Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18757
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 25 DEC, 2023 | 01:34 PM நத்தார் தினம் இன்று திங்கட்கிழமை (25) கொண்டாடப்படும் நிலையில் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், "போரினால் அவதிப்படும் நம் சகோதர, சகோதரிகளுடன் நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம். நாங்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல், உக்ரைன் பற்றி யோசித்து வருகிறோம். துன்பம், பசி, அடிமைத்தனம் போன்றவற்றால் அவதிப்படுபவர்களைப் பற்றியும் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்தவர்கள் ஜெபத்திலும், அன்பின் அரவணைப்பிலும், நிதானத்துடனும் கிறிஸ்துமஸ் எனும் இந்த புனித நாளைக் கொண்டாட வேண்டும். இந்த கிறிஸ்துமசை எளிமையாகவும், இல்லாதவர்களுடன் பகிர்ந்தும் கொண்டாட வேண்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/172442
  2. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கிய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, நாளை நாடு முழுவதும் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாளை ( 26) 2004 சுனாமியின் 19 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இது உலகின் மிக மோசமான மற்றும் மிகவும் அழிவுகரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும், இது இந்தியப் பெருங்கடலில் 10 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தியது. https://thinakkural.lk/article/285915
  3. யாழ்.இளைஞர்கள் மூவர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைப்பு Published By: VISHNU 25 DEC, 2023 | 04:10 PM யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் கைதானவர்களில் மூன்று இளைஞர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாதகல், இளவாலை மற்றும் காட்டுப்புலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை போதைப்பொருட்களுடன், இளவாலை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, நீதிமன்ற அனுமதியுடன் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/172447 போதைப்பொருட்களை பாவிப்பவர்கள் என நினைக்கிறேன்.
  4. நந்தன் அண்ணைக்கு சத்திரசிகிச்சை(Laparoscopy) செய்து பித்தப்பை!(சரியோ தெரியவில்லை) கல் எடுத்தது.
  5. யாழில். போதைப்பொருளுடன் கைதான பெண்ணிடம் மீட்கப்பட்ட தொலைபேசிகளை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் கோரிக்கை Published By: VISHNU 25 DEC, 2023 | 02:43 PM யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளை அடையாளம் காட்டுமாறு நெல்லியடி பொலிஸார் கோரியுள்ளனர். துன்னாலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைதான போது, அவரிடம் இருந்து 19 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் மீட்டு இருந்தனர். குறித்த தொலைபேசிகள் களவாடப்பட்ட தொலைபேசிகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில் , அண்மைய நாட்களில் தொலைபேசிகளை களவு கொடுத்தோர், நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து , தொலைபேசிகளை பார்வையிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்னர். https://www.virakesari.lk/article/172445
  6. மல்யுத்த சம்மேளன புதிய கமிட்டி இடைநீக்கம் - வீரர்களின் எதிர்ப்புக்கு பணிகிறதா மத்திய அரசு? பட மூலாதாரம்,ANI 23 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 24 டிசம்பர் 2023 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை காலை தகவல்கள் வெளியாகியுள்ளன. செய்தி முகமைகள் பிடிஐ மற்றும் ஏஎன்ஐ வெளியிட்டுள்ள தகவலின்படி, மறுஉத்தரவு வரும் வரை இந்த இடைநீக்கம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. “மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் பதவியேற்ற பிறகு கோண்டா நந்தினி நகரில் நடக்கவிருக்கும் 15 மற்றும் 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்ட பிறகு, மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமிட்டியை இடைநீக்கம் செய்துள்ளதாக” ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, புதிய கமிட்டியின் தேர்வுக்கு பிறகு எடுக்கப்பட்டுள்ள அனைத்து முடிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த செய்தி வெளியான பிறகு, ஞாயிறு அன்று ஊடகங்களிடம் பேசிய சஞ்சய் சிங், “ நான் பயணத்தில் இருந்தேன். முதலில் நான் கடிதத்தை படித்து விட்ட பிறகே, என்னால் எந்த கருத்தும் தெரிவிக்க முடியும்” என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,DEBLIN படக்குறிப்பு, மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்த சாக்ஷி மாலிக், தனது ஷுக்களைக் கழற்றி மேசையில் வைத்தார். மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டது குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இரண்டு படங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதையடுத்து அவர்கள் மிகுந்த மன தைரியத்துடன் போராட்டக் களத்தில் குதித்தனர். ஆனால், இந்த ஆண்டின் இறுதியில், மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு. அவர்கள் கதறி அழும் நிலை ஏற்பட்டது. அந்த அழுகையின் பின்னணியில் அவர்கள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாகக் கரைந்துவிட்டதாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளரும் புதிய தலைவருமான சஞ்சய் சிங்கின் வெற்றியும், மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகளுக்கு கிடைத்த தோல்வியின் தாக்கமும் விளையாட்டு உலகப் பெண்களின் மனதில் ஏற்கனவே நன்றாகப் பதிவாகியுள்ளது. விளையாட்டு உலகில் பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்குகள் கடந்த காலத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்படவில்லை என்ற நிலையில், இதுபோன்ற விவாதங்களில் எதிர்காலத்தில் மிகவும் கடினமாகிவிடும் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார், ஜனவரி 2017 முதல் ஜூலை 2022 வரை, பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக 30 பாலியல் புகார்கள் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு வந்துள்ளன என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் புகார் தொடர்பான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு மட்டுமே உண்மை அல்லது பொய்யை நிரூபிக்கும். கடந்த ஜூன் மாதம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த வியாழன் அன்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டார். அதன் பின் அந்த வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டது, அவர் இப்போது ஜனவரியில் மீண்டும் விசாரணையைத் தொடங்குவார். ஆனால் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மல்யுத்தம் மட்டுமல்ல, விளையாட்டு உலகமே பெண்களுக்குப் பாதுகாப்பற்றது என்ற அச்சத்தை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது. பல பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளை நாம் கேட்கும் போது, பெண்களை விளையாட்டு வீரர்களாக்கும் அவர்களின் நோக்கங்கள் பலவீனமடையத் தொடங்கியுள்ளன என்பது தெளிவாகிறது. அதே சமயம், விளையாட்டுகளை நிர்வகிக்கும் சங்கங்களில் சர்வாதிகாரத்திற்கு சவால் விடுவது மிகவும் கடினம் என்பதும் தெளிவாகிவிட்டது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பிரிஜ் பூஷன் சரண் சிங் பா.ஜ.க. எம்.பி. பிடியில் மல்யுத்த சம்மேளனம் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுடன், சங்கத்தில் தனிநபர் ஒருவரின் ஆதிக்கம் தொடர்பான பிரச்னையையும் மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பினர் என்பதுடன் அரசாங்கத்தின் உத்தரவாதத்திற்குப் பிறகுதான் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மல்யுத்த வீராங்கனைகளின் கூற்றுப்படி, பிரிஜ்பூஷன் சரன் சிங்கின் கூட்டாளிகள் அல்லது அவருடன் தொடர்புடையவர்கள் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட மாட்டார்கள் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டது. பாரதிய ஜனதா எம்.பி.யாக இருக்கும் பிரிஜ் பூஷண், மல்யுத்த சங்கத்தில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற அவரது நண்பரும், தொழில் கூட்டாளியுமான உத்தரபிரதேச மல்யுத்த சங்கத்தின் துணைத் தலைவர் சஞ்சய் சிங் மூலம் பிரிஜ் பூஷனின் ஆதிக்கம் தொடரும் என வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த வினேஷ் பொகாட் இதே கருத்தை வலியுறுத்தினார். தேர்தலில் சஞ்சய் சிங் வெற்றி பெற்ற பிறகு, பிரிஜ் பூஷனின் வீட்டில், "சஞ்சய் பாய்யா கியா லே கே சலே, பிரிஜ் பூஷன் கி கடாவு லே கே சலே" என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மல்யுத்த சம்மேளனத்திற்கு புதிய முகங்கள் வந்தாலும், பிரிஜ் பூஷனின் பிடியில் அந்த சம்மேளனம் தொடர்வது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கூட்டமைப்பு முன்பு இருந்தது போல் இல்லை. இம்மாத இறுதியில் கோண்டாவில் 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும். பிரிஜ் பூஷன் சரண் சிங் கோண்டாவில் வசிப்பவர் என்பதுடன், அங்கிருந்து இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கரைந்துவிட்டதாக மல்யுத்த வீரர்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளனர். பஜ்ரங் புனியா, வினேஷ் பொகாட் ஆகியோரும் குட்பையா? மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பது மல்யுத்த வீரர்களின் மற்றொரு கோரிக்கையாகும். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற 15 உறுப்பினர்களில் ஒருவர் கூட பெண் இல்லை. மல்யுத்த வீராங்கனைகளின் நம்பிக்கையை அவர்கள் எப்படி வென்றெடுப்பார்கள் என்பது சம்மேளனத்தின் முன் உள்ள ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த விளையாட்டு அவர்களுக்கு பாதுகாப்பானது என்றும் அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தலாம் என்றும் அவர்களுக்கு எப்படி உறுதியளிக்கமுடியும்? தேர்தலுக்குப் பிறகு பிரிஜ் பூஷன் சரண் சிங், தனது கூட்டாளி வெற்றி பெற்றாலும், தனது போட்டியாளர்களாக விளங்கும் மல்யுத்த வீரர்கள் ‘பழிவாங்கும் அரசியலை’ எதிர்கொள்ளும் நிலை ஏற்படாது என்று கூறினார். பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் பொகாட் ஆகியோர் பல சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் அவர்கள் நிச்சயமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கங்களை வெல்ல விரும்புகிறார்கள். இப்போது அவர்கள் தனது கேரியரை தொடர்வார்களா அல்லது சாக்ஷி மாலிக் போல் மல்யுத்தத்திற்கு குட்பை சொல்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகளாக பெண்கள் தேர்வாகவில்லை என வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வினேஷ் 53 கிலோ எடையில் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கிறார். இந்த எடையில், 20 வயதான பங்கல் சிறப்பாக செயல்பட்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றுள்ளார். மல்யுத்த கூட்டமைப்பை நடத்துவதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்த தற்காலிகக் குழு, ஒதுக்கீட்டில் வெற்றி பெறும் மல்யுத்த வீரர்கள் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்று எதுவும் இல்லை என்றும், இருப்பினும் ஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெறுபவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க மற்றொரு விளையாட்டில் வெற்றிபெறவேண்டும் என்றும் ஒரு கொள்கையை கடந்த மே மாதம் கொண்டு வந்தது. புதிய மல்யுத்த சம்மேளன நிர்வாகம் கடைசியில் பங்கலை மட்டுமே பாரிஸுக்கு அனுப்பக்கூடும். இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், வினேஷின் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் கனவு கனவாகவே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், வினேஷுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர் 50 கிலோ எடைப் பிரிவுக்கு திரும்ப வேண்டும் அல்லது தனது எடையை அதிகரிக்க வேண்டும் என்பதுடன் 57 கிலோ எடைப் பிரிவில் ஒரு ஒதுக்கீட்டைப் பெற வேண்டும். பஜ்ரங் புனியா மல்யுத்தத்தை தொடர்ந்தால், அவருக்கு எந்த பிரச்னையும் இருக்காது. ஏனென்றால் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க எந்த இந்திய மல்யுத்த வீரரும் இதுவரை தகுதி பெறவில்லை. பட மூலாதாரம்,INSTAGRAM/ANITASHEORAN_WRESTLER படக்குறிப்பு, மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட முன்னாள் வீராங்கனை அனிதா ஷியோரன் 7 வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார். ஆச்சரியமான வாக்குப்பதிவு முறை 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன், மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஏழு வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அதே சமயம் சஞ்சய் சிங் 50 வாக்குகளில் 40 வாக்குகளைப் பெற்றார். சஞ்சய் சிங்குக்கு ஆதரவாக 40 வாக்காளர்கள் இருக்கும் போது, மூத்த துணைத் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான தேர்தலில் அவரது குழுவில் இருந்த வேட்பாளர்கள் எப்படி தோல்வியடைந்தனர் என்பதுதான் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. அனிதா குழுவைச் சேர்ந்த பிரேம்சந்த் லோச்சப், தேவேந்திர காடியன் ஆகியோர் எளிதாக வெற்றி பெற்றனர். இதன் காரணமாக, எதிர்க்கட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைத்ததற்கு பின்னால் ஒருவித அழுத்தம் இருந்ததாகவும், இல்லையெனில் இந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்றும் பல நிபுணர்கள் யூகித்து வருகின்றனர். இருந்த போதிலும், 15 பதவிகளில் 13 பேர் பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், எனவே, சஞ்சய் சிங் கொள்கைகளை வகுப்பதில் அல்லது தற்காலிகக் குழு எடுக்கும் முடிவுகளை மாற்றுவதில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளும் நிலை இருக்காது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சஞ்சய் சிங், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய கூட்டாளி ஆவார். https://www.bbc.com/tamil/articles/c842e73e94yo
  7. அதே வானம் அதே பூமி புத்தக வெளியீட்டிற்கு பேராசானுக்கு வாழ்த்துகள்.
  8. சும்மா கையால தொடுறதுக்கு ஏனண்ணை ஏணி?!😜
  9. காசாவின் அல்மக்காசி அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 70க்கும் மேற்பட்டோர் பலி Published By: DIGITAL DESK 3 25 DEC, 2023 | 11:59 AM காசாவின் அல்மக்காசி அகதி முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 70க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தினத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் பெருமளவு மக்கள் வசிப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். காயமடைந்த பலர் அருகில் உள்ள அல் அக்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகத்தில் இரத்தத்துடன் காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மூன்று வீடுகளிற்கு மேல் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகளவு மக்கள் வசித்த குடியிருப்பு பகுதி அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மகளையும் பேரப்பிள்ளையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ள ஒருவர் தாங்கள் காசாவிலிருந்து தப்பிவெளியேறியவர்கள் என தெரிவித்துள்ளார். அவர்கள் அழிக்கப்பட்ட கட்டிடமொன்றின் மூன்றாம் மாடியில் வசித்தனர் கட்டிடம் முற்றாக இடிந்து விழுந்ததில் அவர்கள் அனைவரும் எனது பேரப்பிள்ளைகள் மகள் கணவர் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் அனைவரும் இலக்குவைக்கப்படுகின்றோம் பொதுமக்கள் அனைவரும் இலக்குவைக்கப்படுகின்றனர் பாதுகாப்பான இடம் இல்லை எங்களை காசாவிலிருந்து வெளியேற சொன்னார்கள் நாங்கள் மத்திய காசாவிற்கு வந்து உயிரிழக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/172437
  10. 25 DEC, 2023 | 12:11 PM இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்த நிலையில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது, இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தைகளுடனான சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடிக்காரர்கள் விளம்பரம் செய்கின்றனர். அதனை நம்பி அந்த இணைப்பின் ஊடாக உட்செல்வோருக்கு முதலில் சிறு தொகை பணத்தினை அவர்கள் சொல்லும் கணக்குக்கு இணையம் (online) ஊடாக பணத்தினை செலுத்த சொல்லுவார்கள். முதலில் சிறு தொகை பணத்தினை செலுத்த சொல்வதானால், இவர்கள் எதுவும் யோசிக்காமல் பணத்தினை செலுத்தி விடுவார்கள். பணம் செலுத்தப்பட்டதும், அதொரு முதலீடு எனவும், அதனால் வந்த வருமானம் என ஒரு தொகையை இவர்களுக்கு வைப்பு செய்து ஆசையை மேலும் தூண்டுவார்கள். இவ்வாறாக பெரும் தொகை பணத்தினை வைப்பிலிட்ட வைத்த பின்னர், அந்த பணத்துடன் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள். அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் இவர்களுக்கு தெரியவரும். ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்த பின்னர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்வார்கள். அதில் யாருக்கு எதிராக முறைப்பாடு செய்வது , அவர்களின் விபரங்கள் என எதுவும் இருக்காது. அதனால் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதில் சவால்களை எதிர்கொள்கின்றனர். எனவே இவ்வாறான இணைய மோசடியாளர்களிடம் சிக்காது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/172434
  11. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கொலையுண்ட நந்தினி 24 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை புறநகர் பகுதியில் சனிக்கிழமை இரவு பெண் மென்பொறியாளரை கை, கால்களைக் கட்டிப்போட்டு உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயில் கருகி உயிருக்குப் போராடிய பெண்ணை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். போலீசாரின் விசாரணையில், ஒருதலையாக காதலித்து வந்த அந்தப் பெண்ணின் பள்ளிப்பருவ நண்பர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில், சிறுசேரியை அடுத்த பொன்மார் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது, கை கால்கள் கட்டப்பட்டு, பாதி எரிந்த நிலையில், ஒரு பெண் உயிருக்குப் போராடியுள்ளார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை வைத்து, இறந்த நபர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி(24) எனத் தெரியவந்தது. “இவர் கடந்த எட்டு மாதங்களாக துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்,” என வழக்கை விசாரித்த போலீசார் தெரிவித்தனர். பட மூலாதாரம்,HANDOUT கொலை செய்தது யார்? பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கொலையுண்ட நந்தினி நந்தினியை கொலை செய்தது யார் ? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? இப்படி உயிருடன் எரித்துக் கொல்வதற்கான காரணம் என்ன என பல்வேறு கோணங்களில் விசாரண நடத்தினர். இந்த நிலையில், நந்தினியின் முன்னாள் காதலன் என்று கூறப்படும் வெற்றிமாறனை விசாரித்த போது, அவர் தான் நந்தினியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்ததாக போலீசார் கூறுகின்றனர். மேலும், வெற்றிமாறன் ஒரு திருநம்பி என்பதும், அவர் நந்தினியின் பள்ளிப் பருவ நண்பர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில்,“வெற்றிமாறன் தன் பள்ளிப்பருவத்தில் பாண்டி மகேஸ்வரி என்ற பெண்ணாக இருந்துள்ளார். அப்போதிலிருந்தே நந்தினியும், மகேஸ்வரியும் நண்பர்கள். பள்ளிப் பருவத்திற்கு பிறகு, பாண்டி மகேஸ்வரி தனது பாலினத்தை உணர்ந்து, வெற்றிமாறனாக மாறி திருநம்பியாகி உள்ளார்,”என்றார் அந்த அதிகாரி. கொலை எப்படி நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கைது செய்யப்பட்டுள்ள வெற்றிமாறனின் வாக்குமூலத்தின்படி, வெற்றிமாறனும், நந்தினியும் காதலித்து வந்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக நந்தினி வெற்றிமாறனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு வேறு சிலருடன் பழகியதால்தான், சந்தேகப்பட்டு கொலை செய்ய முடிவு செய்ததாக கைதான வெற்றிமாறன் போலீசாரிடம் கூறியுள்ளார். இறந்த நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால், பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாக வெளியே அழைத்துச் சென்றுள்ளார் வெற்றி. நேற்று காலை கோயிலுக்குச் சென்று, பின் மதியம் ஹோட்டலில் உணவு சாப்பிட்டு, மாலை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் வெற்றிமாறன். “அங்கு தான் சர்ப்ரைஸ் கொடுப்பதாகக் கூறி, கண்களை முதலில் கட்டி, பின் கை கால்களையும் கட்டியுள்ளார். பிறகு தான், பிளேடால் கை, கால், மணிக்கட்டு, கழுத்து ஆகிய பகுதிகளில் அறுத்துள்ளார். இதில், அந்தப் பெண் வலி தாங்காமல் துடிக்கவே, அவர் பெட்ரோல் பங்க்கிற்கு சென்று, பெட்ரோல் வாங்கி வந்து, உயிருடன் நந்தினியை எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார்,” என்றார் வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர். சம்பவம் தொடர்பாக, போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட வெற்றிமாறனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களின் விருப்பத்தை மதிக்காததே வன்முறைக்கு காரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES "என் விருப்பத்தை உன்னிடம் சொல்லும் போது ஓர் ஆண் மகனான என்னையே நீ வேண்டாமென மறுக்கிறாயா" என்ற மனப்பான்மையால், வன்முறையைக் கையில் எடுப்பதைப் போன்ற உச்சக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்று தான் கருதுவதாகக் கூறுகிறார் எழுத்தாளரும் பெண்ணிய ஆர்வலருமான நிவேதிதா லூயிஸ். இவற்றைக் கண்டு அஞ்சி, பின்வாங்கிக் கொண்டிருந்த பெண்கள், ஒரு கட்டத்தில் அத்தகைய செயல்பாடுகளைக் கண்டிப்பதும் எதிர்த்துச் செயல்படுவதும் அதிகரித்தது. அதற்கான எதிர்வினைகளாக சிலர் வன்முறையைக் கையில் எடுக்கத் தொடங்குவதாகக் கருதப்படுகிறது. இன்றைய சமூகத்தில், "பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு தங்கள் விருப்பங்களை, உரிமைகளை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய தைரியத்தை வழங்கியுள்ளது. ஆணாதிக்க உலகத்திற்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வீட்டிற்குள்ளேயே வாழும் பெண்கள் ஆணாதிக்க தன்மைக்கு உட்பட்டு, அதன் வரையறைக்குள் தங்கள் வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டவர்கள். அவர்களையே பார்த்துப் பழகிய ஆண்கள், நவநாகரிக பெண்களைப் பார்க்கையில் தங்களுடைய ஆதிக்கத்தை இழப்பதாக அச்சம் கொள்கின்றனர். அதுவே இத்தகைய வன்முறைகளுக்குக் காரணம்" எனவும் கூறுகிறார் நிவேதிதா லூயிஸ். https://www.bbc.com/tamil/articles/cpv616422xxo
  12. 25 DEC, 2023 | 12:01 PM வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதனால், டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்று எவையும் நீண்டகாலமாக வடமாகாணத்தில் பதிவாகவில்லை. ஆனால் அண்மைய நாட்களாக டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றன. தினமும் சராசரியாக 100 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். எனவே வடமாகாண மக்கள் கொரோனா தொற்று தொடர்பில் அச்சமடைய தேவையில்லை. ஆனால் டெங்கு நோய் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/172431
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆடம் டேய்லர் பதவி, தி கான்வர்சேஷன் 25 டிசம்பர் 2023, 02:24 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில், அமெரிக்காவின் மிசோரியில் உள்ள மருத்துவர்கள் ஆச்சரியமான ஒன்றை கண்டுபிடித்தனர். வழக்கமான பரிசோதனைக்காகச் சென்ற 63 வயதுடைய நோயாளி ஒருவரின் பெருங்குடலின் உள்ளே ஒரு ’ஈ’ இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். நோயாளியின் செரிமான நொதிகள் மற்றும் வயிற்றில் உள்ள அமிலம் எல்லாவற்றையும் கடந்து இந்த ’ஈ’ அதன் உருவ அமைப்பில் மாறுபடாமல் அப்படியே எவ்வாறு தப்பித்தது என்பது மருத்துவர்களுக்குத் தெரியவில்லை. உடற்கூறியல் பேராசிரியராக, மனிதர்களின் உடலுக்குள் புகும் விசித்திரமான விஷயங்கள் பலவற்றை நான் அறிந்திருக்கிறேன். அப்படியான சில கதைகளை இங்கே தொகுத்துள்ளேன். தைவானை சேர்ந்த பெண் ஒருவரின் காதுக்குள் சிலந்தி மற்றும் அதன் வெளிப்புற எலும்புக்கூடு இருந்தது சமீபத்தில் செய்திகளில் இடம்பிடித்தது. பிரிட்டனை சேர்ந்த ஒருவர் தன்னை கடித்த சிலந்தியை விழுங்கியதால், அவருக்கு தொண்டையில் வீக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிலந்தி தன் உடலுக்குள் செல்வதற்கு அவர் சிறிய பங்கு வகித்துள்ளார். ஆனால், பெரும்பாலானோரின் உடல்களில் சிலந்தி, ஈ போன்றவை தற்செயலாக சென்றுவிடுகிறது. குறிப்பாக, திட உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு இது அதிகம் நேர்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES துரதிருஷ்டவசமாக, இவை சுவாசக் குழாய்க்குள் செல்வதால் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக இது உள்ளது. குழந்தைகள் தங்கள் வாய், மூக்கு மற்றும் காதுகளுக்குள்ளே இத்தகையவற்றை தவறுதலாக செலுத்திவிடுகின்றனர். வாய் மற்றும் மூக்குக்குள் செலுத்தப்படும் பொருட்கள் பொதுவாக சுவாசக் குழாய் வழியாக உடலுக்குள் சென்று, மலம் வாயிலாக வெளியேறுகின்றது. குழந்தைகள் பொதுவாக பொம்மைகள், மணிகள், காந்தங்கள் முதல் எதிர்பாராத வகையில் அட்டைப்பூச்சிகள் மற்றும் ஊசிகள் வரை உட்கொள்கின்றனர். உணவுகள் சிக்கிக்கொள்ளுதல் மேற்கத்திய நாடுகளில், வேர்க்கடலைகளை அதிகமாக குழந்தைகள் விழுங்கிவிடுகின்றனர். மேலும், ஹாட் டாக் (Hot Dog) போன்ற உணவுப்பொருட்கள், சாசேஜ்கள் (Sausages) போன்றவைதான் அதிகமான இறப்புகளை ஏற்படுத்துகின்றன. தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவில் இறைச்சிகளின் எலும்புகள் மற்றும் விதைகள் போன்றவை இறப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் விதைகளை விழுங்குவதால் இத்தகைய அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்களை விட ஆண்கள் பொருட்களை விழுங்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன .தற்செயலாக பொருட்களை விழுங்குவதற்கான ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும். சில நேரங்களில், குழந்தைகள் உட்கொள்ளும் பொருள்கள் பல தசாப்தங்களாக கவனிக்கப்படாமல் போகலாம். பிரிட்டனி பிரெஸ்டனைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர், சிறுவயதில் பிளேமொபில் (Playmobil) எனும் விளையாட்டுப் பொருளின் துண்டுகளை விழுங்கியுள்ளார். அது அவருடைய 47-வது வயதில், நீடித்த இருமல் பிரச்னைக்காக ஸ்கேன் செய்தபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டது . அறுவை சிகிச்சை வரை செல்லலாம் நாணயங்கள் மற்றும் சிறிய பொம்மைகள் போன்ற பொருட்களை குழந்தைகள் விழுங்குவதால் அவை அறுவை சிகிச்சை வரை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை செரிமான அமைப்பு வழியாக செல்கின்றன.20% பேருக்கு வாய் அல்லது ஆசனவாய் வழியாக ஒரு குழாய் செருகப்பட்டு எண்டோஸ்கோப் மூலம் அப்பொருட்கள் அகற்றப்படுகின்றன. ஒரு சதவீதத்தினருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை உட்கொள்ளும் போது காந்தங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை குடல் சுவர்களின் சுழல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு, குடல் சிதைவை ஏற்படுத்துகின்றன. அறிகுறிகளை ஏற்படுத்தாமல் சிக்கிக்கொள்ளும் உலோகப் பொருட்களை உட்கொள்ளும் போது, அவை காந்தமாக மாறும் இரும்பு உலோகங்களைக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அபாயங்கள் ஏற்படலாம். குறிப்பிட்ட நபர் எம்.ஆர்.ஐ சோதனை மேற்கொள்ளும் போது அந்த உலோகங்கள் அதிக வெப்பத்திற்கு உட்பட்டு சேதமடையும். பட மூலாதாரம்,GETTY IMAGES கருத்தடை சாதனங்களால் அபாயம் மருத்துவ காரணங்களுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ பிறப்புறுப்புக்குள் சில சாதனங்கள் செலுத்தப்படுகின்றன. அதாவது, கருப்பையினை நிலைகுலையாமல் தாங்க செய்யும் பெசரிகள் (Pessaries) அல்லது கருத்தடை சாதனங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். அவை தம் உடலில் செலுத்தப்பட்டிருப்பதை நோயாளி மறந்துவிட்டிருக்கலாம் அல்லது அவை உடலுக்குள்ளேயே சேதமடைவதை உணராமல் இருக்கலாம். இவை நோய்த்தொற்றுகள், ஃபிஸ்துலாக்கள் (உடலில் இரண்டு உறுப்புகள் அல்லது துவாரங்களை இணைக்கும் அசாதாரண பகுதி) மற்றும் கல் உருவாக்கம் போன்ற நீண்ட கால அபாயங்களை ஏற்படுத்துகின்றன. ஆசனவாய் மற்றும் மலக்குடலின் உள்ளேயும் இத்தகைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரச்னைகளுடன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருபவர்களில் 66% முதல் 85% பேர் ஆண்கள். குடல் சிதைவு அபாயம் ஆசனவாய் அல்லது மலக்குடலில் உள்ள பொருட்களால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று, குடல் இயக்கங்களின் இயல்பான இயக்கத்தைத் தடுக்கும் வகையில், அவை சிக்கிக்கொள்ளலாம். காலப்போக்கில், இது ஒரு துளையிடல் அல்லது குடல் சிதைவு அபாயத்துடன் பாதையின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை ஏற்படுத்தும். பாலியல் உறவின் போதோ அல்லது மலச்சிக்கல் சிகிச்சைகளுக்காகவோ சில பொருட்கள் ஆசனவாயில் செலுத்தப்படுகின்றன. காரணங்கள் வேறுபட்டாலும், அந்த பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான பொருள்கள் மிகவும் பெரியவை. சுய இன்பத்திற்காக பலரும் ஆப்பிள்கள், கத்தரிக்காய்கள், தூரிகைகள், பேனாக்கள், கேரட், கண்ணாடிகள், சோடா பாட்டில்கள், பேஸ்பால் மற்றும் முழு தேங்காய் உள்ளிட்ட பொருட்களும் இவற்றில் அடங்கும். இப்பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டியுள்ளது. விபத்தினாலோ அல்லது வேண்டுமென்றோ, உடலில் நுழையும் இத்தகைய பொருட்கள் ரத்தப்போக்கை அதிகரித்து மரண அபாயத்தை ஏற்படுத்துகின்றன. ஆடம் டேய்லர் லேன்கேஸ்டர் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பேராசிரியராக உள்ளார். https://www.bbc.com/tamil/articles/cz9q19vky66o
  14. 24 DEC, 2023 | 07:17 PM (எம்.நியூட்டன்) இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டுகொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை நம்புவோம் என யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ளோர் மேல் சுடரொளி உதித்தது. ஒளி அல்லது பேரொளி என்பது இருளற்ற நிலையாகும். ஒளியற்ற நிலை என்பது பார்வையிழந்த நிலையாகும். பார்வையிழந்த நிலையில் ஒரு மனிதனோ மனித குலமோ பயணம் செய்ய முடியாது. எனவேதான் இறைவன் பாவ இருள் சூழ்ந்த உலகில் வாழும் மனிதருக்கு தன் மகனை ஒளியாக அனுப்பி வைக்கின்றார். பாலகன் இயேசுவே இந்த ஒளி. அவரின் பிறப்பே எமக்கான விடியல். அமைதியான விடியலை நோக்கி நாம் பயணம் செய்ய பாலகன் இயேசு என்னும் மாபெரும் ஒளி எம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 2025, யூபிலி ஆண்டை நோக்கி பயணம் செய்யும் திரு அவையை, பிறக்கவிருக்கும் 2024ஆம் ஆண்டை, இறைவேண்டல் ஆண்டாக பின்பற்ற திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். இன்பத்திலும் துன்பத்திலும் இறைவனைப் புகழ்ந்துகொண்டு, இறைவேண்டலில் எம்மை இணைத்து நம்பிக்கையின் திருப்பயணிகளாய் நாம் நடக்க மாபெரும் ஒளியாகிய பாலகன் இயேசுவின் அமைதியும் ஆசியும் மனுக்குலத்துக்கு என்றும் கிடைப்பதாக! ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், பாலஸ்தீனம் என போர் நடைபெறும் நாடுகளும் இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா, சீனா, வட கொரியா, தென் கொரியா என போர் முறுகல் நிலையிலுள்ள நாடுகளும் காரிருள் இன்னும் இந்த உலகை கவ்விக்கொண்டே இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. அன்று இராமாவிலே கேட்ட அழுகுரல்களை விட பல மடங்கு அதிகமான அழுகுரல் இன்று இயேசு பிறந்த தேசத்திலும் எங்கும் கேட்கின்றது. இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டுகொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கும் என நாம் நம்புவோம். இந்த இறைவேண்டல் ஆண்டில் மனம் தளராது நம்பிக்கையோடு செபிப்போம். எனவே, இந்த மகிழ்ச்சியின் நாட்களிலே பாலகன் இயேசுவின் அமைதியும் ஆசியும் முழு உலகையும் நிரப்ப ஆசித்து நிற்கின்றேன். பாலகனின் ஆசி, பிறக்கவிருக்கும் புதிய ஆண்டில் உங்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியும் விடியலும் கொடுக்க ஆசித்து வாழ்த்தி நிற்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/172417
  15. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அக்கா. மிக்க நன்றி அக்கா. மிக்க நன்றி அண்ணை. எனக்கு வழிகாட்டினது கள உறவுகள் தானே!😜 மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை.
  16. Published By: VISHNU 24 DEC, 2023 | 02:05 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நிறைவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் இந்தியா வெற்றிகொண்டு வரலாறு படைத்தது இரண்டு அணிகளுக்கும் இடையிலான 46 வருட மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை இந்தியா வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர் ஆகியோர் 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு இணைப்பாட்டம், பூஜா வஸ்த்ராக்கர், ஸ்நேஹ் ரானா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின. அவுஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 219 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அதன் முதல் இன்னிங்ஸில் 406 ஓட்டங்களைக் குவித்தது. இந்தியாவின் 7ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 274 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 122 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர். இங்கிலாந்துக்கு எதிராக வெதர்பி மைதானத்தில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அப்போதைய அணித் தலைவர் ஷுபங்கி குல்கர்னி, மினோட்டி தேசாய் ஆகியோர் பகிர்ந்த 106 ஓட்டங்களே இந்தியாவின் 8ஆவது விக்கெட்டுக்கான முன்னைய சாதனை இணைப்பாட்டமாக இருந்தது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் 197 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 261 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனை அடுத்து 75 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து உரிய வெற்றி இலக்கை அடைந்தது. எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 219 (தஹிலா மெக்ரா 50, பெத் மூனி 40, அலிசா ஹீலி 38, பூஜா வஸ்த்ராக்கர் 53 - 4 விக்., ஸ்நேஹ் ரானா 56 - 3 விக்., தீப்தி ஷர்மா 45 - 2 விக்.) இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 406 (தீப்தி ஷர்மா 79, ஸ்ம்ரித்தி மந்தனா 74, ஜெமிமா ரொட்றிக்ஸ் 73, ரிச்சா கோஷ் 52, பூஜா வஸ்த்ராக்கர் 47, ஷஃபாலி வர்மா 40, ஏஷ்லி கார்ட்னர் 100 - 4 விக்., (அனாபெல் சதர்லண்ட் 41 - 2 விக்., கிம் கார்த் 58 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 261 (தஹிலா மெக்ரா 73, எலிஸ் பெரி 45, பெத் மூனி 33, அலிசா ஹீலி 32, ஸ்நேஹ் ரானா 63 - 4 விக்.), ஹார்மன்ப்ரீத் கோர் 23 - 2 விக்., ராஜேஷ்வரி கயக்வாட் 42 - 2 விக்.) இந்தியா (வெற்றி இலக்கு 75) 2ஆவது இன்: 75 - 2 விக். (ஸ்ம்ரித்தி மந்தனா 38 ஆ.இ., ரிச்சா கோஷ் 13, ஜெமிமா ரொட்றிக்ஸ் 12 ஆ.இ.) ஆட்டநாயகி: ஸ்நேஹ் ரானா. https://www.virakesari.lk/article/172379
  17. படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 24 டிசம்பர் 2023, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''நாங்கள் கோழைகள் என நினைக்க வேண்டாம். வீதியில் செல்லும் நாய் ஒன்றின் மீது கல்லை எறிந்து தாக்கினால், அது குரைத்துக்கொண்டு வேகமாக ஓடும். ஆனால், சிங்கத்தின் மீது கல்லை எறிந்தால், யார் கல்லை எறிந்தார்கள் என்று அது திரும்பிப் பார்க்கும். அதுபோலத்தான் நாங்கள். எம் மீது கல்லை எறிய வேண்டாம். நாம் திரும்பிப் பார்ப்போம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது கல் எறிய வேண்டாம். நாங்களும் திரும்பிப் பார்ப்போம்" என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை மக்களின் கடும் போராட்டம் மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே கட்சியின் மாநாடு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 2016ஆம் ஆண்டு பஷில் ராஜபக்ஷவால் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டது. தாமரை மொட்டு சின்னத்தில் இந்தக் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிப்பதுடன், இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது. தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 2018ஆம் ஆண்டு முதல் தடவையாகப் போட்டியிட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பாரிய வெற்றியைத் தன்வசப்படுத்தியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. எனினும், கோவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் மீது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்த நிலையில், ஆட்சி பீடத்திலிருந்த ராஜபக்ஷ குடும்பத்தை வெளியேறுமாறு வலியுறுத்தியிருந்தனர். எனினும், ஆட்சியிலிருந்து வெளியேற ராஜபக்ஷ குடும்பம் மறுத்த பின்னணியில், நாடு தழுவிய ரீதியில் பாரிய தன்னெழுச்சி போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இவ்வாறான நிலையில், பல லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி, 2022ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியிருந்தனர். இந்த நிலையில், மொட்டு சின்னத்திலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியை மீண்டும் நாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கியில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார். அத்துடன், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. தமது ஆட்சியில் பொருளாதாரம் பாரிய முன்னேற்றத்தைக் கண்டிருந்த போதிலும், 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றதுடன், அவ்வாறு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்த நாட்டையே கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டதாக மாநாட்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோவில் கூறப்பட்டது. அதன் பின்னர் தமது ஆட்சியில் கோவிட் பெருந்தொற்றிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற தாம் எடுத்த முயற்சிகள் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்ததாக கட்சியின் மாநாட்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குறித்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிட் தொற்றிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற முயற்சி எடுத்தமை, நாடு முடக்கப்பட்டிருந்த தருணத்தில் மக்களுக்கு மூன்று தடவைகள் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டமை, அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் உரிய சம்பளம் வழங்கப்பட்டமை, ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்பட்டமை, நிவாரண திட்டங்கள் உரிய வகையில் வழங்கப்பட்டமை, நாடு முடக்கப்பட்ட தருணத்தில் அனைத்து மக்களுக்கும் உதவிகள் செய்தமை ஆகியவையே பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமாக அமைந்ததைப் போன்று வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் டாலர் வருமானம் பூஜ்ஜியத்திற்கு வீழ்ச்சி அடைந்ததாக அந்த வீடியோ தொகுப்பில் தெரிவிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை முழுமையாக இல்லாது போனதாகவும், வெளிநாட்டு பணியாளர்களின் வருமானம் முழுமையாக இல்லாது போனதாகவும், வெளிநாட்டு முதலீடுகள் இல்லாது போனதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டது. பொருளாதார, சமூக, அரசியல் சூழலை பயன்படுத்திக் கொண்ட சில குழுக்கள், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்ததாக இந்த மாநாட்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோவில் குறிப்பிடப்பட்டது. 'விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை காப்பாற்றினோம்' படக்குறிப்பு, பஷில் ராஜபக்ஷ இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்தார். ''எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் மாத்திரமே ஆகியுள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் எமது கட்சி வெற்றியீட்டியது. மூன்று தேர்தல்கள் மாத்திரமே நடத்தப்பட்டன. அந்த அனைத்து தேர்தல்களிலும் எமது கட்சி வெற்றி பெற்றது. எதிர்வரும் காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் உங்களின் பொதுஜன பெரமுன கட்சியே வெற்றி பெறும் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. இதுவரை காலம் நீங்கள் எங்களுக்காக செய்ய சேவையை நாம் வரவேற்க வேண்டும். இலங்கையர்களுக்கு வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில் மரண பயம் ஏற்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள் காலத்திலும், கோவிட் பெருந்தொற்று காலத்திலும் மக்களுக்கு மரண பயம் ஏற்பட்டது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் மக்களைக் காப்பாற்றியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் என்பதை கூறிக் கொள்கின்றேன்," என கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 'இலங்கை மக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கைகள் நடந்தன' அதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டில் உரை நிகழ்த்தினார். ''கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களினால் நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்திருந்தது. அவ்வாறான பொருளாதார பின்னடைவுகளின் போதே நாட்டை நாம் பொறுப்பேற்றுக் கொண்டோம். அப்படியான சூழ்நிலையிலேயே யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் கோவிட்-19 பெருந்தொற்று வந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் அதற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. யுத்தத்தில் மக்கள் கொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திய நாம், கோவிட் தொற்றில் மக்கள் உயிரிழப்பதைத் தவிர்ப்பதற்கு வேலை செய்தோம் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும். கோவிட் தொற்றை வெற்றிகொண்ட போதிலும், அதற்கு முன்னர் பின்னடைவைச் சந்தித்திருந்த நாட்டை மீட்டெடுக்கப் பாரிய பிரயத்தனம் மேற்கொண்டோம். அப்போதுதான் மக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நாடு கடனில் இருப்பதால் பொறுப்பேற்க அச்சப்பட்டார்கள். அவர்களின் இருப்பிற்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்திலேயே நாட்டைப் பொறுப்பேற்க அச்சப்பட்டார்கள். அவ்வாறானவர்களே தற்போது ஆட்சியைக் கோருகின்றார்கள். அவ்வாறான தலைவர்களுக்கு நாட்டின் பொறுப்பைக் கொடுக்க நாம் தயார் இல்லை. அடுத்த தேர்தலில் எமது கட்சியே பாரிய சவாலான கட்சியாக இருக்கும். கட்சியைப் பலப்படுத்த இன, மத, கட்சி வேறுபாடின்றி எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். நாட்டு மக்களுக்கு மாத்திரமன்றி,அரசியல் கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்," என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். ''அரகலயவில் (போராட்டம்) எமது கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இன்று வரை அதற்கான நியாயம் கிடைத்தது என்று என்னால் கூற முடியாது. எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நடு வீதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்களுக்கு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் கோருகின்றேன். உண்மையான குற்றவாளிகள் இன்றும் வெளியில் இருக்கின்றார்கள். எனினும், அவ்வாறானவர்களின் முகமூடி தற்போது கழற்றப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு எதிர்காலத்தில் நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வோம் என நான் உங்களிடம் கூறிக்கொள்கின்றேன்," எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போராட்டக்காரர்களின் பார்வை படக்குறிப்பு, ராஜ்குமார் ரஜீவ்காந்த் தமது ஆட்சியின்போது எந்தவித பொருளாதார நெருக்கடியும் ஏற்படவில்லை என்பதைப் போலியான முறையில் நிருபித்து, மீண்டும் ஆட்சி பீடத்தைக் கைப்பற்றுவதற்கு ராஜபக்ஷ குடும்பம் தொடர்ச்சியாக முயன்று வருவதாக வடக்கு கிழக்கு மக்கள் போராட்டத்திற்கான ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவரும், காலி முகத்திடல் போராட்டக் குழுவின் உறுப்பினருமான ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார். ராஜபக்ஷ குடும்பம் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சி பீடத்தைக் கைப்பற்றுவதை தவிர்ப்பதற்கான அனைத்து வித நடவடிக்கைகளையும் தாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். ''எமது மக்கள் அமைப்பின் ஊடாக நாங்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரதேசங்களாக சென்று எங்களுடைய வேலைத் திட்டங்கள் மற்றும் இந்த நாட்டில் எப்படியான அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களுக்குத் தெளிவூட்டவுள்ளோம். அத்துடன், இந்த நாட்டை ஏன் மஹிந்த ராஜபக்ஷ குழு ஆட்சி செய்யக்கூடாது என்பதைப் பற்றியும் மக்களுக்குத் தெளிவூட்டி வருகின்றோம். இவர்கள் செய்த பிழைகள், அந்த பிழைகளுக்குரிய பொறுப்புக்கூறல், அந்த பிழைகளுக்கான தண்டனைகள் என்ன? இவர்களை மீண்டுமொரு முறை ஆட்சிக்கு வரவைத்தால், வரப்போகும் பிரச்னை என்ன? ஒட்டு மொத்த இலங்கையும் இன்றைக்குப் பாரதூரமான பொருளாதாரம் மற்றும் வாழ முடியாத நிலையில் இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு மூலக்காரணம் இவர்கள், தமது குடும்பம் மற்றும் தம்மைச் சார்ந்தவர்களின் நலனுக்காக ஒட்டு மொத்த இலங்கையர்களையும் பள்ளத்தில் தள்ளினார்கள் என்பதையும் நாம் மக்களுக்கு கூறி வருகின்றோம்," என அவர் குறிப்பிட்டார். மகிந்த ராஜக்ஷே திட்டம் என்ன? படக்குறிப்பு, மூத்த செய்தியாளர் ஆர்.சிவராஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் கிடையாது எனவும், மாறாக மக்கள் மத்தியில் தமது இருப்பை உறுதி செய்துகொள்வதற்கான தேவையே காணப்படுவதாகவும் மூத்த செய்தியாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார். ''கடந்த தேர்தலில் 69 லட்சம் வாக்குகளைப் பெற்று, மக்களால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான தளமொன்று இல்லாது போயுள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதல்ல மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கம். மாறாக மீண்டும் மக்கள் மத்தியில் தமது பிரசன்னத்தை உறுதிசெய்து கொள்வதே அவர்களின் நோக்கம். அந்த வன்முறைக்குப் பின்னரான முதல் நிகழ்வு இது. மக்கள் மத்தியில் முன்பைப் போன்று தலையை காட்டி அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும். ரணில் விக்ரமசிங்க அரசியல் கூட்டணியொன்றை உருவாக்க முயல்கிறார். அந்தக் கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதான கூட்டணியாக எடுக்க எண்ணியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை பொருத்தவரை, அடுத்த ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றுவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அவர் எதிர்கட்சியின் இடத்தை எடுக்கப் பார்க்கிறார். அப்படியென்றால், பாரிய கூட்டணியொன்றை அமைத்து அந்தக் கூட்டணி ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைத்து, அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியில் அமர்வதே மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணம். மக்கள் மத்தியில் செல்வதற்கும், எதிர்ப்பைத் தணிப்பதற்காகவுமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இவ்வாறான மாநாடொன்றை நடாத்தியது," என செய்தியாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார். சிங்கத்திற்குக் கல் எறிந்தால், சிங்கம் திரும்பிப் பார்க்கும் என்ற வசனத்தைப் பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அச்சுறுத்தல் விடுக்கின்றார் எனவும் ஆர்.சிவராஜா குறிப்பிடுகின்றார். ''இப்படிச் சொல்வதன் மூலம் தங்களுடன் மோத வேண்டாம் என பஷில் ராஜபக்ஷ மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கின்றார். இதுவரை எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இனி வரும் காலங்களில் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். சில வேளைகளில் ஆட்சிக்கு வந்து விடுவார்களோ என்ற அச்சம் வந்து விடும். ரணில் விக்ரமசிங்கவுடன் உள்ள எம்.பி.களும் தற்போது யோசிப்பார்கள். பஷில் ராஜபக்ஷ அந்த வசனத்தின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கின்றார்," எனவும் அவர் கூறுகின்றார். https://www.bbc.com/tamil/articles/cj7ge70x4d7o
  18. Published By: VISHNU 24 DEC, 2023 | 12:42 PM போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பிரஜை உட்பட இருவரை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சென்னை வலயப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 56 கிலோ போதைப்பொருளை பொலிஸார் கைப்ற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கையை சேர்ந்த உதயகுமார் மற்றும் பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சென்னையில் தங்கியிருந்த உதயகுமாரை கடந்த 10ஆம் திகதி, போதைப்பொருள் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ போதைப்பொருளையும் கைப்பற்றினர். அதன் பின்னரான விசாரணைகளில் போதைப்பொருள் விநியோகத்தரான அக்பர் அலியை கைது செய்து அவரிடமிருந்து 54 கிலோ போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். https://www.virakesari.lk/article/172369
  19. வெளிநாட்டு ஆசை காட்டி யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி 24 DEC, 2023 | 04:08 PM யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளனர் என பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடந்த 2 வார கால பகுதிக்குள் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றின் அடிப்படையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸார் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/172368
  20. இந்த வருடத்தில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 2,163 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்துக்களில் 5,206 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ ஊனமுற்றுள்ளார்கள் எனவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். இலங்கை மருத்துவ சங்கத்தின் வீதி பாதுகாப்பு நிபுணர் குழுவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், டிசம்பர் மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், இதற்கு குடிபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் விசேட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பெரும்பாலும் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் போக்குவரத்து விபத்துகளுக்கு மற்றொரு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்ட முடியும் என்றார். இந்த பண்டிகை காலங்களில் பார்ட்டிகளில் கலந்து கொள்வதாக இருந்தால், சொந்தமாக கார் ஓட்டுவதை தவிர்த்துவிட்டு வேறு டிரைவரை அழைத்துச் செல்வது அல்லது டாக்ஸியில் செல்வது நல்லது என்றும் இயக்குனர் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/285848
  21. இன்றைய தினம் பிறந்தநாள் காணும் ஏராளனை வாழ்த்துங்களேன்!😜
  22. மியன்மாரில் கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்க கூட்டிணைந்த முயற்சி : 56 இலங்கையர்கள் தடுத்துவைப்பு 23 DEC, 2023 | 04:51 PM (நமது நிருபர்) அண்மையில் மியான்மாரில் கடத்தப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் மியான்மார் அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சு, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்கென ஆட்கடத்தல் கும்பலால் இலங்கையர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் பதிவாகிவருவதாகத் தெரிவித்துள்ளது. அதேவேளை முன்னதாக மியன்மார் அரச அதிகாரிகளுடன் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் இணைந்து முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகளை அடுத்து, 2022 - 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர். அதேபோன்று வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மியன்மாரின் மியாவாடி பகுதியில் தற்போது 56 இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியில் மியன்மார் அரசு மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/172340
  23. உலகளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 52 வீதத்தால் அதிகரிப்பு - உலக சுகாதார ஸ்தாபனம் Published By: DIGITAL DESK 3 23 DEC, 2023 | 06:09 PM உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 52 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி, 850,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 வீதத்தால் குறைந்துள்ளதோடு, 3,000க்கும் மேற்பட்ட புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த டிசம்பர் 17ஆம் திகதி நிலவரத்தின்படி, கொவிட் வைரஸ் பரவல் ஆரம்பித்ததிலிருந்து மொத்தமாக 772 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 7 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், வைத்தியசாலைகளில் 118,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 1,600க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 18ஆம் திகதி வரை கொவிட் வைரஸ் திரிபான BA.2.86 ஒமிக்ரோனின் புதிய துணை வகையான JN.1 வைரஸின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், JN.1 வைரஸின் ஆபத்து தற்போது குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் தொடங்குவதால், JN.1 பல நாடுகளில் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரிக்கக்கூடும். தொடர்ந்து, JN.1 வைரஸ் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அது இடர் மதிப்பீட்டை தேவைக்கேற்ப புதுப்பிக்கும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொவிட் தடுப்பூசிகள் JN.1 மற்றும் SARS-CoV-2இன் பிற மாறுபாடுகளினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்கும். கொவிட்-19 வைரஸால் பரவும் சுவாச நோய் மட்டுமல்லாது இன்ஃப்ளூயன்ஸா, ஆர்எஸ்வி மற்றும் குழந்தைகளிடையே நிமோனியா பரவல் ஆகியனவும் அதிகரித்து வருகின்றன. இதனால் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்தல், கொரோனா பரிசோதனை செய்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/172341
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.