுதொடர்பில் அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இதுதொடர்பில் அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/222005
  24. "தரமான செய்திக்கு இடமுண்டு; அச்சு ஊடகத்துக்கு மதிப்பு குறையாது" - வீரகேசரி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் Published By: VISHNU 07 AUG, 2025 | 08:54 AM பத்திரிகை மற்றும் ஊடக துறையில் புதிய வடிவங்கள் உருவாகலாம், ஆனால் தரமான உள்ளடக்கம் ஒருபோதும் மக்களுக்கு பிடித்த பாணியிலிருந்து விலகாது. சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான அறிக்கைகள் ஒரு தவிர்க்க முடியாத செய்தியாக தொடரும் என்று வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவருமான குமார் நடேசன் தெரிவித்தார். வீரகேசரி பத்திரிகை நேற்று தனது 95 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இதனை முன்னிட்டு கிராண்ட்பாஸில் அமைந்துள்ள வீரகேசரி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே குமார் நடேசன் இவ்வாறு குறிப்பிட்டார். ‘‘நாம் உருவாக்கும் ஒவ்வொரு படைப்பும் மிக உயர்ந்த தரம் வாய்ந்ததாகவும், நுண்ணறிவுள்ளதாகவும், கவனமாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்து, பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்க வேண்டும்’’ என்றும் குறிப்பிட்டார் குமார் நடேசன். 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரி பத்திரிகை 95 வருட காலமாக பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிநடை போட்டு வருவதுடன் நூற்றாண்டை நோக்கி சாதனை பயணத்தை முன்னெடுக்கிறது. அச்சுப் பத்திரிகைகளை இன்னும் டிஜிட்டல் ஊடகங்களை விட அதிக நம்பகத்தன்மை கொண்டதாக மக்கள் கருதுகின்றனர். போலி செய்திகள் அதிகம் பரவும் இன்றைய சூழலில், நம்பகமான ஆதாரமாக அச்சு ஊடகங்கள் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் இலங்கையின் கட்டமைப்பு மற்றும் அதன் இயங்குதன்மை தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய குமார் நடேசன், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானதாகவுள்ளது என்று குறிப்பிட்டார். ‘‘இலங்கை போன்ற ஒரு நாட்டில், அதன் சொந்த கடினமான தேசிய பிரச்சினைகளுடன் போராடி வரும் நிலையில், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானது மற்றும் அவசியமானதாக இருக்கிறது’’ என்று கூறினார் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் குமார் நடேசன். மேலும் உலகளாவிய ரீதியில் அச்சுப் பத்திரிகை துறை வீழ்ச்சியடையவதாக தென்பட்டாலும் அச்சுப் பதிப்புக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்றும் உண்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை நோக்கி மக்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்றும் குமார் நடேசன் எடுத்துக்கூறினார். ‘‘உண்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்புதான் நம்பிக்கையை உருவாக்கி நிலைநிறுத்துவதற்கான அடித்தளமாக உள்ளது. அச்சுக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்’’ என்று வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் குமார் நடேசன் மேலும் உரையாற்றுகையில், இன்று, ஆகஸ்ட் 6ஆம் திகதி உண்மையிலேயே ஒரு முக்கியமான நிகழ்வைக் கோடிட்டுக் காட்டுகிறது. வீரகேசரி பத்திரிகையின் 95ஆவது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகிறோம். தொண்ணூற்றைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1930 ஆம் ஆண்டு இதே நாளில், எமது வீரகேசரி செய்தித்தாளின் முதல் பதிப்பு அச்சகத்தில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு சேவையைக் கொண்டாடும் வகையில், இன்று நாம் இங்கு கூடியிருக்கிறோம். நீடித்த தொலைநோக்கு, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான வார்த்தையின் சக்திக்கு இது ஒரு சான்றாகும். வீரகேசரி வெற்றியின் உண்மையான அளவுகோல் அதன் இலாபத்தின் அளவைக் கொண்டு மட்டுமே வரையறுக்கப்பட்டதில்லை. அவ்வாறு ஒருபோதும் அந்த அளவுகோல் வரையறுக்கப்படாது. மாறாக, எங்கள் வாசகர்களிடமிருந்து நாம் பெரும் அசைக்க முடியாத நம்பிக்கை, சமூகங்களுக்கிடையில் எங்கள் அணுகலின் அகலம் மற்றும் இலங்கையிலும் உலகளாவிய புலம்பெயர்ந்தோர் மட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் நாம் ஏற்படுத்தும் ஆழமான தாக்கம் என்பவற்றில் எங்கள் பத்திரிகையின் மரபு உருவாகியுள்ளது. எங்கள் பயணம் நீண்டது மற்றும் தனித்துவமானதாக இருக்கிறது. ஆனால் எங்கள் பார்வை உறுதியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். கடந்த 95 ஆண்டுகளை நாங்கள் கொண்டாடுவது மட்டுமல்ல; அடுத்த 5 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை நாம் அமைத்து வருகிறோம். நமது நூற்றாண்டு விழாவை நோக்கி பயணிக்கிறோம். உண்மையில், அதற்குப் பிந்தைய தலைமுறைகளுக்கு நாம் அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இது நமது பகிரப்பட்ட மரபாகும். இது உங்களுடையதும் என்னுடையதுமாகும். இது - வளர்ப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமானதாகும். இந்த தொடர்ச்சியான பொருத்தமான தன்மையை நாம் எவ்வாறு உறுதி செய்வது? இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு நம்பகமான நங்கூரமாக நமது உள்ளார்ந்த பலங்களை உருவாக்குவதன் மூலம் இதனை செய்யலாம். நாம் உருவாக்கும் ஒவ்வொரு படைப்பும் மிக உயர்ந்த தரம் வாய்ந்ததாகவும், நுண்ணறிவுள்ளதாகவும், கவனமாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்து, பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்க வேண்டும். மேலும், நமது செய்திகளையும் கண்ணோட்டங்களையும் உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு எடுத்துச் சென்று, அவர்களின் வேர்களுடனும், முக்கியமான பிரச்சினைகளுடனும் இணைக்கும் வகையில், எமது குரலை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். இன்றும் கூட, வீரகேசரி ஒரு செய்திப் பத்திரிகையையும் தாண்டி ஒரு ஆழமான நோக்கத்தைக் கொண்டுள்ளது. எங்கள் பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நம்பகமான குரலாக உள்ளனர். சிறுபான்மை தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும், அவர்களுக்குத் தகவல் அளிக்கும், கல்வி கற்பிக்கும், இணைக்கும் உயர்தர வெளியீட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். இன்றைய பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களை நீங்கள் தெளிவுபடுத்துகிறீர்கள். மேலும் சிக்கலான உலகத்தைப் பற்றிய புரிதலை எங்கள் வாசகர்களுக்கு வழங்குகிறீர்கள். விசேடமாக முக்கியமான உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறீர்கள். இலங்கை போன்ற ஒரு நாட்டில், அதன் சொந்த கடினமான தேசிய பிரச்சினைகளுடன் போராடி வரும் நிலையில், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானது மற்றும் அவசியமானதாக இருக்கிறது. எமது நாட்டின் தேசியத் தலைவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கும் சமமான கருத்துகளையும் நல்ல ஆலோசனைகளையும் வழங்குவதில் எங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. உண்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்புதான் நம்பிக்கையை உருவாக்கி நிலைநிறுத்துவதற்கான அடித்தளமாக உள்ளது. கவனயீர்ப்பு அதிகரித்து வரும் இந்த யுகத்தில், குறுகிய கானொளிகள் மற்றும் பரபரப்பான தலைப்புச் செய்திகள் மட்டுமே மேலோங்கி நிற்கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால், நான் அந்தக் கருத்துடன் உறுதியாக உடன்படவில்லை. ஒரு விடயத்தின் உள்ளடக்கம், விதிவிலக்கான தரம், உண்மையான நுண்ணறிவு, அழகாக எழுதப்பட்டிருத்தல் மற்றும் ஆழமான பகுப்பாய்வு என்பன நம்பிக்கையான பார்வையாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் முடியும். இவை மறுக்க முடியாத சக்தியைக் கொண்டுள்ளன. புதிய வடிவங்கள் உருவாகலாம், ஆனால் தரமான உள்ளடக்கம் ஒருபோதும் மக்களுக்கு பிடித்த பாணியிலிருந்து விலகாது. சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான அறிக்கைகள் ஒரு தவிர்க்க முடியாத செய்தியாக தொடரும். இந்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு, தலையங்கம், தயாரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் என ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஒரு வலுவான, ஒருங்கிணைந்த மற்றும் திறமையான குழு தேவைப்படுகிறது. வலுவான மற்றும் சக்திவாய்ந்த ஊடக சக்தியாக மாறுவதற்கான எமது கூட்டு கனவை அடைய, நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவான குறிக்கோள் உணர்வு, அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் பிரகாசிக்கும் ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அச்சுக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வீரகேசரி இன்று இருப்பதை விட மிகவும் வித்தியாசமாகத் தோன்றலாம். ஒருவேளை வடிவம், பாணி, தொனி அல்லது அளவு கூட வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் இது ஒரு பலவீனம் அல்ல. மாறாக தழுவல் மற்றும் பரிணாமமாகும். இருப்பினும், எங்கள் முக்கிய நோக்கம் நிலையானதாக இருக்க வேண்டும். எதிர்கால தலைமுறை வாசகர்களுக்கு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பது அவசியமாகும். இறுதியாக, வீரகேசரி குடும்பமாகிய நாம் மட்டுமே இந்த அவசியமான மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முன்னெடுக்க முடியும். ஏற்கனவே உள்ள வடிவங்கள் மற்றும் பணி செயல்முறைகளை நாம் மறுபரிசீலனை செய்ய முடியும் என்றார். இதேவேளை அச்சு பத்திரிகை சவால்களை எதிர்கொள்கின்ற நிலையில் அது பரிணாம வளர்ச்சி அடையும்" என்று ஆய்வுகள் கூறுகின்றன. அச்சுப் பத்திரிகை அதன் பாரம்பரிய வடிவத்தில் பல சவால்களை எதிர்கொண்டாலும், அது முழுமையாக முடிந்துவிடாது. மாறாக, புதிய யுகத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு, புதிய வடிவங்களில் தனது இருப்பை நிலைநிறுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சமூக ஊடகங்களில் விரைவான மற்றும் சுருக்கமான செய்திகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், ஆழமான பகுப்பாய்வு, விரிவான கட்டுரைகள் மற்றும் புலனாய்வு செய்திகளை அச்சு ஊடகங்களே தொடர்ந்து வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/222004

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.