Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18764
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 23 வயதான ஷிஹ் சின்-டே 1969ம் ஆண்டு கோடைகாலத்தில் அமெரிக்காவிற்கு செல்ல விமானத்தில் ஏறியபோது, அவர் முற்றிலும் வேறு உலகத்திற்கு பயணிக்க தொடங்கியிருந்தார். அவர் கரும்பு வயல்களால் சூழப்பட்ட ஒரு மீனவ கிராமத்தில் தான் வளர்ந்தார். பின்னர் தூசி நிறைந்த தெருக்கள் மற்றும் சாம்பல் நிற அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த அரிதாகவே சொந்த கார்களை கொண்ட மக்கள் நிறைந்த தைவானின் தலைநகரான தைபேயில் உள்ள பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மேற்கொண்டார். தற்போது அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். அமெரிக்கா ஒரு மனிதனை நிலவிற்கும் , போயிங் 747 விமானம் மூலம் வானிற்கும் உயர்த்துகிறது. சோவியத் யூனியன், ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தை விட அதன் பொருளாதாரம் பெரிதாக இருந்தது. "அங்கு தரையிறங்கியபோது, நான் அதிர்ச்சியடைந்தேன்," என்று கூறுகிறார் இப்போது 77 வயதாகும் டாக்டர் ஷிஹ். "தைவான் மிகவும் ஏழ்மையான நாடு, அதைச் மேம்படுத்த நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குள் நானே நினைத்துக்கொண்டேன்." அதை அவர் சாதிக்கவும் செய்தார். டாக்டர் ஷிஹ் , அவரின் இளைய மற்றும் லட்சியம் மிகுந்த பொறியியலாளர்களின் குழு சர்க்கரை மற்றும் டி-ஷர்ட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு தீவை எலக்ட்ரானிக்ஸ் பவர் ஹவுஸாக மாற்றியுள்ளனர். தற்போதைய தைபே செழிப்பான மற்றும் உலோக உற்பத்தி மையமாக இருக்கிறது. தீவின் மேற்கு கடற்கரையில் இருந்து அதிவேக ரயில்கள் ஒரு மணி நேரத்திற்குள் 350கிமீ(218mph) வேகத்தில் பயணிகளை இங்கு அனுப்புகிறது. தைபே 101 - விரிவாக சொல்ல வேண்டுமெனில் உலகின் மிக உயரமான கட்டிடம். நகரத்தின் மீது பறந்து உயர்ந்திருக்க கூடிய அதன் கோபுரங்கள், அந்நகரின் செழிப்பின் சின்னமாக திகழ்கிறது. அங்கு உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் விரல் நகத்தை விட சிறிய சாதனங்களை உருவாக்குகின்றன. ஐபோன் முதல் விமானங்கள் வரை ஒவ்வொரு டெக்னாலஜியின் இதயமாக கருதப்படும் சிப் என்று அறியப்படும் செமி கண்டக்டர்கள் தான் அவை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தைவான் பொருளாதார வெற்றியின் ரகசியம் நமது வாழ்க்கைக்கு ஆற்றல் வழங்கும் பாதிக்கும் மேற்பட்ட சிப்களை தைவான் தான் உற்பத்தி செய்கிறது. இதன் பெரிய உற்பத்தியாளரான தைவான் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (TSMC) தான் உலகின் மதிப்புவாய்ந்த வணிக நிறுவனங்களில் 9வது நிறுவனமாகும். இதுவே தைவானை கிட்டத்தட்ட தன்னிகரற்றதாகவும் அதே சமயம் பாதிக்கும் நிலைக்கும் தள்ளுகிறது. அதிநவீன சிப்களை தயாரிப்பதில் தான் ஓரங்கட்டப்படலாம் என்று அஞ்சும் சீனா, தொடர்ந்து தைவானின் கிரீடத்தை கைப்பற்ற பல பில்லியன்களை செலவு செய்து வருகிறது அல்லது தைவானை ஆக்கிரமித்து கொள்ளும் மிரட்டலை அடிக்கடி வெளிக்காட்டி வருகிறது. ஆனால் தைவானின் சிப் தனித்துவத்தை பிரதியெடுத்தல் அவ்வளவு எளிதானது அல்ல - காரணம் அதற்கு இந்த தீவு அதன் பொறியாளர்களால் பல தசாபதங்களாக கடினமாக உழைத்து உருவாக்கிய ரகசிய வழிமுறை ஒன்றை கொண்டுள்ளது. மேலும் இதன் உற்பத்தி, தற்போது தவிர்க்க முயற்சித்து வரும் அமெரிக்க-சீனா இடையிலான போட்டியை அதிகரிக்கும் பொருளாதார உறவுகளின் வலையை சார்ந்துள்ளது. சர்க்கரை முதல் சிலிக்கான் வரை டாக்டர் ஷிஹ் சின்-டே அமெரிக்காவை அடைந்த போது “அப்போது அது வெறும் செமி கண்டக்டர் புரட்சியின் தொடக்க காலமே” என்று கூறுகிறார் அவர். மைக்ரோசிப்பின் ஆரம்ப கட்டமான ஒற்றை வேஃப்பர் சிலிகானுக்குள் மின்னணு பாகங்களை சேர்த்து கணினி புரட்சியை ஏற்படுத்திய "மோனோலித்திக் இன்டகிரேட்டட் சர்க்யூட்டை" ராபர்ட் நொய்ஸ் உருவாக்கி ஒரு தசாப்தமாகிவிட்டது. படக்குறிப்பு, டாக்டர் ஷிஹ் சின்-டே டாக்டர் ஷிஹ் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழித்து, அப்போது கணினி தயாரிப்பில் ஐபிஎம்க்கு அடுத்தபடியாக இருந்த பர்ரோஸ் கார்ப்பரேஷனில்(Burroughs Corporation) மெம்மரி சிப்களை உருவாக்கினார். அந்த நேரத்தில் ஏற்பட்ட, தைவான் எண்ணெய் நெருக்கடியை தொடர்ந்து ஏற்றுமதி பாதிப்படைந்ததால் ஒரு புதிய தேசிய நிறுவனத்திற்கான தேடலில் இருந்து தைவான். அப்போது சிலிக்கான் ஒரு நல்ல ஐடியாவாக இருந்தது. மேலும் டாக்டர் ஷிஹ் இதற்கு தன்னால் உதவ முடியும் என்று நம்பினார். "எனவே வீட்டிற்கு திரும்பி வருவதற்கான நேரம் இது என்று தான் நினைத்ததாக" கூறுகிறார் அவர். 1970களின் பிற்பகுதியில் புதிய சோதனை மையத்தில் இருந்த சிறந்த பொறியாளர்கள் குழுவில் இணைந்தார் அவர். இந்த தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தைவானின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. தைபேயின் தெற்கில் உள்ள சிறிய நகரமான ஹ்சிஞ்சுவில் வேலை தொடங்கியது அந்நிறுவனம். இன்று அதுதான் ஒரு உலகளாவிய மின்னணு மையமாக உள்ளது. இங்கு டிஎஸ்எம்சி-இன் சிறந்த ஃபேப்ரிகேஷன் ஆலைகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த சிப் தொழிற்சாலைகள், ஒவ்வொன்றும் பல கால்பந்து மைதானங்களின் அளவிற்கு பூமியிலேயே உள்ள தூய்மையான இடங்களில் ஒன்று போல இருக்கின்றன. இங்கு நடைபெறும் உற்பத்தி விவரங்கள் நன்கு இரகசியமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் வெளிப்புற கேமராக்கள் எதுவும் இங்கு அனுமதிக்கப்படாது. புதிய தொழிற்சாலை மூலம் தெற்கு தைவானில் கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் மதிப்பில் அடுத்த தலைமுறை ஐபோன்களுக்காக 3 நானோமீட்டர் சிப்களை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவை அனைத்தும் 1970களில் டாக்டர் ஷிஹியும் அவரது சகாக்களும் அந்த புதிய தொழிற்சாலையை திறக்கும் போது கற்பனை செய்ததற்கு அப்பாற்பட்டவை. அமெரிக்காவின் முக்கிய எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரிடமிருந்து தொழில்நுட்ப உரிமம் பெற்றிருந்ததால் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அனைவருக்கும் ஆச்சரியமாக இவர்கள் தொடங்கிய தொழிற்சாலை அதன் தாய் நிறுவனத்தை விட சிறப்பாக செயல்பட்டது. அது எப்படி என்பதை விளக்குவது கடினம், ஏனெனில் இன்று வரை தைவான் வெற்றிக்கான துல்லியமான சூத்திரம் யாருக்கும் பிடிபடாமலேயே இருக்கிறது. டாக்டர் ஷிஹின் நினைவு மிகவும் கூர்மையானது : "ஒரிஜினல் ஆர்சிஏ ஆலையை விட, குறைந்த செலவில் எங்களுடைய முடிவுகள் சிறப்பாக இருந்தது. எனவே, உண்மையிலேயே நாங்கள் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அரசாங்கத்திற்கு இது அளித்தது." யுனைடெட் மைக்ரோ-எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனுக்காக முதலில் தைவான் அரசாங்கம் ஆரம்ப மூலதனத்தை போட்டது, பின்னர் 1987 இல் உலகின் மிகப்பெரிய சிப் தொழிற்சாலையாக மாறியது டிஎஸ்எம்சி. பட மூலாதாரம்,COURTESY: ITRI படக்குறிப்பு, 1977ல் மற்ற பொறியாளர்களோடு ஷிஹ் சின்-டே நிறுவனத்தை நடத்த, அவர்கள் சீன-அமெரிக்க பொறியாளர் மற்றும் அமெரிக்க எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸின் முன்னாள் நிர்வாகியான மோரிஸ் சாங்கை நியமித்தனர். இது ஒரு அதிர்ஷ்டம் அல்லது புத்திசாலித்தனம் அல்லது இரண்டுமாக கூட இருக்கலாம். இன்று 93 வயதான அவர் தான் தைவானின் செமி கண்டக்டர் தொழில்துறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அப்போது, தங்களது சொந்த விளையாட்டில் அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஜாம்பவான்களை சேர்த்துக் கொள்வது வீழ்ச்சி கூற்று என்பதை அவர் விரைவில் உணர்ந்தார். எனவே அதற்கு பதிலாக டிஎஸ்எம்சி மற்றவர்களுக்கு சிப்களை மட்டுமே தயாரிக்கும், மாறாக சொந்தமாக வடிவமைக்காது என்ற முடிவை எடுத்தது. 1987 இல் கேள்விப்படாத இந்த "ஃபவுண்டரி மாடல்" தான் தொழில்துறையின் அமைவையே மாற்றியது மட்டுமின்றி தைவான் அதில் உச்ச நிலைக்கு வரவும் வழி வகுத்தது. மேலும் இதை விட வேறு நேரம் சிறப்பாக இருந்திருக்க முடியாது. சிலிக்கான் வேலியின் புதிய ஸ்டார்ட்-அப்களான ஆப்பிள், ஏஎம்டி, குவால்காம், என்விடியா ஆகிய நிறுவனங்களிடத்தில் சொந்தமாக ஃபேப் ஆலைகளை உருவாக்க நிதி இல்லை. எந்த சிப்கள் இல்லாமல் அவர்களால் செயல்படவே முடியாதோ அதை தயாரிக்கும் உற்பத்தியாளர்களை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் போராடி கொண்டிருந்தார்கள். "முன்னணி செமி-கண்டக்டர் நிறுவனங்களுக்குச் சென்று, அவர்கள் பயன்படுத்திக் கொள்ள தேவையான அதிகப்படியான உற்பத்தி திறன் உள்ளதா என்று கேட்க வேண்டியிருந்தது. ஆனால் அப்போதுதான் டிஎஸ்எம்சி வந்தது." என்று கூறுகிறார் டாக்டர் ஷிஹ். தற்போது செமிகண்டக்டர் உற்பத்தி திறன் இல்லாத கலிஃபோர்னியாவின் நிறுவனங்கள் அவர்களின் வடிவைமைப்புகளை திருடுவதில் அல்லது அவர்களுடன் போட்டி போடுவதில் ஆர்வமில்லாத தைவானின் சிப் தயாரிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளலாம். “டிஎஸ்எம்சி-யின் முதல் விதியே உங்களது வாடிக்கையாளர்களுடன் போட்டி போடாதீர்கள்” என்பதே என்று கூறுகிறார் டாக்டர் ஷிஹ். அமெரிக்கா, சீனாவை தைவான் விஞ்சியது எப்படி? உலக அளவில் ஓராண்டிற்கு மட்டும் ட்ரில்லியன் சிப்களுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நவீன காரில் மட்டும் 1500 முதல் 3000 சிப்கள் வரை பொருத்தப்படுகின்றன. ஐபோன் 12 இல் சுமார் 1,400 செமிகண்டக்டர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பெருந்தொற்று காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் தேவை அதிகரித்ததால், 2022 இல் ஏற்பட்ட பற்றாக்குறையால் சலவை இயந்திரங்கள் மற்றும் BMWகளின் விற்பனை ஒரே மாதிரியாக பாதிக்கப்பட்டது. தைவானின் அசாதாரண வெற்றியே அது இந்த டிரில்லியனுக்கும் அதிகமான சிப்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை தயாரித்து அனுப்புவதில் தான் உள்ளது. இவை அனைத்துமே மேம்பட்ட தொழிநுட்பங்கள். வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் தைவானிய சிப்கள் அனைத்தும் திறமையானவை. சிலிக்கான் சிப்களை உற்பத்தி செய்வது விலை உயர்ந்தது மற்றும் கடினமானது. இது ஒரு படிகத்திலிருந்து வளர்க்கப்பட்ட அதீத சுத்தமான சிலிக்கானின் இன்காட்டிலிருந்து(Ingot) தொடங்குகிறது. ஒவ்வொரு இன்காட் வளர பல நாட்கள் ஆகலாம் மற்றும் இது 100 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தொழில்நுட்பத்தில் பெரிய முன்னேற்றங்களை உருவாக்குவதில் தைவானின் நிறுவனங்கள் அவ்வளவு திறமையானவையல்ல ஒரு வைர வெட்டு இயந்திரம் ஒவ்வொரு ஸ்லாப்பையும் மெல்லிய வேஃபர்களாக வெட்டிய பிறகு, ஒவ்வொரு வேஃபர்களிலும் சிறிய சுற்றுகளை பொறிக்க இயந்திரம் ஒன்று ஒளியைப் பயன்படுத்துகிறது. ஒற்றை வேஃபர் நூற்றுக்கணக்கான நுண்செயலிகளையும், பில்லியன் கணக்கான சுற்றுகளையும் கொண்டிருக்கலாம். இதில் முக்கியம் என்னவெனில் ஒவ்வொரு வேஃபரிலும் சிப்பாக பயன்படுத்தப்படும் பகுதிதான். 1970களில் அமெரிக்க நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட ஒரே வேஃபரில் உள்ள குறைந்தபட்ச சிப்களின் அளவு 10% ஆகவும், அதிகபட்சம் 50% ஆகவும் இருந்தன. 1980களில் ஜப்பானியர்கள் இதை சராசரியாக 60% ஆக கொண்டிருந்தனர். ஆனால், டிஎஸ்எம்சி-யோ 80% உற்பத்தியுடன் இவர்கள் அனைவரையும் மிஞ்சியுள்ளது. காலப்போக்கில் தைவானிய உற்பத்தியாளர்களால் மனதைக் கவரும் வகையில் சிறிய பரப்பில் மேலும் மேலும் சுற்றுகளை அடக்க முடிந்தது. சமீபத்திய அல்ட்ரா-புற ஊதா ஒளி லித்தோகிராஃபி இயந்திரங்களைப் பயன்படுத்தி, டிஎஸ்எம்சி ஒரே நுண்செயலியில் 100 பில்லியன் சுற்றுகள் அல்லது ஒரு சதுர மில்லிமீட்டருக்கு 100 மில்லியன் சுற்றுகளை பொறிக்க முடிந்துள்ளது. தைவானிய நிறுவனங்கள் எப்படி இதில் சிறப்பானதாக இருக்கின்றன? யாருக்குமே அது ஏன் என தெளிவாக தெரியவில்லை. இதற்கான பதில் எளிமையானது என்று நினைக்கிறார் டாக்டர் ஷிஹ். “எங்களிடம் மிகவும் அதிநவீன உபகரணங்கள், அப்டேட்டட் வசதிகள் உள்ளன. தலைசிறந்த பொறியாளர்களை நாங்கள் பணியமர்த்தியுள்ளோம். எங்களது இயந்திர ஆப்பரேட்டர்கள் கூட மிகவும் திறமையானவர்கள். மேலும் நாங்கள் வெறுமனே தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யவில்லை, எங்கள் அமெரிக்க ஆசிரியர்களிடமிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, தொடர்ச்சியான முன்னேற்றத்தை அமல்படுத்தி வருகிறோம்." தைவானின் மிகப் பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றில் பல வருடங்களாக பணியாற்றிய இளைஞர் ஒருவர் கூறுவதாவது : "தொழில்நுட்பத்தில் பெரிய முன்னேற்றங்களை உருவாக்குவதில் தைவானின் நிறுவனங்கள் அவ்வளவு திறமையானவையல்ல என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதேசமயம் அவர்கள் வேறொருவரின் யோசனையை எடுத்து அதைச் செழுமைப்படுத்துவதில் மிகவும் திறமையானவர்கள். இதை சோதனை மற்றும் பிழை முறையில் செய்து பார்த்து சிறிய விஷயங்களை தொடர்ந்து அவர்களால் மாற்றியமைக்க முடியும்." இது முக்கியமானது, ஏனெனில் ஒரு செமி கண்டக்டர் ஃபேப்பில் இயந்திரங்கள் தொடர்ந்து அளவீடு செய்யப்பட வேண்டும். மைக்ரோசிப்களை உருவாக்குவது பொறியியல் சார்ந்தது. ஆனால் அது அதைவிட அதிகமானதும் கூட. சிலர் இதை ஒரு நல்ல விருந்துக்கு சமைப்பதுடன் ஒப்பிடுகின்றனர். இரண்டு சமையல்காரர்களுக்கு ஒரே செய்முறை மற்றும் பொருட்களைக் கொடுக்கும்போது, சிறந்த சமையல்காரரே சிறந்த உணவை உருவாக்குவார். வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், தைவானுடன் ரகசிய சாஸ் ஒன்று உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மக்கள் கஷ்டங்களைச் சமாளிக்கத் தயாராக இருப்பதால்தான் இந்த நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன தனது பெயர் மற்றும் தனது நிறுவன பெயரை சொல்ல விரும்பாத இளைஞர் ஒருவர் தைவானிய நிறுவனங்களுக்கு மேலும் ஒரு கூடுதல் பயன் இருப்பதாக கூறுகிறார். “அமெரிக்காவில் உள்ள மென்பொருள் பொறியாளர்களோடு ஒப்பிடும்போது, இங்கிருக்கும் நல்ல நிறுவனங்களில் கூட பொறியாளர்களுக்கு மோசமான சம்பளமே வழங்கப்படுகிறது” என அவர் கூறுகிறார். “ஆனால் தைவானில் உள்ள மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது இந்த துறையின் சம்பளம் அதிகம்தான், எனவே நீங்கள் பெரிய எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால் சில ஆண்டுகள் கழித்து உங்களால் கடன் பெற முடியும், கார் வாங்க முடியும். திருமணம் செய்து கொள்ள முடியும். எனவே, மக்கள் அதிலிருந்து தங்களுக்கு தேவையானதை உறிஞ்சி எடுத்து கொள்கிறார்கள்.” ஒவ்வொரு நாளும் 07:30 மணிக்கு ஒரு கூட்டத்துடன் தொடங்கி வழக்கமாக மாலை 7 மணி வரை நீடிக்கும் வாரத்தில் 6 நாள் வேலைநாள் குறித்து விவரிக்கிறார் அவர். ஆலையில் ஏதாவது பிரச்சனை என்றால் ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் கூட அவர் வரவழைக்கப்படுவாராம். "மக்கள் வேலையைச் செய்யத் தயாராக இல்லை என்றால் நிறுவனத்தின் முடிந்துவிடும். மக்கள் கஷ்டங்களைச் சமாளிக்கத் தயாராக இருப்பதால்தான் இந்த நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன." சாதனையே சாபமாக மாறுகிறதா? டிசம்பரில் 2022 டிஎஸ்எம்சி அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் $40 பில்லியன் தொழிற்சாலையை தொடங்கியது. இது உயர் தொழில்நுட்ப உற்பத்தி அமெரிக்க மண்ணுக்கு திரும்பியதற்கான அறிகுறி என்று ஜனாதிபதி ஜோ பைடனால் பாராட்டப்பட்டது. அதிலிருந்து தலைப்பு செய்திகள் ஒரு மாதிரி உற்சாகமூட்டுவதாக உள்ளன. அரிசோனாவின் சிக்கலான சிப் ஆலையில் தொழிற்சங்கங்களின் பிரச்சனையால் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த டிஎஸ்எம்சி போராடி வருகிறது.. சிப் உற்பத்தி அடுத்த வருடம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தற்போது அது 2025க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் டிஎஸ்எம்சி தலைவர் டாக்டர் சாங் ஆரம்பத்திலிருந்தே இதுகுறித்து ஆழமான சந்தேகத்துடன் இருந்தார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் சிப் உற்பத்தியை விரிவுபடுத்துவதை "விலையுயர்ந்த, வீணான பயனற்ற முயற்சி" என்று அவர் கூறியிருந்தார். ஏனெனில் அமெரிக்காவில் சிப்களை உற்பத்தி செய்வது தைவானை விட 50% அதிக விலையுயர்ந்ததாக இருக்கும். ஆனால் தைவானின் சிப் தயாரிக்கும் திறன், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்ப சண்டையின் மையத்தில் இருக்கிறது. சீனாவுக்கு அதிநவீன சிப்களை தைவான் வழங்குவதை அமெரிக்கா தடுக்க விரும்புகிறது. காரணம் இதன் மூலம் சீனா தங்களது ஆயுத திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி கொள்ளும் என்று அது அஞ்சுகிறது. ஐரோப்பாவின் எரிவாயு விநியோகத்தின் மீது அழுத்தத்தை உண்டு செய்த உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, அமெரிக்க அரசியல்வாதிகள் தைவான் குறித்து பதற்றமடைந்துள்ளனர். தைவானில் உயர்தர சிப் உற்பத்தியில் ஏற்படும் பெரும் சரிவு அமெரிக்கப் பொருளாதாரத்தை சீனப் படையெடுப்புக்கு பணயக்கைதியாக ஆக்கி விடும் என்று அது அஞ்சுகிறது. ஆனால் தைவான் நிறுவனங்கள் உற்பத்தியை தீவிலிருந்து வெளியே நகர்த்துவதில் சிறு பொருளாதார நலனை காண்கின்றன. இதை அவர்கள் அரசியல் அழுத்தத்தின் கீழ் தயக்கத்துடன் செய்கிறார்கள். தைவானில் உள்ள மக்கள் தங்கள் வெற்றிக்கு தங்களையே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வெறுக்கிறார்கள். சீன ஆக்கிரமிப்பிலிருந்து இந்த தீவும் அதன் ஜனநாயக சமூகமும் பாதுகாக்கப்பட வேண்டுமா என்று கருத்தில் உலகின் பிற நாடுகள் ஊசலாடி கொண்டிருக்கையில், தைவான் அதன் "சிலிக்கான் கவசம்" என்று பலர் கருதுவதை தானாக முன்வந்து பலவீனப்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் தைவான் மக்கள் எதிர்க்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செமி கண்டக்டர் வரலாற்றை உற்றுநோக்கினால், எந்த நாடும் அந்த துறையில் ஆதிக்கம் செலுத்தவில்லை யாரெல்லாம் வலுக்கட்டாயமாக உலகளாவிய சிப் உற்பத்தியை மறுகட்டமைப்பு செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் அதன் வெற்றியை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார் டாக்டர் ஷிஹ். “நீங்கள் செமி கண்டக்டர் வரலாற்றை உற்றுநோக்கினால், எந்த நாடும் அந்த துறையில் ஆதிக்கம் செலுத்தவில்லை,” என்று கூறுகிறார் அவர். "தைவான் வேண்டுமானால் உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் இதில் மிக நீண்ட விநியோகச் சங்கிலி இருக்கிறது மற்றும் அதன் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் புதுமை இந்த தொழில்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது." உலகின் பெரும்பாலான மூல சிலிக்கான் சீனாவில் இருந்து தான் வருகிறது, இருப்பினும் அதில் பெரும்பாலானவை சோலார் துறைக்கு செல்கின்றன. வேஃபர்களை செயலாக்கத் தேவையான இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் ஜெர்மனியும் ஜப்பானும் முன்னணியில் உள்ளன. கண்ணாடிகள் மற்றும் கேமரா லென்ஸ்கள் தயாரிப்பதில் மிகவும் பிரபலமான ஒரு ஜெர்மன் ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்தான் கார்ல் ஜெய்ஸ். முன்னணி டச்சு நிறுவனமான ASML ஆல் தயாரிக்கப்பட்ட லித்தோகிராஃபி இயந்திரங்களுக்குச் செல்லும் ஆப்டிகல் சாதனங்களை இதுவே தயாரிக்கிறது. இந்த உழைப்பு மிகுந்த உற்பத்தி அமெரிக்க நிறுவனங்கள் அல்லது பிரிட்டனை தளமாகக் கொண்ட ஆர்ம் நிறுவனத்தில் உருவாகும் வடிவமைப்புகளுக்காக வேலை செய்கிறது. சீனாவிற்குள் பொருட்கள், வடிவமைப்பு வரை உயர்தர உற்பத்தி வரை பெய்ஜிங்கால் இந்த விநியோகச் சங்கிலியை மீண்டும் உருவாக்க முடியும் என்று டாக்டர் ஷிஹ் சந்தேகிக்கிறார். "அவர்கள் வேறு ஒரு வித்தியாசமான மாதிரியை உருவாக்க விரும்பினால், அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்ட நான் விரும்புகிறேன்," என்று அவர் ஆர்வமில்லாமல் கூறுகிறார். "ஏனெனில், நீங்கள் உண்மையிலேயே புதுமைகளை விரும்பினால், உலகம் முழுவதிலும் உள்ள அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இது ஒரு நிறுவனம் அல்லது ஒரு நாடு சம்மந்தப்பட்டது மட்டுமல்ல." அமெரிக்கா செய்வதை போல சீனாவை வெட்டி விடுவது குறித்து இவர் சந்தேகிக்கிறார். "இது ஒரு பெரிய தவறு என்று தான் நினைப்பதாக," கூறுகிறார் அவர். "கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது, தைவானின் பொருளாதாரத்தின் அசாதாரண வளர்ச்சிக்கும், அதன் நீண்ட கால அமைதிக்கும் சாட்சியாக அமைந்ததற்கு நான் பாக்கியாவானாக உணர்கிறேன். தற்போது உலகின் பிற பகுதிகளில் முரண்பாடுகளை காண முடிகிறது, அது ஆசியாவிற்கும் வரக்கூடும் என்று நான் கவலைப்படுகிறேன்.” “நாங்கள் எடுத்துள்ள இந்த விலை மதிப்பற்ற முயற்சியை மக்கள் பாராட்டுவார்கள் என்றும் அதை அவர்கள் அழிக்கமாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்” https://www.bbc.com/tamil/articles/c51z78ev7l5o
  2. 19 DEC, 2023 | 03:58 PM (எம்.மனோசித்ரா) நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இரண்டு வருடங்களில் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவுகின்ற முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவி வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய பெறுகை திணைக்களத்தின் விதந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மதிப்பீட்டுச் செலவு 526.20 மில்லியன் ரூபா என்பதுடன், 2024 ஆம் ஆண்டுக்காக 310 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/172040
  3. கனேடிய தமிழ் காங்கிரஸ் மகிந்தவுடன் சந்திப்பு - நம்பமுடியாத துரோகம் கனடா தமிழ் சமூகத்தினர் கருத்து Published By: RAJEEBAN 19 DEC, 2023 | 04:32 PM கனேடிய தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளமை குறித்து கனடா தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் ஏமாற்றமும் சீற்றமும் வெளியிட்டுள்ளனர் இது குறித்து தமிழ்கார்டியன் தெரிவித்துள்ளதாவது. பல வருடங்களாக கனேடிய தமிழ் காங்கிரஸ் பாரிய அநீதிகளிற்காக இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை அவசியம் என வேண்டுகோள் விடுத்து வந்திருந்தது. கடந்த வாரம் அவர்கள் தமிழர்களிற்கு எதிரான அநீதிகளிற்கு முக்கியகாரணமான நபரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தினருக்கு கடும் அதிருப்தியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள் பலருக்கு சீற்றத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார் அபிமன்யு சிங்கம் இவர் கனேடிய தமிழ் காங்கிரசினை ஸ்தாபித்தவர்களில் ஒருவர் அதன் முன்னாள் இயக்குநர். கடந்த காலங்களில் சிடிசி ஏனைய பல தமிழ் புலம்பெயர் அமைப்புகளைபோல 2009 இல் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களிற்கு நீதி பொறுப்புக்கூறலிற்காக குரல்கொடுத்து வந்துள்ளது. ஒட்டாவா ரொன்டோ வோசிங்டன் மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றில் அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். எனினும் கனேடிய தமிழ் காங்கிரசின் கடந்த வார சந்திப்பும் பல கனேடிய தமிழர்களிற்கு அதன் ஸ்தாபக தலைவர் அபிமன்யு சிங்கத்திற்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கொழும்பில் கனேடி தமிழ் காங்கிரசின் சிரேஸ்ட தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தனர் - சிடிசி முன்னர் நீதிகோரிய அநீதிகளிற்கான முக்கிய காரணகர்த்தா மகிந்த ராஜபக்ச. அவரது ஆட்சியின் கீழேயே படையினர் முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகள் மீது எறிகணை வீச்சினை மேற்கொண்டனர் வெள்ளை கொடியுடன் சரணடைய வந்த தமிழர்களை சுட்டுக்கொன்றனர். கடந்த வாரம் ராஜபக்ச தனது அலுவலகத்தில் தனது பணியாளர்களுடன் பெரிய தேசிய கொடியின் கீழ் அமர்ந்திருந்தார். அந்த கட்டிடம் முழுவதும் முன்னாள் ஜனாதிபதியின் படங்கள் காணப்பட்டன- சிடிசி உறுப்பினர்கள் சுமூகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள் கைகுலுக்கினார்கள் ஒன்றாக படம் எடுத்துக்கொண்டார்கள். அந்த படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின -ஒரு சில நிமிடங்களில் அவை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன- கனேடிய தமிழர்களின் கடும் கண்டனத்திற்குள்ளாகின. உலக தமிழர் பேரவையும் கனேடிய தமிழ் காங்கிரசும் சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளமை கண்டிக்கப்படவேண்டிய விடயம் என்கின்றார் கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி. ராஜபக்சாக்களின் குற்றங்கள் நன்கு பதியப்பட்டுள்ளன 2023 ஜனவரி 10 ம் திகதி கனடா அரசாங்கம் மனித உரிமைகளை திட்டமிட்ட முறையில் மீறியமைக்காக மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்சாவிற்கு எதிராக தடைகளைவிதித்தது என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை பேரவையிலும் ஏனைய அமைப்புகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பரப்புரையின் பின்னரே இது சாத்தியமானது யுத்த குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் என்பவற்றிற்கு நீதிகோரி பரப்புரை இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் கனடா பிரஜைகள் உட்பட சிடிசியின் உறுப்பினர்கள்மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர் உலக தமிழர் பேரவையின் அழைப்பின் பேரிலேயே இந்தசந்திப்பு இடம்பெற்றதாக ராஜபக்ச அலுவலகம் தமிழ் கார்டியனிற்கு உறுதி செய்துள்ளது. உலக தமிழர் பேரவை என்பது சிடிசி நோர்வேஜியன் தமிழ் போரம் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு. பாதிக்கப்பட்டவர்கள் சிவில் சமூகத்தினர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுடன் கலந்தாலோசிக்காமல் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை மதிப்பிடலில் ஏற்பட்ட பெரும் தோல்வி என ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இந்த செயற்பாடுகள் இந்த அமைப்புகளின் நம்பிக்கையை அவர்கள் தாங்கள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள்-தாயகத்தில் உள்ள தமிழர்களின் சார்பில் பரப்புரை செய்வதற்கானவர்கள் என தெரிவிக்கப்படுவதை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆழமான காயம் -ஏமாற்றம் - எங்கள் மக்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் கட்டியெழுப்பப்பட்ட அமைப்பு எங்கள் முதுகில் குத்திவிட்டது என்பது குறித்து நான் ஏமாற்றமும் விரக்தியும் காயமும் அடைந்துள்ளேன் என தமிழ் கனடா சமூகத்தின் தீவிர செயற்பாட்டாளர் நீதன் சான் தெரிவித்துள்ளார். யுத்த குற்றவாளிகள் தமிழ் மக்களின் இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து செயற்படுவதற்காக நாங்கள் ஒரு சமூகமாக இணைந்து இவர்களை கண்டிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்தினை கனடாவின் குயின்ஸ் பல்கலைகழகத்தின் கனடா தமிழரான பேராசிரியர் அமர்நாத் அமரசிங்கம் உட்பட பலரும் முன்வைத்துள்ளனர். இது குறித்து என்னுடன் பேசிய அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகளில் பல வருடங்களாக மகிந்தவின் யுத்த குற்றங்கள் குறித்து உரையாற்றிய அதனை இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என பரப்புரை செய்த கனேடிய தமிழ் காங்கிரசும் உலக தமிழர் பேரவையும் தற்போது அவரின் பின்னால் சென்றுள்ளமை குறித்து மிகவேகமாக தெளிவான விளக்கங்களை முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்திகள் என வரும்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தவிர்க்க முடியாதது என நான் கருதுகின்றேன், ஆனால் சிறிதளவேனும் வருந்தாத பூஜ்ஜிய பொறுப்புக்கூறலை வெளிப்படுத்திய புலம்பெயர்ந்த தமிழர்களின் பூதாகரமாக சித்தரிக்கும் அரச தலைவர்களுடன் இணைந்து செயற்படுவது தீங்கு விளைவிக்கும் எனஅவர் தெரிவித்துள்ளார். கனேடிய தமிழ் காங்கிரஸினை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர் என்ற அடிப்படையில் அந்த அமைப்பு அதன் ஆணை மற்றும் தொலைநோக்கு பார்வையிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச்சென்றுள்ளது என்பது கவலையளிக்கின்றது என சட்டத்தரணிஹரிணி சிவலிங்கம் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/172090
  4. China-ல் Earthquake: 126 பேர் பலி; 13 ஆண்டுகளில் மோசமான நிலநடுக்கம் - என்ன நடந்தது? சீனாவின் வடமேற்கு பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 126 பேர் உயிரிழந்துள்ளனர். 700-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
  5. வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை ; மரண விசாரணை கட்டளை ஜனவரி 2ஆம் திகதி வழங்கப்படும் Published By: DIGITAL DESK 3 19 DEC, 2023 | 04:23 PM வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , இளைஞனை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர்கள் சாட்சியம் அளித்தனர். அதேவேளை, தெல்லிப்பழை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞனை அனுமதித்து சிகிச்சை வழங்கிய வைத்திய அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிக்க ஆவண செய்யுமாறு யாழ்.நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் மரண விசாரணை தொடர்பிலான கட்டளை எதிர்வரும் ஜனவரி மாதம் 02ஆம் திகதி வழங்கப்படும் என தெரிவித்த நீதவான் அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தார். https://www.virakesari.lk/article/172088
  6. யாழ் மக்களின் அன்பு அளப்பரியது - ரம்பா தெரிவிப்பு! 19 DEC, 2023 | 05:45 PM யாழ்ப்பாண மக்களின் அன்பு அளப்பரியது என தென்னிந்திய நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் இன்று செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி தேவஸ்தானத்தின் நல்லையம்பதி அலங்கார கந்தனின் சண்முக அர்ச்சனையினை முன்னிட்டு நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் தனது குடும்பத்துடன் வருகைத்தந்தார் . விஷேட வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருவது இதுதான் முதற்தடவை மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. யாழ்ப்பாணம் அழகான ஒரு மாவட்டம். அடிக்கடி நாங்கள் வருவோம். தற்போது பிள்ளைகளுக்கான பொழுது போக்குக்காக வந்ததோம். ஹரிகரனின் இசை நிகழ்ச்சிறயானது எதிர்வரும் டிசம்பர் 21 அன்று நடத்தவிருந்த நிலையில் வளிமண்டத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக நடைபெறமால் போய் விட்டது. அது மிகவும் கஷ்டமாக இருக்கு அதற்காக கவலை அடையவில்லை. எதிர்வரும் மாசி மாதம் 09.02.2024 அன்று வரயிருக்கின்றோம். இந்திய பிரபலங்கள் வளிமண்டத்தில் ஏற்பட்ட தாழ்யழுக்கம் காரணமாக அடுத்ததடவை வருவார்கள் என்று நம்புகின்றேன். இந்த வருடம் கொழும்பு, யாழ்ப்பாணம் மட்டும்தான் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளோம். பின்னர் டுபாய்க்கு சுற்றுலா விடுமுறையினை கழிக்க போகின்றோம். அதுபிள்ளைகளின் பயணமாக இருக்கின்றது. என்றார். மேலும் இதுதொடர்பாக நோத் யூனியின் தலைவரும் தொழிலதிபருமான ப.இந்திரகுமார் கருத்து தெரிவிக்கையில், கல்விக்கான நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கின்றோம். எதிர்வரும் காலத்தில் 10,000 மாணவர்களுக்கான கல்வியினை வழங்க எதிர்பார்த்து இருக்கின்றோம். வசதிகுறைந்த மாணவர்களும் படிப்பதற்கான லோன் அடிப்படையில் கல்வியினை கற்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்க கற்றவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எங்களுக்கு உழைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை? எங்களது சந்தயினருக்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் எங்களிடம் இருக்கிறது. அது வட அமெரிக்கா, இந்தியாவிலும், இருக்கிறது. அதுவும் வடக்கு மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கில் தான் நாங்கள் வந்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/172080
  7. அதி கனமழை: வானிலை மையம் சரியாக கணிக்க தவறியதா? மேற்குலக மாதிரி துல்லியமாக கணித்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 9 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. காயல்பட்டினம் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அரசு இயந்திரம் நிவாரணப் பணிகளில் முறையாக செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்படும் வேளையில் இந்திய வானிலை மையம் முறையான எச்சரிக்கை சரியான நேரத்தில் கொடுத்திருந்தால் பாதிப்புகள் குறைவாக இருந்திருக்கும் என தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. தென் மாவட்டங்களில் கன மழை குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தாமதமாக கொடுத்தது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். வானிலை எச்சரிக்கை தாமதமாக கிடைத்தது - முதல்வர் குற்றச்சாட்டு மத்திய அரசிடமிருந்து மழை நிவாரணத் தொகை கேட்டு டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, “டிசம்பர் 17, 18 தேதிகளில் நெல்லை,குமரி, தென்காசி, தூத்துக்குடியில் கடுமையான மழை பெய்தது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் கடுமையான மழை பெய்யும் என்பதை 17ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்தது. வானிலை ஆய்வு மையம் கணித்த மழை அளவை விடபல மடங்கு அதிகமாக பெய்தது. காயல்பட்டினத்தில் 94 செ.மீ மழை பெய்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாக கிடைத்தாலும், மழை பொழிவு கணித்ததை விட அதிகமாக இருந்தாலும், தமிழக அரசு மீட்பு பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டும் 141 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.” என்றார். ரெட் அலர்ட் கடைசி நேரத்தில் கொடுக்கப்பட்டது - அமைச்சர் விமர்சனம் இதே குற்றச்சாட்டை எழுப்பிய பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நேரத்துக்கும் வெள்ளப்பெருக்கு தொடங்கிய நேரத்துக்கும் இடையிலான காலஅவகாசம் மிகவும் குறைவாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். அவர், “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் துல்லியமாகவும், சரியான நேரத்திலும் கொடுக்கப்பட்டிருந்தால், எதிர்பாராத பாதிப்பு மற்றும் அதன் தீவிரத்தன்மை குறைக்கப்பட்டிருக்கும். ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு தொடங்குவதற்கு முன் குறுகிய கால இடைவெளியே இருந்தது. மேற்கு நாடுகளில் இருக்கும் வானிலை கணிப்பு முறைகள் இப்படி இல்லை. நமது வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளில் ஏற்படும் முக்கியமான தாமதம், நமக்கு இன்னும் துரிதமான துல்லியமான எச்சரிக்கை முறைகள் தேவை என்பதை உணர்த்துகிறது” என்று தெரிவித்துள்ளார். மேற்கு நாடுகளின் வானிலை மாதிரிகள் மிக துல்லியமாக முன்னெச்சரிக்கை கொடுக்கின்றன என்று தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “இந்திய வானிலை மையத்தின் மழை கணிப்புகளுக்கும் மேற்கத்திய வானிலை கணிப்புகள் படியான மழை எச்சரிக்கைகளுக்கும் வித்தியாசம் உள்ளது என்பது உண்மை. அதி கனமழை மற்றும் உடனடி மழைப்பொழிவு போன்ற நிகழ்வுகள் மேற்கு நாடுகளில் மிக துல்லியமாக கணிக்கப்படுகின்றன. இந்த வேறுபாடு, நமது தயாரிப்பு மற்றும் வெள்ள மீட்பு பணிகளை பாதிக்கிறது” என்றார். துரிதமான எச்சரிக்கைகளை சரியாக வழங்கும் வகையில், வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். “இத்தகைய சூழல்களில் தமிழ்நாடு அரசு தன்னால் முடிந்த சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும், நிலைமையின் தீவிரத்தன்மை குறித்து, இந்திய வானிலை மையத்தின் தகவல்கள் இருந்திருந்தால் பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறைவாக இருந்திருக்கும். சொத்துகள் சேதமடைவதும் குறைந்திருக்கும், வெள்ளத்தில் மக்கள் சிக்கிக் கொண்டு தவிப்பது குறைந்திருக்கும். நமது வானிலை முன்னெச்சரிக்கை முறைகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.” என்று மிக கடுமையாக இந்திய வானிலை மையத்தை சாடியுள்ளார். இதே போன்று தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனாவும் இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் சரியாக இல்லை என்று கூறியிருந்தார். இது போன்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுவது முதல் முறை அல்ல. ஒக்கி புயலின் போதும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கருவிகள், தொழில்நுட்பங்கள் துல்லியமாக கணிப்பதில்லை என்று விமர்சிக்கப்பட்டது. சில தனியார் வானிலை ஆர்வலர்கள் பொது வெளியில் கிடைக்கும் தகவல்களை வைத்தே விரிவான முன்னெச்சரிக்கை, மிக குறுகிய பகுதிகளுக்கும் கொடுக்கும் போது, தொழில்நுட்பங்களை கொண்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஏன் அதை செய்ய முடியவில்லை என்பது அவ்வபோது எழுப்பப்படும் கேள்வியாக இருக்கிறது. வானிலை மாதிரி என்றால் என்ன? வானிலை முன்னெச்சரிக்கை, வானிலை மாதிரிகளிலிருந்து(weather model ) கிடைக்கும் தகவல்களை கொண்டு அளிக்கப்படுகிறது. வானிலை மாதிரி என்பது ஒரு கணினி தொழில்நுட்பமாகும். பூமியின் வளி மண்டலம் போன்ற மெய்நிகர் சூழலை கணினி உருவாக்கிக் கொள்ளும். தட்பவெட்பம், அழுத்தம், ஈரப்பதம், காற்று என பல்வேறு காரணிகளை அந்த மாதிரியால் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். இந்த கணினி மாதிரியில், வானிலை ஆய்வாளர்கள் தற்போதைய வானிலை தரவுகளை உள்ளீடு செய்வார்கள். அதாவது ஒரு இடத்தில் எவ்வளவு வெப்பம் உள்ளது, எவ்வளவு ஈரப்பதம் உள்ளது, காற்றின் வேகம் உள்ளிட்ட தகவல்களை அந்த கணினி தொழில்நுட்பத்தில் உள்ளீடு செய்தால், அந்த வானிலை மாதிரி, இந்த தகவல்களை வைத்து கொண்டு சிக்கலான கணக்குகள் மேற்கொள்ளும். அதன் மூலம், எதிர்காலத்தில் என்ன மாதிரியான வானிலை நிலவும் என்பது வானிலை ஆய்வாளர்கள் கணிப்பார்கள். இது போன்று பல்வேறு கணினி தொழில்நுட்பங்கள் உள்ளன. அவை வெவ்வேறு வானிலை மாதிரிகளாக இருக்கும். ஒவ்வொரு மாதிரியும் கொடுக்கும் முடிவுகள் வெவ்வேறாக இருக்கலாம். இந்திய வானிலை ஆய்வு மையம் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட Global Forecast System (GFS ) என்ற வானிலை மாதிரியின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 'வானிலை மாதிரி ஒரு வழிகாட்டி மட்டுமே' இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய். இ. எ. ராஜ் பிபிசி தமிழிடம் விளக்கமாக பேசினார். அவர் “வானிலை ஆய்வு மையத்துக்கு செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல்களும் இருக்கின்றன, நேரடியாக கண்காணிப்பு மையங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களும் இருக்கின்றன. துல்லியமான நேரடியாக தகவல் கிடைக்கும் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது பயன்படுத்தப்படும் வானிலை மாதிரிகளின் துல்லியத்தன்மையை அதிகப்படுத்தலாம். அதாவது, வானிலை தரவுகள் கணக்கிடப்படும் விதத்தை மேலும் துல்லியமாக்கலாம்” என்றார். மேற்கு நாடுகளின் வானிலை மாதிரிகள் இந்திய மாதிரியை விட துல்லியமாக இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, “இந்திய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தும் Global Forecast System எனப்படும் மாதிரி மேற்கு நாடுகள் உருவாக்கிய மாதிரி தான். அதை இந்தியாவுக்கு ஏற்ற மாதிரி தகவமைத்து பயன்படுத்துகிறார்கள். வானிலை ஆய்வு மையம் பல்வேறு வானிலை மாதிரிகள் என்ன சொல்கின்றன என்பதையும் கண்காணிக்கும்” என்றார். வானிலை என்பது தினம் தினம் மாறக்கூடியது, எப்போது, எங்கே, எவ்வளவு என மிக துல்லியமாக யாராலும் கூற முடியாது என தெரிவித்த ராஜ், “வானிலை மாதிரி என்பது நமக்கு ஒரு வழிகாட்டி மட்டுமே. சில நேரங்களில் வானிலை மாதிரிகள் தவறாகவும் கணிக்கலாம். அது தவறு என்று தெரியாது, அதை நிராகரிக்கவும் தைரியம் வேண்டும்” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்குலக மாதிரியில் துல்லியமாக கணிப்பு மழை தகவல்களை சேகரித்து வரும் வானிலை ஆர்வலர்கள் பலர் தற்போது இயங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசும் போது, “தென் மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும் என்பதை பல்வேறு வானிலை கணிப்பு மாதிரிகள் கூறியிருந்தன. ECMWF என்ற வானிலை மாதிரி 100 செ.மீ மழை பெய்யும் என்று கூறியிருந்தது. GFS என்ற அமெரிக்க மாதிரி 40 முதல் 50 செ.மீ மழை பெய்யும் என்று கணித்தது. இந்த மாதிரி 27 கி.மீ பரப்பளவில் என்ன நிகழும் என்பதை பொதுவாக கூறும். இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை 12.5 கி.மீ பரப்பளவுக்கு ஏற்றவாறு மாற்றி கணக்கிடுகிறது. இப்படி பார்த்தால், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் துல்லியமாக 12.5 கி.மீ பரப்பளவில் என்ன நிகழும் என்பதை கூறியிருக்க வேண்டும். மிக துல்லியமாக இவ்வளவு மழை என்று கூற முடியாவிட்டாலும், பெரிய அளவிலான மழை பெய்யும் என்பது வானிலை மாதிரிகளால் கணிக்கப்பட்டிருந்தது” என்றார். வானிலை மாதிரிகள் எப்போதுமே சரியாகத் தான் கணிக்குமா, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டபோது, “ வானிலை மாதிரிகளில் சிற்சில மாற்றங்கள் இருக்கலாம். உதாரணமாக ஒரு வானிலை மாதிரி டெல்லிக்கு துல்லியமாக கணிக்கலாம், ஆனால் தென் மாநிலங்களுக்கு துல்லியமாக இருக்காது. வானிலை மாதிரிகளை தொடர்ந்து கண்காணிப்பவர்களுக்கு எந்த வானிலை மாதிரியை எந்த சூழலில் நம்பலாம் என்பது தெரிய வரும். வெறும் எண்களோடு வானிலை ஆய்வு மையம் தங்களை சுருக்கிக் கொள்ளக் கூடாது. அதையும் தாண்டி செல்ல வேண்டும்” என்றார். தென் மாவட்டங்களில் பெய்த கன மழையை வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியதா என்று சென்னையில், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் துணைத் தலைவர். எஸ். பாலச்சந்திரன்,“டிசம்பர் 15, 16 தேதிகளில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டிசம்பர் 17ம் தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வழங்கப்பட்டது. ரெட் அலர்ட் என்றால், 20 செ.மீக்கு மேல் பெய்யும் எந்த மழையும் அதி கனமழையாகவே கருதப்பட வேண்டும். 95 செ. மீ மழை பெய்யும் என குறிப்பிட்டு கூற முடியாது” என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cn04grzl5eeo
  8. ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து ஆடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விதான்ஷு குமார் பதவி, விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி ஹிந்திக்காக 19 டிசம்பர் 2023, 07:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியக் கிரிக்கெட்டில் சமீபத்தில் எழுந்துள்ள புயல் இந்திய அணியுடன் தொடர்புடையது அல்ல. ஐ.பி.எல்.லின் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸுடன் தொடர்புடையது. சர்ச்சையின் மையத்தில் இருப்பவர் - ரோகித் சர்மா. அடுத்த சீசனில் ரோகித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தவுடன், இணையத்தில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றமடந்துள்ளனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை இழந்தது. அறிவிப்பு வந்த முதல் நாளில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கத்தை நான்கு லட்சம் பேர் ‘அன்ஃபாலோ’ செய்திருக்கிறார்கள். ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி மற்றும் தொப்பிகளுக்கு தீ வைக்கும் படங்கள் இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டினர். அதேசமயம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்த நடவடிக்கையைப் பற்றித் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா சோர்வாக இருப்பதாகவும், அணிக்கு புதிய சிந்தனை தேவை என்றும் கூறினார் முன்னாள் இந்திய வீரர்கள் கூறுவது என்ன? முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் இடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனியின் இடத்துக்கு இணையானதுதான் என்றார். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரோகித் சர்மா அணியில் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். என்னுடைய பார்வையில் இது தோனி சென்னை அணியில் வகிக்கும் அதே இடம்தான். ரோகித் சர்மா தனது ரத்தம் மற்றும் வியர்வையால் மும்பை அணியை கட்டமைத்துள்ளார். மேலும் ஒரு கேப்டனாக அவர் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார்,” என்றார். இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரும் தற்போதைய இந்திய டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவ், ‘உடைந்த இதயம்’ எமோஜியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அதுவும் வைரலாகியிருக்கிறது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவை ஆதரித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா சோர்வாக இருப்பதாகவும், அணிக்கு புதிய சிந்தனை தேவை என்றும் கூறினார். ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் அவர் கூறுகையில், “இதில் எது சரி, எது தவறு என்று பார்க்காமல், அணியின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பேட்டிங்கில் ரோகித்தின் பங்களிப்பும் சரிந்திருக்கிறது,” என்றார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ரோகித்தின் சிறப்பான பேட்டிங் பாணியும், கேப்டன்ஷிப்பில் நிபுணத்துவமும் அவரை அணிக்கு மாற்று இல்லாத வீரராக்குகிறது மும்பை அணிக்கு 5 முறை வெற்றியைத் தேடித்தந்தவர் இந்த முறை ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் நீக்குவது குறித்து உண்மையில் யாருக்கும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஐ.பி.எல் தொடரின் மிக வெற்றிகரமான கேப்டனான ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார். அவரது சிறப்பான பேட்டிங் பாணியும், கேப்டன்ஷிப்பில் நிபுணத்துவமும் அவரை அணிக்கு மாற்று இல்லாத வீரராக்குகிறது. அவர் 2011-இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். முதல் வருடத்தில் அவர் 33.81 சராசரியில் 372 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக, அவர் மும்பை அணிக்காக 31 சராசரியில் 5,230 ரன்கள் எடுத்தார், இதில் 40 அரை சதம் மற்றும் 1 சதம் அடங்கும். இந்த காலகட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 130 ஆக இருந்தது. இது அவரது அணிக்கு வலுவான தொடக்கத்தைப் பெற அடிக்கடி உதவியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது பேட் சற்று அமைதியாகிவிட்டாலும், இந்த ஃபார்ம் விரைவில் மேம்படக்கூடும். மேலும் பல வருட டி20 கிரிக்கெட்டை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். 2013-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரிக்கி பாண்டிங் பாதியிலேயே விட்டுச் சென்றபோது ரோகித் சர்மா கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை வென்றது. கேப்டனாக இருந்த ஏறக்குறைய 10 ஆண்டுகளில், ரோகித் சர்மா 158 போட்டிகளில் அணிக்குத் தலைமை தாங்கினார். இவற்றில் 87 போட்டிகளில் வெற்றி பெற்றார், அவர் 67 இல் தோல்வியடைந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் குறைவான ரன்களையே எடுத்தார் இந்த முடிவுக்கு என்ன காரணம்? அணியின் இந்த முடிவுக்கு ரோகித்தின் ஃபார்ம் தான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் குஜராத் அணிக்குக் கொடுத்தது. ஹர்திக் புதிய அணியை முதல் சீசனிலேயே சாம்பியனாக்கினார். அதே சமயம் கடந்த ஆண்டு குஜராத் இரண்டாவது இடத்தில் இருந்தது. சமீப ஆண்டுகளில் மும்பையால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. இரண்டு முறையும் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அந்த அணி கடைசியாக 2020-இல் சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் குறைவான ரன்களையே எடுத்தார். 2022-ஆம் ஆண்டில், அவர் 14 போட்டிகளில் 19 சராசரியுடன் 268 ரன்கள் எடுத்தார். அதே சமயம் 2023-இல் 16 போட்டிகளில் 20.75 சராசரியில் 332 ரன்கள் எடுத்தார். கடந்த இரண்டு சீசன்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்த அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. T20-இல் கூட, ரோகித் சர்மா நவம்பர் 2022 முதல் இந்திய அணிக்காக விளையாடவில்லை, மேலும் அவரிடமிருந்து கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியாவிடம் சென்றது. இருப்பினும், ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு ரோகித், விராட் மற்றும் ஜடேஜா போன்ற வீரர்களுக்கு டி20-யில் இருந்து ஓய்வு அளிக்க இந்திய நிர்வாகம் விரும்பியதாகவும், இது டி20-யில் அவர்களின் வாழ்க்கை முடிவடையும் என்பதற்கான அறிகுறி அல்ல என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோகித் தனக்குப் பிடித்த அணியுடன் இன்னும் சில ஆண்டுகள் செலவழித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பாரா? ரோகித்தின் அடுத்த முடிவு என்ன? தற்போது ரோகித் சர்மாவின் அடுத்த நகர்வில்தான் அனைவரது பார்வையும் பதிந்துள்ளது. அவர் ஹர்திக்கின் கேப்டன்சியின் கீழ் விளையாடுவாரா அல்லது வேறு ஏதேனும் அணியில் கேப்டன் பதவியைப் பெற விரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோகித்துக்கு வணக்கம் தெரிவித்து பதிவிட்டபோது, அதை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவும் லைக் செய்திருந்தார். ஐ.பி.எல் ஏலம் இன்று (டிசம்பர் 19) நடைபெற உள்ளது. பரிமாற்றச் சாளரம் டிசம்பர் 20-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். அனைத்து அணிகளும் தங்கள் அணியை மேலும் வலுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில அணிகள் ரோகித் சர்மாவின் பெயரைக் கருத்தில் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 2022 மெகா ஏலத்தில் ரோகித் சர்மாவை ரூ. 16 கோடிக்கு மும்பை தக்க வைத்துக் கொண்டது. எனவே அவரை வாங்க விரும்பும் அணியிடம் குறைந்தபட்சம் ரூ.16 கோடி இருக்க வேண்டும். ஆனால் ரோகித் சர்மா இதைச் செய்ய விரும்புவாரா அல்லது அவருக்குப் பிடித்த அணியுடன் இன்னும் சில ஆண்டுகள் செலவழித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பாரா? ஒன்று மட்டும் நிச்சயம், அவர் எங்கிருந்தாலும் பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான அன்பைப் பெறுவார். https://www.bbc.com/tamil/articles/cldr2re36l4o
  9. Published By: DIGITAL DESK 3 19 DEC, 2023 | 04:27 PM யாழ்ப்பாணத்தில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. எயிட்ஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில், நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டது. அவ்வாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/172089
  10. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று (19) வாழைச்சேனை நீதிமன்றில் இடம்பெற்ற போது பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக, வாழைச்சேனை பொலிஸாரினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை நீதவான் ரிஸ்வான் சந்தேகநபர்கள் நால்வருக்கும் பிணை வழங்கினார். இந்த வழக்கு மீண்டும் ஜனவரி முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/285245
  11. Published By: RAJEEBAN 19 DEC, 2023 | 01:11 PM கருப்பை மாற்று சத்திரகிசிச்சை மூலம் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தனது தாயரின் கருப்பையை பெற்றுக்கொண்ட கேர்ஸ்டி பிரையன்ட் என்ற பெண்மணியே கருப்பை மாற்று சத்திரசிகிச்சையி;ன் பின்னர் குழந்தையை பிரசவித்துள்ளார். கடந்த ஜனவரியில் இடம்பெற்ற 16 மணிநேர கருப்பை மாற்று சத்திரகிசிச்சை உலகினதும் மருத்துவ உலகினதும் கவனத்தை ஈர்த்திருந்தது. கருப்பை மாற்று சத்திரகிசிச்சை நிகழ்ந்து மூன்று மாதத்தின் பின்னர் கேர்ஸ்டி பிரையன்ட் கருத்தரித்தார், பிரையன்ட்டின் ஆண் குழந்தைக்கு ஹென்றி என பெயர் சூட்டியுள்ளனர். ஆரோக்கியமான அழுகையுடன் புதிய வரலாற்றை படைக்கின்றேன் என்ற உணர்வுடன் ஹென்றி பிறந்தான் என மருத்துவர் ரெபேக்கா டீன்ஸ் தெரிவித்துள்ளார். இது 25 வருட கூட்டு ஆராய்ச்சியின் பலாபலன் என தெரிவித்துள்ள மருத்துவர் சர்வதேச அளவில் விடாமுயற்சியின் உச்சக்கட்டம் இதன் காரணமாகவே அவுஸ்திரேலியாவில் இவ்வாறான முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/172052
  12. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களில் சாத்தியமான குறைப்புக்கான அறிவிப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதிகரித்த நீர் மின் உற்பத்தி மற்றும் குறைந்த விலையில் நிலக்கரி கொள்வனவு என்பன மின் கட்டண குறைப்பிற்கான இரு முக்கிய காரணிகளாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டார்: 2023 இல் நிலக்கரி கொள்வனவுகள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருந்ததாகவும், இது சாத்தியமான செலவினச் சேமிப்பிற்கு பங்களித்ததாகவும் அனுருத்த குறிப்பிட்டார். எவ்வாறாயினும், சரியான விலை மாற்றங்களை தீர்மானிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மின் கட்டண திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை எதிர்வரும் காலங்களில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்து, கட்டண மாற்றங்கள் குறித்து இறுதி முடிவை எடுக்கும். https://thinakkural.lk/article/285186
  13. 19 DEC, 2023 | 02:57 PM வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் யாழ்/ கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் என். சுதாகரன் பாலியாற்று குடிநீர்த் திட்டம் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். இத்திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில் கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைச்சரவை இத்திட்டத்திற்கு 250 மில்லயின் ரூபாவை ஒதுக்குவதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன், நீர்ப்பாசன நீர்வழங்கல் முகாமையாளர்கள், யாழ். மாநகர முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172068
  14. 19 DEC, 2023 | 01:40 PM பாடசாலை மாணவியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி அவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அதனை காணொளிகளாக எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்ட இரு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் கண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியாவார். இவர் தனது காதலனுடன் கண்டி பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தபோது காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதுடன் காதலன் இதனை காணொளியாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் காணொளிகளை மாணவியின் கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பி வைத்து அச்சுறுத்தி மீண்டும் விடுதிக்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தை தனது முன்னால் காதலனிடம் குறித்த மாணவி தெரிவித்ததையடுத்து காணொளிகளை தனக்கு அனுப்புமாறு முன்னாள் காதலன் கூறியுள்ளார். மாணவி காணொளிகளை முன்னாள் காதலனுக்கு அனுப்பிய நிலையில் அவர் அதனை இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/172058
  15. Published By: DIGITAL DESK 3 19 DEC, 2023 | 01:17 PM மன்னார் கரிசல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (17) இடம் பெற்றுள்ளது. பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோருக்கு அறிவித்த நிலையில் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலை சென்ற போது அதிபர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் திங்கட்கிழமை (18) பெற்றோர் பாடசாலை சென்ற நிலையில் அதிபர் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் இயங்கும் பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலை அதிபர் மற்றும் மாணவனை அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் குறித்த மாணவனின் குடும்பத்தினர் எருக்கலம் பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் அங்கு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு இல்லை என அறிவிக்கப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் அதிபரால் குறித்த துஷ்பிரயோகம் இடம் பெற்ற போதிலும் அதிபர் சார்பாக சிலரின் அழுத்தம் மற்றும் சில நிர்வாகத்தினரின் அழுத்தம் காரணமாக குறித்த விடயம் மன்னார் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும், குறித்த விடயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவனை சட்டவைத்திய அதிகாரி முன்னிலைப்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதியை பெற்று கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/172054
  16. இலங்கையில் JN.1 புதிய கொவிட்-19 பிறழ்வு பதிவாகவில்லை இந்தியாவில் பரவி வரும் JN.1 புதிய கொவிட்-19 பிறழ்வால் பாதிக்கப்பட்ட எந்த நோயாளியும் இதுவரை நாட்டில் பதிவாகவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த புதிய கொவிட் உப பிறழ்வு இந்தியாவின் கேரளப் பகுதியில் இருந்து பதிவாகியதை அடுத்து சுகாதார அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியதாக தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய பிறழ்வின் அறிகுறிகள் காய்ச்சல், சளி , தொண்டை புண், தலைவலி, இரைப்பை குடல் வலி போன்றவை. இந்த வைரஸ் தொற்று ஒகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ளது. https://thinakkural.lk/article/285222
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திகேயா பதவி, பிபிசிக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவலையாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட பல மாற்றங்களில் ஒன்றாகும். இந்த செயற்கை நுண்ணறிவு கொண்டு வந்துள்ள ஆழமான போலி தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், சில பிரபல நடிகர்களின் வீடியோக்கள் டீப் ஃபேக்(Deep Fake) மூலம் வைரலாகி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் வரவிருக்கும் பிரச்னைகள் குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் கவலைப்படுகின்றனர். இப்போது இந்த தொழில்நுட்பத்தால் நிதிக் குற்றங்களுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளது? அதில் சிக்காமல் இருக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? உள்ளிட்டவை குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டு வகை நிதிக்குற்றங்கள் தற்போது வரை, மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து இரண்டு வகையில் மோசடி செய்து பணத்தை திருடுகின்றனர். 1. மக்களிடம் அதிக வருமானம் கிடைக்கும் எனக்கூறி அவர்களின் அனுமதியுடனேயே அவர்களின் ஓடிபி மற்றும் கடவுச்சொல்லைப் பெற்று அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது போன்ற குற்றச்செயல்கள் நடக்கிறது. இது ஒரு வகை 2019 ஆண்டில் மட்டும், மக்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை தெரியாதவர்களிடம் கொடுத்து இழந்த பணம் சுமார் ரூ 50 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் செயலிகள் தரும் தனிநபர் கடன் மற்றும் UPI மூலம் இவ்வகை மோசடிகள் நடக்கிறது. நமது தனிப்பட்ட தகவல்களை பிறரிடம் கொடுக்காமல் இருப்பதன் மூலம் இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கலாம். 2. இதில் மக்கள் தங்களின் வங்கிக்கணக்கின் விபரம் மற்றும் இதர தகவல்களை யாரிடமும் பகிராமலேயே, வங்கிக்க கணக்கை ஹேக்கிங் செய்து அல்லது கடவுச்சொல்லை திருடி, மக்களின் பணத்தை மோசடி செய்வது இரண்டாவது வகை. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க அரசும், வங்கிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், செய்றகை நுண்ணறிவால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் டீப் ஃபேக்கால்(Deep Fake) ஏற்படக்கூடிய பிரச்சனைகள், இந்த இரண்டு வகையில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டவை. ஏனென்றால் டீப்ஃபேக் மூலம் ஒரு நபரைப் போன்று டிஜிட்டலாக போலி நபரை உருவாக்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தலின் போது சில வேட்பாளர்கள் போலி சுயவிவரங்களை உருவாக்கி, மற்ற வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை சேதப்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். போலி சுயவிவரம் மூலம் நிதி பரிவர்த்தனைகளை நடத்தவும் முடியும். உதாரணமாக, நம் குடும்ப உறுப்பினர்கள் நமக்கு போன் செய்து, ஒரு வங்கிக்கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்பச் சொன்னால், தயக்கமின்றி அனுப்புவோம். ஏனென்றால் அழைத்தவர் நம் குடும்ப உறுப்பினர் என்று நாம் நம்புவோம். ஆனால், அது செயற்கை நுண்ணறிவைக் கொண்டு, நம் குடும்ப உறுப்பினர் போல வேறு ஒருவர் பேசுவதற்கான வாய்ப்பு உள்ளது. வங்கிகள் கூட இந்த பரிவர்த்தனையை மோசடியாக அங்கீகரிக்காது. 2019 ஆம் ஆண்டில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஒரு பிரிட்டிஷ் எரிசக்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இதேபோன்ற மோசடிக்கு பலியானதாக எழுதியது. இத்தகைய மோசடிகளின் அச்சுறுத்தல் பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரையும் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. இந்த டீப் ஃபேக் (Deep Fake)தொழில்நுட்பத்தின் மூலம் என்ன வகையான நிதிக் குற்றங்களைச் செய்ய டியும் என்பதை இப்போது பார்க்கலாம்: பட மூலாதாரம்,GETTY IMAGES செயற்கை நுண்ணறிவால் ஏற்படவுள்ள பாதிப்புகள் என்னென்ன? மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு நபரைப்போலவே டிஜிட்டல் நகலை உருவாக்கி, அதன் மூலம் லாபம் ஈட்டுவது எதிர்காலத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகும். தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் இதை எளிதாக்கும். நிதி நிறுவனங்களின் செயல்பாடு அல்லது சில நிறுவனங்களின் செயல்பாடு குறித்த வதந்திகளை அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை போல பரப்புவதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வரவில்லை என சில வதந்திகள் பரவியதால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வரிசையில் காத்திருந்தனர். இவ்வாறு ஒரு நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை என்று முதலீட்டாளர்களுக்கு ஒரு நிறுவனம் தவறான தகவலை அளித்தால், அது அந்த நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். எக்ஸ் (ட்விட்டர்) ஊடகத்தில் புளூடிக் தொடர்பான விதிகள் மாற்றப்பட்ட பிறகு, சிலர் பிரபல நிறுவனங்களின் பெயரில் கணக்கை தொடங்கி தவறான செய்திகளைப் பரப்பினர். இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது, எக்ஸ் நிறுவனம் அவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுத்தது. ஆனால் 'டீப் ஃபேக்' தொழில்நுட்பத்தில் இருந்து வரும் செய்திகள் அல்லது நிகழ்வுகளைத் தவிர்ப்பது மிகவும் கடினம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? அரசாங்கங்கள் அல்லது நிதி நிறுவனங்கள் தங்கள் விதிகளை மாற்றிவிட்டதாக மக்களை நம்ப வைப்பதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செய்ய முடியும். உதாரணமாக, ஒரு துறைக்கான நிதி ஆதரவை அரசாங்கம் திரும்பப் பெறுகிறது என்ற செய்தி பரவினால், முதலீட்டாளர்கள் அந்தத் துறையிலிருந்து தங்கள் முதலீட்டை திரும்பப் பெறுவார்கள். இப்படிச் செய்வதால் அந்தத் துறை நிறுவனங்களின் சந்தை மதிப்பு மிகக் குறைந்த நிலைக்குச் சென்று முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும் ஒரு குறிப்பிட்ட துறைக்கு முன்னுரிமையளிக்க அரசு அடையாளம் கண்டுள்ளது என்ற செய்தி இயற்கையாகவே முதலீடுகளை அந்த துறையை நோக்கி திருப்பிவிடும். டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் இதுபோன்ற போலிச் செய்திகளைப் பரப்புவது மிக எளிதாகிறது. நமது நிதிப் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருக்க, சராசரி முதலீட்டாளர் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதைப் பார்ப்போம்: 1. அதிக வருமானத்தை நம்பாதீர்கள் அதிக வருமானம் தரும் எந்தவொரு திட்டமும் முழுமையாக ஆராயப்பட வேண்டும். யாருடைய வார்த்தைகளையும் கருத்துக்களையும் நம்பாதீர்கள். உங்கள் நேரத்தை ஒதுக்கி நீங்களே படிக்கவும். கடந்த காலங்களில் இதுபோன்ற திட்டங்கள் ஏதேனும் வந்துள்ளதா என்று பாருங்கள். சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், அவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனென்றால் நமக்கு சேரும் வட்டியை விட நம்மிடம் இருக்கும் பணத்தை பாதுகாப்பதே முக்கியம். இது தனிப்பட்ட நிதிக் கொள்கைகளில் ஒன்றாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES 2. OTP, PIN போன்ற தகவல்களை யாரிடமும் பகிராதீர்கள் எந்த சூழ்நிலையிலும் OTP மற்றும் PIN போன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம். உங்கள் OTP போன்ற தகவல்களைப் பெற எந்த நிறுவனத்திற்கும் உரிமையோ அல்லது தேவையோ இல்லை. 3. மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள் நீங்கள் முதலீடு செய்த பாலிசிகள் அல்லது நிறுவனங்களைப் பற்றி எதிர்மறையான செய்திகள் வந்தால், உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சில நாட்கள் காத்திருக்கவும். அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டுமே நம்புங்கள். செயற்கை நுண்ணறிவு முக்கிய ஊடகங்களில் கூட ஊடுருவும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 4. நீண்ட காலத் திட்டம் நீண்ட காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது தனிப்பட்ட நிதி மேலாண்மையின் அடிப்படையாகும். இப்படி முதலீடு செய்வதன் மூலம் நிறுவனங்கள் டீப் ஃபேக் தாக்குதல்களில் இருந்து மீண்டு வரும். சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் விரைவாக முந்தைய நிலைக்குத் திரும்புகின்றன. வாரன் பஃபெட் பல தசாப்தங்களாக கோகோ கோலா நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பங்குகளை வைத்திருந்தார். நீண்ட காலத்திட்டத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. (குறிப்பு: இந்தக் கட்டுரை குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய பொதுவான புரிதலுக்காக மட்டுமே. உங்கள் தனிப்பட்ட நிதி ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.) https://www.bbc.com/tamil/articles/c72y1e42ddlo
  18. 116 பேர் பலியான பரிதாபம்… சீனாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம் சீனாவை நேற்றிரவு உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 116இற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வடமேற்கு சீனாவின் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் 6.2 ரிக்டர் என்றளவில் நிலநடுக்கம் நேரிட்டதாக தெரிய வருகிறது. திங்கள் இரவு நிலநடுக்கம் நேரிட்டதை சீனாவின் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. நிலநடுக்கத்தால் தாக்குண்டதில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளதுடன், மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக குடிமக்கள் இரவில் மேலும் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் வீடுகளை துறந்து வீதிகளில் மக்கள் அடைக்கலமாகியுள்ளனர். தகவல்தொடர்பு முடங்கியதால் அதிகாலையில் இருந்தே மீட்பு பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. கட்டிடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கக் கூடும் என்று வெளியான தகவலால் மக்கள் மத்தியில் கவலை கூடியுள்ளது. மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சீனாவில் நிலநடுக்கம் நேரிட்டதை மேற்கு ஊடகங்களும் உறுதி செய்துள்ளன. ஆனால் பாதிப்பின் வீரியம், பலியானோர் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் துல்லியமாக உறுதி செய்யப்பட இயலவில்லை. சமூக ஊடகங்களில் பரவும் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. https://thinakkural.lk/article/285150
  19. காரைநகரில் கைதான 14 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் 19 DEC, 2023 | 10:26 AM யாழ். காரைநகர் கோவளம் கடற்கரையில் கைதுசெய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி வந்து யாழ்ப்பாணம் - காரைநகர்- கோவளம் கடற்பரப்பில் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், ஒரு படகுடன் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பதின்நான்கு பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்தில் பாரப்படுத்தப்பட்ட பின்னர் நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் அவர்கள் 14பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார். இந்நிலையில் 12 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இரு மீனவர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.virakesari.lk/article/172024
  20. பட மூலாதாரம்,MK STALIN/X 18 டிசம்பர் 2023 தமிழ் சினிமா வரலாற்றில் காலம் கடந்து நிற்கும் பல படங்களை தயாரித்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். 1930-களில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டி.ஆர்.எஸ்) என்பவர் உருவாக்கிய இந்நிறுவனம், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாக்கப்படும் படங்களுக்கு முன்மாதிரியான, காலம்கடந்த படங்களை தயாரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் - கருணாநிதி இருவரும் தங்களின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்கள் மூலமாகவே தடம் பதித்தனர். குறிப்பாக, எல்லீஸ் ஆர். டங்கன் 1950-இல் எம்ஜிஆர் நடித்து கருணாநிதி வசனம் எழுதிய `மந்திரி குமாரி` திரைப்படத்தைக் கூறலாம். எல்லீஸ் ஆர். டங்கன், பொம்மன் டி. இரானி போன்ற வெளிநாட்டு இயக்குனர்களை வைத்து பல படங்களை தயாரித்தது இந்நிறுவனம். மேலும், 1940-இல் பி.யூ. சின்னப்பா நடித்த `உத்தமபுத்திரன்` திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் இரட்டையர் வேட படமாகும். தமிழின் முதல் வண்ணப்படமான `அலிபாபாவும் நாற்பது திருடர்களும்` படத்தைத் தயாரித்ததும் `மாடர்ன் தியேட்டர்ஸ்` தான். பட மூலாதாரம்,MK STALIN/X "நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்" இப்படி புகழ்பெற்ற 'மாடர்ன் தியேட்டர்ஸ்' திரைக்கூடம் சேலம் ஏற்காடு சாலையில் கன்னங்குறிச்சி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸின் திரைக்கூடம் வேறோரு தனிநபருக்கு எப்போதோ விற்கப்பட்டு விட்டது. அதன் புகழ்வாய்ந்த வரலாற்றை கருத்தில்கொண்டு, மாடர்ன் தியேட்டர்ஸ்-இன் நுழைவுவாயில் வளைவு மட்டும் அப்படியே விடப்பட்டுள்ளது. தற்போது இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில்தான் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. அந்த நுழைவுவாயிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிமையாளரிடம் கேட்டதாக செய்திகள் பரவின. இதனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் விமர்சித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அந்த இடம் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்று கூறி நெடுஞ்சாலைத்துறை சார்பாக அளவீடு செய்து எல்லை கல்லும் நடப்பட்டது. இதற்கு முரணாக, இந்த இடம் தன்னுடையதுதான் என்றும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கல்லை நட்டுவிட்டதாகவும் இவ்விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பிரச்னை தருவதாகவும் கூறுகிறார் அந்த இடத்தின் உரிமையாளர் விஜயவர்மன். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் சேலம் சென்றிருந்தபோது, `மாடர்ன் தியேட்டர்ஸ்` நுழைவுவாயில் முன்பு செல்ஃபி எடுத்துக்கொண்டு அந்நிறுவனத்தை நினைவுகூர்ந்து பதிவொன்றை பகிர்ந்திருந்தார். அதில், "டி.ஆர். சுந்தரம் உருவாக்கிய நாற்றங்கால்; திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில், முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான அந்த சேலம் திரையரங்கத்தின் நுழைவுவாயிலைப் படம் பிடித்தேன். 9 மொழிகளில் 118 படங்களைத் தயாரித்து அழியா கலைப் படங்களை உருவாக்கிய அந்நிறுவனத்தின் இந்த நுழைவுவாயில், பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்" என பதிவிட்டிருந்தார். பட மூலாதாரம்,MK STALIN/X சர்ச்சை என்ன? இந்த சம்பவம் நிகழ்ந்து பல மாதங்களான நிலையில் தான், அந்த இடம் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என, அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய அந்த இடத்தின் உரிமையாளர் விஜயவர்மன், "மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தை என் தந்தை வாங்கினார். தற்போது இந்த இடம் எனக்கு சொந்தமானது. சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் இங்கு வந்தபோது கூட, மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக என்னிடம் சொல்லவில்லை. இந்த இடத்தில் என்ன செய்வதாக எண்ணம் இருக்கிறது என என்னுடைய விருப்பத்தைத்தான் கேட்டார். ஆனால், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தான் 6-7 முறை என்னை நேரில் அழைத்துப் பேசினார். எங்கள் இடத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் எனக்கூறி அந்த இடத்தைக் கேட்டார். நான் குடும்பத்தில் பேசி சொல்கிறேன் என கூறிவிட்டேன். உண்மையில் எனக்கு அதில் விருப்பம் இல்லை" என்றார். மேலும் அவர் கூறுகையில், "அதன்பின், எனக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமலேயே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் அளவீடு செய்து அந்த இடம் அத்துறைக்கு சொந்தமானது என கல் நட்டும், அறிவிப்புப் பலகையும் வைத்துள்ளனர்" என்றார். `மாடர்ன் தியேட்டர்ஸ்` இடம் மொத்தமாக சுமார் 2,348 சதுர அடி கொண்டது. அதில் நுழைவுவாயில் வளைவு மட்டும் சுமார் 1,348 சதுர அடி. தற்போது இந்த நுழைவுவாயில் வளைவும் அதையொட்டிய இடமுமே விஜயவர்மனுக்கு சொந்தமாக இருக்கிறது. மீத இடம் வேறொரு தனிநபருக்கு விற்கப்பட்டு விட்டது. விஜயவர்மனின் தந்தையிடம் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மூன்று முதலமைச்சர்களை உருவாக்கிய இடம், அதனால் அந்த வளைவு அப்படியே இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால், அந்த இடம் அப்படியே விடப்பட்டிருப்பதாக விஜயவர்மன் தெரிவித்தார். பட மூலாதாரம்,DIBYANGSHU SARKAR/AFP VIA GETTY IMAGES சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமா? சாலையை விரிவுபடுத்துவதாக கூறி நில அளவீடு செய்யும்போதுதான் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது என அத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விஜயவர்மன், "சாலையை விரிவுபடுத்துகிறார்கள் என்றால், அந்த சாலை முழுவதும் அளந்து கல் பதிக்க வேண்டும். திடீரென அதிகாரிகள் வந்து அங்கிருந்த என் பெயரை எடுத்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியரே நேரில் வந்திருக்கிறார். கருணாநிதிக்கு சிலை அமைக்க அந்த இடம் வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரனும் கேட்டனர். இவ்வளவு தூரம் அழுத்தம் வந்தபின்னர் சிலை அமைக்கும் எண்ணம் இல்லை என கூறியிருக்கின்றனர். என்னிடம் பட்டா, நில அளவை பதிவேடு (FMB) உள்ளிட்ட ஆவணங்கள் இருக்கின்றன. 2023, மார்ச் மாதம் இந்த இடத்தின் பட்டா என் பெயருக்கு மாறியது. 2017-இல் இருந்து இதை ஆக்கிரமிப்பு என எப்படி கூறுகின்றனர்?" என்றார் அவர். மேலும், நெடுஞ்சாலைத்துறை தனது வாகனங்களை கூட உள்ளே நிறுத்த அனுமதி தரவில்லை எனவும், இதுதொடர்பான வழக்கில் விதிகளை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறிய பிறகுதான் வாகனங்களை உள்ளே நிறுத்த அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். "என்னுடைய இடத்திற்கு செல்வதற்கான பாதையையே மறைத்துவிட்டனர். இது அராஜகம், அத்துமீறல்." என புகார்களை தெரிவித்தார். இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தை பலமுறை தொடர்புகொண்டும் அவரின் பதிலை பெற முடியவில்லை. சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ-வை தொடர்புகொண்டபோது தனக்கு ஏதும் இவ்விவகாரத்தில் தெரியாது என கூறினார். பட மூலாதாரம்,FACEBOOK நெடுஞ்சாலைத்துறை என்ன சொல்கிறது? இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பரமரிப்பு கட்டுமான பொறியாளர் சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், "குறிப்பிட்ட இடம் மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு கன்னங்குறிச்சி கிராமம் புல எண்.8-ல் சாலை புறம்போக்கில் அமைந்துள்ளது. இச்சாலை ஏற்காடு நெடுஞ்சாலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் பேவர் பிளாக்குகளை அமைத்தும் கேட் அமைத்தும் விஜயவர்மன் தனது நிலத்திற்கு பாதை அமைக்கும் வகையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலை நில எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக மேற்கண்ட புல எண்ணில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் நில அளவையும் கூட்டு புலத்தணிக்கையும் செய்யப்பட்டது" என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இதன் தொடர்ச்சியாக மனுதாரரின் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எல்லை கற்கள் அமைக்கப்பட்டதாகவும் அதனை அமைக்கும்போது மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதாக உள்ளது உறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டம் 2001 மற்றும் தொடர்புடைய விதிகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள மனுதாரருக்கு தெரிவித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இடம் அரசுக்கு சொந்தமானதுதான் என்றும் வேறு எவரும் அதற்கு உரிமை கோர முடியாது என்றும் அந்த அறிக்கையில் உறுதிபட தெரிவிக்கப்பட்டிருந்தது. "சிலை அமைக்கும் திட்டம் இல்லை" அதேபோன்று, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையிலும் இந்த கருத்துகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. மேலும், மாடர்ன் தியேட்டர் முகப்பைப் பாதுகாத்து பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்றும், வேறு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கோ சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிலை அமைப்பதற்காக இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என அவர் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cw4k1q4wwvpo
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்து தனது வேளாண் துறை மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், எலன் ரைக்கர்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்தில் 1 கோடி பசுக்கள் மற்றும் 2 கோடியே 60 லட்சம் ஆடுகள் உள்ளன. புவி வெப்பமடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் இலக்குகளை அடைய, அந்நாடு அறிவியல் மற்றும் தனித்துவமான கொள்கையைப் பயன்படுத்தி, கால்நடை வளர்ப்பு தொழிலில் இருந்து அதிக அளவிலான மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இளம் காளை ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் இடப்பட்டுள்ள காய்ந்த உருண்டைகளை வாயில் எடுத்து, மென்று, காதுகளை அசைத்து, ஏப்பம் விடுகிறது. அப்போது அது வெளியேற்றும் காற்றில் எந்த அளவுக்கு மீத்தேன் வாயு கலந்துள்ளது என்பதைக் கண்டறிய ஹூட் என்ற உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மொபைல் பீஸ்ஸா அடுப்பைப் போல தோற்றமளிக்கும் சக்கரங்களில் ஒரு கான்ட்ராப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த அளவுக்கு மீத்தேன் வெளிப்படுகிறது என்பதை மிகவும் துல்லியமாக அளவிடமுடியும். இந்த வாயு புவி வெப்பமடைவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் வாயுவாக இருக்கிறது. 20 ஆண்டு காலத்தில் இந்த வாயு கார்பன் டை ஆக்ஸைடை விட 84 மடங்கு அதிகமாக வெப்பத்தை உருவாக்கியுள்ளது. காளை ஏப்பம் விடும்போது, சுவாசிக்கும்போது அதன் செரிமானப் பாதையில் இருந்து வெளியேறும் வாயுவை, ஒரு உறிஞ்சும் விசிறியால் வினாடிக்கு 40 லிட்டர் (8.8 கேலன்கள்) வரை இழுக்கப்பட்டு, கிரீன்ஃபீட் அமைப்பு எனப்படும் இந்தக் கருவியில் மீத்தேனின் அளவு கணக்கிடப்படுகிறது. சில நிமிட நேரம் மட்டுமே சாப்பிடும் காளை ஏப்பத்தின் மூலமாகவோ, மூச்சு மூலமாகவோ வெளியேற்றும் காற்றில் எவ்வளவு மீத்தேன் வாயு உள்ளது என்பதை இந்த அளவு மூலம் துல்லியமாகக் கணக்கிட முடியும். அதன் செரிமான அமைப்பு எவ்வளவு மீத்தேன் வாயுவை வெளியேறுகிறது என்பதைப் பற்றிய ஒரு படம் இந்த அளவீடு மூலம் உருவாக்கப்படுகிறது. நியூசிலாந்தில் உள்ள வேளாண்-தொழில்நுட்ப கூட்டுறவு கால்நடை மேம்பாட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மூத்த விஞ்ஞானி லோர்னா மெக்நாட்டன், ஒரு கணினியின் மானிட்டரில் காட்டப்படும் தரவுகளை ஆய்வு செய்கிறார். சில காளைகள் அதிக அளவில் மீத்தேனை வெளியேற்றுகின்றன என்றும், சில காளைகள் குறைவாக வெளியேற்றுகின்றன என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆறு முதல் 15 மாதங்களுக்கு இடைப்பட்ட வயதுடைய காளைக் கன்றுகள், "இளைஞர்களைப் போல, எல்லாவிதமான குறும்புகளையும் செய்கின்றன," என்கிறார் மெக்நாட்டன். இந்த காளைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளை அளித்து ஒரு நாளைக்கு ஆறு முறை கிரீன்ஃபீட் அமைப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என மெக்நாட்டன் கூறுகிறார். இந்த காளைகள் ஒரே தொழுவத்தில் சுமார் 40 நாட்கள் வைக்கப்பட்டு, அவை வெளியேற்றும் மீத்தேன் அளவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES 2021 முதல், பல்வேறு நிறுவனங்கள் இணைந்து, 800 இளம் காளைகள் வெளியேற்றும் மீத்தேன் அளவை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இயற்கையாகவே குறைவான மீத்தேன் உற்பத்தி செய்யும் கறவை மாடுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் இது முதல் படியாகும் - இதன் மூலம் இந்த ஆற்றல்மிக்க பசுமைக்குடில் வாயுவான மீத்தேனைக் குறைக்க இது ஒரு வழி என நியூசிலாந்து கருதுகிறது. இது போன்ற கால்நடைகளால் நியூசிலாந்தில் அசாதாரண அளவுக்கு மீத்தேன் வாயு வெளியேற்றப்படுகிறது. அந்நாட்டில் வளர்க்கப்படும் ஒரு கோடி பசுக்கள் மற்றும் 2 கோடியே 60 லட்சம் ஆடுகள் தான் இந்த அளவுக்கு மீத்தேனை உற்பத்தி செய்கின்றன. கிட்டத்தட்ட நாட்டின் பாதி அளவுக்கான மீத்தேன் உற்பத்தி பண்ணைத் தொழில்களில் இருந்து செய்யப்படும் நிலையில், மொத்த மீத்தேனின் அளவில் இது 43 சதவிகிதமாக இருக்கிறது. இதில் 85 சதவிகிதம் கால்நடை வளர்ப்பு மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஒரு பிரச்னையாக மாறிக்கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடு போலல்லாமல், பெரும்பாலான மீத்தேன் வாயு கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் தான் உற்பத்தியாகியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், மீத்தேனைச் சமாளிப்பது மிகவும் சிரமமான வேலையாக இருக்கும். உலகளாவிய ‘மீத்தேன் உறுதிமொழியின்’ படி, 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் மீத்தேன் வெளியேற்றத்தை 30% குறைப்பதன் மூலம் 2050 ஆம் ஆண்டில் 0.2C (0.36F) அளவுக்கு வெப்பத்தைக் குறைக்க முடியும். உலகளாவிய ‘மீத்தேன் உறுதிமொழியில்’ கையெழுத்திட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்றாகும். ஆனால் மற்ற நாடுகள் எண்ணெய் வயல்கள் மற்றும் இயற்கை எரிவாயு குழாய்களில் இருந்து கசிவை அடைப்பது முதல் பல்வேறு செயல் திட்டங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, நியூசிலாந்தின் கவனம் நுண்ணுயிரிகளால் வெளியேற்றப்படும் மீத்தேன் மீது படிந்துள்ளது. பண்ணை விலங்குகளின் செரிமானப் பாதைகளில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி அது வளிமண்டலத்தில் கலக்கிறது. எனவே அந்நாட்டு அரசு நீண்ட காலமாக இதை ஒரு முக்கியப் பிரச்னையாகவே கருதி வருகிறது. மேலும், இது போல் மீத்தேன் வாயு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நாட்டு அரசு அதன் ‘காலநிலை இலக்குகளை’ எட்டிவிட முடியும் என நம்பினால், அதற்கு இந்த நடவடிக்கைதான் மிகச் சிறந்தது எனக்கருதப்படுகிறது. இந்தச் செயல்முறை இரண்டு படிகளைக் கொண்டது. இப்படி பயோஜெனிக் மீத்தேன் அளவைக்கு குறைப்பதற்கான இலக்கு, 2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள் 24 முதல் 47 சதவிகிதம் மீத்தேன் உற்பத்தியைக் குறைத்து 2017-ல் இருந்த நிலையை எட்டவும், 2050 ஆம் ஆண்டுக்குள் 10 சதவிகித அளவு மீத்தேன் உற்பத்தியைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் 2050 ஆம் ஆண்டில் வெப்ப அளவை 1.5C என்ற நிலைக்குக் கீழ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் உலகளாவிய செயல்முறைகளுக்கு இசைவாக இருக்கவேண்டும் என்றும் அந்நாட்டு அரசு கருதுகிறது. மேலும், இதன் மூலம் பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தையும் நிறைவேற்ற முடியும் என நியூசிலாந்து அரசு நம்புகிறது. 2022 இல், நியூசிலாந்து பசுமைக் குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான அதன் உத்தியை வெளியிட்டது. மேலும், ‘மீத்தேன் உற்பத்திக் குறைப்புத்’ திட்டத்தில், நாடு முழுவதும் உற்பத்தியாகும் மீத்தேனின் அளவில், விவசாயத் துறையில் இது போன்ற தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதன் மூலம் அந்நாடு கணிசமான வெற்றியைப் பெறமுடியும். ஆனால் அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் இந்தக் கொள்கையில் ஒரு தொய்வை ஏற்படுத்திய நிலையில், அந்நாட்டு அரசு இதுவரை நடைமுறையில் இல்லாத மரபணு திருத்தம் போன்ற தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இது போன்ற சூழ்நிலையில், விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட நியூசிலாந்து மீத்தேன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதில் என்ன நடவடிக்கையைத் தொடரப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்தில் 1 கோடி கால்நடைகள் உள்ளன என்பதுடன் அந்நாட்டின் தேசிய அளவில் உருவாகும் பசுமைக் குடில் வாயுக்கள் வேளாண் தொழில்களில் இருந்து உற்பத்தியாகின்றன. "ஒரு வெள்ளி தோட்டா பற்றிய இந்த யோசனை மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. ஆனால் இதற்கு பல்வேறு நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படும்," என நியூசிலாந்து வேளாண்மை பசுமைக் குடில் வாயு தொடர்பான ஆராய்ச்சி மையத்தின் (NZAGRC) முதன்மை அறிவியல் ஆலோசகர் சினேட் லீஹி கூறுகிறார். இந்த மையம் (NZAGRC) 2009 ஆம் ஆண்டு முதல் இது போன்ற தீர்வுகளை எட்ட முற்பட்டுவருகிறது. இது நேரடியாக ஆராய்ச்சி குழுக்களை பணியமர்த்தவில்லை. ஆனால் தடுப்பு முறைகள் மற்றும் மீத்தேன் போன்ற புதிய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்யும் வெளிப்புற குழுக்களுக்கு உத்தி ரீதியாக நிதியளிக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கான உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை உருவாக்க இது வரை இந்த அமைப்பு சுமார் 460 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் மதிப்பாய்வு ஆராய்ச்சி ஒன்று இது போன்ற பணிகள் "விஞ்ஞான ரீதியாக சவாலானது" என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் "சாத்தியமான மற்றும் நடைமுறைத் தணிப்புக்கான வழிகளில்" நிலவும் குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டு வருகின்றன. தற்போது கிடைக்கக்கூடிய அணுகுமுறைகள் - பெரும்பாலும் கறவை மாடுகள் எத்தனை முறை பால் கொடுக்கின்றன என்பதையும், அதற்கு எவ்வளவு மீத்தேன் வாயுவை வெளியேற்றுகின்றன, அவை பண்ணைகளில் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதைக் கண்டறியும் பணிகளைப் போல உள்ளன. இதில் போதிய மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் 10% அளவுக்கு மீத்தேன் உற்பத்தி குறைக்கப்படும் என ஒரு மதிப்பாய்வு கூறுகிறது. "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த உத்தி பெரும்பாலும் உண்மைதான் எனத்தெரியவந்துள்ளது. நியூசிலாந்தின் 2030 ஆம் ஆண்டின் இலக்கு, 2017 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மீத்தேன் அளவை எட்டும் வகையில் 10% உற்பத்தியைக் குறைக்கும். "சவால்" "2030 என்ற இலக்கை அடையும் நேரத்தில் வரம்பிற்குட்பட்ட தொழில்நுட்பங்கள் கிடைக்கலாம்," என லோர்னா மெக்நாட்டன் மதிப்பிடுகிறார். நீண்ட காலத்திற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் திறனைப் பற்றி லீஹி அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார். "இது போன்ற அறிவியல் பூர்வமான பணிகளில் முதலீடு செய்வதன் தொடர்ச்சியாக 2030 முதல் 2040 வரையிலான காலகட்டத்திற்குள் அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பதை நாங்கள் உண்மையில் எதிர்பார்க்கிறோம்," என அவர் சொல்கிறார். இதற்கிடையில், நில பயன்பாட்டு மாற்றங்கள் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில், விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிப்பதன் மூலம் மீத்தேன் உற்பத்திக் குறைப்புக்கான இலக்கில் பெரும்பாலும் பயன் மிகுந்ததாக இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார். மீத்தேன் உற்பத்தியை தடுக்கும் தடுப்பான்கள், புதிய தொழில்நுட்பங்களில் ஒன்றாக இருக்கலாம். இது போன்ற ஒரு தடுப்பான் ஏற்கனவே சர்வதேச அளவில் சந்தையில் கிடைக்கிறது. டச்சு நிறுவனம் உருவாக்கிய போவேர் எனப்படும் தீவன சேர்க்கை ஒரு நல்ல மீத்தேன் தடுப்பானாக உள்ளது. இந்த தீவனக் கலவை கறவை மாடுகளின் மீத்தேன் உற்பத்தியை 30% வரை குறைக்கிறது. ஆனால் கறவை மாடுகள் தீவனத்தை எடுத்துக்கொள்ளும் போது ஒவ்வொரு வாய்க்கும் இந்த தீவனம் சேர்க்கப்படவேண்டும். இந்த தீவனக் கலவையை நியூசிலாந்தின் மேய்ச்சல் அமைப்பில் செயல்படுத்துவது கொஞ்சம் சிரமமானது. அங்கு கால்நடைகள் மேய்ச்சல் வெளியில் புற்களை மேய்கின்றன. "எங்கள் அமைப்பில் இந்த தீவனக் கலவையை அளிக்கும் முயற்சியை செயல்படுத்தி பொருளாதார ரீதியாக லாபத்தை ஈட்டும் பயனுள்ள வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்," என லீஹி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மற்றொரு கவர்ச்சிகரமான தொழில்நுட்ப தீர்வு என்னவென்றால், ஒரு மீத்தேன் உற்பத்தியைத் தடுக்கும் ஒரு தடுப்பு மருந்து. ஆனால் இந்த தடுப்பூசி, 2030 ஆம் ஆண்டளவில் தயாராகும் வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி அது சாத்தியப்பட்டால் அது நீண்ட காலம் பலனளிக்கும் என்பதுடன் மேய்ச்சல் அடிப்படையிலான விவசாயத்திற்கும் பொருத்தமாக இருக்கும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது போன்ற ஒரு தடுப்பூசி கண்களுக்குத் தென்படவில்லை. "ஆனால் எங்களிடம் இந்த கருத்துக்கான எந்த ஆதாரமும் இல்லை," என லீஹி கூறுகிறார். "இருப்பினும் இன்றுவரை எந்த பரிசோதனையும் இது போன்ற ஒரு முயற்சி பலனளிக்காது என்பதைக் காட்டவில்லை. எனவே இத்தகவல் ஊக்கமளிப்பதாக இருக்கிறது," என்கிறார் அவர். நியூசிலாந்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான அக்ரிசர்ச் (AgResearch)-ன் விஞ்ஞானிகள் இது போன்ற ஒரு தடுப்பானைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் சோதனை அளவில் வெற்றிபெற்றுள்ளனர். இருந்தும் செம்மறி ஆடுகளுக்கு இந்த தடுப்பூசி மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் இன்னும் வெற்றிபெறவில்லை. விவசாயிகளிடம் ஒரு யோசனை இருக்க வாய்ப்புள்ளது. 'தடுப்பான்கள் அல்லது தடுப்பூசிகளை விட, குறைவான மீத்தேன் உற்பத்தி செய்யும் கால்நடை இனத்தை உருவாக்குவது மற்றும் அவற்றை இனப்பெருக்கம் செய்வதன் மூலம் நாட்டின் மீத்தேன் உற்பத்தியைக் குறைக்கலாம். இதன் மூலம் நியூசிலாந்து நாட்டின் மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கை குறைக்கமுடியும். "குறைந்த அளவு மீத்தேனை உற்பத்தி செய்யும் இனத்துக்கும் மற்ற இனங்களுக்கும் இடையே மற்ற இனங்களுக்கும் இடையே 15 முதல் 20% வரை வேறுபாடுகளைக் காண்கிறோம்," என மெக் நாட்டன் கூறுகிறார். "எனவே நான் அமைதியாக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்." ஆராய்ச்சி முடிவுகள் நம்பிக்கைக்குரியதாக இருப்பதாக லீஹி ஒப்புக்கொள்கிறார். ஆனால் தரவுகளை சேகரிக்க இன்னும் நிறைய ஆராய்ச்சி மற்றும் நேரம் தேவை என்று அவர் குறிப்பிடுகிறார். "பசுக்களின் பண்பைச் சரிபார்த்து, குறைவான மீத்தேன் உற்பத்தியைக் கொண்டிருக்கும் பசுக்களை இனப்பெருக்கம் செய்வதில் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த இன்னும் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது." என்று அவர் சொல்கிறார். அமெரிக்க கறவை மாடுகளில் இருந்து குறைந்த மீத்தேன் வெளியேற்றும் மாடுகள் சிறியனவாகவும், சிறிய குடல்களைக் கொண்டவையாகவும் இருக்க்கலாம். ஆனால் அவற்றின் பால் உற்பத்தி குறைவாக இருக்காது என்று பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், 15% குறைவான மீத்தேன் வெளியேற்றும் ஐரிஷ் பசுக்கள், அதே அளவு தீவனத்தை எடுத்துக்கொள்கின்றன என்றும், அதே அளவு பால் தருகின்றன என்றும் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி தெரியவந்துள்ளது. நியூசிலாந்து ஆய்வு நிறுவனங்களில் இதுவரை கண்டறியப்பட்ட குறைந்த அளவில் மீத்தேன் வெளியேற்றும் பசுக்களின் கன்றுகளிடம் இதேபோன்ற ஆய்வு நடந்து வருகிறது. பால் உற்பத்தி குறைதல் போன்ற பாதகமான விளைவுகள் ஏதேனும் இருந்தால் அந்த மாடுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும். 2026 ஆம் ஆண்டுக்குள், இது போன்ற ஆராய்ச்சிகளில் எந்த வித பின்னடைவுகளும் ஏற்படவில்லை என்றால், ஆராய்ச்சி நிறுவனங்கள் நியூசிலாந்தின் 90% கறவை மாடுகளை செயற்கை கருவூட்டல் மூலம் உற்பத்தி செய்துவிடும் வாய்ப்பு உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், குறைந்த அளவு மீத்தேனை வெளியேற்றும் பசுக்களை பண்ணையாளர்கள் தேர்வு செய்யும் நிலை உருவாகும் என்பதே ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குறைந்த அளவு மீத்தேன் வெளியேற்றும் செம்மறி ஆடுகளை இனப்பெருக்கம் செய்வதற்கான வழியை நியூசிலாந்து கண்டறிந்துள்ளது. குறைந்த அளவு மீத்தேன் வெளியேற்றும் கறவை மாடுகளை இனப்பெருக்கம் செய்வதென்பது ஆடுகள் எவ்வளவு மீத்தேனை உற்பத்தி செய்கிறது என்பதன் அடிப்படையிலும் அமையும். ஆடுகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 13கிலோ மீத்தேன் வாயுவை வெளியிடும் போது, ஒரு கறவை மாடுக்கு 98 கிலோ மீத்தேனை வெளியிடுகிறது. "செம்மறி ஆடுகளை கையாள்வது மிகவும் எளிதானது," என அக்ரிசர்ச்சின் மூத்த விஞ்ஞானி சுஸான் ரோவ் கூறுகிறார். "அவற்றின் கர்ப்ப காலம் மிகவும் குறைவு," என்கிறார் அவர். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ரோவ் மற்றும் அக்ரிசர்ச் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று செம்மறி ஆடுகளின் மீத்தேன் வெளியேற்ற அளவு ஒவ்வொரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையில் மாறுவதில்லை என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டது. அக்குழுவினர் நியூசிலாந்து முழுவதிலும் இருந்து 1,000 ஆடுகளைச் சேகரித்து சுவாச அறையைப் பயன்படுத்தி 48 மணி நேரத்திற்கும் மேலாக அவற்றின் மீத்தேன் வாயு வெளியீட்டை அளவிடத் தொடங்கினர். "அந்த 1,000 விலங்குகளும் வெளியேற்றிய மீத்தேனை அளக்க பல ஆண்டுகள் ஆனது," என ரோவ் கூறுகிறார். 48 மணிநேரம் என்பதற்கு பதிலாக ஒரு மணிநேரத்திற்கு அளவீட்டைச் செம்மைப்படுத்துவதற்கான கடினமான செயல்முறையை அவர் விளக்குகிறார். "அந்த பெரிய சவால்" நிறைந்த பணி, மூன்று நம்பமுடியாத பயனுள்ள விஷயங்களை வெளிப்படுத்தியது. அவை: குறைந்த அளவு மீத்தேன் வெளியேற்றும் செம்மறி ஆடுகள், அதிக அளவு வெளியேற்றும் செம்மறி ஆடுகள், மற்றும் வேகமான மீத்தேன் அளவீட்டுக்கான சிறிய கருவியின் பயன்பாடு. இரண்டு மந்தைகளும் சௌத் ஐலாண்டில் உள்ள ஒரே பண்ணைக்கு இடம் மாற்றப்பட்டன. அதிக அளவு மீத்தேன் வெளியேற்றும் ஆடுகள் அதே ரக ஆடுகளுடன் இனப்பெருக்கம் செய்யவும், குறைந்த அளவு மீத்தேன் வெளியேற்றும் ஆடுகள் அதே ரக ஆடுகளுடனும் இனப்பெருக்கம் செய்யப்பட்டன. இப்படி இனப்பெருக்கம் செய்யப்பட்ட போது, குறைந்த அளவு மீத்தேனை வெளியேற்றும் ஆடுகளின் புதிய ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு சதவிகிதம் வரை குறைவான மீத்தேனை வெளியிடுவதைக் கண்டறிந்தனர். இன்று அதிக மற்றும் குறைந்த மந்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் சராசரியாக 18% ஆகும். கூடுதலாக, மீத்தேன் அளவு குறைவது பிற பண்புகளின் அடிப்படையில் உருவாவதாகத் தெரியவில்லை. உண்மையில், இதுவரை வெளிப்பட்ட மாற்றங்கள் நேர்மறையானவை. "குறைந்த அளவு மீத்தேனை வெளியேற்றும் ஆடுகளின் உடலில் அதிக அளவிலான ரோமங்களும் இருந்தன," என ரோவ் கூறுகிறார். "அவற்றின் பால் மற்றும் இறைச்சியில் சற்று வித்தியாசமான கொழுப்பு அமிலம் இருப்பதையும், அவை மெலிந்த உடலைக் கொண்டிருந்ததையும் நாங்கள் கண்டறிந்தோம்." இதற்கிடையில், 'கூல் ஷீப்' திட்டத்தின் மூலம் நியூசிலாந்து முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கையடக்க மீத்தேன் அளவீட்டுக் கருவிகளின் துணை கொண்டு ஆடுகள் வெளிப்படுத்தும் மீத்தேன் அளவு துல்லியமாகக் கண்டறியப்பட்டது. "நாங்கள் பல்வேறு பண்ணைகளிலிருந்து ஆடுகள் வெளியேற்றும் மீத்தேனை அளப்பதற்காக, கிராமப்புறங்களில் ஏறி இறங்குகிறோம்," என ரோவ் கூறுகிறார். அவருடைய குழுவினர் இப்போது 30,000 ஆடுகள் வரை அவை வெளியேற்றும் மீத்தேனை அளந்துள்ளதாக அவர் மதிப்பிடுகிறார். "விவசாயிகள் தங்கள் சொந்த மந்தைகளுக்குள்ளேயே குறைந்த அளவு மீத்தேனை வெளியேற்றும் ஆடுகளைத் தேர்வு செய்யும் வகையில் இத்திட்டம் உள்ளது," என ரோவ் விளக்குகிறார். "அது ஏன் மிகவும் முக்கியமானது என்றால் அவர்கள் தேர்வு செய்யும் ஆடுகள் ஏற்கனவே அந்த சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்தின் காலநிலை மாற்ற ஆணையம், அந்நாட்டின் தற்போதைய நீண்ட கால மீத்தேன் குறைப்பு இலக்குகளை அடையும் கொள்கைகளில் தவறிழைத்துள்ளது என எச்சரித்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் மீத்தேன் வெளியேற்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? செம்மறி ஆடுகளுக்கு, ஆண்டுக்கு 0.5 முதல் 1% வரை மீத்தேன் வெளியேற்றம் குறைவதாக ரோவ் மதிப்பிடுகிறார். "காலப்போக்கில், அது விரைவில் கணிசமான அளவுக்குக் குறைகிறது," என அவர் சொல்கிறார். "மற்ற நன்மை என்னவென்றால், அது குறைந்த செலவில் நிறைவேற்றக்கூடிய பணியாகவும், நிரந்தரமானதுமாக உள்ளது." ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தின் தாக்கமும் மெதுவாக வெளிப்படுத்துகிறது. ஏனெனில் மரபணுக்கள் உடனடியாக செயல்படுவதை விட காலப்போக்கில் மெதுவான மாற்றங்களைப் பெறுகின்றன. கனடாவில், குறைந்த மீத்தேன் வெளியேற்றும் காளைகளின் விந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வணிக ரீதியாக விற்பனைக்கு வந்தது. குறைந்த மீத்தேன் பண்பை ஏற்றுக்கொள்வது கனடாவின் பால் உற்பத்தித் துறையின் மீத்தேன் வெளியேற்றத்தை 2050 ஆம் ஆண்டளவில் 20-30% குறைக்கலாம் என்று மரபியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமான செமெக்ஸ் கூறுகிறது . 2021 ஆம் ஆண்டில், நாட்டின் காலநிலை மாற்ற ஆணையம், செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு குறைந்த மீத்தேன் இனப்பெருக்கம் செய்வதன் மூலம் 4.5–7.5% அளவுக்கு மீத்தேன் வெளியேற்றம் குறையும் என்று பரிந்துரைத்தது. 2050க்குள். கறவை மாடுகளுக்கு, இந்த வகை இனப்பெருக்கம் செய்வது 2030 முதல் பரவலாக்கப்படும் என்றும், 2050க்குள் 7.5–13.5% மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைக்கமுடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான முயற்சிகள் அணிவகுப்புத்து வரும் நிலையில், பண்ணை சார் தொழில்களில் மீத்தேன் உற்பத்தியைக் குறைக்கும் செலவினங்கள் குறித்த அச்சம் பெரிதாக உள்ளது. பண்ணைத் தொழில்களில் மீத்தேன் உற்பத்தியைக் குறைக்க ‘வேளாண் உமிழ்வு வரியை’ அறிமுகப்படுத்திய நியூசிலாந்தின் முதல் முயற்சி 2003 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துவருகிறது. அப்போது 'ஃபார்ட் வரி'-க்கு எதிராக மக்களிடையே பெரும் போராட்டம் வெடித்தது. 'ஃபார்ட் வரி' ஒரு தவறான வரி. பெரும்பாலான வாயுக்கள் மூக்கு மற்றும் வாய் வழியாக முன் முனையிலிருந்து வெளியேற்றப்படுவதால், லீஹி கூறுகிறார்: "சுமார் 75:25 விகுதியிலான வாயுக்கள் நாசி அல்லது வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது" அந்த வரி மூலம் ஆராய்ச்சிக்காக வருடத்திற்கு 84 லட்சம் நியூசிலாந்து டாலர்கள் ஈட்டித்தந்திருக்கும். இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஒரு எம்.பி. டிராக்டரை நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏற்றிப் போராட்டம் நடத்தினார். மற்றொருவர் இரண்டு மாடுகளை நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிப் பிடித்துச் சென்றார். இது போல் நாடாளுமன்றத்தின் முன் போராட்டங்கள் நடந்தன. அப்போதிருந்து, பண்ணை சார் வேளாண் துறை நியூசிலாந்தின் மீத்தேன் வெளியேற்றத்தை வர்த்தக ரீதியாகப் பார்ப்பதைத் தவிர்க்க கடுமையாக வற்புறுத்தி வந்தது. இது அதன் சுற்றுச் சூழல் மாசுபாட்டிற்கு வணிக ரீதியான மதிப்பை அளிக்கும் ஒரு வெளிப்புறத் தொழிலாக ஆக்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய திட்டங்களின் மூலம் மீத்தேன் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நியூசிலாந்து அரசு உறுதியளித்துள்ளது. 2017 இல், பண்ணை சார் தொழில்களையும் பசுமை வரித் திட்டத்துக்குள் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்த ஜசிந்தா ஆர்டெர்ன், எதிர்பாராத விதமாக நாட்டின் பிரதமரானார். அவருடைய திட்டத்தின்படி, பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுபவர்கள் அதற்கான பெர்மிட்டுகளைப் பெறவேண்டும். தொடக்கத்தில் இலவசமாக அளிக்கப்பட்ட இந்த பெர்மிட்டுகளை பின்னர் அரசு ஏலம் விட்டது. இதற்கான திட்டத்தை வகுக்க வேளாண் துறையும், அரசும் ஒரு தனி உடன்படிக்கையை நிறைவேற்றின. இத்திட்டத்தின் வடிவமைப்பு செயல்பாட்டின் போது வழங்கப்பட்ட ஆலோசனையில், நியூசிலாந்தின் காலநிலை மாற்ற ஆணையம் ஒரு முக்கியமான கருவியாகச் செயல்பட்டது. இறுதித் திட்டம், டிசம்பர் 2022 இல் அறிவிக்கப்பட்டது. மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றுக்கான பெர்மிட்டுகளின் வெவ்வேறு ஐந்தாண்டு விலைகளை அரசாங்கம் நிர்ணயிக்கும். விவசாய பிரதிநிதிகள் மற்றும் காலநிலை மாற்ற ஆணையத்தின் உள்ளீடுகளுடன். இந்தத் திட்டம் 2025 இல் நடைமுறைக்கு வரவிருந்தது, ஆனால் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் திட்டம் வீழ்ச்சியடைந்தது. ஒரு புதிய மைய-வலது கூட்டணி, மாடுகள் ஏப்பம் மூலம் வெளியேற்றும் மீத்தேன் வாயுவுக்கு வரி விதிக்கும் திட்டத்தை 2030 ஆம் ஆண்டுக்குத் தள்ளிவைத்தது. மீத்தேன் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான வரிவிதிப்பு கொள்கையில் நிபுணத்துவம் பெற்ற நியூசிலாந்தின் பொருளாதார வல்லுனர் சுசி கெர், "சரிவிதிப்பை தாமதப்படுத்துவது எதிர்காலத்தில் அத்திட்டத்தை நடைமுறைச் சாத்தியமில்லாத திட்டமாக மாற்றிவிடும்,” என்கிறார். "அப்போது அவசரப்பட்டால அதற்கு மிகுந்த விலை கொடுக்கவேண்டியிருக்கும்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES கெர்ரின் கூற்றுப்படி, இது போன்ற ஒரு பசுமை வரி திட்டம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டும் பயனளிக்காது. இது நியூசிலாந்து விவசாயிகளுக்கு நிலையான சந்தை சமிக்ஞைகள் மற்றும் அவர்களின் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைக்கு வெகுமதி அளிப்பதற்கான வழிமுறையை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். "உலகளாவிய கண்ணோட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளும் இந்த மறைமுகமான நிலையில் விவசாயிகள் உள்ளனர்," என கெர் கூறுகிறார். குறைந்த அளவில் பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுபவர்களின் சராசரிக்கும் இடையே 15 முதல் 20% வேறுபாடுகளைக் காண்கிறோம் என லோர்னா மெக்நாட்டன் கூறுகிறார். வரி நிர்ணய திட்டம் இல்லாமல், நியூசிலாந்து அதன் மீத்தேன் குறைப்பு இலக்குகளை அடைய முடியுமா? "நியூசிலாந்தின் வரலாறு இல்லை என்ற திலையே தருகிறது," என கெர் கூறுகிறார். 2021 இல், விவசாயத் துறையில் இருந்து வெளியேறும் பசுமைக் குடில் வாயு 1.5% குறைந்துள்ளது. குறைந்த ஆடு மற்றும் மாடுகளின் காரணமாக இந்த விளைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இது ஒரு சிறிய அளவு மட்டுமே. மேலும் இது ஒரு புதிய போக்கைக் குறிக்க போதுமானதாக இல்லை என்று கெர் கூறுகிறார். "பசுமைக் குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதில் ஏற்பட்ட மேம்பாடுகள் அதிகரித்த உற்பத்தி அளவுகளால் ஈடுசெய்யப்பட்டுள்ளன," என அவர் கூறுகிறார். "அவை சில இடங்களில் குறைய ஆரம்பித்தாலும், கிட்டத்தட்ட வேகமாக குறையவில்லை." அண்மையில் வெளியிடப்பட்ட ஆலோசனையில், நியூசிலாந்து அதன் ஒட்டுமொத்த வாயு உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடையும் பாதையில் இல்லை என்று காலநிலை மாற்ற ஆணையம் எச்சரித்துள்ளது. மீத்தேனைப் பொறுத்தவரை, "தற்போதுள்ள கொள்கைகள் மட்டும்... 2030 ஆம் ஆண்டுக்கான இலக்கை அடைய போதுமான அளவு உதவாது," என அந்த ஆணையம் எச்சரித்துள்ளது. 2030 ஆம் ஆணடுக்குள் 10% மீத்தேன் குறைப்பை எட்டுவதற்கும், நீண்ட கால அடிப்படையில் 2050 ஆம் ஆண்டுக்கான இலக்கை அடைவதற்கும், 2025 முதல் விவசாயத்துக்கு பசுமை வரியை நிர்ணயிப்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. புதிய தொழில்நுட்பம், பலதரப்பட்ட நிலப் பயன்பாடு மற்றும் பண்ணையில் செயல்திறனை அதிகரிப்பது ஆகியவையும் 2030 ஆம் ஆண்டுக்கான இலக்கில் பங்கு வகிக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. குறைந்த அளவு மீத்தேன் வெளியேற்றும் விலங்குகளை இனப்பெருக்கம் செய்வது, மீத்தேன் தடுப்பான்கள் மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சியுடன், நியூசிலாந்து அதன் நீண்டகால காலநிலை இலக்குகளை அடைய உதவும் என்று ஆணையம் குறிப்பிடுகிறது. தேர்தலுக்கு முன், அக்டோபரில் 2023 ஆம் ஆண்டு இது குறித்து ஒரு பகுப்பாய்வு நடத்தப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் மற்றும் புதிய கொள்கை என நிலைமை திசை மாறியது. புதிய காலநிலை மாற்ற அமைச்சர் ஆணையத்தின் அறிவுரையை வரவேற்றிருப்பதுடன், இதில் அரசாங்கம் "உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதில் பல்வேறு அரசியல் சார்ந்த நடவடிக்கைகளின் தலையீடு இருப்பதால் ஆணையத்தின் அறிவுரைக்கு அவர்கள் செவிசாய்க்கிறார்களா என்பது புதிய அரசாங்கத்தைப் பொறுத்தது. பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் அந்த நாடு ஒப்புக்கொள்ளப்பட்ட வாயு உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடையத் தவறினால், அது தேவையின்றி பில்லியன் கணக்கான டாலர்களை செலவழிக்க வேண்டியிருக்கும். உத்தியோகபூர்வ இலக்குகளுக்கு ஏற்ப மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பது "சவாலானது" என்று லீஹி கூறுகிறார். ஆனால் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். விலங்குகளின் மூலம் உற்பத்தியாகும் மீத்தேன் அளவைக் குறைப்பது கூட எவ்வளவு தொலைவுக்கு சாத்தியமானது என்று அவருக்குத் தெரியவில்லை. இது குறித்த விளக்கங்களை அவர் அளித்த போது, "இன்றைக்கு வேகமாக முன்னேறுங்கள். மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து நமக்கு உதவ இருக்கின்றன. நம்பிக்கையுடன் உங்கள் பணிகளைத் தொடருங்கள்," என அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cn0qg9p6py3o
  22. Published By: VISHNU 18 DEC, 2023 | 09:12 PM (நா.தனுஜா) உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் வழங்குகின்ற அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்திறன்மிக்க கண்காணிப்பை முடிவுக்குக்கொண்டுவரும் எனவும், அது நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பானியத்தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ட் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வடமாகாணத்துக்குச் சென்றிருப்பதுடன், அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அம்மூன்று இராஜதந்திரிகளுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சி குறித்து கலந்துரையாடப்பட்டது. நாடளாவிய ரீதியில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு சுவிட்ஸர்லாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னின்று நிதி, ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சார்ந்த ஒத்துழைப்புக்களை வழங்கிவருவதாகத் தகவல்கள் வெளியாகி, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கும் பின்னணியிலேயே இவ்விஜயம் இடம்பெற்றுள்ளது. அதன்படி இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (டுவிட்டர்) பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ட், இவ்விஜயத்தின்போது வடக்கில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறிப்பாக நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் பற்றி பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடியதாக அதில் குறிப்பிட்டுள்ளார். அதனை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், 'இலங்கை தொடர்பான ஜெனிவா பொறிமுறை செயலிழக்கின்றதா?' எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார். அதுமாத்திரமன்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் வழங்குகின்ற அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் துடிப்பான (செயற்திறன்மிக்க) கண்காணிப்பை முடிவுக்குக்கொண்டுவரும் எனவும் அலன் கீனன் எச்சரித்துள்ளார். அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பின்றி நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதை முன்னிறுத்திய நகர்வுகளின் முன்னேற்றம் மந்தகரமானதாகவே காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/171990
  23. Published By: VISHNU 18 DEC, 2023 | 08:34 PM (நா.தனுஜா) நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரச மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும். இம்மறுசீரமைப்புக்களுக்கு உரியவாறான முக்கியத்துவம் வழங்கப்படாவிடின், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கை மீண்டும் கடன்நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் காணப்படுவதாக 6 அமைப்புக்களை உள்ளடக்கிய 'பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூகக் கூட்டமைப்பு' எச்சரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஊழல் எதிர்ப்புசார் மறுசீரமைப்புக்களில் நிலவும் முன்னேற்றமின்மை குறித்து ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா, வெரிட்டே ரிசேர்ச், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு, சர்வவோதயம் மற்றும் தேசிய சமாதானப்பேரவை ஆகிய 6 அமைப்புக்கள் அடங்கிய 'பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூகக் கூட்டமைப்பு' வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது; நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரச மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும். இம்மறுசீரமைப்புக்களுக்கு உரியவாறான முக்கியத்துவம் வழங்கப்படாவிடின், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கை மீண்டும் கடன்நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு யோசனைகளைப் பெரிதும் வரவேற்கின்றோம். இருப்பினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கைகள் போன்றவற்றைக்கூட அரசாங்கம் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை. புதிதாக நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச்சட்ட அமுலாக்கம் உள்ளடங்கலாக ஏற்கனவே இணங்கப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதிலும், அவற்றை உரியவாறு கட்டமைப்பதிலும் அரசாங்கம் மிக மந்தகரமாக செயற்படுவதாகவும், அவை முழுமையடையாமல் இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகாலங்களில் அரசாங்கம் சில தீர்க்கமான முடிவுகளை எடுத்துவருகின்றது. அதனடிப்படையில் ஊழலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான செயற்திட்டங்களை புறக்கணிக்கும் அணுகுமுறையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/172006
  24. "சிராட்டிக்குளம்" இக்கிராமப் பெயரை வாசித்தவுடன் கள உறவுகளிற்கு ஏதும் ஞாபகம் வருகிறதா?
  25. சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு இலங்கை கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் அரச உயர் மட்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார். முன்னதாக சீன அதிநவீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang Hong – 3 இலங்கை மற்றும் மாலைத்தீவு உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஆய்வுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வுக் கப்பலுக்கான அனுமதியை இலங்கை மற்றும் மாலைத்தீவுகளிடம் இருந்து சீனா உத்தியோகப்பூர்வமாக கோரியிருந்தது. இருப்பினும், சீன கப்பலின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. விஞ்ஞான ஆய்வு என்ற போர்வையில் உளவுத்துறை தரவுகளை சேகரிக்கும் நோக்கில் இந்த ஆராய்ச்சி பணியை சீனா முன்னெடுப்பதாக இந்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டியிருந்தன. அதேநேரம் மாலைத்தீவில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி, சீனாவின் சார்புடையவர் என்ற அடிப்படையில், அவர் இந்த கப்பலுக்கு அனுமதியை வழங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அவர் மாலைத்தீவில் நிலைக்கொண்டுள்ள இந்திய படையினரை மீளப்பெறுமாறு கோரியிருந்த நிலையில், இந்த சீனக்கப்பலுக்கான அனுமதியை வழங்கினால், அது இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். https://thinakkural.lk/article/285135
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.